Jump to content

புலிகள் சாதியத்தினை எதிர்க்கவில்லை., சாதி ஒழிப்பிற்கு பாடுபடவில்லை எனச் சொல்லுபவர்களுக்கு...


Recommended Posts

இந்த இடத்தில் ஒன்றை எழுதலாம் என நினைக்கின்றேன் .

எனது பெற்றோர் இந்த விடயத்தில் மிக முன்மாதிரியாகத்தான் இருந்தார்கள் ,இதனால் அயலில் பல விமர்சனங்கள் கூட வந்ததுண்டு .

ஆசிரியர்களான பெற்றோர் எமது கிராமத்தில் சிறுபான்மை இனத்தவர்கள் நடாத்தும் விளையாட்டு போட்டிகளுக்கு நடுவர்களாக பல வருடங்களாக போய் வந்தார்கள் .அவர்களுடன் படிப்பிக்கும் எந்த ஆசிரியர்கள் ஒருவரும் அவர்களுடன் போகாதது மாத்திரமல்ல அதை தடுக்க மிக முயற்சித்தார்கள்

கோண்டாவில் வாகிச்வரி சனசமூக நிலையம் கேட்டுக்கொண்டதரற்கிணங்க அம்மா அவர்களுக்கு நடனம் வீட்டில் கொண்டுவந்து பழக்கி நல்லூர் தொகுதியில் முதல் பரிசும் வென்றார்கள் .

எனது அம்மா குடும்ப கட்டுப்பாட்டு அலுவலராக அவர்கள் வீடுவீடாக திரிந்து குடும்பகட்டுப்பாடின் அவசியத்தையும் விளக்கி  அதன்கான உபகரணங்களையும் விநியோகித்துவந்தார் .

கடந்த மாதம் அப்பா நாட்டிற்கு சென்று இருந்த  நேரம் தன்னை பல முன்னாள் நண்பர்கள்  வந்து சந்தித்ததாகவும் தான் கோவிலில் ஒரு அன்னதானம் கொடுக்கபோகின்றேன் நீங்கள் எல்லோரும் கட்டாயம் வரவேணும் என்று சொல்ல இப்போ தாங்கள் எந்த கோவிலுக்குள்ளும் போகலாம் தடையில்லை ஆனால் தங்களுக்கு மற்றவர்கள் கோவில்களுக்கு போக விருப்பமில்லை என்றார்களாம் .பின்னர் அப்பா கேட்டதற்கு இணங்க அவர்களும் வந்து கலந்துகொண்டதாகவும் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டதை பார்க்க தனக்கு மிக சந்தோசமாக இருந்ததாகவும்  அப்பா சொன்னார

 

 

அந்தக் காலத்தில் உங்கள் பெற்றோர்கள் இப்படி முன்மாதிரியாக இருந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயம்.

 

இன்னொரு  கேள்வி அர்ஜுன் அண்ணா உங்கள் குடும்பத்தில் உங்கள் சகோதரங்களில் யாராவது சாதி குறைந்தவர்களைப் பேசித் திருமணம் செய்ய முன்வந்தார்களா அல்லது பெற்றோர் முயற்சித்தார்களா?

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

புலிகள் சாதி ஒழிப்புப் போராட்டத்தை வெளிப்படையாகச் செய்ய முயலவில்லை. அப்படிச் செய்திருந்தால் விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் அடைந்த முன்னேற்றம் (அழிவுக்கு முன்னர்) கிட்டியிருக்காது. ஆயினும் சாதிக் கட்டமைப்பை நீர்த்துப் போகச் செய்யும் பல முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் அழிவோடு புலிகளுக்குள்ளேயே கலப்புத் திருமணம் புரிந்து தற்போது சொந்தங்களால் ஒதுக்கப்பட்டிருக்கும் கதைகளும் பல உள்ளன.

 

 

விடுதலைப் புலிகள் சாதியை ஒழிக்க எவ்வளவோ கஸ்டப்பாட்டார்கள் என்பது உண்மை ( நான் 1994 ஆண்டு ஜனவரி வரை யாழ்ப்பாணத்தில் இருந்தேன்,) ஆனால் முன் உதாரணமாக நடந்திருக்க வேண்டிய தலைவர், தமிழ்ச்செல்வன் அண்ணை, சூசை அண்ணை ..... யாரைத் திருமணம் செய்து கொண்டார்கள்? அதையும் சுட்டிக் காட்ட வேணும்.

சாதியைப் பற்றிக் கதைத்துப் பிரயோசனமில்லை இலகுவில் அழிக்க முடியாத ஒன்று.  1 அல்லது 2 தலைமுறைகளுப் பிறகு சாத்தியப்படும்.

Link to comment
Share on other sites

ஜாதி வேண்டும்...

தலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்துல நமக்கு ஆதரவா ஒரு புள்ள கொரல் குடுக்குது?’ என ஆர்வத்தோடு வந்திருக்கும் என்னைப்போன்ற உண்மையான பிற்போக்குவாதிகளுக்கும், ‘கொஞ்ச நாளா ஓஞ்சிருந்த பிரச்சனைய திரும்ப ஆரம்பிக்கப்போறானா?’ என ஆர்வக்கோளாறில் வந்திருக்கும் நட்டநடுநிலைவாதிகளுக்கும் வணக்கம்.. நான் இங்கு ஜாதி ஏற்றத்தாழ்வு, இட ஒதுக்கீடு என எதைப்பற்றியும் பேசப்போவதில்லை!!! ஜாதிய கோட்பாடுகளில் இருக்கும் நன்மையை (அது உங்களுக்கு நன்மையாக தெரியவில்லை என்றால் ஜாதிய கோட்பாடுகளில் எனக்கு சரி என்று படுபவைகளைப் பற்றி என நினைத்துக்கொள்ளுங்கள்) பற்றி சொலல்விருக்கிறேன்.

ஜாதி என்றால் என்ன? அது எப்படி அமைக்கப்பட்டது? தலையில் துவங்கி கால் வரை ஒவ்வொரு பார்ட்டிலும் இருந்து ஒரு ஜாதியை நாரதர் உருவாக்கினார் என ஜாதியின் ஹிஸ்ட்ரி & மிஸ்ட்ரி பற்றி எல்லோருக்கும் ஏற்கனவே ஓரளவுக்கு தெரிந்திருப்பதால் அதற்குள் போகாமல் கம்முனு டைரக்ட்டா கட்டுரைக்குள் போகலாம். இன்று ஜாதியை எதிர்க்கும் பலரும் சொல்வது, ஜாதி என்றாலே ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி என பல தீய விசயங்களைத்தான். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். என் கேள்வி, எதில் தான் வேறுபாடு இல்லை? பிறப்பிலேயே ஆண் பெண் வேறுபாடு இருக்கிறது.. அதற்காக ஆண் பெண் இருவரையும் ஒழித்துவிட்டு ஒரே இனமாக கொண்டு வந்துவிடலாமா? சொத்தின் மூலமும் செல்வத்தின் மூலமும் வேறுபாடு இருக்கிறது.. அதனால் யாருமே சொத்து வைத்திருக்க கூடாது என சொல்லலாமா? மதத்தின் மூலம் உலகமே ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு குண்டு வீசும் சூழலில் இருக்கிறது.. மதமே வேண்டாம் என சொல்லிப்பாருங்கள்..

நான் இங்கு ஜாதிய வேறுபாடு வேண்டும் என சொல்ல வரவில்லை. பிறப்பு, மதம், செல்வம் இவற்றில் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் வேறுபாடு இருந்தாலும் மதமே வேண்டாம் என்றும், ஆண் பெண் என இல்லாமல் நியூட்ரலாக ஒரு குழந்தை வேண்டும் என்றும் சொல்லாமல், மக்களின் மனதை ’எதிலும் வேறுபாடு இல்லை’, என ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம், வர முயற்சி செய்கிறோம்.. அப்படி இருந்தும் சில இடங்களில் பெண் சிசுக்கொலை நடக்கத்தான் செய்கிறது. போன மாதம் டைம் ஆன்லைன் கட்டுரையில்இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு பெண் சிசுக்கொலைகளும் முக்கிய காரணம் என சொல்கிறார்கள். (http://ideas.time.com/2013/01/04/rape-in-india-a-result-of-sex-selection/?iid=obinsite).. அதே போல் இப்போதும் பல இடங்களில் ஜாதி வன்முறை நடக்கத்தான் செய்கிறது, பெண் சிசுக்கொலைகள் போல சரியான வழிகாட்டுதல் இல்லாததால்.. அதற்காக ஜாதியே கூடாதென்று சொல்லாமல் ஜாதிய வேறுபாடு பார்க்கக்கூடாது என மக்களுக்கு புரியவைக்கலாம்.

என்ன தான் பேசினாலும் ஜாதியை ஒழித்துவிடவும் முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஜாதியை ஒழிக்க வேண்டும் என பேசும் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும் ஜாதி வெறியை இன்னும் தான் அதிகரிக்கும். அதிலும் இந்த பகுத்தறிவுவாதிகள் எனப்படுவோர், ஜாதி எதிர்ப்பு என்னும் பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே எப்போதும் தாக்குவர். சமீபத்தில் நடந்த விஸ்வரூபம் பிரச்சனையில் ரஜினி அவர்கள் கமலுக்கு செய்த உதவியில் கூட, “பார்ப்பனீயம்” இருக்கிறது என நோண்டி ஆராய்ந்தவர்கள் அவர்கள். அந்த தாக்குதலில் இல்லாத ஜாதி வெறியா பிறரிடம் வந்துவிடப்போகிறது? அப்படி வசைபாடுவதை விட்டுவிட்டு, எளிதாக “மதம் என்பது வீட்டு பூஜை அறை வரை; ஜாதி என்பது வீட்டு வாசல் வரை” (courtesy: Paul Pown Raj) என ஒவ்வொருவருக்கும் புரிய வைத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடுமே? ஆனால் செய்ய மாட்டார்கள். கலகம் முடித்துவிடவில்லை எனில் பகுத்தறிவுக்கு மதிப்பு இல்லையே?

இங்கு பகுத்தறிவாளர்கள் பலரும் சொல்வது என்ன? ஜாதி மனிதனை பிரிக்கிறது என்கிறார்கள். ஜாதியால் ஒற்றுமை இல்லை என்கிறார்கள். இன்னும் இது போல் பல காரணங்கள். இவர்கள் ஒற்றுமை என எதை சொல்ல வருகிறார்கள் என தெரியவில்லை. ஒற்றுமை தான் எல்லாரிடமும் இருக்கிறதே.. என் நண்பர் குழுவில் பலரும் என் ஜாதியோ என் மதமோ கிடையாது. ஆனாலும் இன்று எனக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வருவது அவர்கள் தான். எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே நண்பர்கள் இருப்பார்கள். நண்பன் புகைத்த தம்மை தான் ஒரு ஃபப் வாங்கி இழுக்கும் நட்புக்கு ஜாதி மதம் எல்லாம் தெரியாது. என் வேற்றுமத & வேற்று ஜாதி நண்பர்களின் அம்மா, அப்பா, சகோதரி எல்லோரையும் நானும் அம்மா, அப்பா, தங்கச்சி என்று தான் சொல்கிறேன். அவர்களும் அப்படியே. பின் எப்படி ஜாதிகளுக்குள் ஒற்றுமை இல்லை என இவர்கள் சொல்கிறார்கள்? இவர்களைப் பொறுத்தவரை ஒற்றுமை என்பது, இன்னொரு ஜாதியில் திருமண பந்தம் கொண்டிருப்பது தான் போல.. நீங்கள் வேறு ஜாதிக்காரரோடு வித்தியாசம் பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தால் மட்டும் பகுத்தறிவுக்கு போதாது. உங்கள் வீட்டு பிள்ளைகளையும் அவர்களுக்கு கட்டி வைத்தால் தான் நீங்கள் ஒற்றுமையாக இருப்பதாக இந்த பகுத்தறிவு செம்மல்கள் ஒத்துக்கொள்வார்கள். பகுத்தறிவு என்பதே திருமணத்தை மறுக்கிறது.. ஆனால் அதே பகுத்தறிவு தான், திருமணத்தின் மூலம் ஜாதியை ஒழிக்க முடியும் என்கிறது. என்ன ஒரு விந்தை இது?

அதே போல் ஜாதி இல்லை, மதம் இல்லை என கோசம் போடுபவர்களில் தான் பெரும்பான்மையோர் மொழி வெறியர்களாகவும், இனத்தீவிரவாதியாகவும் இருக்கிறார்கள்.. ஜாதியும் மதமும் சக மனிதன் மேல் துவேசத்தை வளர்க்கிறது என்று சொல்லும் இவர்கள் தான், மொழி வேறுபாட்டாலும் இன வேறுபாட்டாலும் பிறரை தூற்றுகிறார்கள். வேற்று மதத்திலோ ஜாதியிலோ திருமணம் செய்து கொண்டால் ஜாதியும் மதமும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் ஒழியும் என்று சொல்லும் இவர்கள் தான் இலங்கையில் வேறுபாடுகளை கலைந்து அனைவரும் ஒரே இனமாக இருக்க தமிழர்களையும் சிங்களவர்களையும் கலக்க அந்த அரசு செய்யும் முயற்சிகளை எதிர்க்கிறார்கள். அதாவது இந்து மதத்தில் கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் பகுத்தறிவு இலங்கையில் அதே கலப்பு திருமணத்தை எதிர்க்கிறது.. அதற்காக இலங்கையில் நடப்பதற்கு நான் வக்காலத்து வாங்குகிறேன் என அர்த்தம் இல்லை. இலங்கையில் நடப்பதை தப்பு என சொல்லும் இவர்கள் இங்கு மட்டும் அதே தவறை சரி என எப்படி சொல்கிறார்கள் என கேள்வி தான் கேட்கிறேன்.

அதே போல் இவர்களின் ஜாதி வித்தியாசம் எல்லாம் இந்து மதத்திற்குள் மட்டும் தான்.. சர்ச்சுகளில் நடக்கும் ஜாதி பேதங்களைப் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை.. திறந்தால்? சிறுபான்மையினர் உரிமை என்னாவது? மதுரைக்கு தெற்கே கிறிஸ்தவர்கள் தங்கள் ஜாதிக்குள் தான் திருமணம் செய்துகொள்வார்கள். திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியின் கிராமங்களில் ஜாதிவாரியாக சர்ச் இருந்ததாக கூட சில வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டிருக்கிறேன்.. சில சர்ச்சுகளில் தலித்துக்களை கூரை போட்டு தனியாக அமர வைத்திருப்பார்களாம்.. மதுரைக்கு வடக்கே கிறிஸ்தவர்களிடம் இந்த அளவுக்கு ஜாதி பேதம் இல்லையென்றாலும், ஒரு பிறபடுத்தப்பட்ட கிறிஸ்தவர் தாழ்த்தப்பட்டவருடன் சம்பந்தம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு கிறிஸ்தவ மதம் இன்னும் பக்குவப்படவில்லை. அதே போல் தான் இஸ்லாமும்.. ராவுத்தரை பொறுத்தவரை லெப்பை மட்டம் தான்.. பட்டானிக்கு, ராவுத்தர் லெப்பை இருவரும் மட்டம் தான்.. லெப்பை, ராவுத்தர், பட்டானிக்கு இடையில் திருமண பந்தம் கிடையாது. ஒரே ஜாதியில் கல்யாணம் செய்தால் குதிக்கும் இவர்கள், ஒரே குடும்பத்தில் ஒன்று விட்ட சகோதரியை சகோதரனை கல்யாணம் செய்துகொள்பவர்களைப் பற்றி வாயே திறப்பதில்லை. ஏனென்றால் சிறுபான்மையினர் நம் நாட்டில் மருமகள்கள் போல்.. மண்சட்டியும் அவர்கள் கை பட்டால் பொன் சட்டி தான்..

சரி, நான் முந்தைய பத்தியில் கலப்பு திருமணத்தை தவறு என்று சொன்னதால் சிலருக்கு கேள்வி எழலாம், ‘அதெப்படி கலப்பு திருமணத்தை தவறு என நீ சொல்லலாம்?’ என்று.. நான் முதலிலேயே ஒன்றை சொல்லிவிட்டேன். ஜாதி என்பது என் வீட்டு வாசல் வரை தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் அந்த எண்ணத்துடன் நான் அடுத்து சொல்லப் போவதை படியுங்கள். என் வீட்டு வாசலை நான் தாண்டியவுடன், என் நண்பனை, என் தொழில் நிமித்த ஆட்களை பார்க்கும் போது எனக்கு ஜாதி, மதம் எல்லாம் ஞாபகம் வராது. ’சரி, அவர்களிடம் தான் நீ ஜாதி பார்ப்பதில்லையே, பின் ஏன் அவர்களோடு திருமண பந்தம் வைத்துக்கொள்வதில்லை?’ எனக்கேட்டால், என் பதில், “ஏன் அவர்களோடு திருமண பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும்?” என பதில் கேள்வியாகத் தான் இருக்கும்.. இலங்கையில் தமிழனுக்கு என்று சில பழக்க வழக்கம் , சடங்கு, கலாச்சாரம் இருக்கிறது. அவனை சிங்களவனோடு கலக்கும் போது தமிழனின் அடையாளமும் பழக்க வழக்கமும் சிதைந்து போகும் என நினைப்பது சரி என்றால், இங்கு நானும் அப்படி நினைப்பது சரியே.

என் வீட்டிற்கு என்று என் குடும்பத்திற்கு என்று சில பழக்க வழக்கங்கள் இருக்கும். எங்கள் குடும்பங்களில் பெண் ஊரில் தான் திருமணம் நடக்கும். பெண் வீட்டில் தான் முதலிரவு நடக்கும். சில ஜாதிகளில் மாப்பிள்ளை வீட்டில் தான் இந்த சடங்குகள் எல்லாம் நடக்கும். ஒரு சில ஜாதிகளில் மணமக்களின் பெற்றோர் மேடையில் அமர்ந்து மாற்றி மாற்றி மரியாதை செய்துகொள்வர். சில சமூகங்களில் மணமக்களின் தாய்மாமன்கள் இதை செய்வர். மாப்பிள்ளை தலைப்பாகை அணிந்து கொண்டு தாலி கட்டும் ஜாதியும் இருக்கின்றன, மாப்பிள்ளைக்கு மிஞ்சி (மெட்டி) போடும் ஜாதியும் இருக்கின்றன. சிலர் மஞ்சள் கயிரில் தாலியை மட்டும் தங்கத்தில் செய்து மூன்று முடிச்சு போடுவார்கள். சில ஜாதிகளில் தங்க சங்கிலியில் தாலியை கோர்த்து, அதை கட்டாமல் அணிவிப்பார்கள். முக்குலத்தோர் இல்ல திருமணங்களில் கெடாய் விருந்து இருக்கும். வேறு சில ஜாதி திருமணங்களில் சைவம் மட்டுமே பிராதானம். அதுவும் நகரத்தார் வீட்டு கல்யாணங்களில் நுங்கில் பாயாசம், இளநீரில் மோர் என நாம் கற்பனையே செய்து பார்த்திராத ரகங்களில் 16 வகை 18 வகை என பதார்த்தங்கள் இருக்கும். பிராமணர் வீட்டு திருமணங்கள் அவர்களுக்குரிய நலங்கு, ஜானவாசம் என 6, 7 விசேசங்களோடு நடக்கும். எங்கள் குடும்ப கல்யாணங்களில் மாப்பிள்ளை அழைப்பின் போது பெண் வீட்டார் ஆரத்தி எடுத்து வரவேற்பது அவ்வளவு அழகு. 26, 51 என ஆரத்தியிலேயே மாப்பிள்ளையை மயக்கம் அடையச்செய்யும் ஆட்கள் எல்லாம் உண்டு. இதையெல்லாம் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இரு வீட்டினரும் மிகுந்த சந்தோசத்தோடு பகை, கவலை, வஞ்சகம் என அனைத்தையும் மறந்து தங்கள் இல்ல திருமணத்திற்காக மாய்ந்து செய்வது இதெல்லாம்.

கலப்பு திருமணத்தில் இதெல்லாம் நடக்குமா? நடக்கும் என்று ஒரு பேச்சுக்கு கூட ஒத்துக்கொள்ள முடியாது.. சரி, கலப்பு திருமணம் செய்பவர்கள் தங்கள் இரு வீட்டு சடங்குகளையும் செய்யலாமே என்றால் அதுவும் சரி வராது. ஒத்த கருத்துள்ள, ஒரே மாதிரியான சடங்குகள் கொண்ட இரு குடும்பங்கள் திருமணம் செய்யும் போதே எவ்வளவு களேபரங்கள்? இதில் இரண்டு வெவ்வேறு குடும்பங்கள் என்றால் மனஸ்தாபம் தான் மிஞ்சும். அப்படி மனஸ்தாபம் இல்லாமல் எல்லாம் சுபமாய் முடிந்தாலும், இரண்டு சடங்குகளும் கலந்து, திரிந்து கடைசியில் ஒன்றும் இல்லாமல் வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்று ஆகிவிடும். இந்து கலாச்சாரத்தில் திருமணம் என்பது ஒரு கொண்டாட்டம். அந்த கொண்டாட்டத்திற்கு ஒவ்வொரு ஜாதியிலும் ஒவ்வொரு வரைமுறை செயல்முறை இருக்கிறது. கலப்பு திருமணம் மூலம் அந்த வரைமுறையும் செயல்முறையும் போய் வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்னும் புள்ளியில் வந்து நிற்கும். வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்றால், எதற்கு காலம் காலமாக இவ்வளவு உறவினர்களும் கொண்டாட்டங்களும், மகிழ்ச்சிகளும்? உறவினர்கள் நம் கல்யாண செலவை பகிர்ந்து கொள்ள, கொண்டாட்டங்கள் உறவை இன்னும் பலமாக்க, இப்படி ஒற்றுமையாக அனைவரும் கூடும் போது வரும் மகிழ்ச்சி தான் உண்மையான சமத்துவத்தையும் ஒற்றுமையையும் கொடுக்கும்.

திருமணத்தில் மட்டும் அல்ல. குல தெய்வ வழிபாட்டிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை இருக்கிறது. சிலர் ஆடு வெட்டுவார்கள், சில குல தெய்வம் சைவமாய் இருக்கும். சில குல தெய்வங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜாதிகளுக்கு பொதுவானவையாய் இருக்கும். எங்கள் குல தெய்வம் 4 ஜாதிகளுக்கு உரியது. அதில் தலித் சமுதாயமும் ஒன்று. அங்கெல்லாம் நாங்கள் ஒற்றுமையாக பொங்கல் வைத்து கொண்டாடுகிறோம்.

சரி நான் ஏன் இவ்வளவு பேசுகிறேன் என்றால் கலப்புத்திருமணங்களால், ஜாதியை ஒழிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. கலப்புத் திருமணம் என்று மட்டும் அல்ல, எதனாலும் ஜாதியை ஒழிக்க முடியாது. ஒரு முதலியார் பையன் செட்டியார் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் எப்படி ஜாதி ஒழியும்? அவர்களின் குழந்தை முதலியாராகவோ செட்டியாராகவோ தான் இருக்கும். ஒரு நாடார் வீட்டு பெண் தலித் ஆணை மணந்து கொண்டால் அவர்களின் குழந்தை ஜாதி அடையாளம் இல்லாமல் வளர்க்கப்படுமா? அதனால் கலப்புத்திருமணங்கள் ஜாதியை என்றும் ஒழித்துவிடாது. மாறாக நான் சொன்னது போல் ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகளை ஜாதி வித்தியாசம் பார்க்காமல் நண்பர்களோடு பழக விட வேண்டும். சில நேரங்களில் அந்த நட்பில் காதலும் வரலாம். அப்போது தன் பிள்ளை அந்த காதலின் மூலம் வருங்காலத்தில் நன்றாக இருப்பான்/ள் என பெற்றோர்களுக்கு நம்பிக்கை இருந்தால் தாராளமாக செய்யலாம். ஆனால் மீண்டும் சொல்கிறேன் அதனால் ஜாதி ஒழியாது. ஜாதி வேறுபாடு வேண்டுமானால் மறையும். ஜாதி வேறுபாடு மறைய கலப்புத்திருமணம் என்பது கொஞ்சம் ரிஸ்க்கான தேர்வு தான். ஒழுங்கான பழக்க வழக்கங்கள் மூலமாகவே ஜாதி வேறுபாட்டை கலையலாம்.

ஜாதி, மதம், மொழி, இனம் எல்லாவற்றையும் கலைந்து ”நான் ஒரு மனிதன், மனிதாபிமானி” என எல்லோராலும் வாழ்ந்துவிட முடியாது. ஒருவன் அப்படி வாழ நினைத்தால் அவனை இத்தனை வருடம் ஆளாக்கி வளர்த்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அது சங்கடத்தை கொடுக்கலாம். அவன் ஒருவனின் புரட்சிக்காக அவர்களை ஏன் அவன் சங்கடப்படுத்த வேண்டும்? பெற்றோர் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வெளியில் ஜாதி வேறுபாடு பார்க்காமல் வளர்வதில் என்ன வந்துவிடப்போகிறது? தனி மனிதனாக, ‘இது என் பெர்சனல் யாரும் இதில் தலையிடாதீர்கள்’ என எல்லோரும் வாழ ஆரம்பித்தால் யாருக்குள்ளும் ஒற்றுமை இருக்காது. ஜாதி என்பது ஒரு சிறு குழுவாக மக்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதுவும் இல்லை என்றால் மக்கள் இன்னும் அதிகமாக அடித்துகொண்டு தான் இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

வெளிக்கு எல்லோரும் சாதி இல்லை என்று தான் கதைப்பினம் கல்யாண விடயம் வரும் போது சாதி பார்த்தே தீருவினம், நானும் நண்பிகளுக்குப் பார்ப்பதில்லை, ஆனால் திருமணத்திற்குச் சாதி பார்த்தேன்.

Link to comment
Share on other sites

அதே போல் நம் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் இருக்கிறது. அது நமது பாரம்பரியம். உலக நாடுகள் இந்தியர்களையும் இந்திய கலாச்சாரத்தையும் உயர்ந்தது என இது போன்ற நமது பழக்க வழக்கங்களை வைத்து தான் சொல்கிறது. அந்த அடையாளங்களை எல்லாம் இழந்து நாம் வெறும் புரட்சி மட்டும் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. எனக்கு தெரிந்து புரட்சி பேசிய யாரும் தங்கள் குடும்பத்தை சந்தோசமாக வைத்திருந்தது இல்லை, அன்றைய சாக்ரடீஸ், ஹிட்லர், பகத்சிங்கில் இருந்து இன்றைய என் நண்பர்கள் சிலர் வரை. அதே போல் மக்களை பகுத்தறிவு என்னும் பெயரில் தூண்டி விடும் எவராலும் தன் வீட்டில் கூட அந்த பகுத்தறிவை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

முடிவாக, உலகில் இருக்கும் எல்லோருக்கும் தான் சார்ந்த தன் இனம்/மதம்/குலம் சார்ந்த பெருமை இருக்கத்தான் செய்யும். தமிழன் என்றால் சிலருக்கு சிலிர்க்கும், யாராவது கிறிஸ்தவ பாடல் பாடுவதை கேட்டாலே சிலருக்கு கண்ணீர் வரும், ரோட்டில் திருமண ஊர்வலம் செல்லும் கூட்டத்தை பார்த்தால் தன் சொந்த பந்த ஞாபகம் வரும் சிலருக்கு. இப்படி ஒவ்வொருவருக்கும் தன் ஜாதி, மொழி, மதம் சார்ந்த அபிமானம் இருக்கத்தான் செய்யும், ஒரு நாத்திகனுக்கு இன்னொரு நாத்திகன் மேல் அபிமானம் இருபப்தைப்போல. அதனால் கலப்புத்திருமணம் மட்டுமே ஜாதி ஒழிப்புக்கான வழி அல்ல. மக்களுக்குள் ஒற்றுமை இருந்தாலே போதும். அந்த ஒற்றுமை என்பதை நம் குடும்பத்திற்குள் இருந்து ஆரம்பிப்போம். நம் பழக்க வழக்கங்களை விட்டுக்கொடுக்காமல் பழைமையை மறக்காமல் வாழ்வோம். ஜாதி, மதம் என்பதை நம் வீட்டு வாசல் வரை மட்டும் வைத்திருப்போம். முன்பே சொன்னது போல் ஜாதி என்பது சிறு குழுக்களுக்குள் ஒற்றுமையாக வாழ படைக்கப்பட்டவை. அந்த சிறு குழுக்கள் தன்னை போன்ற இன்னொரு சிறு குழுவின் மீது ஏற்றத்தாழ்வு பார்க்காமல், அதே நேரத்தில் தன் பழக்க வழக்கத்தையும் விடாமல் நட்போடு பழக ஆரம்பித்தாலே போதும், பிரச்சனைகள் தீர்ந்துவிடும். நாமும் நம் சுற்றமும் பிள்ளைகளும் ஜாதி மத இன வேறுபாடு இல்லாமல் பழகுவோம்.. ஜாதிகள் வேண்டும் நம் பழக்க வழக்கங்கள் நம்மை விட்டுப்போகாமல் இருக்க...

http://www.sivakasikaran.com/2013/02/blog-post_19.html?m=1

ஜாதி என்பது ஒரு தப்பான விடயம் கிடையாது... ஜாதி என்பது ஒரு வாழ்க்கை ஜாதி என்பது ஒரு நெறிமுறை...

ஆகவே மக்களே ஜாதி என்பது தேவை அதை விட்டு கொடுக்காமல் வாழ பழகி கொள்ள வேண்டும்...:D

Link to comment
Share on other sites

 

 

நிழலி ,

சிங்கள அரசுகள் பெடியங்கள் ஆயுதம் தூக்கி விட்டார்கள் என்று வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது சரி என்பது போலிருக்கு உங்களது கருத்து . இயக்கங்கள் தொடங்கிய காலத்தில் ஒரு கொஞ்சம் என்றாலும் சமுக பிரச்னை பற்றி கதைத்தது இரண்டு இயக்கங்கள் தான் .மற்றவர்கள் ஆயுதம் மூலம் தமிழிழம் அதன்பின் அடுத்து எல்லாம் என்ற நிலைப்பாடுதான் .ஒரு ஒழுங்கான அரசியல் அமைப்பை உருவாக்க புலிகள் என்றும் முயற்சிக்கவில்லை .

தண்டித்து எதையும் சாதிக்க முடியாது ,புலிகளுக்கு அது மட்டும்தான் தெரியும் .புலம் பெயர்ந்து பிள்ளைகளை வளர்க்கும் எங்களுக்கு இவை எல்லாம் விளங்காமல் இருப்பது அதிசயமே .

பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழிவகுக்க  சாதியம் பறந்துவிடும் .(தமிழ்நாட்டில் இளையராஜாவும் பாரதிராஜாவும் வைரமுத்துவும் உதாரணம் ).

 

அர்ஜுன் நான் கூறியது இது,

 

 

ஒரு கதைக்கு புலிகள் சாதியத்துக்கு எதிராக கடுமையாக நடந்து கொஞ்சப் பேரை கடுமையாக தண்டித்து இருந்தால் இன்று புலிகளை சாதியத்துக்காக குற்றம் சாட்டுபவர்கள், "புலிகள் வன்முறை மூலம் கடுமையாக சாதியத்தினை அடக்க முற்பட்டதே இன்றைய நிலைக்கு காரணம்" என்று இன்று எழுதிக்கொண்டு இருப்பர்.. :)

 

 

 

 

இவ்வாறு எழுதியமைக்கு காரணம், புலிகள் வன்முறை ரீதியில் சாதியை அடக்க முனைந்து இருந்தால், இன்று மீண்டும் சாதியம் தாயகத்தில், குறிப்பாக வடக்கில் முனைப்பு பெறுவதற்கு  வன்முறை மூலம் அடக்க நினைத்ததே காரணம் என்று எழுதியிருப்பர். இதே போன்ற காரணத்தினைத்தான் இன்று வடக்கில் கலாச்சார சீரழிவுக்கு சொல்லுகின்றவர்கள் உள்ளனர். ஏனெனில் எல்லாத்துக்கும் புலிகளை காரணம் காட்டும் ஒரு கூட்டம் இருக்கின்றது. கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் போன்று.

 

என்னைப் பொறுத்தவரைக்கும் புலிகள் ஒரு இராணுவ அரசியல் அமைப்பு.  அவர்களிடம் சமூகத்தின் புரையோடிப் போன ஒரு விடயத்தினை மாற்றி அமைக்கும் இயல்பு கொண்ட ஒரு சமூக இயக்கத்தின் (Civil movement) அம்சங்களை முழுமையான வடிவில் எதிர்பார்ப்பதே தவறு. அவர்களால் மட்டுமல்ல, அவர்களைப் போன்ற இராணுவ அமைப்பினை கொண்ட எந்தவொரு அமைப்பாலும் சமூகவியல் மாற்றங்களை பெரியளவில் நிரந்தரமாக ஏற்படுத்தி விட முடியாது. அதற்குத்தான் சமூக அக்கறை  கொண்ட நிறுவனங்கள், சமூக மாற்றங்களை வலியுறுத்தும் அமைப்புகள் உள்ளன. எங்களின் துரதிஷ்டம், அவ்வாறான எந்தவொரு அமைப்பும் புலிகளுக்கும் முன்னும் சரி, புலிகளின் பின்னரான இன்றைய காலகட்டத்திலும் காத்திரமான வழியில்  உருவாகவில்லை.

Link to comment
Share on other sites

சிவா சின்னப்போடி அண்ணா, மிகவும் மென்மையான பண்பான மனிதர். இன்று அவர் தங்கி தொங்கி நிற்கும் இடம் முழுமையாக ஏற்கக்கூடியதன்றாயினும் அவரை ஓர் உண்மையான உறுதியான தமிழீழ நாட்டுப்பற்றுள்ள மனிதானாகவே பார்க்க முடிகின்றது. அவர் போராளியாக புளொட் அமைப்பில் தனது விடுதலைப்பயணத்தை தொடங்கியிருந்தாலும் கால மாற்றம் அவரை குறுகிய எண்ணத்துக்குள்ளும் சுயநலத்துக்குள்ளும் சுருக்கி விடவில்லை என்பதை தன்னலமின்றி தமிழீழ விடுதலைப்போராட்டத்தை சுவாசிக்கின்ற மனிதர்கள் அறிவார்கள்.

நான் சிறுவனாக புலிகளின் வாலாக அலைகின்ற காலத்தில் தமிழகத்தில் இருந்து ஒலிபரப்பான புளொட் வானொலியை கேட்டிருக்கின்றேன். அப்போது அவ்வானோலியின் செய்தி அறிக்கையில் ....செய்திகள் வாசிப்பவர் திவாகரன் என பெயர் வரும். அந்த பெயர் இன்றும் என் மனதில் பசுமரத்தாணி போல் அறையப்பட்டுள்ளது. அன்று கம்பீரமாக திவாகரன் என வரும் அந்த குரலுக்குரியவர் இந்த சிவா சின்னப்போடி அண்ணா அவர்களே என்பதை சில வருடங்கள் முன்னரே அறிந்து கொண்டேன். வரட்டுக் கௌரவங்களாலும் அசட்டு கெடுதனங்களாலும் பல புத்திகெட்ட மனிதர்கள் போல் தூய விடுதலைப்பயணத்தில் இருந்து விலகாமல் தன் எல்லைக்குள் நின்று இன்றும் விடுதலைப்பயணத்துக்கு பலம் சேர்க்க வேண்டும் என்ற அவரின் எண்ணத்துக்கு தலைசாய்க்கின்றேன்.

எவனொருவன் சாதியையும் பிரதேச வாதத்தையும் எங்கும் மெல்லுகின்றானோ அவன் உண்மையாக தமிழினவிடுதலையையும் தமிழீழவிடுதலையையும் விரும்புகின்றவனாக கொள்ளமுடியாது. மதங்களையும் சாதிகளையும் பிரதேசங்களையும் கடந்து எவன் போராட்டக்களத்தில் நிற்கின்றானோ அவனே உண்மையான போராளி உன்னதமான விடுதலை விரும்பி. எவர் எவ்வாறு பிதற்றினாலும் தூற்றினாலும் தமிழீழ விடுதலைப்பயணத்தை எம்  தலைவன் இவ்வாறே நகத்தினான் என்பதே உண்மை. ஆனால், காலம் கயவர்களையும் கண்ணியமற்றவர்களையும் போராளிகளாகவும் செயற்பாட்டாளர்களாகவும் உள்வாங்கிக்கொண்டதாலும் நாம் உருக்குலைய வேண்டியதாயிற்று.

சிவா சின்னப்போடி அண்ணா 04.03.2007 ல் யாழ் இணையத்தில் எழுதிய ஆக்கத்தை இன்றுதான் வாசித்தேன் உண்மைகளை இடித்துரைத்துள்ளது. இறுதி இரண்டு பந்திகளிலும் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் மிகவும் ஆணித்தரமானவை இவற்றினை முழுமையாக ஆராய்ந்தால் தமிழனின் இழிநிலையை போக்கவும் தமிழருள் உள்ள பழிநிலையை அகற்றவும் வாசல் திறக்கும்.

 

Link to comment
Share on other sites

அப்படி ஒன்று நடந்திருப்பின் ஒருவேளை 2009ம் ஆண்டு வரைக்கும் இந்தப் போராட்டம் தாக்குப் பிடித்திருக்குமா என்பதே பெரிய கேள்வி தான்.  காரணம் என்ன தான் சாதீயம் புலிகளின் காலத்தில் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல அது உறங்குநிலையில் இருந்தது இருக்கிறது என்பது தான் உண்மை.

 

கோவில்களிலும், பொதுக்கிணறுகளிலும் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்பட்ட போது சாதீயச் சமநிலையில் ஏதும் மாற்றம் ஏற்பட்டதா?

வசதி படைத்தவர்கள் சொந்தமாக கிணறு இல்லை குழாய்க்கிணறு ஒவ்வொரு வீட்டுக்கும் வந்தது நாளடைவில் பொதுக்கிணறு என்பது அவர்கள் மட்டுமே பாவிக்கும் ஒன்றானது.

 

கோவில்களில் கிரகப்பிரவேசம் என்று அனுமதித்ததோடு திருவிழாக்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கியும் ஏதும் மாற்றம் நடந்ததா? இன்னும் கோவிலில் சுவாமி தூக்குவது மேட்டுக்குடியே இல்லை அவர்களின் பூசை நடக்கும் நாட்களில் வரும் சனத்தை வைத்தே தெரியும்.

 

அடுத்து வடமராட்சியில் இருந்தவர்களுக்குத் தெரியும் "கிண்ணி" என்று சொல்லி ஒரு போராளி அண்ணா இருந்தவர். அவர் தாழ்த்தப்பட்டவர்களின் பிள்ளைகளின் பாடசாலை போக வேண்டும் என்று, கசிப்பு விக்கக் கூடாது என்று பிடிக்கப் போகும் போது சைக்கிள் ரயரை வெட்டி துரத்தித் துரத்தி அடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. அவர்களே சிலவற்றில் இருந்து மீண்டுவரத் தயார் இல்லை என்பதே நிதர்சனம்.

 

அடுத்து முன்னர் நான் ஒருவருடைய கதைக்கு எழுதிய கருத்துத் தான்.

கலப்புத்திருமணம் என்பது கீழ்சாதியைச் சேர்ந்தவர் மேல் சாதியைச் செய்வது தான் புரட்சியா? ஏன் அவர்கள் கூட தம்மிலும் கீழான ஒருவரைச் செய்வதை விட வேளாளரிடம் வரன் எடுப்பதை மட்டும் புரட்சி என்கிறார்கள்? அதன் மூலம் சொல்லும் உளவியல் சித்தாந்தம் என்ன?

அவர்களும் தம்மை மேட்டுக்குடியாக அடக்கியாளும் சமூகமாக கட்டமைத்துக் கொள்ளத் தானே இயைகிறார்கள்? இல்லை புலிகளின் காலத்தில் சாதீயக்கட்டமைப்புக்களில், ஏற்றத்தாழ்வுகளில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் பதிவு பண்ணப்பட்டுள்ளனவா?

எப்போதும் இருப்பது போல ஒரு சிலர் காதலித்து ஓடிப்போய் கலப்புத் திருமணம் செய்திருக்கலாம்.

இது எத்தனை வீதம்?

 

அதை விட போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்த யாழ்ப்பாணத்தில் இருந்து 1996 யாழ்ப்பாணம் ஆமிக்கட்டுப்பாட்டுக்கு வந்து முள்ளிவாய்க்கால் முடிவுவரைக்கும் போராட்டத்துக்கு இணைந்தவர்கள் எத்தனை வீதம்? வெகு வெகு அரிது. யாழ் வீழ்ந்ததோடு பல வழங்கல்கள் தடைப்பட்டுப் போனது தான் உண்மை.

 

அடுத்து விடுதலைப்புலிகளில் மட்டுமல்ல,பொதுவாகவே அனைத்து இயக்கங்களிலும் இருப்பது தாழ்த்தப்பட்டோர் என்பது தான் பொதுவான அபிப்பிராயம். அதனால் தான் காசை மட்டும் குடுத்தால் சரி அடிபட வேலைக்காரர் இருக்கு என்ற எண்ணவோட்டம் விதைக்கப்பட்டுள்ளது, அதை விட ஆதிக்கவர்க்கத்தின் கருத்துக்கள் தான் பல இடங்களில் போராட்ட அமைப்புக்களின் குரலாய் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

 

பேசுவதற்கு வேண்டுமென்றால் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம் ஆனால் யதார்த்தம் என்னவென்று எம் எல்லோருக்கும் தெரியும். எந்தக் கடுமையான சட்டங்களாலும் மனங்களை வெல்ல முடியாது.

 

பி.கு: நல்லூர் போல் ஒரு சில கோவில்கள் விதி விலக்காகவும் உள்ளது.

 

ஜீவா,

 

உங்களின் கருத்து சரியானது. புலிகளின் காலத்தில் சாதியம் சாம்பலுக்குள் கனன்று கொண்டிருக்கும் தணல்களாகத்தான்  நீறு பூத்த நெருப்பாகத்தான் இருந்தது. யாழ்ப்பாண இடம்பெயர்வில்,தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்து வந்த மக்களில் உயர் சாதியினர் என்று சொல்லப்பட்டவர்கள் எந்தளவுக்கு மற்றவர்களுடன் அகதி முகாம்களிலும், தற்காலிக இடங்களிலும் முரண்பட்டனர் என்பதை பலர் அறிவர்.

 

எனக்கு விளங்காதது ஒன்று இந்தக் கருத்தை ஏன் என் கருத்துக்கு Quote பண்ணினீர்கள் என்பதுதான். ஒரு வேளை என் கருத்து புலிகளின் காலத்தில் சாதியம் இருக்கவில்லை என்ற மாதிரி அர்த்ததினை தருவதாக அமைந்து இருக்கின்றதா? :mellow:

Link to comment
Share on other sites

 

//சாதியை ஒழிக்க முடியாது. காதலை எப்படி ஒழிக்க முடியாதோ அப்படித்தான். ஏனெனில் சாதியும் காதலும் மனிதர்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட விடயங்கள்//

 

 

முதல் முறையாக இப்படி ஒரு தத்துவத்தை அறிகின்றேன். காதல் இவ்வளவு கேவலமானதா? காதலை ஒழிப்பது என்ற கருத்தே சாதியத்தை தக்கவைப்பதற்கான அடிப்படை. இயற்கையான மானுட உணர்வுகளை சிதைப்பதே சாதீயம். ஒரு சாதி என்னுமொரு சாதியுடன் கலக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே காதல் என்ற இயற்கை உணர்வுக்கு குறுக்கே சாதிவருகின்றது. சாதீயம் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு கழிசடைக்குணம்.

------------------------------------------------

 

ஈழத்தில் சாதீயக் கூப்பாடு அதிகரிப்பதற்கு என்னுமொரு காரணம் இந்தியாவில் சாதீயம் பல கட்டமைப்போடு வரையறையோடு இருக்கின்றது. பள்ளிச் சான்றிதள்கள் கூட சாதீய அடிப்படையில் உண்டு. ஈழத்தை பொறுதவரை இதற்கு எந்த வரையறையும் கிடையாது. இப்போது உயர்சாதி என்று கூறிக்கொள்வோர் பெரும்பான்மையானவர்கள் முன்னர் வேறுசாதிகளாக இருந்தவர்கள்.  வேறுசாதிகளில் இருந்து உயர்சாதிகளாக தம்மை அடயாளப்படுத்துகின்றவர்கள் அதிகமாக சாதிய உணர்வுள்ளவர்களாக கொக்கரிக்கவேண்டியுள்ளது. வேறு வழியில்லை தன்னை உயர்சாதி என்று நிறுவுவதற்கு. அதிகமாக சாதியத்தை தூக்கிப்பிடிப்பவர்களை ஆராய்ந்தால் அவர்கள் சில தலமுறைக்கு முன்னர் வேறு சாதிகளில் இருந்தது தெரியவரும்.

-----------------------------

புலிகள் சாதீயத்தை ஒழித்தார்கள் அல்லது அதற்காக முயன்றார்கள் என்பது குறித்து..

-புலிகள் இயக்கம் எல்லாச்சாதிகளும் இணைந்த ஒரு அமைப்பு. அதற்குள் சாதீய ஏற்றதாழ்வு என்பதில்லை.

-சாதீயம் என்ற அர்த்தமற்ற அடயாளத்திற்கு புறம்பாக புலிகள் காலத்தில் பல அர்த்தமுள்ள அடளாயளங்கள் இருந்தது. மாவீரர்கள், போராளிகள், போராளிகுடும்பங்கள், அதற்கான கெளரவிப்புகள். தேசத்துக்காக உயிர்விட்டவர்களே உயர்வானவர்கள். இவ்வாறான அடயாளங்கள் அவைகள். இந்த அடயாளங்களை சாதீயத்தால் சிதைக்க முடியாது. சாதீயத்துக்கு புறம்பான என்னுமொரு முன்வைப்பு. இந்த அடயாளங்களுக்குள் சாதீயம் தனது வலுவை இழந்திருந்தது. போரின் தோல்வி என்பது இதன் வளர்ச்சியை இடைநிறுத்திவிட்டது.

-----------------

கீழ்சாதிகள் படிக்கக் கூடாது. அரச உத்தியோகம் பாரக்கக் கூடாது. கோயிலுக்குள் நுழையக்கூடாது. இவ்வாறன அனைத்தும் சுரண்டலுக்கானது. கீழ்சாதிகள் உழைப்பை உறிஞ்சி மேல்சாதிகள் செழிப்பதற்கானது. அந்தவகையில் படித்தவன், அரச உத்தியோகம் பார்ப்பவன், பணம் படைத்தவன் உயர்சாதிகளில் அதிகமாகினான். போரின் போது பணம் படைத்ததில் அதிகமானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல ஏதுவாக இருந்தது. அரச உத்தியோகப் பின்னணியை கொண்டவர்கள் அரசுடன் நெழிவுசுழிவுக்கு பழகி இரட்டை வாழ்வை கையாண்டனர். போராட்டம் மெல்ல மெல்ல வர்க்க அடிப்படையில் வறிய மக்கள் தோழ்களில் சுமையாகியது. போராட்த்திற்கான பொருளாதாரம் பணமுள்ளவனிடமும் போராட்டத்துக்கான உடல்வலு வறியவர்களிடமுமாக பெரும்பான்மையாக மாறியது. இது முதலாளி தொழிலாழி நிலையை உருவாக்கியது. இனவிடுதலைக்கான பொது சிந்தனை சிதைந்தது. அதற்குப் பதிலாக வெளிநாடு செல்வது என்ற எண்ணம் வலுவானது. இப்போதும் அதுவே வலுவாக இருக்கின்றது. போர்த்தோல்வியில் சாதியத்தின் பங்கு இருக்கின்றது.

---------------------------------

சாதீயம் என்பது ஆரோக்கியமான உளவியலை பாதித்தது. பிடிவாதம் வக்கிர குணங்களை தோற்றுவித்தது. ஒருவனை ஒருவன் ஏற்க மறுக்கும் ஜனநாயக விரோத குணத்தை தோற்றுவித்தது. விட்டுக்கொடுப்பு அனுசரிப்பு கருணை தயாள குணம் என்ற பல மாநிடத்தின் சிறப்பியல்புகளை சிதைத்தது. ஒரு குறைபாடுள்ள மக்கள் கூட்டம் உருவாக இது வித்திட்டது. சொந்த இனத்துக்குள் இரைதேடும் பழக்கத்தை இயல்பாக்கியது. இதன் நீட்சியாகவே உள்முரண்பாடுகள் மோதல்கள் போட்டுத்தள்ளுதலுக்கான உளவியல் உருவானது. ஒரு இனமாக எக்காலத்திலும் உருவாக முடியாத நிலை உறுதியாகியது.

-------------------------------

எதற்கும் ஒரு முடிவுண்டு. அந்தவகையில் சாதியத்துக்கும் ஒரு முடிவுண்டு. புலம்பெயரந்தவர்களின் சில தலமுறை தாண்டியபின் சாதீயமும் அவர்களில் உயர்வாழாது அதே நேரம் இனஅடயாளமும் இருக்காது. புலம்பெயராதவனுக்கு இனம் என்ற அடயாளம் முதலில் அழியும் அதன்பின் சாதியத்துக்கு இடமில்லை. முன்பு பல தடவை எழுதியதுபோல் சாதீயம் இனத்தை அழிக்கும். இனத்தின் அழிவே சாதியத்தின் அழிவு.

 

 

Link to comment
Share on other sites

நாவலர் சைவத்தையும் தமிழையும் வளர்திருக்கலாம் ஆனால் அவர் ஒரு சாதிவெறியர் தான் .

நாட்டிற்காக இனத்திற்காக மொழிக்காக  மதத்திற்காக உயிரையே கொடுக்க தயாராக இருக்கும் பலர் கூட இந்த சாதி விடயத்தில் கண்டும் காணாமல் தான் இருக்கின்றார்கள் .

எம்மவர் இந்த விடயத்தில் வலு சுழியர்.

 

 

ஆறுமுக நாவலர் வரலாறு
 
ஆறுமுக நாவலர் வரலாறு
arumukanavalar.pngநாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது. இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். அந்நியவெற்று நாகரீகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் சுயமசய கலாசார வழிகளை மறந்து வாழ்வாராயினர்.

இவ்வாறு சைவ சமயம் நலிவுற்றிருந்த வேளையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும் எழுத்தாலும் மக்கள் அகக் கண்களைத் திறந்து அவல நிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக தம்மாலியன்ற அத்தனை பணிகளையும் செய்தார். அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையை யும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர்.

தமது இளமைப் பருவத்திலே நல்லூர் சுப்பிரமணிய உபாத்தி யாயர், இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத் துப் புலவர் ஆகியோரிடம் குருகுல முறைப்படி இலக்கிய, இலக்கணங்களையும், சைவசமயம், சாத்திரங்களையும், பயின்று வட மொழியையும் பயின்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் அக்கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சவ சமயத்தை அழிய விடாது பாதுகாக்க நாவலர் பல முயற்சிகளை மேற்கொண்டார். சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள், செயல்கள் என்பவற்றை நீக்க முயன்றார். சைவப் பாடசாலைகளை நிறுவினார். அவர் நிறுவிய முதலாவது பாடசாலை வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலையாகும். அது 1848ம் ஆண்டில் நிறுவப் பெற்றது. தமிழ் நாடு சிதம்பரத்திலும் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் பாடசாலையொன்றை நிறுவி அங்கு போதிப்பதற்கு சைவசமய நூல்களைப் பிரசுரித்தார். இதற்காக சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் அச்சுக்கூடங்களை நிறுவினார்.

சைவ வினாவிடை, பாலபாடம், பெரிய புராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலான பல நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.

ஏடுகளில் எழுதப்பட்டிருந்த பல பழந்தமிழ் நூல்களைப் பரிசோதித்து அச்சில் பதிப்பித்தவரும், அத்துறையில் ஏனையோருக்கு வழி காட்டியாக விளங்கியவரும் நாவலர் பெருமானே ஆவார். சைவத் தமிழ்ப் பணிகளை இடையூறின்றி செய்வதற்காக தமக்குக் கிடைத்த உத்தியோகத்தையும் தியாகம் செய்தவர் நாவலர் பெருமான். தமது வாழ்நாள் முழுவதும் பிரம்சாரியாகவே வாழ்ந்தவர். சிவாலயங்களிலும், மடாலயங்களிலும் சைவ சமய உண்மைகளை எடுத்துக் கூறி பிரசங்கம் செய்தல், புராணப் படலம் செய்தல் என்பவற்றினால் சைவப் பிரசாரம் செய்தவர் நாவலர் அத்துடன் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு சைவத்தின் உண்மையை விளக்கி சைவ மக்களிடையே புகுந்துள்ள மாசு நீக்கிப் புறச் சமயத்தவரின் தீவிர பிரசாரத்தை தடுக்க முற்பட்டவர்.

திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோயில் என்பனவற்றின் தொன்மைச் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அவற்றைப் புனரமைத்து நித்திய, நைமித்திய பூஜைகளுக்கு வழிவகுக்குமாறு சைவ மக்களுக்கு விஞ்ஞாபனம் விடுத்தார். இதன் காரணமாக ஆலயங்கள் மீண்டும் அமையப் பெற்றன. இறைவனின் இயல்புகளும், இறை நெறியின் அறப்பண்புகளும் கற்பிக்கப்படுகின்றன. எமது கலைத்திட்டத்திலே சமயக் கல்விக்கு இன்று முக்கியத்துவம் தரப்படுகின்றது. இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உணர்ந்து எங்கள் நாவலர் பெருமான் நடைமுறைப்படுத்தினார். இலவசக் கல்வி, இலவச நூல்கள், தாய்மொழிக் கல்வி என்று நாடு பெருமைப்படும் கல்விச் சாதனைகளை அன்றே அவர் நிலைநாட்டினார்.

கல்வியழகும், தெய்வ நெறியும், பொலிந்து விளங்கும் ஒரு சமூகத்தைக் காணத்துடித்தார். அதற்காக கடுமையாக அவர் உழைத்தார். அவரது வாழ்வின் இலட்சியமே இதுவாக இருந்தது. வசதியான உத்தியோகத்தைப் பெறும் வாய்ப்பிலிருந்தும் அவர் அதனை ஏற்கவில்லை. இல்வாழ்வில் புகவில்லை. இவையனைத்துக்கும் காரணம் சைவ சமயத்தையும் அதற்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்ற பேராசை தம்மிடம் குடிகொண்டிருந்தமை யாகும் என ஒரு சந்தர்ப்பத்திலே தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார் நாவலர்.

நெற்றியிலே நீறுபூசவும், வாழையிலையிலே அமுதுண்ணவும் கூட நம்மவர்கள் அஞ்சியஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த அவலங்கள் மாறவும், அன்று அந்நியரின் இன்னல் தாங்காது நாட்டை விட்டே வெளியேறிய ஞானப்பிரகாசர் போன்றோரின் பிரார்த்தனைகள் பலிக்கவும் நாவலர் எழுந்தார். எங்கள் கலாசாரம் பிழைத்துக் கொண்டது. சிவநெறி தழைத்து முன்பிருந்த எங்கள் சமயாச்சாரியார்கள் தாம் தரிசனம் செய்யப் போன தலங்களிலெல்லாம் பதிகங்கள் அருளிச் செய்தார்கள். இவரோ தாம் போன் இடங்களிலெல்லாம் லோகோபகாரமாகச் சைவப் பிரசங்கங்களைச் செய்து வந்தார். சமயப் பிரசங்கங்களுடன் சமயா சாரியார்களின் தேவார திருமுறைகளையும் விளங்கச் செய்தவர் நாவலர். அந்த நன்நெறிப் பயணத்திலே தான் எத்துணை இடர்கள், ஆதரவில்லாத அந்நியர்கள் இழைத்த இன்னல்கள்.

ஒரு புறம் அடியவர் போன்று வேஷமிட்டு ஏமாற்றும் நம்மவர் செய்கை, மறு புறம் அனைத்தை யும் தம் உறுதியான தெளிந்த உள்ளத்தினால் வென்றார். நாவலர் “நிலையில்லாத என் சரீரம் உள்ளபோதே என்கருத்து நிறைவேறுமோ நிறைவேறாதோ எனும் கவலை என்னை இரவு பகலாக வருத்துகின்றது என்று கூறிய நாவலர் பெருமானின் கருத்தின்படி தமிழ்க் கல்வியும், சைவ சமயமும், அபிவிருத்தியா வதற்கு கருவிகள் மற்றும் முக்கிய ஸ்தலங்கள் தோறும் வித்தியா சாலை தாபித்தலும் சைவப் பிரசாரம் செய்வித்தலு மாகும். இவற்றின் பொருட்டு சிரமமாகக் கற்று வல்ல உபாத்தியாயர்களும், சைவப் பிரசாரகர்களுமே தேவைப்படுவார்கள் என்ற நாவலரின் ஏக்கம் தீர இனைய நாவலர்கள் பலர் எழுந்தார்கள், பெருமானின் பணிகளிலே இவர்களும் கலந்தார்கள்.

1894ம் ஆண்டிலே நல்லூர் கந்தசாமி கோயிலிலே நிகழ்ந்த ஒரு அற்புதக் காட்சியை நாவலர் சரித்திரத்திலே பின்வருமாறு வர்ணிக்கின்றார் கனகரத்தினம் பிள்ளை, கந்தசாமி கோயிற் திருவிழா சமீபித்தபடியால் தேவாரத் திருக் கூட்டச் சிறப்பையும், தேவாரம் முதலியவை திருவிழா காலத்திலே சுவாமிக்குப் பின்னாக ஓதுவதற் சனங்களுக்குண்டாகும் கடவுட் பக்தியையும் மக்களுக்கு எடுத்துக்காட்ட நினைத்து திருவாவடுதுறையினின்று ஓதவார் சிலரை அழைப்பித்து திருவிழா காலத்திலே அவர்களுக்கும் இங்குள்ள மற்றைய சைவர்களுக்கும் நெற்கு வீதி மடத்திலே புண்ணியவான்கள் சிலரைக் கொண்டு மகேஷ்வர பூஜை செய்வித்து, சுவாமி வீதியிலே உற்சவங் கொண்டருளும் போது சுவாமிக்குப் பின்னாக அவர்களைக் கொண்டு தேவாரம் ஓதுவித்துக் கொண்டு வந்தார். இவர்கள் தமிழ் வேதமாகிய தேவாரத்தை ஓத அதனைக் கண்ட பிராமணர் தாங்களும் வந்து சுவாமிக்குப் பின்னாக வேதம் ஓதுவாராயினார்கள்.

நாவலரும் விபூதி உந்தூறனஞ் செய்து திரிபுண்டரந் தரித்து தலையிலேய சிரமாலையும் கழுத்திலே கண்டிகையுங் கையிலே பெளத்திர முந் தரித்து யாவர்க்கும் பக்தியை விளைவிக்கத்தக்க சிவ வேடப் பொலிவோடு திருக்கூட்டத் தலைவராய் நின்றார். அத்திருக்கூட்டத்தின் சிறப்பை என்னென்று சொல்வோம்! எதற்கொப்பிடுவோம், சுப்பிரமணிய பெருமானின் அவதாரமாய் விளங்கிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பதினாராயிரம் திருக்கூடத்தோடு தோற்றிய சிறப்புக் கொப்பிடலாம்.

தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் மக நட்சத்திரத்தில் இறை பதம் அடைந்தார்.

தமிழுக்கும், சைவத்துக்கும் அரும் தொண்டாற்றிய நாவலர் பெருமானை அவரது குரு பூசை தினத்தில் நினைத்து வழிபட்டு அவர் பெருமை பேசுவோமாக.

www.swisstamilsangam.blogspot.com

 
இடுகையிட்டது yaalavan நேரம் 3:52 PM கருத்துகள் இல்லை: 
 
 
 
ஞாயிறு, 22 ஏப்ரல், 2012
முதல் திருமுறை
 
  பாடல் எண் : 1 பண் : நட்டபாடை    
 
                    தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்

ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த

பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

  

   
openbook.gifபொழிப்புரை :
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!
openbook.gifகுறிப்புரை :
தோடுடையசெவியன் என்பது முதலாக உள்ளங்கவர்ந்தகள்வனுடைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாருடைய அழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்ற சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பது குறிக்கப்பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய இடப்பக்கமாதலின், அதனை முற்கூறினார். `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்` என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும் போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும் முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப்புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று `குரு அருளும்` (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது.

மூன்றுவயதுக் குழந்தையாகிய ஞானசம்பந்தப்பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்த பயில்வால் என்னுள்ளங்கவர்கின்றார் என நயந்தோன்றக் கூறியவாறு. விடையேறி-தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி. தூவெண்மதி-தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத் தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறு போலக் களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும் வெண்மை புறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன் போன்று பிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு இடமில்லை என்பதுமாம். இறைவன் சுடலைப் பொடி பூசுதல்: சர்வசங்கார காலத்து எல்லாவுலகமும் தத்தங் காரணத்துள் முறையே ஒடுங்க-காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது. மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் புவனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும்.

உள்ளங்கவர்தலாவது அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின் மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றி இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள். பீடு-பெருமை. மேவிய-தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின் இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின் நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு.

இத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் `விடையேறி` என்பது நித்யத் தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், `மதிசூடி` என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், `பொடிபூசி` என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், `கள்வன்` என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், `அருள்செய்த` என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள்.

ஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், `பிரமாபுரம்` `விடையேறி` முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி` `உள்ளங்கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் `மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச்சொரூபமாகிய தகரவித்தையின் அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து `தோ` என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டாம் திருமுறையில் `உலகெலாம்` என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு.

தேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள், தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத் என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது.

குருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார்.

`ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம்` என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய பெருமான் அருள் செய்ததையே குறிக்கும். இதை வலியுறுத்துவார் போன்று `சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்` எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடலிலும் விளக்கியுள்ளார். இதனால் `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த` என்பது ஞானசம்பந்தர் ஏடுடைய மலரால் தான் வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறல் முறையாகாது என்பதை உணரலாம்.

http://aarumuganaavalar.blogspot.ca/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை மட்டுமல்ல..

 

1. செய்யுள் வழி இலக்கியமாக இருந்த தமிழ் இலக்கணத்தை உரை நடை தமிழ் இலக்கணமாக வகுத்தவர் நாவலர். இன்று பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ் இலக்கணம் என்பது நாவலர் உருவாக்கிய ஒன்று.

 

2. சேரி வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து அவற்றை சைவமும் தமிழும் ஒழுக்கமும் நிறைந்த கிராமங்களாக மாற்றப் பாடுபட்டவர் நாவலர்.

 

3. சைவ நெறி ஒன்று தான் அன்று மக்களை சுய ஒழுக்கம்.. சமூக ஒழுக்கம் நிறைந்தவர்களாக வாழ வழிகாட்டும் என்று தூர நோக்கோடு எண்ணி சைவ நெறியை சாதாரண மக்களுக்கும் மத.. வர்க்க சாதி வேறுபாடின்றி புகட்ட வழி செய்தவர் நாவலர். அதனை தாய் மொழி தமிழில் வழங்க உதவியர்.

 

4. யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றை தமிழில் எழுதியவர் நாவலர்.

 

இப்படி நாவலர் சமூகத்திற்கு ஆற்றிய பெருமைகள் பல. ஆனாலும் சிலர் அவரை சாதிவெறியர் என்று சொல்லுகிறார்கள். அதற்கு என்ன அடிப்படை..??! அவர் எங்கே சாதி வன்முறையைத் தூண்டினார்.. மக்களிடையே பிரிவினையை தூண்டினார்.. என்ற எதுவுமே வரலாற்றில் இல்லை..??! அவர் தனிப்பட்ட வகையில் சில கொள்கைகளைக் கொண்டிருக்கலாம். அதனை அடிப்படையாக வைத்து அவர் ஒரு சாதி வெறியர் என்பது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா,

 

எனக்கு விளங்காதது ஒன்று இந்தக் கருத்தை ஏன் என் கருத்துக்கு Quote பண்ணினீர்கள் என்பதுதான். ஒரு வேளை என் கருத்து புலிகளின் காலத்தில் சாதியம் இருக்கவில்லை என்ற மாதிரி அர்த்ததினை தருவதாக அமைந்து இருக்கின்றதா? :mellow:

 

நிழலி, on 19 Apr 2013 - 9:09 PM, said:snapback.png

ஒரு கதைக்கு புலிகள் சாதியத்துக்கு எதிராக கடுமையாக நடந்து கொஞ்சப் பேரை கடுமையாக தண்டித்து இருந்தால் இன்று புலிகளை சாதியத்துக்காக குற்றம் சாட்டுபவர்கள், "புலிகள் வன்முறை மூலம் கடுமையாக சாதியத்தினை அடக்க முற்பட்டதே இன்றைய நிலைக்கு காரணம்" என்று இன்று எழுதிக்கொண்டு இருப்பர்.. :)

 

சாதீயம் இல்லை என்ற அர்த்தத்தில் அல்ல, எந்தச் சட்டங்கள் போட்டும் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்க முடியாது என்பதைத் தான் பதிவு பண்ணினேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாதியத்தை பற்றி எத்தனை திரிகளில் எழுதினதையே திரும்ப,திரும்ப எழுதிக் கொண்டு இருக்கிறம் :) ...எப்படி எழுதினாலும் சாதி ஒழியாது என்பது வேற கதை :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அன்புள்ள விசுகு ஐயா 
பாதிக்கப்பட்டவர்களின் குரலும் வாக்குமுலமும் பாதிப்பை உண்டாக்கிய தரப்புக்கு பக்கசார்பானதாகவும் ஆத்திரத்தை உண்டாக்குவதாகவும் இருக்கும்.பாதிக்கப்படவர்கள் சொல்வதை நம்பவேண்டாம் அதெல்லாம் பொய் என்று பாதிப்பை உண்டாக்கிய தரப்பு செல்வது வழமைதான்  இதைத்தான்

 

 முள்ளிவாய்க்காலிலே இவ்வளவு கொடுமைகளையும் செய்த சிங்களத் தரப்பும் தழிழர் தரப்பை பார்த்து சொல்கிறது. இதற்கும் நீங்கள் எழுதிய இந்தக் கூற்றுக்கும் என்ன வித்தியாசம்.
 
 
1-
 
என்னுடைய எழுத்தைப்படித்து ஆத்திரமடைந்த நீங்கள் சில கருத்துக்களை சொன்னதாக சிலர் வந்து என்னிடம் கூறினார்கள்.அதை க் கேட்டு எனக்கு கோபம் வரவில்லை. உங்களது தவறான பார்வையை எண்ணி அனுதாபம் தான் எற்பட்டது.
 
2-
 
ஏனென்றால் நான் நீண்டகாலமாக உங்களை அறிவேன் தனி;ப்பட்ட முறையில் நீங்கள் நல்ல மனிதர் என்பதையும் நான் அறிவேன்.
 
 
3-
பாதிப்புக்கு எதிராக குரல் கொடுப்பதையும் போராடுபவதையும் பயங்கரவாதம் என்று சொல்லும் பார்வையின் சாயல் உங்கள் கூற்றில் இல்லையா என்பதை தயவு செய்து மனச்சாட்சியோடு கேட்டுப்பாருங்கள்.
 
 
4-
நீங்கள் சொல்வதை மாற்றுக்கருத்து மாமணிகள் இவர் புலிவால் Gலிக்கு சார்பானவர்.இவர் எழுதுவதெல்லாம் புலிக்கு சார்பனது என்கிறார்கள்
 
5-
 
கீழே உள்ளது ஒரு சாதிவெறியர் எனக்கு அனுப்பிய செய்தி....
'ஐந்தாம் வகுப்பு அறிவே இல்லாத பண்ணாடை பரதேசி நீ எல்லாம் ஏண்டா பதிவு எழுதிறாய்.நாயே போய் சோத்துப்பாசல் வாங்கிச் சாப்பிடடா.உனக்கெல்லாம் ஊடவியலாளன் என்டு சொல்ல என்னடா தகுதி இருக்கு?நீங்கள் எல்லாம் வெளிநாட்டக்கு வந்தாபோல பெரியாக்கள் ஆகியிட்டீங்களா?எப்பவடா நீங்கள் கொம்யூட்டரை கண்டனீங்கள்.கீ போட்டிலை தட்டுறதை விட்டுட்டு ஊருக்கு போய் கொப்பன்ரை தொழிலை செய்யடா?'
0000
 
6- 
ஆறுமுகநாவலரை பற்றி நிறையவே எழுத்துக்கள் வெளிவந்துவிட்டன. நான் எழுதிய என்னுடைய தரப்பு கருத்து.
 
7-
அதை எற்பதற்கும் மறுப்பதற்கும் உங்களுக்கு உரிமையுண்டு.அதை நான் எற்றுக்கொள்கிறேன்.
 
8-
 
ஆனால் நான் வெறித்தனமாக எழுதுகிறேன் பகக்ச்சார்பாக எழுதுகிறேன் என்பது விமர்சனதல்ல.சேறடிப்பு
 
9- 
அன்புடன்
என்றும் உங்களுக்கு தெரிந்த 
சிவா சின்னப்பொடி

 

 

வணக்கம் அண்ணா

முதலில் நன்றி  தங்களது கனிவான  பதிலுக்கு.

ஒவ்வொன்றுக்கும் பதிலெழுத விரும்பவில்லை.

நான் எழுதி  நீங்கள் தெரிந்துக்கணும் என்றநிலையில் தங்களை  நான்மதிப்பிடவில்லை.

தங்களைப்பற்றிய  ஒரு உயர்ந்த மதிப்புண்டு.

 

இரண்டு விடயங்களுக்கு மட்டுமே பதில் எழுதுகின்றேன்.

 

2- என்னுடைய எழுத்தைப்படித்து ஆத்திரமடைந்த நீங்கள் சில கருத்துக்களை சொன்னதாக சிலர் வந்து என்னிடம் கூறினார்கள்.அதை க் கேட்டு எனக்கு கோபம் வரவில்லை. உங்களது தவறான பார்வையை எண்ணி அனுதாபம் தான் எற்பட்டது.

 

அண்ணா

இன்றைய  எம்முடைய முதல் வேலை  எதுவென்றால் 

எமக்குள் பிரிவுகள் உருவாகாமல் இருப்பதையும் பிரிக்காமல் இருப்பது தான்

அந்தவகையில் 

என்னைத்தெரியும் என்கிறீர்கள்

நேரே கேளுங்கள் அண்ணா

இடைத்தரகர்கள் எப்பொழுதும் 100 வீதம் உண்மை பேசுவதில்லை.

 

 

 

ஆனால் நான் வெறித்தனமாக எழுதுகிறேன் பகக்ச்சார்பாக எழுதுகிறேன் என்பது விமர்சனதல்ல.சேறடிப்பு
 
9- அண்ணா
இன்று நேற்றல்ல
பல காலமாக உங்களது
உரையாடல்களை
கட்டுரைகளை
நேர்காணல்களை
.....................
.......................  வாசிப்பவன்
அந்தவகையில் ஒரு வாசகனாக தங்களிடம் இது சம்பந்தமாக ஒரு காரம் இருப்பதை அவதானித்துள்ளேன்.
இதை நீங்கள் ஏற்காமலிருக்கலாம்.
ஆனால் அந்தக்காரம்  மேலும் வேற்றுமைகளையும் தூரப்போகுதலையும்  ஏற்படுத்துவதை தவிர்க்கணும் என்பதே எனது வேண்டுகோள்.
 
 
மற்றும்படி பொதுவாழ்விலும்
தேசியப்பணியிலும்  என்னுடைய  பணி  என்பது  தங்களுடன் ஒப்பிடும்போது தூசுக்கு சமனானது.
 
நன்றியண்ணா.
 
 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழும், தமிழரில் உள்ள சாதியமமும் பழமையானவை. எந்தளவு பழமையானது என்று தமிழ் இலக்கியத்திலும் பார்க்கலாம், எமது முதாதையரிடமும் கேட்கலாம், இப்ப உள்ள இணைய தளங்களிலும் பார்க்கலாம். இதில் விடுதலை புலிகளின் பங்கு, அல்லது சிங்களவரின் பங்கு, இப்ப உள்ள பொருளாதார வளர்ச்சி என்பன தேங்கிய  ஆற்றை சிறுய

 

அல்லது பெரிய வடி கொண்டு சுத்தபடுத்துவது போன்றது. விடுதலை புலிகளை பற்றியே பல கருத்துக்கள் 

இருப்பதால் சொல்லுகிறேன், இந்த ஆயுத போராட்டம் தொடகுவதர்ற்கு முன்னமே, ஊரில் பெண் எடுக்க முடியாமல், சிங்களத்தியை கலியாணம் செய்தவர்களும், மலையாளத்த்வர்களை கலியாணம் செய்தவர்களும் இருந்தார்கள். அதை ஒரு புரட்சியாக செய்தார்களோ அல்லது வேறுவழி இல்லாமல் செய்தார்களே என்று தெரியவில்லை. ஆனால் அப்படி இருந்தது. விடுதலை புலிகள் காலத்தில் எப்படியெல்லாம் இருந்தது என்று பலரும் எழுதியாதால் அதை பற்றி எழுதாமல் விடுகிறேன். இப்ப உள்ள நிலைமை, ஆகக் குறைந்தது புலம் பெயர்ந்த நாட்டில், சகலருக்கும் சந்தர்பம் வழங்கபட்டுள்ளது, - கல்வி பொருளாத முன்னேற்றத்திற்காக, பலரும் பல திசைகளில் பயணிக்கிறார்கள், அந்த பெறுபேறுகள் கால மாற்றத்தில் பலன்களை கொண்டு வருமா என்று  (சில) காலம் கடந்தால் தான் சொல்ல முடியும். விடுதலை புலிகள் காலத்தில் நடந்ததை விட இன்று நடப்பவை ஒரு "நிலைத்து இருப்பதற்கான " சந்தர்பங்கள் கூடுதலாக உள்ளதால் சில வேளைகளில் மாற்றங்கள் வரலாம். அதே நேரம் இந்த சாதி முறையை இங்கும் தொடர்ந்தும் தக்க வைக்க கூடிய வைகையில் நிகழ்வுகள் நடந்து கொண்டே போகிறது. எந்த திருமண  ஒழுங்குபடுத்தும்  இணையத்தை சென்று பார்த்தாலும் இருமரபும் தூய வெள்ளாளர் என்பது தமிழர் என்பது போல, இந்து சமையத்தை சேர்ந்தவர்கள் என்பது போல, மற்ற மற்ற விடயங்கள் போல முதன்மை பெறுகிறது.

மறுதலைக்கு வெள்ளாளர் அல்லாத சாதிகளில் உள்ள படித்தவர்களும் தங்கள் சாதியை சேர்ந்தவர்களையே மணக்க வேண்டும் என்கிற பண்பும் இருக்கிறது. வெள்ளைக்காரன் சாதி முறைக்கு பழக்கமிலாதவன் என்பதால், அவர்களால் தங்கள் காரியங்களில் சாதித்து கொள்ளவும் முடிகிறது.

சாதியை பேண  வேண்டும் என்கிற சத்திகளும், அதை நீர்த்துப்போக செய்கிற சத்திகளும் முன்னரை போலவே -ஒரு 50-60 வருடங்களுக்கு முந்தையது போல இப்பவும் இருக்கிறது, எந்த பக்கம் போகுமோ என, எதிர்வு கூறுவது கடினம்.

தலித் என்கிற சொல்;

எல்லோரும் சொல்லுவது போல இது ஒரு -இலங்கை தமிழுக்கு புதிய சொல்தான், ஆனால் கிட்டத்தட்ட அதற்கு சமமான சொல் இல்லாதவிடத்து அந்த சொல்லை உள்வாங்குவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் வழமை போல மாட்டை பற்றி எழுதசொன்னால் மாட்டுக்கொட்டிலை பற்றி எழுதுகின்றார் .தம்பி எமது ஊரில் தான் பெற்றோர் படிப்பித்தார்கள் அங்குதான் இவை அனைத்தும் நடந்தது .

 

நிழலி ,

சிங்கள அரசுகள் பெடியங்கள் ஆயுதம் தூக்கி விட்டார்கள் என்று வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது சரி என்பது போலிருக்கு உங்களது கருத்து . இயக்கங்கள் தொடங்கிய காலத்தில் ஒரு கொஞ்சம் என்றாலும் சமுக பிரச்னை பற்றி கதைத்தது இரண்டு இயக்கங்கள் தான் .மற்றவர்கள் ஆயுதம் மூலம் தமிழிழம் அதன்பின் அடுத்து எல்லாம் என்ற நிலைப்பாடுதான் .ஒரு ஒழுங்கான அரசியல் அமைப்பை உருவாக்க புலிகள் என்றும் முயற்சிக்கவில்லை .

தண்டித்து எதையும் சாதிக்க முடியாது ,புலிகளுக்கு அது மட்டும்தான் தெரியும் .புலம் பெயர்ந்து பிள்ளைகளை வளர்க்கும் எங்களுக்கு இவை எல்லாம் விளங்காமல் இருப்பது அதிசயமே .

பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழிவகுக்க  சாதியம் பறந்துவிடும் .(தமிழ்நாட்டில் இளையராஜாவும் பாரதிராஜாவும் வைரமுத்துவும் உதாரணம் ).

இந்த தலைப்பின் கீழ் என்றாலும் நேர்த்தியுடன் எழுதுகிறீர்கள் என்று நினைத்தேன்.

(பச்சை ஒன்று  குத்தியுள்ளேன் உங்கள் பெற்றோருக்கு ) திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறி நிட்கிரீன்கள்.
நீங்கள் எழுதிய இதே பந்தியில் முன் உள்ள வரியையும் ........... பின்னுள்ள வரியையும் ஒரு முறை வாசித்து ஏதும் அர்த்தம் படுகிறதா என்று பாருங்கள்.
எமக்கு முன் இருந்த முதலாவது பிரச்சனை சிங்கள ஆதிக்க அடக்குமுறைதான். அதில் இருந்து ஓரளவேனும் நாம் தலை தூக்கினால்தான் மற்றவைகளை பார்க்க முடியும் என்ற நிலைதான்( எந்த நாட்டிலும் இருந்தது) நாட்டில் இருந்தது, அதை கடைசி வரியில் நீங்களும் எழுதுகிறீர்கள். அந்த முதலாவது வரி பழக்க தோசமா? அது என்ன என்று ஒரு முறை வாசித்து பார்ப்பீர்களா?
விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்களா?
விடுதலைப்புலிகள் எப்படி மக்கள் மத்தியில் அரசியலை வளர்த்திருக்க முடியும்? 
 
புலிகள் ஆயுதங்களை விற்று அரசியல் வகுப்புகளை செய்திருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா?
சிங்களவனுக்கு வேலை இலகுவாக முடிந்திருக்கும்.
நீங்கள்தான் பிரபாகரன் என்று ஒருமுறை நினைத்து கொள்ளுங்கள். பின்பு எப்படி எமது சமூதாயத்தை திருத்தியிருக்க முடியும் என்று சாத்தியபடுவதை ஒருமுறை எழுதுங்கள்.
புலிகள் ஒரே இயக்கமாக இருந்ததால்தான் இதுவரையில் சத்திக்க முடிந்தது என்பதை உங்கள் ஆறாம் அறிவு  அறியும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாதியத்தை பற்றி எத்தனை திரிகளில் எழுதினதையே திரும்ப,திரும்ப எழுதிக் கொண்டு இருக்கிறம் :) ...எப்படி எழுதினாலும் சாதி ஒழியாது என்பது வேற கதை :(

 

பட்டினி போட்டால் எல்லாம் பறக்கும்.

 
நாம் உயர்ந்த சதியை சேர்ந்தவர்கள்...... எங்களை உயர்சாதி சிங்கள படைகள்தான் சோதிக்க முடியும் என்று எந்த சாதிக்காரன் இப்போ எழுந்து நிற்கிறான்??
 
சாதி என்று ஒன்று உண்மையிலேயே இல்லை. அறியாமையும் அடவாடி தனமும்தான் இருக்கிறது. எமது கையை உயர்த்தினால் எல்லாம் சரி.
அர்ஜுன் அவர்கள் எழுதியது போல் பொருளாதாரம் இருந்தால் எல்லாம் வந்து ஒட்டிக்கொள்ளும்.
மேற்கு நாட்டிற்கு வந்து எல்லோரும் வெள்ளைகாரனின் கழிவறைகளை கழுவி நிற்கிறார்கள். (இதுக்குள் ஓவர் டைம் இல்லை என்று குறைபாடு வேற) அங்கு அதே வேலையை செய்தவனை இழிவு செய்து அடவாடித்தனம் செய்ததுகள் இந்த நாதாரி கூட்டம்தானே?
அர்ஜுன் அவர்களுடைய பெற்றோர் செய்ததை ஏன் மற்றவரால் செய்யமுடியாது போனது.
அறிவா? 
சாதியா?
மூடர்களை ஒழிக்க முடியாது என்று எழுதுங்கள்.
சத்தியத்தை ஒழிக்க அது எங்கே இருக்கிறது? ஒரு உண்மையான சாதிக்காரனை பார்ப்பது  என்பது என்னுடைய கொள்ளை ஆசை. அது வெறும் நீரசை என்பது எனக்கு இப்போது தெரிந்து விட்டது.
Link to comment
Share on other sites

தமிழர்களும் சாதிகளும்
சி. இராஜாராம்

சாதி என்பது தமிழ்ச் சொல், வடமொழியில் ஜாதி என்றானது. சாதி என்னும் தமிழ் சொல்லுக்கு இன்றைக்கு நாம் கொண்டுள்ள பொருள் சங்க காலத்தில் இல்லை.
தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில் ஒரே வகையான இனத்தைச் சார்ந்த செடியினம் அல்லது உயிரினம் ஆகியவற்றைக் குறிக்க Family என்ற சொல்லைப் பயன்படுத்துவர். இந்த ஆங்கிலச் சொல்லுக்குக் குடும்பம், குடும்ப உறுப்பினர், தொகுதி, பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச் சிறப்புக் குழு, இனம், நேசத் தொடர்பு கொண்ட இனத்தொகுதி என்று பல்வேறு பொருள்கள் உண்டு. இதே அடிப்படையில் தான் சாதி என்ற சொல் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டது.

‘நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே’ (தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல்) என்பது நூற்பா. நீருள் வாழும் இனங்களில் நந்து என்பதும் நாகு என்பதும் பெண்பால் பெயர்பெறும் என்பது இதன் பொருள்.

இதைப் போன்றே மணிமேகலையிலும் ஒரு குறிப்பு வருகிறது.

பயிலொளி யொடுபொரு ளிடம்பழு தின்றிச்
சுட்ட றிதல்கவர் கோட றோன்றாது
கிட்டிய தேச நாம சாதி
குணக்கிரி யையி னறிவ தாகும்
இன்னோரிடத்தில் இப்படி வருகிறது.
சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி
விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்
இந்த இரு இடங்களிலும் வரும் சாதி என்ற சொல், வகை அல்லது பண்பு என்ற பொருளில்தான் ஆளப்பட்டுள்ளது.
ஆக, சங்க காலத்தில் சாதி என்னும் சொல் வழக்கில் இருந்தாலும் அது மனித இனத்தைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்து, தனிமைப்படுத்தியுள்ள இக்கால சாதி என்ற பொருளில் வழங்கப்படவில்லை என்பது உறுதி.

சாதி என்னும் சொல்லுக்கு நிகராக ஆங்கிலத்தில் வழங்கும் சொல் Caste என்பதாகும். இந்தச் சொல்லுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி தரும் விளக்கம் இது.
‘சாதி என்ற பொருளை உணர்த்தும் இச்சொல் ஸ்பானிஷ் மொழியில்தான் முதன் முதலில் தோன்றியது. பின்னர் இந்தியச் சமூகத்தில் நிலவும் மிகவும் இறுகிப்போன சமுதாய விதிகளைக் குறிக்கும் சொல்லாக இது 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரால் வழங்கப்பெற்றது.

‘இச்சாதி அமைப்பு (காஸ்ட் சிஸ்டம்) தனி மனிதர்களை அவர்களுடைய பிறப்பு, தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது. இவ்வாறு வரிசைப்படுத்தும் முறையும் அச்சமூக அமைப்பில் உள்ள திருமணம் மற்றும் சமூக உறவுகளால் (சோஷியல் இண்டர்கோர்ஸ்) பாதுகாக்கப் பெற்று, இந்து அல்லாத பிற ஆசியச் சமூகங்களிலும் இடம்பெற்று விட்டது.
‘இந்தியாவில் தொன்றுதொட்டு நிலவிய நால் வருணப் பாகுபாடே சாதிகள் தோற்றம் கொள்ளக் காரணமாயின என்ற கருத்து தவறானது. வேத காலத்துக்குப் பின்னர் தோன்றிய வணிகக் குழு, தொழில் குழு (கில்ட்) ஆகியவற்றின் விளைவே சாதியின் தோற்றத்துக்குக் காரணம். (The Oxford Reference Dictionary, பக்கம் 137).

சாதிகளின் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே இரண்டு வகையான கருத்துகள் நிலவுகின்றன. இந்தியச் சமுகம் பற்றி ஆராயும் மேலைநாட்டு ‘இந்தியவியல்’ அறிஞர்கள் (இன்டாலஜிஸ்ட்) சாதிகளின் தோற்றத்துக்கு ஆரியர்களோ அவர்களின் வேதங்களோ காரணமாக அமையவில்லை என்றும் ஆரியர் இந்தியாவுக்கு வந்து, சிந்துச் சமவெளியிலிருந்து கங்கைச் சமவெளிக்குப் பரவிய பின்னரே இந்தியாவில் சாதிகள் அரும்பத் தொடங்கின என்றும் கருதுகின்றனர்.
இந்தக் கருத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டதுதான் மேலே கண்ட சாதிகள் பற்றிய ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் விளக்கம். இத்தகைய கருத்தை உருவாக்கிய அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் Dr. Muir, அமெரிக்க அறிஞரான Henrich Zimmer ஆகியோர்.

சாதிகளின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களின் நான்கு வேதங்களும் அவர்களால் உருவாக்கப்பட்ட உபநிடதங்களும் தரும சாத்திரங்களுமே அடிப்படை என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் மற்றொரு பிரிவினர். இவர்கள் பார்ப்பனர்களையும் அவர்களுடைய வேத வேள்விப் பண்பாடுகளையும் எதிர்த்தனர். சாதியின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களே காரணம் என்னும் கருத்தின் அடிப்படையில் அவர்களைக் கண்டித்தும் மறுத்தும் வந்துள்ளனர்.

இந்தியாவில் தோன்றிய அனைத்து மனித நலச் சிந்தனையாளர்களும் அதாவது வள்ளுவர், கபிலர் (சாங்கியக் கோட்பாட்டை நிறுவியவர்) புத்தர் முதல் தந்தை பெரியார், அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபூலே முதலான அனைவரும் இப்பிரிவைச் சார்ந்தோர் எனலாம். இந்தியாவில் நடந்த சாதி ஒழிப்புக்கான போராட்டங்கள் அனைத்தும் பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்களாகவே அமைந்துள்ள வரலாற்று உண்மையும் சாதிகளின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களே காரணம் என்பதை உறுதி செய்கிறது.

அம்பேத்கர் சாதிகளை ஆய்வு செய்து, ‘அகமணமே (endogamy) சாதிக்குரிய தனித் தன்மையான ஒரே இயல்பு ஆகும்’. அதாவது கலப்பு மணம் செய்து கொள்வதற்கான தடைகளிலிருந்துதான் சாதிகள் தோன்றுகின்றன என்று விளக்குகிறார். மேலும் :
இந்திய மக்கள் ஒரு கலவையான உருவாக்கமாக இருந்தபோதிலும்கூட அவர்களிடைய ஓர் ஆழ்ந்த பண்பாட்டு ஒத்திசைவு உள்ளது.
மிகப்பெரிய பண்பாட்டு அலகைத் தனித்தனிச் சிப்பங்களாக ஆக்குவதே சாதி.
ஒரு சாதியிலிருந்து மற்றெல்லா சாதிகளும் உதயமாயின.
பார்த்தொழுகுதல் (imitation) விலக்கி வைக்கப்படுவதாலும் வர்க்கங்கள் சாதிகளாயின.
என்றும் அம்பேத்கர் வகைப்படுத்துகிறார்.

‘தமிழ்நாட்டில் சாதிகளின் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்த முனைவர் கே.ஆர்.அனுமந்தன் பின்வரும் காரணங்களே சாதிகளின் தோற்றத்துக்கு அடிப்படை என்கிறார்.
அகமணம் – தன் சொந்த சாதிக்குள்ளேயே மணம் செய்தல். அதன் வாயிலாகப் பிறசாதியுடன் மண உறவைத் தடுத்தல்.
பிற சாதியினருடன் கலந்துண்ணத் தடை.
பரம்பரைத் தொழில் (கற்பனை அல்லது உண்மை)
தன் பரம்பரையின் தொடக்கம் குறித்த கோட்பாடு (தெய்வீகத்தன்மை அல்லது மனித மூலம்).
புரோகித அமைப்பில் பார்ப்பனர்க்கு உயர்வும் சூத்திரர்க்கு தாழ்வும் கற்பித்த சமூக அமைப்பு.
சாதி நீக்கம் (Ex-communication).
சமயச் சடங்கின் புனிதம் கற்பித்தல். அத்துடன் தூய்மை அற்றவர் எனச் சிலரைச் சமய சடங்குகளிலிருந்து விலக்கி வைத்தல்.
தமிழ்ச் சமுதாயத்தில் ஐந்திணைகளிலும் இருந்த மக்கள் பெரும்பாலும் இனக்குழுவினராகவே இருந்திருப்பர். தொழில் அடிப்படையில் வேறுபட்ட இந்த இனக்குழுக்கள் பெரும்பாலும் அகமணக் குழுக்களே. அக்காலத்தில் சாதியோ, வர்ணாசிரமமோ இருந்திருக்காது.
நால்வருணம் பற்றிக் கூறும் தொல், பொருள், மரபியல் சூத்திரங்கள் (71-85) இடைச் செருகல் என்பதை அனைவரும் ஏற்கின்றனர்.

ஆரியர்களின் தாக்கம் தமிழ்நாட்டில் கி.மு. 4ம் நூற்றாண்டை ஒட்டியே மெதுவாகத் தொடங்கியிருக்கும். சமணர், புத்தர், பிராமண மதத்தினர் என்ற வரிசையில் இத்தாக்கம் இருந்திருக்கும். பிராமணர் தமது வருணாசிரமக் கொள்கையைத் தன்னல நோக்குடன், திராவிட இனக்குழுச் சமூகத்தை வேதியியல் மாற்றம் அடையச் செய்ய சாதிகளையும் சாதி வேற்றுமைகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் உருவாக்கினர். தமிழகத்தில் இவ்வகையில் ஆரியத்தாக்கம் ஏற்பட்ட காலம் கி.பி. 600க்கும் பின்னர்தான் இருக்க வேண்டும் என்கிறார் பி.டி.சீனிவாச ஐயங்கார்.

புத்தர் வாழ்ந்த காலத்தில் சாதி – வருண அடிப்படையிலான சமூக உறவுகள் முழுமையடையாத நிலையில் உற்பத்தி உறவுகள்தான் சமூகத் தகுதியை தீர்மானித்தன. நிலத்தின்மீது ஆளுகை செலுத்தியவர்கள் ‘கஹபதி’கள் என்று அறியப்பட்டனர். அவர்களுக்கென சாதி அடையாளமோ வருண அடையாளமோ இருந்ததாகத் தெரியவில்லை. அதே சமயம் நிலமற்ற உழைப்பாளிகளும், ஏவல் தொழில் புரிந்தவர்களும் குறிப்பிட்ட வருண, சாதி அடையாளத்தைப் பெற்றிருக்கவில்லை. இவர்கள் ‘தாசர்கள்’ என்றும், ‘கம்ம (கரும)க்காரர்கள்’ என்றுமே பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. உணவையும் ஊதியத்தையும் எதிர்பார்த்தே இவர்கள் உழைத்ததாகத் தெரிகிறது. இக்காலகட்டத்தில் செல்வர் – வறியவர் என்ற அடிப்படையில் சமுதாய உறவுகள் முரண்பட்டிருந்தனவே ஒழிய மேல் – கீழ் வரிசையில் நிறுத்தப்பட்ட சாதி நிலைகளின் அடிப்படையில் அல்ல.

கி.பி. 500-1000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் விவசாய விரிவாக்கம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியது. மேலும், ஏற்றத்தாழ்வுகள் சாதியப் பாகுபாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டது. காவேரி ஆற்றுப் பகுதியில்தான் சாதிப் படிநிலை அமைப்பு முதன் முதலில் உருத்திரட்டு பெற்றது. மூவேந்தர்களின் ஆட்சியில்தான் முழுமையாக ஏர்கொண்டு உழுதல் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்பமும், குலக்குழுவும் நிலத்தில் பாடுபட்ட நிலைமை மாறி அடிமைகளையும், கூலிகளையும் கொண்டு விவசாய உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. முடி மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு மானியங்களாக வழங்கிய நிலங்களில்தான் இந்த அடிமை முறை முதலில் கையாளப்பட்டது.

பார்ப்பனர்களே ஆண்டைகளாக விளங்கியதுடன், நாட்டில் அவர்கள் மேலாண்மையும் செலுத்தி வந்தனர். சமுதாயத்தில் நெறி வகுப்பவர்களாக நிதி, நியாயம் முதலியவற்றை வரையறுத்துத் தீர்மானிப்பவராக தம்மை நிலை நாட்டிக் கொண்டு விவசாயக் கூலிகளையும், ஏனைய தொழில் பிரிவினரையும் சாதிகளாக அடையாளப்படுத்தி அச்சாதிகளை மேல் – கீழ் வரிசையில் நிறுத்தி இன்றுள்ள சாதிப்படிநிலை அமைப்புக்கான வித்துகளை அன்றே அமைத்தனர். தீண்டாமை அன்றே அறிமுகப்படுத்தப்பட்டது.

கட்டாய உழைப்பாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட சமுதாயப் பிரிவினர் அடிமைகளாக, கூலிகளாக, சேவைப் பணியாளர்களாக வாழ நிர்பந்திக்கப்பட்டனர். இவர்களுக்கென்று தனி வாழ்விடங்கள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் அசுத்தமானவர்கள் – கீழானவர்கள் என்று கருதப்பட்டனர். இவர்களது உழைப்பைத் தொடர்ந்து சுரண்டுவதன் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட தீண்டாமையானது தூய்மையுடன் தொடர்புப்படுத்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து அவ்வாறே நீடிப்பதற்கான வலுவான நியாயங்களை தீண்டாமை தொடர்பான கருத்தாடல்கள் வழங்கின.

சாதி அமைப்பானது, குறிப்பிட்ட தொழில் புரிவோரைக் குறிப்பிட்ட சாதியாக அடையாளப்படுத்தி அத்தொழிலை அந்தச் சாதியும், அதனை ஒத்த சாதிகளும் மட்டுமே புரிய வேண்டும் என்று சட்டம் வகுத்து, அச்சாதியில் பொருளாதார, சமுதாய அந்தஸ்தையும் நிர்ணயம் செய்தது.
குறிப்பிட்ட வருணத்தின் அல்லது சாதியின் தனித்தன்மையையும் அடையாளத்தையும், நிலைநிறுத்த சில சட்டங்களும் கட்டுப்பாடுகளும் வகுக்கப்பட்டன. இன்ன சாதியார் இன்ன தொழிலைத்தான் செய்யலாம்; இன்ன சாதியார் மட்டுமே நிலவுடையாளராக இருக்க முடியும்; இன்னார்தான் அரசாள முடியும், ஆன்மிக அறிவாளிகளாக இருக்க முடியும்; சில சாதிகள் தூய்மையானவை, வேறு சில தீட்டுப்பட்டவை என்ற ரீதியில் அக்கட்டுப்பாடுகளும், சட்டங்களும் அமைந்தன.

தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள், மக்கள் செய்து வந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன. அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயிணர், கடம்பர், கம்மியர், களமர், கிளைஞர், குயவர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், துணையர், பரத்வர், பறையர், பாணர், புலையர், பொருநர், மழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் எனப்பல குலங்கள் தோன்றியிருந்தன. ஆனால், இக்குலங்களுக்குள் உணவுக் கலப்போ, திருமணக்கலப்போ தடை செய்யப்படவில்லை. ஒவ்வொரு குலத்தினரும் தத்தம் தொழிலைச் செய்து வயிறு பிழைத்தனர். ஒவ்வொரு குலமும் தமிழ்ச் சமுதாயத்தில் விலக்க முடியாத ஓர் உறுப்பாகவே செயல்பட்டு வந்தது.

இனம், நிலம் ஆகிய வேறுபாடுகளால் இடர்பட்டுத் தடுமாறாத தமிழரின் சமூகம் காலப்போக்கில் பல சாதிகளாகப் பிரிந்தது. மக்களுக்குப் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. பழந்தமிழகத்தில் திணைப் பிரிவுகளின் படியே வாழ்ந்து வந்த மக்கள் அந்த வாழ்க்கை முறைலிருந்து நழுவினர்.

மூலம்: http://www.tamilpaper.net/?p=7635

Link to comment
Share on other sites

சாதியமும் தமிழ் தேசியமும்(2007 ல் எழுதிய கட்டுரை- மீள்பதிப்பு )

 

தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தின் வீரவரலாறு 18 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் உயிராலும் இரத்தத்தாலும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் தமிழனத்தின் சாபக்கேடும் உடன் பிறந்தே கொல்லும் வியாதியுமான சாதியத்தை பற்றி இங்கே புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து பேச வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

இன்று புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள புலி எதிர்ப்பாளர்களுடைய பிழைப்புக்கான மூலதனமாக சாதியம் திகழ்கிறது. தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தை குறுகிய சாதிய வட்டத்துக்குள் அடக்கி கொச்சைப்படுத்தி மக்களை பிளவு படுத்த முனையும் வேலைகளும் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றன.

மறுபுறத்திலே ஒருவன் தான் இருக்கும் ஊரை மாற்றலாம் தனது பெயரை மாற்றலாம் தனது தொழிலை மாற்றலாம் தனது மதத்தை மாற்றலாம் ஆனால் தனது தாய் தந்தையரையும் தனது பிறப்பையும் அதனால் வரும் சாதிய அடையானத்தையும் மாற்ற முடியாது என்று சொல்கின்ற ஒரு கூட்டமும் ‘சாதியா அது எங்கே இருக்கிறது’ என்று சிங்களப்பார்வை பார்வை பார்த்து பம்மாத்து விடுகிற ஒரு கூட்டமும் இங்கே புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கிறது.( சிங்களப் பார்வை என்றால் தமிழர்களுக்கு இனப்பிரச்சனை என்ற ஒன்று இருக்கிறதா என்று முழுப் புசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்ப்பது.தமிழர் எல்லாம் பொரிய உத்தியோகத்தில் இருக்கிறார்கள்.வியாபாரம் அவர்கள் கையில் தான் இருக்கிறது. கொழும்பில் இலட்சக்கணக்கான தமிழர்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்று உதாரணம் காட்டுவது)

2000 வருட காலமாக நமது கருத்தியல் தளத்திலே ஆளமாக வேஷரூன்றி நமது சிந்தனைத் தளத்தை ஆக்கிரமித்திருக்கிற சாதியத்தை நாங்கள் ஒரு 30 வருடப் போராட்டத்தில் முற்று முழுதாக அழித்துவிட முடியாது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்.

சாதியம் என்பது மாறவில்லை அது அன்று இருந்த வடிவத்தில் இன்றும் அப்படியே இருக்கிறது என்று கூறமுடியாது.இன்று அடிமை குடிமை முறை கிடையாது. தீண்டாமை அன்றிருந்த நிலையில் இன்று இல்லை. ஆனால் அது முற்றாக ஒழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.

சாதியம் என்பது என்ன? இது எப்போது தோன்றியது? இன்று எங்கள் மத்தியிலே இருக்கக் கூடிய சாதியம் தமிழ் சமூக உருவாக்கத்துடன் தோற்றம் பெற்றதா அல்லது அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் திணிக்கப்பட்டதா என்கின்ற வினாக்களுக்கு விடை தெரியாத நிலையில் அல்லது அதை தெரிந்து கொள்ள விரும்பாத நிலையிலேயே எல்லோரும் சாதியைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் வர்க்க அடிப்படையிலான சாதியத்துக்கும் வர்ணக்கோட்பாட்டின் அடிப்படையிலான சாதியத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நம்மவர்கள் புரிந்துகொள்வதே இல்லை.

வர்க்க அடிப்படையிலான சாதி அமைப்பு என்பது அதாவது ஆண்டான் அடிமை- முறையும் மூலதனத்தை அல்லது சொத்தை அடிப்படையாகக் கொண்ட ஏற்றத் தாழ்வுகளும் ஐரோப்பிய சமூகத்தில் கூட இருந்தன. சர்வ வல்லமை பொருந்திய மத குருமார்கள் அரச பரம்பரையினர் பிரபுக்கள் அல்லது பூர்சுவாக்கள் வணிகர்கள் குடியானவர்கள் அல்லது அடிமைகள் என்று ஐரோப்பிய சமூகத்திலும் எற்றத் தாழ்வுகள் இருந்தன.

தமிழ் சமுகத்திலும் குறுஞ்சி முல்லை நெய்தல் மருதம் பாலை என்ற ஐவகை நிலப் பிரிவினை அடிப்படையிலான சமூக அமைப்பும் வலிமை மற்றும் சொத்தின் அடிப்படையிலான ஆண்டான் அடிமை முறையும் மற்ற சமூங்களைப் போலவே இருந்தது. செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்து மனிதர்களை இழிவுபடுத்தும் முறை தமிழ் சமூகத்தில் ஒரு பொது வழக்கமாக இருந்ததாகத் தெரியவில்லை. அடிமை குடிமை முறை சில தொழில்களை அடிமட்ட மக்கள் தான் செய்யவேண்டும் என்று கட்டாயப் படுத்தி இருந்தது. ஆண்டைகளுக்கும் அடிமைகளுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வு என்பது ஏனைய சமூகங்களில் இருந்தததைப் போலவே தமிழ் சமூகத்திலும் இருந்தது. ஆனாலும் பண்டைய தமிழ் சமூகம் காதல் மணத்தையும் களவு மணத்தை ஏற்கொண்ட சமூகமாக இருந்தால் சாதியக் கலப்பு தடுக்கப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

ஆனால் இன்று தமிழ் சமூகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் சாதிய அமைப்பென்பது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது தனக்குத் தானே வேலிபோட்டு தன்னை தானே அடைத்துக்கொன்டுவிட்ட ஒரு சமூக அலகாகாகும். தமிழ் சமுகத்தை தனித்தனி அலகுகளாக்கி எந்த ஒரு அலகும் மற்ற எந்த ஒரு அலகுடனும் இணைவதை ‘புனிதம் தீட்டு அகமணமுறை’ என்பவற்றின் முலம் தந்திரமாகத் தடுப்பதே இன்றைய இந்த சாதி அமைப்பின் அடிப்படையாகும். ‘நான் கடவுளின் படைப்பால் புனிதமானவன். என்னுடைய சாதி புனிதமானது. நான் என்னுடைய சாதி அலகுக்குள் அல்லாத அடுத்த சாதியினனை என்னுடன் சேர்த்துக்கொண்டால் அல்லது என்னுடைய வீட்டுக்குள், கோவிலுக்கள் அனுமதித்தால் ஒன்றாக உண்டு குடித்து உறங்கினால் தீட்டுப்பட்டுவிடும் என்பதே இந்த சாதி அமைப்பு போதித்து வைத்திருக்கும் நீதியாகும். எனவே இந்தப் புனிதத்தை காப்பாற்றுவதற்கு அகமணமுறை அதாவது தங்களது உறவு வட்டத்துக்குள் திருமணம் செய்வது வலியுறுத்தப்படுகிறது. காதல் திருமணமும் கலப்புத் திருமணமும் பாவச் செயலாகவும் எற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் பிரகடனப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு சாதிய அலகும் தன்னை தானே தன்னளவில் புனிதர்கள் என்ற நினைப்போடு மற்ற சாதிய அலகுகளில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதால் ஏனைய சமூகங்களிலும் இனங்கள் மத்தியிலும் (இந்தியா இலங்கை தவிர்ந்த) ஏற்பட்ட தொழில் புரட்சி பொருளாதார மாற்றம் மற்றும் அரசில் புரட்சிகளால் வர்க்க அடிப்படையிலான காரணங்களின் அடிப்படையில் இருந்த சாதி அமைப்பு தகர்ந்தது போல எங்கள் மத்தியல் இருக்கும் சாதி அமைப்பு தகரவில்லை.

என்னளவில் எங்கள் அளவில் நாங்கள் மேலானவர்கள் புனிதர்கள் என்று எங்கள் சிந்தனைத் தளத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்தியலே பௌத்த சிங்கள பேரின வாதிகள் குண்டு வீசி எங்கள் இனத்தையே அழிக்கும் போது சாதியையும் தூக்கிக் கொண்டு ஓடுவதும் புலம் பெயரும் போது அதையும் விமானமேற்றி கூடவே அழைத்து வருவதும் தொடர்கிறது. இந்த கருத்தியல் தான் காட்டிக் கொடுப்புக்களுக்கும் துரோகத்தனத்துக்கும் பிழைப்பு வாதத்துக்கும் கூட அடிப்படையாக இருக்கிறது.

 

ஈழத் தமிழ் மக்களான நாங்கள் யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு என்ற மூன்று வாழ்வியல் தளங்களை கொண்டவர்கள். இதில் யாழ்ப்பான சமூகமும் அதன் வாழ்வியல் தளமும் மட்டுமே இறுக்கமான சாதியக் கட்டமைப்பை கொண்டதாக இருந்தது. சாதி என்பது தமிழர்களுடைய அடையாளம் என்று இந்த சமூகம் நம்பியது.

யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்பு கட்டுள்ள சாதிகள், கட்டற்ற சாதிகள், கட்டுள்ள கலப்புச் சாதிகள், கட்டற்ற கலப்புச் சாதிகள் என்ற நான்கு வரையறைகளைக் கொண்டவையாக இருந்தது.

......................................

 

......................................................................

 

1697ம் ஆண்டு ஒல்லாந்தருடைய ஆட்சிக்காலத்தில் 40 சாதிகள் இருந்ததாக குறிக்கப்பட்டிருக்கிறது. தற்போது 15 முதல் 20 சாதிகளே வழக்கில் இருப்பதாகவும் அதிலும் சில சாதிகள் மறைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் 2000ம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழர்கள் தங்கள் வரலாற்றை தொலைத்தற்கும் தங்கள் தேசத்தை தொலைத்ததற்கும் அடிப்படையான இந்தச் சாதியத்துக்கு அடிப்படையாக இருப்பது வைதீக இந்து மதம் என்பதில் யாரும் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். கி.மு.1 ம் நூற்றாண்டில் வட இந்தியாவிலே ஆட்சியில் இருந்து சுங்க வம்சப் பிரிவைச் சேர்ந்த (பார்ப்பணிய பிரிவு) புஷ்யமித்திரன் என்பவனின் ஆட்சிக்காலத்தில் சுமதி பார்கவா என்ற பிராமணனால் உருவாக்கப்பட்ட மனு தர்மம் என்றே நூலின் மூலமே சாதியம் சட்டமாக்கப்பட்டது. இந்த இந்துத்துவ சட்ட நூலில் வகுக்கப்பட்ட வர்ணக் கோட்பாட்டின் மூலமே குலத் தொழிலும் தீண்டாமையும் அகமணமுறையும் மக்கள் மீது திணிக்கப்பட்டன.

நம்மிலே பலர் வைதீக இந்து மதத்துக்கும் தமிழர் மதத்துக்குள் வேறுபாடு காண முடியாத நிலையிலேயே இருக்கின்றார்கள். அன்பேசிவம் என்பதும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதும் தான் தமிழர் மதமாகும். சிவலிங்கம் என்பது ஆண் பெண் உறுப்புக்கள் சேர்ந்த வடிவம் என்பதும் கி.பி முதலாம் நூற்றாண்டு வரை ஆரிய வைதீக பிராமணர்கள் இந்த வழிபாட்டு முறையை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. திராவிடர்களை போரில் வெல்ல முடியாத ஆரியர்கள் தங்களது வர்ணக் கோட்பாட்டை தமிழர்கள் மத்தியல் புகுத்தி தந்திரமாக அவர்களை அடிமை கொள்வாற்காக பிச்சாண்டியான சிவனை மஹாதேவனாகவும் முருகனை ஸ்கந்தனாவும் கண்ணனை மகா விஸ்னுவாகவும் காளியையும் ஏனைய பெண் தெய்வங்களையும் சக்தியின் அம்சங்களாகவும் மாற்றிய வரலாற்றை இந்தக் கட்டுரையின் நீட்சி கருதி இங்கே குறிப்பிடவில்லை.

18 ம் நூற்றாண்டில் (1790 என்று நினைக்கிறேன்) தமிழகத்தின் பாண்டிச்சேரி காரைக்கால் பகுதிகளை கொலனிகளாக வைத்திருந்த பிரெஞ்சு அரசின் ஆளுனராக இருந்த தளபதி துப்ளக்ஸ் என்பவர் தமிழ் சமூகம் பற்றி ஒரு ஆய்வை செய்திருக்கிறார்.

இந்த ஆய்வில் முக்கியமான அம்சம் சோழரைப் பற்றியது. ஐரோப்பியர்களான தாங்கள் கடல் கடந்து சென்று நாடுகளைப் பிடித்து கொலனிகளாக வைத்திருப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தச் சோழர்கள் அதாவது தமிழர்கள் கிழககு மற்றும் தெற்காசியாவிலுள்ள பல நாடுகளை பிடித்து தங்கள் ஆட்சியின் கீழ் வைத்திருந்திருக்கிறார்கள். அந்த நாடுகளில் அவர்கள் திரட்டிய செல்வம் எல்லாவற்றையும் அவர்கள் தொழில் துறைகளில் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு அவர்களுடைய நாடு பிரான்சை விட பலம் கொண்ட நாடாகவும் வளாச்சியடைந்த நாடாகவும் இருந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு ஆலோசகர்களாக இருந்த பிராமணர்கள் நீங்கள் சென்ற இடங்களில் எல்லாம் கொலையும் கொள்ளையும் செய்து பாவம் சம்பாதித்துவிட்டீர்கள். இந்த கொடிய பாவம் உங்கள் சந்ததியை அழித்துவிடும் அதற்கு பிராயச்சித்தம் தேடுவதற்கு கோவில்களை கட்டுங்கள் யாகங்கள் நடத்துவதற்கும் வேத பாராயணம் செய்வதற்கும் பிராமணர்களுக்கு தானங்களை வழங்குங்கள் எற்று கூறி அந்த செல்வம் எல்லாவற்றையும் கோவில் கட்டுவதற்கும் சதுர்வேதி மங்கலங்கள் என்ற யாக சாலைகளை அழைப்பதற்கும் செலவழிக்க வைத்துவிட்டார்கள்.இன்று சோழர்களும் இல்லை. அவர்களது இராட்சியமும் இல்லை. அவர்களது குடி மக்களான தமிழர்கள் தங்களது முன்னோர்கள் செய்த பாவம் தீர இன்னமும் கோவில்களில் பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறார்கள். சோழர்களை போரில் வெல்ல முடியாத அவர்களது எதிரிகள் மதம் என்ற அவர்களது பலவினத்தை வைத்து அழித்ததை பிரான்ஸ் அரசாங்கம் உதாரணமாகக் கொள்ளவேண்டும் என்று துப்ளக்ஸ் தனது ஆய்வில் தெரிவித்திருக்கிறார்.

சாதி என்பது தமிழ் சமூகம் ஒன்றுபடுவதற்கும் விடுதலை இலக்கை விரைந்து அடைவதற்கும் முக்கியமான தடைக்கல்லாக இருக்கிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சாதியத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் என்பதிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குள் சாதியம் என்பது நுழைய முடியாது என்பதிலும் சந்தேகமேயில்லை. இதற்கு ஏராளமான நடைமுறை சார்ந்த உதாரணங்கள் இருக்கின்றன. அவை பற்றி இங்கு பேச வேண்டிய தேவையும் இல்லை.

இப்போது பிரச்சனை என்னவென்றால் புலம் பெயர்ந்த சமூகத்தை சீரழிப்பதற்கு சாதியத்தை கையில் எடுப்பதாகும்.

புலம் பெயர்ந்த நாடுகளில் சாதி பார்க்கப்படுகிறதா? அது எந்த வகையில் பார்க்கப்படுகிறது? ஏன் பார்க்கப்படுகிறது? என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும்

சிவா சின்னப்பொடி

(12.03.2007 ல் யாழ் இணையத்தில் எழுதியது)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தேசங்களில் சாதியம் பார்க்கப்படுவது இன்றும் நடைபெறுகின்றது .

காரணம் கேட்டால் கிடைக்கும் பதில்

" நாளைக்கு நாங்கள் ஊருக்குப் போய் எப்படி வாழ்வது"

"சொந்தம் பந்தம் எங்களைப்பற்றி என்ன நினைக்கும்"

இன்னும் பல காரணங்கள் உள்ளன .

 

கல்வி முன்னேற்றம் மற்றும்  பொருளாதாரம்  சாதியத்தைக் குறைக்க வழிசெய்யும்.

 

அதைவிட முக்கியம் தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கப்படுபவர்கள் தாங்களாகவே அதை 

உடைத்தெறிய முன்வருதல்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பட்டினி போட்டால் எல்லாம் பறக்கும்.

 
நாம் உயர்ந்த சதியை சேர்ந்தவர்கள்...... எங்களை உயர்சாதி சிங்கள படைகள்தான் சோதிக்க முடியும் என்று எந்த சாதிக்காரன் இப்போ எழுந்து நிற்கிறான்??
 
சாதி என்று ஒன்று உண்மையிலேயே இல்லை. அறியாமையும் அடவாடி தனமும்தான் இருக்கிறது. எமது கையை உயர்த்தினால் எல்லாம் சரி.
அர்ஜுன் அவர்கள் எழுதியது போல் பொருளாதாரம் இருந்தால் எல்லாம் வந்து ஒட்டிக்கொள்ளும்.
மேற்கு நாட்டிற்கு வந்து எல்லோரும் வெள்ளைகாரனின் கழிவறைகளை கழுவி நிற்கிறார்கள். (இதுக்குள் ஓவர் டைம் இல்லை என்று குறைபாடு வேற) அங்கு அதே வேலையை செய்தவனை இழிவு செய்து அடவாடித்தனம் செய்ததுகள் இந்த நாதாரி கூட்டம்தானே?
அர்ஜுன் அவர்களுடைய பெற்றோர் செய்ததை ஏன் மற்றவரால் செய்யமுடியாது போனது.
அறிவா? 
சாதியா?
மூடர்களை ஒழிக்க முடியாது என்று எழுதுங்கள்.
சத்தியத்தை ஒழிக்க அது எங்கே இருக்கிறது? ஒரு உண்மையான சாதிக்காரனை பார்ப்பது  என்பது என்னுடைய கொள்ளை ஆசை. அது வெறும் நீரசை என்பது எனக்கு இப்போது தெரிந்து விட்டது.

 

 

 
சாதி என்று ஒன்று இல்லை என்பதை எப்படி உங்களால் உறுதியாக கூற முடியும்?...புலத்தில் எவ்வளவு தான் பொருளாதார ரீதியாக முன்னேறினாலும் 95% மானோர் இன்னும் சாதி பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்
 
உங்களிடம் தனிப்பட ஒரு கேள்வி நீங்கள் திருமணம் முடித்தவரா அல்லது முடிக்கவில்லையா தெரியவில்லை...நீங்கள் திருமணம் சய்யும் போது உங்களை விட தாழ்ந்தவரிடத்தில்[பொருளாதார ரீதியாக இல்லை] பெண் எடுப்பீர்களா அல்லது உங்கள் ஆட்களுக்குள்ளேயே பெண் எடுப்பீர்களா?
 
சாதி இல்லை என்று சொல்கிறவர்களும்,சாதி பார்க்க மாட்டோம் என சொல்கிறவர்களும் தான் முக்கியமாய் சாதி பார்க்கிறார்கள்...இயக்கத்திற்குப் போய் போராடின போராளிகள் கூட‌ தங்கள் திருமணத்தில் சாதி பார்க்கினம்...சாதி இல்லை.எல்லாம் மாயை என்று வார்த்தையில் சொல்லலாம் ஆனால் உண்மையில்?
 
அர்ஜீன் அண்ணாவின் பெற்றோர் சாதியை ஒழிக்க முன்னுக்கு நின்று இருக்கலாம் ஆனால் தங்கட பிள்ளைகளுக்கு தங்கட சாதியில் அல்லது சாதி கூடின இடத்தின் தான் கட்டிக் கொடுத்து இருப்பினம் என்று நினைக்கிறேன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.