Jump to content

நீங்கள் எந்த முறையில் கற்கிறீர்கள்?


Recommended Posts

 

- கிருஷ்ண வரதராஜன்

 

மாணவர்கள் கற்கும் விதம் குறித்து உலகம் முழுவதும் ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டு அறிவிக்கப் பட்ட வழிமுறைகளில் குறிப்பிடத் தகுந்த முறை யஅஓ முறையாகும்.

 

மனிதர்கள் மூன்று விதமான வழிமுறைகளில் கற்றுக்கொள்கிறார்கள் என்பதோடு, எந்த முறையில் கற்பவர்கள் என்னென்ன வழி முறைகளை பின் பற்றினால் இன்னும் சிறப்பாக படிக்க முடியும் என்பதையும் இந்த யஅஓ முறை வலியுறுத்துகிறது.

 

1. Visual learnersபார்ப்பதன் வாயிலாகக் கற்பவர்கள்
2. Auditory leanersகேட்பதன் வாயிலாகக் கற்பவர்கள்
3. Kinesthetic learnersசெயல்வழி கற்பவர்கள்
இதில் நீங்கள் எந்த வகை என்பதை எப்படிக் கண்டறிவது ?

இதைக்கண்டறிவதற்கு இணைய தளத்தில் பல சோதனைகள் உள்ளது. இணையத்தை பயன்படுத்தாதவர் களுக்காக இங்கே ஒரு மாதிரியை பார்ப்போம்.

உங்கள் கற்றல் விதத்தினை தெரிந்து கொள்ள விரும்பினால் பின் வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள். உடனே நீங்களே புரிந்து கொள்ளலாம்.

1. புதிதாக ஒரு செல்போனை வாங்குகிறீர்கள். அதன் முழுமையான செயல் பாடுகளை தெரிந்து கொள்ள கீழ்கண்ட வழி முறைகளில் நீங்கள் எதை பின்பற்றுவீர்கள் ?

அ)அதனுடன் கொடுக்கப் பட்டுள்ள யூசர் மேனுவலை முழுமை யாக படிப்பேன். அல்லது இணைய தளத்திலோ அல்லது செல்போனிலோ கொடுக்கப்பட்டுள்ள வீடியோ விளக்கப் படங்களை பார்ப்பேன்.
ஆ) விற்பனையாளரிடம் செல் போனில் உள்ள வசதிகளைப்பற்றி விளக்குமாறு கேட்டு தெரிந்து கொள்வேன்.

இ) இதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்று நானாக ஒவ்வொன்றாக ஆப்ரேட் செய்து கற்றுக் கொள்வேன்.

2. உங்கள் சிறு வயது நினைவுகளில் பதிந்துள்ள காட்சியை இப்போது நினைவு படுத்திப்பாருங்கள். அது
அ) ஏதோ ஒரு காட்சி

ஆ) யாரோ சொன்ன வார்த்தைகள்
இ) அது ஒரு செயல் அல்லது சம்பவம்.
3. புதியவர்களை பார்க்கும்போது எதை அதிகம் கவனிக்கிறீர்கள்?
அ) தோற்றம் மற்றும் உடை
ஆ) குரல் மற்றும் பேசும்விதம்
இ) நிற்கும் விதம் நடக்கும் விதம் மற்றும் செயல்பாடு

4. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நண்பனை சந்திக்கும்போது என்ன செய்வீர்கள்?
அ)உன்னை பார்த்து எத்தனை நாளாச்சு.

ஆ)உன் குரலை கேட்டு எத்தனை நாளாச்சு
இ)கையை பிடித்து குலுக்குவேன் அல்லது கட்டியணைத்துக்கொள்வேன்.

5. ஒருவர் பொய் சொல்கிறாரா என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?

அ)அவர்கள் கண்ணைப் பார்த்தாலே கண்டு பிடித்து விடுவேன்.
ஆ)அவர்கள் குரலை வைத்தே கண்டுபிடித்து விடுவேன்
இ) அவர்கள் முகபாவனை உதட்டு அசைவு என அவர்கள் நடத்தையை வைத்து கண்டு பிடிப்பேன்.

இதில், ‘அ’தான் அனைத்திற்கும் உங்கள் பதில் என்றால் நீங்கள் விஷூவல் லேனர்ஸ். ‘ஆ’தான் உங்கள் பதில் என்றால் நீங்கள் ஆடிட்டரி லேனர்ஸ். ‘இ’ தான் உங்கள் பதில் என்றால் நீங்கள் கினஸ்தடிக் லேனர்ஸ்.

மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலை கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் இனிமேல் உங்கள் செயல்பாடுகளை உற்று கவனியுங்கள். அல்லது மற்றவர்களின் உதவியை நாடுங்கள்.

இதில் உள்ள இரண்டு முறைகள் உங்களுக்கு பொருந்துவதாக தோன்றினால் இரண்டு முறை களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள கற்றல் வழி காட்டுதல்களை பின்பற்றுங்கள்.

 

1. Auditory learners
சிலருக்கு கேட்கும் திறன் மிகச்சிறப்பாக இருக்கும். எனவே காதால் கேட்கும் எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக மனதில் பதிய வைத்துக் கொள்வார்கள். அதனால்தான் சில குழந்தைகள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்து, “அம்மா ஒரே ஒரு முறை சொல்லிக் கொடு. நீ சொல்லிக் கொடுத்தால்தான் மனதில் சுலபமாக பதிகிறது” என்பார்கள்.

இவர்கள் பாடத்தை டேப்பிலோ செல்ú பானிலோ பதிவு செய்து கொண்டு அதை அடிக்கடி போட்டுக்கேட்கலாம். இந்த வகை மாணவர்கள் பாடங்களை தங்கள் நண்பர்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலமும் சுலபமாக மனதில் பதிய வைத்துக்கொள்ள முடியும். இல்லை மற்ற மாணவர்களுடன் விவாதம் செய்யலாம்.

இவ்வகை மாணவர்கள் படிக்கும்போது இசைக் கருவிகளால் மட்டும் அமைந்த இசைத் தொகுப்பை கேட்டபடி படிக்கலாம். இதனால் அவர்கள் மேலும் தூண்டப்பட்டு கற்றல் இன்னும் சிறப்பாக இருக்கும்.

 

2. Visual learners
கண்ணால் கண்டவற்றையெல்லாம் சிறப்பாக கற்றுணரும் திறன் படைத்தவர்கள் விஷூவல் லேனர்ஸ். இவ்வகை கற்றல் திறன் உடையவர்கள் வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது போர்டில் வரையும் படங்களையும் கிராப்களையும் சுலபமாக மனதில் பதிய வைத்துக்கொள்வார்கள். புத்தகங்களில் உள்ளவற்றில் படமாக உள்ள விஷயங்களையும் எளிதில் உள்வாங்கிக்கொள்ளும் திறனுடைய வர்களாக இருப்பர். இவர்களுக்கு டட்ர்ற்ர் ம்ங்ம்ர்ழ்ஹ் நன்கு இருக்கும்.

இப்போது எல்லா வகுப்பு பாடங்களும் அனிமேஷன் வடிவில் சிடியாக கிடைக்கிறது. இவர்கள் இத்தகைய வீடியோ படங்கள் மூலம் சுலபமாக கற்றுக்கொள்ள முடியும். (இவை ஆடியோவோடு வருவதால் இது ஆடிட்டரி லேனர்ஸ்க்கும் உகந்ததே).

இவ்வகை திறன் உடையவர்கள் ஃபார்முலாக்கள் மற்றும் வேதியியல் சமன்பாடுகள் போன்றவற்றை ஒரு ஏ4 பேப்பரில் எழுதி வீட்டில் ஐந்தாறு இடங்களில் ஒட்டி வைத்து அதை அடிக்கடி பார்த்தாலே போதும், எளிதில் மனதில் பதிந்துவிடும்.

 

3. Kinesthetic learners
கினஸ்தடிக் என்றால் தசைகளை அசைத்தல் (muscular action) தொடுதல் அல்லது செய்து பார்த்தல் என்று பொருள். பார்ப்பதைவிட கேட்பதை விட செய்து பார்க்கும் விஷயத்தை இவர்கள் மறக்கவே மாட்டார்கள். அதனால்தான் இந்தப்பெயர்.

இவர்கள் செய்து பார்ப்பதாக கற்பனை செய்துகூட இந்த நிலையை அடைய முடியும் அல்லது மைன்ட் மேப் முறையில் பாடங்களை படித்தால் இவர்களுக்கு சுலபமாக மனதில் பதியும். புரிந்தால்தான் மனப்பாடம் ஆகிறது என்று கூறும் மாணவர்கள் இவ்வகை கற்கும் திறனுடையவர்கள்.

 

இவ்வகை மாணவர்கள் ஏதாவது ஆய்வை பற்றி படிக்கும்போது, அந்த ஆய்வை தான் செய்வது போல் எண்ணிக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு பியூரட்டினை எடுத்துக் கொள்ளவும். அதில் அமோனியாவை ஊற்றவும் என்றிருந்தால் அதை நான் பியூரட்டினை எடுக்கிறேன். அதில் அமோனியாவை ஊற்று கின்றேன் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். ஆதிவாசிகள் குகைளில் வசித்தார்கள் என்பதற்கு பதில், நான் குகைளில் வசித்தேன். இலைகளை உடுத்தினேன். பழங்களை உண்டேன் என்று படிக்க வேண்டும்.

 

தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில் இந்த முறைகள் பாடங்களை விரைவாக படிக்க உதவிகரமாக இருக்கும். இவற்றை பயன் படுத்தி எதிர்வரும் தேர்வுகளை சிறப்பாக எதிர் கொள்ள வாழ்த்துக்கள்.

 

பயத்தை பயமுறுத்துவோம் தேர்வுகள் நெருங்கிவிட்டால் மாணவர் களுக்கு தேர்வு பயம்தான் வருகிறது ஆனால் பெற்றோர்களுக்கோ தேர்வு ஜூரமே வந்து விடுகிறது. இப்படி தானும் பயந்து குழந்தை களையும் பயமுறுத்தும் பெற்றோர்களுக்காகத் தான் இந்தக் கட்டுரை.

 

பயம் என்பது இந்த வயதில் பழகிவிட்டால் நாளை அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அது எதிரொலிக்கும். எனவே இப்போதே அதைத்தடுத்துவிட்டால் நாளை அவர்கள் வெற்றியை மட்டுமே சுவைக்க நாம் செய்த உதவியாக இருக்கும்.

‘கொஞ்சமாவது பயம் வேண்டாம்’ என்று சொல்லி சொல்லி நாம்தான் குழந்தைகளிடம் பயத்தை வளர்த்துவிடுகிறோம். பயம் இல்லை என்றால் கட்டுப்பட மாட்டான் என்று நினைத்து சின்னச்சின்ன விஷயத்திற்கும் நாம் நம் குழந்தை களை பயமுறுத்தியே வைத்திருக்கிறோம்.

 

குழந்தையாக இருக்கும்போது சாப்பிட வில்லை என்று பூச்சாண்டியை கூப்பிட்டோம். தூங்கவில்லை என்று ஒத்தக்கண்ணணை அழைத்தோம். அப்போது வந்து உட்கார்ந்தவர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை, அவர்கள் மனதை விட்டு.

தேர்வு பயம் என்பதுகூட பெற்றோர்கள் மீதான பயம்தான். மார்க் குறைந்தால் வீட்டில் தொலைத்து விடுவார்கள் என்பதுதான் பயத்திற்கான பிரதான காரணமே. “என்ன மார்க் வாங்கினால் என்ன… நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்” என்று பெற்றோர்கள் சொல்லி விட்டால் போதும் அந்த நிமிடமே தேர்வு பற்றிய பயமே போய்விடும்.

நாமும் பயந்து நம் குழந்தைகளையும் பயமுறுத்துவதை விட்டுவிட்டு நாமும் தைரியமாக இருந்து நம் குழந்தைகளையும் வாழ்க்கையை எதிர் கொள்ள தைரியப்படுத்துவோம்.

 

அவர் ஒரு இளந்துறவி. சக துறவிகளுடன் ஆற்றில் குளித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் அழகில் மயங்கிய இளம் பெண் ஒருத்தி அவர் காலில் விழுந்து தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டாள்.

அவர் உண்மையான துறவி என்பதால் அவளை பொருட் படுத்தாமல் சென்றுவிட்டார். மறுநாள் அவர் வரும் போது மறுபடியும் அந்தப்பெண் காலில் விழுந்து தன்னை மணந்துகொள்ளுமாறு கெஞ்சினாள். துறவி எதுவும் பேசாமல் சென்று விட்டார். ஆனாலும் அந்தப்பெண் விடுவதாயில்லை.

 

தினமும் துறவி வருகிறபோது அவர் காலில் விழுந்து கேட்க ஆரம்பித்தாள். விஷயம் ஊர் முழுவதும் பரவி இதைப்பார்க்க கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. செய்தி குருவை எட்டியது. இளம் துறவியை அழைத்து நாளை அந்தப்பெண் உன்னை அழைத்தால் அவளுடன் சென்றுவிடு என்றார். குருவுக்கு சம்மதம் சொன்னார் இளம் துறவி. சொன்னபடியே மறுநாள் அந்தப் பெண் காலில் விழுந்தபோது எதுவும் பேசாமல் அந்தப் பெண்ணோடு அவள் இல்லம் சென்றுவிட்டார்.

 

ஒரு வாரம் இரண்டு வாரம் ஆயிற்று. இளம் துறவி ஆசிரமம் திரும்பவில்லை. ஊர் முழுக்க பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தபோது துறவி நாளை ஆசிரமம் திரும்புகிறார் என்ற செய்தி எட்டியது.

 

துறவறத்திலிருந்தபோது இருந்த அந்த இறை அழகு, இப்போது இல்லறத்திலிருக்கும் துறவியிடம் இருக்குமா? என்று பார்க்க, மறுநாள் ஊரே ஆசிரமத்தில் திரண்டிருந்தது. துறவி வந்தார். எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், துறவி தன்னுடன் ஒரு பெண் துறவியையும் அழைத்து வந்திருந்தார்.

குரு புன்னகைத்தார். இது எனக்கு முன்னரே தெரியும் என்பதுபோல.

எல்லோரும் எதிர்பார்த்ததுபோல துறவி இல்லறத்திற்கு மாறவில்லை. அந்த பெண்ணை துறவுக்கு மாற்றிவிட்டார், அவள் போக்கிலேயே சென்று.

நாம் கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருந்தால் நம் நிலையிலிருந்து மாறமாட்டோம். நம் குழந்தைகளின்மீது நமக்கு நம்பிக்கை இல்லை அதனால்தான் நாம் பதட்டமடைகிறோம். நம் குழந்தைகளிடமும் அந்த பதட்டத்தை விதைக்கிறோம்.

 

நமக்கு நம்பிக்கை இருந்தால் நம் குழந்தைகளிடமும் அதையே விதைத்திருப்போம்.
நாம் நம்பிக்கையை இழந்துவிடாமல் இருந்து குழந்தைகளை போக்கிலேயே சென்று அவர்களையும் நம்பிக்கை படுத்தவேண்டும் என்பதற்கு உதாரணமாகத்தான் இந்தக்கதை சொல்லப்பட்டிருக்கிறது

 

http://www.namadhunambikkai.com/2011/03/01/1598/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு. பெற்றோர்கள் இதனைப் படித்து தங்கள் பிள்ளைகளின் கற்றல் வடிவத்தை இனங்கண்டு அதன் வழி அவர்கள் கற்க ஊக்குவிப்பது கூட பிள்ளைகளின் கற்றல் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.