Jump to content

2ஜி முறைகேட்டிற்கு ராசாவே முழுப் பொறுப்பு: ஜே.பி.சி. அறிக்கை


Recommended Posts

2ஜிஅலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் தொடர்பில்லை என்றும் இந்த முறைகேட்டிற்கான முழுப்பொறுப்பும் அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவையே சாரும் என்றும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் சி.பி.ஐ. தனி நீதிமன்றம்  விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.சி.சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழுவும் தனியாக விசாரணை நடத்தியது. இந்த குழு, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்வேறு நபர்களுக்கு ‘சம்மன்’ அனுப்பி அவர்களை அழைத்து விசாரணை நடத்தியது. அவர்கள் அளித்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் கூட்டுக்குழு தனது விசாரணையை முடித்து, வரைவு அறிக்கையை கூட்டுக்குழுவில் உள்ள 30 உறுப்பினர்களுக்கும் வழங்கி உள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் குற்றறமற்றவர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்த வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பது ஏற்கக்கூடியதாக இல்லை. அந்த மதிப்பீடு சரியானது அல்ல.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. பிரதமருக்கு அப்போதைய தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா தவறாக வழிகாட்டி இருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான கொள்கையை மாற்றியது பற்றி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஆ.ராசா தெரிவிக்கவில்லை. ஒதுக்கீட்டுக்கான விதிமுறைகள் மாற்றப்பட்டதில் மன்மோகன்சிங்குக்கும் ப.சிதம்பரத்துக்கும் எந்த பங்களிப்பும் கிடையாது. அலைவரிசை ஒதுக்கீட்டில் ஒளிவு மறைவற்ற தன்மையும் ஏற்கனவே இருந்த நடைமுறைகளும் விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்று பிரதமருக்கு ஆ.ராசா அளித்த வாக்குறுதி பொய்யாகி விட்டது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை அமல்படுத்தும் விஷயத்தில், உண்மைக்கு மாறாக ஏற்கனவே இருந்த சில நடைமுறைகள் மாற்றப்பட்டு உள்ளன. இதில் பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று இல்லாமல், தொலைத்தொடர்பு அமைச்சகம் ஏல முறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கி இருக்க வேண்டும்.

அலைவரிசை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை ஆ.ராசா மாற்றி இருக்கிறார். இது தொடர்பான 7.1.2008ஆம் தேதியிட்ட பத்திரிகை செய்திக்குறிப்பில் அவர் திருத்தம் செய்து இருக்கிறார். இது முறைகேட்டுக்கு வழிவகுத்து உள்ளது.

இது தொடர்பான பத்திரிகை குறிப்பு திருத்தத்துடன் ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்ற வாசகத்தை ஆ.ராசா சேர்த்து இருக்கிறார். இதற்கான தடய ஆதாரம் சிக்கி இருப்பதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவதற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கடைசி கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்றும், அதன்பிறகு வருகிற மே மாதம் இறுதி வாரத்தின் முதல் வாரத்தில் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

 
 கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையானது ஏமாற்றத்தை தருவதாகவும், பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை காப்பாற்றும் வகையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

 

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14125:2g-spectrum-raja&catid=36:tamilnadu&Itemid=102

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.