Jump to content

‘தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு மாற்றீடான சாசனம் தேவைதானா?’ செந்தமிழன் சீமான் ஆட்சேபனை!


Recommended Posts

‘தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான ‘சோசலிச தமிழீழம்’ என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கை விளக்கத்திற்கு மாற்றீடாக தமிழீழ சுதந்திர சாசனம் வரைவது தேவைதானா?’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் பொழுதே செந்தமிழன் சீமான் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழத்தின் அரசியல் வடிவம், பொருளாதாரப் பொறிமுறை, சமூகக் கட்டமைப்பு, மலையக மக்களின் நிலை, சாதி, சமயம், பெண்ணடிமைத்துவம், வர்க்கம் போன்ற விடயங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையை தெளிவுபடுத்தும் அiனைத்து அம்சங்களையும் 1985ஆம் ஆண்டு வெளியாகிய ‘சோசலிச தமிழீழம்’ கொண்டிருப்பதையும் தனது உரையில் சீமான் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேயிடத்தில் கருத்து வெளியிட்ட கொளத்தூர் மணி அவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை விளக்க நூலாக விளங்கும் ‘சோசலிச தமிழீழம்’ நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்தினாலே போதுமானது என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1985 சோவியத் காலம் இன்றில்லை. அன்று எங்கள் தேசத்தைச் சுற்றி இருந்த.. பூகோள அரசியல் இராணுவ பொருண்மிய நிலையும் இன்றில்லை. நிறைய மாற்றங்கள். விடுதலைப்புலிகளின் ஆரம்ப போராட்ட அணுகுமுறைகளிலும் இன்று நிறைய..மாற்றங்கள். ஆனால்.. ஒன்றில் மட்டுமே மாற்றம் இருக்கவில்லை. அது தான் சுதந்திர தமிழீழம் என்பது.

 

அந்த வகையிலும்.. தலைவரின் பிரசன்னமற்ற இந்தக் கால இடைவெளியிலும்..  தொய்ந்து விடாமல்.. சுதந்திர தமிழீழ இலட்சிய இருப்பை மேல்நிலைப்படுத்த.. அதனை உலகம் உற்று நோக்க.. சுதந்திர தமிழீழத்திற்கான சாசனம் ஒன்று இயற்றப்பட வேண்டியதும்.. அதனை உலக அரங்கின் முன் நிறுத்தி நிற்க வேண்டியதும் அவசியம்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை விளக்க நூலாக விளங்கும் ‘சோசலிச தமிழீழம்’ நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்தினாலே போதுமானது என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

 

அப்படி ஒரு நூல் விடுதலை புலிகள் வெளியிட்டவையளோ?அதில இருக்கிற நல்ல விடயங்களையும் இலக்கியவாதிகள் எழுதலாமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு நூல் விடுதலை புலிகள் வெளியிட்டவையளோ?அதில இருக்கிற நல்ல விடயங்களையும் இலக்கியவாதிகள் எழுதலாமே...

 

அப்படி நல்ல விடயங்களை இலக்கியவாதிகள் எழுதுவது கிடையாது அதற்க்கு மாறாக விடுதலை புலிகள் மீது விமர்சம் வைப்பதற்கு என்றால் முந்தியடிச்சு எழுதுவினம். 
 
என்ன செய்வது தமிழனின் தலைவிதி அப்படி ..  :(
Link to comment
Share on other sites

தலைவரின் பிரசன்னமற்ற இந்தக் கால இடைவெளியிலும்..  தொய்ந்து விடாமல்.. சுதந்திர தமிழீழ இலட்சிய இருப்பை மேல்நிலைப்படுத்த.. அதனை உலகம் உற்று நோக்க.. சுதந்திர தமிழீழத்திற்கான சாசனம் ஒன்று இயற்றப்பட வேண்டியதும்.. அதனை உலக அரங்கின் முன் நிறுத்தி நிற்க வேண்டியதும் அவசியம்..! :icon_idea:

 விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து விடுவித்துக் கொள்ளும் வரையில் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைகளும் உலக நாடுகளால் பயங்கரவாதமாகவே பார்க்கப்படும் அல்லது பார்க்க வைக்கப்படும். தமிழர்கள் உலகில் எங்காவது ஒரு சுதந்திர அரசை நிறுவிக்கொள்ளும்வரை இதனின்றும் விடுபடுவது சாத்தியமல்ல. இன்றைய நிலையில் மாற்றம் ஒன்றின் மூலம் பலனை அடைய முயற்சிப்பது அவசியமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் தமது காலத்திலேயே பழைய "சோசலிச தமிழீழ" கொள்கை பலவற்றினை தவிர்த்திருந்தது பலருக்கு தெரியும். போராட்ட காலத்திலேயே உருவான சர்வதேச அரசியல், பொருளாதார மாற்றங்கள் அதற்கு காரணமாயிருந்தது.

Link to comment
Share on other sites

சொறிலங்காவும் ஒரு சோஷலிசக் குடியரசுதானே..?! ஆனால் அங்கும் முதலாளித்துவம் உள்ளதுதல்லவா?

 

இந்த சோஷனிலிசம் என்பதற்கு இறுக்கமான வரைமுறை என்று ஒன்று இல்லை என்று சொல்லப்படுகிறது.

 

Socialism is an economic system characterized by social ownership of the means of production and co-operative management of the economy. "Social ownership" may refer to cooperative enterprises, common ownership, state ownership, or citizen ownership of equity. There are many varieties of socialism and there is no single definition encapsulating all of them. They differ in the type of social ownership they advocate, the degree to which they rely on markets or planning, how management is to be organized within productive institutions, and the role of the state in constructing socialism.

 

http://en.wikipedia.org/wiki/Socialism

 

இறுக்கமான சோஷலிசக் கோட்பாடுகளே பொதுவுடமைக் கொள்கை என்பதுபோல் சொல்லப்படுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

மேலதிக காணொளிகளையும் தரவேற்றிக்கொண்டிருக்கிறேன்...

 

எனது காணொளிகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற subscribe செய்யவும்... http://www.youtube.com/user/periyaardk?feature=sub_widget_1

 

Link to comment
Share on other sites

நவீன இலக்கியவாதிகளின் இலக்கிய கூட்டம் என்பது  புலிகள் பிரதிநிதிகளை அழைத்து அவர்களை பேசவிடாது கூக்குரல் இடுதல் குழப்புதல் போன்றவற்றை செய்து புலிகளின் மேல் பழிகளையும் போட்டு விடுவதாகும்.

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.