Jump to content

எனது தேசம்


Recommended Posts

எனது தேசம்

--------------

நீல விசும்பின் ஓரத்தில்

உறைந்திருக்கும்

நீரினாலும் குளிர்விக்கமுடியா இரணங்கள்

ஒற்றைக் குருவியின் ஓலமாய்

மனது விம்மித் தணிகிறது

நேற்றைகளைத் தீயில் கருக்கி

நாளைகளின் தடத்தினை

தொலைத்து விட்ட தேசம்

இன்னுமொரு பொழுதில்

பசி சுமந்து

துயர் சுமந்து

வாழ்வதற்கான

முகாந்திரமின்றி வாழ்கின்றது

என்றோ வரப்போகும்

ஒளிக்கீற்றுக்காய்

இன்றும் நாளையும்

நாட்களை எண்ணியபடி...

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் நாளையும்

நாட்களை எண்ணியபடி

நல்ல வரிகள் மனித வாழ்க்கைக்கும் பொருந்த கூடிய வரிகள்....

Link to comment
Share on other sites

இன்றும் நாளையும்

நாட்களை எண்ணியபடி

நல்ல வரிகள் மனித வாழ்க்கைக்கும் பொருந்த கூடிய வரிகள்....

புத்தன் எப்போதும் ஞானவான் என்பதை நிரூபிக்கிறீங்க.... :D :wink: :D:D

புத்தனிடம் ஞானம் கேட்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஞானம் எல்லாள பிரபுவே மெஞ்ஞானமா,அஞ்ஞானமா,அல்லது விஞ்ஞானமா :?: புத்தனுக்கு பிடித்தது விஞ்ஞானம்...... :P :P :P

Link to comment
Share on other sites

என்றோ வரப்போகும்

ஒளிக்கீற்றுக்காய்

இன்றும் நாளையும்

நாட்களை எண்ணியபடி...

வணக்கம் எல்லாளன்,

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது.

எல்லாளனை மட்டுக்கட்ட முடியாமல் தவிக்கும் மணிவாசகன்

Link to comment
Share on other sites

யதார்த்தமான கவிதை பாராட்டுக்கள் எல்லாளன்.

என்ன மணி அங்கிள் ரொம்பக் குழம்பீட்டீங்கள் போல :P

Link to comment
Share on other sites

இன்னுமொரு பொழுதில்

பசி சுமந்து

துயர் சுமந்து

வாழ்வதற்கான

முகாந்திரமின்றி வாழ்கின்றது

என்றோ வரப்போகும்

ஒளிக்கீற்றுக்காய்

இன்றும் நாளையும்

நாட்களை எண்ணியபடி...

அழகான வரிகள் எல்லாளன். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

அருமை மன்னா எமது தேசத்தின் நிலை பற்றியகவி சிந்திக்க வைத்தது..(யதார்த்தமாகவுள்ளது)

Link to comment
Share on other sites

எந்த ஞானம் எல்லாள பிரபுவே மெஞ்ஞானமா,அஞ்ஞானமா,அல்லது விஞ்ஞானமா :?: புத்தனுக்கு பிடித்தது விஞ்ஞானம்...... :P :P :P

புத்தா...!

உந்தனுக்கு.......

அகல் விளக்கு பிடிக்குமா..?

ஒளிவிளக்கு பிடிக்குமா..?

குமிழ் விளக்கு பிடிக்குமா...?

விளக்குமாறு கேட்கின்றது ...

என் அறிவு....

சரியான பதில் சொன்னால்..... நீர் யார் என்று நான் சொல்வேன்........

மனஜோதிடம் சொல்லும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

என்றோ வரப்போகும்

ஒளிக்கீற்றுக்காய்

இன்றும் நாளையும்

நாட்களை எண்ணியபடி...

வணக்கம் எல்லாளன்,

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது.

எல்லாளனை மட்டுக்கட்ட முடியாமல் தவிக்கும் மணிவாசகன்

கவிதை மட்டும் தான் நன்றாக இருக்கின்றது மணிவாசகன்

என் தேசம் இன்னும் நன்றாக இல்லை.......

உயிர்களை விதைத்து .... துயரத்தை அறுவடை செய்கிறோம்......

உயிர்வாழ்தலுக்காய்......

நம் வாழ்வையும்.... இருப்பையும்....

இறப்பையும்...... யாரோ தீர்மானிக்கும் வரை ..இது தொடரத்தான் செய்யும்......

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

இரசிகை...ரமா...இலக்கியன்....கெளரி.

..உங்கள் அன்புக்கு நன்றி.....

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.