Jump to content

தலைப்பிடாத நாடகம்....


Recommended Posts

மணிவாசகன் இப்படி எல்லோரும் செய்ய வேண்டும் என்ட தன் எண்ணத்தை எழுத்தில வடித்திருக்கிறார் அதற்காக அவருக்கு எனது நன்றியினை சொல்லிக் கொள்கிறேன்.ஆனால் அதற்காக அவர் தன்னுடைய குடும்ப செலவெல்லாம் ஒறுத்து ஊரில் கஸ்டப்படுபவர்களுக்கு உதவுகிறார் என்பது ஏற்புடையதாய் இல்லை அதற்காக அவர் உதவி செய்யாமல் சும்மா எழுத்தில் மட்டும் எழுதிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்ல வரவில்லை.அவர் மட்டுமில்லை உதவி செய்கிறவை உதவி செய்து கொண்டு தான் இருக்கினம் அதே நேரத்தில் தங்கட குடும்பத்திற்கு செய்கிறதை எல்லாம் செய்து போட்டு தான் மிச்சத்தை ஊருக்கு அனுப்புகினம்

 

ரதியினுடைய கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். எனது உறவுகளுக்காக நான் உதவி செய்து கொண்டிருக்கிறேன் என்றாலும் இது தான் என்னால் செய்யக் கூடிய அதிக பட்ச உதவியா என்றால் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். காரணம் ஆடம்பரச் செலவுகள் அல்லது அவசியமற்ற செலவுகள் என்று கூறக் கூடிய செலவுகளை இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் அவற்றை மேலும் மேலும் குறைத்து என்னுடைய கடமையைச் அதிகளவில் செய்ய நான் முயன்று கொண்டிருக்கிறேன். இந்தப் படைப்பின் நோக்கம் மேலும் மேலும் அந்த மக்களுக்கு எங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதே அன்றி இதில் வரும் பாத்திரங்களில் ஏதாவது ஒன்றான குறிப்பாக முரளி என்ற பாத்திரமாக நான் இருக்கிறேன் என்று பொருள் கொண்டு விட வேண்டாம். இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். இந்தக் கருப் பொருளிற்கு முழுமையாக எதிர்மறையாக இருந்து கொண்டு நான் ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறேன் என்றும் பொருளல்ல. அத்துடன் தினம் தினம் எனது பங்களிப்பை அதிகரிக்க முயல்கிறேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

எண்ணமும் சிந்தனையும் நல்லது நடைமுறை தான் கேள்விக்குறி ?

படம் போட மட்டும் தான் எமது ஆட்கள் லாயக்கு .

 

இப்படி குண்டக மண்டக ஆக பேசத்தான் சிலர் லாயக்கு.

 

நல்ல திரி தொடருங்கள் மணி

Link to comment
Share on other sites

மணிவாசகன் கொஞ்சம் திரைக்கதைக்கு ஏற்றபடி மாற்றியமைச்சால். இதை ஒரு குறும்படமாக எடுக்கலாம். அது இதுபோன்ற உதவி அமைப்புகளுக்கு உதவியாக இருக்கும்.

 தொடர்ந்து எழுதுங்கள். மதனுக்கு பிள்ளைகள் இருப்பதுபோலவும் அவர்களின் ஆடம்பர செலவுகளையும் காட்டினால் ஒரு பொதுப்பட கருத்தியலை உருவாக்க முடியும். புலம்பெயர் நாட்டில் ஊரில் இருந்து வந்தவர்கள் மட்டுமல்ல இங்கு பிறந்த இளையோருக்கும் ஒரு கருத்தியல் மாற்றம் உருவாக்கப்பட வேண்டும்.

 

Link to comment
Share on other sites

தங்களது கருத்துக்களின் மூலமும் பச்சைப் புள்ளிகள் மூலமும் ஆதரவைத் தந்த மற்றும்இந்தப் பதிவை வாசித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி... தொடர்ந்து உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் அந்தப் படைப்பை செம்மைப் படுத்த உதவியாயிருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்...

Link to comment
Share on other sites

மணிவாசகன் கொஞ்சம் திரைக்கதைக்கு ஏற்றபடி மாற்றியமைச்சால். இதை ஒரு குறும்படமாக எடுக்கலாம். அது இதுபோன்ற உதவி அமைப்புகளுக்கு உதவியாக இருக்கும்.

 தொடர்ந்து எழுதுங்கள். மதனுக்கு பிள்ளைகள் இருப்பதுபோலவும் அவர்களின் ஆடம்பர செலவுகளையும் காட்டினால் ஒரு பொதுப்பட கருத்தியலை உருவாக்க முடியும். புலம்பெயர் நாட்டில் ஊரில் இருந்து வந்தவர்கள் மட்டுமல்ல இங்கு பிறந்த இளையோருக்கும் ஒரு கருத்தியல் மாற்றம் உருவாக்கப்பட வேண்டும்.

 

பகலவன் நான் இந்தப் பதிவை ஒரு திட்டமிடலுடன் எழுத ஆரம்பிக்கவில்லை. அடுத்த பாகத்தில் என்ன எழுதப் போகிறேன் என்பது குறித்து இப்போது தான் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். எனவே முன்னுக்குப் பின் முரணாக சில விடயங்கள் இடம்பெற்றுவிடுவதற்கான சாத்தியங்களும் உள்ளது. அத்துடன் நாடகப்பிரதி என்பதில் எனக்குப் பரீச்சியமுமில்லை. எனவே அனுபவமுள்ளவர்கள் குறும்படத்திற்காகச் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆலோசனை வழங்கினால் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பத்தான் சூடு பிடிக்கிறது. நல்லா இருக்கு தொடருங்கோ அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் நல்லாய்தான் எழுதுறியள் . ஆனால் வாசிக்கேக்கை கொஞ்ச இடத்திலை கட்டுரை வாசிக்கிற மாதிரி கிடக்கு . அதோடை பாத்திரங்களை வேறை வேறை கலராலை பிறிச்சு எழுதினால் சனம் விளப்பமாய் வாசிப்பினமல்லோ .

Link to comment
Share on other sites

இப்பத்தான் சூடு பிடிக்கிறது. நல்லா இருக்கு தொடருங்கோ அண்ணா. :)

 

தொடர்கிறேன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நீங்கள் நல்லாய்தான் எழுதுறியள் . ஆனால் வாசிக்கேக்கை கொஞ்ச இடத்திலை கட்டுரை வாசிக்கிற மாதிரி கிடக்கு . அதோடை பாத்திரங்களை வேறை வேறை கலராலை பிறிச்சு எழுதினால் சனம் விளப்பமாய் வாசிப்பினமல்லோ .

 

கருத்துக்களுக்கு நன்றி மைத்திரேயி!

 

உங்கள் ஆலோசனைகளைக் கருத்தில் எடுக்கிறேன்....

Link to comment
Share on other sites

வணக்கம் மணி நாடகத்தின் நோக்கம் நல்லது  ஆனால் அதனை நகர்த்தும் விதம்   அதன் வசனங்கள் கொஞ்சம்  இயல்பு  அல்லது   இயற்கைகை தனம் இன்றி   இருப்பது போலதொரு உணர்வு வருகிறது.  அல்லது இன்றைய காலத்து   தலைமுறை யின் உள்வாங்கலை   பெறமுடியுமா என்கிறதொரு  கேள்வி எழுகிறது. இது எனது  சந்தேகம் மட்டும் தான்.  மற்றபடி  எனது அறிவுரை அல்ல  தொடருங்கள். இடையிடை நகைச்சுவை கலந்தால்  இன்னமும்  மெருகேறும் நன்றி  வணக்கம்.

 

Link to comment
Share on other sites

இன்று தான் பார்த்தேன் நன்றாகக் கொண்டு போகின்றீர்கள் நாடகத்தை! இந்தத் தலைப்பு நல்லாய் இருக்கே

Link to comment
Share on other sites

வணக்கம் மணி நாடகத்தின் நோக்கம் நல்லது  ஆனால் அதனை நகர்த்தும் விதம்   அதன் வசனங்கள் கொஞ்சம்  இயல்பு  அல்லது   இயற்கைகை தனம் இன்றி   இருப்பது போலதொரு உணர்வு வருகிறது.  அல்லது இன்றைய காலத்து   தலைமுறை யின் உள்வாங்கலை   பெறமுடியுமா என்கிறதொரு  கேள்வி எழுகிறது. இது எனது  சந்தேகம் மட்டும் தான்.  மற்றபடி  எனது அறிவுரை அல்ல  தொடருங்கள். இடையிடை நகைச்சுவை கலந்தால்  இன்னமும்  மெருகேறும் நன்றி  வணக்கம்.

 

வணக்கம் சாத்திரி!

 

ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு நன்றி

 

உங்களுடைய ஆலோசனைகளைக் கருத்தில் எடுக்கிறேன்.

 

இளையவர்களை உள்வாங்குவதற்கான உங்களது ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.

 

நகைச்சுவை தொடர்பிலான உங்களது கருத்து விளங்குகிறது. ஆனால் தக்க இடத்தில் தக்க விகிதத்தில் கலப்பதற்கு நான் சாத்திரியிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும்.

 

நாடகப் பிரதியில் கை தேர்ந்த நீங்கள் தொடர்ந்தும்இணைந்திருந்து ஆலோசனைகளை வழங்க வேண்டும்...

இன்று தான் பார்த்தேன் நன்றாகக் கொண்டு போகின்றீர்கள் நாடகத்தை! இந்தத் தலைப்பு நல்லாய் இருக்கே

 

வணக்கம் அலைமகள்!

 

வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தொடருங்கள் மணி!

 

 

இன்னும் நான்கு நாட்களுக்குள் அடுத்த பாகத்தை இணைக்கிறேன் அலைமகள்...

 

தாமதத்திற்கு மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் மணி..நல்ல கரு உள்ள ஒரு நாடகம்......

Link to comment
Share on other sites

//முரளி: பிள்ளைகள் ஆசையாக் கேக்கேக்குள்ளை அவைக்கு அரசியல் பாடம் எடுக்க ஏலுமே!
 
மதன் : ஏன் எடுக்கக் கூடாது எண்டு கேக்கிறன். இந்தப் பிள்ளைகள் ஒண்டும் வானத்திலை இருந்து குதிக்கேல்லை. எங்கடை ரத்தங்கள் தானே.! அதுகளுக்கு ஊர் பிரச்சினையையும் அங்கை அவையொத்த பிள்ளைகள் சாப்பிட வழியில்லாமல் இருக்கிறதையும் சொல்லி காசின்ரை அருமையைச் சொல்லி வளக்கிறதிலை என்ன பிழையெண்டு கேக்கிறன்.//
 
 
பாத்திரங்களின் பெயர்களை இந்த இடத்தில் மாற்றிப் பதிந்துவிட்டீர்களா?

நல்ல தொடர் நாடகம் மணிவாசகன்.. தொடர்ந்து எழுதுங்கள்.. படிக்க ஆவலாக உள்ளோம்.

 

திருத்திய காரணம்: எழுத்துப்பிழை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.