Jump to content

யாவா - தமிழ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பொதுவாகப் பார்க்கின்ற மென்பொருட்கள், யாவா, C#> C++  போன்றவை எல்லாமே Object-oriented programming  என்ற குடும்பத்தில் அடங்குபவன. கிட்டத்தட்ட இவற்றின் செயற்பாடுகள் யாவும், ஒரே மாதிரியானவை. யாவா ஏன்  எனில் அது பிரபல்யமானதும், இலவசமானதுமாகும்.

Java Development Kit (JDK)
இது கணனி யாவா மென்பொருளைப் புரிந்து இயக்குவதற்குத் தேவையான ஒரு தொகுப்பு. நாங்கள் நிறுவப் போகின்ற மென்பொருளில் இது இருப்பதால் தனியாகத் தரவிறக்கத் தேவையில்லை.


உண்மையில் கணனி பற்றிச் சொல்லத் தேவையில்லை,  CPU> Memory, Hard Drive போன்ற விடயங்கள் அனைவரும் அறிந்த ஒன்று. ஆது எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றிய விளக்கங்கள் தேவையில்லை என நினைக்கின்றேன். ஆனாலும்  Computer என்பது எப்படிப் புரிந்து கொள்கின்றது என்பது அறிந்துகொள்வது அவசியம். அது பற்றிப் பிறகு பார்க்கலாம்.
 

 

 

என்ன மென்பொருள் தேவை?

பின்வரும் மென்பொருளைத் தரவிறக்கம் செய்யுங்கள். இது இலவசமானது.
http://www.oracle.com/technetwork/java/javase/downloads/jdk-7-netbeans-download-432126.html

இந்த மென்பொருளை உங்களின் கணனியில் நிறுவிய பிற்பாடு, பின்வரும் வழியினுாடாக இவ் மென்பொருளை ஆரம்பியுங்கள்.
File --> New Project -->  Java || Java Application -->  Next -->
Project Name- TamilEelam
Project Location: எங்கு சேமிப்பது என்பது பற்றிய விபரம்
Project Folder:  அது எந்த என்பது பற்றிய விபரம். ( இந்த 3 விடயங்களும் மாற்ற  வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் அதன் விபரங்களை நினைவில் வைத்திருப்பது தேடும்போது பிரியோசமாக இருக்கும். )
---->
Finish

-------------------------------------
இதன் பிற்பாடு ஒரு புதிய சாளரம் உருவாகும். அதில்  வலது புறத்தில் நாங்கள் வழங்கிய TamilEelam. java என்ற பக்கமும், மறுபக்கம் அதன் கிளைத் தோற்றமும் தெரியும்.

பச்சை நிறத்தில் எழுதப்பட்டிருப்பதைத் தவிர, மிகுதி TamilEelam. java இல் தோன்றியிருக்கும். அது பற்றிப் பார்ப்போம்

/*
 * To change this template, choose Tools | Templates
 * and open the template in the editor.
 */

package TamilEelam;

/**
 *
 * @author thuyawan
 */

public class TamilEelam {

    /**
     * @param args the command line arguments
     */

    public static void main(String[] args) {
        // TODO code application logic here
    

System.out.println("Welcome to Java!");

 

    }
}


”//, /*   */”என்ற கோடுகளுக்குப்  பிற்பாடு எழுதப்படும் கருத்துக்கள் விளங்கங்கள் கொடுப்பதற்காக எழுதப்படுவவை. பல பக்கங்கள் கொண்ட வடிவமைப்பில் ஏன் இந்த கட்டளையை வழங்கினோம் என்று மறந்துபோய் இருக்கலாம். அதனால் விளக்கங்கள், அல்லது குறிப்பினை இப்படியான கோடுகளுக்குப் பின்னால் எழுதுவார்கள். இவை எவ்வகையிலும் மென்பொருளில் தாக்கம் செய்யமாட்டது. ஒற்றை வரிக் குறிப்புக்கள் எழுத ”//”, உம், பல வரிகளுக்கு ”/*   */” உம் பாவிக்கலாம்.

 

package TamilEelam;

 
இது ஏன் எனில், ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களை நாங்கள் உருவாக்கின்றபோது, அவற்றினைத் தொகுத்து ஒரு குடையின் கீழ் வைத்திருப்பதற்கானது. உதாரணத்துக்கு உரும்பிராய், நீர்வேலி என்பன தமிழீழம் என்பதற்குக் கீழ் வரும் என்பது போல.

 

public class TamilEelam {

 

 

யாவாவைப் பொறுத்தவரை குறைந்தது ஒரு class ஆவது கட்டாயம் இருக்க வேண்டும். class இன் முதல் எழுத்து uppercase(Capital Letter)  ஆக இருக்கும்.
 

public static void main(String[] args) {

 

இதை main method என்று அழைப்போம். ஒரு யாவா மென்பொருளை இயக்கும் பொழுது முதலில் அது இந்த இடத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும்.

பச்சை நிறத்தில் எழுதிய கருத்து என்பது statements என அழைக்கப்படும். ஒவ்வொரு statements

உம் semicolon (;) முடிவில் இடப்பட வேண்டியது அவசியமாகும்.

System.out.println("Welcome to Java!"); என்பதை மேலுள்ளது போன்று எழுதி விட்டு Run அல்லது F6 பொத்தனை அழுத்தினீர்கள் எனில் கீழே தோன்றும் OutPut பெட்டியில் Welcome to Java! என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். தவறுகள் விடப்பட்டிருப்பின் அது பற்றிய விளக்கமும் அங்கு தோன்றும்.

 

யாவாவில்  System.out.println(...) என்பதற்குள் எழுதப்படுகின்ற கருத்துக்கள் மட்டுமே வெளியில் தெரியும். 

குறிப்பு -  ஒவ்வொரு Class, Main method போன்றவற்றின் உள்ளடக்கங்கள் இப்படியான அடைப்புக்குறிக்குள் தான் எழுதப்பட்டிருப்பதையும் அவதானிக்கவும். 
2. யாவாவின் Commands எல்லாமே உணர்திறன் கொண்டவை. நீங்கள் எழுதும்போது, அது  Capital Letter ஆகவா, இல்லை சாதாரண எழுத்திலா இருக்கின்றது என்பது பற்றி கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

----------------------------------------------

ஒரு ஆரம்ப வடிவமாக எழுதியிருக்கின்றேன். இதில் புரிவது கடினமாக இருப்பின், அல்லது ஏதும் கேள்விகள் இருப்பின் தெரியப்படுத்துக. மற்றும்படி சம்பந்தமில்லாத விடயங்கள், எழுதப்பட வேண்டாம். இதில் வேறு யாராவது தொடர்ச்சியாகப் எழுத விரும்பின் அது குறித்து ஆட்சேபனை இல்லை. சேர்ந்து எழுதலாம். ஆயினும் ஒழுங்கு முறையாகப் போவது நன்று.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் நன்முயற்சிக்கு பாராட்டுதல்களும் நன்றியும்.


இங்கே ப்ரோகிராம் எழுதுவதில் அடிப்படையை சற்று விளக்கமாக கூறினால் உதவியாக இருக்குமென நம்புகிறேன். 

 

உதாரணமாக 'Basic coding structure' பற்றி.

 

 

அடுத்து,

 

முதல் சந்தேகம்:

 

{ - இந்த அடைப்புக்குறியை எங்கு, எப்படி ஆரம்பிக்க வேண்டும், எப்படி பல அடைப்புக்குறிகளைக் கொண்டு சரியாக முடிக்க வேண்டும் என்பது.

 

 

இரண்டாவது சந்தேகம்:

 

இந்த class, declaration, போன்றவைகளை ஏன், எப்படி, எங்கு உபயோகிப்பது போன்றவைகளை பற்றியும் விளக்கினால் நன்று.

 

 

இது கற்றுக்குட்டியான கேள்வியாக தோன்றலாம்..ஆனாலும் ஜாவா ப்ரோகிராம் பற்றி தெரியாதாகையால் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பயிற்சிகள்

மேலதிகமாக எத்தனை வேண்டுமானாலும் இப்படி இணைக்க முடியும்

 

package jaffna;

public class Jaffna {
 
    public static void main(String[] args) {
     System.out.println("Welcome to Yarl.com");

     System.out.println("Welcome to Yarl.com");

     System.out.println("Welcome to Yarl.com");

  }
}

 

1. System.out.println என்பதில் வெறுமனே print என்று எல்லாவற்றுக்கும் கொடுத்தால் வசனங்கள் எல்லாம் ஒரே வரியில் அமையும். இங்கே (ln) என்பது (line) க் குறிக்கின்றது.

 

 

---------------

கணிதத்தோடும் விளையாடலாம்.
 

System.out.println(8+4-2);

இலக்கங்களைக் கணிக்கின்ற சந்தர்ப்பங்களில் மேற்கோள் குறி, ஆரம்பத்திலும் முடிவிலும் அவசியமில்லை என்பதைக் கவனத்தில் கொள்க. இப்படியான சந்தர்ப்பங்களில் கணிதம் தொடர்பான கணனி அறிவு அவசியமாகும்.  8* 3 +5+8- 4/2 என்று எழுதினால் கணனி பின்வரும் வடிவத்திலேயே கணிப்பிடும். முதலில்  ”8* 3” பின்னர் ”4/2” பிற்பாடு ”+5+8” பின்னர் ”-” . இந்த வரிசையில் தான் ( *,/,+,-) கணிக்கப்படும்.

ஆனால் நாங்கள் எங்களின் விருப்பதற்கமைவாக கணிக்க வேண்டும் எனில் அடைப்புக்குறிக்குள் இட்டுத் தான் கணிக்க வேண்டும். முதலில்  8(3 +5) எனும்போது மட்டும் தான் 3 +5= 8 என்று கணித்து 8*8 64 என்று பதிலைப் பெறலாம்.

 

 

System.out.println (8* 3 +5+8- 4/2);

System.out.println (8*( 3 +5)+8- 4/2);

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன்
நானும் கற்றுக்குட்டி தான். இது கூட எனக்குப் பயிற்சிக்காகத் தான். மற்றும்படி நீங்கள் சொன்ன விடயங்கள் ஆரம்பத்தில் அவசியமில்லை என நினைக்கின்றேன். சில விடயங்கள் எப்படி இயங்குகின்றன எனப் புரிந்து கொண்டால் தானாக அதன் தேவைகள் புரிந்து கொள்ள முடியும்.

netbeans பாவிக்கச் சொன்னதற்குக் காரணம், தவறுகள் பற்றிய விளக்கங்களை அது தரும் என்பதால். { - இந்த அடைப்புக்குறிகள் இப்போது Class, Method இல் பாவிப்பது பற்றிய தேவைகள் சொல்லியிருக்கின்றேன்.  Conditions, loops என்னமும் போகாதபடியால் அங்கே பாவிப்பது தொடர்பாகப் பிறகு சொல்லலாம். இப்போது அதை விளக்கம் கொடுத்தால் பிறகு Condition பற்றி விளக்கம் கொடுக்க வேண்டிவரும். ஒழுங்குமுறையாகப் பிற்பாடு இருக்காது.

 

netbeans  இல் ஒரு { அழுத்தும்போது, எங்கு இதன் ஆரம்பமோ, முடிவோ இருக்கின்றது என்பது பற்றி அறிய முடியும். உண்மையில் இதன் அமைப்பு ஒரு வெங்காய வடிவத்தில் இருக்கும். { { {  } } }  என்ற வடிவிலேயே திறந்து மூடப்பட வேண்டியது அவசியமாகும்.

 

 


 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

ஆனால் ஆரம்பத்திலயே java வினை உபயோகிக்க கற்றுகொடுப்பது உசிதமாக தெரியவில்லை
நீங்கள் C இலிருந்து ஆரம்பிக்கலாமே...? ஏனென்றால் C உபயோகிக்கும் போது ஒரு கணணி மொழின் அடிப்படை கூறுகளை (Constructs)

இலகுவாக விளங்கிக்கொள்ளலாம் அத்துடன் அவற்றில் குறிப்பிடத்தக்க அறிவு வந்தவுடன் Object oriented languages கற்பது இலகுவாகி விடுமே .

கடினமான ஒன்றை கற்பதனை விட இலகுவானதை கற்று பின் ஒப்பீட்டு முறையில் Java வினை கற்பது இலகு
என்பது என் கருத்து

 

"Class கட்டாயம் இருக்கவேண்டும்" என்பதற்க்கு பதில்  ஏன் class கட்டாயம் இருக்க வேண்டும்

அதன் பயன் என்ன என்பது பற்றி வாசகர்கள் தெளிவுறவேண்டும் என்பது எனது தாழ்மையான எண்ணம்

 

அதனை நன்றாக பிரித்து அறிந்துகொள்ள  C மொழி உதவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரமின்மை காரணமாகத் தொடரமுடியவில்லை. விரைவில் தொடருவேன்.

நண்பரே நீங்கள் யாராவது C# பற்றித் தொடர்வீர்களாக இருப்பின் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பு வழங்குவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய திரிகளின் இணைப்பிற்கு நன்றி தூயவன்.

 

ஜாவா அரிச்சுவடியை கற்பதற்கு ஏதேனும் சிறந்த பயிற்சி இணையதளங்கள்(Tutorial & Mock tests) இருக்கின்றனவா?

 

அறியத் தாருங்கள் ஓய்வு நேரங்களில் கற்றுத் தேற விரும்புகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சோம்பேறித்தனம்.... இப்படியே காலத்தை இழுத்துக் கொண்டு போய்விட்டது. ராசவன்னியன் உங்களுக்காக விரைவில் புத்தகங்களை இணைக்கின்றேன்

Link to comment
Share on other sites

நேரமின்மை காரணமாகத் தொடரமுடியவில்லை. விரைவில் தொடருவேன்.

நண்பரே நீங்கள் யாராவது C# பற்றித் தொடர்வீர்களாக இருப்பின் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பு வழங்குவேன்.

நேரமின்மை மற்றும் மொழியாக்கம் காரணமாக எழுதுவது மிகச் சிரமமே. ஆனால் C# பற்றி யாருக்காவது சந்தேகம் என்றால் என்னால் தெளிவு படுத்த இயலும்

 

C# இது பொருள் நோக்கு நிரலாக்கமாகும்.(Object oriented language). c மற்றும் c++ ஆகியவற்றை அடிப்ப்டையாகக் கொண்டது.

பயன்கள்:

1. டாஸ் அடிப்படையிலான பயன்பாடுகள்(Console Application)

2. விண்டோஸ்  பயன்பாடுகள்(Windows Application)

3. இணைய பயன்பாடுகள்(Web Application - Asp.Net, Sharepoint Development)

4. திறன்பேசி (Pocket PC,WindowsCE - Embeded Application)

5. Office Solutions (Excel Add-ins, Word Add-in etc.,)

 

 

 

சி-ஷார்ப் மொழியைப் பயன்படுத்தி சி, சி++ போல சிஸ்டம் சாஃப்ட்வேர்களை உருவாக்க முடிவதோடு, விசுவல் பேசிக் போல அப்ளிகேஷன் சாஃப்ட்வேர்களையும், ஏ.எஸ்.பி. போல இணைய பக்க வடிவமைப்புகளையும் உருவாக்க முடியும்.

 

டாட் நெட் என்ற கட்டமைப்பில் விஷுவல் பேசிக் டாட் நெட், ஏ.எஸ்.பி. டாட் நெட் மற்றும் சி-ஷார்ப் டாட் நெட் என்று மூன்று பிரிவுகளில் புரோகிராம் எழுத முடியும். டாட் நெட்டின் சிறப்பம்சமே... ஒரு மொழியை மற்றொரு மொழியோடு தொடர்புபடுத்தி புரோகிராம் எழுதும் தன்மையே... டாட் நெட்டில், சி ஷார்ப்பை விஷுவல் பேசிக் டாட் நெட் மூலம் தொடர்பு கொடுத்து வெப் பக்க வடிவமைப்புகளையும் உருவாக்கமுடியும். சி-ஷார்ப்பை நேரடியாக, தனியாகப் பயன்படுத்தி கன்சோல் அப்ளிகேஷன் மூலம் சிஸ்டம் சாஃப்ட்வேர்களையும் தயாரிக்க முடியும்.

 

சி-ஷார்ப் டாட் நெட்டின் விண்டோஸ் அப்ளிகேஷனுக்காக எழுதப்பட்டுள்ள இப்புத்தகத்தில் விஷுவல் பேசிக் டாட் நெட்டின் மூலம் புரோகிராம் எழுதமுடியும். சி-ஷார்ப் மொழியின் வரைமுறைகளோடு (syntax), விஷுவல் பேசிக் டாட் நெட்டின் டூல்ஸ்களைப் பயன்படுத்தி, அதிலுள்ள மேலான வசதிகளை சி-ஷார்ப்பி்ல் இணைத்துக்கொண்டு புரோகிராம் எழுத முடியும். விஷுவல் பேசிக் டாட் நெட் மூலம் உருவாக்கப்படும் சாஃப்ட்வேர்களை விட விஷுவல் பேசிக்கை சி-ஷார்ப் டாட் நெட்டில் இணைத்து உருவாக்கப்படும் சாஃப்ட்வேர்கள் மிக சிறப்பாக இயங்கக் கூடியதாக இருக்கும். ஏனெனில் சி-ஷார்ப்பில் உள்ள கிளாஸ் மற்றும் ஆப்ஜெடக்டுகள் எழுதப்படும் புரோகிராம்களுக்கு, மிகுந்த பாதுகாப்பையும், உறுதியையும் அளிப்பதாக உள்ளது.

 

Source :http://bhashaindia.com/tamil/Pages/csharp.aspx

Link to comment
Share on other sites

சி-ஷார்ப் பற்றிய எளிய நூல்(Basic c# programming guide) http://www.tutorialspoint.com/csharp/csharp_tutorial.pdf

 

நீங்கள் இணையத்திலே நிறைவேற்றத்தகு நிரல்செய்து பார்க்க(Compile and Execute C# Online ) http://www.compileonline.com/compile_csharp_online.php

 

இலவச தொகுப்பி சி-ஷார்ப் http://www.csharptools.com/view/editors

 

சி-ஷார்ப்  பற்றிய அறிமுகம் இந்த வலைப்பதிவில் காணலாம் 

http://sivalingam.zebrawebdesigns.com/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-3/

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது நிலவும் சந்தையில் அதிக பெறுமதியான கம்ப்யூட்டர் ப்ரோக்ரம்கள் எனில் எதுவாக இருக்கிறது?

இளசுகளுக்கு கற்றுக் கொடுத்தால் வருங்காலம் பிரகாசமாக இருக்குமே?

Link to comment
Share on other sites

தற்பொழுது நிலவும் சந்தையில் அதிக பெறுமதியான கம்ப்யூட்டர் ப்ரோக்ரம்கள் எனில் எதுவாக இருக்கிறது?

இளசுகளுக்கு கற்றுக் கொடுத்தால் வருங்காலம் பிரகாசமாக இருக்குமே?

 

கனடா சந்தை வாய்ப்புகளைப் பொறுத்தவரைக்கும் மென்பொருள் உற்பத்தித் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் Microsoft இன் .Net Languages இற்கே வருகின்றன.  பல அமெரிக்க கம்பெனிகளும் .Net Languages  தொடர்பான வேலை வாய்ப்புளுக்கான பல விளம்பரங்களைப் பிரசுரிப்பதை கண்டுகொண்டு இருக்கின்றேன். Java இனை கூடியவரைக்கும் அளவில் பெரிய நிறுவனங்கள், வங்கிகளே அதிகளவு பயன்படுத்துகின்றன.

 

இவற்றினை தவிர Android development உம் எதிர்காலத்தில் மிகவும் முன்னனிக்கு வரும் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.