Jump to content

செல்போனில் படம் எடுத்து மிரட்டல்: மாணவி தற்கொலை


Recommended Posts

செல்போனில் படம் எடுத்து மிரட்டல்: மாணவி தற்கொலை

ஜூலை 17, 2006

நாகர்கோவில்:

பிளஸ்டூ படித்து வந்த மாணவியை செல்போன் மூலம் படம் எடுத்து வைத்து தங்களது விருப்பத்திற்கு இணங்குமாறு சில இளைஞர்கள் வற்புறுத்தியதால், மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் கும்பிகுளம் நடுவூரைச் சேர்ந்தவர் முத்துச்செல்வி. இவர் நாகர்கோவிலில் பிளஸ்டூ படித்து வந்தார். அங்குள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

படிப்பில் கெட்டிக்காரியான முத்துச்செல்வி கடந்த 14ம் தேதி தனது வீட்டுக்கு வந்தார். அன்றைய தினம் மாலையில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சில இளைஞர்கள் செய்த ஈவ் டீசிங் கொடுமையால்தான் முத்துச்செல்வி தற்கொலை செய்து கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது.

முத்துச்செல்வி தினசரி விடுதியிலிருந்து கிளம்பி பேருந்து மூலம் பள்ளிக் கூடத்திற்குச் செல்வார். வரும்போது பள்ளியிலிருந்து மெயின் ரோட்டுக்கு சக மாணவியருடன் நடந்து வந்து பேருந்து ஏறி விடுதிக்குத் திரும்புவார்.

அவர் தினசரி பள்ளியிலிருந்து பேருந்துக்காக மெயின் ரோட்டுக்கு வரும் வழியில் நான்கு இளைஞர்கள், ஈவ் டீசிங் செய்து வந்துள்ளனர். ஒருமுறை எல்லை மீறி அவர்கள் செல்போன் மூலம் முத்துச்செல்வியை படம் பிடித்துள்ளனர்.

பின்னர் முத்துச்செல்வி தனியாக வந்தபோது அந்தப் படத்தை அவரிடம் காட்டி, எங்களது விருப்பத்திற்கு இணங்க வேண்டும், இல்லாவிட்டால் இப்படத்தை அத்தனை பேருக்கும் அனுப்பி உனது மானத்தை வாங்கி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்து போன முத்துச்செல்வி தனது ஊருக்குப் புறப்பட்டுப் போயுள்ளார். அங்கு போன பின்னர்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தத் தகவலை முத்துச்செல்வியின் தாயார் ஜெயராணி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ராதாபுரம் போலீஸார் நாகர்கோவில் விரைந்துள்ளனர். ஈவ் டீசிங் செய்த வாலிபர்கள் யார் என்பதை முத்துச்செல்வியின் தோழிகள் உதவியின் மூலம் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.]

Thatstamil.com

Link to comment
Share on other sites

இதுபோன்ற செல்போன் கேமரா குற்றங்கள் தமிழ்நாடெங்கிலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது.... டெக்னாலஜியை தவறாக உபயோகப்படுத்தும் போக்கு மிக மிக மோசமானது....

Link to comment
Share on other sites

டெக்னொலஜி வளர்ந்த அளவுக்கு இன்னும் மக்கள் வளரவில்லை என்பதையே இந் நிகழ்வு காட்டுகிறது.

இப்படியான நிகழ்வுகள் ஏற்பட்டால்

எப்படி முகம் கொடுப்பதென்பதை கற்றுக் கொடுக்காமல்

என்னதான் படிப்போ?

பாடப் புத்தகங்களை காவுவதைத் தவிர

பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க

மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.

இப்படியான பிரச்சனைகளின் போது

அணுகி ஆதரவு பெற வேண்டிய ஒருவரை கல்லூரிகள்

நியமிக்க வேண்டும்.

என்னப்பா பெண் போலீஸ் எல்லாம்

படத்திலதான் படம் காட்டுவாங்களோ?

இதுகளை எழுதாம

பத்திரிகைக்காரங்க என்னாத்த வெட்டி புடுங்குறாங்க?

பகுத்தறிவு இயக்கம் நடத்தினா போதாது

மக்கள் பகுத்தறிவு பெறவும் வழி காட்டணும் சாமி.............?

நம்ம நாட்டை பாரு

ஒரு பொண்ணு பிரச்சனையின்னு

போலீசுக்கு போண் பண்ணினாலே

2-3 நிமிசத்தில நிக்கும் போலீசு..........

அப்புறம் என்ன?

சாட்சியே தேவையில்ல............

பெண்ண கோயிலா நினைக்கிறோமுண்ணு

சொல்லுற நாட்டில என்னவெல்லாமோ நடக்குது............?

இது தொடராது இருக்க ஊடகங்களின் பங்களிப்பு

முக்கியமானது.

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

தேவைப்படுவது

செய்தியல்ல

செயல்...............!

Link to comment
Share on other sites

இதுபோன்ற செல்போன் கேமரா குற்றங்கள் தமிழ்நாடெங்கிலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது.... டெக்னாலஜியை தவறாக உபயோகப்படுத்தும் போக்கு மிக மிக மோசமானது....

ஓய் லக்கீ என்ன தமிழ்நாட்டு பொலிசு டம்பீ மாருக்கு லாடன் கட்டேல்லையே

:lol::lol::):D:D:(:(:(:(:(:(

Link to comment
Share on other sites

ஓய் லக்கீ என்ன தமிழ்நாட்டு பொலிசு டம்பீ மாருக்கு லாடன் கட்டேல்லையே

:lol::lol::lol::(:(:(:(:(:(:(:(

மாட்டுகிறவனுக்கு எல்லாம் கட்டிக்கிட்டு தான் இருக்காங்க....

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவ மாணவிகள் செல்போன் எடுத்துவர தடை போட்டிருந்தார்....

தடைக்குப் பிறகு நடந்த தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறதாம்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.