Jump to content

வேதப் பொருளே வெற்றுச் சிலையா நீ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேதப் பொருளே வெற்றுச் சிலையா நீ?

 

525325_431146736976928_688595433_n.jpg

 

சக்தியின் பெருவடிவே சங்காரத் திருவுருவே

சிம்ம வாகனியே சிங்காரப் பெருந்தேவி

சும்மா கிடக்கிறாயே.... உன் சுயம் எங்கு போனது?

 

வேட்டை ஆடுகிறாய், வீதியுலா வருகிறாய்

பாட்டம் கிடந்துழலும் பிள்ளைகளைப் பாராமல்

மாற்றாரை உன் மண்ணில் மகிழ்ந்துலவ வைக்கிறாய்

 

உனக்கென்ன கொலுவிருக்கும்

இடமெல்லாம் கொண்டாடப் பெருங்கூட்டம்

 

பட்டுப்பளபளப்பும், தங்கத் தகதகப்பும்,

பளிச்சென்று ஒளிவீசும் வைரச்சிலுசிலுப்பும்,

வெள்ளிக் கொலுசும்,வீரத் திருவாளும் ,

அள்ளி முடித்த கார்கொண்டை

அலங்கரித்த வெள்ளி, பிறையும்,

துள்ளிக் குதித்தொளிரும் மின்னி மிடுக்கும்

காணக்கண் போதாது அம்மையே….-

ஆயினும்........

கள்ளச் சிரிப்பொளிரும்உன் வதனக்கோலம்

முள்ளாய் உறுத்துதடி முத்துமாரியம்மையே

 

முன்னே குறி சொல்வாய் மூத்தோர் வழி உரு வருவாய்

ஊர் காப்பாய் உலைக்களப் பிள்ளைகளின்

நெஞ்சக்கூட்டுக்குள் நிமிர்ந்திருப்பாய்

ஆர்ப்பாட்டம் இல்லாமல் அனைத்தும் ஆனவள் நீ

 

தர்மத்தின் தலை காக்கும் உக்கிர வடிவேஇன்று

அதர்மம் கூத்தாடுதடி உலக மகாதேவி

ஊமைத்தனம் ஏனடி?

 

ஆதிசிவனையே... காலடியில் மிதித்தவள் நீ - உன்

பிள்ளையர் ஊழிப்பெருந்துயரில் உயிர் கிழிந்த பொழுதில்

சாந்த சொரூபியாய் சாய்மனை கொண்டதேன்?

 

பழிகாரி, மலைநீலிகாக்கும் குணம் கைவிட்ட கருமாரி

பார்க்கும் உன் ஒரு பார்வை தீர்க்கும் துயர் கோடியென்று

பூசித்த சனத்தையெலாம் சதிமேவித் தின்னப்

பார்க்காதிருந்தவளை

ஆத்தா என்றழைக்க அழுகைதான் எழுகிறது.

 

வேதப் பொருளே! வெற்றுச் சிலையா நீ

காதிறுக்கிக் கட்டிய கசாப்புக் கடையினளா?

மீதியிருக்கிறோம் இன்னும் நாதியற்று….

 

உலகத்தாயே ஒளிகாட்டு.

சோதிப் பெருவெளியை எம் இருள் களைய ஏவி விடு.

வெளிச்சத்தைப் பாய்ச்சிவிட்டுநீ

ஒய்யார ஊஞ்சலாடு.

வெற்றிப் பூக்கள் கொய்து வீரப்பாமாலை கட்டி –  உன்

மஞ்சத் தாலாட்டில் மனமுருகப் பாடுகிறோம்.

 

 

Link to comment
Share on other sites

அழகிய கவிதை மீண்டும் தங்கள் படைப்பு களம் காண்பதில் மகிழ்வு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு கூட கவிதை எழுத வெளிக்கிட்டுது என்று சகாராவுக்கு கோபம் வந்திட்டுது போல.

கவிதையோட வந்திருக்கிறா. நீங்க எழுதினா நாங்க ஏன் கிறுக்கப்போறம்...???

 

 

நன்றி  கவிதைக்கும் மீள் வருகைக்கும்  சகோதரி

 

(ஆனால் இந்த கருவில் எனக்கு நம்பிக்கை கிடையாது :( )

அதுவும் சகாராவிடமிருந்து இது போன்ற கருக்களை  எதிர்பார்க்கவில்லை

Link to comment
Share on other sites

அக்கா!  வெற்றுப் பொருளாய் மட்டுமல்ல கடைச்சரக்காகி விட்ட அம்மை மீதான உங்கள் ஆத்திரம் நியாயமானதே!

 

அழகான கவிதையுடன் மீளவும் வந்ததில் மகிழ்ச்சி..

 

தொடர்ந்தும் படைப்புகளுடன் இணைந்திருங்கள்...

Link to comment
Share on other sites

சாமிக்குற்றம் ஆனால் சாமி கண்ணைக் குத்திவிடும்.. கவனம்.. ::D கவிக்கு நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள்;மதம் என்பன எல்லாம் மனிதனை நல்வழிப்படுத்துவதை விட்டு பயம்,மூடநம்பிக்கைகளை மக்கள் மனதில் விதைத்து

அழிவுக்கு வித்திட்டுள்ளது. இன்று வருவாய் கொழிக்கும் வியாபாரங்களில் ஒன்றாகி விட்டது கடவுள் என்ற ஒன்று.

அது அம்மாளாச்சி என்றாலும் சரி, அல்லாஹ் என்றாலும் சரி , இயேசு என்றாலும் சரி.

 

மதங்கள் என்பதே நிறுவனமயப்படுத்தப்பட்ட பின்னர் கடவுளை எங்கு தேட?????

 

நல்ல எழுத்து நடை வாழ்த்துக்கள் சகாறா அக்கா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு கூட கவிதை எழுத வெளிக்கிட்டுது என்று சகாராவுக்கு கோபம் வந்திட்டுது போல.

கவிதையோட வந்திருக்கிறா. நீங்க எழுதினா நாங்க ஏன் கிறுக்கப்போறம்...???

 

 

நன்றி  கவிதைக்கும் மீள் வருகைக்கும்  சகோதரி

சகாரா தான்  எங்களை காப்பாத்தவேணும்  :D(சும்மா பகிடிக்கு )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை மிக அருமை சகாறா. :D

 

Link to comment
Share on other sites

"பழிகாரி, மலைநீலி,  காக்கும் குணம் கைவிட்ட கருமாரி

பார்க்கும் உன் ஒரு பார்வை தீர்க்கும் துயர் கோடியென்று

பூசித்த சனத்தையெலாம் சதிமேவித் தின்னப்

பார்க்காதிருந்தவளை

ஆத்தா என்றழைக்க அழுகைதான் எழுகிறது"

 

"கடவுளை நம்பினோர் கைவிடப்படார்" என்பது தெரியாமலா சொன்னார்கள். பெரியாரை நம்பினபடியால் ..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு... ஏற்ற, அழகிய அம்மன் படம். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வல்வை!

 

கவிதையழகு, அதன் கருப்பொருளும் அழகு!

 

தமிழன் சரணடைய முன்னமே, சரணடைந்தவன், நல்லூர்க்கந்தன் என்பது என்னுடைய அபிப்பிராயம்!

 

நாங்கள் புலம்பெயர முன்னமே, எங்கள் தெய்வங்கள் புலம்பெயர்ந்து விட்டன!

 

ஆதிசிவனையே... காலடியில் மிதித்தவள் நீ

 

சும்மா, 'மசாஜ்' பண்ணியிருப்பா!

 

இதைப்போய்ப் பெருசாய்,,,,, :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகாறா! அருமையான கவிதை.

பூமியில் ஆத்திகனும் வெற்றியடையவில்லை.

நாத்திகனும் வெற்றியடையவில்லை.

எல்லாம் அவரவர் மனம் தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தாளையே கோட்டுக்கு இழுக்கிறீங்கள் :)

 

கவிதைக்கு நன்றிகள்  .  

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.