Jump to content

புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழியின் எதிர்காலம் - தொலைக்காட்சி விவாதம்


Recommended Posts

ஜீரிவியில் "புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் எதிர்காலம்" என்னும் தலைப்பில் "பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்" வழங்கிய நிகழ்வு இது. ஒவ்வொரு சனியும் ஐரோப்பிய நேரம் பி.ப 3:30இற்கு ஒளிபரப்பாகிறது. விவாதத்தை ஒருங்கிணைப்பவனாக அடியேனும் பங்கேற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் இருக்கிறீங்களா அப்ப கட்டாயம் யோசிக்க வேண்டும் பார்க்கிறதா,விடுவதா என்று   :(

 

Link to comment
Share on other sites

ரதி! தைரியமாகப் பார்க்கலாம். இதில் விவாதத்தை ஒருங்கிணைக்கிற வேலையைத்தான் செய்கிறேன். நான் விவாதம் செய்யவில்லை. ஆகவே என்னால் யாருக்கும் ரத்தக் கொதிப்பு வராது.

Link to comment
Share on other sites

எழுத்தாளர் ஒன்றியம் கன காலத்திற்கு பிறகு உருப்படியா ஒன்றை செய்திருக்கு வாழ்த்துக்கள். கிருஸ்ண மூர்த்தியை  தவிர பழைய ஆக்களை  காணவேயில்லை?எல்லாரையும் கொண்டு வாங்கோ நானும் வாறன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல கலந்துரையாடல்..!

 

இங்கிலாந்தைப் பொறுத்த வரை.. ஆங்கிலத்தில் பேசத் தெரிந்த இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள்.. பரீட்சையில் ஆங்கிலத்தில் நல்ல பெறுபேற்றை எடுக்கிறார்களா என்பது.. கேள்விக்குரியதாக உள்ளது. பலர் ஆங்கிலத்தில் நல்ல பெறுபேற்றை எடுக்கத் தவறுகின்றனர்.

 

அதற்கு அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு வீட்டில் தமிழ் கதைக்கினம் என்று. எங்களுக்கு ஆங்கில அறிவு வரேல்லை என்று. ஆனால் பாடசாலையில் ஆங்கிலம் தானே கதைக்கிறார்கள்.

 

மேலும்.. மொழிக்கு மொழி கற்றல் கற்பிக்கும் பரிமானங்களில் வேறுபாடுள்ளது. தமிழ் மொழியை கற்பிக்கும் போது அதன் தமிழ் நெடுங்கணக்கைப் புரிந்து கொள்ளவே 2 வருசம் எடுக்கும். ஆனால் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் அப்படியல்ல. எனவே தமிழ் மொழியை டொச் படிப்பிற மாதிரித்தான் படிப்பிக்கனும் என்றில்லை. தமிழ் மொழியை எந்த வகையில் இலகுவாகக் கற்பிக்க முடியுமோ அந்த வழியைத் தெரிவு செய்து கற்பிப்பதே சிறந்தது..! அதனை தீர்மானிக்க வேண்டியது  மொழிக் கற்கை வடிமைப்பாளர்களே..!

 

சிறீலங்காவில் தமிழோடு நாங்கள் ஆங்கிலம் கற்கிறோம். யாருமே ஆங்கிலம் படிக்கமாட்டம் என்று அடம்பிடிப்பதில்லை. அதேபோல் டொச் மொழியில் பேசும் மாணவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க விரும்பினம். ஏன்னா அது சர்வதேச மொழி என்பதால் என்று சொல்லிக் கொள்ளலாம். அதேபோல் வீட்டு மொழியாக உள்ள தமிழில் உரையாடத் தயங்குவது ஏன்..???!

 

இதற்கு இங்கு பிறந்தவை என்னத்தைச் சொல்ல காரணமா வைச்சிருக்கினம்..????!

 

மொழியை விருப்பத் தெரிவாகக் கொண்டு படிப்பது பாவிக்கவே தவிர.. சும்மா கடதாசியில் புள்ளியாக வைத்திருப்பதற்கு அல்ல..! இதனை முதலில் இளைய சமூகமும் உணர்ந்து கொள்ள வேண்டும்..!

 

மேலும் சூழ்நிலைக்கு காலத் தேவைக்கு ஏற்ப தமிழை கற்பிக்கும் முறையில் மாற்றம் அவசியம். அதற்காக அது டொச் கற்பிக்கும் முறையில் தான் அமையனும் என்பது எவ்வளவு சரியாக அமையும் என்பது ஆய்வுக்குரியது..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை நான் என்ன சொல்ல வாறனெண்டால்......இஞ்சை பிறந்துவளர்ந்த பிள்ளையளுக்கு தமிழ்படிப்பிக்கிற வாத்திமாருக்கு டொச்பாசையிலை கொஞ்ச பாண்டித்தியம் இருந்தால் நல்லாயிருக்குமெண்டு நினைக்கிறன். ஏனெண்டால் டொச்சிலையே காலத்தை கொண்டுபோற பிள்ளையளுக்கு....எங்கடை தமிழ் இலக்கணங்களை ,எழுவாய்பயனிலைகளை டொச்சிலையும் கொஞ்சம் விளங்கப்படுத்தினால்....அவைக்கு விளங்குறதும் சுகமாயிருக்கும். நான் இருக்கிற இடத்திலை தமிழ்ப்பிள்ளையள் தமிழை அறுத்துறுத்து அந்தமாதிரி கதைப்பினம்.இந்த இடத்திலை அந்த வாத்தியாருக்கு கோடி நன்றிகள். :)

 

Link to comment
Share on other sites

இன்று சனிக்கிழமை ஜீரிவியில் "புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் எதிர்காலம்" விவாதத்தின் இரண்டாவது பகுதி ஒளிபரப்பாகிறது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் பாடசாலைகள், நிர்வாகங்கள், ஆசிரியர்கள், கல்விமுறை என்பவை பற்றிய பார்வையோடு சற்று காரசாரமாகவே விவாதம் நடைபெற்றது.

நிகழ்ச்சி ஐரோப்பிய நேரம் பி.ப 3:30இற்கு ஒளிபரப்பாகிறது

Link to comment
Share on other sites

புலம்பெயர் நாடுகளில் கல்வியை வைத்து செய்யப்படும் அரசியல் பற்றிய குமுறல் இதில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.