Jump to content

மாலைத்தீவுகளில் இராணுவத்தளம் அமைக்க அமெரிக்கா முயற்சி..!


Recommended Posts

மாலைத்தீவுகளில் இராணுவத்தளம் அமைக்க அமெரிக்கா முயற்சி..!

 

மாலைத்தீவுகளில் இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள ஐக்கிய அமெரிக்கா திட்டமிடுவதாக தெரிய வந்துள்ளது. இதற்கான ஒப்பந்த வரைவு ஒன்று வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

 

இந்த வரைவில் உள்ளதன்படி,

 

  • அமெரிக்க ஒப்பந்ததாரர்களுக்கு தடையற்ற போக்குவரத்து வசதிகளை மாலைத்தீவு அரசு வழங்கவேண்டும்.
  • அமெரிக்க ஊழியர்களுக்கு அவர்களது நீதிமுறைமைகளைச் செலுத்தும் அதிகாரத்தை மாலைத்தீவுகள் வழங்கவேண்டும்.
  • அமெரிக்க ஊழியர்களுக்கு வரிகள் விதிக்கப்படக் கூடாது.
  • அவர்ர்கள் எதையும் ஏற்றுமதி, இறக்குமதி செய்து கொள்ளலாம். மாலைத்தீவுகள் அரசு அவற்றைப் பரிசோதனை செய்யக்கூடாது.
  • அவர்களது வாகனங்கள், விமானங்கள், கப்பல்களுக்கு தங்குதடையற்ற அனுமதி வழங்கப்படல் வேண்டும். வரிகள் விதிக்கக்கூடாது.

இப்படி இன்னோரன்ன வில்லங்கங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

நன்றி: http://www.tamilnet.com/art.html?catid=79&artid=36269

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு கச்சதீவுதான் பொருத்தமான இடம்.

 

Link to comment
Share on other sites

அமெரிக்கருக்கு ஆசியாவை கண்காணிக்க மிகுந்த வசதியாக இருக்கும்.அமெரிக்கா மிக நீண்ட நாளாக தேடிய ஒன்று.

 

Link to comment
Share on other sites

நாசமாப்போச்சு இனி அமெரிக்காவுக்கு சிறிலங்காவின் தயவு தேவையில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசயம் என்னென்டா, மாலைதீவு தண்ணீல தாண்டூ துளையப் போகுது.

சீனாகாரன் அங்க மினக்கிடறது போல, காட்டி மகிந்தரோ நிக்கிறான்.

அமெரிக்கனுக்கும் இது தெரியும் என்டதை வைத்து வெட்டி ஆடூறதில தான் எங்கள் வெற்றி இருக்குது.

Link to comment
Share on other sites

The inhabitants of Chagos were evacuated to Mauritius in 1965, and the UK paid money to Mauritius to hand over Chagos to the USA in return for some defence benefits, Minivan said. The Indian origin Mauritius Prime Minister was later Knighted for his ‘services’.

 

இந்தச் செய்தி கவனத்துக்கு உரியது.. தங்கள் இராணுவ நோக்கங்களுக்காக ஒரு தீவு மக்களையே வெளியேற்றியுள்ளார்கள்.. இன்று டியகோ கார்சியாவில் அமெரிக்கத்தளம் உள்ளது.. தீவுகள் பிரித்தானியாவுக்குச் சொந்தம் என்று தெரியவருகிறது..

 

இராணுவ நோக்கங்களுக்காக இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி.. அந்த நோக்கங்களை அடைவதற்காக இவர்களால் இக்காலத்தில் பாவிக்கப்படும் சொற்கள், மக்களாட்சி, சுற்றுச்சூழல் மாசுபாடு, போர்க்குற்றம், நல்லிணக்கம் இத்யாதி.. இத்யாதி..

 

இவர்களின் இந்தப் பித்தலாட்டங்களுக்கு மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்புபோல்  பலர் ஆடுவார்கள்.. ஆனால் எதிர்த்தவர்கள் சிலபேர்தான்.. எதிர்த்த அந்தச் சிலரை ஏன் இவர்கள் காட்சியில் இருந்து அப்புறப்படுத்தினார்கள் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை அல்லவா..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.