Jump to content

அன்ட்ரொய்ட் மென்பொருள் எழுதுவோமா ?


Recommended Posts

2. தெரிவு பட்டன்கள் [ Radio Buttons ]

 

 

radiobuttons.png

 

 

 

 

தொழில் : பாவனையாளருக்கு ஒரு குறிப்பிட்ட  தெரிவுகளை வழங்கி அதில் ஒன்றை மட்டும் தெரிவு செய்ய விடுதல். 

இயல்புகள்: பெயர் (ஐடி), நீளம் , அகலம், அதன் மேல் உள்ள சொற்கள்..

நிகழ்வுகள்: "கிளிக்" [ Click ]

 

 

மேலே படத்தில் உள்ள தெரிவு பட்டனுக்குரிய  XML கோர்வை. 

 

<RadioGroup xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
    android:layout_width="fill_parent"
    android:layout_height="wrap_content"
    android:orientation="horizontal">
    <RadioButton android:id="@+id/radio_Yes"
        android:layout_width="wrap_content"
        android:layout_height="wrap_content"
        android:text="@string/Yes"
        android:onClick="onRadioButtonClicked"/>
    <RadioButton android:id="@+id/radio_MayBe"
        android:layout_width="wrap_content"
        android:layout_height="wrap_content"
        android:text="@string/MayBe"
        android:onClick="onRadioButtonClicked"/>

  <RadioButton android:id="@+id/radio_No"
        android:layout_width="wrap_content"
        android:layout_height="wrap_content"
        android:text="@string/No"
        android:onClick="onRadioButtonClicked"/>
</RadioGroup>

 

 

 

ஒரு கூட்டத்தில் உள்ள தெரிவு பட்டன்களில் ஒன்று மட்டுமே தெரிவு செய்யப்படலாம். 

 
ஆகவே ஒரு கூட்டம் தெரிவு பட்டன்களை இன்னுமொரு கூட்டத் தெரிவு பட்டன்களில் இருந்து வேறுபடுத்த   RadioGroup  என்ற ஐடம் பயன்படும். இதன் மூலம் ஒவ்வொரு கூட்டத்தில் இருந்தும் ஒரு தெரிவு பட்டன் கிளிக் செய்யப்படக்கூடிய நிலை உருவாகும். இந்த RadioGroup இல்லையேல் அங்கு உள்ள தெரிவு பட்டன்கள் அனைத்தும் ஒரு கூட்டத்தில் உள்ளதாகக் கருதி ஒரு சமயத்தில் ஒன்று மட்டுமே தெரிவு செய்யப்படக் கூடிய நிலை உருவாகும்.
 
 XML இல் ஒரு ஐடத்தினுள் இன்னுமொரு ஐடத்தைப் போடும் போது உள்ளிருக்கும் ஐடம் வெளியே இருப்பதன் குழந்தை [  Child ] என்று சொல்லப்படும். அதுபோல் வெளியே இருப்பது உள்லே இருப்பதன் பெற்றோர் [ Parent  ] என்றும் சொல்லப்படும்.
 
இங்கே RadioGroup  என்பதன் குழந்தைகளாக 3 தெரிவுபட்டன்கள் இருக்கின்றன‌. 
 
இம்மூன்றினதும் பெயர்கள் என்ன ?
 
1. radio_Yes  --  >>  (android:id="@+id/radio_Yes")
2. radio_MayBe
3. radio_No
 
 
அவற்றின் அகலம் என்ன ?
 
android:layout_width="wrap_content"  -- இதன் அர்த்தம்.. 
 
ஒவ்வொன்றினுள்ளும் இருக்கும் சொற்களை மட்டாக தமக்குள் வைத்திருக்கும் அளவிற்கு அகலம்.
 
 
இவற்றின் உயரம் என்ன ?
 
 
android:layout_height="wrap_content"   -- இதன் அர்த்தம்.. 
 
ஒவ்வொன்றினுள்ளும் இருக்கும் சொற்களை மட்டாக தமக்குள் வைத்திருக்கும் அளவிற்கு உயரம்.
 
 
 
அவற்றின் மேல் உள்ள சொற்களைக் குறிக்கும் XML  கோர்வையின் பகுதி எது ?
 
android:text="@string/MayBe"
 
 
 
ஆகவே ஒரு தெரிவுபட்டனை முழுமையாக் குறிக்கும் XML  கோர்வை:
 
 
<RadioButton android:id="@+id/radio_No"
        android:layout_width="wrap_content"
        android:layout_height="wrap_content"
        android:text="@string/No"
        android:onClick="onRadioButtonClicked"/>
 
 
 
 
 
 
 
 
3. ஆளி பட்டன்கள் [ Toggle Button ]
 
 
togglebutton.png
 
 

தொழில் : பாவனையாளருக்கு இரண்டில் ஒரு நிலையைத் தெரிவு செய்ய அனுமதித்தல். இது மின் ஆளி [ Electric Switch ] போன்றது.

இயல்புகள்: பெயர் (ஐடி), நீளம் , அகலம், அதன் மேல் உள்ள சொற்கள்..

நிகழ்வுகள்: "கிளிக்" [ Click ]

 

 

மேலே படத்தில் உள்ள ஆளி பட்டனுக்குரிய  XML கோர்வை.

 

<ToggleButton
    android:id="@+id/togglebutton"
    android:layout_width="wrap_content"
    android:layout_height="wrap_content"
    android:textOn="On"
    android:textOff="Off"

    android:onClick="onToggleClicked"/>

 

 

 

இங்கே முதல் நிலைக்குரிய சொல் - On      - - ->   android:textOn="On"
இரண்டாம் நிலைக்குரிய சொல் - Off           - - - >   android:textOff="Off"
 
 
 
 
 
 
 
4. தெரிவுப் பெட்டிகள் [ Check Boxes ]
 
 
check_box.png
 
 

தொழில் : பாவனையாளருக்கு பல தெரிவுகளை ஒரே நேரத்தில் தெரிவு செய்யும் வசதியைக் கொடுத்தல்.

இயல்புகள்: பெயர் (ஐடி), நீளம் , அகலம், அதன் மேல் உள்ள சொற்கள்..

நிகழ்வுகள்: "கிளிக்" [ Click ] 
 
 
மேலே படத்தில் உள்ள தெரிவுப் பெட்டிகளுக்குரிய  XML கோர்வை.
 
 
 
<LinearLayout xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
    android:orientation="vertical"
    android:layout_width="fill_parent"
    android:layout_height="fill_parent">
    <CheckBox android:id="@+id/checkbox_checkspell"
        android:layout_width="wrap_content"
        android:layout_height="wrap_content"
        android:text="@string/check spelling"
        android:onClick="onCheckboxClicked"/>
    <CheckBox android:id="@+id/checkbox_autocorrect"
        android:layout_width="wrap_content"
        android:layout_height="wrap_content"
        android:text="@string/auto correct"
        android:onClick="onCheckboxClicked"/>
</LinearLayout>
 
 
 
தெரிவு பட்டன்களுக்கும் தெரிவுப்பெட்டிகளுக்குமிடையே உள்ள வேறுபாடு என்னவென்றால் தெரிவு பட்டன்களில் ஒரு கூட்டத்தில் ஒன்றை மட்டுமே தெரிவு செய்யலாம். ஆனால் தெரிவுப் பெட்டிகளில் தேவையான எல்லாவற்றையும் தெரிவு செய்யலாம்.
 
 
 
 

.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 6 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.