Jump to content

தலைவர் இருக்கிறார் அதுவும் ஜரோப்பாவில். ஒரு ஓலை கண்டுபிடித்திருக்கு


Recommended Posts

இந்த ஓலைக்காரர் என்ன சொல்லுறார் என்பதையும் போட்டுவிட்டால் நல்லது சாத்து!

Link to comment
Share on other sites

இந்த ஓலைக்காரர் என்ன சொல்லுறார் என்பதையும் போட்டுவிட்டால் நல்லது சாத்து!

 

அலை அந்த இணைப்பை அழுத்தி பாருங்கோ . அனால் நான் இந்த இணைப்பை போட்டால் பிறகு வேலை தேடுவது எப்படி என்கிற திரிதான் ஓடிக்கொண்டிருக்கு.  எனவே தலைவர் உயிரோடை இருக்கிறார் என்பதை விட  தனக்கு வேலை தேடுகிறவர்கள் தான் அதிகம்.  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சபேசன் நீங்கள் சரியான விளம்பரப் பிரியரோ

 

இணைப்பில் உள்ளதை என் இங்கே பகிரமுடியவில்லை  

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் வாத்தியார். வெப்ஈழம் தற்பொழுது இயங்கு நிலையில் இல்லை. அதனால் விளம்பரம் செய்யத் தேவையில்லை. ஓலைச் சுவடி சார்ந்த தலைவரின் இருப்பு பற்றிய நம்பிக்கை குறித்து ஏற்கனவே நான் எழுதிய ஒரு கட்டுரை இருந்ததால், அதன் இணைப்பை தந்தேன். கட்டுரையை இணைக்காமல் அதன் இணைப்பைத் தந்ததற்கு சோம்பேறித்தனம் மட்டும்தான் காரணம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=60632

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டதால் புலிகள் என்ற அமைப்பு இறந்ததாக அர்த்தமில்லை. அந்த அமைப்பின் தற்போதைய தலைவராக கே பி இருப்பதாகவே கருதமுடியும்.

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டதால் புலிகள் என்ற அமைப்பு இறந்ததாக அர்த்தமில்லை. அந்த அமைப்பின் தற்போதைய தலைவராக கே பி இருப்பதாகவே கருதமுடியும்.

சரியான கறுமம். இந்த கருதுகள் எல்லாம் சரியான கறுமம் அப்பா!

 

பாவங்களை இப்படி எல்லாம் போட்டு வறுத்து எடுக்கிறாங்களே. முள்ளிவாக்காலில் தமிழ்ச்சனம் பட்ட அவலம் படுகிதுகள்.

 

இதுகளின் பரிதாபத்தை கண்டு, இதுகளைக் கோத்தாவின் பிடியிலிருந்து விடுவிக்கத்தன்னும் தீர்வு ஒன்று வேண்டும் போலிருக்கு. அவ்வளவு இரக்கமாக கிடக்குது இதை வாசிக்க.

 

வெளியில் இருக்கிறதுகள் படுகிற வதையால் இந்த மாதிரி உளறினால் உள்ளே இருக்கும் K.P. யை எப்படி எல்லாம் வதைத்து ஜெயராஜாவின் பேட்டிகளில் அங்கொடையில் இருந்து கொண்டுதான் தான் புலிகளின் தலைவன் என்று கதைப்பது போல் கதைக்க வைத்திருப்பார்களோ? 

 

ஒரு தவறும் செய்யாத பலமான அசாத் சாலியை சிறையில் போட்டு வைத்திருக்கிறார்கள். அவருக்கு பலமான முஸ்லீம் நாடுகளின் ஆதரவு இருக்கு. பல சட்டத்தரணி நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவரை போய் மிரட்டுகிறார்கள் தாங்கள் சொல்வதை சொன்னால் வெளியே விட முடியும் என்று. அந்த நிலைமையில் இந்த நாணல் புல்லுகள் எல்லாம் என்ன ஆட்டம் ஆடுதுகள். 

 

எனது ஒரு கேள்விக்கு ஒழுங்கான பதில் சொன்னால் நான் இந்த திரியில் இனி எழுதவில்லை.:

 

K.P. தான் புலிகளின் தலைவன். ஏன் அசாத் சாலியை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள் என்று கூற முடியுமா?

Link to comment
Share on other sites

இந்த ஓலைக்காரர் என்ன சொல்லுறார் என்பதையும் போட்டுவிட்டால் நல்லது சாத்து!

என்னாங்க இது புரியாமல் சாத்திரியாரை அவரு என்ன சொல்கிறார் என்று துருவி துருவி கேட்கிறீங்க. 

 

ஓலைச் சாத்திரியார் இந்த கரைச் சாத்திரம் சொல்கிறார், யாழ்ச் சாத்திரியார் சொல்வது மற்றக்கரைச் சாத்திரம், அதெப்படி நீங்க போய் ஒரு முசல் உலாமாவை  மாகா மகாவம்சத்தை படித்து பொருள்  சொல்லு என்றோ  அல்லது பிக்கு ஒருவரை குரானை விளங்கப்படுத்து என்றோ கேட்க முடியும்.  அவர்கள்  இருவரும் மத குருமார் என்றாலும் ஒத்துப் போகுமா? ஒலைச் சாத்திரியாரும், யாழ் சாத்திரியாரும் சொல்வது சாத்திரம் தான் என்றாலும் எப்படி அவங்க மற்றவர் பக்க எதிர்க்கன்னைச் சாத்திரத்தை சொல்ல முடியும்?

 

"பொது பல சேனாப்  பிக்குகள் கலால் என்றால்  எப்படி இருக்க வேண்டும் என்று விளங்கப்படுத்துகிறார்கள் இல்லையா?" என்று கேட்காதீர்கள்.  அவங்கள் மகிந்தா என்ற உரத்த கையின் பக்கம் இருக்கிறாங்க, அதாலை அவங்களுக்கு கலால் மீது ஒரு நக்கல் மட்டும்தான். அவங்கள் உண்மையாக குரானில் சொல்லப்படும் கலாலை விளங்க வைக்க விரும்பவில்லை. அந்த மாதிரித்தான் யாழ்ச்சாத்திரியாருக்கு இந்த ஓலைச் சாத்தியார் மீது ஒரு நக்கல் அவ்வளவுதான்.  

 

எந்த சாத்திரியார் சொன்னாலும் சாத்திரம் என்பது ஒருவெங்காயம். உரிக்க போனால் ஒன்றும் மிஞ்சாது.   மிச்சத்தை துருவி துருவி கேளாமல் விட்டிடுங்க.  :D

Link to comment
Share on other sites

Quote" எந்த சாதிரியார் சொன்னாலும் சாத்திரம் என்பது ஒருவெங்காயம். உரிக்க போனால் ஒன்றும் மிஞ்சாது.   மிச்சத்தை துருவி துருவி கேளாமல் விட்டுங்க" :lol: இன்றைய அசத்தல் கருத்து

 

 

Link to comment
Share on other sites

ஓலை சுவடியை இவர் படிப்பது போல இல்லை. சும்மா தலைய தலைய ஆட்டி  வார்த்தைகளை கோர்க்கிறார். ஜோசித்து ஜோசித்து வார்த்தையை கோர்க்கிறார் . ஓலை பெரிசா இருக்கு அவர் தலை ஒலையின் கடைசிப்  பகுதிக்கோ ஆரம்பத்துக்கோ  போக வில்லை. சின்ன சின்ன பாவனையில் இல்லாத தமிழ் வார்த்தைகளை சொல்லி அதோடை அர்த்தத்தை சொல்கிறார். இப்படி சொன்னா அது ஓலைல இருகிறதா மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறார்.

 

Link to comment
Share on other sites

ஓலை சுவடியை இவர் படிப்பது போல இல்லை. சும்மா தலைய தலைய ஆட்டி  வார்த்தைகளை கோர்க்கிறார். ஜோசித்து ஜோசித்து வார்த்தையை கோர்க்கிறார் . ஓலை பெரிசா இருக்கு அவர் தலை ஒலையின் கடைசிப்  பகுதிக்கோ ஆரம்பத்துக்கோ  போக வில்லை. சின்ன சின்ன பாவனையில் இல்லாத தமிழ் வார்த்தைகளை சொல்லி அதோடை அர்த்தத்தை சொல்கிறார். இப்படி சொன்னா அது ஓலைல இருகிறதா மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறார்.

 

 

உங்க புல-நாய்வு அவங்க சாத்திரத்தைவிட நன்னாத்தானிருக்கு.

 

அவங்க பேசுமாபோல் இல்லை. Clean Writing.

 

அனுபவத்தை பார்த்தா புல-நாய்வு முன்னரும் பண்ணியிருக்கிறீங்கள் போலிருக்கு. 

 

எப்படி நம்ம சாத்திரம் சரியா?  நாம இரண்டு பேரும் எத்தனுக்கு எத்தன் தானே. நாம சாத்திரம் சொல்வதிலும் புல-நாய்வதிலும்  சகோதரங்கள் இல்லையா?

 

 

:lol:  :lol:  :D  :)

Link to comment
Share on other sites

ஏனுங்க மல்லை இப்படித் துள்ளிக் குதிக்கிறீங்கள்???? ஏன்னாச்சு????

 

குட்டி நாய் எஜமானுங்களை கண்டால் அப்படித்தான். 

Link to comment
Share on other sites

யார் அது வீடியோவில் இருப்பது ? யாழ் கள அங்கத்தவரா ?

Link to comment
Share on other sites

1.27 இலே நடந்து போவது புலனாய் போல கிடக்கு. புலனாய் பொம்மனேரியன்  எண்டு தெரியாமப் போச்சப்பா. சாத்திரி அண்ணா, சாத்திரி  வீட்டுக்கே புலநாயை அனுப்பி இருக்கிறியள் :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

யார் அது வீடியோவில் இருப்பது ? யாழ் கள அங்கத்தவரா ?

 

நாடுகடந்த அரசாங்கத்தின் அரசியல் ஆலோசகராக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

நாடுகடந்த அரசாங்கத்தின் அரசியல் ஆலோசகராக இருக்கலாம்.

 

நான் நினைத்தேன் வித்தன் என்று

Link to comment
Share on other sites

என் மூளை ஆசியா என்று எண்ணிக்கொண்டிருந்தது. ஒலை ஜரோப்பா என்கிறது. மிகுதி மூன்று கண்டங்களும் தரிசாகக் கிடக்கின்றனவே! மலையாள சாஸ்திரிகளின் நிலை என்னவோ? இருந்தாலும் நண்பனின் சந்தேகம் நீங்கியிருக்கும் என இந்தியாவுக்கு ஒரு நிம்மதி. :wub:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலச் சக்கரத்தில் என்ன எழுதி இருக்கென்று வாசிக்கிறவருக்கே விளங்கேல்லைப் போல இருக்கு.

 



விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டதால் புலிகள் என்ற அமைப்பு இறந்ததாக அர்த்தமில்லை. அந்த அமைப்பின் தற்போதைய தலைவராக கே பி இருப்பதாகவே கருதமுடியும்.

 

கே பிக்கு புலிகளின் தலைமையை எற்குமளவு தகுதி இன்னும் உள்ளதா சண்டமாருதன்.

 

 

Link to comment
Share on other sites

 

கே பிக்கு புலிகளின் தலைமையை எற்குமளவு தகுதி இன்னும் உள்ளதா சண்டமாருதன்.

 

 

இல்லை எண்டா நீங்கள் நினைக்கிறியள் சுமே?  அப்படியாயின் ஏன்??

Link to comment
Share on other sites

காலச் சக்கரத்தில் என்ன எழுதி இருக்கென்று வாசிக்கிறவருக்கே விளங்கேல்லைப் போல இருக்கு.

 

 

கே பிக்கு புலிகளின் தலைமையை எற்குமளவு தகுதி இன்னும் உள்ளதா சண்டமாருதன்.

 

தகுதியை பரிசோதிப்பதற்கு நாம் யார்?

 

அவர் புலிகளால் இறுதியாக முக்கிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர். அந்தவகையில் அவரையே புலிகள் இயக்கம் சார்ந்து தற்போதைக்கு தலமையாக நோக்கவேண்டியுள்ளது.

 

LTTE appoints Pathmanathan as head of international relations

[TamilNet, Friday, 30 January 2009, 23:51 GMT]

The leadership of the Liberation Tigers of Tamileelam (LTTE) has recently named Selvarasa Pathmanathan, a high profile representative of the movement, as the Head of a newly established Department of International Relations, sources close to the LTTE said on Saturday.

Mr. Pathmanathan will be representing the movement in any future peace initiatives and will be the primary point of contact for engaging with the international community, according to a letter sent to the various international actors by the LTTE's Department of International Relations.

Pathmanathan will be working abroad with required mandate from the LTTE leadership, according to the letter.

LTTE's Poltiical Head B. Nadesan, when contacted by TamilNet, confirmed that Mr. Pathmanathan has already begun corresponding with international actors

 

http://tamilnet.com/art.html?catid=13&artid=28224

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலங்களில் உண்மை பொய் ஒரு புறமிருக்க........ஊடகங்கள் எதை சொல்கின்றனவோ அதுதான்  தீர்ப்பாக மாறுகின்றது. ஆதாரமாகவும் காட்டப்படுகின்றது. படிப்பறிவுடன் வந்த ஊடகவிளார்கள் பகுத்தறிவில்லாமல் பதவிக்கு வந்ததின் விளைவுகள் கொஞ்சநஞ்சமல்ல.....

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.