Jump to content

ஓரினச்சேர்க்கை குற்றமா?


Recommended Posts

homosexuality-forum-300x225.jpgமுரண்பாடுகளை ஏற்பதுதான் கலாசாரம். நாகரிகமும்கூட. குடும்ப முறை வளர்ந்த பிறகுதான், முதல் பாலியல் தொழிலாளி உருவாகியிருக்கவேண்டும். அன்றிலிருந்து இன்று வரை பாலியல் தொழிலாளர்கள் கெட்டவர்களாகவே  பார்க்கப்படுகிறார்கள். குடும்ப முறை வளர்ந்த பிறகு, திருநங்கைகள் மனிதர்களாகப் பார்க்கப்படுவதில்லை. இவர்களை அருவருக்கத்தக்க மனிதர்களாக மாற்றிய பெருமை கலாசாரத்தையே சாரும்.

என்னைப் பொறுத்தவரை, ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு முரணானதோ, வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியதோ அல்ல. ஒத்த எண்ணம் கொண்ட இரு ஆணோ அல்லது பெண்ணோ தங்களுக்குள் ஏற்பட்ட விருப்ப உணர்வுகளை, சிற்றின்பத்தை மற்றவர்களுக்கு தெரியாத வகையில் அந்தரங்கமாக செய்கிற ஒரு விஷயம். அப்படி இருக்கும்வரையில் இதில் எந்த தவறும் இல்லை. ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்று உபநிஷதம் சொல்வதன்படி, எல்லாமே  இறைத் தன்மையின் வெளிப்பாடுகதான்!

பலரும் நினைப்பது போல் ஓரினச்சேர்க்கை என்பது வெளிநாட்டு இறக்குமதி அல்ல. நம் புராணங்களில், கோயில் சிற்பங்களில் பார்த்த நிகழ்வுகளை, கேட்டறியாத பல கதைகளை நாம் அறிந்திருந்தால், நம் எண்ணங்களை சற்று பரந்த மனதுடன் வரவேற்றிருப்போம். குறுகிய எண்ணத்தை விட்டொழித்தாலே பல தவறான சிந்தனைப் போக்குகள் நம்மைவிட்டு விலகியோடும்.

ஒரு கணவனும் மனைவியையும் போலவே ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் உறவைத் தங்களுக்குள் வைத்துக்கொள்ளும் பட்சத்தில் பிரச்னை எதுவுமில்லை. பொதுவிடங்களில் தவறாக நடக்கும்போது, அது கண்டிக்கப்படவேண்டிய தவறாக மாறுகிறது. இது ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பொருந்தக்கூடிய உண்மை. நாகரிகச் சமூகம் என்று சொல்லிக்கொண்டு, பேருந்துகளில் பெண்களை உரசுபவர்களை உத்தமர்கள் என்றா அழைக்கமுடியும்?

பால்ய விவாகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது அந்தக் காலகட்டத்துக்கு உகந்த ஓர் அமைப்பாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில், ஒரு மனிதனின் சராசரி வயது அப்போது 40. ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் மறுமணம் செய்யவேண்டிய அவசியமில்லாமல் இருந்திருக்கலாம். மருத்துவ உலகின் பல அறிய சாதனைகள் மனித வாழ்வை சராசரியாக 60-க்கு கொணர்ந்தபோது, ஒரு பெண் காலம் முழுக்க விதவையாக இருக்கலாமா என்ற கேள்வி மறுமணத்தை ஏற்றுக் கொண்டது. நேற்று வரை சரியாக இருந்த ஒரு விஷயம் இன்று தவறாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஓரினச் சேர்க்கையாளர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காத மனோபாவமும் நிச்சயம் ஒருநாள் வரும்.

ஓரினச்சேர்க்கை தவறு என்று சொல்பவர்கள் முன்வைக்கும் ஒரு வாதம், அது சந்ததி பெருக்கத்துக்கு உதவாது என்பது. சந்ததியைப் பெருக்கும் உறவு முறையே இயற்கையானது என்றும் இவர்கள் வாதிடுகிறார்கள். எனில், பிரம்மச்சாரிகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? குற்றவாளிகளாகவா? ஓரினச்சேர்க்கையாளர்களை வெறுப்பது போலவேதான் அவர்களையும் நீங்கள் வெறுக்கிறீர்களா? ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்து வைக்கிறோம். ஒருவேளை அவர்களால் குழந்தை பெற இயலவில்லை என்னும் பட்சத்தில் அவர்களை என்ன செய்யப்போவதாக உத்தேசம்?

ஓரினச்சேர்க்கை இன்று அதிகரித்து வருவதற்கு காரணம் 32  வயது வரை திருமணமாகாமல் இருக்கும் ஒரு நிலை. மேலும், சமூக வாழ்வில் இன்று ஆண்களும் பெண்களும் கல்லூரிகளிலும் விடுதிகளிலும் குழுக்களாக தங்கிப் படிக்கும் சூழலில், தங்களுக்குள் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முனைகிறார்கள். பதின் பருவத்தில் இயல்பாக எழும் காம உணர்ச்சியைத் தடை செய்துவிடமுடியுமா?

உண்மையில், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பான உறவு குறித்தும் பின் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அதே போல், அவர்களை வெறுப்பவர்களுக்கும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

 

http://www.tamilpaper.net/?cat=1058

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றமில்லை... அது, அவரவர் விருப்பம்.
மற்றவர்களின்... சுத்தந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.
இங்கு ஒரு முக்கிய அமைச்சர் தனது, பதவி ஏற்பு வைபவத்துக்கு, தனது ----- ஃபிரண்டை கோட், சூட்டுடன் கூட்டிக் கொண்டு வந்தவர். அதனை... ஒருவரும், பெரிதாக எடுக்கவில்லை.
ஏனென்றால்.... அவரிடம் திறமை உள்ளது.
"வல்லவன் வீழ்ந்ததும் இல்லை, ---- ----கெட்டதுமில்லை." :icon_idea:  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரினச்சேர்க்கை குற்றமா என்பதற்கு அப்பால் இது அசாதாரண மனித நடத்தை என்று தான் கொள்ள வேண்டும். இது இயற்கைக்கு மாறான ஒரு நடத்தைக் கோலம் எனலாம். சில ஜீன்கள் சார்ந்து..மூளையில் ஏற்படும் நரம்பியல் இரசாயன மாற்றங்களால் இந்த நிலை ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்லும் நிலையில் இவர்களைக் குற்றவாளிகளாகக் காண முடியாது. ஆனால் இயற்கைக்கு மாறானவர்கள் என்று சாதாரணமானவர்கள் ஒதுக்கி வைப்பதை தடுக்கவும் ஏலாது..! ஆனால் மனிதர்கள் என்ற வகையில் பிறப்புரிமைக் குறைபாடுள்ளவர்களை.. புறக்கணிப்பது சரியான செயல் அல்ல..! அந்த வகையில்... இவர்களைப் புறக்கணிக்க வேண்டியதில்லை. சேட்டை விட்டால் மட்டும்.. ஒட்ட நறுக்கி விடுவது நன்று..! குறிப்பாக பள்ளிகளில் மாணவர்களோடு ஆசிரியர்களாக உள்ள இவர்களில் சிலர் சேட்டைகளில் ஈடுபடும் முறைப்பாடுகள் இங்கு இங்கிலாந்தில் பிரச்சனைகளாகி வருகின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கு இப்படியானவர்களை கண்ணில் காட்டக் கூடாது. எனது நல்ல காலத்திற்கு இப்படியானவர்களை இதுவரை நேரிடையாக சந்திக்கும் நிலையை கடவுள் தரவில்லை..! கடவுளுக்கு நன்றி. :):icon_idea:

 

Link to comment
Share on other sites

--------- -----.அது அவரவர் விருப்பம் மற்றவர்களைதொந்தரவுசெய்யாதவரை.

Link to comment
Share on other sites

தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைக்குப் புரையேறியதால் குழந்தை இறந்தது. தாய்ப்பால் குடிக்கும்போது முலையில் மூக்கு அழுந்தியதால் மூச்சுத்திணறி குழந்தை இறந்தது. ஆதலினால் தாய்ப்பால் கொடுப்பதும் குழந்தைக்கு கெடுதியை விளைவிப்பதாக நியாயப்படுத்திக் கொள்ள முடியும்.

 

மேற்கூறிய நியாயத்தின்படியே ஓரினச்சேர்க்கையையும் நியாயப்படுத்தி வாழ்வியலைச் செப்பனிடலாம்.

''இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருக்க காய் கவர்ந்தற்று''

 

Link to comment
Share on other sites

பிறக்கும் போது  உறுப்புக்கள் ஊனமாக பிறக்கும் ஒருவரை இச்சமுதாயம் ஏற்றது போல் இவர்களையும் ஏற்க வேண்டும்.இவர்கள் பிறப்பிலேயே (பெரும்பாலும்) ஓரின சேர்க்கையாளர்களாகவே பிறக்கிறார்கள்.நாகரீக உலகில் இவர்களை ஏற்று திருமணம் செய்ய கூடி சட்டங்கள் வந்து விட்டன.
 
எனவே சமுதாயம் அவர்களை தண்டிப்பது நியாயமில்லை.சமுதாயத்தில் ஓரங்கமாக இவர்களை ஏற்க வேண்டும்.
 
பெண்களிடம் சேட்டை விடுபவர்களுக்கு என்ன தண்டனையோ அதே தண்டனையை சேட்டை விடும் இவர்களும் பெறுவார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கறுமமோ செஞ்சு முடியுங்கோ, சனம் இப்ப ஆடு மாடுகளை மட்டும் தான் விட்டுவைச்சிருக்கு . கொஞ்ச காலத்தால அதுக்கும் (கொடி) தூக்குவாங்கள்

 

Link to comment
Share on other sites

குற்றமோ குற்றமில்லையோ தெரியாது ஆனால் சகிக்க முடியாது என்று சொல்லலாம்.  2 பெண்கள் ஒருவர் மிக இளவயதிலேயோ திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றவர், மற்றப் பெண் இப் பெண்னின் நண்பியாம், இணையத்தள மூலம் அறிமுகம். இதில் ஒரு பெண் தனது பெற்றோர் சகோதரங்களோடு இருக்கின்றா அவ்வோடு தான் மற்றப் பெண்ணும் இருக்கின்றா. இருவரும் பழகும் விதம் என்னவோ ஒரு சந்தேகத்தைதைத் தருக்கின்றது. உண்மையான நட்ப்பா அல்லது ஓரினச் சேர்க்கையா யாரறிவர்?  ஆண்டவா மன்னித்துவிடு  இருவரும் நண்பிகளாயின். இருவரும் தமிழ்ப் பெண்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபால் உறவை சட்ட ரீதியாக அனுமதித்துள்ள மேற்குநாடுகளில் இருந்தும் இதுபோன்ற விடயங்கள் பெரும்பான்மையான தமிழர்களுக்கு பேசாப் பொருளாகத்தான் இருக்கின்றது.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்களை சமூகத்தில் இருந்து விலக்கிப் பார்ப்பதால்தான் பல துஸ்பிரயோகங்கள் நடைபெறுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் சீனாவிலும் இந்தியாவிலும்

ஓரினச் சேர்க்கையாளர்களை  ஊக்குவிக்க வேண்டும்

 

சனத்தொகைப் பெருக்கம்  தாங்க முடியலையடா சாமி :D

 

 

Link to comment
Share on other sites

இன்றைய நிலையில் சீனாவிலும் இந்தியாவிலும்

ஓரினச் சேர்க்கையாளர்களை  ஊக்குவிக்க வேண்டும்

 

சனத்தொகைப் பெருக்கம்  தாங்க முடியலையடா சாமி :D

 

சுப்பண்ணையின் பின்னூட்டத்தையும் சிறிது ஊன்றிக் கவனிப்பது நல்லது.

 

 

என்ன கறுமமோ செஞ்சு முடியுங்கோ, சனம் இப்ப ஆடு மாடுகளை மட்டும் தான் விட்டுவைச்சிருக்கு . கொஞ்ச காலத்தால அதுக்கும் (கொடி) தூக்குவாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் சொல்வார்கள்

காய்ஞ்சமாடு

கம்பில  விழுந்ததுபோலென்று.

 

இதைத்தான் அப்படி சொன்னார்களோ என்று நினைப்பதுண்டு.

ஆனால்  காய்ந்து கிடந்தபோது சாப்பிட்டதை

பச்சைப்புல்லும் 

தளிரும்

இலைகுழைகளும் செளிப்பாக இருக்க

காத்திருக்க

தொடர்ந்து  காய்ஞ்சபோது தின்றதைத்தான் சாப்பிடுவேன் என்பது ஒருவித மனநோய்தானே

அது தான் மேற்கத்திய  நாட்டவர்

இவர்களை  மன நோய் போன்றே கருதி

அதை ஏற்கின்றனர்.

 

இது தப்பா இல்லையா  என்றால்

காய்ஞ்சபோது 

தப்பில்லாது  இருந்திருக்கலாம்

அதைத்தொடர்வது

சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கும்  உகந்ததல்ல என்ற போது தப்புத்தான்.

 

Link to comment
Share on other sites

ஊரில் சொல்வார்கள்

காய்ஞ்சமாடு

கம்பில  விழுந்ததுபோலென்று.

 

இதைத்தான் அப்படி சொன்னார்களோ என்று நினைப்பதுண்டு.

ஆனால்  காய்ந்து கிடந்தபோது சாப்பிட்டதை

பச்சைப்புல்லும் 

தளிரும்

இலைகுழைகளும் செளிப்பாக இருக்க

காத்திருக்க

தொடர்ந்து  காய்ஞ்சபோது தின்றதைத்தான் சாப்பிடுவேன் என்பது ஒருவித மனநோய்தானே

அது தான் மேற்கத்திய  நாட்டவர்

இவர்களை  மன நோய் போன்றே கருதி

அதை ஏற்கின்றனர்.

 

இது தப்பா இல்லையா  என்றால்

காய்ஞ்சபோது 

தப்பில்லாது  இருந்திருக்கலாம்

அதைத்தொடர்வது

சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கும்  உகந்ததல்ல என்ற போது தப்புத்தான்.

 

விசுகு தவறான பார்வை இது.

 

உங்கள் பார்வை முழுக்க முழுக்க பாலுறவு சம்பந்தமானதாக மட்டுமே இருக்கு. ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் முடிப்பதற்கு வெறுமனே பாலுறவு மட்டுமே காரணம் என்று சொல்வது எவ்வளவு தவறோ அதேப் போன்றுதான் இதுவும். உடலுறவுக்கு அப்பாலும் அன்பும், காதலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடத்தலும் போன்றன உள்ளன.

 

ஓரினச் சேர்க்கையும் வெறுமனே பாலுறவு சார்ந்த ஒன்று மட்டுமல்ல. ஒருவரின் தேடல் தொடர்பானது.  எதிர்பால் கிடைக்காமையால், தனக்கு உருவான காமத்தினை திருப்தி படுத்த அதே பாலிடம் செல்வது வேறு, தன் பாலினத்தின்மைச் சேர்ந்த ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்வது வேறு. இரண்டாவதில் காமம் மட்டுமே காரணம் அல்ல.

 

தான் அவ்வாறு இல்லை என்பதற்காகவும், சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கின்றார்கள் என்பற்காகவும் ஒரு விடயத்தினை எப்படி சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கு தீங்கானது என்று தீர்மானிக்கின்றீர்கள்?

 

இந்த பரந்த விரிந்த உலகில் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காத, தமக்கு விரும்பிய  அனைத்து செயல்களுக்கும் பெறுமதி உண்டு. அந்த செயல்களைச் செய்வதற்கான உரிமையும், வசதியும் கண்டிப்பாக கொடுக்கப்படல் வேண்டும்.

 

தனிப்பட்ட ரீதியில் நான் ஓரினச்சேர்க்கையாளன் இல்லை. இருபாலின சேர்க்கையாளனும் இல்லை. ஆனால் என் பிள்ளைகளில் ஒருவர் அப்படி ஆனாலும் அதற்காக கவலைப்படப் போவதில்லை.

Link to comment
Share on other sites

ஊரில் சொல்வார்கள்

காய்ஞ்சமாடு

கம்பில  விழுந்ததுபோலென்று.

 

இதைத்தான் அப்படி சொன்னார்களோ என்று நினைப்பதுண்டு.

ஆனால்  காய்ந்து கிடந்தபோது சாப்பிட்டதை

பச்சைப்புல்லும் 

தளிரும்

இலைகுழைகளும் செளிப்பாக இருக்க

காத்திருக்க

தொடர்ந்து  காய்ஞ்சபோது தின்றதைத்தான் சாப்பிடுவேன் என்பது ஒருவித மனநோய்தானே

அது தான் மேற்கத்திய  நாட்டவர்

இவர்களை  மன நோய் போன்றே கருதி

அதை ஏற்கின்றனர்.

 

இது தப்பா இல்லையா  என்றால்

காய்ஞ்சபோது 

தப்பில்லாது  இருந்திருக்கலாம்

அதைத்தொடர்வது

சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கும்  உகந்ததல்ல என்ற போது தப்புத்தான்.

 

ஊரில் சொல்வார்கள்

காய்ஞ்சமாடு

கம்பில  விழுந்ததுபோலென்று.

 

 

இதற்கு பொருள் புரியவில்லை புரிய வைக்கவும். அடுத்தது ஓரின சேர்க்கையாளரகள்    இவர்களை மன நோயாளர்கள் என  நாம் நினைப்பது  எமது மனநோய் . அதை விட மேலை நாட்டவர்ககள்  இதனை மன நோயாக பார்ப்பதில்லை  அது தவறு . இவர்களை முதலுரிமை கொடுத்து  அவர்களை அன்போடு அரவணைப்பவர்களாக  இருக்கிறார்கள். இவர்களும்  பிறப்பால்  மாற்று திறனாளிகளை போன்றவர்கள். அதே போலத்தான் பெண்களும்.   எம்மால் இலகுவாக இரண்டும் கெட்டான் என ஒதுக்கப்பட்டு  அலிகள் என அழைக்கப்பட்ட   திரு நங்கைகள்.   அவர்களை  பார்க்கும் பார்வை

Link to comment
Share on other sites

இயற்க்கைக்கு முரணான இந்த உறவு கண்டிப்பா குற்றமே.....கறுமம் பிடிச்சதுகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்க்கைக்கு முரணான இந்த உறவு கண்டிப்பா குற்றமே.....கறுமம் பிடிச்சதுகள்....

சிலம்பாட்டம் தப்பா பாஸ்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலம்பாட்டம் தப்பா பாஸ்  :D

 

இது.. சிலம்பாட்டமா? கோலாட்டமா?

Link to comment
Share on other sites

ஆறறிவுள்ள இரண்டு பேர் சேர்ந்து எதை வேண்டுமானாலும் செய்யலாம்.. ஆடு, மாடுகளை வற்புறுத்துவதுதான் தவறு.. :D ஏனென்றால் அவைகளால் ஒரு "மே..".. இதைத்தவிர வேறு ஒன்றையும் கூறி அலற முடியாது அல்லவா? :icon_idea:

 

மற்றது.. ஒருபாலினர் கூடி வாழ்தலை "திருமணம்" என்று அங்கீகரிக்கிறார்கள்.. இதில் எனக்கு நூறு வீதம் உடன்பாடு உள்ளதுமாதிரி தெரியவில்லை.. வேறு பெயரில் அழைக்கலாம்.. ஏனென்றால் இன்று இரு ஒருபாலினர் கூடி அதை திருமணம் என்பர்.. நாளைக்கு ஆறுபேர் கூடியிருந்து அதையும் திருமணம் என்று அங்கீகரிக்கச்சொல்லிக் கேட்டால் எங்கே போய் முட்டுவார்கள்? :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு தவறான பார்வை இது.

 

உங்கள் பார்வை முழுக்க முழுக்க பாலுறவு சம்பந்தமானதாக மட்டுமே இருக்கு. ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் முடிப்பதற்கு வெறுமனே பாலுறவு மட்டுமே காரணம் என்று சொல்வது எவ்வளவு தவறோ அதேப் போன்றுதான் இதுவும். உடலுறவுக்கு அப்பாலும் அன்பும், காதலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடத்தலும் போன்றன உள்ளன.

 

ஓரினச் சேர்க்கையும் வெறுமனே பாலுறவு சார்ந்த ஒன்று மட்டுமல்ல. ஒருவரின் தேடல் தொடர்பானது.  எதிர்பால் கிடைக்காமையால், தனக்கு உருவான காமத்தினை திருப்தி படுத்த அதே பாலிடம் செல்வது வேறு, தன் பாலினத்தின்மைச் சேர்ந்த ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்வது வேறு. இரண்டாவதில் காமம் மட்டுமே காரணம் அல்ல.

 

தான் அவ்வாறு இல்லை என்பதற்காகவும், சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கின்றார்கள் என்பற்காகவும் ஒரு விடயத்தினை எப்படி சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கு தீங்கானது என்று தீர்மானிக்கின்றீர்கள்?

 

இந்த பரந்த விரிந்த உலகில் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காத, தமக்கு விரும்பிய  அனைத்து செயல்களுக்கும் பெறுமதி உண்டு. அந்த செயல்களைச் செய்வதற்கான உரிமையும், வசதியும் கண்டிப்பாக கொடுக்கப்படல் வேண்டும்.

 

தனிப்பட்ட ரீதியில் நான் ஓரினச்சேர்க்கையாளன் இல்லை. இருபாலின சேர்க்கையாளனும் இல்லை. ஆனால் என் பிள்ளைகளில் ஒருவர் அப்படி ஆனாலும் அதற்காக கவலைப்படப் போவதில்லை.

 

இது கருத்தாடல் முறையில் நியாயங்களாக பட்டாலும்....இயற்கையான வாழ்வுமுறைக்கு ஒருபோதும் ஒருங்கிணைய மாட்டாது. இயற்கைக்கு செய்யும் துரோகங்களில் இதுவுமொன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையில் இன்னொரு ஆணோடு உறவு கொள்ளாத ஆண்களும்........

இன்னொரு  பெண்ணுடன் உறவு கொள்ளாத பெண்களும்தான்..........
இதை தவறு என்று சொல்கிறார்கள்.
 
இயற்கையின்பால்........... ஆண்களும் பெண்களும் நேர் எதிரானவர்கள்.
ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்தே. ஒரு நாள் எனும் முழுமை ஏற்படுகிறது.
இருளும் ஒளியும் ஒரு முழுமையாகிறது......
மைனஸ் பவருடன் பொசிடிவ் பவர் கலக்கும்போதே மின்சாரம். அல்லது ஒரு சக்தி கிடைக்கிறது.
 
ஒரு எதிரும் + ஒரு மறையும் = ஒரு முழுமை 
இது இயற்கையாக இருந்து வந்துள்ளது.
 
இப்போது மனிதன் இயற்கையாக இல்லை. கிட்டதட்ட 20 வருடம் கழித்து ஒரு செவ்வாய் கிழமையில் நான்  என்ன செய்துகொண்டிருப்பேன்? என்று ஒரு திகதியை தொட்டு பார்த்தால். 75% நான் வேலையில் இருப்பேன் என்று சொல்லகூடியதாக இருக்கிறது.  மனிதன்  இயந்திரம் ஆகிவிட்டான். மனங்கள் இரும்புகள் ஆகி வருகின்றன.
60-70 வயதுகளில் பாலியல் சம்பந்தமான விடயங்களில் ஒரு தளர்ச்சி நிலை ஏற்பட்டு மனிதன்  தனது குடும்பம் கோவில் என்று இருந்த நாட்கள் இல்லாது போய்விட்டது .
வயாக்கிராவை போட்டுவிட்டு 18-19 வயது இளம் குமரிகளுக்கு வலை விரிக்கிறார்கள் தாத்தாக்கள்.
இரவு சாட்ரூமில் சந்திச்சு 
மறுநாள் மாலை ரெஸ்ட் ருரண்டில் சந்திச்சு 
இரவு கட்டிலுக்கு போய்.
ஞாஜிறு காலை டாட்ட சொல்லி விட்டு போகிறார்கள்.
 
நாகரிக வளர்ச்சி என்று பெண்களை வியாபார பொருட்கள் ஆக்கி வீதி எங்கும் கட்டவுட் வைத்து  வருகிறார்கள். நாளும் நாளும் இந்த வீதிகளில் நடந்தே ஒரு ஆண் வளருகிறான்.
போன போக்கில் தனது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்ள ஒரு பெண்ணை தேடுகிறான். பெண்ணும் அதே நிலை.
இதற்குள் நாகரிக உலகம் தந்திரமாக கற்று கொடுத்த 
ஐ லவ் யூ ஹொனி ............. சீனி............. சர்க்கரை. போன்ற வார்த்தைகளை கொண்டு சில காலம்  உறவை தக்க வைத்து கொள்கிறார்கள்.
இதற்கு முன்பே அட இவளவுதானா? என்று பாலியல் விடயங்களில் சலித்து போகிறார்கள்.
வறுமையான அல்லது வெறுமையான உறவை தக்க வைக்க சிலர் விடாது போராடுகிறார்கள். சிலர் என்ன உயிரா போகிறது என்று கிளம்பி விடுகிறார்கள்.
 
ஆண்களுக்கு அலட்டுவது பிடிக்காது 
பெண்களுக்கு அலட்டுவதே பிடிக்கும்.
 
காலபோக்கில் ஒரு பெண் ஒய்யாரமாக இன்னொரு பெண்ணின் மடியில் கதை பேச தலை சாய்கிறாள்.
ஏமாற்று காசு திருட்டு அழகு என்ற ஆணவம் எல்லாம் உள்ள பெண்ணை விட்டு விலகி ஒரு ஆண்  உண்மையுடன் இன்னொரு ஆணுடன் கை கோர்கிறான்.
 
இதில் தவறு என்று சொல்ல ஒன்றும் இல்லை. மனித வாழ்வு திசை மாறி போய்விட்டது. இயற்கையில் இருந்து பிரிந்து  செயற்கை என்று ஆகிவிட்டது.
உண்மை என்று இப்போதும் உலகில் இருப்பது "மரணம்" ஒன்றுதான். மனித உடலுக்குள் இரும்புகள் கம்பிகளை  சொருக தொடங்கி விட்டார்கள். கால் போக்கில் அதுகும் இல்லது போனால்.
உண்மை இல்லாத உலகில்............ எதை பொய் என்று சொல்லி வாதாடுவது????
நானே ஒரு பொய் ......... அடுத்தவனை பார்த்து எப்படி பொய்யன் என்று சொல்வது??

 

Link to comment
Share on other sites

ஆணுக்கு பெண் ....பெண்ணுக்கு ஆண் ...அதாவது ஒருவனுக்கு ஒருத்தியாக  இறைவன் படைத்தான் .............வாழ்வியல்[ பாலியலும் உள்ளடக்கப்பட்ட]] சம்பந்தமாக அவளே அவனுக்கும் ,அவனே அவளுக்கும் துணையாயிருப்பார்கள்  என எதிர்பார்த்தார்.....ஆனால் பாவிமனிசாங்கள்     இறைவன் எதிர்பார்த்த அந்த ஒருமையை மாற்றி பன்மையாக்கிவிட்டார்கள் ...............இறைவனும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார் ..ஆனால் மனிதனின் வேகம் கூடியதே தவிர குறையவில்லை .இதனால் இறைவனே இந்த விடயத்தில் ஒதுங்கிவிட்டார் .................அப்புறம் நாமும் ஒதுங்கி இருப்பதே நல்லது ...........மனிசான் செய்யும் ஒவ்வொன்றும் பின்னால் அவனே அனுபவிப்பான் ...............

 

மரணசடங்கிற்கு போகும் ஒவ்வொருமுறையும் எனக்குள்ளே எழும் கேள்விகள் பல .............[ ஆணவமும்,அதர்மமும் ,அட்டகாசமும் அடங்கி போர்த்துப்படுத்திருப்பதை காணுவேன் ,]

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு தவறான பார்வை இது.

 

உங்கள் பார்வை முழுக்க முழுக்க பாலுறவு சம்பந்தமானதாக மட்டுமே இருக்கு.

 

உண்மைதான் நிழலி

எனக்கு மட்டுமல்ல  பலருக்கும் அதுதானே முதலில் ஞாபகம் வருகிறது.

அத்துடன் அது  இல்லாமல் எப்படி அன்பு வரமுடியும்? (இப்படி இன்னொரு திரியில் நீங்களே  கேட்டதாக ஞாபகம்??)

 

 

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் முடிப்பதற்கு வெறுமனே பாலுறவு மட்டுமே காரணம் என்று சொல்வது எவ்வளவு தவறோ அதேப் போன்றுதான் இதுவும்.    உடலுறவுக்கு அப்பாலும் அன்பும், காதலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடத்தலும் போன்றன உள்ளன.

 

ஓரினச் சேர்க்கையும் வெறுமனே பாலுறவு சார்ந்த ஒன்று மட்டுமல்ல. ஒருவரின் தேடல் தொடர்பானது.  எதிர்பால் கிடைக்காமையால், தனக்கு உருவான காமத்தினை திருப்தி படுத்த அதே பாலிடம் செல்வது வேறு, தன் பாலினத்தின்மைச் சேர்ந்த ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்வது வேறு. இரண்டாவதில் காமம் மட்டுமே காரணம் அல்ல.

 

எனக்கு அது தான் ஞாபகம் வருகிறது

அத்துடன் ஒரு அசிங்கமாக  வாந்தி  வருவதுபோல் ஒரு மனநிலை வருகிறது

நான் என்ன  செய்யட்டும்??? 

 

தான் அவ்வாறு இல்லை என்பதற்காகவும், சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கின்றார்கள் என்பற்காகவும் ஒரு விடயத்தினை எப்படி சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கு தீங்கானது என்று தீர்மானிக்கின்றீர்கள்?

 

இந்த பரந்த விரிந்த உலகில் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காத, தமக்கு விரும்பிய  அனைத்து செயல்களுக்கும் பெறுமதி உண்டு. அந்த செயல்களைச் செய்வதற்கான உரிமையும், வசதியும் கண்டிப்பாக கொடுக்கப்படல் வேண்டும்.

 

உங்களது இந்த மனநிலைக்கே நான் விருப்பு வாக்கு போட்டேன்.

ஆனால் இதில் மாற்றுக்கருத்து எனக்குண்டு.

அதாவது  எல்லாவற்றையும் ஏற்கணும் அங்கீகரிக்கணும் என்று வெளிக்கிட்டால மனித வாழ்க்கை  என்பது ஒரு கட்டத்தில் ஒழுங்கு முறைக்குள் வராத பொருளாகிவிடும்.  அத்துடன் சமீபகாலமாக பிரான்சில் அதிகம பேசப்படும் இந்த விடயத்தை பார்த்தபோது இதில் பல தொடர் விளைவுகள் உண்டு. முக்கியமாக பிள்ளை  பெறுதல்.  வளர்த்தல். மற்றும் பிள்ளைகளை தத்தெடுத்த வளர்த்தல்.........................................

அதனால் அந்த பிள்ளைகள் வாழ்வில் வரக்கூடிய  அவலங்கள்.

 

தனிப்பட்ட ரீதியில் நான் ஓரினச்சேர்க்கையாளன் இல்லை. இருபாலின சேர்க்கையாளனும் இல்லை. ஆனால் என் பிள்ளைகளில் ஒருவர் அப்படி ஆனாலும் அதற்காக கவலைப்படப் போவதில்லை.

 

இது முக்கியமானது நிழலி.

உங்களது இந்த நிலைக்கும்  சேர்த்தே விருப்பு வாக்கு.

ஆனால்

நான் இதற்கு முதல் தலைமுறையைச்சேர்ந்தவன்.

என்னுடைய  மகன் ஒரு பெண்ணைக்காதலிப்பதையே  ஏற்கமுடியாத நிலையில் தான் என் மனம் இன்றும் உள்ளது.

இந்தநிலையில் எனது பிள்ளையை  ஓரினச்சேர்க்கை..............???

நடக்கிற விடயமா............???

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓரினச்சேர்க்கை இன்று அதிகரித்து வருவதற்கு காரணம்

1- 32  வயது வரை திருமணமாகாமல் இருக்கும் ஒரு நிலை. 

2- மேலும், சமூக வாழ்வில் இன்று ஆண்களும் பெண்களும் கல்லூரிகளிலும் விடுதிகளிலும் குழுக்களாக தங்கிப் படிக்கும் சூழலில், தங்களுக்குள் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முனைகிறார்கள்.

3- பதின் பருவத்தில் இயல்பாக எழும் காம உணர்ச்சியைத் தடை செய்துவிடமுடியுமா?

 

 

ஊரில் சொல்வார்கள்

காய்ஞ்சமாடு

கம்பில  விழுந்ததுபோலென்று.

 

 

இதற்கு பொருள் புரியவில்லை புரிய வைக்கவும்.

 

உங்களது முதலாவது கேள்விக்கு திரியில் பதிலிருக்கு சாத்திரி.

 

அடுத்தது ஓரின சேர்க்கையாளரகள்    இவர்களை மன நோயாளர்கள் என  நாம் நினைப்பது  எமது மனநோய் .

இவ்வாறு எழுதிவிட்டு

 

அதை விட மேலை நாட்டவர்ககள்  இதனை மன நோயாக பார்ப்பதில்லை  அது தவறு . இவர்களை முதலுரிமை கொடுத்து  அவர்களை அன்போடு அரவணைப்பவர்களாக  இருக்கிறார்கள். இவர்களும்  பிறப்பால்  மாற்று திறனாளிகளை போன்றவர்கள்.

 

மாற்றுதிறனாளிகள் என்கிறீர்கள்

இரண்டுக்கும் என்ன  வித்தியாசம்  சாத்திரி?????

 

அதே போலத்தான் பெண்களும்.   எம்மால் இலகுவாக இரண்டும் கெட்டான் என ஒதுக்கப்பட்டு  அலிகள் என அழைக்கப்பட்ட   திரு நங்கைகள்.   அவர்களை  பார்க்கும் பார்வை

 

Link to comment
Share on other sites

ஈழத்தில் குரக்கன் என்று சொல்வதைத்தான் தமிழகத்தில் கம்பு என்று சொல்வார்கள் என நினைக்கிறேன்.. அதாவது பசியால் காய்ந்துபோன மாடு குரக்கன் வயலுக்குள் போய் விழுந்தமாதிரி.. இதை காய்ந்துபோன வெளிநாட்டு மாப்பிளைகள் நினைவில் வைத்திருப்பது நல்லது.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.