Jump to content

வாழ்வின் துன்பங்களும் கடவுளின் இருப்பும் யதார்த்த சம்பவங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வின் துன்பங்களும் கடவுளின் இருப்பும் யதார்த்த சம்பவங்களும்
இக்பால் செல்வன்
 
 

628x471.jpg


மனித மனம் மிகவும் சக்தி வாய்ந்தது அதே சமயம் பலவீனமானதும் கூட. மனம் என்பதில் இருந்து தான் இன்றைய உலகின் அனைத்து விடயங்களும் உருவாக்கம் பெற்றன. நாம் அன்றாடம் சுகிக்கும் ஒவ்வொரு பொருள்களும் மனித மனதில் இருந்து தோன்றியவை. ஆனால் உலகில் பெரும்பங்கான மனிதர்களின் மனம் கோணலாகவும், விரிவடையாமலும், சுருங்கியும் கிடக்கின்றன. 
 
மனித இனம் உணர்ச்சி வசப்படக் கூடிய ஒரு இனமாகவும் இருக்கின்றது. பல விடயங்களைக் கண்டு அஞ்சும் தன்மையது. குறிப்பாக நாம் அறியாத விடயங்களை எண்ணி கடுமையாக பயப்படுகின்றோம். தெரியாதவற்றை தெரிந்தவைகளை இட்டு நிரப்பி கற்பனை செய்து கொள்கின்றோம். குறிப்பாக துன்பங்கள் ஏற்படும் போது, மனித மனம் தனது இயல்பான சிந்தனை ஆற்றல்களை இழந்து விடுகின்றது. 
 
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் எண்ணற்ற துன்பங்களை சந்திக்கின்றோம், அவற்றில் சிலவற்றை சுயமாகவோ, பிற துணையோடும் கடந்து விடுகின்றோம். சில சமயங்களில் அவற்றை கடக்க கடுமையாக துன்பப் படுகின்றோம், கடுமையாக முயல்கின்றோம். அச் சமயங்களில் மனம் நிதானித்து இருப்பதில்லை, எளிய வழிமுறைகளைத் தேடும். எதைக் குடித்தால் பித்தம் தீரும் என கண்களில் தென்படும் எவ் வகை தீர்வுகளையும் முயற்சி செய்ய யத்தனிப்போம். 
 
வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தவை என பண்டைய சான்றோர்கள் எண்ணினார்கள். அவை மனம் சார்ந்தவை, உடல் சார்ந்தவை என வகைப்படுத்தினார்கள். ஆனால் இத் துன்பங்களை தீர்க்கும் வழிமுறைகளில் தான் ஒவ்வொருவரும் ஒரு நிலைப்பாட்டைக் தத்தமது அனுபவங்கள் ஊடாக முன்வைத்தனர். உதாரணத்துக்கு புத்தரோ பற்று நிலையே துன்பத்துக்குக் காரணம் என்றார், பற்றுக்களை துறக்க வலியுறுத்தினார். 
 
கிரேக்க தத்துவஞானியான எபிகுருசு துன்பங்களை அகற்றத் தொடங்குவதன் மூலம் இன்பங்களை பெறலாம் எனக் கூறினார். துன்பங்களின் வேர்களைத் தேடி அறிவின் ஊடாக அவற்றை அகற்றக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.   பிரிடரிக் நீட்சே என்ற பிரஞ்சு மெய்யியலாளர் துன்பங்களை மிகவும் நல்லது எனவும், அது வாழ்வினை உறுதிப்படுத்தவும், மன வலிமையை கூட்டவும் பயன்படுகின்றது என முற்றாக மாற்றுக் கருத்தை முன் வைக்கின்றார். 
 
ஆனால் சில மத நிறுவனர்களோ, கடவுளை வணங்குவதால், கடவுளிடம் சரண்டைவதால் துன்பங்களை தீர்க்க இயலும் என்றார்கள். இத்தகைய துன்பமான நிலையில் தான் மூட நம்பிக்கைகள் உள் புகுகின்றன. எளிய மனிதர்களின் துன்பங்களை பயன்படுத்தி நல்ல விளைச்சலை அறுவடை செய்யவே ஒரு ஒருங்கியம் (System) இன்றளவும் செயல்பட்டு வருகின்றது.  
 
இத்தகைய ஒருங்கியங்கள் மதங்கள், நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், மரபுகள், பாரம்பரியங்கள் என்ற பெயரில் சமூகத்தில் நீடித்து வருகின்றன. விளிம்பு நிலை மனிதர்களும், ஏழை எளியோர்களும், இயலாதோரும் தமது துன்பங்களுக்கு காரணங்கள், காரியங்கள், விடுதலைகள் அனைத்துக்கும் மூட நம்பிக்கைகளில் சரணாகதி அடையச் செய்ய வைக்கப்படுகின்றார்கள். இது வரைக் காலமும் உலகின் துன்பங்களை இத்தகைய மூட நம்பிக்கைகள் சார்ந்த ஒருங்கியத்தின்  (System) ஊடாக தீர்வு கிடைத்ததாக நான் அறிந்திருக்கவில்லை, தற்கால மன அமைதியை வேண்டுமானால் கிடைக்கலாம். அல்லது தீர்வு எட்டப்பட்டதாக போலியாக நம்ப வைக்கப்படலாம். ஆனால் உண்மையான தீர்வை ஒரு போதும் எட்டப்படுவதே இல்லை. 
 
இவ்வாறு தான் அமண்டா பெறி என்ற 16 வயது சிறுமி ஏப்ரல் 21, 2003-ஆம் ஆண்டு காணாமல் போனார். அதன் பின்னர் அவளை அவளது தாயார் லுவானா மில்லர் தேடாத இடமில்லை, வணங்காத தெய்வமில்லை. அவை ஏன் தமது மகள் உயிரோடு உள்ளாரா இல்லையா என்பதைக் கூட அறியாமல் இறுதியாக ஒரு குறி சொல்லும் சோதிடப் பெண்மணியிடம் சென்றார். சில்வியா பிரவுன் என்ற அந்த குறி சொல்பவளோ, மில்லரின் மகள் உயிரோடு இல்லை எனக் கூறி விட்டாள். அதனைக் கேட்டு மனமுடைந்த மில்லரோ 2006-ஆம் ஆண்டு இறந்து போனார். 
 

Kidnappers-1874966.jpg
காஸ்ற்ரோ சகோதரர்கள்

ஆனால் உண்மையில் என்ன நடந்தது தெரியுமா, அமண்டாவையும், மேலும் இரு பெண்களையும் 54 வயதுடைய பெட்ரோ காஸ்ற்ரோ மற்றும் அவரது சகோதரர்கள் ஏரியல் காஸ்ற்ரோ, ஒனில் காஸ்ற்ரோ ஆகியோரும் கடத்தி ஒரு வீட்டில் பத்தாண்டுகளாக அடைத்து வைத்துள்ளனர். அத்தோடு நிறுத்தாமல் அவர்களை தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியும், உடல் மற்றும் உள்ளத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளனர். 
 
கடந்த வாரம் இந்த பெண்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்த செய்தி அமெரிக்காவின் கிளிவ்லாந்து பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இந்த மூவரும் சமூகத்தில் நல்ல மனிதர்கள் என்ற முகமூடி இட்டு ஏமாற்றியும் உள்ளனர். சொல்லப் போனால் காணாமல் போன பெண்களை தேடும் பணியிலும், அதற்கு தேவையான பணம் வசூலிக்கும் நிகழ்ச்சியிலும் கூட பங்கேற்றுள்ளனர். அதில் அமண்டா பெறிக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது, அக் குழந்தைக்கு ஆறு வயதும் ஆகி உள்ளது என்பது தான் கொடுமை. 
 
சுற்றத்தார் சிலருக்கு இவர்கள் மீது சந்தேகங்கள் இருந்த போதும், யாரும் பெரிதாக சாட்டை செய்யவில்லை. அத்தோடு காவல்துறையினரின் கண்களில் கூட மண் தூவப் பட்டு இத்தனைக் காலமும் இந்த இளம் பெண்களை வீட்டுச் சிறைப் படுத்தி உள்ளனர் இந்த கயவர்கள். 

 

கடவுள் தீமைகளை அழிக்க விரும்பகிறவர், ஆனால் அவரால் முடியவில்லை என்கிறீர்களா?



அப்படியானால் அவர் வல்லமை அற்றவர்.



அவரால் முடியும், ஆனால் விரும்பவில்லை என்கிறீர்களா?



அப்படியானால் கடவுள் கருணை அற்றவர்.



விருப்பமும் வல்லமையும் கொண்டவர் என்கிறீர்களா?



அப்படியானால் தீமை எங்கிருந்து வருகின்றது?



வல்லமை கருணை இரண்டுமே அற்றவர் என்கிறீர்களா?



பிறகு ஏன் கடவுள் என்று (ஒன்று இருப்பதாக) கூறிக்கொள்ள வேண்டும்?



- எபிகுருசு



உலகில் இவ்வாறான சம்பவங்கள் ஏன் நடக்கின்றன, இந்த பெண்களுக்கு துன்பங்கள் ஏற்படாமலோ, துன்பம் ஏற்பட்ட போது காப்பாற்றாமலோ இருந்த கடவுளை இன்னமும் நாம் நம்பத் தான் வேண்டுமா? உயிருடன் துன்பப் பட்ட பெண் இறந்து விட்டாள் எனக் கூறிய சோதிடத்தை என்ன செய்யலாம் ?
 
இவை எல்லாம் கடவுளின் சித்தம் என்றோ, எல்லாம் அவர்களின் தலை விதி என்றோ பிற்போக்குத் தனம் பேசுபவர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த பெண்கள் உங்களின் மகளாகவோ, சகோதரியாகவோ, ஏன் நீங்களாகவோ இருந்தால் கூட இவ்வாறு தான் பேசுவீர்களா ?!!


 
 
http://www.kodangi.com/2013/05/cleveland-kidnap-victims-amanda-berry-and-existence-of-pain-and-god.html
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளை  நொந்து  என்ன  பலன்???

 

இந்த மூன்றையும் போடும்  வகையில் மற்றவரெல்லாம் தெளிவாகணும்.............

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்று கோயிலுக்குப் போகும் வழியில் திருப்பம் ஒன்றில் மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளானார்கள். வாகனத்தில் பயணம் செய்தவர்கள் அனைவருமே மிகச்சிறிய காயங்களுடன் தப்பிக் கொண்டனர். வாகனம் தீரும்பவும் சேவையில் ஈடுபடுத்த முடியாதபடி சேதமடைந்திருந்தது.

 

வாகனத்தில் இருந்து காயமெதுவுமின்றி தப்பிக்கொண்ட பெரியவர; சொன்ன வசனம் இது நல்ல வேளை கடவுள் புண்ணியத்திலை ஆபத்தில்லாமல் தப்பீட்டம்.

 

என்னுடைய கேள்வி காப்பாற்றியது கடவுளன்றால் மோத வைத்தது யார்?

 


 

Link to comment
Share on other sites

எடுத்த எடுப்பி்ல் மூன்றுபேரையும் போட நினைப்பதற்கு அமரிக்கா ஒன்றும் தமிழ் சிந்தனை முறையை கொண்டிருக்கவில்லை. அதில் இரண்டு சகோதரர்கள் மீது குற்றம் பதிவுசெய்யப்படவில்லை.

 

 

Link to comment
Share on other sites

போட நினைப்பது தமிழ் சிந்தனை முறை என்பதை வன்மையாக கண்டிக்கின்றேன் .அது குறிப்பிட்ட ஒரு தமிழ் கூட்டதிற்கு   உரித்தானது மட்டுமே .

Link to comment
Share on other sites

போட நினைப்பது தமிழ் சிந்தனை முறை என்பதை வன்மையாக கண்டிக்கின்றேன் .அது குறிப்பிட்ட ஒரு தமிழ் கூட்டதிற்கு   உரித்தானது மட்டுமே .

 

ஏன் ரெலோ பொபி தாஸ் என்று போட்டுத்தள்ளவில்லையா? புளட் உள்ளுக்குள் போட்டுத்தள்ளவில்லையா? இல்லை ஏனைய இயக்கங்கள் தான் மாறி மாறி போட்டுத்தள்ளவி்ல்லையா? கூடுதலாக போட்டுத்தள்ளியவன் தலையில் எல்லாக் குற்றங்களை இனத்தின் காட்டுமிராண்டித்தனத்தை சுமத்த முடியாது. சேர சோழ பாண்டியர்கள் மாறி மாறிப்போட்டுத்தள்ளினதுதான் புறநானுறும் அக நானூறும். பெளத்தரையும் சமணரையும் கழுவேற்றி கரை கண்டதுதான் ஆன்மீகம் சமயம். எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது. வரலாறு முழுக்க காட்டுமிராண்டிகளாகவே கடந்து வந்தவர்கள் இப்பவும் எவன் தலை கிடைக்கும் ஓட்டைபோடலாம் என்றே சிந்திக்கின்றார்கள். இதில கண்டனம் வேறு !!

Link to comment
Share on other sites

http://www.theatlantic.com/national/archive/2012/05/yes-america-we-have-executed-an-innocent-man/257106/

 

 

 

அமெரிக்காவை பற்றி பெருமையாக நினைப்பதும் தன் இனத்தை சிறுமையாக நினைப்பதும் ஒரு அடிமையின் மனப்பாங்கு தான்.
 
இவ்வளவு சட்டம், விஞ்ஞானம் எல்லாம் இருந்தும் நிரபராதி அமெரிக்காவில் கொல்லப்பட்டு உள்ளாரே??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

http://www.theatlantic.com/national/archive/2012/05/yes-america-we-have-executed-an-innocent-man/257106/

 

 

 

அமெரிக்காவை பற்றி பெருமையாக நினைப்பதும் தன் இனத்தை சிறுமையாக நினைப்பதும் ஒரு அடிமையின் மனப்பாங்கு தான்.
 
இவ்வளவு சட்டம், விஞ்ஞானம் எல்லாம் இருந்தும் நிரபராதி அமெரிக்காவில் கொல்லப்பட்டு உள்ளாரே??

 

 

ம்ம்ம்

அமெரிக்காவில் மரணதண்டனை உண்டு என்பதையே  மறந்து பேசுகின்றார்கள்....

Link to comment
Share on other sites

ஏன் ரெலோ பொபி தாஸ் என்று போட்டுத்தள்ளவில்லையா? புளட் உள்ளுக்குள் போட்டுத்தள்ளவில்லையா? இல்லை ஏனைய இயக்கங்கள் தான் மாறி மாறி போட்டுத்தள்ளவி்ல்லையா? கூடுதலாக போட்டுத்தள்ளியவன் தலையில் எல்லாக் குற்றங்களை இனத்தின் காட்டுமிராண்டித்தனத்தை சுமத்த முடியாது. சேர சோழ பாண்டியர்கள் மாறி மாறிப்போட்டுத்தள்ளினதுதான் புறநானுறும் அக நானூறும். பெளத்தரையும் சமணரையும் கழுவேற்றி கரை கண்டதுதான் ஆன்மீகம் சமயம். எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது. வரலாறு முழுக்க காட்டுமிராண்டிகளாகவே கடந்து வந்தவர்கள் இப்பவும் எவன் தலை கிடைக்கும் ஓட்டைபோடலாம் என்றே சிந்திக்கின்றார்கள். இதில கண்டனம் வேறு !!

ஒரு கூட்டம் என்று நான் குறிப்பிட்டது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை அல்ல .அப்படியான சிந்தனையில் ஒரு கூட்டம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித மனங்களில் மிருகத்தன்மை அதிகரித்து வரும் காலம் இது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, தகாத தொடர்பு,  அடிதடி அராஜகம்

என்பன இன்று அதிகரித்து உள்ளது

 

ஆதிகாலத்தில் மனிதன் மிருகங்களை வேட்டையாடிஉண்டு  வாழ்ந்தான்.

ஏன் மிருகமாகவே வாழ்ந்தான் என்று கூறலாம் .  அன்றும்  இன்றுபோல இந்த பாதகங்கள்   இல்லை எனக் கூறமுடியாது .

ஆதி மனித காலத்திற்கும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சி கண்ட மனித காலத்திற்கும்

அதிக வித்தியாசம் காணப்படவில்லை.

 

ஆனால் இவற்றிற்கு இடப்பட்ட காலத்தில் மனிதன் நாகரீக வளர்ச்சி கண்ட

காலத்தில்இந்தப் பஞ்சமா பாதகச் செயல்கள் அருகியே இருந்தன.

 

விஞ்ஞான வளர்ச்சி மனிதனை மேலும் மிருக உணர்வுள்ளவனாக மாற்றுகின்றதில் 

பெரும் பங்கு வகிக்கின்றது.

சினிமா, கணனிவிளையாட்டுக்கள், வலையுலகில் வழிந்தோடும் பாலியல் காட்சிகள் 

மனிதனை மேலும் மிருக நிலைக்குத் தள்ளிச் செல்லுகின்றன.

 

மது வகைகள் இன்று இளையோர்கள் கைகளில் தாராளமாகப் பழக்கத்தில் உண்டு.

மதுவிற்கு அடிமையானவன் மிருகத்திற்குச் சமனாகின்றான் 

 

இன்றைய உணவுப் பழக்க வழக்கங்கள் சிறுவயதினரையே பாலியல் சம்பந்தமான 

ஆராய்ச்சிகளில் ஈடுபட வைக்கின்றது.

ஆடு மாடு கோழி கௌதாரி எனக் கண்டவற்றையெல்லாம் உணவாக்கி 

மனிதர்களின் மனதினில் ஒருவித மிருக உணர்வுகளைத் தூண்டி விடுகின்றனர்.

 

மொத்தத்தில் விஞ்ஞான வளர்ச்சியும் உணவுப் பழக்க வழக்கங்களுமே

மனிதன் பல பாதகச் செயல்களில் ஈடுபட உதவி நிற்கின்றன.

 

இப்படியான கலிகாலத்தில் கடவுளால் ஒன்றுமே செய்ய முடியாது

 

 

 

Link to comment
Share on other sites

இப்படி பல இடங்களில் நடந்து கொண்டுதானிருக்கு, காவல் துறையும் தங்களால் இயன்றவரை கட்டுப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள், அதையும் தாண்டி பல குற்றங்கள் நடைபெறுகின்றன, இவற்றுக்கு காரணம் ஒரு தனி மனிதனின் நடவடிக்கைகளே

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.