Jump to content

தீரமும் துயரமும் தோய்ந்த திருநாடு


Recommended Posts

தீரமும் துயரமும் தோய்ந்த திருநாடு

 

(சிறுவன்)

ஆடடா கண்ணா அதற்கு நான் பாடுறேன்

அம்மா சோச்சி ஆறிபோச்சேயென்

றோடிப்போன காலம் போச்சு

ஆனதென்ன ஆகாததென்னென்

றாராஞ்சு பார்க்க நேரமாச்சு.

(எல்லோரும்)

ஆடடா கண்ணா........

 

 

 

(சிறுவன்)

அப்பாக்கும் துணிசல் இருக்கு பலே பலே

அவர் அநியாயத்தை எதிர்த்திருக்கார் கூறே கூறே

சிங்களது சேகுலரை திருப்பி அனுப்பி

செந்தமிழில் வரையுமென்று செப்பி நிற்க

கோபம் கொண்ட கூலிகள் குழிபறித்து

கோள் சொல்லி கொள்ளி வைச்சு வேலை தள்ள

வேலை இன்றி வீடு வந்தார்  எங்கள் அப்பா

 

 

(எல்லோரும்)

வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா

வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா

 

 

 

(சிறுவன்)

 

சிங்களமே வெளியேறு செந்தமிழ் நாட்டால்

செய்யாட்டில் செய்ய வைப்போம் சத்தியமென்று

கோசத்தோடு வீறுநடை துணிவாய் போட்டு 

கொடிகளோடு கூட்டமாய் ஆர்ப்பாட்டம் போய்

குட்டக் குட்டக் குனியாமல் கொத்திதெழுந்து

குண்டர்கள் குண்டான் தடிக்கு அஞ்சாமல்

நெஞ்சை நிமிர்த்தி சிறை சென்றான் எங்களண்ணன்

 

(எல்லோரும்)

நெஞ்சை நிமிர்த்தி சிறை சென்றான் எங்களண்ணன்

வஞ்சகத்தால் எங்கள் அண்ணன் சிறை சென்றான்.

 

 

 

(சிறுவன்)

 

பெண்களோடு பெண்களாக பலர் சேர்ந்து 

படிக்க என்று ரூசன் போனாள் அக்கா பொண்ணு

பொழுது மாலையாகி பிள்ளைகள் திரும்பும் போது

பொல்லாத விஷமிகள் பலர் கூடி வம்பு பேசி

பாதுகாப்பு வாகனத்தில் பிடித்தேற்றி பெண்ணை

போன திசை தெரியாமல் போய் விட்டாள் எங்கள் அக்கா

எம்மை விட்டுபோய்விட்டாள் எங்கள் அக்கா

(எல்லோரும்)

எம்மை விட்டு பறந்தோடிப்போய்விட்டாள் எங்கள் அக்கா

எம்மை விட்டு பறந்தோடிப்போய்விட்டாள் எங்கள் அக்கா

 

 

 

 

(சிறுவன்)

 

பொழுதல்லாம் வீதி பார்த்தும் பெண்ணை காணேண்

பெடியனையும் சிறையில் பார்த்து காலம் ஆச்சு

அப்பாக்கோ வேலை போய் நாளுமாச்சு.

அஞ்சும் எட்டும் அரிசிக்களந்து அலுத்துப்போச்சு

ஆனால் உன்னைக்காண்டால் அதெல்லாம் மறந்து போச்சு

என்று எம்மை அணைத்தெடுக்க காத்திருப்பாள் அம்மா கண்ணு.

பட்டதோடா படுகல்லு நான் பெத்த பொன்காலில்

சுட்டதொ துணிஞ்சென்குஞ்சை சுடுவெய்யில் சொல்லுலென்று

சிறகு போர்த்தி சோறு தீத்த பார்த்திருப்பாள் எங்கள் அன்னை

 

 

(எல்லோரும்)

ஆனால் அம்மா நாங்கள் இன்று தூரம் போறோம்

வெகு நேரமாகும் வீடுவர நேரமாகும் தேடாதே

சுட்டெரிக்கும் இந்த சுடுவெய்யில் சுக நிலவு

முள்ளும் கல்லும் பூத்த பாதை நம் சோலை

தெள்ளுதமிழ் தேன் நாடும் யாழ்நாடும் தமீழம் இதில்

தேடித் துயர் துடைப்பது தெம் தேசத்தொண்டு

 

எனவே நாம் போய்:

அப்பாவுக்கு வேலை போன கதையே கேட்க போறோம்

காணாமல் போன அக்காவையங்கே தேடப் போறோம்.

சிறைக்கு சென்று அண்ணாவை பார்த்து சேதி கேட்போம்.

சிங்களத்திற்க்கு சிம்ம சொற்பனம் என்னாறாகி நிற்போம்

 

ஆடடா கண்ணா அதற்கு நான் பாடுறேன்.......

 

 

(1975 களில் சிறிமாவின் பாண் கியூ படுத்தாத பாடு படுத்தியிருந்தது. அப்போது வேலை இன்றி வீட்டில்தான் இருந்திருந்தேன். சந்தைக்கு அரிசிக்கு வாங்க போனால் 5 ரூபா தொடக்கம்  8 ரூபாவரை போகும். அதை தான் சிலேடையாக கவிதையில் சொல்லியிருந்தேன். கவிதை அரிவரி சிறார்கள் பள்ளியில் இருந்து வீடு வராமல் ஆர்பாட்ட ஊர்வலம் போவதாக வடிவமைக்கப்பட்டது

 

1975 முடிவுகளில் கிருளப்பனை போய் வாழ ஆரம்பித்திருந்தேன். 1976 ஆண்டு கிருளப்பொனையில் வேலையின்றி கழித்த காலங்களில் கிருளப்பொனை/ நுகேகொடை வாசிகசாலையிலிருந்து  மக்சிம் கார்கி அன்பவரால் எழுதபட்ட மதர் என்னும் ஒரு நாவலை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.  இதுவரையில் ருசிய புரட்சியை பற்றி எதிர்கருத்துகளை மட்டும் தான் அறிந்திருந்தவன் நான். அதன் பின்னர்தான் எனக்கு  ரூசியாவில் இருந்த அடக்குமுறையை இலங்கையின் அடக்கு முறைகளுடன் தொடுக்கலாம் என்ற எண்ணம் உதித்தது. இயல்பாக முரடாக பேசி முரடாக நடந்து கொள்ளும் எனக்கு கார்கியின் மென்மையான வருணனையும் கதை அமைப்பும் என் நெஞ்சை தொட்டது. அது மாதிரி எதாவது பண்ண வேண்டும் போல் மனத்தில் பலநாட்கள் உறுத்தியது. ஆசை மட்டும்தான்; அறிவும், ஆற்றலும் வசதியும் இல்லை என்பது புரிந்தது. விரலுக்கேற்ற வீக்கமாக இதை எழுதி வைத்திருந்தேன். 

 

1977ல் வீடடு மாறினோம். அதன் பின்னர் பலதடவைகள் மாறினோம். பின்னர் நான் தனியாக சென்றேன். 1983ல் பலவற்றை இழந்தேன். எனது முதல் விடுதலை பாடலையும் இழந்தேன். இந்த மார்சில் மாணவர் புரட்சி வந்த போது என்னிடமிருந்த பழைய ஆவணங்களை திரும்ப ஒரு தடவை சல்லடை போட்டு தேடினேன். நான் தொலைத்துவிட்டேன் என்பது நிச்சயமானது.  நாளும் பொழுதும் வரிகளை திரும்பத் திரும்பத் இரை மீட்டு போட்டு முடித்தேன். தலைப்பு இன்றுதான் போட்டிருக்கிறேன். மறந்த சொற்களை மாற்றியும் இருக்கிறேன்

 

நாங்கள் அரிவரி படித்தகாலங்களில் காலில் செருப்பணிவது கிடையாது. KKS  ரோட்டின் தார் 1 மணிக்கு உருகத்தொடங்கும். நண்பர்களுடன் 1 1/2 மைல் நடந்து, விளையாடி விளையாடி வீடு வருவேன். அம்மா படலையை பல தடவைகள் வந்து பார்த்துவிட்டுப் போய் இருப்பா. இடம் கிடைத்தால் வந்து விட்டார்களா என்று நண்பர்கள் வீட்டை யும் ஒருதடவை  போய்ப் பார்த்தும் விடுவா. சுத்தி அடித்து வீடு வந்தால் கால் உளையும்.  இது நான் A/L படிக்கும் போது சைக்கிள் எடுத்தால் பள்ளியும் வீடும் என்றிருந்த காலத்திற்க்கு முற்றிலும் எதிரானது. அம்மாவின் மடியில் காலை வைத்துக்கொண்டிருந்து சாப்பிடுவேன்.)

Link to comment
Share on other sites

இது என்ன மொழிபெயர்ப்பு கவிதையா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை மல்லை அண்ணா..காலத்துக்கேற்ற கவிதை...செருப்பில்லாமல் பள்ளிபோய் படித்திருக்கியள்..நினைத்தால் கவலையாக இருக்கு மல்லை அண்ணா..எங்கட தாத்தாக்களும் உப்பிடித்தான அந்த நேரம் படித்திருப்பினம்..பாவம்.. :(

 

Link to comment
Share on other sites

இது என்ன மொழிபெயர்ப்பு கவிதையா ???

இல்லை.

 

ஒன்று நான் பழைய கவிதையை மீட்டெடுக்க முயன்றேன் என்றுதான் சொல்லியிருக்கிறேன். எனவே அன்றிலிருந்து மனதில் இருந்த அதே சொற்களைகைத்தான் பாவித்திருக்கிறேன்.

 

இரண்டாவது 1977 ல் தன்னும் நான் வசனங்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. அப்போதைய எனது முயற்சி கார்கியின் பாணியை கொப்பி அடிப்பது என்பதுதான். கார்க்கி குழந்தைகளுக்கு கதை சொல்வது போல ஒரு பாதள உலக வன்முறைப் புரட்சியை சொல்லியிருக்கிறார்.

 

நன்றி சாத்திரியார் வருகைக்கு

அருமை மல்லை அண்ணா..காலத்துக்கேற்ற கவிதை...செருப்பில்லாமல் பள்ளிபோய் படித்திருக்கியள்..நினைத்தால் கவலையாக இருக்கு மல்லை அண்ணா..எங்கட தாத்தாக்களும் உப்பிடித்தான அந்த நேரம் படித்திருப்பினம்..பாவம்.. :(

நன்றி கருத்துக்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை அம்மம்மா சிறிமா காலத்தில பாணுக்கு வரிசையில் நிண்ட கதை எல்லாம் சொல்லுவா..அப்புறம் மாவில்லாமல் மரவள்ளிகிழங்கை எல்லாம் மாவாக்கி புட்டவித்தார்களாம் சனங்கள் அந்த நேரம்..

 



உண்மையா மல்லை அண்ணா..?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை, கவிதைக்கு நன்றிகள்!

 

எனக்குப் பின்வரும் வார்த்தைகள் நினைவிருக்கின்றன!

 

மரவள்ளிப் புரட்சி 

கொட்டையில்லாத பேரீச்சம் பழம் 

சிறிமாவோவின் சைட் பர்ன்ஸ் 

புத்திர கித்த தேரோ,

 

 

பொன்னான பொற்காலம்,

பூக்கும் வரைக்கும் இந்த,

மின்னார் புதுக்கனியை,

யாரும் புசிக்காதீர்!

 

(எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்காவின் கவிதை)

Link to comment
Share on other sites

எங்கடை அம்மம்மா சிறிமா காலத்தில பாணுக்கு வரிசையில் நிண்ட கதை எல்லாம் சொல்லுவா..அப்புறம் மாவில்லாமல் மரவள்ளிகிழங்கை எல்லாம் மாவாக்கி புட்டவித்தார்களாம் சனங்கள் அந்த நேரம்..

 

உண்மையா மல்லை அண்ணா..?

அந்த நேரத்தில் நாட்டின் உயர்வான நிலையில் இருந்த தமிழ் பக்கங்கள் இன்னமும் வறுமையை முழுவதாக காணத்தொடங்கவில்லை. பாண் என்பது சிங்கள சாப்பாடும். தேயிலைத் தோட்டங்களை அழித்து மரவள்ளி செய்து சாப்பிட ஆரம்பித்து சிங்கள பக்கங்களில்தான் கடுமையாக இருந்தது. 

 

அந்த நாட்களில் மலையகத்தில் நடந்த ஒரு நிகழ்சி:

 

ஒரு தாயையும் தந்தையும் இழந்துவிட்ட எட்டு வயது பெண் பிள்ளை 4 வயது சிறுவனை வீட்டில் வைத்திருந்தாள். சமைக்க ஒன்றும் இல்லாததால் குடிசைக்கு அருகில் காணபட்ட சில குழைகளை பிடிங்கி வந்து அவித்து தம்பிக்கு தீத்தியிருக்கிறாள். இலைகளில் இருந்த நஞ்சால் அவள் சாப்பிடத்தொடங்குமுதலில் தம்பியார் இறந்துவிட்டான்.

 

புத்தத்தை மதிக்கும் சிங்கள நீதிபதி ஒருவரின் முன்னால் தம்பியாரை நஞ்சூட்டிக் கொன்றதாக குற்றம் சட்டப்பட்ட 8 வயது சிறுமி கொண்டுவந்து நிறுத்தபட்டாள்.

 

வழக்கை விசாரித்த நீதிபதி கோட்டில் அழுத்துவிட்டு "புத்தா நீ உண்மையானால் எனது கோட்டுக்கு இன்னொருதடவை இப்படி ஒரு வழக்கை கொண்டு வராதே" என்று கூறினார்.

Link to comment
Share on other sites

மல்லை, கவிதைக்கு நன்றிகள்!

 

எனக்குப் பின்வரும் வார்த்தைகள் நினைவிருக்கின்றன!

 

மரவள்ளிப் புரட்சி 

கொட்டையில்லாத பேரீச்சம் பழம் 

சிறிமாவோவின் சைட் பர்ன்ஸ் 

புத்திர கித்த தேரோ,

 

 

பொன்னான பொற்காலம்,

பூக்கும் வரைக்கும் இந்த,

மின்னார் புதுக்கனியை,

யாரும் புசிக்காதீர்!

 

(எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்காவின் கவிதை)

 வருகைக்கு நன்றி.

 

யாரோ  பண்டாரநாயக்காவின் ஆவி மாதிரி எழுதியிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான எழுத்து நடையாக உள்ளது.கவிதைக்கு பாராட்டு என்று சொல்ல மாட்டேன்.இது கவிதை இல்லை உங்கள் வாழ்க்கை பற்றிய போராட்டம்.தொடர்ந்து எழுதுங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசமான முயற்சி, வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது மல்லை !   ஸ்ரீமாவோ  அவர்களின் ஆட்சியில் என்.எம் பெரேராவின் மூளையில்  உதித்த திட்டம்.

 

போண்டாவுக்கு  உருளைக்குப் பதில் மரவள்ளியை போட்டு தேனீர் கடைகள் புரட்சி செய்த காலம்.

செத்தல் மிளகாய் அமோகமாய் பயிரிடப் பட்டு யாழில் உள்ள சிறு விவசாயிகளும் ஆஸ்டின் லொறிகளும் ,எ போட்டி காருமாய் வாங்கிய கார்காலம் !

நான் வெருண் காலில் இருந்து முதன் முதல்  பட்டா செருப்பு வாங்கி வீதியில் வெள்ளத்தைப் பார்த்தால் செருப்பை கையில தூக்கிக் கொண்டு நடந்த கால் காலம் !

 

தொடருங்கள் !

Link to comment
Share on other sites

வித்தியாசமான எழுத்து நடையாக உள்ளது.கவிதைக்கு பாராட்டு என்று சொல்ல மாட்டேன்.இது கவிதை இல்லை உங்கள் வாழ்க்கை பற்றிய போராட்டம்.தொடர்ந்து எழுதுங்கள்

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ரதி அக்கா.

வித்தியாசமான முயற்சி, வாழ்த்துக்கள்

வருக்கைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சுப்பண்ணை

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கின்றது மல்லை !   ஸ்ரீமாவோ  அவர்களின் ஆட்சியில் என்.எம் பெரேராவின் மூளையில்  உதித்த திட்டம்.

 

போண்டாவுக்கு  உருளைக்குப் பதில் மரவள்ளியை போட்டு தேனீர் கடைகள் புரட்சி செய்த காலம்.

செத்தல் மிளகாய் அமோகமாய் பயிரிடப் பட்டு யாழில் உள்ள சிறு விவசாயிகளும் ஆஸ்டின் லொறிகளும் ,எ போட்டி காருமாய் வாங்கிய கார்காலம் !

நான் வெருண் காலில் இருந்து முதன் முதல்  பட்டா செருப்பு வாங்கி வீதியில் வெள்ளத்தைப் பார்த்தால் செருப்பை கையில தூக்கிக் கொண்டு நடந்த கால் காலம் !

 

தொடருங்கள் !

 

வீட்டுத்தோட்டம் என்ற சொல்லை நாம் கேள்விப்படத்தொடங்கியிருந்தோம். 

 

வெட்ட வெட்ட தளிர்க்கிற இயல்பு கொண்ட இனமாக இருந்தவர்கள்.

 

ஒரு நிலைக்குப்பிறகு யாருக்கும் எதுவும் முடியாது போகும். அந்த நிலைக்கு தள்ளத்தான் சிங்களம் முயல்கிறது.

 

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1975 களில் சிறிமாவின் பாண் கியூ படுத்தாத பாடு படுத்தியிருந்தது. அப்போது வேலை இன்றி வீட்டில்தான் இருந்திருந்தேன். சந்தைக்கு அரிசிக்கு வாங்க போனால் 5 ரூபா தொடக்கம்  8 ரூபாவரை போகும். அதை தான் சிலேடையாக கவிதையில் சொல்லியிருந்தேன். கவிதை அரிவரி சிறார்கள் பள்ளியில் இருந்து வீடு வராமல் ஆர்பாட்ட ஊர்வலம் போவதாக வடிவமைக்கப்பட்டது

 

1975 முடிவுகளில் கிருளப்பனை போய் வாழ ஆரம்பித்திருந்தேன். 1976 ஆண்டு கிருளப்பொனையில் வேலையின்றி கழித்த காலங்களில் கிருளப்பொனை/ நுகேகொடை வாசிகசாலையிலிருந்து  மக்சிம் கார்கி அன்பவரால் எழுதபட்ட மதர் என்னும் ஒரு நாவலை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.  இதுவரையில் ருசிய புரட்சியை பற்றி எதிர்கருத்துகளை மட்டும் தான் அறிந்திருந்தவன் நான். அதன் பின்னர்தான் எனக்கு  ரூசியாவில் இருந்த அடக்குமுறையை இலங்கையின் அடக்கு முறைகளுடன் தொடுக்கலாம் என்ற எண்ணம் உதித்தது. இயல்பாக முரடாக பேசி முரடாக நடந்து கொள்ளும் எனக்கு கார்கியின் மென்மையான வருணனையும் கதை அமைப்பும் என் நெஞ்சை தொட்டது. அது மாதிரி எதாவது பண்ண வேண்டும் போல் மனத்தில் பலநாட்கள் உறுத்தியது. ஆசை மட்டும்தான்; அறிவும், ஆற்றலும் வசதியும் இல்லை என்பது புரிந்தது. விரலுக்கேற்ற வீக்கமாக இதை எழுதி வைத்திருந்தேன். 

 

1977ல் வீடடு மாறினோம். அதன் பின்னர் பலதடவைகள் மாறினோம். பின்னர் நான் தனியாக சென்றேன். 1983ல் பலவற்றை இழந்தேன். எனது முதல் விடுதலை பாடலையும் இழந்தேன். இந்த மார்சில் மாணவர் புரட்சி வந்த போது என்னிடமிருந்த பழைய ஆவணங்களை திரும்ப ஒரு தடவை சல்லடை போட்டு தேடினேன். நான் தொலைத்துவிட்டேன் என்பது நிச்சயமானது.  நாளும் பொழுதும் வரிகளை திரும்பத் திரும்பத் இரை மீட்டு போட்டு முடித்தேன். தலைப்பு இன்றுதான் போட்டிருக்கிறேன். மறந்த சொற்களை மாற்றியும் இருக்கிறேன்

 

நாங்கள் அரிவரி படித்தகாலங்களில் காலில் செருப்பணிவது கிடையாது. KKS  ரோட்டின் தார் 1 மணிக்கு உருகத்தொடங்கும். நண்பர்களுடன் 1 1/2 மைல் நடந்து, விளையாடி விளையாடி வீடு வருவேன். அம்மா படலையை பல தடவைகள் வந்து பார்த்துவிட்டுப் போய் இருப்பா. இடம் கிடைத்தால் வந்து விட்டார்களா என்று நண்பர்கள் வீட்டை யும் ஒருதடவை  போய்ப் பார்த்தும் விடுவா. சுத்தி அடித்து வீடு வந்தால் கால் உளையும்.  இது நான் A/L படிக்கும் போது சைக்கிள் எடுத்தால் பள்ளியும் வீடும் என்றிருந்த காலத்திற்க்கு முற்றிலும் எதிரானது. அம்மாவின் மடியில் காலை வைத்துக்கொண்டிருந்து சாப்பிடுவேன்.)

 
நன்றி  மல்லை
முதலில் இது சிறிய  எழுத்தாக இருந்ததால் வாசிக்காது கீழிருந்த கருத்துக்களில் சிலவற்றை வாசித்து அதன் மூலம் தள்ளப்பட்டு மேல் சென்று வாசித்தேன்.
உங்களது வலியை  உணர்கின்றேன்.
இன்றுவரை தமிழரது தாகம் அணையாமல் இருப்பதற்கு இது போன்ற வலிகளை  ஒவ்வொரு தமிழனும் சுமப்பதும்  அதை மறவாதிருப்பதும் அதை அணையாது வைத்திருப்பதுமே காரணம்
அது தொடரும்
தொடரணும்.
என் மகனுக்கும்
எனது பேரனுக்கும் அவை பாய்ச்சப்படும்
Link to comment
Share on other sites

வணக்கம் மல்லை ................நல்ல ஒரு தலைப்பின் கவிதையை கொண்டுவந்துள்ளீர்கள் .   நல்லது முழுமையாக பார்த்து கருத்துக்களை கூறமுடியாமல் நேரப்பிரச்சனை வாட்டுகிறது .

 
புங்கை அண்ணாவின் வரிகளை பாடலாக பிரசவிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன்  ,,,,,,,,,,அருமையான வரிகள் தமிழக மாணவர் போராட்டம் பற்றியது .....................புங்கை அண்ணா விரும்பினால் சிறிது துண்டை இங்கே இணைக்க இருக்கிறேன் .இன்னும் சில நாட்களில் புங்கை அண்ணாவின் வரிகளுடன் ஒரு பாடல் இங்கே உலாவரும் .ஏன் இதை இங்கே எழுதுகிறேன் என்றால் உங்கள் வரிகளிலும் ஒரு பாடலை வழங்கி இருந்தேன் ...அந்த நினைவிலேயே .நன்றி 

 

Link to comment
Share on other sites

 

நன்றி  மல்லை

முதலில் இது சிறிய  எழுத்தாக இருந்ததால் வாசிக்காது கீழிருந்த கருத்துக்களில் சிலவற்றை வாசித்து அதன் மூலம் தள்ளப்பட்டு மேல் சென்று வாசித்தேன்.
உங்களது வலியை  உணர்கின்றேன்.
இன்றுவரை தமிழரது தாகம் அணையாமல் இருப்பதற்கு இது போன்ற வலிகளை  ஒவ்வொரு தமிழனும் சுமப்பதும்  அதை மறவாதிருப்பதும் அதை அணையாது வைத்திருப்பதுமே காரணம்
அது தொடரும்
தொடரணும்.
என் மகனுக்கும்
எனது பேரனுக்கும் அவை பாய்ச்சப்படும்

 

வருகைக்கு நன்றி விசு.

 

கவிதையில் ஒரு குடும்பத்தை வரைந்திருந்தேன். அது கவிதையின் காலப்பகுதியான  1975,1976, 1977 போன்ற ஆண்டுகளுக்குரியது. வன்னிமக்களின் பாட்டுக்கு பிறகு அது உண்மையில் பூச்சியம்.

 

கவிதையில் காணப்படும் சில குறைபாடுகளான, அரிசியை ஆக  8 ருபா என்பதும், சீர் உடை சட்டமாக இருக்கும் இடத்தில் பள்ளி போய்வருவதை யதார்த்தமற்ற முறையில் காட்டியிருப்பதும் பலராலும் இலகுவில் பற்றிக்கொள்ளகூடியவை. 

 

 அதனால் ஏன் அப்படி குறைத்து காட்டப்படும் கவிதை ஒன்றை நான் எழுதினேன் என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு விளக்கம் எழுதும் போது எனது தனிப்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்திருந்தேன். கவிதையில் காணப்படும் யதார்தம் குறைந்த பகுதிகளுக்கு விளக்கம் தேடுவோருக்காகமட்டும்தான் அதை சேர்த்தேன். உண்மையில் அதை நான் பிரதானமாக கொள்ளாததினால் தான் அதை பதிந்த பின்னர் சின்ன எழுத்தாக மாற்றி விட்டேன்.  ஆனலும் அது பலரின் தங்கள் அனுபவங்களையும் தொட்டத்தினால் அவ்ர்களுக்கு அந்த பக்கமும் ஆர்வமாக இருந்து தங்கள் கருத்துகளில் அதையும் சேர்த்துள்ளார்கள். 

 

உண்மையில் மாணவர் எழுச்சி நாட்களில், அந்த தலைப்புகளின் கீழ்த்தான் பதிய விரும்பினேன். காலம் கடந்துவிட்டது. எனவே கவிதை பகுதியில் பதிந்தேன்.

 

இன்றைய வன்னி குடும்பத்தை கவிதைகளில் வடிப்பது பொருள் அற்றது. அது  ஒவ்வொன்றும் தனித் தனியாக ஆவணப்படுத்தப்பட்டு அரசிடமிருந்து நீதி பெறப்பட வேண்டியது. 

Link to comment
Share on other sites

 

வணக்கம் மல்லை ................நல்ல ஒரு தலைப்பின் கவிதையை கொண்டுவந்துள்ளீர்கள் .   நல்லது முழுமையாக பார்த்து கருத்துக்களை கூறமுடியாமல் நேரப்பிரச்சனை வாட்டுகிறது .

 
புங்கை அண்ணாவின் வரிகளை பாடலாக பிரசவிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன்  ,,,,,,,,,,அருமையான வரிகள் தமிழக மாணவர் போராட்டம் பற்றியது .....................புங்கை அண்ணா விரும்பினால் சிறிது துண்டை இங்கே இணைக்க இருக்கிறேன் .இன்னும் சில நாட்களில் புங்கை அண்ணாவின் வரிகளுடன் ஒரு பாடல் இங்கே உலாவரும் .ஏன் இதை இங்கே எழுதுகிறேன் என்றால் உங்கள் வரிகளிலும் ஒரு பாடலை வழங்கி இருந்தேன் ...அந்த நினைவிலேயே .நன்றி 

 

வருகைக்கு நன்றி தமிழ் சூரியன். கருத்துக்கும் நன்றி.

 

உங்கள் இசையமைப்பின் தரத்தை எனது பழைய பாடலில் (உண்மையில் அதுதான் புதியது) நீங்கள் கட்டியிருந்த விதம் அவ்வளவு எளிதில் மறந்து போகத்தக்கதா?

 

உங்கள் மாணவர் பாடலின் பதிவை காத்திருக்கும் ரசிகன்

-மல்லை

Link to comment
Share on other sites

சிறிமா காலத்தில் அதிகாலை 4 மணிக்கு பாணுக்கு வரிசையில் நின்றதாக கேள்விப்பட்டுள்ளேன்.ஏனெனில் குறிப்பிட்ட நேரத்துக்கு பின் பாண் முடிந்து விடுமாம்.யாழ் விவசாயிகள் மிளகாய் போன்றவற்றை பயிர் செய்து விற்றதால் (உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தமை) பலர் பணக்காரர் ஆனார்களாம்.இதுவும் பின்னர் ஜே.ஆருக்கு எரிச்சலை உண்டாக்கி விட்டதாம்.அப்போது தான் தாராள பொருளாதார கொள்கை என்பதை கொண்டு வந்து வடபகுதி உற்பத்திக்கு மண் விழுத்தினார்களாம்.
 
நன்றி மல்லை கவிதைக்கு. 
Link to comment
Share on other sites

 

சிறிமா காலத்தில் அதிகாலை 4 மணிக்கு பாணுக்கு வரிசையில் நின்றதாக கேள்விப்பட்டுள்ளேன்.ஏனெனில் குறிப்பிட்ட நேரத்துக்கு பின் பாண் முடிந்து விடுமாம்.யாழ் விவசாயிகள் மிளகாய் போன்றவற்றை பயிர் செய்து விற்றதால் (உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தமை) பலர் பணக்காரர் ஆனார்களாம்.இதுவும் பின்னர் ஜே.ஆருக்கு எரிச்சலை உண்டாக்கி விட்டதாம்.அப்போது தான் தாராள பொருளாதார கொள்கை என்பதை கொண்டு வந்து வடபகுதி உற்பத்திக்கு மண் விழுத்தினார்களாம்.
 
நன்றி மல்லை கவிதைக்கு. 

 

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

 

இன்னமும் தண்ணீர் பிரச்சனையையும் தீர்த்து, தமிழரையும் தனியே விட்டால் திறந்த பொருளாதார கொள்கைகளை விழுத்தி மலிவாக செய்து விற்பார்கள். உரம், யந்திரம், எண்ணை எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடு விதிக்கும் போது அதில் போட்டி போடுவது என்பது முடியாததாகிவிட்டது என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்கான முளை பதியம் போட்ட காலத்தில் எழுதப்பட்ட கவிதையை ஆயுதப் போர் தொடங்கி 35 ஆண்டுகளுக்குப் பின்னர் போர் முடிவடைந்த இன்றைய காலகட்டத்தில் படிக்கும்போது அன்றைய விருப்புக்கள் இன்றும் மாறாமல் இருப்பதாகவே தெரிகின்றது. ஆனால் இடையில் இழக்கப்பட்டவைகளின் விலைகள்தான் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாழ்வில் கண்ட வலி சொல்லும்  கவிதை  நன்றாக மனதைத் தைக்கிறது மல்லை.

 

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்கான முளை பதியம் போட்ட காலத்தில் எழுதப்பட்ட கவிதையை ஆயுதப் போர் தொடங்கி 35 ஆண்டுகளுக்குப் பின்னர் போர் முடிவடைந்த இன்றைய காலகட்டத்தில் படிக்கும்போது அன்றைய விருப்புக்கள் இன்றும் மாறாமல் இருப்பதாகவே தெரிகின்றது. ஆனால் இடையில் இழக்கப்பட்டவைகளின் விலைகள்தான் அதிகம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

நாங்கள் 35 ஆண்டுகளா அல்ல இழக்கிறோம். இழப்போம் என்ற தீர்க்கதரிசனம் இராமடநானிடம் கூட இருந்தது. எனவே அது தடுக்கவும் முடியாத ஒன்றாக இருக்கிறது. அதனால்தான் நாம் பொதுசன வாக்குரிமையை டொனமூர் கொண்டுவந்த போது எதிர்த்தோம்,  இலவச கல்வி, இலவச மருத்துவம் கொண்டு வந்த போதும் கூட எதிர்த்தோம். இவை சிங்களம் மட்டும் சட்டங்கள் அல்ல. இருந்தாலும் இவை எல்லாம் தமிழரை இழக்க வைக்கவே பாவிக்கப்பட்டன.  இன்று தமிழினியை வெளியில் விடுவது கூட தமிழரை இழக்க வைக்கவே. 1958 இலிருந்து இனக்கலவரங்களில் இழந்தோம். 65% வீதமாக இருந்த தொழில் 2% மாக குறையும் போது இதானல் வந்த வருமான இழப்பு தமிழருக்கு பில்லியன் டலர்களுக்கு மேல்.

 

இழக்கவைக்க தமிழர்கள் தெரியபட்டது அவர்களிடம் அன்று இழக்க கூட இருந்ததினால். அன்று குறைய இருந்த முஸ்லீம்கள் இன்று தேடிக்கொண்டுவிட்டர்கள். அவர்கள்தான் இனி இழக்க வேண்டும். அவர்களும் இழப்பை தடுக்க வழி அறிந்தவர்கள் போல் தெரியவில்லை. ஒரு தடவை இவர்கள் தான் இழக்க வேண்டும் என்று சிங்களம் ஒரு சிறுபான்மை இனத்தை தெரிந்தால் அது G.G ,கக்கீம்  போன்றவர்களின் இணக்க அரசியலால் காப்பாற்றப்பட போவதில்லை. ஆயுதப் போராட மொன்றில் இறங்கினால், வெளிநாட்டு ஆதரவை வைத்து நம்மைவிட முஸ்லீம்களை அழிப்பது அரசுக்கு. இலகு. எனவே அவர்கள் தம்மைத்தாம் அழிக்க அரசுக்கு அர்ப்பணிப்பதைவிட வேறு வழி இல்லாதவர்கள். 

Link to comment
Share on other sites

உங்கள் வாழ்வில் கண்ட வலி சொல்லும்  கவிதை  நன்றாக மனதைத் தைக்கிறது மல்லை.

வருகைக்கை நன்றி சுமே அக்கா.

 

என்ன சொல்ல. 65 வருடம் போராடுகிறோம். இன்னும் எத்தனை வருடங்கள் என்பது தர்சனத்தில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

என்ன சொல்ல. 65 வருடம் போராடுகிறோம். இன்னும் எத்தனை வருடங்கள் என்பது தர்சனத்தில் இல்லை.

 

ஒவ்வொரு தமிழனுக்கும் தாய்நாடு என்னும் ஆசை இருந்திருந்தால் நாம் முள்ளிவாய்க்காலை கண்டிருக்கவே தேவை இருந்திருக்காது. சுயநலம் கொண்டவர் நாமெல்லாம் என்ன செய்வது????

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.