Jump to content

பவர் ஸ்டாருடன் புரோக்கர்களாக செயல்பட்ட 2 பெண்கள் கைது.


Recommended Posts

பெரும் தொகை கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சிறையில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசனை, போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தினர்.
 
இதை தொடர்ந்து, சீனிவாசனுக்கு புரோக்கர்களாக செயல்பட்டவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னை தி.நகரை சேர்ந்த வெங்கம்மா என்ற லட்சுமி (வயது 46) மற்றும் கிருஷ்ணசாமி (45) ஆகியோரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.
 
இவர்கள் தி.நகரில் அலுவலகம் அமைத்து, கடன் தேவைப்படும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
 
கடன் கேட்டு வரும் நபர்களை சீனிவாசன், பல்வேறு விதமான மோசடி வார்த்தைகளை கூறி, அவர்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். மோசடி செய்த பணத்தில், வெங்கம்மாவும், கிருஷ்ணசாமியும் கமிஷன் தொகை பெற்றுள்ளனர்.
 
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
வெங்கம்மா என்ற லட்சுமிக்கு சொந்த ஊர் ஆந்திரா மாநிலமாகும். இவர் தெலுங்கு தெரிந்தவர்களையும், மற்றவர்களையும் ஏமாற்றுவதில் கெட்டிகாரி. கிருஷ்ணசாமி, கோவை மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர்.
 
இவர் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். 9–ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய புரோக்கராக செயல்பட்டுள்ளார்.
 
இவர், மலேசியாவை சேர்ந்த மணியம் என்பரை 2010–ம் ஆண்டு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அப்போது மணியத்துக்கு ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் இருந்து ரூ.2.50 கோடியை சீனிவாசன் ஏமற்றியுள்ளார்.
 
கைது செய்யப்பட்டுள்ள வெங்கம்மாவும், கிருஷ்ணசாமியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய கூட்டாளிகள் ஆவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14615:2-women-arrested-in-connection-with-the-power-star&catid=36:tamilnadu&Itemid=102

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின், ஒரு பெண் இருப்பாள் என்று கூறுவார்க‌ள்.
ப‌வ‌ர் ஸ்டாருக்கு, பின் இர‌ண்டு பெண்க‌ள் இருந்திருக்கிறார்க‌ள். :lol:  :D

 

Link to comment
Share on other sites

பவர் ஸ்டாரின் வளர்ச்சியைத் தாங்கமுடியாமல் கமலும், ரஜினியும் செய்த சதியென்று நினைக்கிறன்.. :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின், ஒரு பெண் இருப்பாள் என்று கூறுவார்க‌ள்.

ப‌வ‌ர் ஸ்டாருக்கு, பின் இர‌ண்டு பெண்க‌ள் இருந்திருக்கிறார்க‌ள். :lol:  :D

 

நான் இவரை சாதாரண  காமெடியன் வரிசையில் தான் பார்த்தேன்

ஆள்  சகலகலாவல்லவனாகவும் மச்சமுள்ளவராகவும  இருப்பார் போலுள்ளது. :icon_mrgreen:

ரசிகனாக பதியலாமா சிறி...........? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகரா இருந்து டாக்டர் ஆனவர்கள் பலர் இருக்கின்றனர் ஆனால் டாக்டரா இருந்து நடிகர் ஆனவர் பவர் மட்டுமே.

 

இவரை பல தமிழ் பெண்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறன் :rolleyes: , அவரிண்ட மீசையை பாத்தனிங்களே, அசல் தமிழன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.