Jump to content

” போர்பயிற்சி ஆசான் ” வசந்தன் மாஸ்ரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

vasanthan-copy-600x849.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பயிற்சியில் பயிற்சி வல்லுனராக விளங்கியவர் வசந்தன் மாஸ்ரர் .

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட வசந்தன் மாஸ்ரர் என்று அழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாக கொண்ட ஆறுமுகம் அன்பழகன் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் படைத்துறைபள்ளியின் ஆசானாக செயற்பட்டு பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணியின் செயற்பாட்டாளனாகவும் பாதுகப்பு அணியின் தற்காப்பு பயிற்சி ஆசானாகவும் விளங்கினார்.

தோழா ! … தோழா ! …. என் தோழா !….

பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடல் செயற்பாடுகளுடன் அருகில் இருந்து செயற்பட்ட வசந்தன் அவர்கள் தலைவர் அவர்களின் பல திட்டமிடல்களுக்கு வல்லுனனாக விளங்கினார். தமிழீழ விடுதலைப்புலிகள் மகளீர் அணியிற்கு தற்பாதுகாப்பு கலையினை பயிற்றுவித்து மகளீர்கள் எதிலும் சளைக்காதவர்கள் என்பதை வெளிக்காட்டி நின்றார், யுத்த தந்திரங்களான எதிரியை மடக்குவது, சத்தமின்றி எதிரியை கொல்லுவது, உள்ளிட்ட சிலம்பு வித்தை, கம்புவீச்சு, வாள்வீச்சு, நெஞ்சாக்கு, தற்காப்புக்கலை, யோகாசனம் மற்றும் யப்பானிய கலைகளில் வல்லுனனாகவும், கனரக பீரங்கிகள் இயக்குதலில் சிறப்பு தேர்ச்சி அடைந்தவராகவும் விளங்கிய வசந்தன் மாஸ்ரர் அவர்கள், அனைத்து கலைகளையும் விடுதலைப் போராளிகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசானாக திகழ்ந்தார்.

இவ்வாறு கரும்புலிகளின் பயிற்சி அணிதொடக்கம் வேவு அணிகளின் பயிற்சி ஆசானாக திகழ்ந்த வசந்தன் மாஸ்ரர் அவர்கள் தனது கலையினை திரைப்படம் ஊடாக வெளிக்கொண்டுவந்தார்.

canel_vasanthan_elllaalan-499x320.jpg

தமிழீழத்தில் உருவாக்கம் பெற்ற எல்லாளன் திரைப்படத்தில் கரும்புலிகளின் பயிற்சி ஆசானாக விளங்கி திரைப்படத்தில் பயிற்சி திறன்களை போலின்றி உண்மையாக காட்டிநின்றார்.

இவ்வாறு விளங்கிய வசந்தன் மாஸ்ரர் அவர்கள் இறுதியில் விடுதலைப்புலிகளின் வெடிமருந்து பகுதியின் பொறுப்பாளனாக செயற்பட்டு 10.05.2009 ஆம் ஆண்டு அன்று முள்ளிவாய்கால் பகுதியில் வீரவரலாறானார்.

303033_571253879575972_1875660408_n.jpg

இன்றும் வசந்தன் மாஸ்ரரிடம் போரியல் பயிற்சி பெற்ற போராளிகளின் மனதில் மரியாதை கூடிய பயத்துடன் என்று அவரின் தேசபக்தி நெக்ஞ்சினை ஆளும். ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் உங்களின் வழித்தடம் பார்த்து என்றும் தானைத்தலைவனின் வழியில் தமிழீழ தேசம் கட்டியெழுப்புவோம்.

அன்று உங்கள் முகம் மலர்ந்திடும். நிம்மதியாய் உறங்குங்கள் எங்கள் பயிற்சி ஆசானே ! நீங்கள் ஊட்டிய வீரம் – தீரம் தேசக்காதலாக நெஞ்சில்க் கனக்கின்றது பகையை எரிக்கும் ஓர்மத்துடன்.

- மீள்திருத்தத்துடன் தேசக்காற்று.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

Link to comment
Share on other sites

வீரவணக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்

Link to comment
Share on other sites

வீரவணக்கம் !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த தானைத்தளபதிக்கு

 

எனது  வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல தீரமிகு போராளிகளை உருவாக்கிய, வசந்தன் மாஸ்ரருக்கு... வீர வணக்கங்கள்.

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.