Jump to content

இன்று மே 17 இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் வீரவணக்கம்....


Recommended Posts

இன்று மே 17

ஆம் தமிழர் மனங்களில் நிரந்தரமாக பதிவாகிவிட்ட மறக்க முடியாத நாள்......

சிங்கள தேசமும் சர்வதேசமும் இணைந்து தமிழர்களை கொன்றொழித்த நாள்......

துரோகங்களாலும்....காட்டிக்கொடுப்புகளாலும் சூழ்ச்சிகளாலும் தமிழர் தரப்பு தோல்வியை தழுவிய நாள்....

படை நடத்தி பகை வென்று போராடிய தமிழர் தரப்பின் அரணாக இருந்த வன்னி மண் இரத்தத்தில் தோய்ந்த நாள்

தமிழர்களின் செங்குருதி நந்தி கடலில் கலந்த நாள்

ஓவென்று கதறி அழுத தமிழ் இனத்தை உலகம் கைவிட்ட நாள்...

இந்த நாளில் அந்த மக்களுக்காவும் போராளிகளுக்காகவும்....ஒரு கணம் மௌனித்து குனிந்த எம் தலைகள்......

மீண்டும் இலட்சியை பாதையை நோக்கி நிமிர்ந்து செல்கின்றன.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுக்கு வீர வணக்கங்களும்

பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் உலகத்தமிழினத்தின் நெருப்பு நாள்

இலங்கைத்தீவில் பன்னெடுகாலமாய் நடைபெறும் தமிழர்மீதான இனவழிப்பின் தொடர்ச்சியாகவும் அதன் உச்சக்கட்டமாகவும் கடந்த, 2009 மே பதினெட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவுநாளை உலகெங்குமுள்ள தமிழினம் நினைவுகூர்கிறது. இதன் மூலம் இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களும் அங்கிருந்து புலம்பெயர்ந்து உலகமெல்லாம் வாழும் தமிழர்களும் ஒன்றிணைந்து, தமக்கென ஒரு நாடு அமைவதற்கான நியாயத்தை உலகசமுதாயத்தின் மத்தியில் உரக்கக்கூறி நிற்கிறார்கள்.

இலங்கைத்தீவு சுதந்திரமடைந்த நாட்களில் இருந்தே, அத்தீவில் சிறுபான்மையினராகிலும், மூத்தகுடிகளாகிய தமிழினத்தின் மீது பல்வேறுபட்ட அடக்குமுறைகள் மூலம் இனச்சுத்திகரிப்பு இயந்திரத்தை ஏவிவிட்ட சிங்கள இனம், கடந்துசென்ற முள்ளிவாக்கால் அவலம்மூலம், தனது கோரமுகத்தை உலகுக்குக் காட்டியுள்ளது. அதற்கான ஆதாரங்களில் ஒரு குறிப்பிட்டளவிலானவையே வெளிவந்து, உலகின் மனித உரிமையில் கரிசனையுள்ள நிறுவனங்களையும், தனிநபர்களையும் பல்வேறு நாடுகளையும், அதன் தலவர்களையும் அதிர்ச்சிகொள்ளவைத்திருக்கிறது மட்டுமன்றி, அதுக்கான பெறுபேறுகளை சம்பந்தப்பட்ட சிங்களம் பெற்றுக்கொள்ளல் வேண்டுமென்பதில் உறுதியுடனும் உள்ளனர்.

வரலாற்று ரீதியாக பல்வேறுபட்ட அடக்குமுறைகளயும், இனவழிப்பு நடவடிக்கைகளையும் சிங்களம் தமிழர்களுக்கு எதிராகக் காலம், காலமாக சாட்சியங்கள் இல்லாது மேற்கொண்டிருந்தாலும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியாளர்களைக்கொண்ட ஒரு சுதந்திரமான விசாரனையே, தமிழர்மீது, சிங்களம் மேற்கொண்ட அனைத்து இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும் விசாரணைக்கு முன்கொண்டுவருவதற்கான திறவுகோல் என்பதால், உலகெங்கும் வாழும் தமிழர்கள், சிங்களம்மீது காத்திரமான போர்க்குற்ற விசாரணையினை மேற்கொள்ளுமாறு உலகின் மனிதவுரிமையை மதிக்கும் அனைத்து நாடுகளின் அரசாங்கங்களையும் பொதுநிறுவனங்களையும் வேண்டிநிற்கிறோம்.

நீதிவேண்டிநிற்கும், உலகத்தமிழினத்துடன் கைபற்றிநிற்கும்,

பின்லாந்துவாழ் தமிழ்சமூகம்.

 

 

Link to comment
Share on other sites

போராளிகளுக்கு வீர வணக்கங்களும் , பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.

 

 

 

எந்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் தமிழீழத் தேசியத் தலைவர் வழியில் நின்று தமிழீழ விடுதலைக்காக உறுதியுடன் போராடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுக்கு வீர வணக்கங்களும்

பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனத்த மனத்துடன் போராளிகளுக்கு வீர வணக்கம் பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

animated_candle.gif

 

சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, ஐ.நா. நித்திரை கொள்ள....
சிங்கள அரசால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும், போராளிகளுக்கும் வீரவணக்கங்களும்.... கண்ணீர் அஞ்சலிகளும்.
 

Link to comment
Share on other sites

வீழ்ந்து விதைகளான போராளிகளுக்கு வீரவணக்கங்கள்..! பறிக்கப்பட்ட ஆன்மாக்கள் அமைதி பெறட்டும்..! உறவினர், நண்பர்களை இழந்தோர்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

நான்கு வருடங்கள் கடந்த நிலையில், சர்வதேசம் என்கிற போர்வையில், தற்கொலைதாரிகள், சிறுவர் போராளிகள் என்றெல்லாம் பேசி அன்று நடித்து வந்தவர்களை இன்று காணக்கிடைக்கவில்லை.. பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இவர்களும்தான்.. ஆனால் தமக்கு ஏதும் சம்பந்தமில்லாததுபோல் நடித்துக் கொண்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுக்கு வீர வணக்கங்களும்

 

பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.

 

Link to comment
Share on other sites

போராளிகளுக்கும் மக்களுக்கும் வீரவணக்கங்கள். வெள்ளை கொடியுடன் சரணடைந்த மக்களும் போராளிகளும் என்னை மன்னியுங்கள்.புலிகளை பயங்கரவாதிகளாக்கிய உலகை பார்த்து புளகாங்கிதம் அடைந்தவர்கள் இந்த 4 வருடத்தில் தமிழ் மக்களுக்கு தந்த தீர்வு தான் என்ன?? எங்கே உங்களின் நடுநிலை? உலகின் நடுநிலை?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்காக,எமக்காக,எங்கள் மண் எமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடி உயிர் நீத்த அனைத்து மாவீர‌ர்களுக்கும்,பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்த கூட‌ தகுதியில்லாத ர‌தியின் வீர‌ வணக்கங்களும்,கண்ணீர் அஞ்ச‌லிகளும்
 

 

அனைவர‌தும் ஆத்மாவும் சாந்தியடையட்டும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வருடங்கள் ஆகியும் எங்கள் தேடல்கள் ஓயாமல் இருக்கிறது. ஆற்றுப்படுத்தமுடியாத வலி சூழ்ந்து உணர்வுகளில் கலந்து விழிகளைக் கசிய வைக்கிறது. என் இனத்து முகம் தெரிந்த, தெரியாத உறவுகளே இழப்பின் வதைகளில் நின்று எம்மை விட்டுச் சென்ற அனைத்து உறவுகளுக்குமாக ஆன்மா உருக உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்களும், பலி கொள்ளப்பட்ட தமிழ் உறவுகளுக்கு, நினைவு நாள் வணக்கங்களும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் வலிந்து.. விழி மூடிக் கொண்டதால்.. சிங்கள இனப்படுகொலையின் அரக்கத்தனத்திற்கு.. தம் உயிர் விடுத்து விழி மூடிக் கொண்ட அன்பார்ந்த எம் தமிழ் சொந்தங்களுக்கு.. வீரவணக்கம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத்தினால் மனச்சாட்சியின்றி கொல்லப்பட்ட அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வீரவணக்கங்கள்.காலச் சக்கரம் எப்போழுதும் ஒரே மாதிரியாகச் சுழலாது. மாற்றம் என்பதில் மாற்றம் இல்லை.எங்களுக்கும் ஒருநாள் வரும். அந்த நாளை நோக்கி எமது பயணம் அமையட்டும். ஒருநாள் இந்த உலகம் தனது செய்கைகளுக்காக தமிழித்தினத்திடம் மன்னிப்பக் கேட்க வேண்டி வரும். அந்த நேரத்தில் எங்கள் பெருந்தன்மையை அவர்களுக்குக் காட்டுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை விட்டுச்சென்ற எல்லா ஆன்மாக்களின் சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி நிற்கின்றோம்.

Link to comment
Share on other sites

போராளிகளுக்கு வீர வணக்கங்களும்

பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.

 

உயிரினும் மேலான தாய்நாடு - இன்று

உடலங்கள் எரிகின்ற பேய்வீடு

பயமின்றி நாம் வாழ்ந்த சிறுகூடு-இன்று

பாதகரால் சிதைந்த மண்மேடு

-புதுரை இரத்தினதுரை

 

Link to comment
Share on other sites

மரணித்த அனைத்து மாவீரர்களுக்கும் மக்களுக்கும் வீர வணக்கம்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணித்த அனைத்து மாவீரர்களுக்கும் மக்களுக்கும் வீர வணக்கம்

 

Link to comment
Share on other sites

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் வீரவணக்கம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.