Jump to content

பாவத்தின் சம்பளம்- த .அகிலன்


Recommended Posts

  • Replies 68
  • Created
  • Last Reply

தன் வீட்டிற்கு இழப்பு வந்ததால் தனது ஆதங்கத்துக்கு எழுதுவதில் தவறில்லை.. ஆனால் அதற்கு முன் விசிலடித்தவராக இருந்தால் அனுதாபம் வர வழியில்லை.. :D

Link to comment
Share on other sites

மாற்று இயக்கங்கள் செய்ததை மக்கள் மறக்கிற அளவுக்கு   கடசி நேரம்  புலிகளும்  மக்களை கொடுமைப்படுத்தினார்களே அதுக்கு நீங்கள் என்ன சொல்ல போறிங்கள்?

 

 

பிழை இல்லை என்று எங்கு சொல்லியுள்ளேன் ??
 
கடைசி நேரம் மக்களை கொடுமை படுத்தியவர்களில் கருணா, ஒட்டுக்குழுக்களின் பங்கு பற்றி உங்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்.மேலும் தகவல் தேவை எனில் தனி மடலில் தரலாம்.
தீபச்செல்வனின் செவ்வியையும் ஒரு தரம் பார்க்கவும்.
Link to comment
Share on other sites

எனக்கு ஒரு உதவி தேவை. அவரிடமுள்ள புலம்பெயர் தமிழ்மக்களின் பணத்தை அங்கு கஷ்டப்படும் வறிய மக்களுக்கு உதவ சொல்வீர்களா?

 

http://www.facebook.com/sencholai.sencholai?fref=ts

 

http://www.anbuillam.nerdolanka.org/index.php/2012-03-19-13-34-12/layout

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அனைவருக்கும் தமக்கு விருப்பமான மொழியில் பேசினால் மட்டுமே இனிக்கின்றது. கட்டாயமாக போராட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டவரின் அண்ணரும், எவரையும் இழக்காமல் சொந்தம் அனைவரையும் வெளிநாட்டுக்கு அழைந்து வந்தவரும் ஒரே மொழியில் தான் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கும் மனநிலையில் தான் நாம் இங்கு இருக்கின்றோம்.

 

அனைவரும் உரையாடக் கூடிய வெளி இன்று இருக்கும் போதும் கூட ஒரே வகையான உரையாடலை மட்டுமே கேட்க நினைப்பதும் அவ்வாறு எமக்கு விருப்பமில்லாத ஒரு உரையாடலைக் கேட்டவுடன் அந்த பொது வெளியையே வெறுத்து போவதும் துயரமானது.

யார் எங்கு நின்று சொன்னாலும் ..............

 
இங்கு இதுவரையில் வராத கடவுள் வந்து சொன்னாலும்...........
 
உண்மையும் நியாயமும் ஒன்றுதானே????
 
அதை ஏன் மாற்றி மாற்றி சொல்ல வேண்டும்.
 
(கட்டுரையாளருக்கு  இறந்த உடல் துவராகவாக இருந்த போது  இனித்திருக்கிறதா?  அடுதாவன் இந்த மரணங்களை மறந்து மட்டுமே இருக்கிறான். இவர்கள்தான் பிணங்களின் சிதைகளை புடுங்கி கட்டுரை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்.)
 
இவர் இதுவரையில் தமிழருடைய சுதந்திர போர் சரியா? தவறா? என்று சொல்லவில்லை.
அதை சொல்லிவிட்டால் கட்டிரையில் பாதியை தானே அழிக்க  வேண்டும் என்று விட்டு விட்டார் போல.

 

 

 

மக்களுக்காக ஆரம்பிக்க பட்ட போராட்டம் இறுதிவரை மக்களின் விருப்பம் என்ன என்று தெரியாமலே அழிந்து போய்விட்டது.

 

 

எனக்கு தெரிந்து மக்களின்  விருப்பம் என்ன என்று தெரிந்த ஒரே ஆள் நீங்கள்தான்.

 
 
எனக்கு ஒரு சின்ன ஆசை, நீங்கள் இறக்கு முன்பு அதை யாரிடமாவது சொல்லிவிடுங்கள். அடுத்த சந்ததி அறிந்து கொள்ள வசதியாய் இருக்கும். 
Link to comment
Share on other sites

 

உங்கள் பங்களிப்பு!
pixel.gif

Commercial Bank A/C 161 0046482 Code:CCEYLKLX Vavuniya, Sri Lanka Account Name: North-East Rehabilitation & Development Organization

NERDO UK - Barclays Bank A/C 53048950 Sort Code : 209689.

 

 

ஏன் இந்த அன்பளிப்பு கேட்கின்றார்?

 

கேடி இருக்கிற கோடிகளை செலவலித்தாலே வடகிழக்கு ஏழைகளுக்கு பல ஆண்டுகளுக்கு போதும்.

Link to comment
Share on other sites

 ஆனால் அன்று நான் ஜரோப்பிய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து  பலரை வெளியே கொண்டுவந்திருந்தேன்.

 

அந்த ஐரோப்பிய நிறுவனத்தின் தொடர்பினை தரமுடியுமா ? பல போர்க்கைதிகள் , அரசியல் கைதிகளுக்கான விடுதலைக்கு நீங்கள் குறித்த ஐரோப்பிய அமைப்பிடமிருந்து உதவி பெற முடியுமா ? உதவி பெற முடியுமென்றால் விபரத்தை தந்துதவுங்கள்.

 

 

கே பி யருக்கும்  எனக்குமான தொடர்பு  84 களில் தொடங்கியது  ஆனால் அன்று அவரிற்கும் எனக்குமான தொடர்பு விடுபட்ட நிலையிலேயெ  இருந்தது.  இப்பொழுது மீண்டும்  என்னுடன் தொடர்பிலேயே உள்ளார்   உங்களிற்கு ஏதும் உதவி தேவைப் படின் சொல்லவும்  நன்றி

 

கே.பி சிபார்சுகள் மூலம் மட்டுமா உதவுவார் ? அப்போ கே.பியும் உள்மன சுத்தியோடு உதவவில்லையா ?

 

 

Link to comment
Share on other sites

அந்த ஐரோப்பிய நிறுவனத்தின் தொடர்பினை தரமுடியுமா ? பல போர்க்கைதிகள் , அரசியல் கைதிகளுக்கான விடுதலைக்கு நீங்கள் குறித்த ஐரோப்பிய அமைப்பிடமிருந்து உதவி பெற முடியுமா ? உதவி பெற முடியுமென்றால் விபரத்தை தந்துதவுங்கள்.

 

 

 

கே.பி சிபார்சுகள் மூலம் மட்டுமா உதவுவார் ? அப்போ கே.பியும் உள்மன சுத்தியோடு உதவவில்லையா ?

 

சாந்தி 2009 மே மாதம் போராளிகள் சரணடைந்து கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் பற்றிய விடயங்களை சர்வதேசத்திற்கு எடுத்த செல்ல  பொது அமைபுக்களுடனும்  வெளிநாட்டு அரசியல் தொடர்புடையவர்களும் முன்வாருங்கள் அதே நேரம் சரணடையும் போராளிகளிற்கு  உதவ முன்வாருங்கள் என்றொரு அறிவிப்பை யாழிலும் விட்டிருந்தேன் ஆனால் அன்று  போராளிகளாவது சரணடைவதாவது . அவர்கள்  தேள் வடிவ தாக்குதலிற்கு  தயாராகிறார்கள்.  முடியாவிட்டால்    குப்பியடிப்பார்கள்.  சரணடைவு என்பது புலிகள் வரலாற்றிலெயே இல்லை சாத்திரி இலங்கை அரசுடன் சேர்ந்து  போராடும் போராளிகளினதும்.  புலம்பெயர் தமிழர்களின்  மன உறுதியை  உடைப்பதற்காக  உளவியல் யுத்தம் செய்கிறார் என்று  என்னை  இங்கு திட்டியவர்கள் தான் அதிகம். அன்றைய நேரத்தில் நீங்கள் நேசக்கரத்தின்  ஜேர்மனிய பொறுப்பாளர்  மட்டுமே  ஆனால் எனக்கு  உதவிகள் சேர்த்ததற்காக  இதே யாழ் கள உறவுகளிடம் இருந்து தூசணம் தாங்கிய  மின்னஞ்சல்களும்  தொ.பே அழைப்புக்களும் வந்திருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.  இதே யாழ் உறவு ஒருவர் என்னையும் உங்களையும் தொடர்பு படுத்தியும் எழுதியிருந்தார். அதன் பதிவு என்னிடம் இன்றும் இருக்கிறது. அவரிற்கான  பதிலைத்தான்  இங்கு கொடுத்திருக்கிறேன் மற்றபடி உங்களிற்கு  ஜரோப்பிய நிறுவனத்தின்  உதவி தேவைப் பட்டால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.  தாராளமாய் தரலாம். அடுத்ததாக கே.பியர்  சிபரிசிலை வேலை செய்யிறாரா இல்லையா  அவரின் இதம் சுத்தியா (சுத்தியல்)இல்லை  கடப்பாறையா எங்கள்  வலைப் பின்னல் தொடர்புகளை யெல்லாம் புரிந்து கொள்ளும் வயதோ அனுபவமோ உங்களிற்கு கிடையாது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் திருந்தல்லையா யாரும்...

Link to comment
Share on other sites

சாந்தி 2009 மே மாதம் போராளிகள் சரணடைந்து கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் பற்றிய விடயங்களை சர்வதேசத்திற்கு எடுத்த செல்ல பொது அமைபுக்களுடனும் வெளிநாட்டு அரசியல் தொடர்புடையவர்களும் முன்வாருங்கள் அதே நேரம் சரணடையும் போராளிகளிற்கு உதவ முன்வாருங்கள் என்றொரு அறிவிப்பை யாழிலும் விட்டிருந்தேன் ஆனால் அன்று போராளிகளாவது சரணடைவதாவது . அவர்கள் தேள் வடிவ தாக்குதலிற்கு தயாராகிறார்கள். முடியாவிட்டால் குப்பியடிப்பார்கள். சரணடைவு என்பது புலிகள் வரலாற்றிலெயே இல்லை சாத்திரி இலங்கை அரசுடன் சேர்ந்து போராடும் போராளிகளினதும். புலம்பெயர் தமிழர்களின் மன உறுதியை உடைப்பதற்காக உளவியல் யுத்தம் செய்கிறார் என்று என்னை இங்கு திட்டியவர்கள் தான் அதிகம்.

2009 ஏப்றல்மாதமே போராளிகள் சரணடைவு ஆரம்பமாகிவிட்டிருந்தது. அதன் சாட்சிகள் பலர் ஐரோப்பாவிலும் ஊரிலும் போராளிகள் இருக்கிறார்கள். மே 18இன் பிறகு யாரும் ஒளிச்சிருந்து சரணடைஞ்சினமோ எனக்குத் தெரியாது.

நீங்கள் பொதுநிறுவனங்களை உங்கள் இராஜதந்திர நகர்வுகளால் அழைத்ததும் எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் சாதாரணமான ஒருத்தி. என்னால் இராஜதந்திர நகர்வையோ அல்லது உலக அரசியலையோ புரியும் அளவு நான் உலக அரசியலை படிக்கவும் இல்லை. இந்தப் பெரிய மாயாஜாலங்களை புரிவதற்கு அதற்கென்று பெயரெடுத்தவர்களாலேயே முடியும்.

எனக்கு விளங்காத விசயங்களை நீங்கள் சொல்லியும் நான் விளங்கிக் கொள்ளப்போறதும் இல்லை.

நீங்கள் பலபேரை சிறையிலிருந்து எடுத்துவிட்டதற்கு ஐரோப்பிய அமைப்பொன்று உதவியதாக எழுதயிருந்தீர்கள். அந்த உதவியமைப்பின் தொடர்பைத்தான் தந்துதவச் சொல்லி இங்கு எழுதினேன். நீங்கள் வலையமை(டை)ப்பு என்று எனக்கு விளங்காத வலைகளை கொண்டு வந்து விளக்கம் தாறீங்கள். அப்ப அந்த ஐரோப்பிய அமைப்பின் விபரத்தை தனிமடலில் அனுப்பிவிடுங்கோ.

அன்றைய நேரத்தில் நீங்கள் நேசக்கரத்தின் ஜேர்மனிய பொறுப்பாளர் மட்டுமே ஆனால் எனக்கு உதவிகள் சேர்த்ததற்காக இதே யாழ் கள உறவுகளிடம் இருந்து தூசணம் தாங்கிய மின்னஞ்சல்களும் தொ.பே அழைப்புக்களும் வந்திருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். இதே யாழ் உறவு ஒருவர் என்னையும் உங்களையும் தொடர்பு படுத்தியும் எழுதியிருந்தார். அதன் பதிவு என்னிடம் இன்றும் இருக்கிறது. அவரிற்கான பதிலைத்தான் இங்கு கொடுத்திருக்கிறேன் மற்றபடி உங்களிற்கு ஜரோப்பிய நிறுவனத்தின் உதவி தேவைப் பட்டால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். தாராளமாய் தரலாம்.

2009 ஏப்றலோடு நீங்கள் நேசக்கரம் வேண்டாமெண்டு ஒதுங்கீட்டீங்கள். அப்ப எங்கை நான் யேர்மனி பொறுப்பாளராக இருந்தேனோ ? நான் எங்கேயும் பொறுப்பாளராயிருந்ததில்லை வெறும் ஊழியராகவே இருந்து வருகிறேன். மற்றும் நான் ஒரு அமைப்பின் விபரத்தை தாங்கோ என்று கேட்டதற்கு நேசக்கரத்தை உள்ளை கொண்டு வந்து கருத்தை எழுதுவது கூட தேவையற்றது. கேட்ட கேள்விக்கு சுருக்கமாக பதிலை தந்திருந்தால் இந்த மக்கு மண்டைக்கு போதுமாயிருந்திருக்கும்.

அப்போது எழுதியவருக்காக இப்ப இந்தத்திரியில் விவாதத்துக்கு அப்பாற்பட்டு எழுதுவது நீங்களே. இங்கு அந்தக் கருத்தாளர் எதையும் இப்போது எழுதவுமில்லை. இப்போது அந்தக் கருத்தாளரை இங்கே வாவென்றழைப்பது கூட வில்லங்க அழைப்புத்தான் அது உங்கள் பிரச்சனை. அந்த ஐரோப்பிய நிறுவனத்தின் தொடர்பு முகவரி அல்லது தொலைபேசியிலக்கத்தை தனிமடலில் போட்டீர்களானால் பேருதவியாக இருக்கும்.

அடுத்ததாக கே.பியர் சிபரிசிலை வேலை செய்யிறாரா இல்லையா அவரின் இதம் சுத்தியா (சுத்தியல்)இல்லை கடப்பாறையா எங்கள் வலைப் பின்னல் தொடர்புகளை யெல்லாம் புரிந்து கொள்ளும் வயதோ அனுபவமோ உங்களிற்கு கிடையாது

நீங்களே தான் இன்னொருவருக்கு எழுதியிருந்தீங்கள் உதவி ஏதும் தேவையென்றால் கே.பிமூலம்

செய்து தரமுடியும் தொடர்பு கொள்ளச் சொல்லி. அதற்குத்தான் கேட்டேன் கே.பி சிபார்சு இருந்தால் மட்டுமா உதவுவார் என்று.

கே.பி அவர்கள் தனது அறிக்கைகளில் அல்லது பேட்டிகளில் எங்கும் சொன்னதாய் நினைவில்லை யார் மூலமேனும் சிபார்சோடு வந்தாலே உதவுவேன் என்று. போராளிகள் மறுவாழ்வு , முன்னேற்றம் என சிந்திப்பதாக சொல்லும் கே.பி ஏன் இன்னொருவரின் சிபாரிசில் உதவ வேண்டும் ?விளங்காததை விளங்கிக் கொள்வதற்காகவே கேட்டேன்.அதுக்காக இப்பிடி விளங்காத பதிலையா தர வேணும்.

நம்ம அறிவுக்கு தெரிஞ்சது கரைவலை , கம்பான் கயிறு இதுகள் தான்.

உங்கள் பெரீய வ(த)லைப்பின்னல் எனக்குத் தெரியாது.

நான் உங்கள் பின்னல்களை கேட்கேல்லயே. அந்த ஐரோப்பிய நிறுவனத்தின் தொடர்பு முகவரி அல்லது தொலைபேசியை தந்துதவினால் நாங்கள் ஆட்களை வெளியில எடுக்க உதவி கேட்கலாம்.

கேள்வி கேட்டதுக்காக இப்பிடி பெரிய பின்னலை போட்டிருக்கத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

அந்த ஐரோப்பிய நிறுவனத்தின் தொடர்பினை தரமுடியுமா ? பல போர்க்கைதிகள் , அரசியல் கைதிகளுக்கான விடுதலைக்கு நீங்கள் குறித்த ஐரோப்பிய அமைப்பிடமிருந்து உதவி பெற முடியுமா ? உதவி பெற முடியுமென்றால் விபரத்தை தந்துதவுங்கள்.

   

கே.பி சிபார்சுகள் மூலம் மட்டுமா உதவுவார் ? அப்போ கே.பியும் உள்மன சுத்தியோடு உதவவில்லையா ?

 

எழுத்து எழுத்தோட இருக்கனும், நீங்க இப்படியெல்லாம் கேட்க கூடாது கேட்க கூடாது. :D

 

அவர் எழுதுவதெல்லாம் உண்மையென்று நம்பிவிட்டீர்கள். :rolleyes:

 

வேறு யார் யார் உள் மன சுத்தியில்லாமல் உதவுகின்றார்கள்?

 

விரைவில் இன்னுமொரு ஆய்வுக்கட்டுரையை சாத்திரியிடம் ஏதிர்பாருங்கள். ஏன் கேபியைபற்றி ஆய்வு கட்டுரை இதுவரை வெளியிடவில்லை?

Link to comment
Share on other sites

2009 ஏப்றல்மாதமே போராளிகள் சரணடைவு ஆரம்பமாகிவிட்டிருந்தது. அதன் சாட்சிகள் பலர் ஐரோப்பாவிலும் ஊரிலும் போராளிகள் இருக்கிறார்கள். மே 18இன் பிறகு யாரும் ஒளிச்சிருந்து சரணடைஞ்சினமோ எனக்குத் தெரியாது.

நீங்கள் பொதுநிறுவனங்களை உங்கள் இராஜதந்திர நகர்வுகளால் அழைத்ததும் எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் சாதாரணமான ஒருத்தி. என்னால் இராஜதந்திர நகர்வையோ அல்லது உலக அரசியலையோ புரியும் அளவு நான் உலக அரசியலை படிக்கவும் இல்லை. இந்தப் பெரிய மாயாஜாலங்களை புரிவதற்கு அதற்கென்று பெயரெடுத்தவர்களாலேயே முடியும்.

எனக்கு விளங்காத விசயங்களை நீங்கள் சொல்லியும் நான் விளங்கிக் கொள்ளப்போறதும் இல்லை.

நீங்கள் பலபேரை சிறையிலிருந்து எடுத்துவிட்டதற்கு ஐரோப்பிய அமைப்பொன்று உதவியதாக எழுதயிருந்தீர்கள். அந்த உதவியமைப்பின் தொடர்பைத்தான் தந்துதவச் சொல்லி இங்கு எழுதினேன். நீங்கள் வலையமை(டை)ப்பு என்று எனக்கு விளங்காத வலைகளை கொண்டு வந்து விளக்கம் தாறீங்கள். அப்ப அந்த ஐரோப்பிய அமைப்பின் விபரத்தை தனிமடலில் அனுப்பிவிடுங்கோ.

2009 ஏப்றலோடு நீங்கள் நேசக்கரம் வேண்டாமெண்டு ஒதுங்கீட்டீங்கள். அப்ப எங்கை நான் யேர்மனி பொறுப்பாளராக இருந்தேனோ ? நான் எங்கேயும் பொறுப்பாளராயிருந்ததில்லை வெறும் ஊழியராகவே இருந்து வருகிறேன். மற்றும் நான் ஒரு அமைப்பின் விபரத்தை தாங்கோ என்று கேட்டதற்கு நேசக்கரத்தை உள்ளை கொண்டு வந்து கருத்தை எழுதுவது கூட தேவையற்றது. கேட்ட கேள்விக்கு சுருக்கமாக பதிலை தந்திருந்தால் இந்த மக்கு மண்டைக்கு போதுமாயிருந்திருக்கும்.

அப்போது எழுதியவருக்காக இப்ப இந்தத்திரியில் விவாதத்துக்கு அப்பாற்பட்டு எழுதுவது நீங்களே. இங்கு அந்தக் கருத்தாளர் எதையும் இப்போது எழுதவுமில்லை. இப்போது அந்தக் கருத்தாளரை இங்கே வாவென்றழைப்பது கூட வில்லங்க அழைப்புத்தான் அது உங்கள் பிரச்சனை. அந்த ஐரோப்பிய நிறுவனத்தின் தொடர்பு முகவரி அல்லது தொலைபேசியிலக்கத்தை தனிமடலில் போட்டீர்களானால் பேருதவியாக இருக்கும்.

நீங்களே தான் இன்னொருவருக்கு எழுதியிருந்தீங்கள் உதவி ஏதும் தேவையென்றால் கே.பிமூலம்

செய்து தரமுடியும் தொடர்பு கொள்ளச் சொல்லி. அதற்குத்தான் கேட்டேன் கே.பி சிபார்சு இருந்தால் மட்டுமா உதவுவார் என்று.

கே.பி அவர்கள் தனது அறிக்கைகளில் அல்லது பேட்டிகளில் எங்கும் சொன்னதாய் நினைவில்லை யார் மூலமேனும் சிபார்சோடு வந்தாலே உதவுவேன் என்று. போராளிகள் மறுவாழ்வு , முன்னேற்றம் என சிந்திப்பதாக சொல்லும் கே.பி ஏன் இன்னொருவரின் சிபாரிசில் உதவ வேண்டும் ?விளங்காததை விளங்கிக் கொள்வதற்காகவே கேட்டேன்.அதுக்காக இப்பிடி விளங்காத பதிலையா தர வேணும்.

நம்ம அறிவுக்கு தெரிஞ்சது கரைவலை , கம்பான் கயிறு இதுகள் தான்.

உங்கள் பெரீய வ(த)லைப்பின்னல் எனக்குத் தெரியாது.

நான் உங்கள் பின்னல்களை கேட்கேல்லயே. அந்த ஐரோப்பிய நிறுவனத்தின் தொடர்பு முகவரி அல்லது தொலைபேசியை தந்துதவினால் நாங்கள் ஆட்களை வெளியில எடுக்க உதவி கேட்கலாம்.

கேள்வி கேட்டதுக்காக இப்பிடி பெரிய பின்னலை போட்டிருக்கத் தேவையில்லை.

 

இப்பிடித்தான் அன்று அனைத்துலகத்தின்  பொறுப்பாளர்  கஸ்ரோவும்  2003 ம் ஆண்டு எகத்தாளமாக  கதைத்திருந்தார். ஆக்கியவர்களால்  அழிக்கவும் முடியும் என்று சொல்லியிருந்தேன்  அதனை செய்தும் முடித்திருத்தோம் அதே போலத்தான்  உங்களிற்கும்  சொல்கிறேன்  ஆக்கியவர்களால் அழிக்கவும் முடியும். ஆனால்  நேசக்கரம் அமைப்பை அழிக்க விரும்பவில்லை  முடிவு உங்கள் கையில்.

 

Link to comment
Share on other sites

இப்பிடித்தான் அன்று அனைத்துலகத்தின்  பொறுப்பாளர்  கஸ்ரோவும்  2003 ம் ஆண்டு எகத்தாளமாக  கதைத்திருந்தார். ஆக்கியவர்களால்  அழிக்கவும் முடியும் என்று சொல்லியிருந்தேன்  அதனை செய்தும் முடித்திருத்தோம் அதே போலத்தான்  உங்களிற்கும்  சொல்கிறேன்  ஆக்கியவர்களால் அழிக்கவும் முடியும். ஆனால்  நேசக்கரம் அமைப்பை அழிக்க விரும்பவில்லை  முடிவு உங்கள் கையில்.

 

 

இதை நீங்கள் ஒரு கட்டுரையாக எழுதினால் நாங்களும் படிப்போம் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவில் தமிழனின் மரணத்தை நிறுத்தவே இந்தப்போராட்டம் ஆரம்பித்தது என்பதை மறந்துவிட்டு அகிலன் பேசிக்கொண்டிருக்கிறார்..இலங்கையில் தமிழன் போராடி இருக்காவிட்டாலும் அழிந்திருப்பான்...இல்லை என்று அகிலன் நிரூபிக்கட்டும் பார்ப்பம்...ஒரு தமிழனாக இருந்துகொண்டு தன் கையை எடுத்து ன் கண்ணை குத்துவதை விட அகிலன் பேசாமல் இருந்திருக்கலாம்...

 

Link to comment
Share on other sites

இதை நீங்கள் ஒரு கட்டுரையாக எழுதினால் நாங்களும் படிப்போம் அல்லவா?

 

என்னுடைய கட்டுரைகளை படிப்பதில்லையென நீங்களே யாழில் எழுதியிருக்கிறீர்கள்.  :lol: :lol:  எனவே அது கட்டுரையாக வெளி வராது :icon_mrgreen:

Link to comment
Share on other sites

என்னுடைய கட்டுரைகளை படிப்பதில்லையென நீங்களே யாழில் எழுதியிருக்கிறீர்கள்.  :lol: :lol:  எனவே அது கட்டுரையாக வெளி வராது :icon_mrgreen:

 

அப்பாடா நிம்மதி :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித்தான் அன்று அனைத்துலகத்தின்  பொறுப்பாளர்  கஸ்ரோவும்  2003 ம் ஆண்டு எகத்தாளமாக  கதைத்திருந்தார். ஆக்கியவர்களால்  அழிக்கவும் முடியும் என்று சொல்லியிருந்தேன்  அதனை செய்தும் முடித்திருத்தோம் அதே போலத்தான்  உங்களிற்கும்  சொல்கிறேன்  ஆக்கியவர்களால் அழிக்கவும் முடியும். ஆனால்  நேசக்கரம் அமைப்பை அழிக்க விரும்பவில்லை  முடிவு உங்கள் கையில்.

 

 

ஒரு தமிழனாய் இருந்து கொண்டு இப்படி எழுத வெக்கமாயில்லை :o

Link to comment
Share on other sites

இன்னும் திருந்தல்லையா யாரும்...

 

நீங்கள் திருந்தியிருந்தால் மகிழ்ச்சியே

ஒரு தமிழனாய் இருந்து கொண்டு இப்படி எழுத வெக்கமாயில்லை :o

 

 வெட்கம் இல்லை அதுதான் தமிழன். :icon_mrgreen: அதை விட சவால்  என்பது  எனக்கு மிகவும் பிடித்தமானது   அது யாராக இருந்தாலும். நேரடியாக மோதும் வரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 
 
 
 

 

 

எனக்கு தெரிந்து மக்களின்  விருப்பம் என்ன என்று தெரிந்த ஒரே ஆள் நீங்கள்தான்.

 
 
எனக்கு ஒரு சின்ன ஆசை, நீங்கள் இறக்கு முன்பு அதை யாரிடமாவது சொல்லிவிடுங்கள். அடுத்த சந்ததி அறிந்து கொள்ள வசதியாய் இருக்கும். 

 

 

 

 

மக்களின்ட விருப்பம் என்ன என்டால் புலிகள் போராட வேணும்.நாடு பிடிச்சு கொடுக்க வேண்டும் ஆனால் எங்கட வீட்டிலிருந்து ஒருத்தரையும் போராட அனுப்ப மாட்டோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ...   பிரபாகரன் தன் குடும்பத்துக்காகவும் தனக்காகவும் தான் போராடினவரா...??  விளக்கத்துக்கும் கட்டுரைக்கும் மிக்க நண்றி...  

 

இதை சிங்களவன் கூட இன்னும் சொல்ல இல்லை... 

 

சிங்களவன் எம்மவர்கள் காட்டிக்கொடுத்து தொடங்கினவன்.. ஆனால் ஒன்றும் இன்னும்.. சரிவரல்ல.

 

பெரிய மனிதப் புதைகுழி என்று ஜெயசிக்குறு காலத்தில் உயிரிழந்த.. (எம் ஐ 18 மீதான தாக்குதலில்) சில சிங்களப் படைவீரர்களின் எலும்புகளை மீட்டு படம் காட்டினார்கள்.. அது பெரிசாக எடுபடவில்லை.

 

அதன் பின்னர் லயன் எயாரை கிண்டினார்கள்.. இப்ப கறுப்புப் பெட்டியும் இல்ல.. கண்டெடுத்த அடையாள அட்டைக்குரியவரும் உயிரோட... என்ன செய்யுறது என்று தெரியாமல்.. பைல் குளோஸ் ஆகப் போகுது. அதுவும் காப்புறுதி நிறுவனங்களிடம்.. பெருந்தொகையான நஸ்ட ஈட்டை பெறவே இது கிண்டப்படுகிறது. தமிழ் மக்கள் மீதான அக்கறையில் அல்ல..!  இன்று வரை விபத்துக்கான காரணம் தெரியாமல்.. சிறீலங்கா விமானப்படை சிவில் விமானம் என்று சொல்லி நஸ்ட ஈடுபெற முடியாமல் தவிக்கிறது.

 

லயன் எயாருக்கு முதல் தொப்பு தொப்பென்று விழுந்த அவ்ரோ.. அன்ரனோக்கள் பற்றி ஏன் இன்னும் விசாரிக்கல்ல..!

 

இந்த அகிலனிற்கும் சரி.. இங்குள்ள மாற்றுக்கருத்து விற்பன்னர்களுக்கும் சரி.. போரியல் இலக்குகளை போர்க்களத்தில் தாக்குவதில் உள்ள விதிமுறைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒட்டுக்குழுக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டம் முழுவதும்.. எதிரி இராணுவ இலக்குகளை தாக்கியதை விட எதிரி இலக்குகளில் கடமையாற்றியதே அதிகம். அந்த வகையில்.. அவர்களுக்கு சொந்த மக்கள் மீது படுகொலை செய்த பழக்கம் உண்டே தவிர போர் செய்தது கிடையாது.

 

முல்லைத்தீவு மட்டுமல்ல.. மன்னார் அடம்பனில் விக்ரர் அண்ணா முதன்முதல் தென்னாபிரிக்க வெள்ளையின அரசு வழங்கிய.. பவளை தாக்கி அழித்து.. இராணுவச் சிப்பாய்களின் உடலங்களைக் கைப்பற்றி வீரகாவியமானது முதல் போர்க்களத்தில் இறந்த சிங்கள.. இராணுவ வீரர்களின் உடலங்கள் கைப்பற்றப்பட்டு மக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு பின்னர் கையளிக்கப்பட்டுள்ளன. மக்கள் அவற்றை பார்வையிட்டதோடு சரி.. வன்புணரவில்லை. மக்களுக்கு காட்சிப்படுத்துவது அதுவும் சீருடையுடன் காட்சிப்படுத்துவது என்பது பொதுவான நிகழ்வு தான்.

 

மேலும்.. பெரும்பாலான உடலங்கள் இராணுவ மரியாதைகளுடன் கையளிக்கப்பட்டும் அல்லது தகனம் செய்யப்பட்டும் அல்லது அடக்கம் செய்யப்பட்டும் வந்த நிலையில்.. 1990களின் ஆரம்பத்தில் மணலாறு முகாம் மீதான தாக்குதலில் வீரகாவியமான 180 பெண் போராளிகளை உருக்குலைத்து ஒட்டுக்குழு புளொட் கும்பலும்.. இராணுவமும் காட்சிப்படுத்தி சிங்களவர்களைக் குசிப்படுத்தியது. ஆடைகள் களையப்பட்டு உடலங்கள் காட்சிப்படுத்தப்பட்ட வரலாற்றை ஆரம்பித்து வைத்தார்கள்.. சிங்களவர்கள். அத்தோடு போச்சிப் போத்தல்களும் வைக்கப்பட்டு உடலங்கள் கையளிக்கட்டிருந்தன. இது அடிப்படை சர்வதேச போரியல் விதிகளுக்கு முரணான செயலாகும்.

 

ஓயாத அலைகள் 1 இல் இறந்த இராணுவ வீரர்களின் உடலங்களை பெண் புலிகள் பொறுப்பேற்று ஒப்படைக்க முன் வந்தார்கள். அந்தத் தாக்குதலில் பெண் புலிகள் அதிகம் பங்கேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

இங்கு மக்கள் 1500 உடலங்களை பார்வையிட்டு மகிழ்ந்தார்கள் என்று கருத்தெழுதுபவர்கள் அந்தக் காலத்தில் களத்தில் வாழ்ந்தே இருக்காத மனிதர்கள் என்பது புரிகிறது. அன்றைய காலத்தில் இறந்த இராணுவ வீரர்களின் உடலங்களை சேகரிப்பது.. ஆயுதங்களைச் சேகரிப்பது என்று மக்கள் தன்னார்வப் பணி ஆற்றினர்.

 

பெருந்தொகையான கறுப்பு பாக்குகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்க.. இறந்த இராணுவ வீரர்களின் கணக்கு வெளிய தெரியும் என்று கருதிய சிங்கள அரசு அவற்றை வழங்க மறுத்துவிட்ட நிலையில்.. அந்த இராணுவத்தினரில் பலர் மக்களாலும் புலிகளாலும் அடக்கம் செய்யப்பட்டனர். முல்லைத்தீவு இராணுவ தளம் என்பது இராணுவ இலக்கு. அது ஒரு போர்த்தளத் தாக்குதல். அதில் இறந்தது மக்களோ அல்லது சரணடைந்த இராணுவத்தினரோ அல்ல. முகாமிட்டிருந்த படையினர். அவர்கள் சரணடையத் தயாராக உள்ளதாக அரசோ வெளியாரோ சொல்லவில்லை. மாறாக இறுதிவரை மீட்புப் போரையே சிறீலங்கா வான் வழி தரையிறக்கம் உட்பட பல யுக்திகளைக் கொண்டு செய்தது. இறுதியில்... அது அரச கெளரவம் சந்திரிக்காவின் அரசியலுக்காக சிங்களப் படையினரை கைவிட்டது.

 

முள்ளிவாய்க்கால் என்பது இராணுவ இலக்கல்ல. சிறீலங்கா அரசு பிரகடனப்படுத்திய யுத்த சூனியப் பிரதேசம். அங்கு அடைக்கலம் தேடிய அனைவரினதும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஒரு பிரமாண்டமான அரச இராணுவ இயந்திரத்திற்கு உள்ள சர்வதேசக் கடப்பாடு ஆகும். அது சர்வதேசச் செஞ்சிலுவை.. யு என் எச் சி ஆர் போன்றவற்றோடு தொடர்பில் இருந்த மக்கள் சூழ்ந்த பகுதி. மேலும் தொடர்ந்தும் போரிடுதல் சாத்தியமற்ற இராணுவப் புறநிலையில்... சரணடைதல் தொடர்பில் சர்வதேச தகவல்கள் பரிமாறப்பட்ட பகுதி.

 

ஆக முல்லைத்தீவு இராணுவ தளம் அழிப்பு = முள்ளிவாய்க்கால் என்ற சமன்பாடு.. புலிக்காய்சல்.. ஒட்டுக்குழுக்களுக்கு சந்தோசமான சமன்பாடாக இருக்கலாம். ஆனால் உலகம் இரண்டிற்கும் உரிய வேறுபாட்டை நன்கே உணர்கிறது.

 

அனுராதபுரம் தாக்குதல் என்பது இராணுவ இலக்கு மீதான தாக்குதல். அதில் பங்கு கொண்ட புலிகளை காட்சிப்படுத்த வேண்டாம் என்பதல்ல புலிகளின் நிலைப்பாடு. அவர்களை நிர்வாணமாக்கி காட்சிப்படுத்தியதும் உடலங்களை தர மறுத்ததுமே போரியல் விதிகளுக்கு முரணானது. இதனை விளங்கிக் கொள்ளக் கூடிய பக்குவம் ஒட்டுக்குழுக்களுக்கும் இல்லை.. இன்று தங்களின் பெயரும் அடிபடனும் என்றிட்டு கட்டுரை வரையும் விற்பன்னர்களுக்கும் இல்லை..!

 

சுனாமி அனர்த்தத்தின் போதும்.. மனித உயிர்கள் ஆயிரக்கணக்கில் அழிக்கப்பட்ட போது மக்கள் வரிசைப்படுத்திப் புதைத்தார்கள் தான். அதற்காக அவை பார்வையிடல்கள் அல்ல..!

 

இன்று சிங்களம் நடத்திய எத்தனையோ திட்டமிட்ட மக்கள் மீதான படுகொலைகள் மறைக்கப்பட்டு வரும் நிலையில் ஒட்டுக்குழுக்கள் மேற்கொண்ட திட்டமிட்ட மக்கள் மீதான படுகொலைகள் மறைக்கப்பட்டு வரும் நிலையில்.. இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட வரலாறுகளை தமக்கு ஏற்ற வடிவில் திரித்து எழுதி சிங்கள அரசு சர்வதேச அரங்கில் எதிர்நோக்கியுள்ள போர்க்குற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை யாழ் களமும் சேர்ந்து மலினப்படுத்த இப்படியான அற்தபுஸ்டியற்ற கட்டுரைகளை ஒரு சிலரின் காட்டுமிராண்டித்தனமான கண்மூடித்தனமான புலி எதிர்ப்பை மையமாக வைத்து அனுமதிக்கின்றனர் யாழில் சிலர்.

 

இவர்களுக்கு வாகரைப் படுகொலைகள் தெரிவதில்லை. இவர்களுக்கு செம்மணிப்படுகொலைகள் தெரிவதில்லை. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தெரிவதில்லை. ஒட்டுக்குழுக்கள் செய்து வரும் படுகொலைகள் தெரிவதில்லை. தெரிவதெல்லாம் புலிகள் செய்த தாக்குதல்களும்.. தவறுகளுமே தான்.

 

ஐநா மூவர் குழு அறிக்கையில் புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. விடுதலைப்புலிகள் தமக்கு சரியான சந்தர்ப்பம் அளித்தால் அதனை ஏற்றுக்கொண்டு விசாரணையில் பங்கெடுக்க தயாராக இருப்பதாக அறிவித்தும் விட்டுள்ளனர். இதன் பின்னரும் புலிகளில் குறைபிடிச்சுக் கொண்டு திரிவது சுத்த மனநோய் ஆகும்..!

 

ஆனால் மனித உரிமைகள் அமைப்புக்கள் தொடர்ச்சியாக  சாட்டி வரும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள ஒரு ஒட்டுக்குழுவாவது முன் வந்த சரித்திரம் உள்ளதா. இல்லை. அவர்களும் சிங்கள எதிரியும்.. இந்திய வல்லாதிக்கமும் இன்னும் மனிதப் படுகொலைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்.. இந்தக் கட்டுரைகளின் நோக்கம் என்பது புலிகளை எதுவும் செய்யாது.. அப்பாவித் தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசின்... இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்களை தான் மறைக்கும். அதன் நோக்கமே இக்கட்டுரைகளின் வரவும்.. வரைவும்.

 

முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்கு உழைப்பதாக மக்களிடம் காசு வாங்குபவர்கள் கூட இங்கு இக்கட்டுரைகளுக்கு விருப்பு வாக்களித்திருக்கிறார்கள்.

 

இந்தியப் படைகள் காலத்தில் பிள்ளை பிடித்து.. பலாத்காரமாகக் கொண்டு சென்று TNA என்ற இராணுவ கைக்கூலி இயந்திரத்தை இயக்க..  தயார் செய்யப்பட்டு மக்கள் படுகொலைகளில் ஈடுபடுத்தப்பட்டு.. ஒட்டுக்குழுக்களால் பலியிடப்பட்ட எம் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் யாரும் இரக்கம் காட்டுவதில்லை. புலிகளின் தாக்குதலில் அவர்களும் இந்தியப் படைகளோடு சேர்ந்து இறக்க வேண்டி வந்த போது.. அதனை இயக்கிய ஒட்டுக்குழு ஆக்கள் ஒரிசாவிற்கு தப்பி ஓடிவிட்டார்கள். அன்று நிர்க்கதியான எத்தனையோ இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் புலிகளே ஆதரவும் அளித்தனர். இன்று.. புலிகளால் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டதாகச் சொல்லி அவர்களுக்காக கண்ணீர் வடிப்பவர்கள்.. சிங்களப் படைகளால் எமது பெண்கள் பலவந்தப்படுத்தப்பட்டு படையிலும்.. பாலியல் தொழில் விடுதிகளிலும் விடப்படுவதை இட்டு என்ன எழுதுகிறார்கள். என்ன மீட்சி நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். எல்லாவற்றையும் புலம்பெயர் மக்கள் மீதான குற்றமாகவே அவர்கள் தலையில் கட்டிவிடுகிறார்கள். காசுக்கும் தங்கள் சுய விளம்பரத்திற்கும்..அவர்களிடமே கையேந்துகிறார்கள்.

 

சிங்களத்தோடு சேர்ந்து ஒட்டுக்குழுக்கள் இதனை செய்கின்றதை இன்னும் வேடிக்கை பார்க்கும் இதே கூட்டமே ஓயாத அலைகள் 1 வைத்து பிரிச்சு மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் இருந்து இவர்களின் நோக்கங்களை தெரிந்து கொண்டு மக்கள் இந்த வகையான கட்டுரைகள் மற்றும் அவற்றைக் காவித்திருபவர்கள் தொடர்பில் நல்ல விழிப்புணவோடு இருப்பதுவே அவசியம்..! இவர்களே எமது இனத்திற்குள் இன்று களைகளாக தோற்றப் பெற்றிருக்கும் சன நாய் அகத் தோல் போர்த்திய குள்ள நரிகள்..! ஒட்டுக்குழு விசுவாசிகள். முன்னாள் ஒட்டுக்குழுவினர்.

 

இவர்களையும் இவர்களுக்காக துதிபாடுபவர்களின் உள்நோக்கங்களையும் புரிந்து கொள்வதும் இனங்கண்டு புறக்கணிப்பதுவுமே.. இன்றைய தேவை..! :icon_idea::)

Link to comment
Share on other sites

அகிலன் இந்த கட்டுரை வாசித்த கூட்டதிற்கு நான் சென்றிருந்தேன் .அவர் இதை வாசிக்கும் போது சற்று உணர்ச்சி வசப்பட்டே வாசித்தார் ,அவருக்கு இந்த சமூகத்தினல் இருக்கும் கோபம் தான் அதற்கு காரணம் என நினைக்கின்றேன் .

மிகவும் உண்மையான நேர்மையான அவரது ஆழ்மனத்தில் இருந்து வந்த ஒரு தரமான ஒரு கட்டுரை ,அகிலன் வாசித்துமுடிய பலராலும் பாராட்டபட்டது.

முக புத்தகத்தில் பதியப்பட்டு உலகெங்கும் இருந்து நல்ல விமர்சனங்கள் பலரால் எழுதப்பட்டிருந்தது .

 

யாழ் வாசகர்கள் ,

வழக்கம் போல இங்கு கட்டுரை வாசிக்காமலே ,எழுதியதை விழங்காமலே பின்னூட்டங்கள் .

அகிலன் யார் என்று தெரியாமல் பின்னூட்டங்கள் .

மாட்டை பற்றி எழுத சொன்னால் மாட்டை பிலா மரத்தில் கட்டிவிட்டு பிலா மரத்தை பற்றிய பின்னூட்டங்கள் .

தொடர்ந்தும் வகுப்பில் கடைசி வாங்கில் இருந்தவர்களை நினைவு படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள் .

Link to comment
Share on other sites

அகிலன் இந்த கட்டுரை வாசித்த கூட்டதிற்கு நான் சென்றிருந்தேன் .அவர் இதை வாசிக்கும் போது சற்று உணர்ச்சி வசப்பட்டே வாசித்தார் ,அவருக்கு இந்த சமூகத்தினல் இருக்கும் கோபம் தான் அதற்கு காரணம் என நினைக்கின்றேன் .

மிகவும் உண்மையான நேர்மையான அவரது ஆழ்மனத்தில் இருந்து வந்த ஒரு தரமான ஒரு கட்டுரை ,அகிலன் வாசித்துமுடிய பலராலும் பாராட்டபட்டது.

முக புத்தகத்தில் பதியப்பட்டு உலகெங்கும் இருந்து நல்ல விமர்சனங்கள் பலரால் எழுதப்பட்டிருந்தது .

 

யாழ் வாசகர்கள் ,

வழக்கம் போல இங்கு கட்டுரை வாசிக்காமலே ,எழுதியதை விழங்காமலே பின்னூட்டங்கள் .

அகிலன் யார் என்று தெரியாமல் பின்னூட்டங்கள் .

மாட்டை பற்றி எழுத சொன்னால் மாட்டை பிலா மரத்தில் கட்டிவிட்டு பிலா மரத்தை பற்றிய பின்னூட்டங்கள் .

தொடர்ந்தும் வகுப்பில் கடைசி வாங்கில் இருந்தவர்களை நினைவு படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள் .

 

 

 

அதற்காக அரசியல் கருத்தையும்  தன்னோடு காவி வந்து கொட்டும் போது ஏனையவர்களின்  அரசியல் கருத்துக்களையும் வாசிக்க வேண்டும்.மற்றையவர்கள் ஆபிரிக்காவில் பிறந்து வளரவில்லை.அகிலன் பிறந்த  மண்ணில் தான் இங்கு கருத்து எழுதியவர்களும் பிறந்து வளர்ந்து பலவற்றை அனுபவமாக கண்டவர்கள்.
 
முன் வாங்கில் இருந்த அர்ஜுனின் கருத்தை விளங்க முடியாமல் பலர் தத்தளிப்பதை காண்கிறோம்.இப்படி ஒரு ஜீனியசை தமிழ் மக்கள் பெற என்ன தவம் செய்திருக்க வேண்டும் என்று பலர் பஸ்களிலும் கார்களிலும் முணுமுணுப்பதை உணர முடிகிறது. ஏன் வெள்ளைகள் கூடி இப்படி ஒரு ஜீனியசை மார்க்கம் நகரில் கண்டீர்களா என்று கேட்குமளவுக்கு அவரின் கருத்துக்கள் இருக்கின்றதாம்.குறிப்பாக பிலா மரத்தை உதாரணம் காட்டினார் பாருங்கள். சா நினைக்கவே புல்லரிக்கிறது.  :D  :D
Link to comment
Share on other sites

அகிலன் பிறந்த  மண்ணில் தான் இங்கு கருத்து எழுதியவர்களும் பிறந்து வளர்ந்து பலவற்றை அனுபவமாக கண்டவர்கள்.-நுணா .

 

இங்குதான் உங்கள் அறியாமை வெளிவருகின்றது .எப்படி எல்லோரும் பிரபாகரன் ஆக முடியாதோ அதே மாதிரித்தான் எல்லோரும் அகிலனாகவும் முடியாது .

கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல் .

 

Link to comment
Share on other sites

அகிலன் பிறந்த  மண்ணில் தான் இங்கு கருத்து எழுதியவர்களும் பிறந்து வளர்ந்து பலவற்றை அனுபவமாக கண்டவர்கள்.-நுணா .

 

இங்குதான் உங்கள் அறியாமை வெளிவருகின்றது .எப்படி எல்லோரும் பிரபாகரன் ஆக முடியாதோ அதே மாதிரித்தான் எல்லோரும் அகிலனாகவும் முடியாது .

கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல் .

 

 

அகிலன் தனது சகோதரன் கொல்லப்பட்டதுக்கு எழுதியதை  போல் ஏன் எழுத முடியாது? பலர் இதனை விட  யதார்த்தமாக எழுத கூடியவர்கள் உள்ளனர். அகிலனை விட பல மடங்கு குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் இந்த  தமிழீழத்தில் இல்லை என்பது உங்கள் அறியாமை. நாலு வசை பாடினால் உங்களுக்கு சிறந்த எழுத்தாளராக தெரியலாம். உங்களின் நக்கலை அவர் காவி வந்தால் உங்களுக்கு அவர் சிறந்த எழுத்தாளராக இருக்கலாம்.மற்றவர்களுக்கு அவர் அப்படி தென்படவில்லையே.
 
பிரபாகரன் ஏன் பங்கருக்குள்ளே இருந்தவர்  போன்ற நக்கல்களை எழுதிய நீங்கள் பிரபாகரன் போன்ற ஒரு தலைவராக எல்லோரும் ஆக முடியாது என நீங்கள் எழுதி உங்கள் சந்தர்ப்பவாதத்தை காட்டுகிறது.
Link to comment
Share on other sites

இப்பிடித்தான் அன்று அனைத்துலகத்தின்  பொறுப்பாளர்  கஸ்ரோவும்  2003 ம் ஆண்டு எகத்தாளமாக  கதைத்திருந்தார். ஆக்கியவர்களால்  அழிக்கவும் முடியும் என்று சொல்லியிருந்தேன்  அதனை செய்தும் முடித்திருத்தோம் அதே போலத்தான்  உங்களிற்கும்  சொல்கிறேன்  ஆக்கியவர்களால் அழிக்கவும் முடியும். ஆனால்  நேசக்கரம் அமைப்பை அழிக்க விரும்பவில்லை  முடிவு உங்கள் கையில்.

 

 

இந்தக்கருத்தை நிர்வாகம் எக்காரணம் கொண்டும் அழித்துவிட வேண்டாமென வேண்டிக்கொள்கிறேன். இந்த எகத்தாளத்திற்கு எனது பதிலை வேலை முடிந்து வந்ததும் எழுதுகிறேன்.

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.