Jump to content

அதிவேக நெடுஞ்சாலை நீங்கள் வரவா? நாங்கள் வரவா?


Recommended Posts

அதிவேக நெடுஞ்சாலை நீங்கள் வரவா? நாங்கள் வரவா?

 

ddfewed.jpegயாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடை யில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில் இலங்கையும் சீனாவும் கைச்சாத்திட்டுள்ளன.  யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் ஏ9 பாதைக்கு மேலாக இந்த அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளது. கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் புகையிரத சேவையை நடத்தும் பொருட்டு புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாகி இருக்கின்றன. அதேநேரம் பலாலிக்கும் இரத்மலானைக் கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமான சேவையும் இடம்பெறுகின்றது.  இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும் புக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அதிரடியாகத் தேவைதானா? என்ற கேள்வி எழவே செய்யும்.

இந்திய வீடமைப்புத் திட்டம் இன்னமும் முழு மையடையாத நிலையில் - இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்கு வீட்டுத் திட்டம் போதுமானதல்ல என்ற புள்ளி விபரங்களுக்கு மத்தியில்,  யாழ் - கொழும்புக்கு இடையில் அவசரமாக அரங்கேறும் அதிவேகப் பாதையானது முன்னு ரிமை அடிப்படையில் வள ஒதுக்கீடு இடம்பெற வில்லை என்பதை உறுதி செய்கிறது. தமிழர் பிரதேசங்களில் இன்னமும் மிதிவெடி அகற்றப்படாமல் - உடைந்து போன வைத்திய சாலைகள் கட்டப்படாமல் - மீள்குடியமரும் மக் களின் இருப்பிடங்கள் கவனிக்கப்படாமல் இருக்கும்போது, அது தொடர்பான திட்டங்களில் அல்லவா இலங்கை அரசும் சீனாவும் உடன்படிக்கை செய்ய வேண்டும்.

இதைவிடுத்து யாழ்ப்பாணத்துக்கும் கொழும் புக்கும் இடையில் அதிவேகப் பாதை அமைப்பது எந்தத் தேவை கருதியதென்ற சிந்தனையில், நீங்கள் வருவதற்கா? அல்லது நாங்கள் வருவ தற்கா? என்ற புரியாத புதிர் எழுகை பெறுகிறது. அதாவது எதிர்காலங்களில் வட மாகாணத்தில் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகள் தொடர்பில் போராட்டங்களை முன்னெடுப்பார்களாக இருந்தால், அதனைத் தடுப்பதற்கும் அடக்குவதற்குமாகத் தென் பகுதியிலிருந்து துருப்புக்களையும் கனரக வாகனங்களையும் அதிவேகமாகக் கொண்டு வருவதற்கு அதிவேகப் பாதை வசதியாக இருக்கும் என்பதால், நீங்கள் வருவதற்காகவா? என்ற கேள்வி முன்னெழுகிறது. மறுபக்கமாக 1958களில், 1983களில் நடந்த தென்பகுதிக் கலாசாரம் வரும் காலங்களில் அரங்கேறினால் சிதம்பரம் கப்பலுக்காக காத்தி ராமல் தமிழ் மக்களாகிய நீங்கள் அதிவேகமாக உங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு இந்த அதிவேக நெடுஞ்சாலை உதவும் என்ப தால்,நாங்கள் வருவதற்கா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகின்றது. இதில் எது சரி என்பதைத் தவிர வேறு ஏதே னும் காரணம் உண்டா? என்று கேட்பதற்கு இடம் இருப்பதாக தெரியவில்லை.

 
 
  •  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எங்களுக்குமில்லை, அவங்களுக்குமில்லை!

 

நயினாதீவுப் புத்தனுக்கு..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

400 Km தூரத்தை கடக்க 2 நாள் பயணம் செய்தவர்களுக்கு, 4 மணித்தியாலத்தில் கொழும்பு-யாழ் பிரயாணம் என்றால் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

நீர் உயர வரப்பு உயரும் என்கிற காலம் போய். நல்ல ரோடு இருந்தால் வாழ்வு வரும் என்று சொல்லுங்கோ.

அதென்ன இப்ப இருக்கிற A 9 க்கு மேல ரோடு போடுகிற என்கிற பீதிய கிளப்புகிறீர்கள். சில இடங்களில் வரலாம். முழு இடமும் அப்படி வந்தால். உலகத்தில் இருக்க எல்லா சிமேந்தையும் கொட்டித்தான் அப்படி கட்டலாம். பீதி கிளப்ப என்றே இருக்கிறார்கள். :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எங்களுக்குமில்லை, அவங்களுக்குமில்லை!

 

நயினாதீவுப் புத்தனுக்கு..... :D

 

நெல்லுக்கிறறைத்த நீர்....................

 

சரி  சரி

நம்ம ஊரில் நின்று தங்கித்தானே போகணும்..... :D

400 Km தூரத்தை கடக்க 2 நாள் பயணம் செய்தவர்களுக்கு, 4 மணித்தியாலத்தில் கொழும்பு-யாழ் பிரயாணம் என்றால் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

நீர் உயர வரப்பு உயரும் என்கிற காலம் போய். நல்ல ரோடு இருந்தால் வாழ்வு வரும் என்று சொல்லுங்கோ.

அதென்ன இப்ப இருக்கிற A 9 க்கு மேல ரோடு போடுகிற என்கிற பீதிய கிளப்புகிறீர்கள். சில இடங்களில் வரலாம். முழு இடமும் அப்படி வந்தால். உலகத்தில் இருக்க எல்லா சிமேந்தையும் கொட்டித்தான் அப்படி கட்டலாம். பீதி கிளப்ப என்றே இருக்கிறார்கள். :unsure:

 

இது எந்தக்காலத்தில்.....???

 

நானறிந்தவரையில்

இரவு புறப்பட்டால் அடுத்த நாள் அதிகாலையில் தானே.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இது எந்தக்காலத்தில்.....???

 

நானறிந்தவரையில்

இரவு புறப்பட்டால் அடுத்த நாள் அதிகாலையில் தானே.........

 

இதுதான் அண்ணே யுத்தத்தை அனுபவித்தவனுக்கும், வாசித்து அறிந்தவருக்கமான இடைவெளி. நீங்கள் யாழ்தேவி ஓடின காலத்தில நிற்கிறீர்கள், நாங்கள் காலமை வெளிகிட்டு அலைந்து திரிந்து வாவுனிய வந்து, அங்கே இருந்து ரயில் ஏறுகிற காலத்தில் நிற்கிறம்.

இடையில் நடத்த கூத்துக்கள் உங்களுக்கு தெரிய ஞாயம் இல்லைத்தானே. அதுகளை ஏன் இப்ப கிளறுவான். எதோ நீங்களும் இருக்கிற படியால் அப்ப அப்ப இப்படி நனவிடை தோய்ந்த கதைகளை கேக்க கூடியதாக இருக்கிறது. உங்களுக்கும் சந்தோசம் எங்களுக்கும்தான். மற்றும் படி ஒரு குறையும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு -யாழ் அதிவேக வீதி அமைத்ததற்கான கணக்கு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் 

 

Link to comment
Share on other sites

இனிமேல் யாழ்ப்பணம் வந்து போக பிளேனுக்கு கொடுக்கிற பணம் தெருவுக்கு கொடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

எமது கடந்து போன இளமைகாலங்கள் திரும்பி வராது என்று தெரியும் இருந்தாலும் அதன்  நினைவுகளில் வாழ்கின்றோம் அது போலத்தான் எமது நாட்டு நிலைமையும் .

தமிழரசு காலம் ,கூட்டணி காலங்கள் ,இயக்க காலங்கள் ,புலிகளின் ஆட்சி காலங்கள் இனி திரும்பிவரபோவதில்லை .

இலங்கை வேறு ஒரு உருவில் விரைவில் மாறிவிடும் .தமிழனும் அங்கு பிழைத்துகொள்வான் .

யாழில் பலர் இன்னமும் அந்த இளமை திரும்பிவரும் என்று கனவு காண்கின்றார்கள் .

Link to comment
Share on other sites

எமது கடந்து போன இளமைகாலங்கள் திரும்பி வராது என்று தெரியும் இருந்தாலும் அதன்  நினைவுகளில் வாழ்கின்றோம் அது போலத்தான் எமது நாட்டு நிலைமையும் .

தமிழரசு காலம் ,கூட்டணி காலங்கள் ,இயக்க காலங்கள் ,புலிகளின் ஆட்சி காலங்கள் இனி திரும்பிவரபோவதில்லை .

இலங்கை வேறு ஒரு உருவில் விரைவில் மாறிவிடும் .தமிழனும் அங்கு பிழைத்துகொள்வான் .

யாழில் பலர் இன்னமும் அந்த இளமை திரும்பிவரும் என்று கனவு காண்கின்றார்கள் .

பிஞ்சிலை கனிந்ததாக்கும். :unsure:

Link to comment
Share on other sites

இதுதான் அண்ணே யுத்தத்தை அனுபவித்தவனுக்கும், வாசித்து அறிந்தவருக்கமான இடைவெளி. நீங்கள் யாழ்தேவி ஓடின காலத்தில நிற்கிறீர்கள், நாங்கள் காலமை வெளிகிட்டு அலைந்து திரிந்து வாவுனிய வந்து, அங்கே இருந்து ரயில் ஏறுகிற காலத்தில் நிற்கிறம்.

இடையில் நடத்த கூத்துக்கள் உங்களுக்கு தெரிய ஞாயம் இல்லைத்தானே. அதுகளை ஏன் இப்ப கிளறுவான். எதோ நீங்களும் இருக்கிற படியால் அப்ப அப்ப இப்படி நனவிடை தோய்ந்த கதைகளை கேக்க கூடியதாக இருக்கிறது. உங்களுக்கும் சந்தோசம் எங்களுக்கும்தான். மற்றும் படி ஒரு குறையும் இல்லை.

 

யாழ் to கொழும்பு 2 நாள் மட்டும் இல்லை சிலநேரம் 3 , 4 நாட்களும் எடுத்ததுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிய, இலங்கையில் இந்த ஹை வே பற்றிய கதை தொடங்கினது- எனக்கு தெரிய- 2003/2004, கண்டி கொழும்பு. ஒரு மணித்தியலத்தில கொழும்புக்கு போகும் என்று கட்டத்த தொடங்கிறார்கள். அந்த நேரத்தில் அது லைன் பஸ்லில் இரண்டரை மணித்தியாலம் எடுக்கும். 105/109 km - அது கட்டி முடிந்ததோ தெரியவில்லை.

பிறகு இப்ப காலி கொழும்பு, கட்டியிருகிரார்கள்...யாழ்- கொழும்பு, இப்ப தொடங்கினார்கள் என்றால் ஒரு 50 வருடத்தில் முடிக்கலாம். கொழும்பு கட்டு நாயக்க கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

 

 

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்திலிருந்து யாழ்தேவி, உத்தர தேவி, Mail Train, இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் அதிகம் பிரசித்தமில்லாத Express Train என்று நான்கு தொடருந்துகள் கொழும்பு போய்வருவதுண்டு.  

 

சிங்களத்தின் தொடருந்து பாதைகள் மட்டக்களப்பு, திருகோணமலை, பிரதானமாக யாழ்ப்பாண பாதைகளில் கிடைக்கும் ஆதயங்கலிலேயே மற்ற இடங்களுக்கு வண்டிகள் விட்டு வந்தார்கள்.  ஆனால் மிக கேவலமாக கழித்துவைக்கபட்ட பாதையும் அதுதான். (அந்த நேரத்தில் இ.பொ.ச வில் லாபமூட்டும் ஒரு டிப்போ யாமாவட்டம் மட்டும்தான். ஆனால் கொழும்பு செய்வது என்ன வென்றால், தெற்கில் 5 வருடங்கள் ஓடிக் கழித்த பஸ்க்களையே யாழுக்கு அனுப்பிவைக்கும். அதிலும் டெக்கர் பஸ் ஆக இருந்தால் அது லண்டனில் ஓடி 5வருடத்தின் பின் ஏலத்தில் வாங்கி, கொழும்பில் 5 வருடம் ஓடி அதன் பின்னர்தான் யாழ்ப்பாணம் வரும்) பெரும்பாலும் வேலை முடித்துவிட்டு பின்னேரப்பொழுதில் புகையிரத்திற்கு சென்றால் குருநாகல் அநுராதபுரம் செல்லும் சிங்களவர் நேரத்திற்கு வந்து இருக்கைகளை பிடித்து வரவிருக்கும் சிங்களவர்களுக்காக பக்கத்தில் சட்டி பொட்டிகளும் வைத்திருப்பர்கள். நாம் அநுராதபுரம் அல்லது சில சமையங்களில் வவுனியா வரை புட்போட்ல் நிற்க வேண்டி வரும் அல்லது தரைகளில் இருப்போம். கொண்டாட்ட காலங்களில் அது நிச்சயமாக அநுராதபுரம் வரை இருக்கும். கோட்டை மருதானை கடந்து ஏறும் சிங்களவர் நாங்கள் சீட்டுகளில் இருந்தால் அதை பார்த்துக் கொதிப்பார்களும்.

 

1970 களின் ஆரம்பத்தில் யப்பான் பல நாடுகளில் தனது முதலீடுகளை செய்து வந்தது.  அந்த நேரத்தில் Hitachi காபொறேசன் இலங்கையில் தங்கள் புலட் ட்றைன் மாதிரி இன்னொருவகையை புதிய அதிவேக பாதை ஓன்றை தனியாக அமைத்து கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் ஓடவிட கேட்டார்கள். அவர்கள் கொடுத்த அந்த நேர விபரங்களின் படி யாழ்ப்பாணத்தொழிலாளர்கள் காலையில் ஏறி வேலை நேரத்திற்கு கொழும்புவில் இருக்க முடியும் என்று கூறிப்பிட்டிருந்தார்கள். வண்டி 90 மைல் வரை அக்சிலறேட் பண்ணத்தக்க பாதையாக புதிய பாதை இருக்கும் என்று வருணித்திருந்தார்கள். இன்றும் கூட அமெரிக்காவில் 90-120 மைல் இருப்பு பாதைகளை போடுவதில் புடுங்குப் பாடுகள் போய்க்கொண்டிருக்கு. ஆனால் கிட்டாச்சி தான் தன் சொந்த செல்வில் பாதை போட்டுவிட்டு 25 வருடங்கள் பதையை தான் வைத்துகொள்ள வேண்டும் என்று கேட்டது. சிறிமா அப்படி ஒரு சிறப்பான சௌகரியம் தமிழருக்கு கிடைக்கவா என்ற மனப்புழுக்கத்தால் மறுத்துவிட்டா.

 

இன்று பாதைகள் போட வருவது இராணுவத்திற்கும், அரசகுடும்ப பொக்கெட்டுக்கும். 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

இதுதான் அண்ணே யுத்தத்தை அனுபவித்தவனுக்கும், வாசித்து அறிந்தவருக்கமான இடைவெளி. நீங்கள் யாழ்தேவி ஓடின காலத்தில நிற்கிறீர்கள், நாங்கள் காலமை வெளிகிட்டு அலைந்து திரிந்து வாவுனிய வந்து, அங்கே இருந்து ரயில் ஏறுகிற காலத்தில் நிற்கிறம்.

இடையில் நடத்த கூத்துக்கள் உங்களுக்கு தெரிய ஞாயம் இல்லைத்தானே. அதுகளை ஏன் இப்ப கிளறுவான். எதோ நீங்களும் இருக்கிற படியால் அப்ப அப்ப இப்படி நனவிடை தோய்ந்த கதைகளை கேக்க கூடியதாக இருக்கிறது. உங்களுக்கும் சந்தோசம் எங்களுக்கும்தான். மற்றும் படி ஒரு குறையும் இல்லை.

 

 

உண்மைதான் எரிமலை. விடியக் காத்தாலை ஊரிலிருந்து கார்பிடிச்சு சாவச்சேரி போய்  அங்க இருந்து கிளாலி போய் இருட்டுமட்டும் இருந்து உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு கிளாலியால போட் ஏறி இரவிரவ பஸ் ஓடி புளியங்குளம், ஓமந்தை வந்து பாக்குகள தூக்கிக் கொண்டு No Mans Land எல்லாம் நடந்து வவுனியா வர அடுத்த இரவு வந்திடும். பிறகு இரவு வவுனியாவில இருந்து கோட்டைக்கு கோச்சி பிடிச்சு வந்து சேர மூண்டாம் நாள் விடிஞ்சிடும். கப்பல் ரூட்டும் எடுத்திருக்கிறன். குமணவில ஏறி கக்கூசுக்குப் போக வெளிக்கிட்டு நான் பட்ட பாடு இருக்கே. நல்ல காலம் நான் அப்ப சின்னப் பொடியன். ஒருமுறை கப்பல் கிடைக்காமல் திருகோண மலையில் இரண்டு மாசம் அப்பாவோட தங்கி நிண்டு வந்தேன். கஷ்டப் பட்டவனுக்குத்தான் அது அதிண்ட கஷ்டம் புரியும்.

 

 

Link to comment
Share on other sites

உண்மைதான் எரிமலை. விடியக் காத்தாலை ஊரிலிருந்து கார்பிடிச்சு சாவச்சேரி போய்  அங்க இருந்து கிளாலி போய் இருட்டுமட்டும் இருந்து உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு கிளாலியால போட் ஏறி இரவிரவ பஸ் ஓடி புளியங்குளம், ஓமந்தை வந்து பாக்குகள தூக்கிக் கொண்டு No Mans Land எல்லாம் நடந்து வவுனியா வர அடுத்த இரவு வந்திடும். பிறகு இரவு வவுனியாவில இருந்து கோட்டைக்கு கோச்சி பிடிச்சு வந்து சேர மூண்டாம் நாள் விடிஞ்சிடும். கப்பல் ரூட்டும் எடுத்திருக்கிறன். குமணவில ஏறி கக்கூசுக்குப் போக வெளிக்கிட்டு நான் பட்ட பாடு இருக்கே. நல்ல காலம் நான் அப்ப சின்னப் பொடியன். ஒருமுறை கப்பல் கிடைக்காமல் திருகோண மலையில் இரண்டு மாசம் அப்பாவோட தங்கி நிண்டு வந்தேன். கஷ்டப் பட்டவனுக்குத்தான் அது அதிண்ட கஷ்டம் புரியும்.

கலவரம் நடந்தால் அதே அனுபவம் தான். 1983ல் நான் நிற்க இடமில்லாமால், இருக்க இடமில்லாமல், ஆபத்தான  கொழும்பு தெருவுகளில் இரவு பகல் திரிந்தனான். கையில் இருந்த காசு கரைய முதல் வீட்டை போய் சேர்ந்திட வேண்டும் என்று படாத பாடு பட்டனாங்கள். கப்பலில் போனவர்கள் சொன்ன கதைகள் பல. அவ்வளவற்றுக்கும் கித்தாச்சி தன்னுடையை செலவில், தெற்காசிய நாடுகள் எங்குமே இருந்திருக்காத 90மைல் வேக பாதை போட வர சிங்கள அரசாங்கம் மட்டும்தான் தடையாக இருந்தது.

 

இன்று போடப்படும் அந்த வேகப்பாதையில் பயணம் செய்ய ஆட்கள் இல்லை. அன்று கித்தாச்சி அந்த வேகப்பாதையை போட்டிருந்தால் கூட சனத்தை கட்டுப்படுத்தியிருந்திருக்க முடியாது. அழிவை கொண்டுவந்த அரசை இந்த பாதையை வைத்து மெச்சுவது, நாயை கட்டி வைத்து நாய் சண்டைக்கு  பயன்படுத்தும் எஜமான், ஒவ்வொருதடவையும் சாப்பாடு போட வரும் போது, அதற்கு அவன் அடுத்த சண்டைக்கு அனுப்பி தன் உடம்புமுழுக்க புண்ணாகபோகிறது என்பதை அறியாமல் வாலை ஆட்டி ஆட்டி எஜமானுக்கு நன்றி தெரிவித்து சாப்பாட்டை ரசிப்பது போன்றது. இந்த வேகப்பதைகளின் கடன்களைக் கட்டப் போபவர்கள் தமிழர். இவை போடபடும் நோக்கம் இராணுவம் யாழ்பாணத்தால் வெளியேற்றப்பட வேண்டிய நிலை வந்தால் அதை நான்கு மணித்தியால நோட்டிசில் திரும்ப யாழ்ப்பாணம் கொண்டே இறக்குவதற்காக த்தான். அதாவது தமிழ்மக்கள் தங்களை அடிப்பதற்கு கடன் பட்டு பாதை போடுகிறார்கள். தமது மக்கள் அதே நேரம் பட்டிணி கிடக்கிறார்கள். அதற்கு யாழ்தேவிக்கு பிறகு தங்களுக் நடக்க நேர்தாக நினைத்து நன்றிக்கடன் இருப்பத்தாக சொல்கிறார்கள்.  அந்த கடனை பட்டு தமது மக்களுக்கு வீடும் உணவும்தான் தர வேண்டும் என்று கேட்க யாருக்கும் துணிச்சல் இல்லை.

Link to comment
Share on other sites

கலவரம் நடந்தால் அதே அனுபவம் தான். 1983ல் நான் நிற்க இடமில்லாமால், இருக்க இடமில்லாமல், ஆபத்தான  கொழும்பு தெருவுகளில் இரவு பகல் திரிந்தனான். கையில் இருந்த காசு கரைய முதல் வீட்டை போய் சேர்ந்திட வேண்டும் என்று படாத பாடு பட்டனாங்கள். கப்பலில் போனவர்கள் சொன்ன கதைகள் பல. அவ்வளவற்றுக்கும் கித்தாச்சி தன்னுடையை செலவில், தெற்காசிய நாடுகள் எங்குமே இருந்திருக்காத 90மைல் வேக பாதை போட வர சிங்கள அரசாங்கம் மட்டும்தான் தடையாக இருந்தது.

 

இன்று போடப்படும் அந்த வேகப்பாதையில் பயணம் செய்ய ஆட்கள் இல்லை. அன்று கித்தாச்சி அந்த வேகப்பாதையை போட்டிருந்தால் கூட சனத்தை கட்டுப்படுத்தியிருந்திருக்க முடியாது. அழிவை கொண்டுவந்த அரசை இந்த பாதையை வைத்து மெச்சுவது, நாயை கட்டி வைத்து நாய் சண்டைக்கு  பயன்படுத்தும் எஜமான், ஒவ்வொருதடவையும் சாப்பாடு போட வரும் போது, அதற்கு அவன் அடுத்த சண்டைக்கு அனுப்பி தன் உடம்புமுழுக்க புண்ணாகபோகிறது என்பதை அறியாமல் வாலை ஆட்டி ஆட்டி எஜமானுக்கு நன்றி தெரிவித்து சாப்பாட்டை ரசிப்பது போன்றது. இந்த வேகப்பதைகளின் கடன்களைக் கட்டப் போபவர்கள் தமிழர். இவை போடபடும் நோக்கம் இராணுவம் யாழ்பாணத்தால் வெளியேற்றப்பட வேண்டிய நிலை வந்தால் அதை நான்கு மணித்தியால நோட்டிசில் திரும்ப யாழ்ப்பாணம் கொண்டே இறக்குவதற்காக த்தான். அதாவது தமிழ்மக்கள் தங்களை அடிப்பதற்கு கடன் பட்டு பாதை போடுகிறார்கள். தமது மக்கள் அதே நேரம் பட்டிணி கிடக்கிறார்கள். அதற்கு யாழ்தேவிக்கு பிறகு தங்களுக் நடக்க நேர்தாக நினைத்து நன்றிக்கடன் இருப்பத்தாக சொல்கிறார்கள்.  அந்த கடனை பட்டு தமது மக்களுக்கு வீடும் உணவும்தான் தர வேண்டும் என்று கேட்க யாருக்கும் துணிச்சல் இல்லை.

 

மல்லை  அண்ணா, கலவரத்தால் சனம் கஷ்டப்பட்டது உண்மை. எமது குடும்பம் கூட கலவரத்தால் இடம்பெயர்ந்தார்களாம், அப்ப நான் பிறக்கவில்லை. ஆனால் பின்னர், குறிப்பாக இறுதிக் காலத்தில் சனம் பட்ட கஷ்டத்துடன் ஒப்பிடும் போது கலவரம் வெறும் தூசு. இனியொரு கலவரம் ஒருபோதும் வராது, அப்படி வருவதையும் சிங்களத் தலைமைகள் அனுமதிக்காது.

றோட்டப் போட்டா ஆமிய எத்தி இறக்குவான். இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுங்கோ. எங்கட சனம் கிளாலி கொம்படி எண்டு அலஞ்சு திரியோனுமோ இல்லாட்டிக்கு கப்பல் பிளேன் எண்டு காசைக் கரியாக்கோணுமோ?

 

 

Link to comment
Share on other sites

மல்லை  அண்ணா, கலவரத்தால் சனம் கஷ்டப்பட்டது உண்மை. எமது குடும்பம் கூட கலவரத்தால் இடம்பெயர்ந்தார்களாம், அப்ப நான் பிறக்கவில்லை. ஆனால் பின்னர், குறிப்பாக இறுதிக் காலத்தில் சனம் பட்ட கஷ்டத்துடன் ஒப்பிடும் போது கலவரம் வெறும் தூசு. இனியொரு கலவரம் ஒருபோதும் வராது, அப்படி வருவதையும் சிங்களத் தலைமைகள் அனுமதிக்காது.

றோட்டப் போட்டா ஆமிய எத்தி இறக்குவான். இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுங்கோ. எங்கட சனம் கிளாலி கொம்படி எண்டு அலஞ்சு திரியோனுமோ இல்லாட்டிக்கு கப்பல் பிளேன் எண்டு காசைக் கரியாக்கோணுமோ?

அளவான கடனும் அளவான சொகுசுமாக இந்திய பாதை புனர் அமைப்பு போதுமானது. சீனா பதைகள் போட்ட வெளிநாடுகள் ஒன்றிலும் அந்த பாதைகள் பாவிக்கபடுவதில்லை என்பது மட்டுமல்ல. சீனாவில் கட்டப்பட்ட உலக பெரிய shopping mall சீனாவில் 99% பாவிக்கபடாமல் எட்டுவருடங்கள் ஆகிவிட்டன. இந்தமாதிரி அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து நாடுகளை சீனா பழுதாக்க அதற்கு  தமிழர் இடம் கொடுக்கும் நிலையில் அவரகளின் பொருளாதாரம் இல்லை.

 

New South China Mall 22px-Flag_of_the_People%27s_Republic_of_ China Dongguan 2005 659,612 m² (7.1 million sq ft)[1] 892,000 m² (9,600,000 sq ft) 47 99% vacant since 2005. Potential 2,350 stores. Classified as a "dead mall" by Emporis, a global building data firm.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் எரிமலை. விடியக் காத்தாலை ஊரிலிருந்து கார்பிடிச்சு சாவச்சேரி போய்  அங்க இருந்து கிளாலி போய் இருட்டுமட்டும் இருந்து உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு கிளாலியால போட் ஏறி இரவிரவ பஸ் ஓடி புளியங்குளம், ஓமந்தை வந்து பாக்குகள தூக்கிக் கொண்டு No Mans Land எல்லாம் நடந்து வவுனியா வர அடுத்த இரவு வந்திடும். பிறகு இரவு வவுனியாவில இருந்து கோட்டைக்கு கோச்சி பிடிச்சு வந்து சேர மூண்டாம் நாள் விடிஞ்சிடும். கப்பல் ரூட்டும் எடுத்திருக்கிறன். குமணவில ஏறி கக்கூசுக்குப் போக வெளிக்கிட்டு நான் பட்ட பாடு இருக்கே. நல்ல காலம் நான் அப்ப சின்னப் பொடியன். ஒருமுறை கப்பல் கிடைக்காமல் திருகோண மலையில் இரண்டு மாசம் அப்பாவோட தங்கி நிண்டு வந்தேன். கஷ்டப் பட்டவனுக்குத்தான் அது அதிண்ட கஷ்டம் புரியும்.

 

பாஸ் எடுத்து போட்டு ஒரு நாள் வெயிட் பண்ண வேண்டும். எனக்கு ஒரு மீட்டிங் போரதிற்கு கடைசி நேரத்தில அழைப்பு வந்தது. பொற்பதி ரோட்டில் இரு இரு என்று இருந்தா பிறகு 3.30/4.00 பாஸ்  தந்தார்கள். பிறகு அதை கொண்டு டவுன் இல் இருக்கிற ஒருவரிடம் போகவேண்டும், முன் உரிமை கடிதம் எடுக்க...பிறகு  கிளாலி போய், நல்லூர் போய், பிறகு ரக்கர் இல போய் பிறகு எங்கேயோ ஒரு இடத்தில் வான், கிளிநொச்சி மட்டும் ஒரு வான், பிறகு இன்னும் ஒன்று..ஒரு லோட்ச்  ஒன்றில் நிற்க வேண்டும், காலமை 4.30/5.00 அடித்து போட்டு 6.30 க்கு வெளிகிட்டதிர்ற்கு லோட்ச், காசு கட்ட வேண்டும். அங்கே இன்னுமொராளை சந்தித்தா அவர் சொன்னார்-இப்ப சிங்கர்பூரில் இருக்கிறார்- தங்கட  வானுக்கு 5 சில்லு மாத்தினதாம்.-நான் வந்ததில 2 தரம் மாத்தினது.. 

கப்பல் அனுபவமும் கனக்க இருக்கு...முதலில் போனது ஒரு பிராணிகள் கப்பல் ஒன்று.- பேர் மறந்து போட்டுது..பின்னேரம் 6/7 மணிக்கு எத்திபோட்டு 11/12 மணி மட்டும் KKS கப்பல் ஆடுது ஆடுது ஒரு கணக்கு வழக்கு இல்லை ..?அரைவாசி சனம் அப்பவே சத்தி எடு எடு எடுத்து களைச்சி போய்விட்டது..பிறகு ஓடத்தொடங்க..மடுச் செபமாலை மாதவே..முன் குடல் பின் குடல் எல்லாம் வெளியால வந்து விட்டது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அண்ணே யுத்தத்தை அனுபவித்தவனுக்கும், வாசித்து அறிந்தவருக்கமான இடைவெளி.

நீங்கள் யாழ்தேவி ஓடின காலத்தில நிற்கிறீர்கள், நாங்கள் காலமை வெளிகிட்டு அலைந்து திரிந்து வாவுனிய வந்து, அங்கே இருந்து ரயில் ஏறுகிற காலத்தில் நிற்கிறம்.

இடையில் நடத்த கூத்துக்கள் உங்களுக்கு தெரிய ஞாயம் இல்லைத்தானே. அதுகளை ஏன் இப்ப கிளறுவான். எதோ நீங்களும் இருக்கிற படியால் அப்ப அப்ப இப்படி நனவிடை தோய்ந்த கதைகளை கேக்க கூடியதாக இருக்கிறது.

உங்களுக்கும் சந்தோசம் எங்களுக்கும்தான். மற்றும் படி ஒரு குறையும் இல்லை.

 

தவறுதலான புரிதலுக்காக மன்னிக்க வேண்டுகின்றேன்.

தற்பொழுது அப்படி இருப்பதாக(அதாவது 2 நாட்கள்) விளங்கிக்கொண்டேன்.

 

மற்றும்படி  தாயகத்தில் இருந்து  எப்பொழுதும் தள்ளி  நின்றதில்லை. பார்வையாளனாக இருந்ததில்லை.

நன்றி.

Link to comment
Share on other sites

 

அளவான கடனும் அளவான சொகுசுமாக இந்திய பாதை புனர் அமைப்பு போதுமானது. சீனா பதைகள் போட்ட வெளிநாடுகள் ஒன்றிலும் அந்த பாதைகள் பாவிக்கபடுவதில்லை என்பது மட்டுமல்ல. சீனாவில் கட்டப்பட்ட உலக பெரிய shopping mall சீனாவில் 99% பாவிக்கபடாமல் எட்டுவருடங்கள் ஆகிவிட்டன. இந்தமாதிரி அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து நாடுகளை சீனா பழுதாக்க அதற்கு  தமிழர் இடம் கொடுக்கும் நிலையில் அவரகளின் பொருளாதாரம் இல்லை.

 

New South China Mall

22px-Flag_of_the_People%27s_Republic_of_ China

Dongguan

2005

659,612 m² (7.1 million sq ft)[1]

892,000 m² (9,600,000 sq ft)

47

99% vacant since 2005. Potential 2,350 stores. Classified as a "dead mall" by Emporis, a global building data firm.

 

 

 

அண்ணா சீனா வேற எந்த நாடுகளில ரோட்டுப் போட்டு அது பாவிக்கப் படாமல் இருக்கு? அதோட நீங்கள் கூறிய சொப்பிங் மால் பிழைத்ததுக்கு வேற காரணங்கள் இருக்கு. அதுபற்றிய சில விபரணப் படங்களும் இருக்கு, தேடிப் பாருங்கள். அத்துடன் இந்தியாவின் அம்பது வருஷ பழைய தொழில் நுட்பத்தை விட சீனாவின் தொழில் நுட்பம் நல்லது. நீங்கள் ஊருக்குப் போய்  எவ்வளவு வருசமோ தெரியாது ஆனால் நான் அடிக்கடி போய் வருபவன், தெற்கு அதிவேக வீதியில் காரும் ஓடியிருக்கிறேன். அவுஸ் வீதிகளின் தரத்திற்குப் போட்டிருக்கிறார்கள்.

 

பாஸ் எடுத்து போட்டு ஒரு நாள் வெயிட் பண்ண வேண்டும். எனக்கு ஒரு மீட்டிங் போரதிற்கு கடைசி நேரத்தில அழைப்பு வந்தது. பொற்பதி ரோட்டில் இரு இரு என்று இருந்தா பிறகு 3.30/4.00 பாஸ்  தந்தார்கள். பிறகு அதை கொண்டு டவுன் இல் இருக்கிற ஒருவரிடம் போகவேண்டும், முன் உரிமை கடிதம் எடுக்க...பிறகு  கிளாலி போய், நல்லூர் போய், பிறகு ரக்கர் இல போய் பிறகு எங்கேயோ ஒரு இடத்தில் வான், கிளிநொச்சி மட்டும் ஒரு வான், பிறகு இன்னும் ஒன்று..ஒரு லோட்ச்  ஒன்றில் நிற்க வேண்டும், காலமை 4.30/5.00 அடித்து போட்டு 6.30 க்கு வெளிகிட்டதிர்ற்கு லோட்ச், காசு கட்ட வேண்டும். அங்கே இன்னுமொராளை சந்தித்தா அவர் சொன்னார்-இப்ப சிங்கர்பூரில் இருக்கிறார்- தங்கட  வானுக்கு 5 சில்லு மாத்தினதாம்.-நான் வந்ததில 2 தரம் மாத்தினது.. 

கப்பல் அனுபவமும் கனக்க இருக்கு...முதலில் போனது ஒரு பிராணிகள் கப்பல் ஒன்று.- பேர் மறந்து போட்டுது..பின்னேரம் 6/7 மணிக்கு எத்திபோட்டு 11/12 மணி மட்டும் KKS கப்பல் ஆடுது ஆடுது ஒரு கணக்கு வழக்கு இல்லை ..?அரைவாசி சனம் அப்பவே சத்தி எடு எடு எடுத்து களைச்சி போய்விட்டது..பிறகு ஓடத்தொடங்க..மடுச் செபமாலை மாதவே..முன் குடல் பின் குடல் எல்லாம் வெளியால வந்து விட்டது..

 

குமண, தராக்கி, சிட்டி ஒப் ற்றின்கோ என்பவை நான் ஏறியவை. முல்லைத் தீவு தாண்டுவதுக்கு முன்னர் ஆழக்கடல் மட்டும் போய் சுத்திக் கொண்டு வருவார்கள், அத்துடன் லைட்டெல்லாம் நூத்துப்போட்டுத் தான் ஓடுவார்கள். கப்பல் ஆடுற ஆட்டத்துக்கு கரைக்கு வந்தாப் பிறகும் ரெண்டு நாளைக்கு கப்பலில இருக்கிற மாதிரித்தான் இருக்கும். சத்தியைக் குறைக்கிறதுக்கு  பெனாகன் எண்டொரு சத்திக் குளிசையைப் போட்டிட்டு சாப்பாடு தண்ணி இல்லாமல் காயிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.