Jump to content

ஒசாமா பின்லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தின் பிரதான மூளைசாலி ஒரு இலங்கை தமிழர் :


Recommended Posts

 

 

சர்வ மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு ஜனநாயகவாதி ஒருபோதும் இவ்வாறான காரியங்களை எண்ணிப்பார்க்கவே மாட்டார்.

 

தனது வலது கையை கொலை செய்ய முடியும்.தனக்கு எதிராக எழுதுவோரை கொல்ல முடியும்.அழையா விருந்தினராக சிவபூசையில் கரடி புகுந்தது போல் செல்ல முடியும். கள்ள வாக்குகள் பெற சண்டித்தனம் காட்ட முடியும்.எதிராக தேர்த்தலில் நிற்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களை மயங்கும் வரை தாக்குவது என்று பல பக்கங்களுக்கு அண்ணரின் வீரப்பிரதாபங்களை எழுதலாம். மறுப்பீர்களா?

Link to comment
Share on other sites

 

தனது வலது கையை கொலை செய்ய முடியும்.தனக்கு எதிராக எழுதுவோரை கொல்ல முடியும்.அழையா விருந்தினராக சிவபூசையில் கரடி புகுந்தது போல் செல்ல முடியும். கள்ள வாக்குகள் பெற சண்டித்தனம் காட்ட முடியும்.எதிராக தேர்த்தலில் நிற்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களை மயங்கும் வரை தாக்குவது என்று பல பக்கங்களுக்கு அண்ணரின் வீரப்பிரதாபங்களை எழுதலாம். மறுப்பீர்களா?

 

அண்ணரை பற்றி தம்பி எழுதும்போது அந்நியப்பட்ட பொது ஜனங்களாக நாம் மறுக்க முடியாது. அண்ணன் கூடக் கொன்றானா தம்பி கூடக் கொன்றானா என்று எண்ணிக்கொண்டிருப்பதுதான் எமது வேலை. அதை தான் காலாகாலம் செய்துவருகின்றோம். அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை முடிந்தால் நல்லது என்பது தான் எமது நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

நாடுகடந்த அரசுக்கும் பிரசாரக்கடிதம் போய் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இந்த தமிழருக்கு பரிசு கிடத்ததை, யாழில் சிலர் மாதிரியோ அல்லது தயான் ஜயதிலகா மாதிரியோ ஒரே கண்ணோட்டத்தில் பார்த்து அறிக்கை வெளிவிடவில்லை.  "தமிழர்களின் பழைய நினைவே தாங்கள் தகுதி கூடியவர்கள் ஆனால் சிவாநந்தன் பரிசுக்கு தகுதியானவர் அல்ல" என்றோ அல்லது அவர் இந்த பரிசை ஏற்பது மேட்டுக்குடித்தனம், சாதித்துவம் என்றோ நா.க.அ பிரதிநிதிகள் வெளிவிட்ட அறிக்கையை நான் பார்க்கவில்லை. அதனால் அவர்களை  இதற்குள்  என்னால் சேர்க்க முடியாது.கோட்டை ராசாதானி தனது பிரச்சார கடிதங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கும் அதே நேரத்தில்தான்  நாடுகடந்த அரசுக்கும் அனுப்பிவைக்கிறதென்றும் அதை பற்றித் தங்களுக்கு கூட தெரியும் என்றால் நான் அதை மறுக்க முடியுமா? அரசு என்ன் செய்கிறது என்று கூறி பிடிவாதம் பிடிக்க, அரசு செய்யும் எதை பற்றி எனக்கு முதல் தர அறிக்கை வருகிறது?


 
 
அண்ணரை பற்றி தம்பி எழுதும்போது அந்நியப்பட்ட பொது ஜனங்களாக நாம் மறுக்க முடியாது. அண்ணன் கூடக் கொன்றானா தம்பி கூடக் கொன்றானா என்று எண்ணிக்கொண்டிருப்பதுதான் எமது வேலை. அதை தான் காலாகாலம் செய்துவருகின்றோம். அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை முடிந்தால் நல்லது என்பது தான் எமது நிலைப்பாடு.

65 வருடம் அண்ணன் என்னடா தம்பி என்னட வாழ்க்கை. அதன் பின்னர் அந்த இணக்க அரசியல் பிரசாரத்திற்கு செவி சாய்க்க இன்னும் ஒரு கூட்டம் இருக்கு. 

Link to comment
Share on other sites

 

 "தமிழர்களின் பழைய நினைவே தாங்கள் தகுதி கூடியவர்கள் ஆனால் சிவாநந்தன் பரிசுக்கு தகுதியானவர் அல்ல" என்றோ அல்லது அவர் இந்த பரிசை ஏற்பது மேட்டுக்குடித்தனம், சாதித்துவம் என்றோ

 

கருத்துக்கள் பொறுப்பற்ற தலைப்பை பற்றியது. இதற்குள் தகுதி மேட்டுக்குடித்தனம் சாதியம் என்பது உங்கள் கற்பனையில் உதிப்பது. விசயத்துக்கு சம்மந்தமில்லாத தலைப்பு எப்படியோ அப்படித்தான் உங்கள் கற்னை இடைச்செருகல்களும். இது முற்று முழுதாக உங்களுக்குள் இருக்கும் பிரச்சனை.

Link to comment
Share on other sites

" அவர் இந்த பரிசை ஏற்பது மேட்டுக்குடித்தனம், சாதித்துவம் என்றோ".............
ஆகவே இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அமரிக்கா மட்டும் எதிரியில்லை இலங்கைத் தமிழரும் எதிரி.சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்களுக்கு உதை கொடுக்க மறக்கவேண்டாம் என்பதை தமிழ்த்தேசீயம் நினைவுபடுத்தியுள்ளது.

 

சர்வ மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு ஜனநாயகவாதி ஒருபோதும் இவ்வாறான காரியங்களை எண்ணிப்பார்க்கவே மாட்டார்.

 

 

 

பரிசு ஏன் கொடுக்கப்பட்டது என்பதற்கு பத்திரிகைகள் தமது விளக்கத்தை கொடுக்கின்றன. யாழில் பலர் வசதிக்கேற்றமாதிரி தங்கள் விளக்கத்தையும் கொடுக்கிறார்கள்.  அதில் வேண்டுமென்றே விபரங்களை தவிர்க்கிறார்கள். பின்னர் தேவைப்பட்டால் விவாதத்தை திசை திருப்புகிறார்கள்.  இதனால் நாங்கள்தான் விபரங்களை சேர்த்துப்பார்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். அது கற்பனையாக இருந்தாலும், நியாயமானதாக இருக்கத்தவறுவதில்லை. 

 

சிவானநந்தனுக்கு கிடைத்த பரிசில் "தமிழ் தேசியம், சர்வ மத நல்லிணக்கம்" என்ற சொற்பதங்கள் அதீதக் கற்பனைகள். அவர் ஒரு விஞ்ஞானி என்றதை மனத்தில் வைத்து பத்திரிகையின் தலைப்புக்கு பதில் அளித்திருக்க வேண்டும். இந்த அரையல் கருத்துக்கள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டவை.

 

இதையேதான் தாயான் ஜெயதிலகா செய்தார்.  1.5 மில்லியன் டயஸ்போறாவில், இந்த வருடம் மட்டும் 11 பேரில் ஒருவராக ஒரு தமிழர் பரிசில் வென்றார். தமிழர் சொல்லுவதாக  தாயான் ஜெயதிலகா கொடுத்த விளக்கத்தை அவர் யாராவது ஒரு தமிழர் உண்மையில் சொல்லியிருந்தார் என்றதை காட்டுவாரா?

 

தயான் போன்றவர்கள் கிளறிவிடும் இந்தப் பிரிவிணைப் போட்டியால், பொறாமையால் தான் தமிழர் இலங்கையில் வேண்டுமென்றே மற்றய இனங்களால் ஒதுக்கப்படுகிறார்கள். இதில் தமிழர்களின் பங்கு எள்ளவும் இல்லை.

 

இராமநாதன் இலங்கையில் நடந்த முதல் இனக்கலவரத்தில் வெள்ளைகளை எதிர்த்து நீதியை நிலை நாட்டிய உத்தம வீரன். அந்த நன்றிக்காக  சிங்களவர் குதிரைகளை விட்டுவிட்டு தாங்கள் அவரை காவியது சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  அப்படியிருக்க இராமநாதன் தனது மேட்டுக்குடி முஸ்லீம்களை ஒதுக்கினார் என்று கற்பனைக் கதை கட்டியோர் , "இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அமரிக்கா மட்டும் எதிரியில்லை இலங்கைத் தமிழரும் எதிரி.சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்களுக்கு உதை கொடுக்க மறக்கவேண்டாம் என்பதை தமிழ்த்தேசீயம் நினைவுபடுத்தியுள்ளது"  என்று எழுதும் போது அதே வலிந்த பிரிவினையை தூண்டும் அதன் தொடர்தான் இதுவும் என்றதை மறுக்க முடியாது. 

 

மேட்டுக்குடி, சாத்தித்துவ கற்பனை கதைகளுடன் வந்து யாழில் யார் பிரிவினையை தூண்ட முயற்சிக்கிறார்கள் என்பதில் யாருக்காவது சந்தேகம் என்றால் அவர்கள் தாங்கள் செய்வது பிரச்சாரம் என்று நினத்துக்கொண்டு தங்களைத் தாங்கள் ஏமாற்றுகிறார்கள். யாழில் எல்லோருக்கும் மற்றவரின் சாயங்கள் நன்றாகத்தான் விளங்குகிறது. இதில் வந்து யார் எந்த வர்ணம், எந்த மேட்டுக்குடி என்ற விளங்கங்கள் கொஞ்சம் ஒவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://www.facebook.com/SooriyanFMSriLanka/videos/1464846094416796/?mibextid=rS40aB7S9Ucbxw6v ஏன்னா நாங்க வெளிநாடு👆🏼🤣 #லண்டன் #அஜினமோட்டோ
    • சுவிசுக்கு..கொண்டுபோய் திரும்பி வந்தபின்னர்...உடுப்புத்தோய்க்கிற  கல்லாகப் பாவிக்கினம்..😃
    • இன்னொரு திரியில் எழுதினேனே முன்னர் “ஓமான்” என அழைக்கப்பட்டு இப்போ “இலண்டன்” என அழைக்கப்படுவோர் பற்றி?  அவர்களின் அச்சொட்டிய பிஹேவியர்களில் இதுவும் ஒன்று. முப்பது வருடம் முன் காலையில் எழும்பி பனங் குத்தியில் குந்தியவர்கள், இப்போ போய் அட்டாச் பாத் ரூம் இல்லையா என முகம் சுழிப்பர்🤣. அதே போல், இலண்டலில் BBC Panorama எலிப்புழுக்கையை படம் பிடித்து போட்ட தமிழ் கடைகளில் சப்பு கொட்டி உண்டு விட்டு, சம்பாந்துறையில் அஜினமோட்ட்டோ கூடீட்டு என்பார்கள். உண்மையில் இன, மத பேதமின்றி ஊரில் எல்லா மக்களும் இப்படியானவர்களை காமெடி பீசுகளா நடத்துகிறனர் என்பதே உண்மை🤣. 🤣 சோசல் காசு தரும் அரசாங்கம் என்னிடம் வாங்காத வேலையை - யாழ்களம் வாங்கி விடுகிறதப்பா🤣. துரையப்பா - இவர் ஊருக்கு போன சமயமே என் நிலைபாட்டை அந்த திரியில் எழுதிவிட்டேன். அப்போ நான் எழுதியதை இப்போ லேட் ரியாக்சன் போல கொடுக்கிறார் ராதிகா சிற்சபேசன். Better late than never.
    • @goshan_che க்கு இண்டைக்கு நித்திரை முழித்து “ஓவர் ரைம்” செய்ய வேண்டி வந்திட்டுது. 😂 அங்காலை ஒரு கனடா துரையப்பா திரியும்… அவருக்காக “வெயிட்டிங்” 🤣
    • திராவிடத்தை கடுமையாக எதிர்க்கும் நா.க வில் இருந்து விலகிச் சென்ற சிலர், திமுக வில் இணைந்து, திராவிட சிந்தாந்தத்தை போற்றி வருவது போன்றது தான் மன்சூர் அலிகானும் ஈழத் தமிழர்களை நாசம் செய்த செய்த காங்கிரஸை நா.க வில் இருக்கும் வரைக்கும் எதிர்த்து விட்டு, இன்று அதே காங்கிரசில் சேர்ந்து அவர்களைப் போற்றுகின்றார்... அதுவும் சோனியாவின் மகள் பிரதமராக வேண்டும் என்று விரும்புகின்றார். இந்திய, தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கையில் இன்றிருக்கும் தமிழ் கட்சிகளும் ஒரே குட்டைக்குள் ஊறிக்  கிடக்கும் கட்சிகள். இவற்றில் இது நல்லது, அது நல்லது என்ற வித்தியாசம் எதுவும் இல்லை.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.