Jump to content

நேசக்கரம் பற்றிய கேள்விகள் பதில்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விக், உங்கள் முயற்சிகளுக்கு தலை வணங்குகிறேன்.

விடா முயற்சிக்கும் கொள்கை பற்றுக்கும் நீங்கள் ஒரு உதாரணம்.

தொடர்க உங்கள் பணி.

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply

விக், உங்கள் முயற்சிகளுக்கு தலை வணங்குகிறேன்.

விடா முயற்சிக்கும் கொள்கை பற்றுக்கும் நீங்கள் ஒரு உதாரணம்.

தொடர்க உங்கள் பணி.

நன்றி முதல்வன். உங்கள் போன்றவர்களின் ஊக்கமும், நல்லாசியும் ஊக்க சக்தியை தரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் அமைப்பை யாழ் கள உறவுகளின்  உதவியோடு நிறுவத் தொடங்கியவன்  அன்று அதற்கு மோகனும்  இணையவனும் பெரும் உதவி  செய்தார்கள்.  அதனை  தொடங்கிய  பலரில் நானும் ஒருவன் என்கிற முறையில் அதன் ஆரம்பம் அதன் பின்னால் நின்ற யாழ் கள உறவுகள்.அதற்கு உயவிய உறவுகள் இன்று பலர் யாழ்களத்தோடு இணைத்திருக்கவில்லை அவர்களின் அளப்பரிய  உதவிகளோடு யாழ் களத்தில் உருவாக்கம் பெற்ற நேசக்கரம் அமைப்பு பற்றி நானும் சில விடயங்களை எழுதத் தொடங்கியிருக்கிறேன். காரணம்  2002 ல் தான்  உதவி அமைப்பை தொடங்கியதாகவும் பின்னர்  அருணா முன்னர் பிரான்சில் இருந்தவன் தற்போது உயிருடன் இல்லை..தயா மோகன்  சுவிசில் உள்ளார் இவர்கள் கேட்டதால்  தான் நேசக்கரம்  என்கிற அமைப்பை  2006ல் கிழக்கில் தொடங்கியதாக சொல்லும்  சாந்திக்காகவும் அதனை  பார்த்த பின்னர்  யாழில் தான்  நேசக்கரம்  தொடங்கப் பட்டது என்று தெரிந்தும்  பேசாமல் இருப்பவர்களிற்காகவும். அதுவும் நானும் டண்ணும் இதே யாழ் இணையத்தில்  என்ன பெயர் வைக்கலாம் என்று  பகிரங்கமாக  மற்றையவர்களுடன் கலந்தாலோசித்து  வைத்த நேசக்கரம்  என்கிற பெயரை அதற்கான முதலாவது லோகோவை  வலைஞன் வடிவமைத்து தந்திருந்தான்  ஆனால் இதனை   எப்படி  தான் வைத்தாக  கூறப்போகிறாராம்.  நேசக்கரம் என்பதன்  தோற்றத்தையும் அதன் வளர்ச்சி பற்றியும் மற்றையவர்கள் தெரிந்து கொள்வதற்காக  எழுதத் தொடங்குகிறேன்.வேறு எங்கும் அல்ல யாழிலேயேதான் .

 

 யாழ் நேசக்கரம் இதுதான் அதன் உண்மையான பெயர்  அது பின்னர் நேசக்கரமாக  மாறிவிட்டது இந்த  அமைப்பின் முதலாவது உதவித் திட்டம் இங்கு யாழிலேயே ..இணைப்பு  அங்கு சாந்தி என்கிற பெயரை  யாராவது  கண்டால் அறியத் தரவும். நன்றி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30377

 

அப்போ வரட்டா....வருவம்.....

 

யார் யார் ரிபோன் வெட்டினது யார் ஆலவாடம் சுத்தியது என்று யாரும் பார்ப்பதில்லை.
 
வியர்வை சிந்தி யார் உழைக்கிறானோ அவனுக்கே வெற்றி உரித்தானது.
 
மற்றைய படி மழைக்காலம் என்றால் ஈசல் வரும் ...
நிலா காலம் என்றால் தேனீ வரும்.
 
படம் காட்ட இங்க வந்து போவோரை உலகம் அறியும்.
Link to comment
Share on other sites

நேசக்கரம் என்ற பெயரில் 2006இல் தயாமோகண்ணாவினால் கிழக்கில் செயற்படுத்தப்பட்ட நேசக்கரத்தை இயக்கிய இளைஞர் இன்னும் சாகவில்லை. உயிரோடு தான் இருக்கிறார். தற்போது தனது முகத்தை  இதோ பாரென்று அந்த இளைஞரால் காட்ட முடியாத நிலமையில் இருக்கிறார். அவர் வெளியில் வரும் நாளொன்று வரும்.
 
இதுபோல மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது நண்பர்களை வைத்து உதவிய அமைப்பும் இலங்கையில் இயங்கியது அதுவும் நேசக்கரம் என்ற பெயரில். இதுபோல 2007இல் யாழில் உருவாகிய யாழ் நேசக்கரம் பற்றிய பகிர்வில் உதவிய ஆரம்ப வித்திட்ட யாவரையும் அவர்களது உதவிகளையும் விரைவில் எழுதுவேன்.
 
பந்தியில் சாத்திரிக்கும் இடமுண்டு. 
 
2009இன் பின்னர் யேர்மனியில் பதிவு செய்யப்பட்ட உதவியமைப்பாக நேசக்கரம் உருவாக அடித்தளமிட்டு ஆதரவு தந்து உதவியவர்கள் 2010 சட்டம் அனுமதித்த பின்னர் எப்படி நேசக்கரம் வளர்ச்சி கண்டது. இதில் பங்களித்தோர் வெளியில் வராமல் தங்கள் ஆதரவை தந்தோர் என பலரை வெளியில் சொல்லுவேன்.
 
இதில் கணிசமான ஆதரவு யாழ் இணையத்திற்கானது. யாழ் இணையத்தின் கள உறுப்பினர்கள் வாசகர்களே உதவுகிறார்கள். பலரின் முகம் தெரியாது முகவரி தெரியாது. தங்களுடடைய உதவிகளை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பற்றியெல்லாம் எழுத வேண்டும். 
 
திங்கள் வரை யாழ் களத்துக்கு வரமாட்டேன் உறவுகளே. எங்களது பெண்கள் அபிவிருத்தி மன்றத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்துலக பெண்கள் தினத்திற்கு லண்டன் போகிறேன். திங்களின் பிறகு உங்கள் கேள்விகளுக்கு பதில் தருகிறேன். 
 
 
Link to comment
Share on other sites

அக்காச்சி நீங்கள் சொல்கிற தயா மோகன் கருணா பிரிந்த போது கருணாவின் ஊடக பேச்சாளராக அறிவிக்கப் பட்டு இயங்கியவர் பின்னர் புலிகளின் கை ஓங்கிய போது பல்டி அடித்து மீண்டும் புலிகளோடு இணைத்தவர் இறுதி யுத்தத்தின் பின்னர் தன்னோடு நின்ற போராளிகளை கைவிட்டு விட்டு கே .பி . யின்உதவியோடு வெளிநாடு வந்து சேர்த்தவர்.இறுதி யுத்த காலத்தில் இவரும் கே பி யும் மாறி மாறி கொடுத்த பேட்டிகளே இருவரும் ஒன்றாக இயங்கியத தற்கு சாட்சிகள் . அந்த தயா மோகனின் ஆலோசனையோடு நேசக்கரம் தொடங்கியது என்கிறீங்கள் . அடுத்தது சாத்திரி அண்ணா யாழில் நேசக்கரத்தை தொடங்கியவர் அவருக்கும் கே.பி குமான தொடர்புகள் அனைவரும் அறிந்தது எப்படி பார்த்தாலும் நேசக்கரத்தின் பின்னணி ஒரே இடத்தில இருந்து தானே தொடங்கு கின்றது இதை நேரடியாக சொல்லி விட்டு செய்யலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தின் தோற்றுவாய் பற்றிய சாந்தி அக்காவின் பதிவும், சாத்திரிதான் யாழில் தொடக்கியவர் என்று கருத்தும் ஆச்சரித்தைத் தருகின்றன. நேசக்கரம் தாயகத்தில் செய்யும் அளப்பரிய சேவைகள் போற்றுதற்குரியது. ஆரம்ப காலத்தில் நேசக்கரத்தோடு இணைந்திருந்தாலும் பின்னர் அது ஆலமரமாக வளர்ந்தபோது பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. எனவே நேசக்கரத்தின் செயற்பாடுகளைப் பற்றிக் கதைப்பதற்கு எந்த அருகதையோ உரிமையோ என்னிடம் இல்லை.

எனக்குத் தெரிந்து நேசக்கரம் யாழில் ஆரம்பிக்கப்பட்டது யாழ் டன் என்று அன்பாக அழைக்கப்பட்ட டங்ளஸ் என்ற உறவால்தான். இதைப்பற்றிய திரி நாற்சந்தியில் உள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=27323

சாத்திரி பிற உறுப்பினர்களைப் போன்று இணைந்துகொண்டவர். போர் நடந்த காலம் ஆகையால் அவருக்கு இருந்த தாயகத் தொடர்புகள் காரணமாக ஆரம்ப உதவிகளைத் தாயகத்திற்கு அனுப்பும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

மேலே கிருபன் எழுதி இருப்பதே உண்மை. இது தொடர்பாக ஒரு திரி யாழில் தொடங்கப்பட்ட போது, அதற்கு ஆதரவு தெருவித்து, எனது பங்களிப்பையும் வழங்கி இருந்தேன். இதில் டண்ணின் பங்களிப்பே முக்கியமானது. சாத்திரி அப்போது தான் புலிகளின் பிரதினிதி போலவே யாழ் களத்தில் செயற்பட்டார். இதனால் அவருக்கு இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி சேர்க்கப்பட்ட நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது சாந்தி அவர்களும் சாத்திரியும் ஒன்றாகவே இயங்கினர். பின்னர் நேசக்கரத்தின் செயற்பாடுகள் டண்னால் கைவிடப்பட்டு இருந்தது.பின்னர் அவரே இதனை சாந்தி அவர்களிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும். அதன் பின்னர் சாந்தி அவர்கள் தமக்கிருந்த தொடர்புகளையும், எழுத்தையும் பாவித்து இதனை பெருமெடுப்பில் செயற்பட வைத்தார் அப்போது தான் இது ஒரு அமைப்பாக ஜேர்மனியில் பதியப்பட்டது . இதன் பின்னால் அவரின் உழைப்பு நிச்சயமாக இருக்கிறது. இதில் சாத்திரியாரின் பங்கு ஆரம்ப்பத்தில் தொடர்பாடலை ஏற்படுத்தியது மட்டுமே. ஆனால் இன்று அவர் தான் புலிகளை விட்டு 2001 ஆம் ஆண்டே வெளியேறி விட்டிருந்தேனதென்று எழுதுவது தான் , இவர் யார் இங்கு என்ன செய்தார், இப்போது என்ன செய்கிறார் என்னும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை  மட்டும் சாந்தியக்கா புரிந்து கொள்ளணும்

இது போன்ற  சமூக  சேவைகளை

பொதுத்தொண்டுகளை  செய்பவர்கள் 

இது   போன்ற பகிரங்க  விவாதங்களையும்  கேள்வி பதில்களையும்  செய்யமுடியாது

என்பதைப்புரிந்து கொண்டு

இவற்றிலிருந்து விலகி

எல்லோரையும் அரவணைத்தபடி

காரியத்தில் மட்டுமே கண்ணாக  இருக்கணும்

இதுவே  இன்றைய  தமிழரது தேவை

தயவு செய்து இவற்றை  தவிருங்கள் சாந்தியக்கா.......

Link to comment
Share on other sites

கலைக்கப்பட இருந்த நேசக்கரத்தை இப்போது திறமையாக நடத்துவது சாந்தி என்று நடக்கும் செயல்களிலே தெரிகிறது....அதை விட்டு வெளியேறியோர் ஏன் கவலைபடுகிறார்கள்?

காய்த்தமரம் தான் கல்லடி படும்....

 

யாரும் நேரம் இருந்தால் நேசக்கரத்தின் வரலாறை எழுதி வைத்தால் நல்லம்...... (அதற்கு பாடு பட்டவர்களின் பங்களிப்பை பற்றியும்)

Link to comment
Share on other sites

கலைக்கப்பட இருந்த நேசக்கரத்தை இப்போது திறமையாக நடத்துவது சாந்தி என்று நடக்கும் செயல்களிலே தெரிகிறது....அதை விட்டு வெளியேறியோர் ஏன் கவலைபடுகிறார்கள்?

காய்த்தமரம் தான் கல்லடி படும்....

யாரும் நேரம் இருந்தால் நேசக்கரத்தின் வரலாறை எழுதி வைத்தால் நல்லம்...... (அதற்கு பாடு பட்டவர்களின் பங்களிப்பை பற்றியும்)

கவலைப்படவில்லை நான்தான். சும்மா பிலிம்.

வரும்போது நடுத்தெருவில் நிற்கும் முன்னாள் போராளிக்கு ஒரு நூறு டொலர் கேட்டால் ஒரு ஈ, பூச்சி இந்த பக்கம் எட்டி பார்க்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டமான பேச்சு தன் ஊரை கெடுக்குதுங்க - அது

வெட்டித்தானமாக் கேக்கிறவங்க

காதையும் கெடுக்குதுங்க

சந்திலும் பொந்திலும் வாதம் - அதால்

தலைவலி மருந்துக்கு லாபம்

கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து

குடும்பத்தை கலக்குதுங்க - பெரும்

குழப்பமாக்கியே சண்டைகள் மூட்டி

பொழப்பயும் கெடுக்குதுங்க

புரளியும் வதந்தியும் மூட்டி - ஒரு

பொய்யை நூறாகக் கட்டி - கரும்

பூதம் என்றும் சிறு பேய்கள் என்றும் - பல

பாதையும் ஊரையும் கெடுக்குதுங்க

அறையில் வளர்ந்து வெளியில் பறந்து

அவதிப் படுத்துதுங்க - ஊரை

அவதிப் படுத்துதுங்க - அது

அரசியல் வரைக்கும் நாக்கை நீட்டியே

அமைதியை கெடுக்குதுங்க ...

 

 

~~~~~ நன்றி

~~~~~பட்டுக்கோட்டை கல்யாணம்

 

குரல் ~ 196 (பயனில சொல்லாமை - Against vain Speaking)

பயனில்சொல் பாராட்டுவானை மகனேனல்

மக்கட் பதடி யேனல்

பயனற்றவைகளை சொல்லி பயன் பெற நினைப்பவனை, மனிதன் என்பதை விட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.