Jump to content

அம்மா சுகமாய் இருங்கோ


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையங்களைப் பார்க்க மனம் மேலும் குழம்பியது.முன்பு எல்லாம் மனச்சோகம் வந்தால் துயிலும் இல்லம் போய் சிறிது நேரம் மரநிழலில்  இருந்து வந்தால் மனம் அமைதியாகும்.இன்று என்ன செய்யலாம் யோசிக்க படக் என்று அந்த ஞாபகம் வந்தது.சில நாட்களுக்கு முன்புதான் ஒரு மாவீரனின் தாயின் தொலைபேசி இலக்கம் கிடைத்திருந்தது.இன்றைக்கு அந்த அம்மாவோடு கதைப்போம்.

அம்மா அம்மா நான் என்னை அறிமுகப்படுத்தினேன்.

ஐயோ என்ர பிள்ளையே ! எப்படியிருக்கிறாய்?.நான் கேட்க வேண்டிய கேள்வியை அவ கேட்டா.

நான் நல்லா இருக்கிறன் அம்மா நீங்க எப்படி அம்மா.

நான் இருக்கிறன் .எனக்கு ஒரு குறையும் இல்லை.என்ர வீட்டுக்கு வந்திட்டன்.காலையில ஒருக்கா சமைச்சா மூன்று நேரமும் சாப்பிடுவன்.

தேங்காய் பொறுக்கி போடுவன்.ஓலை பின்னுவன். என்ர பாடு பிரச்சனை இல்லைத்தம்பி.நான் போன மாதம்தான் இந்த போனை வாங்கினனான்.அப்ப பக்கத்து வீட்டுக்காரர் எல்லாம் கேட்டவை உனக்கேன் உதை. உன்னோட யார் கதைக்க போயினம் என்று.எனக்கு தெரியும் என்ர பிள்ளைகள் எங்காவது இருப்பாங்கள் என்று.

அம்மாவுக்கு ஒரு பெடியன்தான்.மனுசனும் பெடியனுக்கு பத்து வயதாய்

இருக்கும் போது இறந்து போனார்.அவர்களுக்கு பொருளாதார பிரச்சனை பெரிதாய் இருக்கவில்லை.

பெடியன் படிப்பிலையும் விளையாட்டிலையும் கெட்டிக்காரன்.அமைதியானவனாய் இருந்தாலும் துடியாட்டக்காரன்.தாயில் கொள்ளை பாசம் வைத்திருந்தான்.தாயும் அவனில் உயிரையே வைத்திருந்தாள்.முதலில் அவன் பதின்நான்கு வயதில் இயக்கத்திற்கு வந்துவிட்டான்.அவனது வயதைக்காரணம் காட்டி

வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.பின்பு பதினாறாம் வயதில் மீண்டும் இயக்கத்திற்கு வந்துவிட்டான்.மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான் வீட்டில் ஒரு பிள்ளை என்பதற்காய்.இம்முறைதான் நான் அவனது வீட்டிற்கு முதல் தடவையாய் போயிருந்தேன். பின் இரண்டாம் தடவை அவனது வீரச்சாவுக்கு போனேன்.  

அவன் தனது பதினெட்டாம் வயதில் மீண்டும் இயக்கத்திற்கு வந்துவிட்டான். பயிற்சி முடித்து விடுமுறையில் நின்றபோது என்னைச் சந்திக்க வந்திருந்தான்.முழுமையாய் ஒரு போராளியாய் இருந்தான்.அளவாக கதைக்கின்ற அந்த பண்பு நிறைந்த போராளியின் மனதில் தாயின் சோகம் குத்தியிருந்தது.நானில்லாட்டிலும் அண்ணை (தலைவர்) என்ர அம்மாவைப்பார்ப்பார்.அவனில அந்த திருப்திஇருந்தது.

நான் ஆலோசனை கூறினேன்.நீர் ஒரு பிள்ளை என்றதால பின்னணி வேலைகளைச் செய்யலாம்.இடைக்கிடை அம்மாவையும் போய்ப் பார்க்கலாம்.நான் கதைத்துப்பார்க்கிறேன் என்றேன்.வேண்டாம் அவன் முழுமையாய் மறுத்துவிட்டான்.அவன் களமுனையில் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டான். 

இறுதியாய் அவனை முகமாலையில் பின்னனிப்பிரதேசத்தில் சந்தித்தேன்.நான் நிற்பதை அறிந்து அவன் சந்திக்க வந்திருந்தான்.மிகக் கலகலப்பாய் இருந்தான்.அம்மாவை போய்ப்பார்த்தீரா? என்றேன்.எங்க சரியான வேலை என்றான். நான் ஒரு வெள்ளைத்தாளைக்கொடுத்து

கடிதம் எழுதித்தாரும் நான் அம்மாவுக்கு கிடைக்க ஒழுங்கு செய்கிறேன் என்றேன். அவன்  சுமார் ஒருமணித்தியாலத்திட்கு  பிறகு ஏதோ எழுதி மடித்துத்தந்தான்.நான் அதை தாயிற்கு கிடைக்க ஒழுங்கு செய்தேன்.

அதுதான்  தாயிட்கான அவனது கடைசி செய்தியாய் போயிற்று.

அம்மா ஒரு இடமும் போறதில்லையோ?

இல்லைத்தம்பி பிள்ளையை விதைச்ச இடமும் இல்லை என்று பெரு மூச்சு விட்டவ. என்னைமாதிரி இன்னும் ஒரு ஆள் இருக்கிறா தம்பி அவவுக்கு உன்னைத்தெரியும்.அவவுக்கும் ஒரு பிள்ளைதான் அந்தப்பிள்ளை சரணடைந்து எங்கை என்று தெரியாது.அவ தேடாத இடம் இல்லை.இப்ப என்னட்டைதான் இடைக்கிடை வருவா .அவவின்ர போன் நம்பரைத்தாறன்   அவவிட்கும் எடு தம்பி என்று நம்பரைத் தந்தா. 

 

மகன் வைச்ச மாமரம் , கொய்யாமரம் நல்லாய்க்காய்க்கிதாம்  . சுத்தி இருக்கிற எல்லாச் சனத்திட்கும் கொடுக்கிறதாம்.சின்னப்பிள்ளைகள் பள்ளிக்கூடம் முடிய ஒருக்கா இந்தப்பக்கம் வந்துதான் போவாங்களாம்.

ஊரில முந்தி இயக்கத்திற்கு பின்னால திரிஞ்ச கொஞ்சம் இப்ப அவங்களோட நிற்கிறாங்கள் பச்சோந்திகள் பஞ்சமிகள் என்று பேசினா.

 

அம்மா சுகமாய் இருங்கோ பிறகு கதைக்கிறன்

 

- நிரோன்-  

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா உண்மையைக் கதைத்தால் உடனே போனை வைத்து விடுவீங்களா?...எழுதிய விதம் அருமை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு லியோ

 

Link to comment
Share on other sites

மனதைப் பிசைய வைத்தது.. இணைப்பிற்கு நன்றி லியோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி,சுமோ,இசை நன்றி உங்கள் வருகைக்கும் ஊக்கமூட்டலுக்கும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி லியோ

இப்படிப்பல அம்மாக்கள்  ஏக்கப்பெருமூச்சுகளுடன் வாழ்கின்றனர்.

உங்கள் ஆறுதலான வார்த்தைகள் அந்த அம்மாவிற்கு நிம்மதியைக் கொடுக்கும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்

 

Link to comment
Share on other sites

நன்றிகள் லியோ அண்ணா கதையை தந்தமைக்கு. இப்படிப் பல அம்மாக்கள் அப்பாக்களுடனான அனுபவங்கள் என்னிடமும் இருக்கிறது.

 

கடந்தவாரமும் இதோபொலொரு மாவீரர்களை தந்த அப்பா எதிர்பார்க்காத நிகழ்வாக  இறந்துவிட்டார். மகள் மகளென்று உறவாடிய அந்த அப்பா கடந்த திங்கள் இரவு 9மணிக்கு இறந்துபோனார். அன்று காலை அவருக்கு இம்மாதத்துக்கான பணம் அனுப்பிவிட்டு இரவு தாயக நேரம் 10மணிக்கு தொலைபேசியெடுத்தேன் அழுகுரல்தான் வந்தது அப்பாவுக்காய் அனுப்பிய காசில் ஒரு மாபோத்தல் கூட வாங்கிக் குடிக்காமல் இறந்துவிட்டார். இன்னும் அந்த நினைவும் அவரது  குரலும் மனசுக்குள்.....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள், லியோ!

 

ஆழ்மனதை, கசக்கிப் பிழிகின்றது உங்கள் கதை!

 

தொடர்ந்து எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வு பூர்வமான நல்ல எழுத்தாற்றல், வலிக்கிறது .. :(

 

தொடர்ந்து பல படைப்புக்களைத் தாருங்கள்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாத்தியார்,விசுகு,சாந்தி ,புங்கை,ஜீவா அனைவருக்கும் அன்புடனான நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது எல்லோரும் மறக்க நினைக்கும் உறவுகளின் கதை.உணர் வோட்ட்மாய் எழுதி உள்ளீர் கள் பாராட்டுக்கள்.

 

இப்படி ஒரு சிலரால் தான் மனிதம் வாழ்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள், மனதில் ஒரு துயரத்தைக் கொண்டு வந்தது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

பாவம் அந்த அம்மாவிற்கு வெளிநாட்டில் யாரும் இல்லை போலிருக்கு .

Link to comment
Share on other sites

பாவம் அந்த அம்மாவிற்கு வெளிநாட்டில் யாரும் இல்லை போலிருக்கு .

வெளிநாட்டில் யாரும் இல்லாதபடியால் தானே வெளிநாட்டில் இருந்து ஒருவர்  அம்மாவுடன் தொலைபேசுகிறார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி,புத்தன்,சுவி,அர்ஜுன்,சாந்தி ,அலைமகள் வருகைக்கும் கருத்து இடலுக்கும் மிக்க நன்றிகள் 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தெரிவில் லியோவின் கதை

Link to comment
Share on other sites

அம்மா எழுத்தில் அடக்கிவிட முடியாது ...தொடருங்கள் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.