Jump to content

சின்ன சின்ன ஞாபகங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொண்ணூறுகளின்ற  ஆரம்ப காலம், யாழ்ப்பாணத்தில ஒரு அழகான கிராமத்தின்ர மூன்று சிறு ஒழுங்கைகள் சந்திக்கும் சந்தியில் சைக்கிளில்  நின்று நாங்கள் மூவர் கதைத்துக் கொண்டு இருந்தோம். மூன்று பேரும் ஒவ்வொரு பாதையால் வந்ததால் அந்த இடம் எங்களுக்கு பொதுப்புள்ளியாயிற்று.அப்போது ஒருபாதையால் ஒருவர் சைக்கிளில் பாட்டோடு வந்து கொண்டிருந்தார்.சைக்கிள் இரண்டு பக்க பனைவேலியையும் மாறி மாறி தொட்டுக்கொண்டுவந்தது.அவருக்கு வெறி என்பதை நாங்கள் ஊகித்துக்கொண்டோம்.நான் மற்றவர்களை அவதானமாய் தள்ளி நிற்கச்சொன்னேன். அவரி வாயில் இருந்து "ராஜாதி ராஜன் இந்த ராஜா ராஜா" என்ற பாடல் ராகமாய் போய்க்கொண்டிருந்தது.

சந்திக்கு கிட்ட வரவும் அவரை துரத்தி வந்த நாய் அவரில பாயவும் சரியாய் இருந்தது.ஒரு கொஞ்ச நேரத்தில உருட்டி உருட்டி கடிச்சுப்போட்டுது.அவர் உடுத்திருந்த சாரம் கந்தலாய்ப்போயிற்று. நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து கத்தினம் நாய் விட்டிற்று போயிற்று.அந்த மனிதனைப்பார்க்க பாவமாய் இருந்தது.அயல் சனங்களும் வந்திற்றுது.நாங்கள் வந்த சனங்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பிட்டு ,அயல் வீடு ஒன்றில பழைய சாரம் வாங்கி அந்த ராஜாவுக்கு கொடுத்தம்.

அந்த ராஜா மீண்டும் இந்தப்பாட்டோட போனார்.ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை வாழ,ஒரு ராணியும் இல்லை ஆள---  என்ற பாட்டோட போனார்.

 

நான் அவரை மீண்டும் எதிர்பாராது வன்னியில் கண்டேன்.அதுவும் இயக்க நிறுவனமொன்றில் ஊழியராய்.அவர் என்னை அடையாளம் கண்டதை நான் உணர்ந்துகொண்டேன்.நான் அவரை அடையாளம் கண்டதாய் அவர் இறக்கும்வரை காட்டிக்கொள்ளவில்லை.அவர் ஒரு சிறந்த அர்ப்பணிப்புமிக்க ஊழியராய் இருந்தார்.கைவேலியில் காயமடைந்த மக்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருக்கும்போது செல்தாக்குதலில்

உடல் சிதறி இறந்து போனார்.அவரது தலையையும் இரு பாதங்களையும் ஒரு பலாமரத்துக்கருகில் புதைத்தோம்.புதைகுழியிட்குள் ஒரு மூக்குப்பேனியையும் அடையாளத்திட்காய் வைத்தோம்.உறவினர்களுக்கு

அவர் இறந்ததை அறிவிக்கமுடியவில்லை.           

 

  • ஓவியன் -
Link to comment
Share on other sites

  • Replies 148
  • Created
  • Last Reply

பதிவுக்கு நன்றி லியோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் .... என்னத்தைச் சொல்ல தொடருங்கள் லியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதைக் கனக்க வைக்கும் பதிவுகள், எப்படி லைக் பண்ண?? :(

 

ஆவணமாக்கப்பட வேண்டியவை. பகிர்வுக்கு நன்றிகள் லியோ அண்ணா :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்கை,ரதி,அபராஜி,இசை,சுமேரியர்,ஜீவா தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதைக் கனக்க வைக்கும் பதிவுகள், எப்படி லைக் பண்ண??  :(

 

ஆவணமாக்கப்பட வேண்டியவை. பகிர்வுக்கு நன்றிகள்

தொடருங்கள்  லியோ  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வாசிக்கின்றனான் ,நன்றி லியோ தொடருங்கள்

Link to comment
Share on other sites

உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வாசிக்கின்றனான் ,நன்றி லியோ தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு அண்ணையோடு கதைத்துக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது கிரிக்கட் பற்றி கதை தொடங்கிற்று.தமிழேந்தி அண்ணைதான் ஆரம்பித்துவைத்தார்.தமிழேந்தி அண்ணை ஒரு இந்திய அணி ஆதரவாளர்.அதிலும் டெண்டுல்காரின் விசிறி .அந்த நேரம் இலங்கைக்கும்

அவுஸ்திரேலியாவிட்கும்  போட்டி நடக்கயிருந்தது.தமிழேந்தி அண்ணை

அண்ணையிட்ட சொன்னார் " தம்பி சொர்ணம் இலங்கை அணியின்ர ஆதரவாளர்" . சொர்ணம் அண்ணையிட்ட சொல்லிச்சு அண்ணை சிங்களவன் எப்படியெண்டாலும் எங்களை ஒத்தவன் அவன் அப்படியில்லை.அண்ணை சொர்ணம் சொன்னதை ஆமோதித்தார்.

நான் வெஸ்ட்இண்டீஸ் ஆதரவாளன்.எனக்கு ஏனோ இலங்கை இந்தியா பிடியாது.ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரித்தானே.அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ எதுவும் இருந்ததில்லை.அவர் அருகில் இருந்தவர்கள்  சிலர் இன்னும் உயிரோடு அங்கும் இங்கும் இருப்பார்கள்

அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.தூரத்தில் இருப்பவர்கள்தான் அவரை நா கூசாமல் விமர்சிக்கிறார்கள்.இனத்தின் விடுதலையும் மேம்பாடும்தான் அவரின் சதா சிந்தனையாய் இருந்தது. அதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடம் இல்லை.ஒவ்வொரு போராளியும் மாவீரர் ஆகும்போது அந்த சுமை அவரின் நெஞ்சில் கூடிக்கொண்டே போனது. 

இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளரின் மனைவி சிங்கள இனத்தை சேர்ந்தவர்.அரசியல் ஆலோசகரின் மனைவி வெள்ளை இனத்தை சேர்ந்தவர்.இன்னுமொருவரின் மனைவி தாய்லாந்தை சேர்ந்தவர்.சில போராளிகள் சிங்கள பெண்களை மணந்திருந்தார்கள்( தேவை கருதியும்,விரும்பியும்).ஒரு தடவை சிங்களப்பெண்ணை மணந்த போராளியொருவன்  குடும்பமாய் வன்னிக்கு வந்திருந்தான்.வரும்போதே அவனது நான்கு வயது பெண்குழந்தைக்கு டெங்கு நோய் இருந்திருக்கிறது.

இங்கு சீரியஸ் ஆகிவிட்டது.பல போராளிகள் அந்த பிள்ளையை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்தார்கள்.அந்த பிள்ளைக்கு இரத்தம் ஏற்றவேண்டும் ஒரு பொறுப்பாளர் தனது இரத்தத்தை ஏற்றச்சொன்னார் ஆனால் அந்த இரத்தம் பொருந்தவில்லை.இன்னுமொரு போராளியின் இரத்தம் ஏற்றப்பட்டது.அந்த குழந்தை காப்பற்றப்பட்டதுடன் அந்த குழந்தை அந்த மருத்துவமனையில் இருந்து வெளிக்கிட மறுத்தும்விட்டது. குழந்தை பணியாளர்களுடன் மிகவும் ஒட்டிவிட்டது.பின் அந்த குடும்பம் தலைவரை சந்தித்து சிங்கள தேசத்திற்கு போனது. 

 அந்த உன்னத தலைவனை எழுதும் அருகதை எனக்கு கிடையாது.இருந்தும் சிலரின் விமர்சனம் எழுதத்தூண்டுகிறது.

 

 

 

-  ஓவியன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடேசன் அண்ணை  போராளிகளின் சிவில் பிரச்சனைகளுக்கான விசாரணைக்குழுவிற்கும்  பொறுப்பாக இருந்தார்.நான் அந்தக்குழுவில் ஒருவனாய் இருந்தேன். மாதத்திற்கு ஒரு தடவை அல்லது இருதடவை சந்தித்து முடிவுகள் எடுப்போம்,/ விசாரனைகளை செய்வோம்.எங்களுடைய பரிசீலனைக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.அது ஒரு பெண்ணிடம் இருந்து வந்திருந்தது.அந்தக்கடிதத்தில் இயக்கத்தின்ர ஒரு பிரிவில் சாரதியாக இருக்கும் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் தன்னை இரு வருடங்களாய் காதலித்ததாயும் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாயும் தனக்கு உதவுமாறும் கோரப்பட்டிருந்தது. அந்தப்பெண்பிள்ளையின் குடும்பமும் வறுமை நிலையில் இருந்தது.

நாங்கள் அப்போராளியின் தனி நபர் கோவையை பார்த்தபோது அதில் அவர் யாரையும் காதலிப்பதாய் குறிக்கப்பட்டிருக்கவில்லை.நாம் அந்த போராளியை வரவழைத்து அவர் மீது வந்த புகாரை தெரிவித்து பூரண விளக்கத்தை கடிதம் மூலமாய் தருமாறு கோரினோம்.  

அவர் காதலித்ததை ஏற்றுக்கொண்டு ,திருமணம் செய்ய மறுத்திருந்தார்.

அவர் மறுத்தலுக்கான காரணம் அந்தப்பெண்ணின் சகோதரன் இந்திய ஆமியுடன் சேர்ந்தியங்கிய மாற்றுக்குழுவில் இருந்து புலிகளுடனான மோதலில் இறந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது.அது தனக்கு அண்மையில்த்தான் தெரிந்ததாகவும் எழுதியிருந்தான்.நாங்கள் அந்தக்காரணத்தை ஏற்கமுடியாது நீர் திருமணம் செய்யவேண்டும் என்று கூறினோம்.அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.அதனால் அண்ணையிடம்

இப்பிரச்சனையை கொண்டுபோனோம்.அண்ணை உறுதியாய்ச் சொன்னார் அந்தப்போராளி இணங்காவிடின் அவரை இயக்கத்தில் இருந்து நிறுத்தி குற்றத்திற்கு உரிய தண்டனையை வழங்குமாறு சொன்னார். அந்தப்பெண்பிள்ளைக்கும் இயக்கநிறுவனம் ஒன்றில் வேலைக்கு ஒழுங்குசெய்து குடும்ப வறுமையை தீர்க்குமாறும் கூறினார்.அண்ணை கூறியது போன்றே எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டன. 

 

  • ஓவியன் -   
Link to comment
Share on other sites

சுவாரசியமான அனுபவப்பகிர்வுகள்.. தொடருங்கள் லியோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு அண்ணையோடு கதைத்துக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது கிரிக்கட் பற்றி கதை தொடங்கிற்று.தமிழேந்தி அண்ணைதான் ஆரம்பித்துவைத்தார்.தமிழேந்தி அண்ணை ஒரு இந்திய அணி ஆதரவாளர்.அதிலும் டெண்டுல்காரின் விசிறி .அந்த நேரம் இலங்கைக்கும்

அவுஸ்திரேலியாவிட்கும்  போட்டி நடக்கயிருந்தது.தமிழேந்தி அண்ணை

அண்ணையிட்ட சொன்னார் " தம்பி சொர்ணம் இலங்கை அணியின்ர ஆதரவாளர்" . சொர்ணம் அண்ணையிட்ட சொல்லிச்சு அண்ணை சிங்களவன் எப்படியெண்டாலும் எங்களை ஒத்தவன் அவன் அப்படியில்லை.அண்ணை சொர்ணம் சொன்னதை ஆமோதித்தார்.

நான் வெஸ்ட்இண்டீஸ் ஆதரவாளன்.எனக்கு ஏனோ இலங்கை இந்தியா பிடியாது.ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரித்தானே.அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ எதுவும் இருந்ததில்லை.அவர் அருகில் இருந்தவர்கள்  சிலர் இன்னும் உயிரோடு அங்கும் இங்கும் இருப்பார்கள்

அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.தூரத்தில் இருப்பவர்கள்தான் அவரை நா கூசாமல் விமர்சிக்கிறார்கள்.இனத்தின் விடுதலையும் மேம்பாடும்தான் அவரின் சதா சிந்தனையாய் இருந்தது. அதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடம் இல்லை.ஒவ்வொரு போராளியும் மாவீரர் ஆகும்போது அந்த சுமை அவரின் நெஞ்சில் கூடிக்கொண்டே போனது. 

இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளரின் மனைவி சிங்கள இனத்தை சேர்ந்தவர்.அரசியல் ஆலோசகரின் மனைவி வெள்ளை இனத்தை சேர்ந்தவர்.இன்னுமொருவரின் மனைவி தாய்லாந்தை சேர்ந்தவர்.சில போராளிகள் சிங்கள பெண்களை மணந்திருந்தார்கள்( தேவை கருதியும்,விரும்பியும்).ஒரு தடவை சிங்களப்பெண்ணை மணந்த போராளியொருவன்  குடும்பமாய் வன்னிக்கு வந்திருந்தான்.வரும்போதே அவனது நான்கு வயது பெண்குழந்தைக்கு டெங்கு நோய் இருந்திருக்கிறது.

இங்கு சீரியஸ் ஆகிவிட்டது.பல போராளிகள் அந்த பிள்ளையை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்தார்கள்.அந்த பிள்ளைக்கு இரத்தம் ஏற்றவேண்டும் ஒரு பொறுப்பாளர் தனது இரத்தத்தை ஏற்றச்சொன்னார் ஆனால் அந்த இரத்தம் பொருந்தவில்லை.இன்னுமொரு போராளியின் இரத்தம் ஏற்றப்பட்டது.அந்த குழந்தை காப்பற்றப்பட்டதுடன் அந்த குழந்தை அந்த மருத்துவமனையில் இருந்து வெளிக்கிட மறுத்தும்விட்டது. குழந்தை பணியாளர்களுடன் மிகவும் ஒட்டிவிட்டது.பின் அந்த குடும்பம் தலைவரை சந்தித்து சிங்கள தேசத்திற்கு போனது. 

 அந்த உன்னத தலைவனை எழுதும் அருகதை எனக்கு கிடையாது.இருந்தும் சிலரின் விமர்சனம் எழுதத்தூண்டுகிறது.

 

 

 

-  ஓவியன்-

 

அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ இருந்ததில்லை அது எல்லோருக்கும் தெரிந்த விசயம் ஆனால் தாங்கள் அவர் வழி நடப்போம் என இங்கே இருந்து சொல்லிக் கொண்டு இருப்போரிடம் அது நிறையவே இருக்குது.
 
தொடருங்கள் லியோ நீங்கள் எழுதுவதை வாசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
Link to comment
Share on other sites

தொடருங்கள்  லியோ! இறுதியில் முள்ளிவாய்க்காலில் நடந்ததையும் எழுதுங்கோ. நீங்கள் அங்கு நின்றபடியால் கண்டவற்றை எழுதுங்கோ ( தலைவர் உட்பட)

 

ம்ம்.... நீங்கள் எல்லோரும் பார்க்கிறது விளங்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு,நந்தன்,சுண்டல் ,இசை,சாம்பவி,ரதி,அலை தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேனொழுக இங்கு விடுதலை பற்றிக் கதைப்பவர்கள் உண்மையானவர்களும் இல்லை. கதைக்காமல் இருப்பவர்கள் எதிரானவர்களும் இல்லை. நீங்கள் தொடருங்கள் லியோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேனொழுக இங்கு விடுதலை பற்றிக் கதைப்பவர்கள் உண்மையானவர்களும் இல்லை.

கதைக்காமல் இருப்பவர்கள் எதிரானவர்களும் இல்லை.

நீங்கள் தொடருங்கள் லியோ.

 

 

இது எதற்கு இங்கு சுமே???

உங்களுக்கு எவரையாவது அப்படி தெரிந்தால் அவரைப்பற்றி  நேரடியாக விமர்சியுங்கள்.

அதைவிடுத்து

எல்லோரையும் இது போன்று  ஒரே மட்டைக்குள் போட்டு மூடுவது ஒரு நல்ல பார்வையோ அல்லது உதாரணமோ அல்ல. :(  :(  :(  :(

எமது இனத்துக்கு இருப்பதையும் அழிக்கும் விசம் கொண்டது இப்பார்வை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு,ஒரு சிறப்பு பயிற்சிமுகாம்.அந்த சிறப்பு பயிற்சி முகாம் வன்னியில் ஒரு காட்டினில் ஆடம்பரமற்றும், அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தது.அந்த அமைப்பு பணியை முன்னாள் இம்ரான் பாண்டியன் தளபதி ராஜேஸ்தான் செய்துமுடித்திருந்தார். அந்த பயிற்சி முகாமின் பொறுப்பாளராய் தளபதி கடாபி இருந்தார்.நானும் கடாபியும் நல்ல நண்பர்கள் அந்த முகாமில் ஒரே தங்குமிடத்தில் தங்கியிருந்தோம்.காலை ஐந்து மணிக்கு பயிற்சிக்கு எழுந்தால் பயிற்சி முடியும்வரை ஒன்றாகத்தான் திரிவோம்.கடாபி ஆதவன்,3/8 ஆகிய பெயரிலும் அழைக்கப்படுவார்.நான் 3/8 என்றுதான் அழைப்பேன்.முன்பும் ஒரு பயிட்சிமுகாமில் நாங்கள் ஒன்றாக நின்றோம் அப்போது சங்கர் அண்ணாவும் எங்களுடன் இருந்தார்.

இரவு பயிற்சி முடிந்தாலும் கடாபி நிர்வாக வேலைகளை செய்துவர சாமம் ஆகிடும் எனது நித்திரையை குழப்பக்கூடாது என்று லைட் போடாமல் மெதுவாக போய் தனது படுக்கையில் படுப்பார்.போராளிகளுக்கு கண்டிப்பானவராய் தெரிவார்.எங்களுக்கு ஒரு உத்தமராய் தெரிந்தார்.அதித உழைப்பு ,இறுக்கமான நிர்வாகம் அவருடையது.சிறந்த துப்பாக்கி சூட்டாளர். சிறப்பு பயிற்சி முகாமில் ஞாயிறு ஓய்வு நாள்.அன்றும் ஒரு காலை காலை உணவிற்குப்பின் முகாமை சுற்றிப்பார்க்க இருவரும் சென்றிருந்தோம்.எல்லா இடங்களையும் பார்த்து

சூட்டு பயிற்சி நடக்கும் இடத்திற்கு போனோம்.அப்போது நல்ல சூட்டுப்  போராளி ஒருவன் ஒரு துப்பாக்கியை கடாபியிடம் காட்டி இந்த துப்பாக்கி  வலு சீராக்க ( Zero setting )வேண்டும் , சுடுகின்றபோது சரியான விலத்தல் இருப்பதாய் சொன்னான்.  அப்போது கடாபி அந்த குழுவின் தலைவனிடமும் அது பற்றி கேட்டார்.அவனும் ஆமோதித்தான் .இப்போது கடாபி அந்த துப்பாக்கியை வாங்கி எழுபத்தைந்து மீட்டர் தூரத்திலிருந்த ஏழு இலக்குகளுக்கு( Targets) ஒவ்வொரு ரவைகள் படி அடித்தார். போய் அந்த இலக்குகளை பார்த்துவருமாறு அந்த போராளியிடமும்,குழுத்தலைவனிடமும் கூறினார்.  அவர்கள் இருவரும் போய் வந்து முதல் ஆறும் குறிதவறவில்லை (Bபுள்),

ஏழாவது இலக்கில் குறிபட இல்லை என்றார்கள்.அப்போது கடாபி அந்த ஏழாவது இலக்கில் வலது கண்ணை வடிவாய் பார்த்திட்டு வாங்கோ என்றார்.இந்தத் தடவை ஆவலில் நானும் போனேன்.என்ன ஆச்சரியம் வலது கண்ணின் கறுப்புப்புள்ளிக்கூடாக சன்னம் போயிருந்தது.சாதரணமாய் சொன்னார் துப்பாக்கியில பிழை சொல்லாதையிங்கோ. கடாபி மிகச்சிறந்த சூட்டாளன் அதனால்த்தான் இயக்கத்திற்ற இருந்த ஒரேயொரு மக்னம் பிஸ்டலை கடாபியிடம் கொடுத்திருந்தார் தலைவர். 

 

  • ஓவியன் -
Link to comment
Share on other sites

 

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு,ஒரு சிறப்பு பயிற்சிமுகாம்.அந்த சிறப்பு பயிற்சி முகாம் வன்னியில் ஒரு காட்டினில் ஆடம்பரமற்றும், அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தது.அந்த அமைப்பு பணியை முன்னாள் இம்ரான் பாண்டியன் தளபதி ராஜேஸ்தான் செய்துமுடித்திருந்தார். அந்த பயிற்சி முகாமின் பொறுப்பாளராய் தளபதி கடாபி இருந்தார்.நானும் கடாபியும் நல்ல நண்பர்கள் அந்த முகாமில் ஒரே தங்குமிடத்தில் தங்கியிருந்தோம்.காலை ஐந்து மணிக்கு பயிற்சிக்கு எழுந்தால் பயிற்சி முடியும்வரை ஒன்றாகத்தான் திரிவோம்.கடாபி ஆதவன்,3/8 ஆகிய பெயரிலும் அழைக்கப்படுவார்.நான் 3/8 என்றுதான் அழைப்பேன்.முன்பும் ஒரு பயிட்சிமுகாமில் நாங்கள் ஒன்றாக நின்றோம் அப்போது சங்கர் அண்ணாவும் எங்களுடன் இருந்தார்.

இரவு பயிற்சி முடிந்தாலும் கடாபி நிர்வாக வேலைகளை செய்துவர சாமம் ஆகிடும் எனது நித்திரையை குழப்பக்கூடாது என்று லைட் போடாமல் மெதுவாக போய் தனது படுக்கையில் படுப்பார்.போராளிகளுக்கு கண்டிப்பானவராய் தெரிவார்.எங்களுக்கு ஒரு உத்தமராய் தெரிந்தார்.அதித உழைப்பு ,இறுக்கமான நிர்வாகம் அவருடையது.சிறந்த துப்பாக்கி சூட்டாளர். சிறப்பு பயிற்சி முகாமில் ஞாயிறு ஓய்வு நாள்.அன்றும் ஒரு காலை காலை உணவிற்குப்பின் முகாமை சுற்றிப்பார்க்க இருவரும் சென்றிருந்தோம்.எல்லா இடங்களையும் பார்த்து

சூட்டு பயிற்சி நடக்கும் இடத்திற்கு போனோம்.அப்போது நல்ல சூட்டுப்  போராளி ஒருவன் ஒரு துப்பாக்கியை கடாபியிடம் காட்டி இந்த துப்பாக்கி  வலு சீராக்க ( Zero setting )வேண்டும் , சுடுகின்றபோது சரியான விலத்தல் இருப்பதாய் சொன்னான்.  அப்போது கடாபி அந்த குழுவின் தலைவனிடமும் அது பற்றி கேட்டார்.அவனும் ஆமோதித்தான் .இப்போது கடாபி அந்த துப்பாக்கியை வாங்கி எழுபத்தைந்து மீட்டர் தூரத்திலிருந்த ஏழு இலக்குகளுக்கு( Targets) ஒவ்வொரு ரவைகள் படி அடித்தார். போய் அந்த இலக்குகளை பார்த்துவருமாறு அந்த போராளியிடமும்,குழுத்தலைவனிடமும் கூறினார்.  அவர்கள் இருவரும் போய் வந்து முதல் ஆறும் குறிதவறவில்லை (Bபுள்),

ஏழாவது இலக்கில் குறிபட இல்லை என்றார்கள்.அப்போது கடாபி அந்த ஏழாவது இலக்கில் வலது கண்ணை வடிவாய் பார்த்திட்டு வாங்கோ என்றார்.இந்தத் தடவை ஆவலில் நானும் போனேன்.என்ன ஆச்சரியம் வலது கண்ணின் கறுப்புப்புள்ளிக்கூடாக சன்னம் போயிருந்தது.சாதரணமாய் சொன்னார் துப்பாக்கியில பிழை சொல்லாதையிங்கோ. கடாபி மிகச்சிறந்த சூட்டாளன் அதனால்த்தான் இயக்கத்திற்ற இருந்த ஒரேயொரு மக்னம் பிஸ்டலை கடாபியிடம் கொடுத்திருந்தார் தலைவர். 

 

  • ஓவியன் -

 

ஒரு சிறந்த தளபதியை , சிறந்த வீரனை , சிறந்த நண்பனை , சிறந்த சகோதரனை இழந்து விட்டோம். கடாபியாய் , ஆதவனாய் எங்கள் மனங்களில் என்றென்றும் மறக்காத மாவீரனின் நினைவை தந்தமைக்கு நன்றிகள் லியோ அண்ணா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனு , அனு  வான ஞாபகங்கள் , அதனால்தான் அதிரவைக்குது !!

Link to comment
Share on other sites

நினைவுப்பகிர்வுக்கு நனறி லியோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமேரியர்,விசுகு,சாந்தி,சுவி,இசை வருகைக்கும் ஊக்கமிடலுக்கும் நன்றிகள்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ இருந்ததில்லை அது எல்லோருக்கும் தெரிந்த விசயம் ஆனால் தாங்கள் அவர் வழி நடப்போம் என இங்கே இருந்து சொல்லிக் கொண்டு இருப்போரிடம் அது நிறையவே இருக்குது.
 
தொடருங்கள் லியோ நீங்கள் எழுதுவதை வாசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

 

போராளியாய் இருப்பதற்கும்.

போராளியை ஏற்பதற்கும்.                   இடையில் நிறைய வேறுபாடு உண்டு.
போராளியாய் இருத்தல் என்பது சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்டது.
சாதாரண மனித வாழ்வு  என்பது.
குடும்பம், கோவில், குளம், சுற்றம் முற்றம், சொந்தம் பந்தம்.
என்று எல்லாவற்றையும் குழைத்து வாழும் ஒரு வாழ்வு.
 
இரண்டையும் போட்டு நீங்கள்தான் குழப்புகிறீர்கள்.
 
அனாவசியமான நம்பிக்கைகள்தான்.
ஏமாற்றத்தை கொடுக்கின்றது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் லியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எதற்கு இங்கு சுமே???

உங்களுக்கு எவரையாவது அப்படி தெரிந்தால் அவரைப்பற்றி  நேரடியாக விமர்சியுங்கள்.

அதைவிடுத்து

எல்லோரையும் இது போன்று  ஒரே மட்டைக்குள் போட்டு மூடுவது ஒரு நல்ல பார்வையோ அல்லது உதாரணமோ அல்ல. :(  :(  :(  :(

எமது இனத்துக்கு இருப்பதையும் அழிக்கும் விசம் கொண்டது இப்பார்வை. :(

 

நான் எழுதியதில் எந்தத் தவறு இருப்பதாக எனக்குப் படவில்லை. தொப்பி அளவானவர்கள் போட்டுமே அண்ணா. நீங்கள் ஏன் தொப்பியை எடுத்து வைத்துக்கொண்டு தொப்பி செய்தது சரியில்லை என்கிறீர்கள்.

 தொடருங்கள் லியோ

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.