Jump to content

சின்ன சின்ன ஞாபகங்கள்


Recommended Posts

  • Replies 148
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சிக்கும் அக்கராயனுக்கும் இடையில்,செழிப்பான அந்த கிராமம் அமைந்திருக்கிறது.தென்னைகளால் நிரம்பிய அந்தக்கிராமம் அகதியாய் வந்தவர்களை எப்போதும் வரவேற்றது.அந்தக்கிராமத்து போராளியொருவன்  எங்கள் பிரிவில் இருந்தான்.அவனின் பெற்றோரிடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் கிடைத்திருந்தது.அந்தப்போராளியின் தாய் மரணப்படுக்கையில் இருப்பதாகவும் மகனை தாய் பார்க்கவிரும்புவதாகவும் எழுதப்பட்டிருந்தது.நாங்கள் உடனடியாய் அந்தப்போராளியை விடுப்பில் அனுப்ப தீர்மானித்து எங்கள் பிரதான முகாமுக்கு எடுத்தோம்.

நான் மன்னார் போகும் வழியில் அவனை வீட்டில் இறக்கிவிட்டு,தாயின் நோயை விசாரிக்க அவனுடன் கூடச்சென்றேன்.அவர்கள் குடும்பநிலை சுமாராய் இருந்தது.சிறு தோட்டம் ,ஆடு மாடு,கோழிகள் நின்றன.மண் வீடு என்றாலும் அழகாக இருந்தது.தாய் படுத்த படுக்கையாய் கிடந்தாள்.தகப்பனும் சகோதரியும் அவனை கொஞ்சினார்கள்.தாயுக்கு அருகில் மகன் இருக்க தாய் விழித்துக்கொண்டாள்.அவனை மாறி மாறி கொஞ்சினாள்.அது ஒரு வழமையான தமிழ்ப்பாசக்குடும்பம்.எனக்கு இருக்க ஒரு கதிரை தந்தார்கள்.தகப்பன் கதைப்பது குறைவென்றாலும் ஓடித்திரிந்தார்.பத்துநிமிசத்தில கேட்காமல் சாப்பாடு வந்தது. வெள்ளைப்புட்டு சம்பல் முட்டைப்பொரியல். தாயின் நோயை விசாரித்தேன். தாயின்ற வயிறு வீக்கமாயும் இருந்தது.தாயிற்கு வயிற்றில கட்டியாம் ஆனால் அது கான்சர் இல்லையாம்.நோய் மட்டைகளையும் காட்டினார்கள்.கிளிநொச்சி அரசாங்க ஆஸ்பத்திரியில இருந்து வவுனியா அனுப்பி ,அங்கிருந்து அனுராதபுரம் அனுப்பியும் நோயாளி ஒப்பெரசன் தாங்கமாட்டார் என்று திருப்பி அனுப்பிட்டினம்.கட்டி இனி வெடிச்சிடும் என்றும் சொல்லிவிட்டிருக்காங்கள். என்ர பிள்ளை இருக்கிறான் எனக்கு கொள்ளிவைக்க, நான் இல்லாமல் என்ர குஞ்சுகள் கஷ்டப்பட்டிடுங்கள் தாய்  இடைக்கிடை புலம்பிக்கொண்டாள்.

அடுத்தநாளே கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனையில் ஒப்பெரசன் செய்யப்பட்டது.தாய் பூரணகுணமடைந்தாள்.

போராளியின் சகோதரியின் திருமணத்தின் போதும் எங்கள் எல்லோருக்கும் அழைப்புவிடப்பட்டிருந்தது. அந்தக்குடும்பத்தை மிக சந்தோஷ மனநிலையில் பார்த்தோம் .பின் மகன் மாவீரன் ஆனான்.தாயை தவிர ஏனையோர் இறுதி யுத்தத்தில் கிபீர் அடித்து இறந்து போனார்களாம்.தாய் சித்தம் கலங்கிப்போனாள் .பூவோடு கனகபுரம் துயிலும் இல்லத்தை நோக்கிப்போவாவாம் .யாரும் கண்டு பிடித்து வருவார்களாம்.அண்மையில் அந்த தாய் இறந்து போனாள்.அவளின் உடலை சவப்பெட்டி இல்லாமல், துணியால் சுற்றி ,தடிகளோடு கட்டி,காவி சுடலையில் எரித்தார்களாம்.

 

ஓவியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைகள், கண்களில் நீர் பனிக்க வைக்கின்றன! :o

 

அதற்காக வாசிக்காமல் விட்டுவிடவும் முடியவில்லை!

 

தொடர்ந்து எழுதுங்கள், லியோ!

Link to comment
Share on other sites

இப்படியான குடும்பங்கள்தான் போராட்டத்தின் ஆன்மாக்களாக இருந்து வருகின்றன.. :(

Link to comment
Share on other sites

இப்படியான குடும்பங்கள்தான் போராட்டத்தின் ஆன்மாக்களாக இருந்து வருகின்றன..

Link to comment
Share on other sites

மனதை நெருடும் சம்பவம் லியோ

 

ஈழவிடுதலைக்காக சமூகம் சந்தித்த செய்த அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்

 

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனமான பதிவுகள் :o  பல அறியமுடியாத விடையங்கள்  தொடருங்கள் லியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல்,வாத்தியார்,வாணன்,அலை,இசை,புங்கை,சுவி,அர்ஜுன்,சுமே வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்   


எண்பத்தி ஐந்தாம் ஆண்டாய் இருக்கவேண்டும்.எனக்கு ஒரு அறிவித்தல் வந்தது.எங்களுடைய வேலை சம்மந்தமாய் கொழும்பு சென்ற ஒருவர் அங்கு கொலை செய்யப்பட்டுவிட்டதாய். அந்த வீட்டுக்கு இந்த அறிவித்தலை தெரியப்படுத்திவிடவும்.நானும் நண்பனும்தான் வெளிக்கிட்டம்.சங்கானைக்குப்போய்,சேர்ச் ரோட்டுக்கு போய் உள்ளுக்குப்போகவேணும். ஒருமாதிரி வீட்டை கண்டுபிடித்து போய் விட்டோம்.இருவருக்குமே இப்படி செய்தி சொல்லி பழக்கமில்லை.அங்கு யாரும் தெரிந்தவராயும் இல்லை.ஒருமாதிரி ஒரு ஐயாவிடம் அந்த செய்தியை சொல்லிவிட்டேன்.திடீர் சாவுதானே அந்த இடம் அல்லோலகல்லோலப்பட்டது.வீட்டில் இருந்த சாமிப்படங்கள் எல்லாம் முற்றத்தில் போட்டு உடைக்கப்பட்டன. அந்த இடத்தில் ஒரு இருநூறு பேர் கூடிவிட்டனர்.நாங்கள் அங்கு இருக்க இன்னொரு போராளி வந்து என்னை அழைத்தான்.நான் எழுந்து போய் என்ன என்று வினவினேன்.உங்களுக்கு சொல்லட்டாம் இறந்தது இவரில்லையாம் அது வேற ஆளாம்.எனக்கு தலை சுற்றிற்று.அவன் போய் விட்டான்.அதில நான் எப்படி சொல்கிறது.நண்பனை இரகசியமாய் அழைத்து விடயத்தை சொன்னேன்.அவன் சொன்னான் இதுக்குள்ள ஒரு ஆள் அமைதியாய் வேலை செய்துகொண்டிருக்கிறார்.அவரை கொஞ்ச தூரம் கூட்டிப்போய் விசயத்தை சொல்லிட்டு போவம்.அப்படியே செய்தோம்.நாம் சொல்லும்போது நாம் எதிர்பார்க்காதமாதிரி அந்த மனிதர் சந்தோசப்பட்டார்.நாங்கள் தப்பினோம் பிழைச்சோம் என்று வந்து சேர்ந்தோம்.எனது நண்பன் எண்பத்தி ஏழில் வீரச்சாவு அடைந்துவிட்டான்.

 

 ஓவியன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் பதிவைப் பார்ப்பதற்கே யாழிற்கு வருகின்றேன் .ஒவ்வொருவரும் தங்கள் போராட்ட காலப் பதிவை எழுதவேணும்

Link to comment
Share on other sites

.ஒவ்வொருவரும் தங்கள் போராட்ட காலப் பதிவை எழுதவேணும்

போராட்ட காலப்பதிவு எழுத வேண்டிய கடமை உங்களுக்கும் உண்டு அண்ணாச்சி. பலாலி, கட்டுவன், புன்னாலைக்கட்டுவன், கோட்டை ஈறாக உங்கள் ஞாபகங்களும் வரலாறாக்கப்பட வேண்டிய கதைகள் நிறைய இருக்கு. நீங்களும் எழுதுங்கோ.

பிற்குறிப்பு :- புலி செய்தது பிழை புலி அழியும்வரையில் வராத சுடலை ஞானமெல்லாம் இப்ப வருதெண்டு எழுதப்படும் பொய்யான புரளிகளையும் புனைகதை விற்பன்னர்களையும் வெல்ல உங்களது உ;மையான போராட்ட அனுபவங்கள் பதிவு செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்தை புரிந்து எழுதத் தொடங்குங்கள் நந்து.

Link to comment
Share on other sites

புலி செய்தது பிழை புலி அழியும்வரையில் வராத சுடலை ஞானமெல்லாம் இப்ப வருதெண்டு எழுதப்படும் பொய்யான புரளிகளையும் புனைகதை விற்பன்னர்களையும் வெல்ல உங்களது உ;மையான போராட்ட அனுபவங்கள் பதிவு செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்தை புரிந்து எழுதத் தொடங்குங்கள் தொடர்ந்து.

 

சரியாக சொன்னீர்கள் சாந்தி.

 

குணா.கவியழகன்  சொல்கின்றார்

 

சிறப்பான அரசியற் தீர்மானம் திறமையான முன்னுணர்வாலேயே நிகழும் - குணா.கவியழகன்

 

கவியழகன் (பவா, அரசியல்துறை அரசியல் கல்விக்குழுப் பொறுப்பாளர், ஈழநாதம் பத்திரிகையின் பொறுப்பாளராக 2005 வரை செயற்பட்டவர் ) சொல்கின்றார்  ”சிறப்பான அரசியற் தீர்மானம் திறமையான முன்னுணர்வாலேயே நிகழும்” என்று.

 

பவா நீங்கள் சொல்வது நல்லவிடயம், ஆனால்  நீங்கள் போராட வந்ததும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டதும் தங்களது தனிப்பட்ட அரசியல் தொடர்பான தீர்மானமே. அப்படியாயின் தனிநபராக ஒரு சரியான அரசியல் பாதை எது என்று சிறப்பான அரசியல்த்தீர்மானம் எடுக்கத்தெரியாத  முன்னுணர்வற்ற நீங்கள் எப்படி விடுதலைப்புலிகளின் தீர்மானத்தை விமர்சிப்தற்கு தகுதியானவர் ஆவார்கள்.

 

நிற்க, 1998 காலப்பகுதியில் என்று நினைக்கின்றேன் தீவிர அரசியல் பேச்சாளராகவும், அரசியல் துறைப் போராளிகளை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்கும் பணியிலும் பின்னர் ஈழநாதம் பத்திரிகையிலும் பல அரசியல் கட்டுரைகளை எழுதிய, பொறுப்பாயிருந்த நீங்கள் சொல்லுகிறார் ”விடுதலைப்புலிகள் அமைப்பு 1990 ஆண்டிலிருந்தே பல அரசியல்தவறுகளைச் செய்தது என்று”.

 

அப்படியாயின் பவா நேர்மையானவரா? தவறான திசையில் விடுதலை இயக்கம் சென்று கொண்டிருப்பதை முன்னுணர்ந்திருந்தால் ஒன்று  அதைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும், அல்லது அந்த விடுதலை இயக்கத்தில் இருந்து விலகி சரியான முன்னுணர்வு அரசியல் வழியில் பயணித்திருக்க வேண்டும்.

 

இவற்றையெல்லாம் விடுத்து விடுதலை இயக்கத்தில் பொய்யனாக, சுயநலத்திற்காக, செயற்பட்டது மட்டுமல்லாமல் மக்களுக்கும் போராளிகளுக்கும் தவறான கருத்தை விதைத்துவிட்டு தற்போது புலம்பெயர்ந்து வந்து தூய்மைவாதியாக வேஷம் போடும் வேடதாரியாக இருக்கிறார்கள்.

 

இவர்களைப்போல தீராணியற்ற, நேர்மையற்ற, முதுகில் குத்துகின்ற, சந்தர்ப்பவாத தன்மையான பலரால் தான் போராட்டம் பின்னடைவைச் சந்தித்ததேயன்றி வேறுகாரணங்களைத் தேடாதீர்கள்.

 

நீங்கள் ஒரு நேர்மையான சமூகப்போராளியாய் இருந்திருந்தால் விடுதலைப்போராட்டத்தின் தவறுகளை அப்போதே சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்  அல்லது அமைப்பில் இருந்து வெளியேறி சுயகருத்தை வைத்திருக்கலாம். அல்லது குறைந்தது தவறான பாதை யில் பயணிப்பதை தவிர்த்திருக்கலாம். ஒன்றையும் செய்யாத நீங்கள்! தற்போது  விடுதலைப்புலிகளை விமர்சிப்பதற்கு தகுதியற்றவர் ஆகிறீர்கள். இவர்களின் கருத்துக்கள் ஒன்றும் புதியவையல்ல. 

 

தற்போது நீங்கள் விடுதலைப்புலிகளுடன் இறுதிவரை செயற்பட்டவர் என்ற அடையாளத்தில்  புதிய பானையில் பழையகள் என்பதைப்போல் மீட்டுகின்றார்கள்.

 

அவர்களின் சந்தர்ப்பவாதத்தனத்தின் வெளிப்பாடு உப்புச்சப்பின்றித்தான் இருக்கின்றது ஏனெனில் “உப்பிட்டவரை உள்ளவரை நினை“ என்ற பழமொழியின் இங்கிதம் தெரியாத இவர்களைப்போன்றவர்களை முன்னுணராததே விடுதலைப்புலிகளின் தோல்வியாகும்.


Edited by காளமேகம், Today, 01:19 PM.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் லியோ

Link to comment
Share on other sites

உங்கள் அனுவப்பகிர்வுகளக்கு நன்றி லியோ அண்ணா.. அன்று அவர்கள் ஆறுதல் அடைந்திருந்தாலும் இரண்டு வருடங்களில் அதே துயரை மீண்டும் உணர்ந்திருப்பார்கள்..

Link to comment
Share on other sites

தொடருங்கள் லியோ! 


ஒவ்வொருவரும் தங்கள் போராட்ட காலப் பதிவை எழுதவேணும்

 

நீங்களும் தான் நந்தன், எழுதுங்கோ வாசிக்க மிக ஆவல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுவப்பகிர்வுகளக்கு நன்றி லியோ அண்ணா.. அன்று அவர்கள் ஆறுதல் அடைந்திருந்தாலும் இரண்டு வருடங்களில் அதே துயரை மீண்டும் உணர்ந்திருப்பார்கள்..

 

இசை நான் நினைக்கிறேன் இவரோடு செத்த வீடு சொல்லப் போன ந்ண்பர் தான் 87 யில் இறந்து விட்டார் என்று :unsure: ...தொடருங்கள் லியோ
Link to comment
Share on other sites

இசை நான் நினைக்கிறேன் இவரோடு செத்த வீடு சொல்லப் போன ந்ண்பர் தான் 87 யில் இறந்து விட்டார் என்று :unsure: ...தொடருங்கள் லியோ

ஓ.. நான்தான் தவறாக விளங்கிக்கொண்டேன்.. நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகளின் முகாமுக்கு மாதத்தில் ஒரு ஞாயிறு நான் போய்வரவேண்டும். அந்த முகாமில் ஆண்,பெண் கரும்புலிகள் பயிற்சி

எடுத்துக்கொண்டிருந்தார்கள்.ஞாயிற்றுக்கிழமைதான் அவர்களுக்கு ஓய்வுநாள்.அந்தப்போராளிகளின் வெள்ளை உள்ளமும்

உபசரிப்பும், கலகலப்பும் என்றும் தனித்துவமானது.

ஒருதடவை அவர்களின் முகாமில் இருந்து விடைபெறும்போது ஒரு கரும்புலி வீரன் அருகில் வந்து என்னுடன் தனிய கதைக்கோணும் என்றான்.சற்றுத்தள்ளிப்போய் என்ன என வினவினேன்.தான் ஒரு பெண் கரும்புலி உறுப்பினரை காதலிப்பதாகவும்,அவளின் விபரங்களையும் சொன்னான். நான் சொன்னேன் அது பிரச்சனை இல்லைத்தானே நீங்கள் சாதாரண போராளியாகி திருமணம் செய்யலாம்.தாம் இருவரும் கரும்புலியாகவே வாழ்வோம் என்று உறுதியாய் சொன்னான்.

நான் கேட்டேன் பொறுப்பாளருக்கு தெரியுமா?யாருக்குமே தெரியாது என்றான்.என்னிடம் என்ன எதிர்பார்ப்பதாய்க்கேட்டேன். யாராவது ஒருவரிடம் சொல்லோனும் அதுதான் என்றான்.நானும் விடைபெற்று அப்படியே போய்விட்டேன். நான் பின்பும் சந்தித்திருக்கிறேன் எந்த வித்தியாசமும் இல்லை அதே கலகலப்புத்தான்.

ஒரு நாள் காலை வழமை போல முதற்கடமையாய் ஈழநாதத்தை கையில் எடுத்தேன்.வெற்றி பெற்ற பெரும் கரும்புலித்தாக்குதலின் செய்தியிருந்தது.அடுத்து நெஞ்சு படபடக்க தலைவருடன் கரும்புலிகள் இருக்கும் படத்தைப்பார்த்தேன்.ஒவ்வொருவராய் பார்த்துப்பார்த்து போக அவனும் அவளும் இருந்தார்கள்.காதலர்களாயே வெடித்திருக்கிறார்கள்.

நான் இந்தக்காதலை உரியவர்களிடம் தெரியப்படுத்தி இருக்கலாமோ?என ஒரு குற்ற உணர்வு எனக்குள் தோன்றிற்று.

பின்பு சில தடவைகள் அண்ணையை சந்திக்கும்போது ,வேறு ஆட்கள் இருந்தமையால் இந்த விடயத்தை கதைக்க முடியவில்லை.ஆறு மாதத்திற்கு பிறகு அண்ணையை தனிய சந்திக்கும்போது இந்த கதையை தொடங்கினேன். அண்ணை சொன்னார் தனக்கு தெரியும் அவற்றை கடிதம் கிடைத்தது அப்ப அவர் வெடிச்சிட்டார். அந்தக்கடிதத்தில உங்களுக்கு தான் தெரியப்படுத்தியதாயும் எழுதியிருந்தார்.சொல்லி சிறிது நேரம் மேல் நோக்கிப்பார்த்தார்.பின் வேறு விடயங்களை சகஜமாய் கதைக்கத்தொடங்கினார். நான் செய்தது சரியோ பிழையோ எனக்கு இன்னும் விளங்கவில்லை.

 

ஓவியன்

 

Link to comment
Share on other sites

எப்படிப்பட்ட தியாகங்கள்..! நினைத்தே பார்க்க முடியவில்லை..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித உணர்வுகளை அடக்கி வைக்க, முனிவர்களால் மட்டுமே முடியும்!

 

முற்றும் துறந்தவர்களால் மட்டுமே, தங்களையே தீப்பந்தமாக்கவும் முடியும்!

 

தொடருங்கள், லியோ!

Link to comment
Share on other sites

எங்குமே வாசிக்க முடியாத அனுபவ பதிவு. லியோ அண்ணா போன்று பலரும் எழுதும் போது உண்மையான வரலாற்று பதிவொன்றை எழுத முடியும். சுயநலவாதிகளின் புளுகுமூட்டைகள் தவிடு பொடியாகும்.

Link to comment
Share on other sites

அனைவரும் விரும்பி  வாசிக்கும் உண்மைத்தொடர் இது .

தயவு செய்து பின்னூட்டம் இடுபவர்கள்  உங்கள் சுய அரசியலை தவிர்த்துவிடுங்கள் .உண்மையும் பொய்யும் சரியையும்  பிழையையும் வாசகர்களிடமே விட்டுவிடுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதி யுத்தகாலத்தில் ஒரு நாள் இரட்டைவாய்க்காலில்  இருந்து வலைஞர்மடப்பகுதிக்கு  உட்பக்கமாய் போய்க்கொண்டிருந்தேன்.சிறுவர்கள் பனைவடலியில் இருந்து குருத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள்.பசியின் காரணமாய் குருத்தையும் சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள்.யாரும் யாருக்கும் உதவக்கூடிய வசதியில் இல்லை.மேலே வண்டு சுற்றிக்கொண்டு இருந்தது.அதைக்கடந்து சென்ற நிமிட நேரத்திலே இரண்டு செல்கள் அந்த வடலிப்பகுதியில் வீழ்ந்து புகைகிளம்பியது. அந்த பகுதியை நோக்கி ஓடினேன்.மூன்று குழந்தைகள் இறந்துவிட்டன.அதில் ஒன்று முதுகால் செல்துளைத்து பனையிலும்  குத்தி பனையோடு இறுகியபடிஇருந்தது.  ஒருவர் அந்தக்குழந்தையை இழுத்து எடுத்தார்.நெஞ்சு பிரிந்தநிலையில் குழந்தை இறந்துகிடந்தது.பிரிந்த இரப்பையில் பனங்குருத்துத்தான் இருந்தது. காயங்களுடன் துடித்த குழந்தைகளை புலிகளின் மருத்துவமனைக்கு அனுப்பினோம். நேற்று முன்தினமும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் (சகோதரர்கள்) ஏதோ கிழங்கை பசிதீர்க்க சாப்பிட்டு மாண்டுபோனார்கள். பசிபோக்க இறந்து போன குழந்தைகளை பார்க்கும் கொடுமை உலகில் யாருக்குமே வரக்கூடாது.

 

யுத்தத்தின் இறுதிவாரத்தில் ஒரு நேர சீனிக்கஞ்சி உப்புக்கஞ்சியாய் மாறியிருந்தது.எனது போராளிகள் ஓய்வு அறையில் கதைத்துக்கொண்டு இருந்தது எனக்கு கேட்டது.பாணும் ஒரு சம்பலும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்?.மீன் குழம்பும் குத்தரிசி சோறும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்?. புட்டும் முட்டைப்பொரியலும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்? நான் போய் கடிந்துகொண்டேன் என்ன நேரம் என்ன கதைக்கிறது என்று தெரியாது என்று.அவர்கள் சிரித்தபடி அந்த இடத்தை காலி செய்தனர். இப்ப நினைக்க கஸ்டமாய் இருக்கு.அவர்கள் விரும்பியதை சாப்பிடாமல் போய் விட்டார்கள்.உடல் முழுக்க புற்றுநோய் வந்து வலிப்பதுபோல் இருக்கிறது.

 

 ஓவியன்

Link to comment
Share on other sites

இறுதி யுத்தகாலத்தில் ஒரு நாள் இரட்டைவாய்க்காலில்  இருந்து வலைஞர்மடப்பகுதிக்கு  உட்பக்கமாய் போய்க்கொண்டிருந்தேன்.சிறுவர்கள் பனைவடலியில் இருந்து குருத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள்.பசியின் காரணமாய் குருத்தையும் சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள்.யாரும் யாருக்கும் உதவக்கூடிய வசதியில் இல்லை.மேலே வண்டு சுற்றிக்கொண்டு இருந்தது.அதைக்கடந்து சென்ற நிமிட நேரத்திலே இரண்டு செல்கள் அந்த வடலிப்பகுதியில் வீழ்ந்து புகைகிளம்பியது. அந்த பகுதியை நோக்கி ஓடினேன்.மூன்று குழந்தைகள் இறந்துவிட்டன.அதில் ஒன்று முதுகால் செல்துளைத்து பனையிலும்  குத்தி பனையோடு இறுகியபடிஇருந்தது.  ஒருவர் அந்தக்குழந்தையை இழுத்து எடுத்தார்.நெஞ்சு பிரிந்தநிலையில் குழந்தை இறந்துகிடந்தது.பிரிந்த இரப்பையில் பனங்குருத்துத்தான் இருந்தது. காயங்களுடன் துடித்த குழந்தைகளை புலிகளின் மருத்துவமனைக்கு அனுப்பினோம். நேற்று முன்தினமும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் (சகோதரர்கள்) ஏதோ கிழங்கை பசிதீர்க்க சாப்பிட்டு மாண்டுபோனார்கள். பசிபோக்க இறந்து போன குழந்தைகளை பார்க்கும் கொடுமை உலகில் யாருக்குமே வரக்கூடாது.

 

யுத்தத்தின் இறுதிவாரத்தில் ஒரு நேர சீனிக்கஞ்சி உப்புக்கஞ்சியாய் மாறியிருந்தது.எனது போராளிகள் ஓய்வு அறையில் கதைத்துக்கொண்டு இருந்தது எனக்கு கேட்டது.பாணும் ஒரு சம்பலும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்?.மீன் குழம்பும் குத்தரிசி சோறும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்?. புட்டும் முட்டைப்பொரியலும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்? நான் போய் கடிந்துகொண்டேன் என்ன நேரம் என்ன கதைக்கிறது என்று தெரியாது என்று.அவர்கள் சிரித்தபடி அந்த இடத்தை காலி செய்தனர். இப்ப நினைக்க கஸ்டமாய் இருக்கு.அவர்கள் விரும்பியதை சாப்பிடாமல் போய் விட்டார்கள்.உடல் முழுக்க புற்றுநோய் வந்து வலிப்பதுபோல் இருக்கிறது.

 

 ஓவியன்

 

பசியிருந்து இழப்பற்கு எதுவமில்லாமல் எல்லாவற்றையும் இழந்தவர்கள் இன்றும் அதே பசியோடு போராடும் நிலமையில் வாழ்வது எல்லாவற்றிலும் கொடுமையாக இருக்கிறது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.