Jump to content

சின்ன சின்ன ஞாபகங்கள்


Recommended Posts

  • Replies 148
  • Created
  • Last Reply

வணக்கம் லியோ
அருமையான பதிவுகள் ,தொடர்ந்து எழுதுங்கள் உங்களையும் பாதுகாத்துகொள்ளுங்கள் .நன்றிகள் .

Link to comment
Share on other sites

வணக்கம் லியோ,
 
நானும் உங்கள் குறுங்கதைகளை தொடர்ந்து பார்வையிடுகின்றேன். இதை எழுதுவது நீங்களா அல்லது வேறு யாருமோ ( ஓவியனும் லியோவும் ஒருவரா? ) என்றும் தெரியவில்லை. நீங்கள் விஜிந்தனின் அண்ணையோ தெரியாது. விஜிந்தன் எனது வகுப்பு நண்பன். பல தடவைகள் அவனை இங்கு கருத்துக்களத்திலும் முன்பு நினைவுகூர்ந்துள்ளேன். அவனது எதிர்பாராத மறைவு இன்றும் நினைத்துப்பார்க்கும்போது ஜீரணிக்கமுடியாமல் உள்ளது. 
 
பலர் பலவாறு உங்கள் குறுங்கதைகள் பற்றி தமது எண்ணங்களைக்கூறியுள்ளார்கள். என்னைப்பொறுத்தவரை இவற்றை வாசிக்கும்போது நீங்கள் இப்படியான விடயங்களை எழுதாமல் உண்மையில் முள்ளிவாய்க்கலில் என்ன நடைபெற்றது, ஏன் மக்களிற்கு பாரிய அழிவு ஏற்பட்டது, மக்களின் அழிவுகள் தடுக்கப்படுவதற்கு ஏன் முன்கூட்டிய திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படவில்லை, மக்களின் அழிவு தடுக்கப்படுவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, மற்றும் ஐ.நா அத்துடன் இவ்வாறான பதிவுகளில் ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=125246&p=913355 ) த.வி.பு மீது சுமத்தப்படும் நேரடியான குற்றச்சாட்டுக்கள் பற்றிய உங்கள் பதில் என்ன போன்றவற்றை மையப்படுத்தி தகவல்களை பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக அமையும்.
 
இந்தக்குறுங்கதைகளை எழுதுபவர் எப்படியான இக்கட்டான சூழ்நிலையில் தற்போது உள்ளாரோ தெரியாது. ஆனால், கால சூழ்நிலைகள் இடம்கொடுப்பின் அவர் ( ஓவியன் ) த.வி.புவின் நிர்வாக மட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள், அவை கையாளப்பட்ட முறைமைகள் பற்றிய விடயங்களை பகிர்ந்துகொள்வது சில யதார்த்தங்களை அறிந்துகொள்வதற்கு உதவும்.
 
நீங்கள் விஜிந்தனின் அண்ணாவாக இருப்பின் நான் யாழ் கருத்துக்களத்தில் முன்பு எழுதிய இந்தப்பதிவு ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=71259&p=583747 ) சம்மந்தமாக உங்கள் பின்னோட்டத்தை அறிய விரும்புகின்றேன். குறிப்பிட்ட போராளிபற்றிய விபரம் தெரிந்தால் அறியத்தாருங்கள்.
Link to comment
Share on other sites

லியோ அண்ணை

 

விடுதலைப்போராட்ட வாழ்வின்  பல்பரிணாமப்பக்கங்கள் தங்களின் வரிகளிற்குள் அழகுற வெளிப்படுகின்றன. சமூகம், தலைவர், மக்கள் மீதான தலைவரின் கரிசனை, போராளிகளின் உணர்வுகள், உளவியல், புலிகளிற்கும் சமூகத்திற்குமான தொடர்பாடல் பிணைப்பு என விரிந்து செல்லும் உங்கள் பதிவின்  பன்முகத்தன்மை போராட்டத்தின் பல விடயங்களுக்குச் சான்றாக அமைகின்றது.

 

பகிர்வுகளிற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இன்றுதான் இந்த அற்புதமான பதிவைப்பார்த்தேன் ............காலத்தின் தேவைக்கேற்ற முக்கியமான பதிவு .தொடர்ந்து காத்திருக்கிறேன் சகோ............

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம் லியோ,

 

நானும் உங்கள் குறுங்கதைகளை தொடர்ந்து பார்வையிடுகின்றேன். இதை எழுதுவது நீங்களா அல்லது வேறு யாருமோ ( ஓவியனும் லியோவும் ஒருவரா? ) என்றும் தெரியவில்லை. நீங்கள் விஜிந்தனின் அண்ணையோ தெரியாது. விஜிந்தன் எனது வகுப்பு நண்பன். பல தடவைகள் அவனை இங்கு கருத்துக்களத்திலும் முன்பு நினைவுகூர்ந்துள்ளேன். அவனது எதிர்பாராத மறைவு இன்றும் நினைத்துப்பார்க்கும்போது ஜீரணிக்கமுடியாமல் உள்ளது. 

 

பலர் பலவாறு உங்கள் குறுங்கதைகள் பற்றி தமது எண்ணங்களைக்கூறியுள்ளார்கள். என்னைப்பொறுத்தவரை இவற்றை வாசிக்கும்போது நீங்கள் இப்படியான விடயங்களை எழுதாமல் உண்மையில் முள்ளிவாய்க்கலில் என்ன நடைபெற்றது, ஏன் மக்களிற்கு பாரிய அழிவு ஏற்பட்டது, மக்களின் அழிவுகள் தடுக்கப்படுவதற்கு ஏன் முன்கூட்டிய திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படவில்லை, மக்களின் அழிவு தடுக்கப்படுவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, மற்றும் ஐ.நா அத்துடன் இவ்வாறான பதிவுகளில் ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=125246&p=913355 ) த.வி.பு மீது சுமத்தப்படும் நேரடியான குற்றச்சாட்டுக்கள் பற்றிய உங்கள் பதில் என்ன போன்றவற்றை மையப்படுத்தி தகவல்களை பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக அமையும்.

 

இந்தக்குறுங்கதைகளை எழுதுபவர் எப்படியான இக்கட்டான சூழ்நிலையில் தற்போது உள்ளாரோ தெரியாது. ஆனால், கால சூழ்நிலைகள் இடம்கொடுப்பின் அவர் ( ஓவியன் ) த.வி.புவின் நிர்வாக மட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள், அவை கையாளப்பட்ட முறைமைகள் பற்றிய விடயங்களை பகிர்ந்துகொள்வது சில யதார்த்தங்களை அறிந்துகொள்வதற்கு உதவும்.

 

நீங்கள் விஜிந்தனின் அண்ணாவாக இருப்பின் நான் யாழ் கருத்துக்களத்தில் முன்பு எழுதிய இந்தப்பதிவு ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=71259&p=583747 ) சம்மந்தமாக உங்கள் பின்னோட்டத்தை அறிய விரும்புகின்றேன். குறிப்பிட்ட போராளிபற்றிய விபரம் தெரிந்தால் அறியத்தாருங்கள்.

 

 

************

 

கரும்பு

 

கொமன்ஸ் தேவை என்றால் கொமன்ஸ்சைக் கேட்கிறதை விட்டுட்டு. ஆள்,அடையாளம், ஊர். அற்றஸ் என தேவையில்லாமல் உங்களிற்கு எழும் ஊகத்தின் அடிப்படையில் ஒருவரின் அடையாளத்தை வெளிக்கொண்டுவந்து, ஆபத்திற்குள்ளாக்கும் கைங்கரியத்தை(காட்டிக்கொடுப்பை) நிறுத்திவிட்டு. கருத்துக்களை மட்டும் பதியும் வேலையை ம்டும் செல்தால் நன்று என நினைக்கின்றேன்.

 

உங்களுங்கு அவரைத் தெரியும் இவரைத்தெரியும் என்று விலாசம் காட்ட தேவையில்லாத ஆள் அடையாளப்பதிவுக்கருத்துக்களை  பதியிறதை விட்டுட்டு சும்மா இருங்கப்பா.

 

ஒருமாதிரி  அவரை அமத்தியிட்டீங்கள் கரும்பு  வாழ்த்துக்கள்  ^_^  (தேவையில்லாமல் தன்னால யாரே ஒருவர் அநியாயமாகவும் தவறுதலாகவும் பாதிக்கப்படாது என்பதற்காகவாக்கும்)

நியானி: மேற்கோள் காட்டிய கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எனது நேரமின்மை காரணமாகத்தான் நான் 
பதிவுகளை இடவில்லை.என்னை மன்னித்துவிடுங்கள்.
 
 
 
முள்ளிவாய்க்காலில்  இருந்து மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.வட்டுவாகல் பகுதியை தவிர்த்து எல்லாப்பக்கம் இருந்தும் துப்பாக்கி சன்னங்கள் கீச்சு கீச்செனெ வந்துகொண்டிருந்தது. நானும் எனது ஒரு போராளியும் மண்மூட்டை மறைப்பில் இருந்து கதைத்துக்கொண்டு இருந்தோம்.சன்னம் பட்டு சில மக்கள் கீழ் விழுவதும் உறவினர் கதறும் ஒலியும் குறைவில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தது. என்னுடன் இருந்த போராளி ஒவ்வொருமுறை மக்களின் அழுகுரல் வரும்போதும் ஓடிப்போய் பார்த்து முடிந்ததை செய்துவிட்டு வருவான்,தேவையெனில் என்னையும் அழைப்பான். அருகில் இருந்த சனங்கள் படிப்படியாய் போய் எல்லாம் வெளிச்சுக்கொண்டு வந்ததுவண்டு மேலே சுற்றிக்கொண்டு இருந்தது.திடீரென கடற்படையின்  பீரங்கிப்படகில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பீரங்கிக்குண்டுகள் எமக்கு அருகில் வீழ்ந்து வெடித்தது.எமக்கு அருகில் இருந்த மண்மூட்டைகள் சிதறின.எங்களுக்கு பெரிதாய் பிரச்சனை ஒன்றும் இல்லை.எனது கண்ணுக்குள்ளும் ஒரு காதுக்குள்ளும் மண் போய் விட்டது.அதை சிறிது நேரத்தில் சரிப்பண்ணிவிட்டேன். நடந்து போய்க்கொண்டிருந்த மக்களில் மூவர் நிலத்தில் கிடந்தனர்.மற்றையவர்கள் ஒ என்று அழுதார்கள்என்னுடன் நின்ற போராளி சத்தம் போட்டு கேட்டான் யாருக்கும் காயமா?
உதவி தேவையா?காயம் இல்லை மூன்று பேர் இறந்திட்டினம் என்ற பதில் மட்டும் அங்காலப்பக்கம் இருந்து வந்தது.இது இப்ப எங்களுக்கு பழகியிருந்தது. பின் அந்த மூவரையும் விட்டு விட்டு போய் விட்டார்கள்.என்னுடன் இருந்த போராளி சொன்னான் அடிச்சவன் எப்படியும் திருப்பி அடிப்பான்.எனக்கு முகம் கழுவ தண்ணீர் தேவைப்பட்டது. தான் எடுத்துவருவதாய் சொன்னான்.வேண்டாம் நான் போகிறேன் என்று உடலங்களுக்கு அருகில் இருந்த குன்றுக்கு (கிணறு)போனேன்கிணற்றில் தண்ணீர் எடுத்து முகத்தை கழுவி விட்டு ,திரும்பி இறந்து கிடந்தவர்களை பார்த்தேன்.அதில் இருவர் வயது போனவர்கள் மற்றையது ஒரு சிறுவன் பத்து வயது வரும்.அந்த சிறுவனில் உயிர் இருப்பதிற்கான  அறிகுறி தென்பட்டது.அருகில் போய் திருப்பிப் பார்த்தேன்.அவனில் காயங்கள் இல்லை.தேவையான முதலுதவியை செய்து ,கிணற்றில் தண்ணீர் அள்ளி அவன் முகத்தில் அடித்தேன் அவன் எழுந்துவிட்டான்.எழுந்ததும் போதாதென்று அழத்தொடங்கிவிட்டான். இவனுக்கு ஒரு பிளேன்டி கொடுத்தால் நல்லா இருக்குமென்றான் என்னோடு நின்ற போராளி ,அந்த நேரத்திலும் நான் சிரித்தேன்,நாங்கள் குடிச்சாலும் நல்லாய் இருக்கும் என்றேன். அந்த சிறுவன் இறந்திருப்பவர்கள் தாத்தாவும் ஆச்சியும் என்றான்.தாய் தகப்பனை கேட்டான்.அவன் அழ அழ பாதைக்கு கூட்டிப்போனோம்.இராணுவப்பகுதிக்கு சென்று கொண்டிருந்த எங்களுக்கு தெரிந்த ஒருவருடன் இவனை ஒப்படைக்கும் பொறுப்பை கொடுத்து அனுப்பினோம்.  
 

ஓவியன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும், அனுபவங்களுடன் உங்களைக்கண்டது மகிழ்ச்சி, லியோ!

 

உங்கள் செயல், எனக்குப் பின்வரும் படத்தை நினைவூட்டியது! இந்தப் புகைப்படம், 'புலிட்சர்' எனப்படும்,உலகின் ஊடகவியலாளர்களுக்கு, வழங்கப்படும் அதி உயர்ந்த பரிசைப்பெற்ற, ஒரு தென்னாபிரிக்க புகைப்படப் பிடிப்பாளரால் எடுக்கப்பட்டதாகும்! இந்தப் படத்தை, எடுத்த அவர் அந்தக்குழந்தையைக் காப்பாற்ற முயற்சிக்காதது ஏன் என அவரிடம் கேட்கப்பட்டது! அவரால் விடை கூற  முடியவில்லை ! இந்த வினாவே, அவரது தற்கொலைக்கும் காரணமானது!

 

நிர்வாகம், அவசியமெனக் கருதினால்  இந்தப் படத்தை நீக்கிவிடலாம்!

 

blurb200-e8e064df0b947779392d46e50b6f723

 

மூலம்: http://www.npr.org/templates/story/story.php?storyId=5241442

 

 

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றி.. கடைசி நிமிடங்கள் வரை நினறு ஒருவழியாக மீண்டு வந்திருக்கிறீர்கள்.. உங்களுடன் இறுதிவரை நின்ற வேறு போராளிகள் மீள முடியாமல் போன விடயங்கள் ஏதாவது இருக்கும்.. அதை வாசிக்கத் தயாரில்லை..

Link to comment
Share on other sites

புங்கை..

 

இது அவர் எடுத்த ஒரு படம்.. ஆனால் இதைத் தவிர இன்னும் ஒரு பத்தாயிரம் குழந்தைகள் பசியுடனும், ஐநூறு கழுகுகள் ஏக்கத்துடனும் இருந்திருக்கும்.. :o இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு அந்தக் காட்சி தெரிந்திராது..

 

அதுபோலத்தான் பலாயிரக்கணக்கான மக்கள் மடிவதைக் கண்டவர்கள் விறைத்துப் போயிருப்பார்கள்.. வாணி அவர்களின் செவ்வியிலும் இந்த மனநிலை வெளிப்பட்டிருந்தது..

 

நீங்கள் இணைத்த அந்தக் குழந்தையின் படத்திலும் ஒரு இயற்கைச் செயற்பாடு வெளிப்பட்டிருக்கிறது.. குழந்தையின் கை கால்கள் மிகவும் சக்தியற்று, வலுவிழந்து போயுள்ளன. மூளையின் செயற்பாட்டைத் தக்கவைப்பதற்கு பிரதான அவையங்களை (இதயம், சுவாசப்பை போன்றவை) தக்கவைக்க உடல் செய்துகொள்ளும் தற்காப்பு. அதுபோல ஒரு கட்டத்துக்குமேல் எது நல்லது.. எது கெட்டது என்கிற பொதுச் சிந்தனை குறைவடையும். இது இயற்கைதானே.. ஆனாலும் கொடுமையானது. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை..

 

இது அவர் எடுத்த ஒரு படம்.. ஆனால் இதைத் தவிர இன்னும் ஒரு பத்தாயிரம் குழந்தைகள் பசியுடனும், ஐநூறு கழுகுகள் ஏக்கத்துடனும் இருந்திருக்கும்.. :o இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு அந்தக் காட்சி தெரிந்திராது..

 

அதுபோலத்தான் பலாயிரக்கணக்கான மக்கள் மடிவதைக் கண்டவர்கள் விறைத்துப் போயிருப்பார்கள்.. வாணி அவர்களின் செவ்வியிலும் இந்த மனநிலை வெளிப்பட்டிருந்தது..

 

நீங்கள் இணைத்த அந்தக் குழந்தையின் படத்திலும் ஒரு இயற்கைச் செயற்பாடு வெளிப்பட்டிருக்கிறது.. குழந்தையின் கை கால்கள் மிகவும் சக்தியற்று, வலுவிழந்து போயுள்ளன. மூளையின் செயற்பாட்டைத் தக்கவைப்பதற்கு பிரதான அவையங்களை (இதயம், சுவாசப்பை போன்றவை) தக்கவைக்க உடல் செய்துகொள்ளும் தற்காப்பு. அதுபோல ஒரு கட்டத்துக்குமேல் எது நல்லது.. எது கெட்டது என்கிற பொதுச் சிந்தனை குறைவடையும். இது இயற்கைதானே.. ஆனாலும் கொடுமையானது. :unsure:

நீங்கள் சொல்வது உண்மைதான், இசை!

 

அந்த நேரத்தில், அந்தக்குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தனக்கு 'ஏன்' வரவில்லை என்பது தான் தனக்குப் புரியவில்லை என்று தான் அவர் முதலில் கூறியிருந்தார்! பின்னர், காலப்போக்கில், அவரால், அவரது மனச்சாட்சிக்குச் சமாதானம் சொல்ல முடியாமல் போயிருக்கலாம்!

Link to comment
Share on other sites

 லியோ நீண்ட நாள்களின் பின்னர் மீண்டும் தங்களின பதிவைப்பார்த்தது சந்தோசம்

 

முள்ளிவாய்க்கால் அவலத்தின் வலிகள்  புரிகின்றது  தங்களின எழுத்துக்களில்

 

பகிர்விற்கு நன்றி

Link to comment
Share on other sites

 

 

 

கரும்பு

 

கொமன்ஸ் தேவை என்றால் கொமன்ஸ்சைக் கேட்கிறதை விட்டுட்டு. ஆள்,அடையாளம், ஊர். அற்றஸ் என தேவையில்லாமல் உங்களிற்கு எழும் ஊகத்தின் அடிப்படையில் ஒருவரின் அடையாளத்தை வெளிக்கொண்டுவந்து, ஆபத்திற்குள்ளாக்கும் கைங்கரியத்தை(காட்டிக்கொடுப்பை) நிறுத்திவிட்டு. கருத்துக்களை மட்டும் பதியும் வேலையை ம்டும் செல்தால் நன்று என நினைக்கின்றேன்.

 

உங்களுங்கு அவரைத் தெரியும் இவரைத்தெரியும் என்று விலாசம் காட்ட தேவையில்லாத ஆள் அடையாளப்பதிவுக்கருத்துக்களை  பதியிறதை விட்டுட்டு சும்மா இருங்கப்பா.

 

ஒருமாதிரி  அவரை அமத்தியிட்டீங்கள் கரும்பு  வாழ்த்துக்கள்  ^_^  (தேவையில்லாமல் தன்னால யாரே ஒருவர் அநியாயமாகவும் தவறுதலாகவும் பாதிக்கப்படாது என்பதற்காகவாக்கும்)

 

 

யாழ் கருத்துக்கள விதிமுறைகளிற்கு முரணாக எனது கருத்து பதியப்பட்டு இருப்பின் நீங்கள் நிர்வாகத்திற்கு முறையிட்டு எனது கருத்தை நீக்கமுடியும். எனக்கு அவரைத்தெரியும், இவரைத்தெரியும் என்று விலாசம் காட்டவேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. எனது முன்னைய கருத்தில் ஏதும் தவறு உள்ளதாகத்தெரியவில்லை.

Link to comment
Share on other sites

 

வணக்கம் லியோ,
 
 
இந்தக்குறுங்கதைகளை எழுதுபவர் எப்படியான இக்கட்டான சூழ்நிலையில் தற்போது உள்ளாரோ தெரியாது. ஆனால், கால சூழ்நிலைகள் இடம்கொடுப்பின் அவர் ( ஓவியன் ) த.வி.புவின் நிர்வாக மட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள், அவை கையாளப்பட்ட முறைமைகள் பற்றிய விடயங்களை பகிர்ந்துகொள்வது சில யதார்த்தங்களை அறிந்துகொள்வதற்கு உதவும்.
 
நீங்கள் விஜிந்தனின் அண்ணாவாக இருப்பின் நான் யாழ் கருத்துக்களத்தில் முன்பு எழுதிய இந்தப்பதிவு ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=71259&p=583747 ) சம்மந்தமாக உங்கள் பின்னோட்டத்தை அறிய விரும்புகின்றேன். குறிப்பிட்ட போராளிபற்றிய விபரம் தெரிந்தால் அறியத்தாருங்கள்.

 

கரும்பு சார்

 

இந்தக்குறுங்கதைகளை எழுதுபவர் எப்படியான இக்கட்டான சூழ்நிலையில் தற்போது உள்ளாரோ தெரியாது.  என்று  எழுதிப்புட்டு, அப்புறம் ஏன் சார்  அளை அடையாளப்படுத்த றை பண்ணிறீங்க . உங்க  கொமன்ஸ்சிலேயே  முரண் இருக்கு சார் . சரியா பாத்துக்கிங்க.

 

அப்புறம் பிறியா ஒரு அட்வைஸ் சார் வேணுமென்டா கேளுங்க ‘இப்பிடியாக சிக்கலான விடங்களை தனிப்பட அனுப்ப மெசேஞ்சர் என்று ஒரு வசதி யாழ் இணையத்தளத்தில இருக்கு சார் அதில போட்ட அண்ணாச்சி பாத்திட்டு சரியென்றால் றிப்பிளை பண்ணியிருக்கலாம் சார். ஏன் தேவையில்லாம தேரை  இழுத்து தெருவில விடுகிறீங்கள்.

 

நிர்வாகத்துக்கு அறிவிக்கலாம் என்ட இன்பமோசன் தந்ததுக்கு நன்றி கரும்பு சார், நான் அங்க பேசிக்கிறன்.

 

சாரி போ த டிஸ்ரேபன்ஸ்  சார்

Link to comment
Share on other sites

லியோ, மீண்டும் உங்களைப் பதிவோடு கண்டது மகிழ்ச்சி, நன்றி.  நேரமுள்ள போது எழுதுங்கள். (இறுதிப் போரில் என்ன நடந்தது என்று (தலைவர் உட்பட))


ம்ம்...... நீங்கள் எல்லோரும் ஒரு மாதிரிப் பார்க்கிறது விளங்குது!

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் அழிவின் கோரத்தை வெளிப்படுத்தும் இச்சம்பவத்தின் தாக்கம் மனதை கனக்கச் செய்கின்றது

 

பகிர்விக்கு நன்றி லியோ அண்னை

Link to comment
Share on other sites

லியோ Anna நீண்ட நாள்களின் பின்னர் மீண்டும் தங்களின பதிவைப்பார்த்தது சந்தோசம்

முள்ளிவாய்க்கால் அவலத்தின் வலிகள் புரிகின்றது தங்களின எழுத்துக்களில்

பகிர்விற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளி father என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட கருணாரத்தினம் அடிகளார் அவர்கள்  நகைச்சுவையுணர்வும் அன்பும் நிறைந்த அளப்பரிய சேவையாளர்.இலங்கை வங்கியில் ஒரு அதிகாரியாய் இருந்து பின் பாதிரியார் ஆனவர்.மிகுந்த தமிழ் உணர்வும்,அறிவும் உள்ளவர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பல மக்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்து

புது வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் .அந்தக்காலப்பகுதியில்தான் அவருடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது.

யாழ்ப்பாண இடப்பெயர்வோடு வன்னியில் சுமார் ஆறரை இலட்சம் மக்கள் வாழ்ந்தார்கள்.ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய மருத்துவர்கள்தான் வன்னியில்  இருந்தார்கள்.அவர்களின் உழைப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை.நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒலுமடுவில் இயங்கிய

பொன்னம்பலம் மருத்துவமனையில் பற்சிகிச்சை கிளினிக் நடத்திவந்தேன்.ஒரு களைப்பான நாளில்த்தான் கிளி fatherஐ முதல் முதலாய் சந்தித்தேன்.அவர் பற்சிகிச்சை பெற வந்திருந்தார்.முதல் சந்திப்பிலேயே பல நாள் பழகியவர் போல் ஓர் ஈர்ப்பை பெற்றேன்.

 வன்னியில் மலேரியா தாண்டவம் ஆடிற்று.மலேரியாவாலும்,ஜெயசுக்குறு இராணுவ நடவடிக்கையின் இடப்பெயர்வுகளாலும்  சிறுவர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.இது ஒரு மிகவும் எச்சரிக்கையான காலம்.  ஆனைவிழுந்தானில் அமைந்திருந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின்  நடுவப்பணியகத்தில் தமிழ்ச்செல்வன் தலைமையில் சிலர் அவசரமாக ஒன்று கூடினோம்.சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்புத்திட்டம் உதயமானது.இந்தக்குழுவில் கிளி father உம் இருந்தார்.இந்த திட்டத்தை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சிறப்பாக நடைமுறைப்படுத்திற்று. வெரித்தாஸ் வானொலி நிதி கிடைக்க உதவிற்று.வன்னி முழுக்க பல சிறு இடங்கள் அமைத்து ,எல்லா சிறுவர்களுக்கும் கற்பிணித்தாய்மாருக்கும்  சமைத்த உணவு நாளுக்கு வெவ்வேறாக வழங்கப்பட்டது.வழங்கவேண்டிய உணவின் பட்டியலை Dr சதானந்தன் துல்லியமாக என்னிடம் தந்திருந்தார்.

நிலைமை ஆறு மாதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருந்தது. பின் கிளிநொச்சிநகர்  திட்டமிடலிலும் எங்களுக்கு ஒத்தாசையாய் இருந்தார்.அப்போது அவர் NGO consortium இன் தலைவராய் இருந்தார். கருமை நிற மோட்டார் சைக்கிளில் ஒரு விளையாட்டு வீரனைப்போல பறந்து திரிவார்.புழுதியே காற்றாகும் பாதைகளில் தோழமைகளுடன் சந்தித்துக்கொள்வோம்.

இறுதியாய் கிளிநொச்சி சுகாதார விஞ்ஞானக்கல்லூரியின் நிகழ்வு ஒன்றில் அவரை சந்தித்தேன்.அவர் அக்கல்லூரியின் நிர்வாகசபையின் உறுப்பினராயும் இருந்தார். அக்காலப்பகுதியில் Northeast Secretariat on Human Rights (NESOHR)இன் தலைவராகவும் அயராது உழைத்திருந்தார். தமிழ்ச்செல்வனின் வீரமரணம் அவரை சரியாக பாதித்திருந்தது.அதற்குப்பின் முகத்தாடி வளர்த்திருந்தார்.தமிழ்ச்செல்வன்  நினைவாக நூலகம் ஒன்றை  அமைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.

சித்திரை இருபதாம் திகதி 2008ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த்தாக்குதலில் கொல்லப்பட்டார்.மீண்டும் எம் கன்னங்கள் நனைந்தன .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

தொடருங்கள்

எதையும் மறந்துவிட  

விட்டுவிடக்கூடாது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.