Jump to content

பயம் – பணம் - பலம் == சுப. உதயகுமாரன்


Recommended Posts

பயம் – பணம் - பலம்   == சுப. உதயகுமாரன்

 



நம்மில் பெரும்பாலானோருக்கு ஏதாவது ஒரு பயம் இருக்கிறது. மரண பயம் (இறையச்சம், உயிரச்சம்), முதுமை பயம், பாதுகாப்பின்மை (insecurity) பயம் – இப்படி ஏதாவதொன்று மனதின் பின்புலத்தில் நிழலாடியவாறே நம் வாழ்வின் இயல்புகளையும், இயக்கங்களையும் வெவ்வேறு அளவுகளில், பற்பல வழிகளில் பாதிக்கிறது. சிலருக்கு மனம் சார்ந்த பயங்கள் மேலெழுந்து வாழ்வையே சிதைக்கின்றன. இம்மாதிரியான நோயாகிப்போன பயங்களை ஆங்கிலத்தில் ஃபோபியா (phobia) என்று குறிப்பிடுகிறார்கள். இருட்டில் நுழைய பயம், உயரத்தில் ஏற பயம், தண்ணீரைக் கண்டால் பயம் – இப்படி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன பலருக்கும்.

மனித பயங்களுள் பெரிய பயம் பாதுகாப்பின்மை (insecurity) பயம்தான். பாதுகாப்பு (security) அல்லது பாதுகாப்பு உணர்வு (feeling of security) என்பது என்ன? தனிமனித வாழ்க்கை அனுபவங்களை வைத்துத்தான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும். நம்மில் கிட்டத்தட்ட அனைவருமே பாதுகாப்பாக உணரவே விரும்புகிறோம். அந்தப் பாதுகாப்பை எப்படிப் பெறுவது என்பதுதான் கேள்வி. மிகப்பெரும்பாலானோர் பணம் மூலம் பாதுகாப்பைப் பெறலாம் என முடிவெடுத்து, அதன் பின்னால் ஓடுகிறோம். பணம் என்றால் பிணமும் வாய் திறப்பது அதனால்தான்.

தமிழகத்திலும், இந்தியாவிலும் பலர் என்னை கோடிக் கணக்கில் வெளிநாட்டுப் பணம் வாங்கிப் பதுக்கி வைத்திருக்கிறவன் என்றே நினைக்கின்றனர். பிரதமர் மீதும், மத்திய அமைச்சர் மீதும் வழக்குத் தொடுத்த பிறகும், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பணம் வாங்கியிருப்பதாக நிரூபித்தால் நான் தூக்குத் தண்டனைக்கு தயாராயிருக்கிறேன் என்று அறிவித்தப் பிறகும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை. காரணம் பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் பெரும்பாலும் பணத்துக்காகத்தான் வருகிறார்கள் என்பதும், பணம் இல்லாமல் பொது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாது என்பதும்தான் நமது நாட்டின் யதார்த்தம், பொது புத்தி.

எல்லா சாதாரண மனிதர்களையும் போல எனக்கும் பாதுகாப்பின்மை பயம் ஓரளவு இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாடுகளுக்கோ, இந்தியாவில் உள்ள ஊர்களுக்கோ சென்று பணம் சம்பாதிக்க இயலவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதி சம்பாதித்திருப்பது வெறும் ரூ. 16,000 தான். அந்த காசோலைகளைக் கூட எனது வங்கிக் கணக்கில் போட முடியாத நிலை. கடவுச்சீட்டு முடக்கப்பட்டு விட்டது. குழந்தைகளின் உயர்கல்விக்கு என்ன செய்வோம், எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது என்பன போன்ற பல கேள்விகளும், அச்சங்களும் மனதில் அவ்வப்போது எழுந்து மறைகின்றன.

ஆனால் இடிந்தகரை வாழ்வில் பணம் எனக்கு ஒருப் பிரச்சினை அல்ல. பங்குத்தந்தை இல்லத்தில் தங்குகிறேன். ஊர் மக்கள் தங்கள் செலவில் உணவு அளிக்கிறார்கள். துணிகள் போன்ற விடயங்களை வீட்டிலிருந்து மனைவி அனுப்புகிறார். அவர் எப்போதோ தந்த ரூ.1,000 முடி வெட்டுவதற்கும், சோப் போன்ற பொருட்கள் வாங்குவதற்கும் இதுவரை உதவியது. சென்ற வாரம் என்னைப் பார்க்க வந்த எனது தாயார் தனது ஓய்வூதியத்திலிருந்து ரூ. 2,000 தந்தார்கள்.

நாம் வாழும் உலகமயமாக்கப்பட்ட உலகில், பயங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. அதிக பயத்திற்கு விடை அதிக பணம் எனும் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. பணம் இல்லாதவர் சோம்பேறி, முயற்சியற்றவன், தகுதியற்றவள், தோல்விகரமானவன் என்றெல்லாம் கருதப்படுகிறார், நடத்தப்படுகிறார். நான் சிறுவனாய் இருந்த 1960களில் ஏழ்மையை எதிர்கொள்வது ஓரளவு எளிதானதாக இருந்தது. ஒட்டு மொத்த சமூகமே ஏழ்மையாக இருந்தது; எளிமைப் போற்றப்பட்டது; வறுமையும் செழுமையும் அருகருகே ஆடிக்கொண்டிருக்கவில்லை; சமூக பொருளாதார வாய்ப்புக்கள் குறைவாகவே இருந்தன; நுகர்வு கலாச்சாரமில்லை; ஆடம்பரப் பொருட்கள் ஏதுமில்லை; எல்லாவற்றுக்கும் மேலாக, ஏழைகளுக்கு சமூக அரவணைப்பு ஓரளவு இருந்தது. இன்றையக் காலகட்டத்தில் ஏழ்மையை எதிர்கொள்ளும் பிரயத்தனம் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும்.

பணம்தான் பலம் என்றால், அதை அடைய வழி என்ன? உலகம் “பணம், எந்திரம், சந்தை” (Money, Machine, Market) என்ற மும்மையுடன் (Trinity) இயங்கிக்கொண்டிருக்க, தனி மனிதர்கள் “டாலர், தங்கம், பங்கு” (Greenbacks, Goldbars, Shareholdings) என்ற மும்மையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். குறுகிய காலத்தில், எளிய வழியில், நிறையப் பணம் சம்பாதிப்பதே உய்வடையும் ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது! அரசு அதிகாரியாக இருந்தால் தன் சக்திக்கேற்ப லஞ்சம் வாங்கலாம், ஊழல் செய்யலாம். அதிகாரமற்றவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி பணம் சம்பாதிக்கலாம். வேலையற்றவர்கள், வீணர்கள், சமூக விரோதிகள், சாக்கடைகள் எல்லாம் அரசியலில் குதிப்பதற்கு காரணம் பணம் சம்பாதிக்க, அல்லது தவறான வழியில் சம்பாதித்த பணத்தைக் காப்பாற்ற என்பதுதான் இன்றைய விதியாக இருக்கிறது.

அரசியலுக்கு வருகிறவர்கள் பணத்தைத் தேடி வைத்துவிட்டால், தானும், தன் குடும்பமும் பாதுகாப்பாக வாழலாம், தனது பொது வாழ்க்கையையும் பாதுகாப்பாக அமைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர்.
“பணமும் புகழும் உடைத்தாயின் பொதுவாழ்க்கை
பண்பும் பயனும் அது”
என்பது நமது சமூகத்தின் நவீன திருக்குறளாகி இருக்கிறது. அதிகாரிகள், வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்துத் தரப்பினருமே “பணமே பலம், அதுவே பாதுகாப்பு” என்று அலைகின்றனர். பணம் சேர்ந்துவிட்டால் இன்னும் இன்னும் வரவேண்டும், வந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை, வெறி தோன்றுகிறது. பணக்கார வர்க்கத்தில் உறுப்பினரானதும், உங்கள் பார்வை, பழக்கவழக்கங்கள், விழுமியங்கள் அடியோடு மாறி விடுகின்றன. நாளடைவில் பணம் ஒரு மன நோயாகிவிடுகிறது.

சமூகம் ப்ளூட்டோகிராஃபி (Plutography) எனும் குழிக்குள் விழுந்து குமைகிறது. காமவெறி (Pornography) போன்றதே இந்தக் காசுவெறி (Plutography). இந்த வார்த்தையை உருவாக்கிய டாம் ஊல்ஃப் (Tom Wolfe) இதனை “பணக்காரர்களின் செய்கைகளைப் பட்டவர்த்தனமாக படம் பிடித்துக் காட்டுவது” என்று விவரிக்கிறார். நமது தொலைக்காட்சி விளம்பரங்களில், நிகழ்ச்சிகளில் தினமும் பார்க்கிறோமே? அமெரிக்காவில் இதற்கென “Rich and Famous” என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியே ஒளிபரப்பப்படுகிறது. விமானங்களின் இருக்கைகளில் இன்றைய நவீன வாழ்க்கைக்குத் “தேவையான” விலை மதிப்புமிக்கப் பொருட்களின் பட்டியல் புத்தகம் இப்போது வைக்கப்படுகிறது. மூன்று வருடங்களுக்கு முன்னால் முகேஷ் அம்பானி ஐந்து பேர் கொண்ட தனது குடும்பத்துக்கு 27-மாடி வீடு ஒன்றைக் கட்டினார். அதற்கு ஆண்டிலியா (Antilia) என்ற கற்பனைத் தீவு ஒன்றின் பெயரைச் சூட்டினார். அந்த வீட்டின் மாடியில் மூன்று ஹெலிகாப்டர் தளங்களும், நீச்சல் குளமும், திரைப்பட அரங்கும், உடற்பயிற்சி அரங்கும், பாரும் (Bar) உள்ளன. வீட்டின் முதல் ஆறு தளங்களில் 160 கார்களை நிறுத்தும் வசதி உள்ளது. முகேஷ் அம்பானியின் வீடு இந்தியாவிலுள்ள முக்கியமானவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைகிறது.

இந்திரா காந்தி நகர்வாலா ஊழலில் 60 லட்சம் லஞ்சம் பெற்றதாகச் சொல்வார்கள். ஆனால் இன்றோ 2G ஊழல் ஒரு லட்சத்து எழுபத்தாறு கோடி என்றும், நிலக்கரி ஊழல் ஒரு லட்சத்து என்பத்தாறு கோடி என்றும் வளர்ந்திருக்கின்றன. நாம் பலம் வாய்ந்தவர்களாகி விட்டோம். தனிமனித அளவில் உங்கள் கைபேசி, மடிக்கணினி, காலணி போன்றப் பொருட்கள்தான் உங்கள் தரத்தை, மதிப்பை, மரியாதையை நிர்ணயிக்கின்றன. நீங்கள் பலம் வாய்ந்தவராகிவிட்டீர்கள்! பணத்தால் பயம் விலகிவிட்டது!!

“பயம் கொள்ளேல், பணம் விரும்பேல்” என்பதல்ல எனது வாதம். “நெறி தவறேல், வெறி கொள்ளேல்” என்பதுதான்! “பயம் – பணம் – பலம்” எனும் மும்மைப் பிரச்சினைக்கு விடை ஆழமானக் கல்வி – அளவான செல்வம் – அளவற்ற வீரம்!

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
யூன் 3, 2013
8440_565235970193857_660635629_n.jpg

 

 

https://www.facebook.com/SFFETN

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.