Jump to content

தொழில் நிறுவனம் மூலம் நீங்களும் உதவலாம்


Recommended Posts

தொழில் நிறுவனம் மூலம் நீங்களும் உதவலாம்

logo1.png

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை உயர்த்தும் முகமாக இவ்வருடம் 3ம் மாதம் இலங்கையின் நிறுவனங்களுக்கான சட்ட வரைபுக்கு அமைய HAND MADE CREATORS (PVT) Ltd  என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளோம்.

இந்த நிறுவனத்தின் நோக்கம் :-

1)    போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கானதும் வறுமையால் வாடும் தமிழர்களுக்குமான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.

2)    சிறு சிறு முதலீடுகள் மூலம் தொழில் முயற்சிகளை முன்னெடுத்தல்.

3)    சிறு சிறு வியாபாரங்களை ஆரம்பித்தல்.

4)    கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்கான கல்விக்கு உதவுதல்.

எமது நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் :-

approvel-644x1024.png

 

இத்திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

 

www.nesakkaram.org

 

Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

 

http://nesakkaram.org/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80/

Link to comment
Share on other sites

சிறு சிறு முதலீடுகள் மூலம் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். போரால் நலிந்து போன எஙஇகள் மக்களின் வாழ்வை மேம்படுத்த உங்கள் ஆதரவினைத் தாருங்கள்.

Link to comment
Share on other sites

நான் முன்று வருடங்களில் 10 லட்சங்களை முதலிடுவது என்ற திட்டத்தின் 
அடிப்படையில் சென்றவருடம்( sept 2012)  250000.00 ரூபாக்களைபின்வரும் திட்டங்களில்  
முதளிட்டுள்ளேன் .இதன்முலம் சில குடும்பங்கள் வருமானம் பெறுவதோடு ,
என்னுடைய பங்கு வருமானத்தை மக்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தலாம் .
 
1.ஆடு வளர்ப்பு ;
                 இதில் முதல் என்னுடையது .உழைப்பு பயன்பெறும் குடும்பத்தினுடையது .வருமானம் 50:50என்ற அடிப்படையில் பங்கிடப்படும் .குறைந்த முதலில் உச்ச பலனைப் 
பெறமுடியும் .இரண்டு குடும்பங்களுக்கு 75000.00ரூபாய் பெறுமதியான ஆடுகள் வழங்க்கியுளேன் .அதாவது ஒவ்வொரு பட்டியிலும் 6 மறி ஆடுகளும் 1 கிடாய் ஆடும் 
வழங்கப்பட்டுள்ளது .இந்த வருடமுடிவில் தான் இலாப -நட்ட கணக்கு பார்க்கப்படும் .
ஒரு பட்டியில் 30000.00ரூபாய் என்னுடைய பங்காக வரும் என எதிபார்கின்றேன் .
 
 
2.வியாபாரம் :
                 ஒருவருக்கு வியாபாரத்திற்கு 100000.00ரூபாய் கொடுத்துள்ளேன் .என்னுடைய நல்ல நோக்கத்தை புரிந்து கொண்ட இவர் மாதம் 5000-10000.00ரூபாய் தருவதாக சொல்லியுள்ளார் .இதுவரை 40000.00ரூபாய் தந்துள்ளார்.இதிலிருந்துதான் நேசக்கரத்தின் 
திடத்திற்கு 25000.00ரூபாய் தந்தனான் .
           

இதேபோல் நேசகரத்திட்கு முன்றுவருடங்களில் 500000.00ரூபாய்களை என்னால் தரமுடியும் .என்னுடைய செயல்பாட்டையும் உங்கள் முன் வைத்துள்ளேன் .உங்களிடம் திட்டங்கள் இருந்தால் முன்மொழியுங்கள் .நேரடியாக கலந்துரையாடி முடிவெடுக்கலாம் .
 
இதற்கு உடனடியாக 100000.00ரூபாய் தரமுடியும் .

Link to comment
Share on other sites

சீமெந்துக்கற்கள் வியாபாரம் நீங்களும் இணையலாம்

logo1.png

போரால் பாதிப்புற்ற கிழக்குமாகாணத்தின் பல கிராமங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளைக் கட்டுவதற்கான சீமெந்துக்கற்கள் , மரங்கள் இதர பொருட்கள் யாவும் முஸ்லீம் மற்றும் பெரும்பான்மையினத்தினரின் உற்பத்திகளிலிருந்தே எம்மவர்கள் அதிக விலைகொடுத்து வாங்கும் நிலமையிருக்கிறது. இவ்விடங்களை நோக்கி அவர்களது தொழில்சாலைகளும் வந்து கொண்டிருக்கிறது.

 

நாமே வீடு கட்டுவதற்குத் தேவையான கற்கள் மரங்கள் போன்றவற்றை எம்மவர்களுக்கு விநியோகிக்க முடியும். அதற்கான முதலீடு எம்மிடம் இருப்பின் எம்மவர்களுக்கு நாங்களே குறைந்த விலையில் வழங்கலாம். இவற்றைக் கருத்தில் கொண்டு சீமெந்துக்கற்தொழிச்சாலை ஒன்றைக் கிழக்கு மாகாணத்தில் நிறுவ உத்தேசித்துள்ளோம்.

வீட்டுத் திட்டம் வழங்கப்பட்ட சில ஊர்களிலிருந்து 3கிராமங்களைத் தெரிவு செய்துள்ளோம். ஒரு வீட்டுக்கு தலா 3ஆயிரம் கற்கள் தேவை.

 

இக்கிராமங்களின் வீடுகளுக்கான கற்களை நாமே தயாரித்துக் குறைந்த விலையில் வழங்குவதற்குத தொழிற்சாலையொன்றை அமைக்கத் தேவையான உதவியை எதிர்பார்க்கிறோம்.

 

தேவையான மூலப்பொருட்கள் :-

1)    கல் அறுக்கும் இயந்திரம் 1 – 135000.00ரூபா (அண்ணளவாக 840€)
2)    மின்பிறப்பாக்கி 1 – 86000.00ரூபா (அண்ணளவாக 535€)
3)    நீர்ப்பம்பி 1 – 16500.00ரூபா (அண்ணளவாக 103€)
4)    நீர்க்குழாய்  – 14500.00ரூபா (அண்ணளவாக 90€)
5)    பலகைகள் 100 (ஒன்றின் விலை – 215.00ரூபா) – 21500.00 (அண்ணளவாக 135€)
6)    5ஆயிரம் கற்கள் முதல் உற்பத்திக்குத் தேவையான சீமெந்து 63பைகள்(ஒரு சீமெந்து பையின் விலை – 870.0ரூபா) 63பைகளுக்கு – 54810.00ரூபா( அண்ணளவாக342€)
7)    5ஆயிரம் கற்களுக்கான மணல் – 25000.00ரூபா (அண்ணளவாக – 155€)

மொத்தம் தேவைப்படும் உதவி – 353310.00ரூபா (2200€)

 

இந்த வியாபாரத்தில் பயனடைவோர் போரால் பாதிப்புற்ற வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தொழிலாளிகள். இவர்களின் 10பேருக்கு வேலை வாய்ப்பும் 2 உழவு இயந்திரத்துக்கும் வேலையை வழங்க முடியும்.

கிடைக்கும் வருமானத்திலிருந்து 20சதவீதம் நேசக்கரம் சமூக சேவைக்கும் மீதி இலாபத்திலிருந்து தொழிலாளர்களுக்கான சம்பளமும் முதலீட்டாளருக்கான இலாபமும் வழங்கப்படும்.

 

இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். விரைவாக வேலையை ஆரம்பிக்க வேண்டியுள்ளதால் உதவிகளையும் விரைவாக எதிர்பார்க்கிறோம்.

 

தொடர்புகளுக்கு :-

 

Shanthy  Germany – 0049 678170723 /கைபேசி – 0049 1628037418

hmcgroupslk@gmail.com

Shanthy                                                                                                                                                                                                                                                   Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

 

http://hmclk.com/?p=50

 

எமது நிறுவனத்தின் இணையத்தளம் :-http://hmclk.com

 

Link to comment
Share on other sites

இதில் முதலிட எனக்கு சம்மதம் .100000.00 ரூபாய் உடன் தரமுடியும் .மிகுதியை நேரடியாக 
பேசி முடிவெடுப்பம் .
நன்றி .

Link to comment
Share on other sites

இதில் முதலிட எனக்கு சம்மதம் .100000.00 ரூபாய் உடன் தரமுடியும் .மிகுதியை நேரடியாக 

பேசி முடிவெடுப்பம் .

நன்றி .

 

மன்னிக்கவும் நேற்று செய்தியை பகிர்ந்துவிட்டு உங்களுக்கு எழுதிய பதில் கொன்வேட்டரில் அழிந்துவிட்டது. அதனால் போட முடியாது போய்விட்டது.

 

உங்களுக்கு எப்போது நேரம் என்பதனை அறியத்தாருங்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன். மேலும் இருவர் தங்களால் இத்திட்டத்திற்கு உதவ முடியுமென வாக்குறுதி தந்துள்ளார்கள். இருவரும் கனடாவிலிருந்து தான் தொடர்பு கொண்டுள்ளார்கள். இவர்கள் இருவரும் முகப்புத்தகம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்கள். ஏற்கனவே எமது நிறுவனம் ஊடாக விபரங்கள் பெற்று உதவியிருக்கிறார்கள்.

 

அவர்களில் ஒருவர் ஒருலட்சமும் இன்னொருவர் இத்திட்டத்தின் 10சதவீதத்தை தான் முதலிடுவதாகவும்  கூறியுள்ளார். மேலும் தேவையான 730€ மேலும் யாரையும் இணைத்து தொடங்கலாம். யாராவது யாழ்கள உறவுகள் இணைய விரும்பின் தொடர்பு கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

உங்களுக்கு எப்போது நேரம் என்பதனை அறியத்தாருங்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன். .

பலமுறை தொடர்பு கொண்டேன் .கதைக்க முடியவில்லை .3P M -4P M 

(கனேடிய நேரப்படி)என்னை தொடர்பு கொள்ளல்லாம் .

Link to comment
Share on other sites

பலமுறை தொடர்பு கொண்டேன் .கதைக்க முடியவில்லை .3P M -4P M 

(கனேடிய நேரப்படி)என்னை தொடர்பு கொள்ளல்லாம் .

 

நீங்கள் பலமுறை தொலைபேசியெடுத்திருக்கிறீங்கள். நான் அந்த நேரங்களில் வேலையில் நின்றிருக்கிறேன்.தனிமடலில் விபரம் எழுதியிருக்கிறேன் பாருங்கள். இன்று மாலை 4மணியின் பின்னர் வீட்டில் நிற்பேன். பேசலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.