Jump to content

சிரிக்க மட்டும்.........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போன கிழமை தொலைக்காட்சியில் பிள்ளைகளுடன் ஒரு நகைச்சுவை நேரடி நிகழ்ச்சி  பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதில் வந்த ஒரு விடயத்தை எழுதுகின்றேன்.

நகைச்சுவையாக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

 

அந்த நிகழ்ச்சி

பிரான்சின் முன்னணி நடிகர்கள் பாடகர்கள் தொலைக்காட்சி  மற்றும் வானொலி அறிவிப்பாளர்கள் என பிரபலமானவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.

 

அதில் பல விளையாட்டுக்கள்.

அதில் ஒன்று

4 பேர் கொண்ட இரு குழுக்களுக்குள் போட்டி.

 

ஒரு குழுவின் 3பேரை ஒரு பக்கமும் 

ஒருவரை அவர்களுக்கு எதிர்ப்பக்கமும் விட்டு 

அந்த ஒருவருக்கு எதிரே திரையில் ஒரு படத்தைப்போடுவார்கள்.

அவர் செய்கையால் அதை மற்றவருக்கு உணர்த்தி அதன் பெயரைச்சொல்ல வைக்கணும்.

(இவர்களுக்குடி படம் தெரியாது)

 

ஒரு படத்தைப்போட்டு  விளக்கம் கேட்டார்கள்

அது ஒரு பழம்

அவர் கையால் மரத்திலிருந்து  பழத்தை புடுங்குவது போல் காட்டி 

கீழே குனிந்து தன்னுடையதை கையால் காட்டி இப்படிதான் அதன் வடிவம் இருக்கும் என்றார்.

பல முறை  இவ்வாறு செய்து ஒருவாறு பதிலளித்துவிட்டார்கள்.

நான் மக்களுடன் பார்த்துக்கொண்டிருந்ததால்  சிரிப்பை அடக்கமுடியாமல் அடக்கிக்கொண்டிருந்தேன்.

 

பதிலளித்து முடிந்ததும் நிகழ்ச்சித்தொகுப்பாளர் 

இதற்கு இப்படியும்   ஒரு உபமானம் கொடுக்கலாம் என்று தயாரித்த எவரும் நினைக்கவில்லை என்றார் :D

மண்டப சிரிப்பில் நான் மட்டுமல்ல 

பிள்ளைகள்  எல்லோரும்  அடக்கமுடியாது சிரித்துவிட்டோம்.

அடுத்த அறையில் நின்ற மனைவி  சிரிப்பைக்கேட்டு ஓடிவந்து என்ன என்று கேட்டார்.

அவருக்கு விளங்கப்படுத்த முடியாது மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தோம்...

 

இது தான் பழம்

(கலந்து கொண்டவர்கள் வெள்ளை இனப்பெண்கள் என்பது சிறு தகவல்... :D )

 

abricot.jpg

Link to comment
Share on other sites

:D  :D :D  படத்தை பார்க்கமுடியல ...............வீட்டிற்கு சென்று பார்க்கிறேன் ...............நான் நினைக்கிறேன் வாழைப்பழமாகத்தான் இருக்கும் என்று.... :lol:

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன் வாழைப்பழமாகத்தான் இருக்கும் என்று.... :lol:

 

இது ஒரு கடுமையான ஆணாதிக்கச் சிந்தனை! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  தமிழ்சூரியன்  மற்றும் நிழலி

 

கொஞ்சம் பயந்து கொண்டுதான் பதிந்தேன்

விசுகு அண்ணா

எல்லை தாண்டுகின்றார்  என்று வந்துவிடுமோ என்று. :icon_mrgreen:

ஆனால் நான் சிரித்ததை மற்றவர்களுக்கும் கொண்டு செல்லவேண்டும் என்ற ஆவல்  உந்த பதிந்துவிட்டேன். :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கொஞ்சம் பயந்து கொண்டுதான் பதிந்தேன்

விசுகு அண்ணா

எல்லை தாண்டுகின்றார்  என்று வந்துவிடுமோ என்று. :icon_mrgreen:

 

 

பிரான்சில இது சகஜமப்பா!!!
 
ஆனா, உங்கள் பதிவுபயத்துக்கு காரணம் புரியவில்லை.
 
இது வளந்தர்வர்களுக்கான தளம். சிறுவர்கள் வந்து வாசிக்கும் அளவுக்கு இங்கே அவர்களுக்கு ஆர்வமான விடயங்கள் இல்லையே.
 
அதே வேளை இன்னுமொரு விடயமும் நினைவுக்கு வருகின்றது.
 
பதினோரு வயதுப் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் பாலியல் கல்வி எனும் பெயரில் புட்டு, புட்டு வைகிறார்கள்.
 
ஒவ்வொரு பாடசாலைகளிலும், ஒரு நிரந்தர மருத்துவ தாதி நியமிக்கப் பட்டு, பெண் பிள்ளைகளுக்கு 'கருத்தடை' குளிசை விநியோகிக்க வேண்டும், தேவையான போது, பாதுகாப்பான பாலியல் உறவு குறித்து அறிவுரை கொடுக்க வேண்டும் என்று ஒரு 'புத்தி சிகாமணி' உதவி அமைச்சர் ஒரு அறிக்கை விட்டார்.
 
BBC வானொலியில் விவாதத்துக்கு வந்தார். பலர் விவாதித்தார்கள். அவரும் பதில் சொல்லிக் கொண்டு வந்தார்.
 
இறுதியில் ஒரு தந்தை வந்தார். 'இந்த, வேகத்தில் பள்ளிகூடத்தில் மகப்பேறு  மருத்துவ கூடம் அமைப்பியல்  போல இருக்குது. பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்புவது படிக்க. இந்த மாதிரி விடயங்களுக்கு, அங்க ஒரு டாக்குத்தர், நேர்ஸ் உடன் குந்தி புடிச்சுக் கொண்டிருக்கிறார். 
 
படிப்பு வேண்டாம், காதல் தான் வேண்டும் எண்டுற பிள்ளைகள், அடுத்த பிள்ளைகளை குழப்பாமல், வெளியில போய், குளுசையினை வாங்கட்டும். என்றாரே பார்க்கலாம்.
 
அந்த  உதவி அமைச்சர் அத்துடன், துண்டைக் காணோம், துணியை காணோம் என்று ஓடி விட்டார். அவரது திட்டமும் கிடப்பில் போடப் பட்டது.
Link to comment
Share on other sites

இது ஒரு கடுமையான ஆணாதிக்கச் சிந்தனை! :icon_mrgreen:

அய்யய்யோ இப்பதான் படத்தை பார்த்தேன் ...........அவற்றை மறந்தே போய்விட்டேன் நிழலி ........... :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரம் பிள்ளைகளுடன் இருந்து, சில நிகழ்ச்சிகள் பார்க்கும் போது....
எக்கச்சக்கமாக... மாட்டுப் பட வேண்டி வரும். :D  :lol:

Link to comment
Share on other sites

சில நேரம் பிள்ளைகளுடன் இருந்து, சில நிகழ்ச்சிகள் பார்க்கும் போது....

எக்கச்சக்கமாக... மாட்டுப் பட வேண்டி வரும். :D  :lol:

 

எனக்கும் நடந்திருக்கு இப்படி :lol:.

 

நன்றி பகிர்வுக்கு விசுகு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரம் பிள்ளைகளுடன் இருந்து, சில நிகழ்ச்சிகள் பார்க்கும் போது....

எக்கச்சக்கமாக... மாட்டுப் பட வேண்டி வரும். :D  :lol:

 

எங்கடை சனங்கள் கூடுதலாய் உப்பிடியான வில்லங்கசமாச்சாரங்கள் வந்தால் உடனை  பிபிசி நியூஸ் சனலுக்கு மாத்திப்போடுவினம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.