Jump to content

தம்பதி பூஜை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பூசைக்குச் செல்வதற்குப் பதிலாகத் தம்பதிகள் வீட்டிலிருந்து கொண்டே மனம்விட்டுப் பேசினாலே அவர்கள் நீடுழிகாலம் வாழ்வார்கள்.  :)

 

 

உங்களது கருத்துத்தான் எனதும்

 

இப்படித்தான் பல இடங்களிலும் நடக்கும்

ஆனால் அவர்கள் பேசியதும் வாழ்வை தொடர்ந்ததும் வெளியில் தெரியாது.

 

இப்படியான நிகழ்வுகள் மூலம் தானே நமக்கும் செய்தி  வருகிறது.

படம் வேறு போடுகிறார்கள்.

பணம் செல்வாக்கு நேரம் இருக்கும்போது

பிரபலமாகுதல் என்பதும் தேவைப்படுகிறது. அதை  நாம் எப்படி தடுப்பது...??

அதை சிலர் வியாபாரமாக்குகிறார்கள்.

கைமேல் பலன்.

நல்ல வியாபாரிக்கு அழகு வெல்லுதல் தானே.... :D

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாமும் புத்தகம் எழுதினால் அது மனுதர்ம சாஸ்த்திரதை விட வித்தியாசமானதாக இருக்க முடியுமா? அல்லது  இதில் சம்சாரிக்கும் சந்நினியாசிக்கும் மட்டும்தான் இடம் இருக்கு என்று நாம் எமது காலை நீட்டி மற்றவர்களை வண்டியிலிருந்து உதைத்து தள்ளிவிட முடியுமா?  சிவலிங்கத்தை பாதுகாப்பதாக போட்டி போட்டுகொண்ட சிலந்தியும் யானையும் கதை இன்னமும் சமய பாடப்புத்தகங்களில் இருக்கே?  தனது இரண்டு கண்களையும் தோண்டிய கண்ணப்பர் கதை இன்னமும் நீக்கப்படவில்லையே? எதிரி என்று தெரிந்த பின்னர் முத்திநாதனின் கையால் இறக்க வென்று அவனின் காலின் கீழ் இருந்து இறந்த மெய்ப்பொருள் நாயனாரின் சரிதம் இன்னமும் சமய பட புத்தகங்களில் இருந்து விலக்கப்படவில்லையே?

 

 

மல்லையூரன்.. கல்வி கற்பதற்கு மனதை ஒரு நிலைப்படுத்தல் அவசியம் என்று கூறி இருக்கிறமே தவிர மனதை ஒரு நிலைப்படுத்தினால் கல்வி தன்பாட்டில் வரும் என்று அதனை அர்த்தப்படுத்துதல் தவறு..!

 

மேலும்.. நீங்கள் குறிப்பிட்ட பல கதைகள் புதிய பாடத்திட்டத்தில் (நாங்க படிச்சதற்கு அமைய) இருக்கவில்லை. நாயன்மார்கள் வாழ்வுக்கால சம்பங்களைத் தவிர புனை கதைகள் நீக்கப்பட்டு.. சிவாகமம்.. சைவ சித்தாந்தம்.. உபநிடதம் போன்ற விடயங்களே அதிகம் புகட்டப்பட்டன. இவை கடவுளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கவில்லை. மாறாக மனித வாழ்வியல் நெறி பற்றிப் போதித்தன. ஒரு மனிதனின் வெற்றிகரமான வாழ்வு என்பது அந்த மனிதன் தன்னைத் தானே உணர்வதிலும்.... கட்டுப்படுத்தி.. செயற்படுத்தி.. வாழ்வதிலும் தங்கி உள்ளது..! அதை அவை போதிக்கின்றன. அது மாணவர்களுக்கு அவசியமான ஒன்றும் கூட..!

 

நாங்கள் சைவர்கள். இந்துக்கள் அல்ல..! அதனால் தான் என்னவோ.. நாங்கள் சிங்கள பெளத்தர்களால் அழிக்கப்பட்ட போதும் இந்திய ஆரிய வகைப்படுத்தல் இந்துக்கள் வேடிக்கை பார்த்தார்கள்..! இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவா பி ஜே பி எமக்காகக் குரல் கொடுப்பதில்லை. சிங்கள பெளத்தர்களுக்கு அது அதிகம் குரல்கொடுக்கிறது..! எம்மைப் போலவே தமிழக மக்களும் சைவர்கள்..! அதனால் தான் அவர்கள் எமக்காக தமிழர்கள் என்பதற்கு அப்பாலும் அக்கறை காட்ட விளைகின்றனர்..! :):icon_idea:

மொகச்சதாரோ ஹரப்பாவில் எழுச்சி பெற்றிருந்தது.. சைவமே தவிர இந்து அல்ல. இந்து என்பது பின்னாளில் இயற்றப்பெற்ற ஒன்று..! சைவமே பழமையானது. தமிழர்களின் இறை நம்பிக்கையில் அதிக காலம் அவர்களோடு இருந்து வருவது..! :icon_idea:

சைவம் இப்படியான தம்பதி பூஜை ஆட்டிக்குட்டி பூஜை இவற்றை வலியுறுத்துவது இல்லை..! நாங்க இது குறித்து இதுவரை படித்த சைவ நூல்களில் எங்கும் இது பற்றி அறிந்திருக்கவில்லை..! ஆனால் வட இந்திய இந்துக்களிடம் இந்த மூட நம்பிக்கைகள் அதிகம் பதிந்து கிடக்கின்றன. அவர்கள் உண்மையான சைவர்களாகவும் இல்லை. இந்துக்களாகவும் இல்லை..! :)

Link to comment
Share on other sites

<p>

இசை,

மருதின் ஒரு பதிவு: பிள்ளையார் விளையாடிப்போட்டார் போல கிடக்குது:

Maruthankerny

Maruthankerny

Advanced Member

  • av-1409.jpg?_r=0
  • கருத்துக்கள உறவுகள்
  • bullet_black.pngbullet_black.pngbullet_black.png
  • 3,664 posts
  • Gender:Not Telling
  • Location:USA
  • Interests:In Anything

Posted 10 March 2013 - 07:49 AM

நீங்கள் என்ன சொல்ல விழைகிறீர்கள்???

இப்போது உலகம் இருக்கும் நிலையில் .... பூமிக்கு பிள்ளையார் வந்து பால் குடித்து விளையாடி விட்டு போனார்?

இப்படியொரு பேமாண்டியை தான் நாம் கடவுள் என்று கும்பிட வேண்டும் என்றால்?

நாதமுனி.. உங்களை நம்ம்ம்பி பச்சையைக் குத்திவிட்டேன்.. :unsure::icon_idea:

Link to comment
Share on other sites

சனத்திற்கு காசு மெத்திப் போச்சு தமிழச்சி...

எதற்கு எல்லாம் செலவு செய்வது என்று தெரியாமல் கடசியில போய் ஐயனுக்களுக்கு கொட்டுகிறார்கள்.பூசைகள் புனஸ்காரங்களை உண்மையான மன  திருப்தியோடு செய்தால் பறவா இல்லை..எனது உறவுக்கார பெண் ஒருவர் என்னோடு சொல்லி கவலைப் பட்ட விடையம்...இப்படி ஒரு பூசைக்கு போய் விட்டு எல்லாம் முடிந்ததும் ஐயனின் காலில் தொட்டு கும்பிட்டு விட்டு நிமிரும் போது ரொம்ப, வடிவாயிருக்கிறாய் என்னைக் கட்டுறாயா என்று கேட்டாராம்...ரொம்ப வயதான ஒருவர் கேட்கும் கேள்வியா இது...அந்தப்பிள்ளை ஏற்கனவே திருமணம் செய்த ஒருவர்..இப்படி நிறைய விடையங்களை எழுதலாம்....நாங்கள் எழுதுவதை எவ்வளவு தூரம் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று தெரியாது..

 

பணம் என்று தேடப்போனால், சமய வாழ்க்கையில் (பணத்திற்கு பொருளாதார நோக்கம் மட்டுமே இருக்கலாம்- இறைவனுக்கு கொடுக்க என்று பணம் தேடுவதில்லை) 1).அதனை சேர்த்து வைப்பதால் வரும் மனத் திருப்தியை அனுபவிப்பது அல்லது 2).அதை செலவழித்து வரத்தக்க உடல் சுக போகங்களை அனுபவிப்பதாற்காக மட்டும்தான் இருக்க முடியும். ஐயரிடம் காசு கொடுப்பதோ அல்லது உண்டியலில் போடுவதோ, அல்லது அரிச்சனை செய்ய சொல்லி அதை காதால் கேட்டு மகிழ்வதோ எல்லாமே இரண்டாம் நோக்கத்தில் வருபவைதான். பணத்தை ஐயரிடம் கொடுத்துவிட்டு காலைத்தொட்டு கும்பிட்டு, தான் தந்த கடனை திருப்பித்தா என்று ஐயரின் முகத்தை நிமிர்ந்து பார்த்தால், ஐயர் செய்ய கூடிய உதவி அன்புகாட்டுவது மட்டும்தான்.

 

நீங்கள் நல்ல வேலைகாரனிடம் நிறையப் பணத்தை கொடுத்து என்னை கவனிக்கிறாயா என்று கேட்டால் அவன் தண்ணீர் கொண்டுவந்து தருவான், உடையை மாற்றி விட்டு, அதை தோய்த்துக் காயப் போட்டுவிடுவான். நீங்கள் நிமிர்ந்து நடக்கும் போதும் ஊன்று கோலை கொண்டு வந்து தந்து பிடிக்கச் சொல்லுவான். தூக்கம் பிடிக்கதாபோதும் படுக்கையைத் தட்டிப்போட்டு படுக்க சொல்லுவான். தூக்கம் வரவில்லை என்று முறைப்பாடு கொடுத்தால் தேடி எடுத்து வந்து நல்ல ஒரு பாட்டை போட்டுவிட்டு தூங்கச் சொல்லுவான். நீங்கள் பணம் கொடுத்த ஆள் ஒரு திருடனாக இருந்தால் உங்கள் வாய் நிறைய துணி அடைந்துவிட்டு. கட்டிலின் காலுடன் கட்டிவைத்துவிட்டு, தன்னை கண்டுகொள்ளாமல் இருக்க விரல்களால் கண்ணிரண்டையும் குத்திவிட்டு, அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவான். இதில் இருப்பது லக்கு மட்டுமே. இதை எண்ணி யாரும் வயோதிப காலத்தில் உதவியை தேடக்கூடாது என்று யாராவது உதேசம் செய்தால் அது இன்னொரு மதப்பிரசங்கமாகாது.

 

இதில் சமய விடையங்களை மட்டும் பார்த்தால், நீங்கள் கூறியது மாதிரியே 6ம் நூற்றாண்டிலும் ஒரு தடவை இதே மாதிரி ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்தக் காலத்தில் அழகே தன் சொருபமான ஒரு சிறுமி வசித்து வந்தாள். பருவத்தில் பெற்றொர்கள். பெண்ணுக்கு திருமணம் செய்த்துவைத்தார்கள். அவளும் தன் மனித வலிமைக்குள் உட்பட்ட முயற்சிகள் எல்லாம் எடுத்து தன் குடும்பத்தை கட்டிக்காத்து கணவனை தன்னுடன் வைத்திருக்க முயன்றாள்.  ஆனால் அவள் கணவன் ஒருநாள் அவளுக்கு தெரியாமல் அவளைவிட்டு ஓடிப்போய் பணம் உள்ள வாணிபன் ஒருவனின் மகளை திருமணம் செய்து கொண்டான்.  சௌந்தர்யமான மகளைப் பெற்ற அன்னையும், பிதாவும், படாத பாடுபட்டு ஓடிப்போன கணவனை தேடிப்பிடித்து அவனுக்கு இரண்டாம் தாரமாகத்தன்னும் தங்கள் மகள் வாழட்டும் என்று அவனிடம் அழைத்துச் சென்றார்கள். தன் முதல் மனைவி தன்வீட்டுப் படியேறி வருவதை கண்ட தனதத்தன் தன் புதிய மனைவியை அழைத்து,  புனிதவதி என்று கூப்பிட்டு தன் மகளையும்  அழைத்து பெரியோர் பார்த்திருக்க தன் முதல் மனைவின் காலில் வீழ்ந்து வணங்கி, தலையை நிமிர்த்தி "அம்மையே" என்று தேவியை அழைப்பது போல் அழைத்தான்.  அப்படி உயர்வாக அழைத்தானே அல்லாமல் அவன் அவளை மனைவியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கிருந்த தாய், தந்தையர், மாமன், மாமி பெரியோர்களால் யாராலும் அவளை ஏற்றுக்கொள்ள அவனை சம்மதிக்க வைக்க முடியவில்லை. அந்த பெண் உண்மையில் கணவன் வீடு தேடி வந்திருந்தது அவனுடனான தாம்பத்திய வாழ்வை புதுப்பிக்க அல்ல. அவனுக்கு ஒரு துணை கிடைத்துவிட்டதால், அந்த வாழ்வில் தனக்கு இருந்த அவனின் கடமைகளில் இருந்து தனக்கு விடுதலைக்கான அவனின் ஒப்புதலுக்கே. அது கிடைத்தவுடனே அந்த இடத்திலேயே தான் தோலையும் சதையையும் உதறி எறிந்துவிட்டு எலும்புகளுடன் மட்டும் திருவேங்கடனைத்தேடி போய்விட்டாள்.

 

அந்த பெண்ணை ஐயர் அல்ல அங்கு அழைத்து சென்றது. அங்கு அழைத்து சென்றது உங்களின் நண்பிகளில் ஒருவர். ஐயர் எத்தனை அழகான பெண்களை தன்னை திருமணம் செய்ய சொல்லிக்கேட்டாரோ தெரியாது.  ஆனால் சமயத்துக்கு வெளியே ஒன்று மட்டும் சொல்ல முடியும். கோவில் தேடிச் சென்று அந்த பெண் தான் கொடுத்த பணதுக்கான பலனை பெற்றுக்கொண்டா. தாம்பத்திய உறவு என்றால் என்ன என்பதை விளங்கியதால் தனது கணவன் இருக்க ஐயர் தன்னையும் திருமணம் செய்ய சொல்லிக்கேட்டார் என வந்து உங்களிடம் குறைப் பட்டுக்கொண்டா. அவ நிச்சயமாக சிறைக்காப்பில்லமல் வெளியே சென்று திரும்பி வந்து கணவனுடன் திருப்திகரமான வாழ்க்கை நடத்தக்கூடிய பாடத்தை ஆலயத்தில் கற்றுக்கொண்டா. அவ அதை உங்கள் உங்களீடம் சொன்னது மாதிரியே இன்னும் பல நண்பிகளிடமும் சொல்லிக் கவலைப்படுவா. அப்படி நடந்து கொள்வது அவவின் பாதுகாப்பு வேலி. அப்படி சொல்லும் போது அதை கேட்கும் பெண்களில் ஒருவர், இலகுவாக சிரித்துவிட்டு, தோழி இதில் உட்பொருள் ஒன்றும் இல்லை, இலகுவாக எடுத்துக்கொள் என்றும் கூறுவா. அன்று தொடக்கம் அந்த பெண் தன்னைத்தான் காத்துக்கொள்ள கற்றுக்கொண்டதுடன், புதிதாக  தன் மனதையும் இலகுவாக வைத்துக் கொள்ளவும் கற்றுகொண்டுவிடுவா.

Link to comment
Share on other sites

ஐயரைக் காப்பாற்றி விட்டமாதிரி தெரியுது.. :unsure: நீங்கள் எந்தக் கோயில் ஐயர் மல்லை?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயரைக் காப்பாற்றி விட்டமாதிரி தெரியுது.. :unsure: நீங்கள் எந்தக் கோயில் ஐயர் மல்லை?? :D

 

 ஐயர்  என்று சொல்லக்கூடாது

ஐயா  என்று சொல்லணும்

(சிறு பிள்ளையை  மன்னித்தருள்ள ஐயா :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கோ இசையண்ணா..மல்லைக்கு நான் யாழில் கருத்து எழுதினால் நீண்ட காலமாக அலர்ஜியாகத் தான் இருக்கு...எப்போதும்  நான் ஏதாச்சும் எழுதிட்டு போனால் எடுத்து வைச்சு ஒப்பிறேசன் செய்வது தான் வேலை..இதை நான் பிரச்சனையாக்குவதற்காக சொல்ல வர இல்லை..தொடர்ந்து கவனியுங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கோ இசையண்ணா..மல்லைக்கு நான் யாழில் கருத்து எழுதினால் நீண்ட காலமாக அலர்ஜியாகத் தான் இருக்கு...எப்போதும்  நான் ஏதாச்சும் எழுதிட்டு போனால் எடுத்து வைச்சு ஒப்பிறேசன் செய்வது தான் வேலை..இதை நான் பிரச்சனையாக்குவதற்காக சொல்ல வர இல்லை..தொடர்ந்து கவனியுங்கள்....

 

இந்த பழமொழியும்  நல்லாத்தான் இருக்கு.... :D  :D

Link to comment
Share on other sites

மல்லையூரன்.. கல்வி கற்பதற்கு மனதை ஒரு நிலைப்படுத்தல் அவசியம் என்று கூறி இருக்கிறமே தவிர மனதை ஒரு நிலைப்படுத்தினால் கல்வி தன்பாட்டில் வரும் என்று அதனை அர்த்தப்படுத்துதல் தவறு..!

 

நானும் நீங்கள் சொன்னத்தாக சொல்லவில்லை. எனது வாதம் நீங்கள் கூறியவைகளைக் கடந்து போக அந்தப் படி அவசியம். அதாவது, மூளையால் கற்று, உடம்பால் உணர்த்து கொள்பவற்றுக்கு மேலே போனால்த் தான் துறவி துறவறத்தை உணர முடியும். நான் நண்பர்களுடன் சமய விடைங்களைப் பற்றி விவாதிக்கும் போது இதை சொல்வேன் . ஆன்மிக அந்தஸ்த்தில் ஆங்கிலம், தமிழ், வடமொழி  என்ற படிகளை நாம் இன்று வகுத்துள்ளோம்.  இந்த மூன்றிலும் ஒரே பொருளில் வருபவைதாம், Renunciation, துறவு,  நிர்வாணம். ஆனால் நான் அவற்றின் பொருளிலும் அந்த அந்தஸ்த்து மறைந்திருப்பத்தாக அவர்களுக்கு விளங்க வைப்பேன்.

1). Renunciationல் வரும் துறவி வாழ்க்கையை  வெறுத்து ஒதுக்குகிறான். இது மிகத்தாழ்ந்த படி. அல்லது அந்தஸ்த்து. அது Rejecting லிருந்து எழுவது. இதில் மனிதன் தனது முழு உணர்வையும் தக்க வைத்துக்கொண்டு செயலாற்ற முயல்கிறான்.  அதாவது கர்மத்தால் வினையை தேடுவதை உணர்ந்தும், விலக்குதல் என்ற கர்மத்தில் தன்னை ஆழ்த்தி தொடர்ந்தும் கர்மவினைகளை தேடுகிறான். உதாரணத்துக்கு., ஒரு மண்டபத்தில் ஆடம்பரமான கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. உடுத்து நடத்தி கனவான்களும் சீமாங்களும் ஒய்யாரமாக வந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.  தெருவால் சென்ற நமது renunciation  துறவி முழு நிர்வாணமாக, மக்கள் தன்னைக் கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அந்த மண்டபம் இருந்த  நகரத்தின் தெருக்களில் அலைந்து திரிகிறான்.  மண்டபத்திலிருந்து வந்த கேளிக்கைகைகளும், பாட்டுக்களுக்குமான ஒலியை கேட்டவுடன்  அந்த மண்டபத்துக்குள் புகுந்துவிடுகிறான். கொண்டாடிக்கொண்டிருப்பவர்களை பார்த்து "பாபவாழிகளே உங்கள் கண்கள் குறுடாகட்டும், எவ்வளவோ கற்றும் இப்படி திமிராக நடந்து கொள்ள உங்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது. இறைவனின் பிரதிபலிப்பான எளிமையையும், இரகத்தையும் மறந்த நீங்கள் என் சொல்லை கேட்காவிட்டால் இறப்பின் பின்  நரகத்திற்குள் விழுவீர்கள் என கூச்சலிடுகிறான்."  

 

2).இன்னொரு கிராமத்தில் நமது தமிழ் பதம் தரும் துறவி வாழ்ந்து வருகிறான்.  தான் உடைகளை துறந்தாலும் வாழ்கையை துறக்க முடியவில்லை என்பது அவன் மனதில் நிழலாடும் வேதனை. சிந்தனையால் கருமாற்றி வினைகளை தேடாமல் இருக்க ஊரின் சுடலைக்கு பக்கத்தில் ஒதுக்கமாக ஒரு மரநிழலின் கீழ் வாழ்கிறான். பகலில், தான்  இரவு போர்த்த கந்தையை கசக்கி காயப்போட்டுவிட்டு ஊரார் கறுமாதி செய்யும் கேணியில் குளித்துவிட்டு தன் தியானத்தில் இறங்குவான். மதியம் கழித்து தான் அந்த கந்தையை உடுத்துகொண்டு தன் அரை நிர்வாண நிலையை சகித்துக்கொள்ளும் குடும்ப பெண்களின் முன்னால் வந்து தண்டிப் பெற்றுகொண்டு சுடுகாட்டுக்கு சென்று சமைத்து உண்பான். சுடுகாட்டுக்கு வருபவர்கள்  போர்வை கொடுத்தாலும் ஏற்காமல் குளிரிலும் மழையிலும் தொடர்ந்து தன் உடம்பை வதைப்பான். இவன் துறந்திருக்கிறான். அது உடம்பை மட்டுமே. அவனுக்கு வாழ்க்கையை துறக்க அடுத்த படி ஏறினால் மட்டுமே முடியும்.

 

3). இப்போது நாம் காணப்போது நிர்வாணி. நமக்கு ஆச்சரியம் அளிக்கத்தக்கதாக நாம் இன்று அவனைக் காணும் போது அவன் குளித்து அழகாக உடுத்து தலை சீவி, காணப்படுகிறான். அந்த ஊரிலே ஒரு தனவந்தார் இருக்கிறார். அவர் தனது தேவைக்காக ஒரு கோவில் வைத்திருக்கிறார்.  அந்த கோவிலில் தான் இந்த நிர்வாணி சிலகாலமாக தங்கியிருந்தான்.  தனவந்தருக்கு அவனின் ஆன்மிக உயர்வைப்  பற்றி கோவில் தொண்டர்களை ஏற்கனவே காதில் போட்டிருந்தார்கள்.  அதனால் அவர் இன்று அவனிடம் உபதேசகம் கேட்கும் ஆர்வத்துடன் குளித்து புது வேட்டி கட்டி, விரதமாக அவனைக்காண வந்திருந்தார். ஆனால் அவன் பல நாள் குளியாமல், கெட்ட நெடி தூரவே வீச பைத்தியக்கரன் மாதிரி எதையோ பேசிக்கொண்டும் இருந்தான்.  பல ஆண்டுகள் சீராக ஒருநாள் தன்னும் உண்ணாததால் வெறும் குச்சிகளும் தண்டுகளாலும் அவன் உடம்பு செய்யப்படிருந்தது . தனவந்தர் தனது வருகையை அறிவித்த போது அவரை அழைத்து வைத்திருந்து தொடர் பில்லாதவை பலவற்றை பற்றி பேசிவிட்டு தனக்கு பசியெடுப்பதாக கூறிகொண்டு இடையில் எழுத்து எங்கோ போய்விட்டான். தொண்டர்கள் வந்து சமாசரத்தை தனவானுக்கு விளங்கப்படுத்த அவர் அவர்களில் ஒருவனை தனது வீட்டு அழைத்து சென்று நல்ல தரமுள்ள ஆடைகளை சிலவற்றை கொடுத்து, அடுத்த முறை தான்  அவனிடம் உபதேசம் கேட்க வரும் போது அவனை நன்றாக கவனித்து இருக்க வேண்டும் என்று கட்டளை போட்டுவிட்டு  தன் வழமையான காரியங்களில் இறங்கிவிட்டார். கோவிலுக்கு திரும்பி வந்த தொண்டன் நமது நிர்வாணி எங்கோ கண்டெடுத்த அழுகிய மாம்பழம் ஒன்றை வைத்து சூப்பிக்கொண்டிருப்பதை கண்டு அதை பறித்து எறிந்து விட்டு, நிர்வாணியை வலோற்காரமாக அழைத்து சென்று நன்றாகக் குளிப்பாட்டி புதிய உடைகளை போட்டு கோவிலில் இருந்த தரமான பிரசாதத்தையும் உண்ண கொடுத்தான்.  அதை சாப்பிட்டுவிட்டு  யாருடனாவது எதையாவது தர்க்கிக்கும் மனத்துடன் நிர்வாணி கோவிலை விட்டு வெளியே வந்தான்.  இந்த நிலையில் வைத்துதான் நாம் அவனை முதல் முதல் காணும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அப்போது  நான்றாக உடுத்திருந்த இரண்டு சிறார்கள் ஒரு மண்டபத்திலிருந்து ஒருவரை ஒருவர் துரத்திப்பிடித்து விளையாடிக்கொண்டு வெளியே ஓடி வந்தார்கள்.  நோக்கம் இல்லாமல் அலைந்து கொண்டிருந்த நிர்வாணி மீதி மோதி ஒரு சிறிசு கீழே விழுந்து காயப்பட்டுப் போகிறது.  எங்கிருந்து வந்தார்கள் சிறுவர்கள், எதுக்கு எங்கே போக வேண்டும் என்ற எந்த  நோக்கம் இல்லாத நிர்வாணி விழுந்த குழந்தையை தூக்கிகொண்டு  உதவி பெற அந்த மண்டபத்துள் நுளைகிறான்.   அங்கே நடந்து கொண்டிருந்த பாட்டிக்காக கடமையில் இருந்த உதவியாளர் பிள்ளையை வாங்கிக்கொண் டு அவனை வெளியே அனுப்ப முயன்ற போது தனது பிளையை காப்பற்றியவரை தனது கணவனுக்கு காட்டவும், மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தவும் அந்த சிறிசின் தாய் உள்ளே அழைத்து செல்கிறாள். அந்த நேரத்தில் பரிதாப உருவத்துடன், கோமாளித்தனமாக நல்ல உடைகளை உடுந்திருந்த மனிதரை வினோதம் பார்த்துக் குசு குசு பேச சில இளம் பெண்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். பெண்கள் குசுகுசுப்பாக பேசுவதையும் கேலியாகச்  சிரிப்பதையும் கேட்ட,  அவர்களுடன் அங்கிருந்த போதகர் ஒருவர் தன் கவனத்தை இந்த புதிய மனிதர் மீது திருப்புகிறார்.  அவர் அந்த மனிதரை அடையாளம் கண்டுகொள்கிறார்.  அந்த போதகர் தான் நமது கோவில்த் தனவந்தரும்.   அவமரியாதையான விடையங்கள் எதாவது நடந்து விடலாம் என்று தனக்குள் தான் பரிதவித்து கொண்டு ஓடிவந்து மற்றவர்கள் அடக்குகிறார். தன்னைத்தான் முன்னிலைப்படுதுகிரார். அப்போது  நொய்மைக இருந்த நமது நிர்வாணியை கைத்தாங்கல் கொடுத்து மேடைக்கு அழைத்து வர தனது அழகிய உதவிகளில் ஒன்றை அமர்த்திவிட்டு தான் மேடையில் முதலில் ஏறி நமது ஆன்மிக சிகரத்தை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய ஆரம்பிக்கிறார். அந்த அழகியின் உதவுடன் நமது நிர்வாணி மேடை ஏறி மக்களுக்கு காட்சி அளிக்கிறார். இப்போதுதான் நாம் அவரை யார் என்று முழுமையாக தெரிந்து கொள்கிறோம்.

 

எதையாவது வெறுத்து ஒதுக்குவதோ அல்லது ஏற்றுக்கொள்வதோ அல்ல ஆன்மீகம். 

 

மேலும்.. நீங்கள் குறிப்பிட்ட பல கதைகள் புதிய பாடத்திட்டத்தில் (நாங்க படிச்சதற்கு அமைய) இருக்கவில்லை. நாயன்மார்கள் வாழ்வுக்கால சம்பங்களைத் தவிர புனை கதைகள் நீக்கப்பட்டு.. சிவாகமம்.. சைவ சித்தாந்தம்.. உபநிடதம் போன்ற விடயங்களே அதிகம் புகட்டப்பட்டன. இவை கடவுளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கவில்லை. மாறாக மனித வாழ்வியல் நெறி பற்றிப் போதித்தன. ஒரு மனிதனின் வெற்றிகரமான வாழ்வு என்பது அந்த மனிதன் தன்னைத் தானே உணர்வதிலும்.... கட்டுப்படுத்தி.. செயற்படுத்தி.. வாழ்வதிலும் தங்கி உள்ளது..! அதை அவை போதிக்கின்றன. அது மாணவர்களுக்கு அவசியமான ஒன்றும் கூட..!

 

நாங்கள் சைவர்கள். இந்துக்கள் அல்ல..! அதனால் தான் என்னவோ.. நாங்கள் சிங்கள பெளத்தர்களால் அழிக்கப்பட்ட போதும் இந்திய ஆரிய வகைப்படுத்தல் இந்துக்கள் வேடிக்கை பார்த்தார்கள்..! இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவா பி ஜே பி எமக்காகக் குரல் கொடுப்பதில்லை. சிங்கள பெளத்தர்களுக்கு அது அதிகம் குரல்கொடுக்கிறது..! எம்மைப் போலவே தமிழக மக்களும் சைவர்கள்..! அதனால் தான் அவர்கள் எமக்காக தமிழர்கள் என்பதற்கு அப்பாலும் அக்கறை காட்ட விளைகின்றனர்..! :):icon_idea:

மொகச்சதாரோ ஹரப்பாவில் எழுச்சி பெற்றிருந்தது.. சைவமே தவிர இந்து அல்ல. இந்து என்பது பின்னாளில் இயற்றப்பெற்ற ஒன்று..! சைவமே பழமையானது. தமிழர்களின் இறை நம்பிக்கையில் அதிக காலம் அவர்களோடு இருந்து வருவது..! :icon_idea:

சைவம் இப்படியான தம்பதி பூஜை ஆட்டிக்குட்டி பூஜை இவற்றை வலியுறுத்துவது இல்லை..! நாங்க இது குறித்து இதுவரை படித்த சைவ நூல்களில் எங்கும் இது பற்றி அறிந்திருக்கவில்லை..! ஆனால் வட இந்திய இந்துக்களிடம் இந்த மூட நம்பிக்கைகள் அதிகம் பதிந்து கிடக்கின்றன. அவர்கள் உண்மையான சைவர்களாகவும் இல்லை. இந்துக்களாகவும் இல்லை..! :)

 

நான் குறிப்பிடிருந்தது தமிழ்க் கதைகளை மட்டுமே. ஆன்மீக ரீதியாக  சைவ மதம், இந்து மதம் என்று இரண்டு இல்லை. சைவ சிந்தாந்தங்கள் சமரச சன்மார்க்கத்தைத்தான் போதிப்பன. எனவே நீங்கள் சொல்லும் இரண்டு பிரிவுகள் சரித்திர ரீதியாக இருந்தாலும் அவற்றின் அடிப்படைப் பேதங்களை சைவ சமயம் ஏற்றுக்கொள்ளாது.  நீங்கள் விவாதிப்பதற்கு சமயம், சரித்திரம், அரசியல் என்ற மூன்றையும் ஒன்றாக எடுக்கிறீர்கள். அவை தனித்தனி தலைப்புகளின் கீழ் எடுக்கப்படவேண்டியவை. (திரி பேசாப் பொருளில் இருந்தாலும் எல்லாவற்றையும் கலப்பதால் தெளிவு பிறக்காது) அதாலால் நான் சரித்திரம், அரசியல் இரண்டிற்குள்ளும் இந்தத் தடவை போகவில்லை.

 

ஐயரைக் காப்பாற்றி விட்டமாதிரி தெரியுது.. :unsure: நீங்கள் எந்தக் கோயில் ஐயர் மல்லை?? :D

 

எல்லாக் கோவிலும்தான். அடுத்த முறை ஐயரைக் குத்தமட்டும் என்று கோவிலிற்கு போனால் அங்கு ஒரு பொடிகாட்டும் நிற்பார் கவனம். :D

 ஐயர்  என்று சொல்லக்கூடாது

ஐயா  என்று சொல்லணும்

(சிறு பிள்ளையை  மன்னித்தருள்ள ஐயா :D )

அத்தோடு இந்த முறை உங்களிடம் சொல்ல கருத்தில்லாமல் எழுத வந்ததையும் மன்னிக்கிறேன். :D

விடுங்கோ இசையண்ணா..மல்லைக்கு நான் யாழில் கருத்து எழுதினால் நீண்ட காலமாக அலர்ஜியாகத் தான் இருக்கு...எப்போதும்  நான் ஏதாச்சும் எழுதிட்டு போனால் எடுத்து வைச்சு ஒப்பிறேசன் செய்வது தான் வேலை..இதை நான் பிரச்சனையாக்குவதற்காக சொல்ல வர இல்லை..தொடர்ந்து கவனியுங்கள்....

 

அது உங்கள் அப்பிராயம். வேறும்  எதும் அந்த ஐயரைப்பற்றி உண்மையாக இருந்தாலும், இப்போது நீங்கள் ஏன் அந்த ஐரோடும் காய்கிறீர்கள் என்பது விளங்குமாப்போல் இருக்கிறது. :D

 

Link to comment
Share on other sites

&nbsp;

இந்த பழமொழியும் &nbsp;நல்லாத்தான் இருக்கு.... :D&nbsp; :D

&nbsp;

சிறிலங்கள் ஆமியிடம் இருந்து தெரிந்து வைத்திருப்பது அது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

&nbsp;

&nbsp;

சிறிலங்கள் ஆமியிடம் இருந்து தெரிந்து வைத்திருப்பது அது. :D

 

 

 

அத்தோடு இந்த முறை உங்களிடம் சொல்ல கருத்தில்லாமல் எழுத வந்ததையும் மன்னிக்கிறேன். :D

 

ராசா

காலைக்காட்டுங்கோ

நான் இந்த விளையாட்டுக்கு வரல...  :lol:   :D   :D

Link to comment
Share on other sites

 

 

ராசா

காலைக்காட்டுங்கோ

நான் இந்த விளையாட்டுக்கு வரல...  :lol:   :D   :D

 

 

பயப்படாமல் விழலாம், அநியாயம் செய்யமாட்டேன். நான் யாயினி பார்த்த ஐயர்  இல்லை. இசை மேடை ஏற்றிவைத்த ஆள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயப்படாமல் விழலாம், அநியாயம் செய்யமாட்டேன். நான் யாயினி பார்த்த ஐயர்  இல்லை. இசை மேடை ஏற்றிவைத்த ஆள். :lol:

 

தெரிந்தபடியால் தானே எழுதினேன்... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தியுள்ள மனிதர்களை நயத்தாலும், புத்தி குறைந்தவர்களைப் பயத்தாலும் தாம்பத்தியத்தில், இணைத்து வைப்பது சமுதாய வழக்கம்! :o

 

நான் பிறந்த இனத்தில், இவ்வளவு மடையர்கள் (அதுவும் புலத்தில்) இருக்கிறார்கள் என்பதை நினைக்க, மிகவும் கவலையாக உள்ளது!

 

நாதமுனியின் கருத்துடன் (கண்ணதாசனின் வரிகள்) , நூறு வீதம் உடன்படுகின்றேன்!

 

வடிவா யோசிச்சுச் சொல்லுங்கோ நீங்கள் ஒருநாளும் போகேல்லைத் தானே புங்கை. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வரவர மல்லைக்கு என்னவோ நடந்துபோச்சு. நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட பிரசங்கம் அல்லது கட்டுரை. எதுக்கும் ஒருக்கா நீங்கள் .........போய்ப் பாருங்கோ மல்லை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஓகே எல்லாம் சரி,
 
வியாபாரத்தை கவனிப்போம் வாருங்கோ,
 
லண்டனில, நல்ல இடம் ஒண்டு இருக்குது. ஒரு நல்ல கோயில் வைக்க அருமையான இடம். பக்கத்தில பர்ர்கிங் வசதியும் இருக்கு.
 
ஆத்தங்கரை ஓரமா இருகிறதால  சும்மா தீர்த்தம், அது இது எண்டு துட்டுப் பார்கலாம்.
 
எல்லாத்துக்கும் முக்கியமா, ஐயா ரெடி. மகனும் இந்தியா போய் மந்திரம் படிச்சு வந்திருக்கிறார்.
 
காசு கொஞ்சும் முதல் போடுற ஆக்கள், ஓடி வாருங்கோ, நல்ல வட்டியோட ஒரு வருசத்துக்குள திருப்பி தரலாம். மேலும் தலைவர், தனாதிகாரி மாதிரி போஸ்டுகளும் எடுத்துக் கொள்ளலாம்.
 
ஆரும் விருப்பம் எண்டால் கெதியாய் சொல்லுங்கோ. இங்கை ஆரோ நிழலியானந்த சுவாமிகள் பத்தி கதைச்சினம்.
 
முந்தி விடுவாரோ எண்டு பயம் பாருங்கோ!!! 
 
Link to comment
Share on other sites

நானும் யோசிச்சனாந்தான். எதுக்கும் வீட்டுக்குப்பக்கத்து கோயில் ஐயரை ஒருக்கால் போய் பார்க்கலாமோ என்று நினைத்தேன். ஆனால் இசையின் கருத்தைக் கேட்ட பிறகு கண்ணாடி ஒன்று வாங்கும் பிளான். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓகே எல்லாம் சரி,
 
வியாபாரத்தை கவனிப்போம் வாருங்கோ,
 
லண்டனில, நல்ல இடம் ஒண்டு இருக்குது. ஒரு நாள் கோயில் வைக்க அருமையான இடம். பக்கத்தில பர்ர்கிங் வசதியும் இருக்கு.
 
ஆத்தங்கரை ஓரமா இருகிறதால  சும்மா தீர்த்தம், அது இது எண்டு துட்டுப் பார்கலாம்.
 
எல்லாத்துக்கும் முக்கியமா, ஐயா ரெடி. மகனும் இந்தியா பொய் மந்திரம் படிச்சு வந்திருக்கிறார்.
 
காசு கொஞ்சும் முதல் போடுற ஆக்கள், ஓடி வாருங்கோ, நல்ல வட்டியோட ஒரு வருசத்துக்குள திருப்பி தரலாம். மேலும் தலைவர், தனாதிகாரி மாதிரி போஸ்டுகளும் எடுத்துக் கொள்ளலாம்.
 
ஆரும் விருப்பம் எண்டால் கெதியாய் சொல்லுங்கோ. இங்கை ஆரோ நிழலியானந்த சுவாமிகள் பத்தி கதைச்சினம்.
 
முந்தி விடுவாரோ எண்டு பயம் பாருங்கோ!!! 

 

 

என் காலில்தான்  விழுவேண்டும்

ஓகேயா??? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் காலில்தான்  விழுவேண்டும்

ஓகேயா??? :D

 

அப்படி போடுங்க அரிவாளை விசுகர்,
 
இது வியாபார உலகம். எதை வைத்து காசு பார்க்கலாம் என்று அறிந்து சந்தை படுத்தி காசு பார்க்கும் வியாபாரிகள் போல் கோவில் வைப்பவர்கள் செயல் படுகின்றனர்.
 
அவர்கள் ஒரு சேவையினை வழங்குகின்றனர். விருப்பமானவர்கள் வாங்குகின்றனர். சேவைக்கு ஒரு விலையினை நிர்ணயித்து வழங்குகின்றனர்.
 
இதில் நாம் சொல்ல என்ன இருக்கு. லண்டனில் மட்டும் குறைந்தது 40 கோவில்கள்.
 
சாராயக் கடையில் தண்ணி விற்கிறார்கள். போய்   அடிக்கின்றோம்.
 
அதற்காக வியாபாரம் செய்பவர்களையும், தண்ணி வார்பவர்களையும் தண்ணி அடிக்காதவர்கள் திட்டி என்ன நடக்கப் போகிறது?
 
எந்த ஊர் நியாயம் ஐயா?
 
சட்டத்துக்கு உட்பட வரையில் எந்த 'வியாபாரமும்' சரியானதுதான் என்பது நம்ம நியாயம்.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி எழுதியிருப்பதை வாசித்துவிட்டு பச்சை போடலாமா என்று யோசித்தால், அது பகிடி என்று உறுதியா சொல்ல முடியேல்ல.. :(:D

 

கோவில் விடயத்திலும் யாராவது பகிடி விடுவார்களா???

 
பிரச்சாரத்தை முன்னெடுத்து தாம்பத்திய பூசையை கோவிலில்  தொடக்கிவிட்டு.........
வீடியோ கமராவுடன் போக வேண்டுயதுதான் பாக்கி என்று நான் பெரிய திட்டமே போட்டுகொண்டு இருக்கிறேன்.
நீங்கள் இதை பகிடி என்கிறீர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் விட்டுவிட்டுப் பேசாமல் அல்லாஹ்வின் பின்னால் செல்லலாமோ

எனத் தோன்றுகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் விட்டுவிட்டுப் பேசாமல் அல்லாஹ்வின் பின்னால் செல்லலாமோ

எனத் தோன்றுகின்றது.

 

அல்லாவுக்கு பின்னாலை போறதெண்டால் அங்கை பாக்குவெட்டிக்குத்தான் முதல் வேலை எண்டது வாத்தியாருக்கு தெரியாமல் இருக்காது.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாவுக்கு பின்னாலை போறதெண்டால் அங்கை பாக்குவெட்டிக்குத்தான் முதல் வேலை எண்டது வாத்தியாருக்கு தெரியாமல் இருக்காது.. :icon_mrgreen:

 

எப்பவும்... வாள், உறையுக்குள் இருந்தால்.... தான், கூர் மழுங்காமல் இருக்கும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாவுக்கு பின்னாலை போறதெண்டால் அங்கை பாக்குவெட்டிக்குத்தான் முதல் வேலை எண்டது வாத்தியாருக்கு தெரியாமல் இருக்காது.. :icon_mrgreen:

 

பிறகென்ன, வாத்தியார், 'முக்கால் வாத்தியார்' எண்டு பேரை மாத்திப் போடுவம்!!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும்... வாள், உறையுக்குள் இருந்தால்.... தான், கூர் மழுங்காமல் இருக்கும். :icon_idea:

 

வாள் எண்டால் வெளியால வந்து கூர் மழுங்க வேண்டும்.
 
இல்லை எண்டால் வாள் இருந்தென்ன, இல்லா விட்டால் என்ன.
 
வெட்டு வாங்கி உறையிளிருந்து, வெளியில எறிபடுறது நல்லது.  :o
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.