Jump to content

Recommended Posts

ஆலாபனையொன்றின்

சிதைவுகளிலிருந்து  எழுகின்றது

சீரான முனகல் ஒலியொன்று

இன்றைய  பொழுதுகளில்,

 

கரிய இருளூடு

அந்தரித்தலையும் மெல்லிய

வெண்மையொன்றை போல,

 

நீண்ட அமைதிகளை

ஊடறுத்து ஒலித்தோயும்

தெருநாயொன்றின் ஊளையைப்போல,

 

வைகறையொன்றை நோக்கி

தவமிருக்கும் ஒரு

பறவையின் பசியைப்போல,

 

நிகழ்த்திப்போகிறது

உணர்த்தமுடியாத

எதோ ஒன்றை,

 

 மதர்த்தெழும் அடுத்தடுத்த பொழுதுகளில்

எழும் அச்சங்களை

தொலைக்கும் அபயகரமொன்றின்

ஓங்கார ஒலியை

 

தடுக்கமுடியாத

ஊனங்களை  கடக்கும்

யாதார்த்த கணங்களில்

தேவகணங்களின் ஆதரவுப்பார்வைகளை,

 

எதிர்பார்த்து கிடக்கிறது

ஒலி எழுப்பிய அந்த சிதைவுகள்.

இருந்தபோதும்....................

 

ஆலாபனைகளூடான

நீடிக்கும் அந்த ஒலிமட்டும்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது

எல்லாவற்றையும் மீறி........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை கனக்கிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகறையொன்றை நோக்கி

தவமிருக்கும் ஒரு

பறவையின் பசியைப்போல,

 

 உவமானங்களும், உவமேயங்களும் உங்கள் கவிதைகளில், அழகாக விளையாடுகின்றன!

 

நேரம் கிடைக்கும் போதெல்லாம், கவியுங்கள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனக்கிறது இதயம்

கல்லையும் கனியவைக்கும்வரிகள்

 

தர்மம் நிச்சயம்  பாதை திறக்கும்

காத்திருந்தால் போதாது

கை கொடுக்கணும்...

 

நன்றி  கவிக்கு

தொடர்ந்து படையுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை, தொடர்ந்து எழுதுங்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யப்பா..மூச்சு முட்டுது..என்ன கனமான மொழியாழ்கை ஜயா...அருமை..


நம்பிக்கைதானே வாழ்க்கையாகிப்போன இனமாகிவிட்டோம்..எல்லாவற்றிலும்..

Link to comment
Share on other sites

நல்ல கவிதைபோல் தெரிகிறது.. :huh:   ஆனால் எனக்கு கவிதை விளக்கம் ரொம்பக் கம்மி..  :unsure:  இதன் கருப்பொருள் என்னவென்று யாராவது உரைக்க முடியுமா? :rolleyes:

Link to comment
Share on other sites

நல்ல கவிதைபோல் தெரிகிறது.. :huh:   ஆனால் எனக்கு கவிதை விளக்கம் ரொம்பக் கம்மி..  :unsure:  இதன் கருப்பொருள் என்னவென்று யாராவது உரைக்க முடியுமா? :rolleyes:

கருத்திட்ட எல்லோருக்கும் எனது அன்புகலந்த நன்றிகள்.

 

இசை அண்ணா, 

      நானும் காத்திருக்கிறேன். பொதுவாக ஒரு படைப்பை எழுதியவரின் மனநிலைக்கும் அந்த படைப்பின்  பொருள் கொள்வோர் மனநினைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். 

ஒவ்வொருவர் பார்வையிலும் வித்தியாசமான கருநிலைகள் உருவாகலாம்.

கருத்திடுங்கள்  ஆவலாய் உள்ளேன்.இது ஒரு சுய பரிசோதனையாக அமையட்டும் எனக்கும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.