Jump to content

மூளை நல்லா வேலை செய்யணுமா? ஓட்ஸ் சாப்பிடுங்கள்


Recommended Posts

ஓட்ஸ்யில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. இதில் இயற்கை இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு மிகவும் நல்லது.

இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்பை  உறிஞ்சி வெளியேற்றுகிறது.

மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒழுங்கு செய்வதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது.

ஓட்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய உதவுகிறது. பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. மேலும் உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.

மனித மூளையில் உள்ள விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு சரிவரச் செயல்பட்டால் போதும். ஆண்மைக்குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படாது. அதற்கு எளிய மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று San francisco (USA) வில் உள்ள ‘அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி’ என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. ‘லிபிடோ’ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கிவிடுகிறது. எதிர் காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஓட்ஸ் இந்தக் குறையை மிக எளிதாக நிறைவு செய்துவிடுகிறது.

தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வருவதை தவிர்க்கலாம். மேலும்,  உடலில் உள்ள தேவையில்லாத கொலஸ்ட்ராலை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு நமது மூளையின் நரம்புகளை திடப்படுத்தி மூளை நன்றாக செயல்பட உதவும்

 

http://www.sinthikkavum.net/2013/02/blog-post_5291.html

Link to comment
Share on other sites

நன்றி வந்தியதேவன்

 

சிறந்த இலகுவான காலை உணவு(10 நிமிடங்கள் போதும்). ஓட்ஸ் அவித்து (வேணுமானால் பாலும் சேர்க்கலாம்) , walnuts உம் தேனும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

 
walnuts ,தேனுக்கு பதிலாக வாழைபழமோ  அல்லது grapes ஒ சேர்க்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித மூளையில் உள்ள விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு சரிவரச் செயல்பட்டால் போதும். ஆண்மைக்குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படாது. அதற்கு எளிய மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று San francisco (USA) வில் உள்ள ‘அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி’ என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. ‘லிபிடோ’ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கிவிடுகிறது. எதிர் காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஓட்ஸ் இந்தக் குறையை மிக எளிதாக நிறைவு செய்துவிடுகிறது.

 

http://www.sinthikkavum.net/2013/02/blog-post_5291.html

 

ஓட்ஸ்க்கும் குதிரைக்கும் நல்ல பொருத்தம் போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வருவதை தவிர்க்கலாம். மேலும்,  உடலில் உள்ள தேவையில்லாத கொலஸ்ட்ராலை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு நமது மூளையின் நரம்புகளை திடப்படுத்தி மூளை நன்றாக செயல்பட உதவும்

 

http://www.sinthikkavum.net/2013/02/blog-post_5291.html

 

தினமும் சாப்பிடலாம் தான்...ஆனால் பலரும் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து, சாப்பாட்டுக்கே அல்லலுருகையில், 'யார்' இதை தயாரித்துக் கொடுப்பர்? smiley1674.gif:lol:

 

பயனுள்ள செய்திக்கு, நன்றி வந்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மூன்று மாதங்களாக எனது காலை உணவு ஓட்ஸ்,சியா விதை சேர்ந்த கஞ்சிதான். நோய்கள் இல்லைத்தான். ஆனால் அதிகமாகப் பசி எடுக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மூன்று மாதங்களாக எனது காலை உணவு ஓட்ஸ்,சியா விதை சேர்ந்த கஞ்சிதான். நோய்கள் இல்லைத்தான். ஆனால் அதிகமாகப் பசி எடுக்கிறது.

 

மூளையில ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிற 'சிலமன்' உண்டா என அறிய ஆவல்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்ஸ் மிகவும் நல்ல  உணவுதான் ! நான் இருக்குமிடத்தில் கிடைப்பதில்லை. நான் பரிசுக்குப் போய் வரும்போது நிறைய வாங்கி வருவதுண்டு !!

Link to comment
Share on other sites

ஐயோ முதலில் ஓட்ஸ் என்றால் என்னங்க ............மூழை இல்லாதவனின் ஆதங்கம் ............ :D  :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ முதலில் ஓட்ஸ் என்றால் என்னங்க ............மூழை இல்லாதவனின் ஆதங்கம் ............ :D  :D  :D 

நசுக்கப் பட்ட கோதுமை!

 

மூளையைப் பற்றி என்னால் அபிப்பிராயம் கூற முடியாது, ஏனெனில் வட இந்தியர் சாப்பிடுறது முழுக்கக் கோதுமைச் சப்பாத்தி தான்! :o

 

lowan_rolled_oats.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நசுக்கப் பட்ட கோதுமை!

 

மூளையைப் பற்றி என்னால் அபிப்பிராயம் கூற முடியாது, ஏனெனில் வட இந்தியர் சாப்பிடுறது முழுக்கக் கோதுமைச் சப்பாத்தி தான்! :o

 

lowan_rolled_oats.gif

:D  :D  :icon_idea: இப்பிடி ஒண்டு இருக்கிறது இண்டைக்குத்தான் தெரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நசுக்கப் பட்ட கோதுமை!

 

 

ஐயோ ஐயோ, அண்ணை உங்களை நான் ஒரு வல்லவர் நல்லவர் அறிஞர் ...................இப்படி எல்லாம் யோசித்து, யாசித்து இருக்க இப்படி மோசமாய் போனீர்களே? -வேற ஆக்கள் எழுத முந்தி எழுதுவம்- :rolleyes:

ஓட்ஸ் க்கும் கோதுமைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இரண்டும் தானியம் என்கிற ஒற்றுமையை தவிர. சில பேர் அதிலிலும் ஒற்றை இரட்டை பிடிக்கிறார்கள், ஓட்ஸ் ஒரு ஒழுங்கான தானியம் அல்ல, அது ஒரு பருப்பு/ கடலை, வகையை சார்ந்தது என்று.

ஓட்ஸ் பல காலம் குதிரை உணவாகத்தான் பயன்படுத்தபட்டது.  இப்ப சில வருடங்கள் ஆகத்தான் அதை மனிதர்களும்- கொழுப்பு கூடின, மனிதர்களும் உண்ணுகிறார்கள்.இது மனித உடலில் கொழுப்பின் கட்டமைப்பை மேம்படுத்திகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுவதால். 

ஆனால் இது ஒரு சுவையான உணவு. காலமைக்கு திறமான உணவு. இதனுடன் கொஞ்சம் சீனியும்,-மருத்துவ காரணத்திகாக சாப்பிடுபவர்கள் யோசிக்க வேண்டும், திராட்சை வத்தலும்,கருவா பவுடரும் போட்டால் கலக்கும். ஒரே ஒரு பிரச்சனை இதனுடன் சேர்த்து கோப்பி குடிக்க முடியாது. சோறு சாப்பிட்டு விட்டு கோப்பி குடிக்கிறது போல இருக்கும்.

நன்றி வணக்கம்.

-புங்கை ஊரன் பகிடிக்குத்தான் எழுதியது. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ, அண்ணை உங்களை நான் ஒரு வல்லவர் நல்லவர் அறிஞர் ...................இப்படி எல்லாம் யோசித்து, யாசித்து இருக்க இப்படி மோசமாய் போனீர்களே? -வேற ஆக்கள் எழுத முந்தி எழுதுவம்- :rolleyes:

ஓட்ஸ் க்கும் கோதுமைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இரண்டும் தானியம் என்கிற ஒற்றுமையை தவிர. சில பேர் அதிலிலும் ஒற்றை இரட்டை பிடிக்கிறார்கள், ஓட்ஸ் ஒரு ஒழுங்கான தானியம் அல்ல, அது ஒரு பருப்பு/ கடலை, வகையை சார்ந்தது என்று.

ஓட்ஸ் பல காலம் குதிரை உணவாகத்தான் பயன்படுத்தபட்டது.  இப்ப சில வருடங்கள் ஆகத்தான் அதை மனிதர்களும்- கொழுப்பு கூடின, மனிதர்களும் உண்ணுகிறார்கள்.இது மனித உடலில் கொழுப்பின் கட்டமைப்பை மேம்படுத்திகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுவதால். 

ஆனால் இது ஒரு சுவையான உணவு. காலமைக்கு திறமான உணவு. இதனுடன் கொஞ்சம் சீனியும்,-மருத்துவ காரணத்திகாக சாப்பிடுபவர்கள் யோசிக்க வேண்டும், திராட்சை வத்தலும்,கருவா பவுடரும் போட்டால் கலக்கும். ஒரே ஒரு பிரச்சனை இதனுடன் சேர்த்து கோப்பி குடிக்க முடியாது. சோறு சாப்பிட்டு விட்டு கோப்பி குடிக்கிறது போல இருக்கும்.

நன்றி வணக்கம்.

-புங்கை ஊரன் பகிடிக்குத்தான் எழுதியது. :icon_mrgreen:

நானும் அப்பிடித்தான், இவ்வளவு நானும், நினைச்சிருந்தேன், வொல்கனோ!

 

நீங்கள் சொல்லுறது சரி போல கிடக்கு!

 

நான் அவதானிச்ச படி, குதிரையள் கொஞ்சம் சில மனிசர்களை விட மூளை கூடின சாமானுகள் தான்! :icon_idea:  

Link to comment
Share on other sites

ஓட்ஸ்யில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. இதில் இயற்கை இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு மிகவும் நல்லது.

இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்பை  உறிஞ்சி வெளியேற்றுகிறது.

மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒழுங்கு செய்வதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது.

ஓட்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய உதவுகிறது. பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. மேலும் உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.

மனித மூளையில் உள்ள விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு சரிவரச் செயல்பட்டால் போதும். ஆண்மைக்குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படாது. அதற்கு எளிய மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று San francisco (USA) வில் உள்ள ‘அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி’ என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. ‘லிபிடோ’ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கிவிடுகிறது. எதிர் காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஓட்ஸ் இந்தக் குறையை மிக எளிதாக நிறைவு செய்துவிடுகிறது.

தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வருவதை தவிர்க்கலாம். மேலும்,  உடலில் உள்ள தேவையில்லாத கொலஸ்ட்ராலை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு நமது மூளையின் நரம்புகளை திடப்படுத்தி மூளை நன்றாக செயல்பட உதவும்

 

http://www.sinthikkavum.net/2013/02/blog-post_5291.html

 

நீங்கள் கட்டாயம் சாப்பிடவேண்டியது! :lol:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ முதலில் ஓட்ஸ் என்றால் என்னங்க ............மூழை இல்லாதவனின் ஆதங்கம் ............ :D  :D  :D 

 

haferflocken.jpg

Hafer flocken என்று, ஜேர்மன் பாசையில் சொல்வார்கள் தமிழ்ச் சூரியன்.

அநேகமான சுப்பர் மாக்கற் கடைகளில் வாங்கலாம். :)

Link to comment
Share on other sites

ஓட்ஸ் கனகாலமாகவே மனிதர் உண்கிறார்கள் வல்கனோ.
 
நாங்கள் சின்ன ஆக்களாக இருக்கேகுள்ளயே யாழ்ப்பாணத்தில குவக்கர் ஓட்ஸ் என்ற அமெரிக்க ஓட்ஸ் டின்களில் வந்தது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

img_9772.jpg

 

ஆம்.. எனக்கு அம்மா சின்னனில.. ஒட்ஸ் தீத்தின ஞாபகம் இருக்குது. பவுடராவும் வரும். தேன் மற்றும்... சுடுநீர் விட்டு குழைத்து.. கையால தொட்டுப் பார்த்து சுடுகுதோ இல்லையோ என்று.. அப்புறம்.. கரண்டியால் தீத்திறவா. நல்ல ஞாபகம் இருக்குது. அதை ஒரு வாய் எடுத்திட்டு.. அம்மாவின் கால்களைச் சுற்றி சேலைத் தலைப்பை இழுத்துக் கொண்டு ஓடி.... அப்புறம்.. சாப்பிட்டு முடிய.. மீண்டும் மறுவழமாக..ஓடி வந்து.. வாயை ஆவென்று பிடிச்சு.. வாங்கிச்.. சாப்பிட்டிருக்கிறன். என்ன ஒரு இனிமையான காலங்கள் அவை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

img_9772.jpg

 

ஆம்.. எனக்கு அம்மா சின்னனில.. ஒட்ஸ் தீத்தின ஞாபகம் இருக்குது. பவுடராவும் வரும். தேன் மற்றும்... சுடுநீர் விட்டு குழைத்து.. கையால தொட்டுப் பார்த்து சுடுகுதோ இல்லையோ என்று.. அப்புறம்.. கரண்டியால் தீத்திறவா. நல்ல ஞாபகம் இருக்குது. அதை ஒரு வாய் எடுத்திட்டு.. அம்மாவின் கால்களைச் சுற்றி சேலைத் தலைப்பை இழுத்துக் கொண்டு ஓடி.... அப்புறம்.. சாப்பிட்டு முடிய.. மீண்டும் மறுவழமாக..ஓடி வந்து.. வாயை ஆவென்று பிடிச்சு.. வாங்கிச்.. சாப்பிட்டிருக்கிறன். என்ன ஒரு இனிமையான காலங்கள் அவை. :lol:

அப்ப, மூளை விசயம் உண்மை போலத் தான் கிடக்கு! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூளையில ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிற 'சிலமன்' உண்டா என அறிய ஆவல்! :icon_idea:

 

மூளை மட்டும் அப்பிடியே இருக்கு. ம் ....... :icon_idea:

 

இது கடலை வகை இல்லை வொல்கானோ தானியம்தான். கோதுகூட தங்க நிறத்தில்  இருக்கும். கிட்டத்தட்ட கோதுமை போலவே இருக்கும்.

Link to comment
Share on other sites

இது குதிரைக்கு வைக்கும் கொள்ளு வகையைச் சார்ந்த்தது.  காலையில் ஓட்ஸ் சாப்பிடுவது உடலிற்கு நல்லது. குடலில் எஞ்சியுள்ள கொழுப்புகளை அகற்ற உதவும் என்று கூறுகிறார்கள்.  

இதனுடன் கொஞ்சம் தவிடும் (wheat bran)  பழங்களும், கொழுப்புக் குறைந்த பால் அல்லது தயிருடன் சேர்த்துச் சாப்பிடுவேன்.

Link to comment
Share on other sites

இது குதிரைக்கு வைக்கும் கொள்ளு வகையைச் சார்ந்த்தது.  காலையில் ஓட்ஸ் சாப்பிடுவது உடலிற்கு நல்லது. குடலில் எஞ்சியுள்ள கொழுப்புகளை அகற்ற உதவும் என்று கூறுகிறார்கள்.  

இதனுடன் கொஞ்சம் தவிடும் (wheat bran)  பழங்களும், கொழுப்புக் குறைந்த பால் அல்லது தயிருடன் சேர்த்துச் சாப்பிடுவேன்.

 

தப்பிலியின் காலை உணவுக் காட்சி.. :D

 

care-and-feeding-bull-eating-300x208.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலியின் காலை உணவுக் காட்சி.. :D

 

care-and-feeding-bull-eating-300x208.jpg

எங்கேயோ போய் நல்லா மேய்ஞ்சு போட்டு வந்திருக்கிறார்......... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறவுகள் கன பேருக்கு தெரிகிற படியால்  இதுக்கும் மூளைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கோ என்று ஆராச்சி செய்யத்தான் வேணும். 3J உடன் ஓட்ஸ் இணைகிறது போல இருக்கிறது.

மற்றது; இது முதலே இருக்கு.உண்மைதான். கொஞ்ச ஆக்கள் சாப்பிட்டும் இருப்பினம்- அமெரிக்காவின் குதிரையின் மூளையாவது எங்கட பிள்ளைகளுக்கு /செல்வங்களுக்கு வராதோ என்று நினைத்து, ஆனால் பெரிய அளவில் சாப்பிட வெளிக்கிட்டது 1990 களுக்கு பிற்பாடுதான். இரண்டு வருடத்துக்கு முந்திய தகவல்- இன்னும் இது இதய வியாதிகளை நேரடியாக குறைப்பதாக சான்றுகள் இல்லை. இது நல்ல HDL கொலஸ்ட்ரோல்ஐ கூட்டுது என்று கண்டு பிடித்துள்ளார்கள் ஆனால் அப்படி கூடிய HDI இதயத்தை பாதுகாக்கிறது என்று நிரூபிக்கபடவில்லை.-"சுகம் வரும் ஆள் தப்பாது என்கிறது போல"

After reports of research finding that dietary oats can help lower cholesterol,[11] an "oat bran craze" swept the U.S. in the late 1980s, peaking in 1989, when potato chips with added oat bran were marketed. The food fad was short-lived and faded by the early 1990s. The popularity of oatmeal and other oat products again increased after a January 1998 decision by the Food and Drug Administration (FDA), when it issued a final rule that allows food companies to make health claims on food labels of foods that contain soluble fibre from whole oats (oat bran, oat flour and rolled oats), noting that 3.0 grams of soluble fibre daily from these foods may reduce the risk of heart disease.

அண்மையில் இலங்கை சென்ற போது உறவினர் ஒருவருக்கு "எடை" குறைப்பதற்காக  இதை ஒரு வைத்தியர் கொடுத்திருந்தார். -அவருக்கு வேற ஒரு பிரச்சனையும் இல்லை. அவரும் ஒரு டின் பால் பேணியளவு ஓட்ஸ் வாங்கி ஒரு மாதமாய் சாப்பிட்டு கொண்டு இருந்தார் :rolleyes: . அது அங்கே 400 ஒ 500 ரூபா.  

ஒன்றில் ஒதோ ஒன்று இருக்கு என்று ஏதாவது ஒரு வழியில் கேள்விபட்டால் அதை பிரிச்சு மேய்கிறதில் யாழ்ப்பாண மூதாட்டிக்கும் சிரேஷ்ட வைத்திய வைத்திய நிபுணருக்கும் ஒரு வித்தியாசமும்  இல்லை என்பதர்ற்கு இது நல்ல உதாரணம்.

வாழ்த்துகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கொஞ்சநாள் உதை சாப்பிட்டு பாத்தனான் தான்....மூளைக்கு பெரிசாய் பலன் தெரியேல்லை.....அனால் வயிறு நல்ல விறீடமாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.