Jump to content

அவள் பெயர் இளவரசி...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

jewess.jpg

 

 

அமுதா.. எணேய் பிள்ளை எழும்பணை ராசாத்தி பள்ளிக்குடத்துக்குப் போகவேணுமெல்லே இன்னும் என்ன படுக்கை வேண்டிக்கிடக்கு, கெதியா எழும்பணை.
ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்ம்.. காலங்காத்தாலையே புலம்ப ஆரம்பிச்சிட்டியேம்மா, போங்கோ போய் அப்பாவை வரச் சொல்லுங்கோ எப்ப உங்கண்டை முகத்திலை முழிச்சனான் இண்டைக்கு புதுசா எழும்ப .. அப்பாவை வரச்சொல்லணை.
எத்தனை நாளைக்குத்தான் இப்படி அப்பா முகத்திலை முழிக்கப் போறியோ, குமரா விட்டாய் கலியாணம் கட்டி போற இடத்திலை என்ன பாடுபடப்போறியோ... என்னங்க, உங்கண்டை ஆசை மகள் கூப்பிடுறாள் போங்கோ நான் ஏதும் சாப்பாடு தேடவேணும், பாவம் அவள் பசி இருக்க மாட்டாள், அப்படியே உவன் மதனையும் எழுப்பி விடுங்கோ பள்ளிக்குடம் போற பஞ்சியிலை படுத்திருக்கிறான்.

கணபதிப்பிள்ளை,சரஸ்வதியின் மூத்த மகள் அமுதா,இளையவன் மதன். பத்து பிள்ளை பெத்தாலும் பார்க்க வசதியிருந்தாலும், நாமிருவர் நமக்கிருவர் என்பதற்கிணங்க ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்றென்று பெற்ற பிள்ளைகள்.
கணபதிப்பிள்ளையர் போஸ்ட்மாஸ்டரா இருந்ததாலையும் கனக்க நிலபுலன்கள் இருந்ததாலையும் தறையளைக் குத்ததைக்கு விட்டும், வளவுக்குள்ளை இருந்த தென்னை,மாமரம்,தேசிக்காய் என்று எல்லாத்தாலையும் வருவாய்க்கு குறைவில்லை, அதே போல ஊருக்கு உதவி செய்வதிலையும் வஞ்சகமில்லாதவர்கள். அமுதா உயர்தரமும், மதன் பத்தாம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தார்கள்.

அமுதா என்ன ஆச்சணை ஏன் இண்டைக்கு நேரத்துக்கே வந்திட்டாய் பள்ளிக்கூடத்திலை ஏதும் விஷேசமோ?
இல்லையணை ஆமிக்காரன் யாழ்ப்பாணத்துக்குள்ளை வந்திட்டானாம், முன்னேறிக்கொண்டிருக்கிறானாம், இயக்கப்பொடியள் அறிவிச்சுக்கொண்டு வாறாங்கள் கெதியா பாதுகாப்பான இடத்தை தேடி ஓடட்டாம், றோட்டெல்லாம் ஒரே வாகனமும், அம்புலன்ஸுமா கூவிக்கொண்டு பறக்குது. அறிவிச்சுக்கொண்டு இஞ்சாலையும் வரப்போறாங்கள் கெதியா எடுக்கிறதை எடுத்து அடுக்கணை எல்லாச்சனமும் போகுது அதுகளோடை நாங்களும் போக.!
எங்கையடி போக? எங்களுக்கு ஆர் தெரிஞ்ச சனம் இருக்குது, இரு அப்பாவும் வரட்டும். அது சரி எங்கை மதனைக்  காணேல்லை அவன் வருவனம்மா நீங்கள் கெதியா சாமானை அடுக்குங்கோ அப்பா வர முடிவெடுப்பம் ஆனால் அதுக்குள்ளை ரெடியா இருந்தால் நல்லது தானே.

"என்ன இஞ்சை சத்தம்? என்ன சரசு உடுப்பெல்லாம் அடுக்கிறாய் எங்கை போறியள்?"
அப்பா, ஆமி யாழ்ப்பாணத்துக்கு வந்திட்டானாம் முன்னேறிக்கொண்டிருக்கிறானாம், இடம்பெயரச்சொல்லி இயக்கம் அறிவிச்சுக்கொண்டு இருக்கிறாங்களப்பா.
"அதுக்கு எங்கை போகச் சொல்லுறாய்? இவ்வளவத்தையும் விட்டிட்டுப் போகவோ? நான் செத்தாலும் என்ரை கட்டை இங்கை தான் வேகுமே தவிர எங்கையும் போக மாட்டேன். நல்ல கதை கதைக்கிறியள்."

இஞ்சை பாருங்கோ நாங்கள் வச்சிருக்கிறதே ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளை அதுக்கு ஒண்டு நடந்திட்டால் நாங்கள் உயிர் வாழுறதிலை அர்த்தம் இல்லை உங்களுக்குத் தெரியும் தானே இந்தியன் ஆமியும், சிறீலங்கன் ஆமியும் முந்தி பொடி பெட்டையளை என்ன பாடுபடுத்தினவங்கள் என்டு, தெரிஞ்சுகொண்டும் அதுகளைக் காவுகுடுக்கப் போறிங்களே, உந்தச் சனம் முழுக்கத்தானே போகுது, ஆண்டவன் மேலை பாரத்தைப் போட்டிட்டு வாங்கோ போவம். நடக்கிறது நடக்கட்டும், பிறந்தனாங்கள் எண்டைக்கோ ஒரு நாள் சாகத்தானே போறோம், அதுகள் பிள்ளைகளாவது சந்தோசமா இருக்கட்டும்.

"சரசு....."
வாங்கோ அப்பா, மதனும் வந்திட்டான்.  நகைகளையும்,முக்கிய ஆவணங்களையும் கையில் சிக்குப்பட்ட உடுப்புக்களையும் எடுத்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக நடக்கிறார்கள் விடியலில்லா பொழுதுகளை வரவேற்க. கணபதிப்பிள்ளையற்றை மனமோ அந்த மண்ணிலேயே தொலைந்துவிடுகிறது, ஒரே செல்ல மகளுக்காக ஆசையாகப் பார்த்துப்பார்த்துக் கட்டிய வீடு அது வெறும் கல்லும் மண்ணும்,சீமெந்துமல்ல அவரின் இரத்தமும்,கண்ணீரும்,வியர்வையும் கலந்து கட்டிய வீடு அது ஒவ்வொரு மரஞ்செடியும் கூட பிள்ளையப் போல பாசமாக வளர்க்கப்படவை, உயர்றிணைகளுடன் மட்டுமல்ல அஃறிணைகளுடனும் கூட அவ்வளவு அன்னியோன்யம் அனைத்தையும் துறந்து ......"உயிர் பிரியும் வலியை உணர்ந்த நொடிகள் அவை". கண் முன்னே சாவுகள், விழுப்புண்களை எல்லாம் கடந்து காலம் காலாறிய இடம் முத்தையன் கட்டு.

பானைக்குள்ளிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக வந்த இடமோ வாழ்ந்த இடத்திற்கே திரும்பப் போகலாமோ என்ற வலிகள் நிறைந்த பூக்களின் வித்துக்களைத் தான் விதைத்துத் தள்ளின. பிள்ளைகளின் படிப்பும் போச்சு,எந்த வேலையும் இல்லை என்ன செய்வது என்று தெரியாத சூன்ய வெளியில் தினக்கூலிக்குப் போனார் கணபதிப்பிள்ளை. பிள்ளைகளையாவது கரையேற்றி விட்டால் செத்தாலும் பரவாயில்லை இதுகளை வச்சுக்கொண்டு உயிரைப் பிடிச்சுக்கொண்டு இருக்க வேண்டி இருக்கே கணபதிப்பிள்ளையின் புலம்பலுக்கு ஆறுதல் கூறினாள் சரசு..
"இருக்கிற நகையளை வித்து, கொஞ்சம் கடன் வாங்கியாச்சும் உவன் மதனை லண்டனுக்கு அனுப்பி விடுவம் உங்கண்டை பெறாமகன் பொடியன் ஒருத்தன் அங்கை இருக்கிறான் தானே அவன் பார்ப்பான் தானே"!
 ம்ம்ம்... இது நல்ல யோசனையாத் தான் இருக்கு சரி அவனை அனுப்பி விடுவம்.

நாட்களும் ஓடின அமுதாவுக்கு ஒரு சம்மந்தம் வந்திருந்தது , குறிப்புப் பார்த்து  பத்துக்கு ஒன்பது பொருத்தமாம் பொடியன் வாத்தியார், வவுனியாவிலை தான் படிப்பிக்கிறான் போட்டோ பார்த்து அமுதாக்கும் பொடியனுக்கும் பிடிச்சுப்போட்டுது, வாங்கோ போய் கொழுக்கட்டை மாத்திப்போட்டு வரும்.
இது தான் அவர்களின் கடைசி நாள் என்பதை எப்படி அறிவார்கள்? கொழுக்கட்டை மாத்திவிட்டு வவுனியாவில் இருந்து திரும்பும் போது ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் பஸ்ஸில் வந்த அத்தனை பேரும் உடல் சிதறிப்பலி என்ற அடுத்த நாள் தலைப்புச் செய்தி தான் கணபதிப்பிள்ளை, சரஸ்வதி தம்பதியர்களை அடையாளப் படுத்தியது.
தனிமரமாகி விட்டாள் அமுதா, இறுதிக்கிரியை செய்யும் அளவுக்குக் கூட உடல் கிடைக்கவில்லை. அத்தனை பேரின் எலும்புகளும்,சதைகளும் செஞ்சிலுவைச்சங்கத்தின் மேற்பார்வையில் புலிகளால் விதைக்கப்பட்டது என்ற நாழிதழ் படம் மட்டுமே அவளின் கைகளில் வந்து சேருகிறது. சில கணங்களுக்கு முன்னே சீவித்த உயிர்கள் அட்டைப்படமாய் அந்த வீட்டின் சுவர்களில் காலத்தின் கதைகளாய் ஆணி அடிக்கப்பட்டுவிட்டது.

செல்லமாகவே வளர்ந்தவள் அமுதா, எவ்வளவு கஸ்டம் வந்த போதும் அவளை எந்தக் கெடுதலும் தீண்டவிடாமல் பார்த்தவர்கள் இன்று யாருமே இல்லாத அநாதை போல் ஆகிவிட்டாள், தூக்கங்களைத் தொலைத்தவள் மௌனங்கள் மட்டுமே பேசும் கானகத்தின் நடுவே காட்டேரிகளும், கொள்ளிவால்ப் பேய்களும் மட்டுமே குடித்தனம் நடத்துவதாய் கனவினில் கண்டாள். யாரிடம் போக? மதனின் நிலை கூட என்னவென்று தெரியாது, லண்டன் போய்ச் சேர்ந்து விட்டானோ இல்லை எங்கும் இடையில் நிக்குறானோ எந்தத் தொடர்பும் இல்லை, தாய் தந்தையரின் இழப்புச் செய்தி கூட அறிவானோ என்ன ஏது என்றே தெரியாது அவனை அனுப்பவென்று ஊரில் வாங்கிய கடன் வேறை இருக்கு, மூளைப்பரப்பில் அமிலங்களாய் அரித்துக்கொண்டிருந்தது வலிகளின் வடுக்கள்.
என்ன செய்வதென்றே அறியாதவள் அலரி விதையை அரைத்துத் தின்றுவிட்டாள். அவளது நல்ல காலமோ,கெட்ட காலமோ எதிர்வீட்டு கனகம்மாக்கா ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போய் காப்பாற்றி விட்டார்.

"என்னடி லூசுத்தனமாப் பண்ணிப்போட்டாய்? உனக்காக நாங்கள் இருக்கிறம் நீ ஏன் கவலைப்படுறாய், என்னை உன்ரை அம்மாவா நினைச்சுக்கொள். பார் எத்தனை சனம் தாய்,தந்தை இல்லாம பிள்ளையள் இல்லாமல் இருக்குதுகள், அதுகள் எல்லாம் வாழேல்லையா? இப்படி எல்லாரும் நினைச்சால் இஞ்சை ஒருத்தருமே மிஞ்ச ஏலாது, பார் என்ரை அவர் எல்லைப்படைக்குப் போய் ஆமியின்ரை சினைப்பரிலை வீரச்சாவு, நான் என்ன செத்தா போட்டேன்? நானும் போனால் என்ரை இந்த குருமனை யார் பார்க்கிறது சொல்லு? ஒரு நாளும் இப்படி மொக்கு வேலை பார்க்காதை சரியோ, நான் உனக்கு இருக்கிறேன். உனக்குத் தான் கல்யாணம் முற்றாயிட்டுதே ஒரு வருசம் கழியட்டும் போய் அவையோடை கதைச்சு உன்னை ஒப்பேத்தி விடுறன் நீ சந்தோசமா வாழு சரியே"!

நாட்களும் வருடங்களாயின..
அட.. அமுதாவே வா பிள்ளை, எப்படி இருக்கிறாய்? குறை நினைக்காதை உன்ரை அம்மா,அப்பான்ரை விசயம் கேள்விப்பட்டனாங்கள் வரமுடியேல்லை உனக்குத் தெரியும் தானே வாறது எவ்வளவு கஸ்டம் என்று ஏதும் ஒன்று நடந்திட்டால் நாங்களும் உன்ரை அம்மா,அப்பா போன இடத்துக்குத்தான் போக வேணும். ஏன் உந்த தேவையில்லாத வேலை என்று தான் வரேல்லை.
அது சரி திடீரென்று இந்தப்பக்கம்?
அது வந்து அவளோடை அம்மா,அப்பா இருக்கேக்குள்ளை முற்றாக்கின விசயம் அது தான் என்ன மாதிரி என்று பேசிப்போட்டுப் போவம் என்று வந்தனாங்கள் தனிச்சுப்போனாள் அமுதா அவளோடை வாழ்க்கை சந்தோசமா இருக்கட்டும் என்று தான் , வந்த விடையத்தைச் சொல்லி முடித்தாள் கனகம்மா.

"என்னது கலியாணமோ? என்ரை பொடியனுக்கு வேறை இடத்திலை பொம்பிளை பார்த்திருக்கிறம், இந்தப்பெட்டை ராசி இல்லாதது அது தான் கொழுக்கட்டை மாத்தின அண்டைக்கே தாய்,தேப்பனை காவு வாங்கிப்போட்டுது. அதை விட பேசின படி நகையும், சீதனமும் தருவிங்களோ? சும்மா கந்தறுந்ததுகளுக்கு எல்லாம் என்ரை பொடியனைக் கட்டிக்குடுக்கலாமே? வந்ததுக்கு ஏதும் குடிச்சிட்டுப் போங்கோ வெளிய போய் சொல்லிடாதையுங்கோ"
 அவளின்ரை தம்பி தான் லண்டனுக்கு என்று போயிருக்கிறானே. போனதும் நீங்கள் கேட்டதை விட அதிகமாகவே செய்யிறம், அநாதையா நிக்கிற பொண்ணுக்கு வாழ்வு குடுங்கோவன் என்று தன் பங்குக்கு கெஞ்சினாள் கனகம்மாக்கா.
"அதுவரைக்கும் என்ரை பொடியன் என்ன நெத்துக்கு விடவே? அது தான் சொல்லிப் போட்டேனெல்லே போங்கோ போய் வேலையைப் பாருங்கோ"
மாப்பிள்ளையின் முகத்தைப் பார்த்த அமுதா "இவனெல்லாம் ஒரு ஆம்பிளை சீ... தூ.. மனசுக்குள் காறித்துப்பிவிட்டு, கல்யாணச் சந்தையில் விலை போகவில்லைய என்ற வேதனையோடு வீடு திரும்பினாள்".

பட்ட கால்லையே படும், கெட்ட குடியே கெடும் என்ற வாக்கு மட்டும் ஏனோ அமுதா வாழ்வில் பொய்க்கவில்லை. விழுந்து எழலாம் என்று நினைக்கும் போதெல்ல்லாம் சாணேற முழம் சறுக்கும் கதையாய் மதனும் மலேசியாவில் வைத்து ஏஜென்சியால் ஏமாற்றப்பட்டு திரும்ப ஊருக்கே வந்துவிட்டான் அமுதா வாழ்வில் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தோசமும் பறிபோய்விட்டது.
அவன் வந்தது தான் தாமதம் கடன் குடுத்தவர்களும் கடன் கேட்டு வாசலுக்கு வந்துவிட்டார்கள், தம்பி அடுத்த மாதம் காசு அனுப்புவான் தாறேன் என்று சொல்லி வந்தவளுக்கு இன்று வார்த்தைகள் கூட வரவில்லை எஞ்சியிருந்த மூக்குத்தியையும் தோட்டையும் கழற்றி அடைவு வைத்து விட்டு வேப்பங்குச்சியைச் சொருகிக்கொண்டாள் காதுகளில்.

போர் உச்சமடைந்திருந்த நேரம் வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் போராட்டத்தில் இணைய வேண்டும்  என்ற சூழ்நிலை யாரையும் விட்டுவைக்கவில்லை.
அமுதாவிற்கும் மதனுக்கும் நடந்த பாசப் போராட்டத்தில் மதனே ஜெயித்துப் போர்க்களம் போனான். அவன் போய்விட்டான் அமுதாவோ?????
பாவம், எத்தனை மன்மதன்களின் காதல்க்கடிதங்களையும், காம அம்புகளையும் கடந்து, வறுமையைக் காட்டி படுக்கைக்கு அழைக்கும் வல்லூறுகளின் வலையிலும் சிக்காது, தான் தையல் செய்தும், சின்னப்பிள்ளைகளுக்கு ரியூசன் சொல்லிக்கொடுத்தும் பெரும்பகுதி கடனை அடைத்து விட்டாள். இன்னும் கொஞ்சம் தான் அதுக்காக இரவு பகலாக கால்கள் தையல் இயந்திரத்தின் பெடல்களை மிதித்துக் கொண்டே இருக்கிறது தனக்கான நாள் வரும் என்று.

என்ரை ராசாத்தி எப்படி இருந்த நீ? உன்னை இந்தக்கோலத்திலை பார்க்க எனகே இரத்தக்கண்ணீர் வருது..!! உன்னை ஒருத்தனட்டைப் பிடிச்சுக்குடுக்க மாட்டேனா என்ற கவலை தான் என்னை வாட்டுது.
"விடுங்கோ கனகம்மாக்கா இன்னும் இழக்க என்னிடம் என்னணை இருக்கு? எல்லாம் பழகிப்போட்டுது வாழ்க்கை என்னைப் புடம் போட்டிட்டுது இப்ப எல்லாம் எதையும் தாங்கும் மனம் வந்திட்டுது தலை தான் போனால் என்ன? இந்தக் கையும் காலும் இருக்கும் வரைக்கும் பார்ப்பம் அங்காலை கடவுள் விட்ட வழி"
அப்படி எல்லாம் பேசாதையணை, அவர் கட்டின தாலியும் கொஞ்ச நகையும் இருக்கு எனக்கு என்ன பொம்பிளைப் பிள்ளையே இருக்கு இந்த ஒரு பொடியன் தானே அவன் பிழைச்சிடுவன் நான் என்ரை நகையைத் தாறேன்.
கண்களில் நீர்வழிய கட்டியணைத்துக் கொண்டாள் கனகம்மாக்காவை.

காலம் எவ்வளவு கொடியது ..
களமாடப் போன மதனும் வீரச்சாவு என்ற செய்தி புலிகளின் குரல் வானொலியில் காற்றலை வழியே வருகிறது, இருந்த ஒரே நம்பிக்கையும் தவிடு பொடியாக உறவென்று சொல்லிக்கொள்ள இருந்த ஒரே சொந்தமும் போய் அநாதை என்ற பட்டம் மட்டும் மேலதிகமாக ஒட்டிக்கொள்கிறது.
யாரை நோவாள் அந்த அப்பாவி? கடைசிச் சொட்டுக் கண்ணீர் கூட வற்றிவிட்டது அவள் வாழ்வில்.

அம்மா.. அம்மா..!! அமுதாம்மா எழும்பணை பள்ளிக்கூடம் போக வேணும் .
கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருகும் அமுதாவை எழுப்புகிறான் குட்டி "வசந்தன்"... போரில் தாய், தந்தையை இழந்த அனாதைக் குழந்தை வசந்தனை
தத்தெடுத்து வளர்க்கிறாள் அமுதா. அவன் கை பிடித்து  நடக்கிறாள் பாடசாலை நோக்கி.

முற்றும்.

( யாவும் கற்பனையே )

ஜீவா
18.06.2013  12:35

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  கரு

தொடரட்டும் தங்கள் எழுத்து...

Link to comment
Share on other sites

ஆரம்பம் அமுதாவை வழமையான பள்ளிப் பிள்ளைகளை மாதிரி காட்டுவதால் தலைப்புடன் அவள் கதை இணைவது போல் தோற்றம் தரவில்லை. முடிவு அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஜீவா கதையின் கரு நன்றாக உள்ளது ஆனால் அவசரப்பட்டு கதையை எழுதின மாதிரி எனக்குப்படுகின்றது.எனக்கு உங்கள மாதிரி எழுதத் தெரியாது ஆனாலும் என்னுடைய கருத்தை சொன்னேன் :)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா தொடருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனை கலந்த உண்மைக்கதைக்கு நன்றிகள் ....தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மௌனங்களுக்குள் மறைந்து போன கதைகள் ஏராளம், ஜீவா!

 

வெறும் ஏக்கங்களுக்குள் புதைந்து போன வாழ்வுகளும் ஏராளம்!

 

எமது அடுத்த தலைமுறைகளுக்காக, இவை வெளிக்கொண்டு வரப்படவேண்டும்!

 

எமக்கு எதற்காக ஒரு தீர்வு வேண்டும் என்பதை இப்படியான கதைகள் எப்போதும் நினைவில் தக்க வைத்துக்கொண்டிருக்கும்!

 

தொடர்ந்து எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கம்,பக்கமாக எழுதும் கதையை விட இப்படி  எழுதுவது நன்றாக பிடித்திருக்கிறது ஜீவா..ஜீரணக்க முடியாததாகவும் இருக்கிறது...இப்படியான விடையங்களில் நம்மவர்களை திருத்துவதோ இல்லை திருந்துவார்கள் என்று நினைப்பதோ தப்பு...
எழுத்துப் பிழைகளை கவனத்தில் கொள்ளவும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பிக்கு என்ரை வாழ்த்துக்கள் .உங்கடை கதை முறிஞ்சு முறிஞ்சு போகுது கொஞ்சம் கவனியுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல  கரு

தொடரட்டும் தங்கள் எழுத்து...

நன்றி விசுகு அண்ணா,

நீங்கள் எல்லாரும் தரும் ஊக்கம் தான் எழுத வைக்கிறது. எமக்கு தெரிந்த வழிகளூடு இணைந்திருக்கிறோம் அண்ணா, நன்றி வரவுக்கும், கருத்துப் பகிர்விற்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரம்பம் அமுதாவை வழமையான பள்ளிப் பிள்ளைகளை மாதிரி காட்டுவதால் தலைப்புடன் அவள் கதை இணைவது போல் தோற்றம் தரவில்லை. முடிவு அருமை.

 

இது வரையும் அனுபவங்களை மாத்திரமே கிறுக்கிக் கொண்டிருந்தேன், என் வாழ்வில் நான் அனுபவித்தவையும், என்னைச்சுற்றி நடந்தவையுமே தான், முதன் முதலாக ஒரு கற்பனையாக தொடர்கதை போல் இல்லாமல் குறித்த பந்திகளுக்குள் அடக்கி விடவேண்டும் என்று எழுதிய போது சிலவற்றில் தவறுகள் வந்துள்ளது, நல்லா இருக்கு தொடருங்கோ என்பதை விட தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது தான் அடுத்த முறை எழுதும் போது திருந்(த்)த வாய்ப்பாக இருக்கும் அந்தவகையில்

 

வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி மல்லையண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஜீவா கதையின் கரு நன்றாக உள்ளது ஆனால் அவசரப்பட்டு கதையை எழுதின மாதிரி எனக்குப்படுகின்றது.எனக்கு உங்கள மாதிரி எழுதத் தெரியாது ஆனாலும் என்னுடைய கருத்தை சொன்னேன் :)

 

 

இதுவரை நான் எழுதிய எந்த ஒரு கிறுக்கலும் முதலில் எழுதி சரி பார்த்து விட்டு தட்டச்சு செய்ததில்லை அக்கா. ஏதும் எழுத வேண்டும் என்று மனம் உந்தித்தள்ளும் போது ஒரே மூச்சாக எழுதிவிடுவது தான் வழமை அப்படித்தான் இந்தப் பதிவும், நிச்சயமாக உங்கள் கருத்தைக் கவனத்தில் எடுக்கிறேன் அடுத்து வரும் பதிவுகளில் திருத்தி எழுத முயற்சிக்கிறேன் அக்கா.

 

எப்போதும் எல்லா பதிவுகளையும் படித்து ஊக்கம் தரும் ஒருவர். நன்றி அக்கா உங்கள் கருத்துப் பகிர்விற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா தொடருங்கள். 

வரவிற்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி லியோ அண்ணா. :)

கற்பனை கலந்த உண்மைக்கதைக்கு நன்றிகள் ....தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.....

 

நன்றி புத்தன் அண்ணா, எல்லாம் உங்கள் எழுத்துக்களைப் படித்த நம்பிக்கையில் கிறுக்குவது தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெயரும் கதை எழுதியவிதமும் அழகு.தொடருங்கள் ஜீவா.

 

நன்றி ராசம்மாக்கா, உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும். :)

Link to comment
Share on other sites

வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள். கதையின் தலைப்பிற்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லாதது போன்றதொரு தேற்றப்பாடும் இறுதியில் அவசரமாக கதையை முடித்தது போலவும் உள்ளது.  ஆனாலும் தொடர்ந்து எழுதுங்கள்.அடுத்த கதையில் இன்னமும் கலக்குங்கள்.

Link to comment
Share on other sites

வழக்கமாகக் கதை எழுதும் ஜீவாவிடம் இருந்து ஓர் மாறுபட்ட கதை வந்ததிற்கு முதலில் எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் . ஒரே நேரத்தில் இரண்டு செய்திகளை சொல்ல முற்பட்டிருக்கின்றீர்கள் . ஒன்று , செல்வச்செளிப்பிலே வளர்ந்த அமுதாவினது வாழ்க்கை போர்அவலங்களினால் எவ்வாறு சிதைந்தது என்பது . இரண்டாவது செய்தி , தனதுவாழ்வு உருக்குலைந்தாலும் அதே போரினால் பாதிப்படைந்த ஓர் குழந்தையை தத்து எடுத்து வளர்கும் மனிதநேயம் . இந்த இரண்டு செய்திகளையும் சரியான கலவையில் கலந்து கதை சொல்லப்படவில்லை . ஒன்றிற்கு மேற்பட்ட செய்திகளை கதைசொல்ல முற்படும்பொழுது  மிகுந்த அவதானத்துடன் சம்பவங்கள் ஒன்றிற்கொன்று கோர்வையாகச் சொல்லப்படவேண்டும் . அப்பொழுதுதான் அதில் ஒரு உயிர்த்துடிப்பு இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து .

 

இங்கு சம்பவங்களுக்கிடையே பல இடங்களில் தொங்குபறிநிலையே காணப்படுகின்றது . மேலும் 'அவள்பெயர் இளவரசி ' என்று தலைப்பிட்டு கதாநாயகியை ஒரு ' பணிப்பெண்ணாகவே ' காட்டியிருக்கின்றீர்கள் . மதனுடைய இடத்தில் அமுதாவை இருத்தியிருந்தால் இளவரசி மகாராணியாக வாசகர் மனதில் நிறைந்திருப்பாள் என்றே நினைக்கின்றேன் . இரண்டாவது செய்தியான மனிதநேயத்தை மேலும் கூர்மைப்படுத்தி மதனுடைய பொறுப்பில் விட்டிருந்தால் தலைப்பின் கனதி மிகவும் அதிகமாயிருக்கும் .  இருந்தபோதிலும் கிணற்றைக் கலக்கிக் கலக்கி இறைத்தால்த் தான் நல்லநீர் வரும் எனபதற்கு இணங்க , மேலும் பல வித்தியாசமான கதைகளை படைக்க வாழ்த்துகின்றேன் emot-eek.gif.gifemot-eek.gif.gif  .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.