Jump to content

சீமெந்துக்கற்கள் வியாபாரம் நீங்களும் இணையலாம்


Recommended Posts

சீமெந்துக்கற்கள் வியாபாரம் நீங்களும் இணையலாம்

logo1.png

போரால் பாதிப்புற்ற கிழக்குமாகாணத்தின் பல கிராமங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளைக் கட்டுவதற்கான சீமெந்துக்கற்கள் , மரங்கள் இதர பொருட்கள் யாவும் முஸ்லீம் மற்றும் பெரும்பான்மையினத்தினரின் உற்பத்திகளிலிருந்தே எம்மவர்கள் அதிக விலைகொடுத்து வாங்கும் நிலமையிருக்கிறது. இவ்விடங்களை நோக்கி அவர்களது தொழில்சாலைகளும் வந்து கொண்டிருக்கிறது.

 

நாமே வீடு கட்டுவதற்குத் தேவையான கற்கள் மரங்கள் போன்றவற்றை எம்மவர்களுக்கு விநியோகிக்க முடியும். அதற்கான முதலீடு எம்மிடம் இருப்பின் எம்மவர்களுக்கு நாங்களே குறைந்த விலையில் வழங்கலாம். இவற்றைக் கருத்தில் கொண்டு சீமெந்துக்கற்தொழிச்சாலை ஒன்றைக் கிழக்கு மாகாணத்தில் நிறுவ உத்தேசித்துள்ளோம்.

வீட்டுத் திட்டம் வழங்கப்பட்ட சில ஊர்களிலிருந்து 3கிராமங்களைத் தெரிவு செய்துள்ளோம். ஒரு வீட்டுக்கு தலா 3ஆயிரம் கற்கள் தேவை.

 

இக்கிராமங்களின் வீடுகளுக்கான கற்களை நாமே தயாரித்துக் குறைந்த விலையில் வழங்குவதற்குத தொழிற்சாலையொன்றை அமைக்கத் தேவையான உதவியை எதிர்பார்க்கிறோம்.

 

தேவையான மூலப்பொருட்கள் :-

1)    கல் அறுக்கும் இயந்திரம் 1 – 135000.00ரூபா (அண்ணளவாக 840€)

2)    மின்பிறப்பாக்கி 1 – 86000.00ரூபா (அண்ணளவாக 535€)

3)    நீர்ப்பம்பி 1 – 16500.00ரூபா (அண்ணளவாக 103€)

4)    நீர்க்குழாய்  – 14500.00ரூபா (அண்ணளவாக 90€)

5)    பலகைகள் 100 (ஒன்றின் விலை – 215.00ரூபா) – 21500.00 (அண்ணளவாக 135€)

6)    5ஆயிரம் கற்கள் முதல் உற்பத்திக்குத் தேவையான சீமெந்து 63பைகள்(ஒரு சீமெந்து பையின் விலை – 870.0ரூபா) 63பைகளுக்கு – 54810.00ரூபா( அண்ணளவாக342€)

7)    5ஆயிரம் கற்களுக்கான மணல் – 25000.00ரூபா (அண்ணளவாக – 155€)

மொத்தம் தேவைப்படும் உதவி – 353310.00ரூபா (2200€)

 

இந்த வியாபாரத்தில் பயனடைவோர் போரால் பாதிப்புற்ற வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தொழிலாளிகள். இவர்களின் 10பேருக்கு வேலை வாய்ப்பும் 2 உழவு இயந்திரத்துக்கும் வேலையை வழங்க முடியும்.

கிடைக்கும் வருமானத்திலிருந்து 20சதவீதம் நேசக்கரம் சமூக சேவைக்கும் மீதி இலாபத்திலிருந்து தொழிலாளர்களுக்கான சம்பளமும் முதலீட்டாளருக்கான இலாபமும் வழங்கப்படும்.

 

இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். விரைவாக வேலையை ஆரம்பிக்க வேண்டியுள்ளதால் உதவிகளையும் விரைவாக எதிர்பார்க்கிறோம்.

 

தொடர்புகளுக்கு :-

 

Shanthy  Germany – 0049 678170723 /கைபேசி – 0049 1628037418

hmcgroupslk@gmail.com

Shanthy                                                                                                                                                                                                                                                   Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

 

http://hmclk.com/?p=50

 

எமது நிறுவனத்தின் இணையத்தளம் :-http://hmclk.com

 

Link to comment
Share on other sites

சீமெந்துக்கல் உற்பத்திக்கு முதலீடு செய்ய 3பேர் முன்வந்துள்ளார்கள் :-

சீமெந்துக்கல் உற்பத்திக்கு முதலீடு செய்ய 3பேர் முன்வந்துள்ளார்கள் :-

1) கள உறவு Gari கனடா - 100000.00 Rs
2) கந்தவேல் கனடா - 100000.00 Rs
3) கஜீபன் கனடா - 35331.00Rs

 

 மேலும் தேவைப்படும் தொகை - 730€

 

உதவ விரும்புவோர் இணைந்து கொள்ளுங்கள். தொலைபேசியில் அல்லது ஸ்கைப் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

கள உறவு சுமேயக்கா மீதி தேவையான 730€ முதலீட்டையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இத்திட்டத்தில் முதலிடுவோருக்கு இது தொடர்பான எழுத்து மூலமான விபரங்கள் தரப்படும். அவர்கள் விரும்பும் பட்சத்தில் எமது இணையத்தில் அவர்களது பங்கு விபரம் வெளியிடப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) கள உறவு Gari கனடா - 100000.00 Rs
2) கந்தவேல் கனடா - 100000.00 Rs
3) கஜீபன் கனடா - 35331.00Rs

4) கள உறவு சுமேயக்கா 730€

 

அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்

 

முன் காலை வைத்துள்ளீர்கள்

இறைவன் உங்களுடன் இருக்கட்டும்

Link to comment
Share on other sites

1) கள உறவு Gari கனடா - 100000.00 Rs

2) கந்தவேல் கனடா - 100000.00 Rs

3) கஜீபன் கனடா - 35331.00Rs

4) கள உறவு சுமேயக்கா 730€

 

அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்

 

முன் காலை வைத்துள்ளீர்கள்

இறைவன் உங்களுடன் இருக்கட்டும்

 

இத்திட்டம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு ஆரம்பிக்கிறோம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

உதவிய எல்லா உறவுகளுக்கும் நன்றி.

திட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

 

எல்லோருடைய உதவிகளும் கிடைத்துவிட்டது. அடுத்ததாக தொழில் ஆரம்பிக்க தேவையான பணிகளும் ஆரம்பித்து ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  யாவும் நிறைவுற்றதும் அறியத்தருவேன். உதவிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தற்காலிக இடம் அமைத்தல் ,பலகைகள் தயார்படுத்தல் ஆகியவை நிறைவடையும் நிலையில் உள்ளது. இயந்திரங்கள் ஓடர் பண்ணியுள்ளோம். இம்மாத நடுப்பகுதியில் உத்தியோகபூர்வமாக  சீமெந்துக்கற்தொழிச்சாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சீமெந்துக்கல் விற்பனை ஆரம்பம்.

எமது Hand made creators (pvt)Ltd தொழில் நிறுவனத்தின் முதல் முயற்சியாக சீமெந்துக்கல் உற்பத்திக்கான முதலீட்டாளர்களை இணைத்து உருவாக்கிய தொழில் நிறவனமானது 23.07.2013 அன்று மட்டக்களப்பு புல்லுமலைப் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

முழுமையான செய்தியை வாசிக்க கீழ் வரும் இணைப்பிற்கு செல்லுங்கள்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=126486#entry919704

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தொழில் நிறுவனத்தின் மாதாந்த அறிக்கையும் விபரங்கள் கணக்கறிக்கைகள் அடுத்த மாதம் தொடக்கத்தில் வெளியிடப்படும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.