Jump to content

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]


Recommended Posts

இன்றைக்கு Finale

லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம் லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நிபுல் தெவரப்பெரும என்ற இந்த இளைஞர் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பெண்ணொருவரை எட்டி உதைத்திருந்தார். பின்னர் அது குறித்து அவர் தனது சிங்களவர்களிடமிருந்து பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டதையடுத்துஇ அவருக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது. மேலும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அவர் ஒரு ஹீரோ அந்தஸ்தில் மதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது இனவாத செயற்பாடு மற்றும் அதுபற்றிய பேஸ்புக் தகவல்கள் குறித்து புலம் பெயர் தமிழ் இளையோர்கள் பேஸ்புக் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்துஇ நிபுல் தெவரப்பெருமவின் பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிர்வாகம் உடனடியாக நிரந்தரமாக மூடிவிட்டது. இச்சம்பவம் லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்ட சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. http://www.lankawin.com/show-RUmryGRWNdnr3.html

வக்கிருந்தால் சின்ன சின்ன ஊடகங்களை தடை செய்யும் துட்ட கைமுணு அரசு முக நூலை தடை செய்யட்டும் பார்ப்பம். 

 

கொக்கா கோலாவுக்கும் கூகுலுக்கும் தடை கொண்டுவர வேண்டும் என்ற விமல் வீரதை உண்மையான வீரானா என்று இந்தத்தடவை பார்த்துவிடலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 218
  • Created
  • Last Reply

இன்றைக்கு Finale

லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம் லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நிபுல் தெவரப்பெரும என்ற இந்த இளைஞர் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பெண்ணொருவரை எட்டி உதைத்திருந்தார். பின்னர் அது குறித்து அவர் தனது சிங்களவர்களிடமிருந்து பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டதையடுத்துஇ அவருக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது. மேலும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அவர் ஒரு ஹீரோ அந்தஸ்தில் மதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது இனவாத செயற்பாடு மற்றும் அதுபற்றிய பேஸ்புக் தகவல்கள் குறித்து புலம் பெயர் தமிழ் இளையோர்கள் பேஸ்புக் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்துஇ நிபுல் தெவரப்பெருமவின் பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிர்வாகம் உடனடியாக நிரந்தரமாக மூடிவிட்டது. இச்சம்பவம் லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்ட சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. http://www.lankawin.com/show-RUmryGRWNdnr3.html

 

அவனுடைய facebook கணக்கு இயங்கி கொண்டுதான் இருக்கிறது.

.https://www.facebook.com/nilu.pulx

Link to comment
Share on other sites

வெறும் விதண்டாவாதிகளால் நிறைந்து விட்டது யாழ் களம். ஒரு காலத்தில் யாழ் களம் பல வேலைத்திட்டங்களின் முதலாய் இருந்தது. என்று மீளாய்வு.. மறு ஆய்வு என்று.. ஒட்டுக்குழுக்களின் ஊடுருவலுக்கு இடமளித்தார்களோ அன்றிருந்து யாழ் திசைமாறிச் செல்வதாகவே தெரிகிறது. இது.. வருத்ததிற்குரிய ஒன்று..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்கால் யுத்தம் முடிந்து 4 வருடமாகி விட்டது இன்னும் கூட சிங்களவனின்ட பேஸ் புக்கை லண்டனின் தடை செய்து விட்டார்கள் என்று எங்களை நாங்களே பாராட்டிக் கொள்வோம்

Link to comment
Share on other sites

வேந்தன் தந்த இணைப்பைச் சொடுக்க கீழே உள்ள பதில் வருகிறது . இது ஏன் என்று ரதி அக்கா அல்லது முக நூல் அனுபவமுடையவர்கள் யாராவது கூற முடியுமா?

 

This content is currently unavailable
The page you requested cannot be displayed right now. It may be temporarily unavailable, the link you clicked on may have expired, or you may not have permission to view this page.

 

Link to comment
Share on other sites

 

வேந்தன் தந்த இணைப்பைச் சொடுக்க கீழே உள்ள பதில் வருகிறது . இது ஏன் என்று ரதி அக்கா அல்லது முக நூல் அனுபவமுடையவர்கள் யாராவது கூற முடியுமா?

 

This content is currently unavailable
The page you requested cannot be displayed right now. It may be temporarily unavailable, the link you clicked on may have expired, or you may not have permission to view this page.

 

 

முகப்புத்தக அங்கத்தவர்கள் மட்டுமே அவரது விபரங்களைப் பார்வையிட முடியும்.

Link to comment
Share on other sites

ஏப்ரல் க்கு பிறகு எதுவும் தரவேற்றப்படவில்லை அவருடைய முகவரியில் ஆனால் சில தினங்களுக்கு முன்பு தான் எல்லோரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள் அவருக்கு அவற்றை எல்லாம் காணவில்லை....

Link to comment
Share on other sites

UNP Australia பக்கத்தில் இவரது காடைத்தனத்தை பாராட்டி ஒருவர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

https://www.facebook.com/groups/unpaus/

 

"Nipul Thewarapperuma we are proud of you !! Great thing is you chose the right party !!"

 

புலிக்கொடியை மைதானத்தில் கொண்டோடி உலகின் கவனத்தை ஈர்த்தோம். இது எமது போராட்டத்தின் ஒரு மைல்கல் என்ற பாணியில் கதையளந்த ஊடகங்கள் ஒரு படி மேலே போய் நிபுலின் முகப் புத்தகம் நிரந்தரமாக முடக்கப் பட சிங்களவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள் என்று ஒரு புரளியையும் கிளப்பி விட்டிருக்கின்றன. அவர் ஓவல் மைதானத்திற்கு வெளியே புரிந்த அட்டகாசத்திற்கான ஆதாரங்கள் எதனையும் அவரது பக்கங்களில் காணமுடியவில்லையாயினும் அவரது கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டது என்ற செய்தி ஒரு அண்டப் புளுகல்.

 

 

 

 

Link to comment
Share on other sites

இந்த முகவரி முடக்கப்பட்டிருக்கிறது. இதில்தான் தமிழர்கள் மீதான தாக்குதல் பற்றி பெருமையுடன் எழுதப்பட்டிருந்தது.

https://www.facebook.com/nipul.thewarapperuma?fref=ts

அவனிடம் இன்னும் ஒரு முகநூல் பக்கம் இருக்கிறது. அது அப்படியே உள்ளது

https://www.facebook.com/nilu.pulx?directed_target_id=161627067328861

Link to comment
Share on other sites

சிங்களவருக்கு அடி உதை படங்கள் என்று கிடக்கு ,நானும் தேடி தேடி பார்கின்றேன் காண கிடைக்குதில்லை .

எல்லாம் தாங்களே கொடிகளுடன் ஓடுகின்ற படங்களாத்தான் கிடக்கு .

Link to comment
Share on other sites

முகப்புத்தக முடக்கம் என்பது தேள்வடிவத் தாக்குதல். இது நிச்சயம் சிங்களவர்களை அதிர்ச்சியில் உறையவைக்கும் என்பதில் ஐய்யமில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தென்பையும் கொடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடக்கப்பட்டது என்று மட்டும் சொல்ல முடியாது. அவர் கணக்கை நிறுத்தி விட்டாலும் அவ்வாறே தோன்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியளவில் நாங்கள் எங்களைத் திரட்டவும், தீர்க்கதரிசனத்தோடும் நடக்க வேண்டும் என்பது அவசியம். சின்னச் சின்ன விடயங்களுக்காக நாட்கணக்கில் பெருமைப்படுவது சரியாகத் தோன்றவில்லை. எங்களின் இலக்கும் அதுவல்ல.  ஏன் சொல்கின்றேன் என்றால் அவர்களின் பேஸ்புக் முடக்குவது மட்டும் என்ன தீர்வைத் தரும்.... இது குழந்தைகள் வீடு கட்டிச் சந்தோசப்படுவது போலில்லையா?

தவிர, தேசியக் கொடியோடு மைதானத்தில் ஓடிய உறவுகளது இணைப்புக்களையும் முடக்கி வைத்துள்ளார்கள். அவர்களது கணக்கில் சிங்களவர்கள் பலர் வந்து எழுதிக் கொண்டிருப்பதால் அவர்களும் முடக்கி வைக்கும் நிலையை எடுத்திருக்கலாம்.

எங்களின் தமிழீழம் குறித்து செய்கின்ற ஒவ்வொரு செயற்பாட்டின் வெற்றிக்காகவும் பெருமை மட்டும் கொள்ளாமல், அது கடமையாகக் கொண்டால் இப்படி எழுதிக் கொண்டிருக்கின்ற தேவையே வராது

 

Link to comment
Share on other sites

சிங்களவருக்கு அடி உதை படங்கள் என்று கிடக்கு ,நானும் தேடி தேடி பார்கின்றேன் காண கிடைக்குதில்லை .

எல்லாம் தாங்களே கொடிகளுடன் ஓடுகின்ற படங்களாத்தான் கிடக்கு .

 

கொடி மட்டும் ஓடுமா :lol: , இது என்னவொரு கேள்வி?

 

இந்த ஆண்டின் மொக்குத்தனமான கேள்வி#01 இது.

 

இன்னும் வளர இடமிருக்கு, அறிவு பூர்பவமாக சிந்தித்து எழுதுங்கள்.

 

இதாவது விளங்குமா அல்லது எப்பவும் மாதிரிதானா?

முகப்புத்தக முடக்கம் என்பது தேள்வடிவத் தாக்குதல். இது நிச்சயம் சிங்களவர்களை அதிர்ச்சியில் உறையவைக்கும் என்பதில் ஐய்யமில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தென்பையும் கொடுக்கும்.

 

 இதை நீங்க சபேசனுக்கு கருத்தெடுத்து கொடுக்கிற மாதிரியிருக்கு. அப்ப நாளைக்கு அவரின் தேள் வடிவ கட்டுரையை எதிர்பார்க்கலாம்.

 

இப்படி நக்கலா எழுதி பலரைப் பார்த்துவிட்டோம் சண்டா. கொஞ்சம் அடங்குங்கள்,

 

டாக்கிக்கு இதைவிட பல உபதேசங்கள் தேவைப்படும், அவருக்கு இப்படிப்பட்ட வியூகங்களை சொல்லிக்கொடுக்கலாமே? எப்படி மகியின் காலை சுற்றி இறுக்கிப்பிடிப்பதென்று. கொஞ்சம் விலகினாலும் உதைதான்

Link to comment
Share on other sites

சிங்களவருக்கு அடி உதை படங்கள் என்று கிடக்கு ,நானும் தேடி தேடி பார்கின்றேன் காண கிடைக்குதில்லை .

எல்லாம் தாங்களே கொடிகளுடன் ஓடுகின்ற படங்களாத்தான் கிடக்கு .

தம்பி அர்சுண் சாட்சி வைத்து அடிக்கப்படாது. இது கூட தெரியாத மொக்கு கூட்டமாய் இருக்கிறியள்.

உங்களுக்குத் தானே உசர் மட்ட தொடர்புகள் இருக்கு கேட்டுப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

சிங்களவன் சாட்சி வைத்து அடித்து நெஞ்சை நிமிர்த்து கொண்டுபோகின்றான் ,

நீங்கள் எல்லா அலுவலும் ஒழிச்சு போல கிடக்கு .நல்ல விஷயம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் சாட்சி வைத்து அடித்து நெஞ்சை நிமிர்த்து கொண்டுபோகின்றான் ,

நீங்கள் எல்லா அலுவலும் ஒழிச்சு போல கிடக்கு .நல்ல விஷயம் .

 

சாட்ச்சி வைச்சு அடிச்சு தான் சணல் 4 வெளி உலகத்துக்கு காட்ட அது பொய் பிய் என்று வாய் கூசாமாய் பொய் சொன்னவை....உலகமே பார்த்து சிரிக்குது வெக்கமாய் தெரியல...நீங்கள் வெக்கத்தை அடைவு வைச்சு வாழும் கூட்டம் தானே....... :D

Link to comment
Share on other sites

சிங்களவன் சாட்சி வைத்து அடித்து நெஞ்சை நிமிர்த்து கொண்டுபோகின்றான் ,

நீங்கள் எல்லா அலுவலும் ஒழிச்சு போல கிடக்கு .நல்ல விஷயம் .

கொட்டியா அவிலதமாய்.

Link to comment
Share on other sites

ஏன் பௌத்த நாடு என்று புழுகும் நாட்டின் கொடியில் அரிவாளுடன் கோபத்தில் நாக்கு தள்ளும் சிங்கம்?

அதுவும் கோப சிங்கம் அரிவாளை தமிழ் இசுலாமிய நிறங்களை பார்த்து காட்டுகிறது.

தாமரை அல்லது புறாவை அல்லவா அமைதியான புத்தர் நாடு கொடியாக வைத்திருக்கவேண்டும்?

 

பௌத்தம் அமைதியான மதம் அல்ல. அது சண்டமாருதனின் பிராசரம். புத்தர் இந்து சமயத்தில் ஆரியர்களால் வன்முறைகள் புத்தப்பட்ட போது அவற்றை களைந்தார். இதில் புதுமை ஒன்றும் இல்லை இதே தந்துவங்களையேதான் சங்கரர் ராமகிருஸ்ணர் மற்றும் எல்லா இந்துகளும் போத்தித்தார்கள்.

 

புத்தர்  விஸ்னுவின் 9ம் அவதாரம். புத்தரின் மத மீள் நிறுத்தல்  இந்து சமயத்தில்,சிந்துவெளியை ஆரியர் அழித்த பின்னர்,  தூக்க நிலையில் இருந்த பழைய கொள்கைகளுக்கு புத்துணர்வு கொடுத்தது. ஆனால் இது வடமொழி, பாளி வெறியர்களுக்கு பாரிய பின்னடைவைத் தந்தது. இதனால் அவர்கள் புத்தர் இறந்து பல ஆண்டுகளின் பின்னர், இந்து மதத்திலிருந்து விலகி புதிய கொலை வெறி மதமாக பௌத்ததை ஆக்கிக்கொண்டார்கள். புத்தரின் பின்னர், இந்து   மதத்தில் பழையவை மீண்டு, புதிய கொலைவெறி ஆரியம் பின்னடவைச் சந்தித்தது. அவர் இந்துவாகப்பிறந்து, இந்துவாக வாழ்ந்து, இந்துவாக மரணித்தார்.  அவரின் போதனைகள் இந்து மதம் ஒன்றில்தான் முழுமையாக வாங்க்கப்பட்டிருக்கிறது. புத்தருக்கும் இன்றைய கொலைவெறிச் சமயத்துக்கும் கால, கொள்கை, பண்பாட்டுத்தொடர்புகள் ஏதும் கிடையாது. அது பிரசாரிகளால் உருவகிப்படுவது மட்டுமே அல்லாமல் அதில் உண்மை இல்லை.

 

ஆனால் கொலைவெறிகொண்டு துறவுகளை ஆரம்பித்த புதிய புத்த சமண துறவிகள் பேய் பிடித்தது மாதிரி  ஆடினார்கள். இந்த நாடுபிடிக்கும்  துறவுக் கொலை வெறி, மதவெறிக் களப்பிரயர் தமிழ் நாடுவரை வந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குள்ளும் பரவினார்கள்.

 

ஆனாலும் இவர்கள் தமிழ் நாட்டில் தமிழுக்கு செய்த அழிவு தமிழ் தன் 10,000 ஆண்டுகாலங்களில் அடுத்தடுத்த சுனாமிகளால் நாடு நகரங்களை இழந்து போன போது கூடாக் காணத பேரழிவு.  முதல் சங்க ராசதானியை கடல் கொண்ட பின்னர் புதிய நகரத்தில் குடி கொண்டோர் திரும்ப சங்கம் ஆரம்பித்து தமிழ் வளர்த்தார்கள். அதே கதைதான் இடை சங்கத்திலும். அவர்கள் இயற்கையை கண்டு மிராளமல்  திரும்ப சங்கம் வளர்த்தார்கள்.  ஆனால் களப்பிரயர் என்ற வடமொழி வெறி, மத வெறி, கொலைகாரக் கூட்டம் தமிழ் நாட்டில் வந்த உடன் நிறை வேற்றி வைத்த முதல் கைங்கரியம், மனித நாகரித்திரத்தில் இந்த மிகப் பெரிய நீண்ட சரித்திரம் கொண்ட அமைப்பொன்றாக திகழ்ந்த சங்கத்தை அழித்ததுதான். இது நாலந்தாவை முகலாயர்கள் தீவைத்ததை விட பல ஆயிரம் மடங்குகள் இழப்புக்கூடியது. தமிழ் இனம் நீச இனம், அடிமையாக மட்டும் இருக்க வேண்டும் என்று அடிமைப்படுத்தி தமிழ் பண்பாடுகளை சிதைத்தார்கள்.  துரோகிகள் எடுபட்டு புதிய மதங்களை பின்பற்றி அரச பதவிகள், மானியங்கள் பெற்றார்கள்.  சுனாமிகளால் அழிக்க முடியாமல் போன சங்கம் முதல் முதல் கொலைவெறித் துறவிகளால் அழிக்கப்பட்டது. உலக சரித்திரத்தில் எங்குமே கிடைக்காமல், பெண்கள் ஆண்களுக்குசரியாக தமிழ் கற்று சங்கபாடல்கள் பாடியிருக்க, இன்றுவரை தமிழ் நாட்டில் பெண்களுக்கு சமகல்வி இல்லாத துறவு முறைக்கல்வி  தமிழ் நாட்டில் முதன் முதல் புகுத்தப்பட்டது. இன்று சட்டத்தில் சமத்துவம் இருக்கலாம், ஆனால் மனத்தில் இல்லை. மேலும் தமிழர்களின் இன்றைய மதங்களில் ஒன்றான முகமதியத்தில் அது சட்டத்திலும் இல்லை. தமிழருக்கு இப்படியான நிகரில்லாத அழிவைக்கொண்டு வந்தவைதான் இந்த புத்தமும், சமணமும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.