Jump to content

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

இன்று(19.06)  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபாவும் அவரோடு ஒன்றுகூடல் ஒன்றில் கலந்துகொண்ட இன்னும் பதின்னான்கு உறுப்பினர்களும் நிராயுதபாணிகளான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட நாள். ஜூன் மாதம் 19ம் திகதி 1990 அன்று சென்னையில் சக்கிரியா காலனியிலுள்ள அடுக்குமாடிக் கட்டத்தொடரிலுள்ள வீடொன்றில் பதின்நான்கு நிராயுத பாணிகள் கொல்லப்பட்ட செய்தி சென்னை முழுவதும் பரவியது. கடல் அலைகளைக் கடந்து ஈழத்தையும் சென்றடைந்தது.

naba.jpg

 

ஈழப் போராட்டத் தலைவர்களுள் ஆஜனுபாகுவான உயர்ந்த உருவமும் அமைதியான தோற்றமும் கொண்ட பத்மநாபா ஆரம்ப காலங்களில் தோழர் ரஞ்சன் என அழைக்கப்பட்டார். முன்னர் ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவராகவிருந்த பத்மநாபா 1980 ஆம் ஆண்டு ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் மந்த நிலையில் காணப்படுகிறது என்று அந்த அமைப்பிலிருந்து பிரிந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டார். நாபா உடன் வெளியேறிய ஏனையோரும் இணைந்து EPRLF இன் மத்திய குழு ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். அந்த மத்திய குழுவின் செயலாளர் நாயகமாகப் பத்மநாபா தெரிவு செய்யப்படுகின்றார்.

இலங்கையில் உருவான தேசிய விடுதலை இயக்கங்களுள் முதல் முதலாக கிராம மட்டங்களில் வெகுசன அமைப்புக்களை உருவாக்கிக்கொண்டது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியே (EPRLF) ஆகும்.

கிராமிய அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் என்று வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் எழுச்சியை தோற்றுவிப்பதற்கான அடிப்படைகளை EPRLF உருவாக்கிக் கொண்டது. ஒவ்வொரு அமைப்பிற்கும் உள்ளக வெளியகப் வெளியீடுகள், அரசியல் வகுப்புக்கள் நடத்தப்பட்டன.
1981 ஆம் ஆண்டின் இறுதியிலேயே மக்கள் விடுதலைப் படை (PLA) என்ற இராணுவப் பிரிவை உருவாக்கிக்கொண்டு பலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொள்கின்றனர்.

அந்த வேளையில் சமூக ஏகாதிபத்தியமாக தேய்ந்துகொண்டிருந்த சோவியத் ரஷ்யாவின் தமிழ் நாட்டு முகவர்களின் தலையீடுகளால் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு புறத்தில் வெகுஜன அமைப்புகளின் மீதான அக்கறை அருகிவர மறுபுறத்தில் ‘பிராந்திய நல்லிணக்கம்’ என்ற அடிப்படையில் இந்திய அரசுடன் உறவை வளர்த்துக்கொள்கின்றனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழுவில் அந்த அமைப்புன் புதிய போலித்தனமான அரசியலுக்கு எதிரான உட்கட்சிப் போராட்டங்கள் வலுவடைகின்றது. அப்போராட்டத்தில் நாபாவும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஓரணியிலும் முற்போக்கான குழுவினர் இன்னொரு அணியிலும் கருத்தியல் விவாதங்களை மேற்கொள்கின்றனர்.

1983 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இந்திய அரசும் அதன் உளவுப் பிரிவும் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதற்காகத் தெரிவு செய்துகொண்ட இயக்கங்களுள் ஈ.பி.ஆர்.எல்.எப் உம் ஒன்று.

நூற்றுக்கணக்கான கிராமப்புற இளைஞர்களை விட்டில் பூச்சிகள் போல இந்திய அரசு பயிற்சிக்கு அழைத்துச் சென்றது.

இக் காலப்பகுதியில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் மேற்பார்வையில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் உறுப்பினர்களைக் கண்காணிபதற்கு என்று உளவுப்படை ஒன்று உருவாக்கப்படுகிறது.

மக்கள் ஆய்வுப் பிரிவு (MAP) என்று அழைகப்பட்ட அந்த உளவு அமைப்பின் செயற்பாடுகள் EPRLF அமைப்பினுள் பல மோதல்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கிறது.

இந்திய அரசின் உற்பத்தியான PLA இராணுவப் பிரிவு அரசியலில் அரிவரி கூடத் தெரியாத டக்கள்ஸ் தேவாநத்தாவினால் தலைமை தாங்கப்படுகிறது. டக்களஸின் இராணுவ சாகசங்களாலும், உடல் வலிமை காரணமாகவும், இயல்பான பண்புகளாலும் இராணுவப் பிரிவின் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தார். இதனால் ஏற்பட்ட வெறுப்புணர்வினால் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் நாபா குழுவினர் டக்ளஸைப் புறக்கணிக்க ஆரம்பித்தனர். 1986 ஆம் ஆண்டில் டக்ள்ஸ் தேவாந்தாவிற்கான ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமையின் பணம் மற்றும் ஆயுதக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட டக்ளஸ் – நாபா பிளவு நிரந்தரமாகிறது. சுரேஷ் பிரேமச்சந்திரனின் கைப்பொம்மை போல நாபாவும் இந்தியாவின் கைப்பொம்மையாக சுரேசும் செயற்பட மத்திய குழுவிலும் அமைப்பு முழுவதிலும் உட்கட்சிப் போராட்டம் நடத்திய ஜனநாயக மற்றும் முற்போக்கு இளைஞர் சக்திகள் டக்ளஸ் இற்கு ஆதரவு வழங்கினர்.

1986 ஆம் ஆண்டு ஆரம்பப்பகுதிகளில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் நம்பிக்கைக்கு உரிய கபூர் என்பவர் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவு தலைவராக நியமிக்கப்படுகிறார். டக்ளஸ் குழு தனியாக இயங்க ஆரம்பிக்கிறது.

1986 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்படுகின்றது. ஆரம்ப நிலைப் போராளிகளிலிருந்து முகாம்கள் வரை இயக்க உறுப்பினர்கள் தேடித் தேடி அழிக்கப்படுகின்றனர். பலர் ஏன் மரணித்துப் போகிறோம் என்று அறியாமலே அனைதைகள் போன்று தெருக்களிலும் புலிகளின் முகாம்களிலும் கொல்லப்படுகின்றனர்.

சுரேஷ் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட கபூர் உட்பட பலர் கொல்லப்படுகின்றனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இந்தியத் தலையீட்டுக்கு எதிராகவும் மக்கள் திரள் வழிமுறைகளுக்காக்வும் உட்கட்சிப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் பலரும் புலிகளின் துப்பாக்கிகளுக்கு இரையாகின்றனர். எஞ்சியிருந்த சிலரைப் புலிகள் இயக்கத்தினர் தேடித்தேடி அழிக்கின்றனர். பலர் தமிழ்ப் பகுதிகளிலிருந்து வெளியேறி இந்தியா உட்பட வெளிநாடுகளில் தஞ்சமடைகின்றனர்,
இவர்களின் வெளியேற்றத்தோடு போராட்டத்திற்கான மற்றொரு வழிமுறையை முன்வைத்த இறுதிக் குரல்களும் மௌனிக்கப்படுகின்றன.

நூற்றுக்கணக்கான போராளிகளோடு தமிழ் நாட்டில் தஞ்சமடைந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ‘புரட்சிகர’ சுலோகங்களோடு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இந்திய உளவுத்துறையின் தயவின்றி ஒரு காத தூரம் கூட நகர முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றது.

வாழ்வாதாரத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் இந்திய அரசைத் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகின்றது.

1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது.

SURESH_PREMACHANDRan-298x300.jpg

 

இந்திய இராணுவத்துடன் இணைந்து மக்கள் மீதான தாக்குதல்களிலும் சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈடுபடுகின்றது. சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையில் வரதராஜப்பெருமாளின் ஆலோசனையுடன் மண்டையன் குழு என்ற கொலைகாரக் குழு உருவாக்கப்படுகின்றது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தாலும், ஈ.பி.ஆர்.எல்.எப் இனாலும் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுகின்றவர்களின் தலையைச் சீவிக் கொல்வதானால் மண்டையன் குழு என வடக்கிலும் கிழக்கிலும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் குழு அழைக்கப்பட்டது.

1988 டிசம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் துணையோடு நடத்தப்பட்ட போலியான தேர்த்தலில் வரதராஜப்பெருமாள் வடகிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராகிறார்.

varathan-3.jpg

 

1989 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற இந்திய அடியாள் படை ஒன்றைத் தோற்றுவிப்பதற்காக வரதாராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மநாபா ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்திய இராணுவத்தின் கட்டளையின் கீழ் செயற்படுகின்றனர்.
 

சிறுவர்களும் இளைஞர்களும் வயது வேறுபாடின்றி பயிற்சிக்காகப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பாடசாலைகளில் அருகாமையிலும், விளையாட்டு மைதானம் போன்ற இளைஞர்கள் கூடும் இடங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் துப்பாக்கிகளோடு சென்று இளைஞர்களை அழைத்துச் சென்று அசோக் ஹொட்டேலில் சிறை வைத்து இராணுவத்தில் இணைத்துக்கொண்டது. தமிழ்த் தேசிய இராணுவத்திற்கு சுரேஷ் பிரேமச்சந்தினர் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்டார்.

ஒவ்வொருதடைவையும் தெரு நாய்களைப் போன்று இளைஞர்கள் பயிற்சிக்கு என்று பிடித்துவரப்படும் போதும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் மிரட்டல் கலந்த உரையாற்றுவார். இந்திய இராணுவத்தை எதிரியாகக் கருதிய பலருக்கு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டது.

தமிழ்த் தேசிய இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் புலிகள் இயக்கத்தினரால் துரோகிப் பட்டம் வழங்கப்பட்டு இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் கொல்லப்பட்டனர்.

1990 ஆம் ஆண்டு பத்மநாபா சுரேஷ் குழுவினர் இந்திய இராணுவத்தோடு வெளியேற வரதராஜப்பெருமாள் தனி ஈழப் பிரகடனத்தை திருகோணமலையில் முன்வைக்க இலங்கை ஜனாதிபதி பிரேமதாச மாகாண சபையைக் கலைத்துவிடுகின்றார்.

வரதராஜப்பெருமாளை இந்திய இராணுவம் தனது பாதுகாப்பில் அழைத்துச் செல்கிறது. பத்மநாபாவும் மத்திய குழுவில் சிலரும் இந்திய இராணுவத்தில் வலைக்குள் தாம் முழுமையாகச் சிக்குண்டதை உணர்ந்துகொண்டதாகவும் அது தொடர்பான மத்திய குழு ஒன்று கூடல் ஒன்றை ஒழுங்கு செய்ததாகவும் கூறப்படுகின்றது. மத்திய குழு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடைவேளையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அங்கிருந்து வெளியில் செல்கிறார்.

 

அவ்வேளையில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த கொலையாளிகளால் பத்தமநாபாவும் பதின்மூன்று மத்திய குழு உறுப்பினர்களும் கொலைசெய்யப்படுகின்றனர்.

martyrs-day-2013-300x225.jpg

 

80களின் ஆரம்பத்தில் ரஞ்சன் தோழர் என்று தொலைதூரக் கிராமங்கள் பலவற்றில் அறியப்பட்ட நாபா, உண்ண உணவின்றி மக்களின் விடுதலைக்காக உழைத்திருப்பதை அந்தக் கிராமத்து மக்களே சாட்சியாகச் சொல்வார்கள்.

 

அமைதி நிறைந்த தோற்றம் கொண்ட நாபா அதிகமாகப் பேசுவதில்லை. தனது அருகிலுள்ள அனைவரின் மீதும் அன்போடு நடந்துகொள்வார். லண்டனில் மேற்படிப்பிற்காக வந்த நாபா விடுதலை இயக்கத்தில் இணைந்துகொள்வதற்காகவே திரும்பிச் சென்றவர்.

இந்திய அரசினதும் அதன் உளவுப்படையினதும் சதிவலைக்குள் சிக்குண்டு சமூக விரோதச் செயல்களுக்குத் தலைமை வகித்து ‘துரோகியாக’ கொல்லப்பட்டார். இறுதியில் நாபாவைக் கொலை செய்த துப்பாக்கிகளின் பின்னணியிலும் இந்திய உளவுத்துறையே மறைந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் பலரால் தெரிவிக்கப்படுகின்றன.

பத்மநாபாவின் பெயரால் மக்களின் அவலங்கள் குறித்துத் துயர்கொள்வதாகக் கூறும் குழுக்கள் இந்த உண்மைகளை மறைத்துவிடுகின்றன..

பத்மநாபாவை விமர்சிக்கத்துணிவற்ற அதிகாரவர்க்கத்தின் அடியாள் கும்பல்கள் ஜூன் 19ம் திகதியை தியாகிகள் தினம் என்று கொண்டாடி மகின்ழ்கின்றன.
 
http://inioru.com/?p=36145

Link to comment
Share on other sites

  • Replies 192
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது இரண்டாவது தடவை ஒட்டப்படுகிறது.

 

அதென்னமோ தெரியல்ல.. ஒட்டுக்குழுக்கள் செத்தா அதற்கு புலிகள் தான் காரணம் என்பது ஒட்டுக்குழுக்களின் எழுதாத விதியாப் போச்சுது. இன்னொரு ஆட்டிக்குட்டியொரு இணையத்தளங்களுக்கும் வேற வாய்ப்பில்ல.. கிருபண்ணாவுக்கும் முன்னாள் மாக்ஸியவாதிகளை மறக்க முடியல்ல..!

 

இவர்கள் மக்களைப் பொறுத்தவரை தண்டிக்கப்பட வேண்டிய கொடூரப் பாதகர்கள்..! மக்கள் இந்தக் கொலைகளைப் பற்றி ஆராய்வதில்லை. அது ரோ செய்தால் என்ன சிறீலங்கா உளவுப்படை செய்தால் என்ன. உதுகள் செத்துத் தொலைவது மக்களுக்கு நல்லது என்பது தான் மக்களின் முடிவு.

 

இதில் ஒருவர் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளார். அவர் டக்கிளஸ் தேவானந்தா. கட்டுரை எழுதியவருக்கு அவர் வேண்டப்பட்ட ஆள் போல..!

 

மேலும்.. புலிகள் யாழ் குடாவை இந்தியப் படைகளிடம் இருந்து கைப்பற்றிய போது.. சண்டையில் ஈடுபட்ட.. ஈபி ஆட்களைத் தவிர பிறர் கொல்லப்படவில்லை. மாறாக சரணடையச் சொன்னனர். அப்படி சரணடைந்த பலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதேபோல்.. வலிந்து சண்டையிட்ட தமிழ் தேசிய இராணுவ ஆட்களைத் தவிர சரணடைந்த பலர் விடுவிக்கப்பட்டு சாரை சாரையாக கொழும்புக்கும் வெளிநாடுகளுக்கும் போயினர். சிலர் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டனர். அப்படி இணைந்து கொண்டோரில் சாந்தன் போன்றவர்களும் அடங்குவர். ஆனால் இக்கட்டுரையில் அந்த உண்மைகளை எல்லாம் அப்படியே தூக்கிக் கடாசியாச்சு. ஒட்டுக்குழுக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் அவர்களின் கட்டுரையில் பிரதிபலிக்கிறார்களே தவிர வரலாற்றை அல்ல. ஆகவே இப்படியான கட்டுரைகளை வேலை மிணக்கட்டு ஒட்டிறவை உதுகளையும் கொஞ்சம் கவனிச்சு ஒட்டுறது நல்லம். :icon_idea:

Link to comment
Share on other sites

புலிகளுக்கு - புலிகளால் கொல்லப்பட்ட எல்லாரும் "துரோகிகள் " புலிகள் எல்லாம் "தியாகிகள்",
ஒட்டுக்குழுக்களுக்கு இது அப்படியே தலைகீழா தெரியும் ...
பிறகு எப்படி எல்லாரும் ஒரே குடையின் கீழ் வரமுடியும்?

இந்த எண்ணம் இருக்குமட்டும் ஒன்றை ஒன்று முற்றாக அழித்தொழிக்க வெளிக்கிட்டு
இப்போ ஒருத்தருக்கும் ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு வந்தாகி விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு - புலிகளால் கொல்லப்பட்ட எல்லாரும் "துரோகிகள் " புலிகள் எல்லாம் "தியாகிகள்",

ஒட்டுக்குழுக்களுக்கு இது அப்படியே தலைகீழா தெரியும் ...

பிறகு எப்படி எல்லாரும் ஒரே குடையின் கீழ் வரமுடியும்?

இந்த எண்ணம் இருக்குமட்டும் ஒன்றை ஒன்று முற்றாக அழித்தொழிக்க வெளிக்கிட்டு

இப்போ ஒருத்தருக்கும் ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு வந்தாகி விட்டது

 

இதனைச் சொல்ல....

ஒட்டுக் குழுக்களுக்கு...உரிமை இல்லை.

சந்திலை... சிந்து பாடுவதை, ஒட்டுக் குழுக்கள் நிறுத்தினால்,

தமிழினம் தன்ரை, பாட்டில் விடிவு பெறும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு - புலிகளால் கொல்லப்பட்ட எல்லாரும் "துரோகிகள் " புலிகள் எல்லாம் "தியாகிகள்",

ஒட்டுக்குழுக்களுக்கு இது அப்படியே தலைகீழா தெரியும் ...

பிறகு எப்படி எல்லாரும் ஒரே குடையின் கீழ் வரமுடியும்?

இந்த எண்ணம் இருக்குமட்டும் ஒன்றை ஒன்று முற்றாக அழித்தொழிக்க வெளிக்கிட்டு

இப்போ ஒருத்தருக்கும் ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு வந்தாகி விட்டது

 

புலிகள் தண்டனை வழங்கிய துரோகிகள் எவருமே மக்களால் தண்டிக்கப்படக் கூடாது என்று சொல்லப்பட்டவர்கள் அல்ல. மேலும் துரோகிகளை புலிகள் பகிரங்கமாக காரணத்தைச் சொல்லித்தான் தண்டித்தார்கள். துரோகிகள் எனப்படுவோர் மக்களுக்கும் தேசத்திற்கும் எதிராகச் செயற்பட்டவர்கள்.

 

ஆனால் ஒட்டுக்குழுக்களுக்கு புலிகளைத் தண்டிக்க என்ன அருகதை இருக்கிறது. ஒட்டுக்குழுக்கள் மக்களுக்கும் தேசத்திற்கும் செய்த நன்மை என்ன..???!

 

இங்கு பேசப்படும் தியாகிகள் எனப்படுவோர்.. செய்த பாதகங்கள் சாதாரண மக்களின் வாழ்வைக் கூட பாதித்துள்ளன. அந்த வகையில்.. இவர்களின் சாவுக்கு மக்கள் அனுதாபப்படவோ.... இரங்கல் செய்யவோ தயாராக இல்லை. இவர்களைப் புலிகளோடு யாரும் ஒப்பிடவே முடியாது. மக்கள் மனங்களில் புலிகளின் நிலை என்பது சொந்தப் பிள்ளைகள் என்பதாகவே உள்ளது. இவர்கள் காடையர்களாக கொலைக்காரப் பாதகர்களாக உள்ளனர். அதுதான் துரோகிகளுக்கும் உண்மைத் தியாகிகளுக்கும் உள்ள வேறுபாடு.

 

இந்தத் துரோகிகளைத் தியாகிகள் என்பதே அநியாயமானது.

 

சுரேஸ் பிரேமசத்திரனை நோர்வேயில் வைத்து மக்கள் நையப்புடைத்து அனுப்பிய பின் தான் அவர் கொஞ்சம் என்றாலும் தன்னிலை உணர்ந்தார். ஆனால்.. இதே காலப்பகுதியில் பெரும் குத்தாட்டம் போட்ட குத்தியர் இந்தக் கட்டுரையில் திட்டமிட்டுப் புறக்கணிக்கக்கப்பட்டிருப்பதானது.. அவருக்கு வேண்டப்பட்டவர்கள் இதனை ஆக்கியதற்கான ஆதாரமாக இருக்கிறது. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு - புலிகளால் கொல்லப்பட்ட எல்லாரும் "துரோகிகள் " புலிகள் எல்லாம் "தியாகிகள்",

ஒட்டுக்குழுக்களுக்கு இது அப்படியே தலைகீழா தெரியும் ...

பிறகு எப்படி எல்லாரும் ஒரே குடையின் கீழ் வரமுடியும்?

இந்த எண்ணம் இருக்குமட்டும் ஒன்றை ஒன்று முற்றாக அழித்தொழிக்க வெளிக்கிட்டு

இப்போ ஒருத்தருக்கும் ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு வந்தாகி விட்டது

 

சரி ஒரு குடையை விடுவம்.....புலியாலை சொல்லப்பட்ட துரோகிகள் 2009க்கு பிறகு எங்கை இருக்கினம்? இப்ப என்ன செய்யினம்?சரி கொல்லப்பட்டாலும் மிச்சம் மீதிகள் எங்கை எங்கை?ஆர்ப்பாடத்தையும் காணேல்லை..அணிவகுப்பையும் காணேல்லை....அடச்சீ.....நானொருமடையன் அங்கைதான் பிரச்சனை முடிஞ்சுதெல்லே...பிறகென்னத்துக்கு கொடி குத்துவிளக்கெண்டு...........

Link to comment
Share on other sites

தமிழனை தமிழன் கொன்றான் இதில் இன்னும் அதற்குள் நியாயப்படுத்தல்கள்.

//செய்த துப்பாக்கிகளின் பின்னணியிலும் இந்திய உளவுத்துறையே மறைந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் பலரால் தெரிவிக்கப்படுகின்றன.//

இப்படி ஒரு கேணத்தனமான பிட்டை வேறு போடுகின்றார்.

இதில் கூறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.

இவர்கள் தமிழர்களுக்கும் நண்பர்கள் இல்லை இந்தியாவுக்கும் நண்பர்கள் இல்லை. உலகத்துக்கும் நண்பர்கள் இல்லை.

தமக்கே அவர்கள் நண்பர்கள் இல்லை (மாத்தையா கருணா பிள்ளையான் என பட்டியல் நீள்கின்றது).

அவர்களை போராளிகள் என்றோ புரட்சிக்காரர்கள் என்றே உலகம் ஒப்பாது. (கடசிவரை உலகம் ஒப்புக்கொள்ளவில்லை)

இந்தியா என்ற மாபெரும் சக்தியை புறக்கணித்து தமிழீழம் தமிழருக்கு உரிமை என்பது சாத்தியமி்ல்லை என்று நம்பிய ஒப்பற்ற மனிதர் பத்மநாபா.

எல்லாவற்றையும் புறக்கணித்து முள்ளிவாய்க்காலில் பரிதாபமாக பயங்கரவாதமாக முடிந்த போராட்டத்தின் கதையில் நியாயப்படுத்த எதுவும் இல்லை. அப்படி அல்ல இப்படி இப்படி அல்ல அப்படி என்று சுயஇன்பம் மட்டும் காண்கின்றார்கள். கண்டு அனுபவி்க்கட்டும்.

Link to comment
Share on other sites

கெடுகாலம் சற்று மறைவாய்ப் போனால் :rolleyes:

காணாது போவர் களத்தில் - இன்றேல்

கரவு ஐடியுடன் வருவர் மீண்டே.. :icon_idea:

Link to comment
Share on other sites

சிறுவர்களும் இளைஞர்களும் வயது வேறுபாடின்றி பயிற்சிக்காகப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பாடசாலைகளில் அருகாமையிலும், விளையாட்டு மைதானம் போன்ற இளைஞர்கள் கூடும் இடங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் துப்பாக்கிகளோடு சென்று இளைஞர்களை அழைத்துச் சென்று அசோக் ஹொட்டேலில் சிறை வைத்து இராணுவத்தில் இணைத்துக்கொண்டது. தமிழ்த் தேசிய இராணுவத்திற்கு சுரேஷ் பிரேமச்சந்தினர் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்டார்.

ஒவ்வொருதடைவையும் தெரு நாய்களைப் போன்று இளைஞர்கள் பயிற்சிக்கு என்று பிடித்துவரப்படும் போதும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் மிரட்டல் கலந்த உரையாற்றுவார். இந்திய இராணுவத்தை எதிரியாகக் கருதிய பலருக்கு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டது.

 

 

 

சரியான தண்டனையை மக்களின் விருப்புக்கு இணங்க புலிகள் வழங்கினார்கள். புலிகள் முள்ளிவாய்க்காலில் கட்டாய இராணுவத்துக்கு சேர்த்தார்கள் என வரதராஜபெருமாள் சொன்ன போது நீங்களும் கட்டாயமாக மக்களை பிடித்து இராணுவப்பயிற்சி கொடுத்தீர்கள், பங்கர் வெட்ட பயன்படுத்தினீர்கள் என்று கேட்ட போது அவரால் பதிலளிக்க முடியாமல் போனதே இதற்கான 100 % நிருபணமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை தமிழன் கொன்றான் இதில் இன்னும் அதற்குள் நியாயப்படுத்தல்கள்.

//செய்த துப்பாக்கிகளின் பின்னணியிலும் இந்திய உளவுத்துறையே மறைந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் பலரால் தெரிவிக்கப்படுகின்றன.//

இப்படி ஒரு கேணத்தனமான பிட்டை வேறு போடுகின்றார்.

இதில் கூறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.

இவர்கள் தமிழர்களுக்கும் நண்பர்கள் இல்லை இந்தியாவுக்கும் நண்பர்கள் இல்லை. உலகத்துக்கும் நண்பர்கள் இல்லை.

தமக்கே அவர்கள் நண்பர்கள் இல்லை (மாத்தையா கருணா பிள்ளையான் என பட்டியல் நீள்கின்றது).

அவர்களை போராளிகள் என்றோ புரட்சிக்காரர்கள் என்றே உலகம் ஒப்பாது. (கடசிவரை உலகம் ஒப்புக்கொள்ளவில்லை)

இந்தியா என்ற மாபெரும் சக்தியை புறக்கணித்து தமிழீழம் தமிழருக்கு உரிமை என்பது சாத்தியமி்ல்லை என்று நம்பிய ஒப்பற்ற மனிதர் பத்மநாபா.

எல்லாவற்றையும் புறக்கணித்து முள்ளிவாய்க்காலில் பரிதாபமாக பயங்கரவாதமாக முடிந்த போராட்டத்தின் கதையில் நியாயப்படுத்த எதுவும் இல்லை. அப்படி அல்ல இப்படி இப்படி அல்ல அப்படி என்று சுயஇன்பம் மட்டும் காண்கின்றார்கள். கண்டு அனுபவி்க்கட்டும்.

நீங்கள் மட்டும் .... யாருக்கும் தெரியாமல் ஈழம் அமைத்து. அதை ஒழித்து வைத்து அதில் வாழ்கிறீர்கள் ஆக்கும்???

 
 
நீங்கள் எழுதியதுதான் உண்மை...
பத்மநாபா தான் ஒப்பற்ற தலைவர்.
அதுதான் அசோகா கோட்டலில் குடியிருந்து ஒப்பற்ற விபச்சாரம் செய்தவர்.
 
உயிரை பணயம் வைத்து இந்திய காவல் அரணுக்குள் புகுந்து முளையிலேயே ....
நாபா இந்தியாவில் இருந்து கொண்டுவந்த கேரளா காரிகளை  போட்டுத்தள்ளிய புலிகள் பயங்கர வாதிகள்தான்.
Link to comment
Share on other sites

தமிழரின் அவல நிலைக்கு காரணம்  தேடி எங்கும் அலையத்  தேவை இல்லை. இந்த இணையத்தில் வரும் கருத்துக்களை தொடர்ந்து வாசித்தால் புரிந்துவிடும்.

இயக்கங்களில் ஒரு தவறுமில்லை. அவர்கள் யாழ்பாணத்தவரின் விருப்புக்களை  பிரதிபலித்து  பலிக்கடாவாகினர்.   என்னுடைய இனம் அல்லாதவர்கள் கலாசார காமுகர்கள். என்னுடைய கருத்தை ஏற்காதவர்கள் எதிரிகள். என்னை முற்று முழுதாக ஏற்காதவர்கள் முட்டாள்கள். என்னை சார்ந்தவர்களும் எனது கருத்தை ஒத்தவர்களும் மட்டுமே உத்தமர்கள். புத்திசாலிகள் மற்றவரை அழித்தொழிப்பதில் தவறில்லை. இதுவே யாழ்ப்பான தமிழரின் பெரும் போக்கு.  இது மாறுவதற்கு நிறைய காலம் தேவைப்படும். உலகெங்கும் சிதறி அறிவையும் அனுபவத்தையும் பெற்றும் அதிகம் மாறுவதாகத் தெரியவில்லை. புலம் பெயந்த தேசத்தில் அடுத்த சந்ததிக்கும் அதை கொடுத்து வருகிறார்கள். இது மாற வேண்டும். அதுவே தமிழருக்கும் தமிழர் அல்லாதவர்க்கும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலிச்ச பெட்டை கடிதத்தை வாங்கவில்லை என்றால் ..........

நேரடியாக எழுதி ஆலோசனை கேட்கலாம்.
Link to comment
Share on other sites

சரி ஒரு குடையை விடுவம்.....புலியாலை சொல்லப்பட்ட துரோகிகள் 2009க்கு பிறகு எங்கை இருக்கினம்? இப்ப என்ன செய்யினம்?சரி கொல்லப்பட்டாலும் மிச்சம் மீதிகள் எங்கை எங்கை?ஆர்ப்பாடத்தையும் காணேல்லை..அணிவகுப்பையும் காணேல்லை....அடச்சீ.....நானொருமடையன் அங்கைதான் பிரச்சனை முடிஞ்சுதெல்லே...பிறகென்னத்துக்கு கொடி குத்துவிளக்கெண்டு...........

 

"துரோகிகளின்" முதுகெலும்பு புலிகளால் முறிக்கப்பட்டு விட்டது..பின் அவர்களுக்கு

இருந்த ஒரே வழி "யார்" காலில் விழுந்தாவது உயிரை காப்பது தான்....

சகோதரன் தமிழனே விரட்டி விரட்டி கொல்லும் போது

பிச்சை (உயிர்/உணவு) போடும் சிங்களவன் சொல்லு கேப்பானா?

தமிழரின் அவல நிலைக்கு காரணம்  தேடி எங்கும் அலையத்  தேவை இல்லை. இந்த இணையத்தில் வரும் கருத்துக்களை தொடர்ந்து வாசித்தால் புரிந்துவிடும்.

இயக்கங்களில் ஒரு தவறுமில்லை. அவர்கள் யாழ்பாணத்தவரின் விருப்புக்களை  பிரதிபலித்து  பலிக்கடாவாகினர்.   என்னுடைய இனம் அல்லாதவர்கள் கலாசார காமுகர்கள். என்னுடைய கருத்தை ஏற்காதவர்கள் எதிரிகள். என்னை முற்று முழுதாக ஏற்காதவர்கள் முட்டாள்கள். என்னை சார்ந்தவர்களும் எனது கருத்தை ஒத்தவர்களும் மட்டுமே உத்தமர்கள். புத்திசாலிகள் மற்றவரை அழித்தொழிப்பதில் தவறில்லை. இதுவே யாழ்ப்பான தமிழரின் பெரும் போக்கு.  இது மாறுவதற்கு நிறைய காலம் தேவைப்படும். உலகெங்கும் சிதறி அறிவையும் அனுபவத்தையும் பெற்றும் அதிகம் மாறுவதாகத் தெரியவில்லை. புலம் பெயந்த தேசத்தில் அடுத்த சந்ததிக்கும் அதை கொடுத்து வருகிறார்கள். இது மாற வேண்டும். அதுவே தமிழருக்கும் தமிழர் அல்லாதவர்க்கும் நல்லது.

 

ஈழ தமிழரால் உலக மேம்பாட்டுக்கான கண்டுபிடிப்புகள் எத்தனை

என்று கணக்கிட்டால் எங்களது உண்மையான அறிவு நிலையும் தெரியும்

யாரும் சொல்லிகொடுத்தால் அதை கவனமாக படிப்போம் ...இல்லை என்றால் ஞான சூனியம் தான்

 

சரியான தண்டனையை மக்களின் விருப்புக்கு இணங்க புலிகள் வழங்கினார்கள். புலிகள் முள்ளிவாய்க்காலில் கட்டாய இராணுவத்துக்கு சேர்த்தார்கள் என வரதராஜபெருமாள் சொன்ன போது நீங்களும் கட்டாயமாக மக்களை பிடித்து இராணுவப்பயிற்சி கொடுத்தீர்கள், பங்கர் வெட்ட பயன்படுத்தினீர்கள் என்று கேட்ட போது அவரால் பதிலளிக்க முடியாமல் போனதே இதற்கான 100 % நிருபணமானது.

 

இதை சொன்னா துரோகிகள் என்கிறார்கள்..

எல்லாரும் பலமாக இருக்கும் போது படம் காட்டிவிட்டு ...

கத்தி கழுத்துக்கு வரும்போது....முதல் தள்ளி விடப்படுவது சாதாரண பொது மக்கள் தான்

1989 இலும் அது தான்...2009 இலும் அது தான்  :)

எங்களது எல்லா போராளிகளும் ஒன்றையே செய்தார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"துரோகிகளின்" முதுகெலும்பு புலிகளால் முறிக்கப்பட்டு விட்டது..பின் அவர்களுக்கு

இருந்த ஒரே வழி "யார்" காலில் விழுந்தாவது உயிரை காப்பது தான்....

சகோதரன் தமிழனே விரட்டி விரட்டி கொல்லும் போது

பிச்சை (உயிர்/உணவு) போடும் சிங்களவன் சொல்லு கேப்பானா?

 

ஈழ தமிழரால் உலக மேம்பாட்டுக்கான கண்டுபிடிப்புகள் எத்தனை

என்று கணக்கிட்டால் எங்களது உண்மையான அறிவு நிலையும் தெரியும்

யாரும் சொல்லிகொடுத்தால் அதை கவனமாக படிப்போம் ...இல்லை என்றால் ஞான சூனியம் தான்

 

 

டெலோ தாஸ் குறுப்பை சேர்ந்த பலரை புலிகள் இந்தியாவிற்கே கொண்டு சென்று விட்டார்கள்.

கிழக்கை சேர்ந்த புளொட்டை புலிகள்தான் வண்டி ஏற்றினார்கள்.
ஈப்பி அது முதலேயே பிச்சை எடுத்துதான் ரோட்டில் நின்றது. மக்கள் பிச்சை போடுவதை நிறுத்தியதும் அவர்களும் வீடுகளுக்கு சென்றுவிட்டார்கள்.
 
இந்த காலில் விழுந்து "உயிரை பாதுகாத்தவர்கள் யார்"?? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அதென்னமோ தெரியல்ல.. ஒட்டுக்குழுக்கள் செத்தா அதற்கு புலிகள் தான் காரணம் என்பது ஒட்டுக்குழுக்களின் எழுதாத விதியாப் போச்சுது. இன்னொரு ஆட்டிக்குட்டியொரு இணையத்தளங்களுக்கும் வேற வாய்ப்பில்ல.. கிருபண்ணாவுக்கும் முன்னாள் மாக்ஸியவாதிகளை மறக்க முடியல்ல..!

தமிழர்களின் போராட்ட வரலாற்றில் நடந்தவற்றைப் பற்றி ஒவ்வொருவரும் தமது அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து கருத்துக்கள் விமர்சனங்கள் வைக்கும்போது உண்மைகள் அடிபட்டுப் போகலாம். எனவேதான் பலதையும் படித்து பகுத்தாராய்ந்து உண்மைகளை பொய்களில் இருந்து விலக்கி வடிகட்டி எடுக்கவேண்டும். அதனால்தான் இப்படியான கட்டுரைகளை இணைப்பதுண்டு.

மேலும் தியாகிகள் தினம், வீரமக்கள் தினம் என்று தமது இயக்கங்கள் சார்ந்து நினைவு நாட்களை நடாத்துபவர்கள் தமது வேறுபட்ட அரசியலைத்தான் அடையாளப்படுத்துகின்றனர்.

தியாகிகள் தின நிகழ்வுகளுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன், டக்ளஸ் தேவானந்தா போன்றோர் போவதில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

 

 

1989 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற இந்திய அடியாள் படை ஒன்றைத் தோற்றுவிப்பதற்காக வரதாராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மநாபா ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்திய இராணுவத்தின் கட்டளையின் கீழ் செயற்படுகின்றனர்.

 

சிறுவர்களும் இளைஞர்களும் வயது வேறுபாடின்றி பயிற்சிக்காகப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பாடசாலைகளில் அருகாமையிலும், விளையாட்டு மைதானம் போன்ற இளைஞர்கள் கூடும் இடங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் துப்பாக்கிகளோடு சென்று இளைஞர்களை அழைத்துச் சென்று அசோக் ஹொட்டேலில் சிறை வைத்து இராணுவத்தில் இணைத்துக்கொண்டது. தமிழ்த் தேசிய இராணுவத்திற்கு சுரேஷ் பிரேமச்சந்தினர் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்டார்.

ஒவ்வொருதடைவையும் தெரு நாய்களைப் போன்று இளைஞர்கள் பயிற்சிக்கு என்று பிடித்துவரப்படும் போதும் 

 

 

 

புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்தமைக்காக புலிகளையும்

அவர்களை ஆதரித்தமைக்காக என்னையும்

என் பிள்ளையையும் வெறுக்கும்  திருவாளர் அர்யூன் அவர்கள்

 

தனது ஒரே ஒரு தலைவர் பத்மநாபாதான் முதன் முதலாக இதை ஆரம்பித்து வைத்தார் என்பதனையும்

அந்த தலைவரை தான் இன்றும் ஆதரிப்பதையும்  இங்கு ஏன் இந்த இரட்டை வேடம் என்பதையும் விளக்குவாரா????

(இந்த கட்டுரை புலிகளுக்கு எதிராக எழுதப்பட்டிருந்தாலும் அதிலேயே  உள்ள விவகாரங்களையே  கேட்கின்றேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிள்ளை பிடியில் ஈ என் டி எல் எவ் னதும் பங்களிப்பு இந்த ஒருதலைப்பட்ச நோக்கம் கொண்ட எழுத்தில்.. முற்றாக மறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிள்ளை பிடி மட்டுமல்ல. பொம்பிளைப் பிள்ளைகளைக் கடத்திச் சென்று இந்திய இராணுவத்திற்கும் தமது உயர் மட்ட உறுப்பினர்களுக்கும் சப்பிளை செய்து பின்னர் கொன்று புதைத்தனர். இவர்களின் மிகப் பெரிய வதை முகாம்.. மானிப்பாய் வீதியில் யாழ் நகரை அண்டி இயங்கியது. அந்தக் காலத்தில் பள்ளிச் சிறுவர்கள் கூட அந்தப் பாதையால் போக.. முடியாதிருந்தது. அந்தளவுக்கு கெடுபிடிகள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

நாளைக்கு கனடாவில் நடைபெறும் நினைவு நாளில் ஒரு சில வார்த்தைகள் பேசலாம் என யோசிக்கின்றேன்.

அதற்கு இங்கு பலர் குறிப்புகள் தந்ததற்கு நன்றி .

Link to comment
Share on other sites

நாலு வரிகள் இத்திரியில் எழுத முடியாதவர் எதனை பேசப் போகிறீர்கள்??

Link to comment
Share on other sites

இடம் காலம் பொருள் ஏவல் என்று இருக்கு .

அதைவிட களம் வேறு தளம் வேறு. இவையெல்லாவற்றையும் விட மாறுபட்ட ஆழுமை என்பது முற்றிலும் வேறு .அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சந்தித்தவர்களுக்கு மட்டும் அது விளங்கும் .

 

Link to comment
Share on other sites

இடம் காலம் பொருள் ஏவல் என்று இருக்கு .

அதைவிட களம் வேறு தளம் வேறு. இவையெல்லாவற்றையும் விட மாறுபட்ட ஆழுமை என்பது முற்றிலும் வேறு .அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சந்தித்தவர்களுக்கு மட்டும் அது விளங்கும் .

 

 

யாழ் களத்திலும் நிறைய பி எச் டிக்கள் உள்ளனர். புத்தி ஜீவிகளும் நிறைய பேர் உள்ளார்கள்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.