Jump to content

நாங்கள் ஏன் இலக்கிய சந்திப்பில் இல்லை? - யோ. கர்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏன் இலக்கிய சந்திப்பில் இல்லை?

- யோ. கர்ணன்

ஐரோப்பாவிலுள்ள நண்பரொருவர் சிலதினங்களின் முன்னர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அது சற்றே நீண்டது. அதன் குறிப்பிட வேண்டிய பகுதிகள் கீழே உள்ளன.

‘சில விடயங்களை ஊகிக்கத்தான் முடியும். ஆதாரங்களுடன் நிறுவ முடியாது. ஆதாரமான நம்பிக்கைகளினடிப்படையில் முன்னேறிச் சென்று கொண்டிருந்தால், சிலவேளைகளில் அவற்றை ஆதாரங்களுடன் நிறுவவும் கூடும். இலக்கிய சந்திப்பு விவகாரமும் இவ்வாறனதே. இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதே ஒருவிதமான உள்நோக்கத்தினடிப்படையிலானதுதான் என்பதே எனதும் இங்குள்ள சில தோழர்களினதும் அசையாத நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அதனை ஆதாரபூர்வமாக நிறுவ முடியவில்லை. உங்கள் முகப்புத்தக தகவல்களை கவனித்து வருகிறேன். எனது நம்பிக்கைகளிற்கான பல ஆதாரங்கள் இப்பொழுது கிடைத்துள்ளது என்றே நினைக்கிறேன். ஆனாலும், எந்த சந்தர்ப்பத்திலும் இலக்கிய சந்திப்பு குழாமிலிருந்து நீங்கள் விலககூடாது. வளைந்து கொடுக்காமல், அதிகாரங்களிற்கு எதிரான சந்திப்பொன்று நடப்பதை உறுதி செய்வது உங்கள் கடமை. ஏனெனில், சந்திப்பை இலங்கைக்கு எடுத்து சென்றுவிட்டு பாதியில் விட்டு செல்வது, சந்திப்பு பாரம்பரியத்தை ஊறு செய்ய கூடியது.’ என நீண்டு சென்ற அவரது மின்னஞ்சலிற்கு நானும் நீண்ட பதிலளித்திருந்தேன்.

‘மன்னிக்கவும். சில விடயங்களில் நீங்கள் தவறான புரிதல்களை கொண்டிருக்கிறீர்கள். இலக்கியசந்திப்பு இலங்கைக்கு வரவேண்டுமென நான் எந்த சந்தர்ப்பத்திலும் குரல் கொடுத்திருக்கவில்லை. உண்மையில் இலங்கையில் சுயாதீனமாக எழுதவும், பேசவும் உகந்ததான சூழல் இன்றில்லை. அண்மையில் நடைபெற்ற எனது நூல் வெளியீட்டில் கூட பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சாதாரண எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள்தான் இலங்கையில் நெருக்கடிகளை எதிர் கொள்கிறார்கள் என்றில்லை. அதிகாரத்தை சார்ந்து நிற்காத கட்சிகள், அமைச்சர்கள், தலைவர்கள் என யாருமே இயங்க முடியாத ஒரு காலத்தை நோக்கி நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம்.

நிலமை இவ்வாறிருக்க, இலங்கையில் நெருக்கடிகள் இல்லையென்று சொல்ல, நான் இன்னும் அரசகட்சிகளெதிலும் அங்கத்தவனாகவில்லை. இலங்கையில் நடக்கும் சகலவிதமான அநீதிகளிற்கெதிராகவும் குரல் கொடுக்கும் என ஏற்பாட்டாளர்கள் வழங்கிய உறுதிமொழியினடிப்படையிலேயே நான் இலங்கை எற்பாட்டு குழுவில் அங்கத்தவனாகினேன். ஆனால் யதார்த்தம் அந்த உறுதிமொழிகளை அண்மித்ததாக கூட இருக்கவில்லை.

உங்களிற்கு தெரிந்திருக்கலாம், இந்த இலக்கிய சந்திப்பு குழாம் வலுவான குடும்ப ஆதிக்கத்திற்குள் உட்பட்டிருப்பது. தமிழ் தேசிய அரசியலின் தீவிர எதிர்பாளர்களான வாசுகி போன்றவர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். இந்த நிழல் ஆதிக்கத்திலிருந்து வெளிவர முடியாமல், ‘மாற்றுகருத்து’ நண்பர்கள் திண்டாடுகிறார்கள். வாசுகி, தமிழ்அழகன் போன்றவர்கள் தீவிரமான தமிழ்தேசிய அரசியல் எதிர்ப்பாளர்களாக மட்டுமல்லாமல், அதனைவிட தீவிரமான அரச ஆதரவாளர்களாகவும் உள்ளனர்.

யுத்தத்தின் பின்னர், ஆட்சியாளர்கள் கட்டமைக்க முயலும் ‘தேசியத்தை’ ஏற்று கொள்வதும், வலுப்படுத்துவதும் தமது வரலாற்று கடமையென கருதுகிறார்கள். இலங்கையிலுள்ள சிறுபான்மையின தேசியங்களை அவர்கள் நிராகரிக்கிறார்கள். இந்த வகையான கருத்துக்கள் இலக்கிய சந்திப்பில் ஒலிக்க கூடாதென்பது அவர்களின் பிரதான செயற் திட்டமாகவே இருக்கின்றது.

இந்த போக்கை எதிர்த்ததுடன், தமிழ்தேசிய கருத்து நிலை சார்ந்தவர்களையும் பேச்சாளர்களாக பிரேரித்தேன். இதனால் முரண்பாடு முற்றியது. குறிப்பாக யாழ் பல்கலைகழக சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் குமரவடிவேல் கலந்து கொள்ளகூடாதென்பதில் உறுதியாக இருந்தனர். இதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள வாசுகி தொடக்கம் லண்டனிலுள்ள அவரது இரத்த உறவுகள் வரை ஒரு குடும்பமே சன்னதமாடியது.

இதன் அடுத்த கட்டமாக, ‘இலங்கை தேசியத்தை’ முன்னிலைப்படுத்திய பார்வைகளிற்கு இடையூறாக இருந்தவர்களை தவிர்த்துவிட்டு, அரச ஆதரவாளர்கள் மட்டும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து செல்கிறார்கள். ஆகவே, நீங்கள் விரும்பவதை போல -நாங்கள் விரும்பினாலும்- இனி ஆலோசனை கூட்டங்களில் பங்கெடுக்க முடியாது. ஆலோசனை கூட்டங்களில் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக அரச ஆதரவாளர்களாக மாறவும் நாங்கள் தயாராகயில்லை’. இதுதான் இலங்கையில் யூலைமாத பிற்பகுதியில் நடக்கவுள்ள 41வது இலக்கிய சந்திப்பின் சுருக்கமான கதையும், தற்போதைய நிலவரமும். இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கின்றதென்ற சுருக்கமான அறிமுகமொன்றாவது கிடைத்திருக்குமென நம்புகிறேன்.

இலங்கை சந்திப்பு சகலவிதமான ஒடுக்குமுறைகளிற்கும் எதிரானதாக இருக்குமென்ற ஏற்பாட்டாளர்களின் உறுதிமொழிக்கும், யாழ்ப்பாண குழவின் கூட்டங்களிற்கும் ஒரு புள்ளியளவான தொடர்பும் இருந்திருக்கவில்லை. இந்த குழு பெரும்பாலும் ஏற்பாட்டாளர்களின் நண்பர்கள், சக செயற்பாட்டாளர்களினால் ஆனது. மேற்குறிப்பிட்ட நான்கு பேரும்தான் வெளியில் இருந்து உள்நுழைநதவர்கள். மிகுதியானவர்களெல்லோரும் கிட்டதட்ட ஒரேவித சிந்தனை, கருத்து உடையவர்கள்தான்.

முதலாவது கூட்டம் வாசுகி வீட்டில் நடந்த பொழுதே, இந்த முரண்பாடுகள் ஆரம்பித்துவிட்டன. அன்றைய சந்திப்பில் வாசுகி, வேல்.தஞ்சன், கருணாகரன், இராகவன், தாஸ், நான் ஆகியோர் கலந்து கொண்டோம். தாஸ் மற்றும் என்னை தவிர்ந்த மற்றையவர்கள் சந்திப்பை மாற்றுகருத்தாளர் சங்கமமாக நடத்த வேண்டுமென பிடிவாதமாக இருந்தனர். இதனால், சுமுகமான உடன்பாட்டை எட்ட முடியாமல் போனதுடன், அது பற்றி தொடர்ந்து பேசுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

எந்தெந்த விடயங்களை இலக்கியசந்திப்பில் பேசுவதென்ற உரையாடல் ஆரம்பித்ததும், தேசிய இனப்பிரச்சனை என்ற எனது முதலாவது பரிந்துரையை முன் வைத்தேன். தாஸ் தவிர்ந்த மற்றவர்களிடமிருந்து அதற்கு பலமான எதிர்ப்பு உருவானது. ஒரு நண்பர் கேட்டார், ‘இலங்கையில் இப்ப உங்களிற்கு என்ன பிரச்சனை’ என. இன்னொரு நண்பர் கேட்டார், ‘தேசிய இனப்பிரச்சனை என எதனை சொல்லுகிறீர்கள். நாங்களும் இலங்கையில்தானே இருக்கிறோம். அப்படியொன்றையும் உணரவில்லை’ என.

எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவே, பரிந்துரைகளை எழுத தயாhக இருந்த ஒருவர், தனது கையினால் தேசிய இனப்பிரச்சனை என்ற ஒன்றை எழுதவே மாட்டேன் என வெள்ளைதாளை கீழே வைத்துவிட்டார். இறுதியில், நானே தாளை எடுத்து தேசிய இனப்பிரச்சனையை முதலாவது பரிந்துரையாக எழுத வேண்டியதாயிற்று. இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை என்ற ஒன்று கிடையவே கிடையாதென தொடர்ந்து வாசுகி பிடிவாதமாக இருந்ததனால், ‘சமூகத்தில் மேல் தட்டில் இருப்பவர்களிற்கும், அரசுடன் இருப்பவர்களிற்கும் அதனை உணர்வதில் சிக்கல்கள் உள்ளன’ என கூற வேண்டியதாயிற்று. அது சற்று தடித்த வார்த்தையாக இருந்த போதும், எல்லைமீறியதாகவோ அவதூறானதாகவோ இல்லையென்பதே எனது உறுதியான எண்ணம்.

இலக்கிய சந்திப்பு அரச ஆதரவாளர்களின் கையில் உள்ளதென நான் சொல்வது, அகப்பட்ட கல்லை எறியும் உத்தியல்ல. உண்மையில் நோயாளர்களை நோயாளர்களெனவும், மருத்துவர்களை மருத்துவர்களெனவும், தேசியவாதிகளை தேசியவாதிகளெனவும், எதிர் தேசியவாதிகளை எதிர் தேசியவாதிகளென்றும் அழைப்பதில் எனக்கு தயக்கங்கள் எதுவும் கிடையாது. அவர்களும் வெட்கப்படவோ பெருமைப்படவோ வேண்டியதில்லை.

அரசஆதரவாளர்கள் என நான் எந்த அடிப்படையில் குறிப்பிட்டேன் என்றால், இப்பொழுது குழுவில் உள்ளவர்களில் பெரும்பகுதியினர் தாங்கள் அரச ஆதரவாளர்கள், அந்த நிலைப்பாட்டிற்கு பாதகமான சந்திப்பை நடத்த மாட்டோம் என்ற வெளிப்படையான நிலைப்பாட்டில் உள்ளவர்கள்தான். மிகுதியானவர்கள், அரச ஆதரவு தமிழ்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுபவர்கள். இன்றைய திகதியில் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் அனைவருமே இந்த இரண்டில் ஏதாவதொன்றாகவே உள்ளனர். வரும்தேர்தலில், அரசதரப்பு வேட்பாளரான ஒருவரும் உள்ளார்.

சமயங்களில் சந்திப்பு நடப்பது வாசுகி வீட்டிலா அலரிமாளிகையிலா என்பது மாதிரியான குழப்பங்கள் கூட எனக்கு ஏற்படுவதுண்டு. கதையின் இடையில் ஒருவர் சொல்வார், தான் யாழ் படைகளின் தளபதியை மாதமொருமுறையாவது சந்திப்பதாகவும், கடந்த சந்திப்பில் தளதியிடம் கேட்டு கொண்டதாக, விடயத்தை பெருமை பொங்க சொன்னார். யாழ்ப்பாணத்திலுள்ள படைகளின் எண்ணிக்கையை குறைக்க சொல்லியிருப்பார் என யாரும் நினைத்து விடாதீர்கள். கிராமங்களில் குழு சண்டை நடந்தால், அதில் சம்மந்தப்பட்ட வெள்ளாளர்களிற்கு நல்ல அடி குடுக்குமாறு கேட்டு கொண்டாராம்.இன்னொருவர் வரும் மாகாண சபை தேர்தலிற்காக தங்களிற்கும் அரசுக்குமிடையில் நடக்கும் ‘டீலிங்’ பற்றி பேசுவார்.இன்னொருவர் ஆளுனருடன் தான் எங்கெல்லாம் சுற்றுலா செல்கிறேன் என்பதை சொல்வார்.

இந்த பின்னணியில், நம்மிடம் இரண்டு தெரிவுகள் மட்டுமேயிருந்தன.

1. நாங்கள் தனி குழுவாக கூடி, புதிய நிகழ்ச்சி நிரலொன்றை முன் வைப்பது.

2. ஒதுங்கி செல்வது.

ஆரம்பத்தில் முதலாவதுதான் எமது இலக்காக இருந்தது. அப்படி நடந்திருந்தால், நான் உட்பட நான்கு நண்பர்கள் இந்த அணியில் இரந்திருப்போம். ஆனாலும் அந்த தீர்மானத்தை கைவிட வேண்டியதாயிற்று. காரணம், இரண்டு நண்பர்கள் திடீரென தயங்கினார்கள். அவர்களது தயக்கமும் ஏற்று கொள்ளகூடியதே. அரசுடன் தொடர்புடைய இந்த அணியுடன் முரண்பட்டால் தமக்கு உயிராபத்து கூட ஏற்படாலாம், அதனால் தனிப்பட்ட காரணங்களை காட்டி ஒதுங்கி கொள்வதாக சொன்னார்கள். இது பற்றி சொல்வதற்கு என்னிடம் கருத்துக்களெதுவும் கிடையாது.

இலங்கை சூழலை புரிந்து கொண்டதனால், முதலாவது வழிமுறையை கைவிடுவதென அனைவரும் தீர்மானித்துள்ளோம். அந்த இரண்டு நண்பர்கள் தவிர்ந்த, திசேராவும் நானும் இலக்கிய சந்திப்பு குழாமிலிருந்து விலகுகிறோம் என்ற தீர்மானத்தை பகிரங்கமாக அறிவித்து, ஒதுங்கி கொள்வதென்று எடுக்கப்பட்ட முடிவினடிப்படையில் இந்த குறிப்பை இங்கு பகிர்ந்துள்ளேன்.

(சஞ்சிகையொன்றில் வெளிவரவுள்ள விரிவான குறிப்பொன்றிலிருந்து தேர்ந்தெடுத்த சிறு குறிப்புகள்)

http://yokarnan.com/?p=446

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின் பின்னர், ஆட்சியாளர்கள் கட்டமைக்க முயலும் ‘தேசியத்தை’ ஏற்று கொள்வதும், வலுப்படுத்துவதும் தமது வரலாற்று கடமையென கருதுகிறார்கள். இலங்கையிலுள்ள சிறுபான்மையின தேசியங்களை அவர்கள் நிராகரிக்கிறார்கள். இந்த வகையான கருத்துக்கள் இலக்கிய சந்திப்பில் ஒலிக்க கூடாதென்பது அவர்களின் பிரதான செயற் திட்டமாகவே இருக்கின்றது.
இதற்காக பலர் சிட்னியிலும் செயற்படுகிறார்கள்......இணைப்பிற்க்கு நன்றிகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கும் தகவலுக்கும் கிருபன்

Link to comment
Share on other sites

////இதன் அடுத்த கட்டமாக, ‘இலங்கை தேசியத்தை’ முன்னிலைப்படுத்திய பார்வைகளிற்கு இடையூறாக இருந்தவர்களை தவிர்த்துவிட்டு, அரச ஆதரவாளர்கள் மட்டும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து செல்கிறார்கள்.//

 

\\அன்றைய சந்திப்பில் வாசுகி, வேல்.தஞ்சன், கருணாகரன், இராகவன், தாஸ், நான் ஆகியோர் கலந்து கொண்டோம். தாஸ் மற்றும் என்னை தவிர்ந்த மற்றையவர்கள் சந்திப்பை மாற்றுகருத்தாளர் சங்கமமாக நடத்த வேண்டுமென பிடிவாதமாக இருந்தனர்.\\

 

மேற் குறிப்பிட்ட தகவலின் படி, கர்ணனே , கருணாகரனை சிறிலங்கா அரச ஆதரவாளராக இனம் காட்டி உள்ளார். தனிப்பட்ட நட்பை ஒருவரின் அரசியல் நிலைக்கு அப்பால் நிறுத்துவது, அரசியலா நட்பா என்றால், அந்த நட்பு இன விடுதலைக்கான துரோகத்தை செய்யத் துணிந்த நிலையில் தேவையா என்பதை , திருமதி .சாந்தி அவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

 

கருணாகரனின் செயற்பாடுகளை கர்ணனன் நன்கு அறிந்தே இதனை எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இன்னமும் உயிரோடு இருக்கிறாரா??

 
 
மாதம் ஒருமுறை என்றாலும் எழும்பி கூவ கூடாதா??
அப்பதானே உலகம் விடியும். இப்படியே இருளுக்குள் எத்தனை நாளிக்குதான் இருக்கிறது??
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.