Jump to content

நாங்கள் ஏன் இலக்கிய சந்திப்பில் இல்லை? - யோ. கர்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏன் இலக்கிய சந்திப்பில் இல்லை?

- யோ. கர்ணன்

ஐரோப்பாவிலுள்ள நண்பரொருவர் சிலதினங்களின் முன்னர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அது சற்றே நீண்டது. அதன் குறிப்பிட வேண்டிய பகுதிகள் கீழே உள்ளன.

‘சில விடயங்களை ஊகிக்கத்தான் முடியும். ஆதாரங்களுடன் நிறுவ முடியாது. ஆதாரமான நம்பிக்கைகளினடிப்படையில் முன்னேறிச் சென்று கொண்டிருந்தால், சிலவேளைகளில் அவற்றை ஆதாரங்களுடன் நிறுவவும் கூடும். இலக்கிய சந்திப்பு விவகாரமும் இவ்வாறனதே. இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதே ஒருவிதமான உள்நோக்கத்தினடிப்படையிலானதுதான் என்பதே எனதும் இங்குள்ள சில தோழர்களினதும் அசையாத நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அதனை ஆதாரபூர்வமாக நிறுவ முடியவில்லை. உங்கள் முகப்புத்தக தகவல்களை கவனித்து வருகிறேன். எனது நம்பிக்கைகளிற்கான பல ஆதாரங்கள் இப்பொழுது கிடைத்துள்ளது என்றே நினைக்கிறேன். ஆனாலும், எந்த சந்தர்ப்பத்திலும் இலக்கிய சந்திப்பு குழாமிலிருந்து நீங்கள் விலககூடாது. வளைந்து கொடுக்காமல், அதிகாரங்களிற்கு எதிரான சந்திப்பொன்று நடப்பதை உறுதி செய்வது உங்கள் கடமை. ஏனெனில், சந்திப்பை இலங்கைக்கு எடுத்து சென்றுவிட்டு பாதியில் விட்டு செல்வது, சந்திப்பு பாரம்பரியத்தை ஊறு செய்ய கூடியது.’ என நீண்டு சென்ற அவரது மின்னஞ்சலிற்கு நானும் நீண்ட பதிலளித்திருந்தேன்.

‘மன்னிக்கவும். சில விடயங்களில் நீங்கள் தவறான புரிதல்களை கொண்டிருக்கிறீர்கள். இலக்கியசந்திப்பு இலங்கைக்கு வரவேண்டுமென நான் எந்த சந்தர்ப்பத்திலும் குரல் கொடுத்திருக்கவில்லை. உண்மையில் இலங்கையில் சுயாதீனமாக எழுதவும், பேசவும் உகந்ததான சூழல் இன்றில்லை. அண்மையில் நடைபெற்ற எனது நூல் வெளியீட்டில் கூட பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சாதாரண எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள்தான் இலங்கையில் நெருக்கடிகளை எதிர் கொள்கிறார்கள் என்றில்லை. அதிகாரத்தை சார்ந்து நிற்காத கட்சிகள், அமைச்சர்கள், தலைவர்கள் என யாருமே இயங்க முடியாத ஒரு காலத்தை நோக்கி நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம்.

நிலமை இவ்வாறிருக்க, இலங்கையில் நெருக்கடிகள் இல்லையென்று சொல்ல, நான் இன்னும் அரசகட்சிகளெதிலும் அங்கத்தவனாகவில்லை. இலங்கையில் நடக்கும் சகலவிதமான அநீதிகளிற்கெதிராகவும் குரல் கொடுக்கும் என ஏற்பாட்டாளர்கள் வழங்கிய உறுதிமொழியினடிப்படையிலேயே நான் இலங்கை எற்பாட்டு குழுவில் அங்கத்தவனாகினேன். ஆனால் யதார்த்தம் அந்த உறுதிமொழிகளை அண்மித்ததாக கூட இருக்கவில்லை.

உங்களிற்கு தெரிந்திருக்கலாம், இந்த இலக்கிய சந்திப்பு குழாம் வலுவான குடும்ப ஆதிக்கத்திற்குள் உட்பட்டிருப்பது. தமிழ் தேசிய அரசியலின் தீவிர எதிர்பாளர்களான வாசுகி போன்றவர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். இந்த நிழல் ஆதிக்கத்திலிருந்து வெளிவர முடியாமல், ‘மாற்றுகருத்து’ நண்பர்கள் திண்டாடுகிறார்கள். வாசுகி, தமிழ்அழகன் போன்றவர்கள் தீவிரமான தமிழ்தேசிய அரசியல் எதிர்ப்பாளர்களாக மட்டுமல்லாமல், அதனைவிட தீவிரமான அரச ஆதரவாளர்களாகவும் உள்ளனர்.

யுத்தத்தின் பின்னர், ஆட்சியாளர்கள் கட்டமைக்க முயலும் ‘தேசியத்தை’ ஏற்று கொள்வதும், வலுப்படுத்துவதும் தமது வரலாற்று கடமையென கருதுகிறார்கள். இலங்கையிலுள்ள சிறுபான்மையின தேசியங்களை அவர்கள் நிராகரிக்கிறார்கள். இந்த வகையான கருத்துக்கள் இலக்கிய சந்திப்பில் ஒலிக்க கூடாதென்பது அவர்களின் பிரதான செயற் திட்டமாகவே இருக்கின்றது.

இந்த போக்கை எதிர்த்ததுடன், தமிழ்தேசிய கருத்து நிலை சார்ந்தவர்களையும் பேச்சாளர்களாக பிரேரித்தேன். இதனால் முரண்பாடு முற்றியது. குறிப்பாக யாழ் பல்கலைகழக சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் குமரவடிவேல் கலந்து கொள்ளகூடாதென்பதில் உறுதியாக இருந்தனர். இதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள வாசுகி தொடக்கம் லண்டனிலுள்ள அவரது இரத்த உறவுகள் வரை ஒரு குடும்பமே சன்னதமாடியது.

இதன் அடுத்த கட்டமாக, ‘இலங்கை தேசியத்தை’ முன்னிலைப்படுத்திய பார்வைகளிற்கு இடையூறாக இருந்தவர்களை தவிர்த்துவிட்டு, அரச ஆதரவாளர்கள் மட்டும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து செல்கிறார்கள். ஆகவே, நீங்கள் விரும்பவதை போல -நாங்கள் விரும்பினாலும்- இனி ஆலோசனை கூட்டங்களில் பங்கெடுக்க முடியாது. ஆலோசனை கூட்டங்களில் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக அரச ஆதரவாளர்களாக மாறவும் நாங்கள் தயாராகயில்லை’. இதுதான் இலங்கையில் யூலைமாத பிற்பகுதியில் நடக்கவுள்ள 41வது இலக்கிய சந்திப்பின் சுருக்கமான கதையும், தற்போதைய நிலவரமும். இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கின்றதென்ற சுருக்கமான அறிமுகமொன்றாவது கிடைத்திருக்குமென நம்புகிறேன்.

இலங்கை சந்திப்பு சகலவிதமான ஒடுக்குமுறைகளிற்கும் எதிரானதாக இருக்குமென்ற ஏற்பாட்டாளர்களின் உறுதிமொழிக்கும், யாழ்ப்பாண குழவின் கூட்டங்களிற்கும் ஒரு புள்ளியளவான தொடர்பும் இருந்திருக்கவில்லை. இந்த குழு பெரும்பாலும் ஏற்பாட்டாளர்களின் நண்பர்கள், சக செயற்பாட்டாளர்களினால் ஆனது. மேற்குறிப்பிட்ட நான்கு பேரும்தான் வெளியில் இருந்து உள்நுழைநதவர்கள். மிகுதியானவர்களெல்லோரும் கிட்டதட்ட ஒரேவித சிந்தனை, கருத்து உடையவர்கள்தான்.

முதலாவது கூட்டம் வாசுகி வீட்டில் நடந்த பொழுதே, இந்த முரண்பாடுகள் ஆரம்பித்துவிட்டன. அன்றைய சந்திப்பில் வாசுகி, வேல்.தஞ்சன், கருணாகரன், இராகவன், தாஸ், நான் ஆகியோர் கலந்து கொண்டோம். தாஸ் மற்றும் என்னை தவிர்ந்த மற்றையவர்கள் சந்திப்பை மாற்றுகருத்தாளர் சங்கமமாக நடத்த வேண்டுமென பிடிவாதமாக இருந்தனர். இதனால், சுமுகமான உடன்பாட்டை எட்ட முடியாமல் போனதுடன், அது பற்றி தொடர்ந்து பேசுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

எந்தெந்த விடயங்களை இலக்கியசந்திப்பில் பேசுவதென்ற உரையாடல் ஆரம்பித்ததும், தேசிய இனப்பிரச்சனை என்ற எனது முதலாவது பரிந்துரையை முன் வைத்தேன். தாஸ் தவிர்ந்த மற்றவர்களிடமிருந்து அதற்கு பலமான எதிர்ப்பு உருவானது. ஒரு நண்பர் கேட்டார், ‘இலங்கையில் இப்ப உங்களிற்கு என்ன பிரச்சனை’ என. இன்னொரு நண்பர் கேட்டார், ‘தேசிய இனப்பிரச்சனை என எதனை சொல்லுகிறீர்கள். நாங்களும் இலங்கையில்தானே இருக்கிறோம். அப்படியொன்றையும் உணரவில்லை’ என.

எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவே, பரிந்துரைகளை எழுத தயாhக இருந்த ஒருவர், தனது கையினால் தேசிய இனப்பிரச்சனை என்ற ஒன்றை எழுதவே மாட்டேன் என வெள்ளைதாளை கீழே வைத்துவிட்டார். இறுதியில், நானே தாளை எடுத்து தேசிய இனப்பிரச்சனையை முதலாவது பரிந்துரையாக எழுத வேண்டியதாயிற்று. இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை என்ற ஒன்று கிடையவே கிடையாதென தொடர்ந்து வாசுகி பிடிவாதமாக இருந்ததனால், ‘சமூகத்தில் மேல் தட்டில் இருப்பவர்களிற்கும், அரசுடன் இருப்பவர்களிற்கும் அதனை உணர்வதில் சிக்கல்கள் உள்ளன’ என கூற வேண்டியதாயிற்று. அது சற்று தடித்த வார்த்தையாக இருந்த போதும், எல்லைமீறியதாகவோ அவதூறானதாகவோ இல்லையென்பதே எனது உறுதியான எண்ணம்.

இலக்கிய சந்திப்பு அரச ஆதரவாளர்களின் கையில் உள்ளதென நான் சொல்வது, அகப்பட்ட கல்லை எறியும் உத்தியல்ல. உண்மையில் நோயாளர்களை நோயாளர்களெனவும், மருத்துவர்களை மருத்துவர்களெனவும், தேசியவாதிகளை தேசியவாதிகளெனவும், எதிர் தேசியவாதிகளை எதிர் தேசியவாதிகளென்றும் அழைப்பதில் எனக்கு தயக்கங்கள் எதுவும் கிடையாது. அவர்களும் வெட்கப்படவோ பெருமைப்படவோ வேண்டியதில்லை.

அரசஆதரவாளர்கள் என நான் எந்த அடிப்படையில் குறிப்பிட்டேன் என்றால், இப்பொழுது குழுவில் உள்ளவர்களில் பெரும்பகுதியினர் தாங்கள் அரச ஆதரவாளர்கள், அந்த நிலைப்பாட்டிற்கு பாதகமான சந்திப்பை நடத்த மாட்டோம் என்ற வெளிப்படையான நிலைப்பாட்டில் உள்ளவர்கள்தான். மிகுதியானவர்கள், அரச ஆதரவு தமிழ்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுபவர்கள். இன்றைய திகதியில் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் அனைவருமே இந்த இரண்டில் ஏதாவதொன்றாகவே உள்ளனர். வரும்தேர்தலில், அரசதரப்பு வேட்பாளரான ஒருவரும் உள்ளார்.

சமயங்களில் சந்திப்பு நடப்பது வாசுகி வீட்டிலா அலரிமாளிகையிலா என்பது மாதிரியான குழப்பங்கள் கூட எனக்கு ஏற்படுவதுண்டு. கதையின் இடையில் ஒருவர் சொல்வார், தான் யாழ் படைகளின் தளபதியை மாதமொருமுறையாவது சந்திப்பதாகவும், கடந்த சந்திப்பில் தளதியிடம் கேட்டு கொண்டதாக, விடயத்தை பெருமை பொங்க சொன்னார். யாழ்ப்பாணத்திலுள்ள படைகளின் எண்ணிக்கையை குறைக்க சொல்லியிருப்பார் என யாரும் நினைத்து விடாதீர்கள். கிராமங்களில் குழு சண்டை நடந்தால், அதில் சம்மந்தப்பட்ட வெள்ளாளர்களிற்கு நல்ல அடி குடுக்குமாறு கேட்டு கொண்டாராம்.இன்னொருவர் வரும் மாகாண சபை தேர்தலிற்காக தங்களிற்கும் அரசுக்குமிடையில் நடக்கும் ‘டீலிங்’ பற்றி பேசுவார்.இன்னொருவர் ஆளுனருடன் தான் எங்கெல்லாம் சுற்றுலா செல்கிறேன் என்பதை சொல்வார்.

இந்த பின்னணியில், நம்மிடம் இரண்டு தெரிவுகள் மட்டுமேயிருந்தன.

1. நாங்கள் தனி குழுவாக கூடி, புதிய நிகழ்ச்சி நிரலொன்றை முன் வைப்பது.

2. ஒதுங்கி செல்வது.

ஆரம்பத்தில் முதலாவதுதான் எமது இலக்காக இருந்தது. அப்படி நடந்திருந்தால், நான் உட்பட நான்கு நண்பர்கள் இந்த அணியில் இரந்திருப்போம். ஆனாலும் அந்த தீர்மானத்தை கைவிட வேண்டியதாயிற்று. காரணம், இரண்டு நண்பர்கள் திடீரென தயங்கினார்கள். அவர்களது தயக்கமும் ஏற்று கொள்ளகூடியதே. அரசுடன் தொடர்புடைய இந்த அணியுடன் முரண்பட்டால் தமக்கு உயிராபத்து கூட ஏற்படாலாம், அதனால் தனிப்பட்ட காரணங்களை காட்டி ஒதுங்கி கொள்வதாக சொன்னார்கள். இது பற்றி சொல்வதற்கு என்னிடம் கருத்துக்களெதுவும் கிடையாது.

இலங்கை சூழலை புரிந்து கொண்டதனால், முதலாவது வழிமுறையை கைவிடுவதென அனைவரும் தீர்மானித்துள்ளோம். அந்த இரண்டு நண்பர்கள் தவிர்ந்த, திசேராவும் நானும் இலக்கிய சந்திப்பு குழாமிலிருந்து விலகுகிறோம் என்ற தீர்மானத்தை பகிரங்கமாக அறிவித்து, ஒதுங்கி கொள்வதென்று எடுக்கப்பட்ட முடிவினடிப்படையில் இந்த குறிப்பை இங்கு பகிர்ந்துள்ளேன்.

(சஞ்சிகையொன்றில் வெளிவரவுள்ள விரிவான குறிப்பொன்றிலிருந்து தேர்ந்தெடுத்த சிறு குறிப்புகள்)

http://yokarnan.com/?p=446

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின் பின்னர், ஆட்சியாளர்கள் கட்டமைக்க முயலும் ‘தேசியத்தை’ ஏற்று கொள்வதும், வலுப்படுத்துவதும் தமது வரலாற்று கடமையென கருதுகிறார்கள். இலங்கையிலுள்ள சிறுபான்மையின தேசியங்களை அவர்கள் நிராகரிக்கிறார்கள். இந்த வகையான கருத்துக்கள் இலக்கிய சந்திப்பில் ஒலிக்க கூடாதென்பது அவர்களின் பிரதான செயற் திட்டமாகவே இருக்கின்றது.
இதற்காக பலர் சிட்னியிலும் செயற்படுகிறார்கள்......இணைப்பிற்க்கு நன்றிகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கும் தகவலுக்கும் கிருபன்

Link to comment
Share on other sites

////இதன் அடுத்த கட்டமாக, ‘இலங்கை தேசியத்தை’ முன்னிலைப்படுத்திய பார்வைகளிற்கு இடையூறாக இருந்தவர்களை தவிர்த்துவிட்டு, அரச ஆதரவாளர்கள் மட்டும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து செல்கிறார்கள்.//

 

\\அன்றைய சந்திப்பில் வாசுகி, வேல்.தஞ்சன், கருணாகரன், இராகவன், தாஸ், நான் ஆகியோர் கலந்து கொண்டோம். தாஸ் மற்றும் என்னை தவிர்ந்த மற்றையவர்கள் சந்திப்பை மாற்றுகருத்தாளர் சங்கமமாக நடத்த வேண்டுமென பிடிவாதமாக இருந்தனர்.\\

 

மேற் குறிப்பிட்ட தகவலின் படி, கர்ணனே , கருணாகரனை சிறிலங்கா அரச ஆதரவாளராக இனம் காட்டி உள்ளார். தனிப்பட்ட நட்பை ஒருவரின் அரசியல் நிலைக்கு அப்பால் நிறுத்துவது, அரசியலா நட்பா என்றால், அந்த நட்பு இன விடுதலைக்கான துரோகத்தை செய்யத் துணிந்த நிலையில் தேவையா என்பதை , திருமதி .சாந்தி அவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

 

கருணாகரனின் செயற்பாடுகளை கர்ணனன் நன்கு அறிந்தே இதனை எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இன்னமும் உயிரோடு இருக்கிறாரா??

 
 
மாதம் ஒருமுறை என்றாலும் எழும்பி கூவ கூடாதா??
அப்பதானே உலகம் விடியும். இப்படியே இருளுக்குள் எத்தனை நாளிக்குதான் இருக்கிறது??
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.