Jump to content

டக்ளசின் இடது புறத்தில் சிறீ ரெலோ தலைவர் உதயனும் மறுபுறத்தில் பருதி கொலையில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள சயந்தனும் காணப்படுகின்றனர்.


Recommended Posts

இலங்கை அரசின் இரத்தப்பசிக்கு அடுத்த இலக்கு துணைக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவாந்ததா?

dhaya.jpgஉலகின் எல்லாப் பாசிச அரசுகளுக்கும் ஒரு பொதுவான இயல்பு உண்டு. தமக்குத் தேவையான வரைக்கும் தமது அடிவருடிக் குழுக்களைப் பயன்படுத்திவிட்டு பின்னர் அவைகளைப் பலவீனப்படுத்தி அழித்துவிடுவார்கள். அழிவில் எஞ்சியவர்களை பாசிசத்தின் உதிரி உறுப்பினர்களாக இணைத்துக்கொள்வார்கள். இன்று டக்கள்ஸ் தேவானந்தா கட்சிக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. இன்று வரைக்கும் இலங்கை அரசின் துணைக்குழுவாகச் செயற்பட்டுவந்த ஈ.பி.டி.பி குழுவினரை மகிந்த பாசிஸ்டுக்கள் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர்.

வட மாகாண தேர்தலில் டக்ளசுடன் கூட்டுச்சேரும் மகிந்தவின் சுதந்திரக் கட்சி டக்ளசிற்கு அரவாசிக்கும் குறைவான தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளது. டக்ளஸ் இற்கு வேறு வழியின்றி இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. புலிகள் அழிக்கப்பட்டவுடன் டக்ளசுடன் 360 பாகையில் பல்டி அடித்து இணைந்துகொண்ட சில உறுப்பினர்கள் இப்போது மகிந்தவைச் சந்திக்கக் காத்திருப்பதாகத் தெரியவருகிறது.

வடக்கில் இதுவரை டக்கள்சின் உறுப்பினர்களை துணை இராணுவப்படையாகப் பயன்படுத்திவந்த இலங்கை அரசு 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறீ ரெலோ என்ற கிரிமினல் அமைப்பைப் பயன்படுத்த ஆரம்பித்தது.

sritelo-300x183.jpg2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இலங்கை அரசின் ஏற்பாட்டின் அடிப்படையில் சிறீ ரெலோ அமைப்பிற்கு ஈ.பி.டி.பி அமைப்பிற்கும் அழிப்பில் ஈடுபடுவதற்கான பங்குபிரிப்பு நடைபெற்றது. அதன் போது எடுக்கப்பட்ட நிழல் படத்தில் டக்ளசின் இடது புறத்தில் சிறீ ரெலோ தலைவர் உதயனும் மறுபுறத்தில் பருதி கொலையில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள சயந்தனும் காணப்படுகின்றனர்.

வடக்கில் புதிதாக உருவாகியுள்ள சாதிச் சங்கங்கள், சிங்கள போலி இடதுசாரிகள் என்ற இன்னோரன்ன அமைப்புக்களை களத்தில் இறக்கும் மகிந்த பாசிஸ்டுக்கள், கே.பி இன் ஆதரவு பெற்ற முன்னை நாள் புலி உறுப்பினர்களையும் வேட்பாளர்களாக்கியுள்ளது.

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், சுதந்திரக் கட்சியின் சார்பில் தயா மாஸ்டர் கலந்துகொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வில் யாழ். மாநகர உறுப்பினரும் சட்டத்தரணியுமான றெமீடியஸ், சாவற்காட்டு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் உட்பட 23பேர் இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போகிற போக்கில் இலங்கை அரசின் அடுத்த இரத்தப் பசிக்கு டக்ளஸைப் பலியாக்கிவிட்டு புலிகள் மீண்டும் வந்துவிட்டதக இன்னொரு அழிப்பை இலங்கை நடத்தினாலும் வியப்படைவதற்கில்லை.

http://inioru.com/?p=36193

 

Link to comment
Share on other sites

ஆக, பங்கு பிரிப்பு நடந்ததென்னவோ உண்மைதான். :D இதை.. இதை.. இதைத்தான் நாங்க அப்பவே சொல்லிட்டமே.. :icon_idea:

Link to comment
Share on other sites

இவர்களுக்கு அப்பவே அடிபோட்டது சரியோ பிழையோ? பாமர மக்களே சொல்ல கேட்டுள்ளேன். "இவங்களை முதலில் அழிக்க வேண்டும் என்று".

Link to comment
Share on other sites

ஆக, பங்கு பிரிப்பு நடந்ததென்னவோ உண்மைதான். :D இதை.. இதை.. இதைத்தான் நாங்க அப்பவே சொல்லிட்டமே.. :icon_idea:

பங்கு பிரிப்பு எதற்கு நடந்திருக்கு என்று நினைக்க தலை சுத்துது ............................... :D  :D 

Link to comment
Share on other sites

என்ன இருந்தாலும் டக்லஸ் மக்களோடு மக்களாக நிற்பவர் அவரை குறை கூற  யாருக்கும் தகுதி இல்லை மணலை அள்ளி மகேஸ்வரிக்கு சொத்து சேர்த்தாலும் அவர் மானஸ்தன் அரசோடு இன்னக்க அரசியல் செய்யும் அறிவாளி.  அப்பப்ப சொந்த இனத்தை  கொலை கொள்ளை பாலியல் வல்லுறவு செய்தாலும் அவர் இன்னும் தமிழரை  காப்பாற்றும் வடக்கின் தெய்வம்  :lol:  :lol:  :lol: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிட்டத் தட்ட ஒரு மாதத்திற்கு முன் (March 19) வந்த தீர்ப்பை இது வரை எந்தத் தமிழ் ஊடகமும் வெளியிடாமல், ஆதவன் கூட தாமதமாகத்தான் வெளியிட்டு இருப்பதன் மர்மம் புரியவில்லை. சும்மா செய்திகளுக்கே இந்த யூ ரியூப் காணொளி தயாரிப்பவர்கள் சலங்கை கட்டி ஆடுவார்கள். அவர்களும் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள். 😂
    • இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
    • கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர். தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣. செய்தி உண்மைதான். https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/  
    • ரஷ்சியா பாவிக்கிற அதே இராணுவ தந்திரத்தை தான் ஈரானும் பாவித்திருக்கிறது. தெரியப்பட்ட இலக்கு சரியாக தாக்குப்பட கவனக் கலைப்புக்களும் எதிரிக்கு பொருண்மிய செலவைக் கூட்டவல்ல வினைத்திறன் குறைந்த ஆனால் எதிரி சுட்டுவீழ்த்தியே ஆகனும் என்ற கதியிலான உந்துகணைகளையும் ஆளில்லாத தற்கொலை விமானங்களையும் ஏவி இருக்கிறது ஈரான். பிபிசியின் கணிப்புப் படி... ஈரான் ஏவிய வான் வழி இலக்குகளை அழிக்க 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கரியாகியுள்ளது. ஈரான் ஏவிய மொத்த வான் வழி ஏவுகருவிகள்... இந்த அளவுக்கு பொறுமதியானவை அல்ல.  இதே உக்தியை ரஷ்சியா உக்ரைனில் பாவித்தது. ரஷ்சியா ஏவி குப்பைகளை எல்லாம் உக்ரைனின் விவேகமற்ற போர் உக்தியைப் பாவிக்க வைச்சு.. டமார் டமார் என்று வீசி அழிக்க வைச்சு.. அமெரிக்க.. மேற்குலக ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளை வெறுமையாக்கிவிட்டது ரஷ்சியா. இப்போ.. உக்ரைனின் இலக்குகளை தான் நினைச்ச மாதிரிக்கு தாக்கி வருகிறது. உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நோக்கி கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  பிரிட்டன் ஒரு படி மேலே போய்.. எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு பதில் உயர் தொழில்நுட்ப லேசர் ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆக ரஷ்சியா ஏவிய பல குப்பைகள்... எதிரிக்கு அழிவை விட.. செலவீனத்தைக் கூட்டுவதே நோக்காக கொண்டிருந்திருக்கிறது. 
    • பெல்ஜியத்தை சேர்ந்த Tim tense  என்ற  இந்த யூருப்பர் கடந்த வருடமும் இலங்கை சென்று பல வீடியோக்களை தனது யூருயூப்பில் வெளியிட்டிருந்தார். இவ்வருடமும் சென்றுருந்தார். பெரும்பாலான வீடியோக்களில் ஶ்ரீலங்காவையும் அந்நாட்டு மக்களின் hospitality யையும் புகழ்ந்தே உள்ளார்.  ஶ்ரீலங்கா சுற்றுலாவை மேற்குலகில் பிரபல்யப்படுத்தியே உள்ளார்.    இந்த வர்த்தகர் தொடர்பான விடியோவைக் கூட Avoid this man in Kaluthura என்ற தலைப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு பதிவாகவே வெளியிட்டுள்ளார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.