Jump to content

மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர் ஒருவருக்கு 15ஆயிரம் ரூபா உதவுங்கள்.


Recommended Posts

மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர் ஒருவருக்கு 15ஆயிரம் ரூபா உதவுங்கள்.

மட்டக்களப்பு நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 46கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிராமமே கோப்பாவெளி எனப்படும் நீர்வளத்தைக் கொண்ட கிராமம் ஆகும். மொத்தம் 114 குடும்பங்களைக் கொண்ட இக்கிராமத்தில் 105 குடும்பங்கள் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

 

இவர்களின் 25 விதவைகளும் அவர்களது பிள்ளைகளும் உட்பட 52 குடும்பங்கள் மீன்பிடித் தொழிலையும் மீதி  குடும்பங்கள் விறகு வெட்டுதல் , மாடுமேய்த்தல் என சில தொழில்களைச் செய்து வருகின்றனர். போரால் பாதிப்புற்ற கிராமங்களில் இக்கிராமமும் மிகவும் பாதிப்படைந்த ஒரு கிராமம். இந்த மக்களிடம் பணம் வசதிகள் எதுவுமில்லை.

DSCF5375-1024x682.jpg

ஆயினும் அன்றாட வாழ்வை கொண்டு செல்ல தங்களது உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாக் கொண்டு கடும் உழைப்பாழிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது உழைப்பை பணக்காரர்கள் சுரண்டிக் கொண்டு போவதே அதிகம் நடைபெறுகிறது.

 

விரால்மீன், செல்வன் அல்லது திலாப்பியா மீன் இரண்டுமே இப்பகுதியின் சிறப்பு. மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் மீனவர்களுக்குச் சொந்தமான வலையை முஸ்லீம் பணக்காரர்கள் கடனாக வழங்குகிறார்கள். வழங்கப்படும் வலைக்கான பணத்தையும் அறவிட்டு அவர்கள் பிடித்துவரும் மீனையும் வலையை வழங்கும் முஸ்லீம்களே கொள்வனவு செய்கிறார்கள்.

DSCF5382-1024x682.jpg

சந்தையில் 300ரூபாவுக்கு விற்கும் மீனை இந்த மீனவர்களிடம்  கிலோ 80ரூபா தொடக்கம் 100ரூபாவுக்குள் முஸ்லீம் முதலாளிகள் கொள்வனவு செய்கிறார்கள். தண்ணீரில் போராடி தரமற்ற வலைகளோடு கடினப்பட்டுப் பிடித்துவரும் மீனையும் குறைந்த விலைக்கு கொடுத்துவிட்;டுப் போகிற நிலமையே இவர்களுக்கு அன்றாடம் ஆகிவிடுகிறது.

 

நகர்ப்புறத்துப் பணக்காரர்கள் இந்தக் கிராமத்து ஏழைகளிடம் தங்களது மாடுகளைப் பராமரிக்கக் கொடுப்பார்கள். அதன் பயன்கள் பணக்காரர்களுக்கு போக குறைந்த நாட்கூலியை மட்டும் இக்குடும்பங்கள் பெற்றுக் கொள்வார்கள். பள்ளி செல்ல வேண்டிய பிள்ளைகள் மாடுகளை மேய்க்கவும் பராமரிக்கவும் போய்விடுகிறார்கள்.

 

கல்வியறிவு மிகவும் மட்டமான இக்கிராமத்தில் ஒரேயொரு ஆரம்பக்கல்வி கற்கும் பாடசாலையிருக்கிறது. குடும்ப வறுமையால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதே மிகவும் அரிது. அன்றாட உணவுக்கு வழிதேடுவதே இக்கிராமத்து குழந்தைகளுக்கும் பொதுவான தேடலாக இருக்கிறது.

DSCF5363-1024x682.jpg

யானைகளின் தொல்லையால் அடிக்கடி இந்த ஊரில் மரணங்களும் யானையின் தாக்கத்தால் ஆபத்துக்களும் அதிகம் காணப்படுகிறது. 2கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பாடசாலைக்குச் சென்றுவரும் பிள்ளைகளுக்கு போக்குவரத்துக் கூட பயங்கரம் மிக்கதாகும். அண்மைக்காலங்களாக இந்தக் கிராமத்தில் யானைகளின் தொல்லையால் எற்பட்ட இழப்புக்கள் பற்றி ஊடகங்களிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

 

இக்கிராமத்தில் மீன்பிடித்தொழில் செய்யும் 52 குடும்பங்களுக்கும் தேவையான வலையை எமது நிறுவனம் மூலம் வழங்குவதற்கு உத்தேசித்துள்ளோம். தலா ஒரு குடும்பத்திற்கு ஒரு வலையும் மீன்களை பத்திரப்படுத்தி கொண்டுவர பெட்டியும் வழங்க 15ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது.

 

52 குடும்பங்களுக்கும் 15000 x  52 = 780000.00ரூபா (அண்ணளவாக 4800€)

இக்குடும்பங்களிலிருந்து 25 குடும்பங்களுக்கு முதலில் வலைகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.

15000 x 25 = 37500.00ரூபா (அண்ணளவாக 2345€)

 

இவர்கள் பிடித்து வரும் மீன்களை நாங்களே நியாயவிலையில் கொள்வனவு செய்து விற்பனைச் சந்தையை உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பையும் ஏற்கிறோம். இதன் மூலம் அவர்களது உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தை வழங்குவதோடு மேலும் பல நன்மைகளையும் அக்கிராமத்திற்கு செய்யக்கூடிய வருமானத்தையும் இந்த மீன் வியாபாரம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

DSCF5373-682x1024.jpg

கிராம முன்னேற்றம் பிள்ளைகளின் கல்வியூக்குவிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளவும் இதர முன்னேற்றங்களைச் செய்யவும் இக்கிராமத்திலிருந்து கிடைக்கும் வளங்கள் மூலமே வருமானத்தைப் பெறக்கூடிய நிலமையை உருவாக்குவதால் இக்கிராமம் குறித்தகால இடைவெளியில் தன்னிறைவடையக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

 

வியாபாரம் செய்யும் மீன் வருமானத்திலிருந்து கிடைக்கும் இலாபத்திலிருந்து இலவசமாக வழங்கப்படும் வலைகளுக்கு முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு பகுதி இலாபத்தை வழங்க முடியும்.

 

வலைகளை இலவசமாகப் பெறுகிற குடும்பங்களும் சுயபொருளாதாரத்தில் முன்னேறுகிற சம நேரத்தில் அவர்களுக்கு உதவுவோரும் பயனடையலாம். இத்திட்டத்திற்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து இதுபோன்ற மீன்பிடித் தொழில் செய்யும் அயல் கிராமங்களையும் இத்திட்டத்தில் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

 

கருவாடு உற்பத்தியையும் இத்தோடு ஊக்குவிக்கவுள்ளோம். புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தனிப்பட்டவர்களின் தேவைகளுக்கான கருவாடுகளையும் ஏற்றுமதி செய்து கொடுக்கக்கூடிய வாய்ப்பையும் மேற்கொள்ளலாம்.

இதுவொரு நீண்டகாலத் திட்டமாக மேற்கொள்ளக்கூடியதாகும். இத்திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

DSCF5358-150x150.jpg DSCF5359-150x150.jpg

DSCF5362-150x150.jpg DSCF5363-150x150.jpg

DSCF5366-150x150.jpg DSCF5370-150x150.jpg

DSCF5373-150x150.jpg DSCF5375-150x150.jpg

DSCF5376-150x150.jpg DSCF5378-150x150.jpg

DSCF5379-150x150.jpg DSCF5380-150x150.jpg

DSCF5382-150x150.jpg

Shanthy – Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

Email :- nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Vereinsregister:-

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

 

http://nesakkaram.org/ta/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81/

 

Link to comment
Share on other sites

மட்டக்களப்பிலேயே நிக்கிறியள்

எங்கு தேவைகள் இருக்குறதோ அங்குதான் உதவியும் தேவைப்படும் .திரிகளை திசை திருப்பாமல் கருத்தை முன்வையுங்கள் .

Link to comment
Share on other sites

 

 

வலைகளை இலவசமாகப் பெறுகிற குடும்பங்களும் சுயபொருளாதாரத்தில் முன்னேறுகிற சம நேரத்தில் அவர்களுக்கு உதவுவோரும் பயனடையலாம். இத்திட்டத்திற்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து இதுபோன்ற மீன்பிடித் தொழில் செய்யும் அயல் கிராமங்களையும் இத்திட்டத்தில் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இலவசமாக வழங்காமல் கடனடிப்படையில் வழங்கி னால் ,இவர்களிடம் அறவிட்டு மீண்டும் தேவைப்படும் குடும்பங்களுக்கு கொடுக்கலாம் .சிலசமயங்களில் இலவசத்திற்கு பெறுமதி இல்லாமல் போகும் .உங்களுக்கே தெரியும் நிதியை திரட்டுவது எவ்வளவு சிரமம் என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரி கூறுவது நியாயம்தான் சாந்தி. இலவசமாகக் கிடைக்கும்போது அதன் பெறுமதி தெரியாது. கொடுக்கும் வலைக்கான பணத்தை மாதாந்தம் சிறு தொகையாக அறவிடுதல் நன்று.

Link to comment
Share on other sites

வட்டியில்லாக் கடன்.. மாதம் ஒரு சிறு தொகுதியை மீட்டல் என்று இருந்தால் நன்றாக செயற்படலாம்..

Link to comment
Share on other sites

பல காலமா மட்டகளப்பில மட்டும் தான் தேவைகள் இருக்கிறது. தம்பி கரி வன்னியை கைவிட்டு கன நளாச்சு

Link to comment
Share on other sites

பல காலமா மட்டகளப்பில மட்டும் தான் தேவைகள் இருக்கிறது. தம்பி கரி வன்னியை கைவிட்டு கன நளாச்சு

2009இறகுபிறகு பலர் வன்னிக்கு செய்துள்ளார்கள் .செய்து கொண்டிருக்கிறார்கள் .நேசக்கரமும் வன்னிக்கு செய்தது ,செய்கிறது .உ+ம் சில 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=118171

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122963

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121873

yarl.com/forum3/index.www.php?showtopic=121399

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123732&hl=

 

என்னைப் பொருத்தவரையில் திருகோணமலையில் தனிக்கவனம் செலுத்துகின்றேன் .அதேநேரம் மற்றமைப்புகள் ,தனிப்பட்டவர்களுடன் இணைந்து வட-கிழக்கிற்கு உதவுகின்றேன் .நாங்கள் மற்றவர்களை விமர்சிக்கமுதல் ,மற்றவர்களிற்கு வழிகாட்டியாக இருப்போம் அல்லது இருக்க முயற்சிப்போம் .

Link to comment
Share on other sites

தம்பி கரி நான் நேசக்கரம் அமைப்பு சில நாட்களாக மட்டக்களப்பை ஏன் சுத்தி நிக்கிறது என்று தான் கேட்டேன்.

அது சரி நீங்கள் திருகோணமலையில என்ன செய்தனீர்கள்? என்ன செய்ய போகிறீர்கள்?

Link to comment
Share on other sites

உதவி தொடர்பாக நான் இணைக்கும் திரியில் சிலர் விதண்டாவாதத்துக்கு தங்கள் காழ்புணர்வுகளை கொட்டித் தீர்க்கிறார்கள். இவ்விடயத்தை நிர்வாகம் ஏனோ கண்டு கொள்ளவில்லை.

இத்தகைய திரிகளில் ஒருவருக்கு பிடித்த ஊருக்கு இல்லது மாவட்டத்துக்குத்தான் நேசக்கரம் உதவ வேண்டுமென்ற விதியை யாரும் எழுத முடியாது. தங்கள் மாவட்டம் அல்லது ஊருக்கு உதவ விரும்பின் தாங்களே ஒரு அமைப்பை உருவாக்கி உதவுவதே நன்மை தரும். நேசக்கரம் தன்னால் இயன்றதையே செய்கிறது என்பதனை உதவும் உறவுகள் புரிந்து கொள்வீர்கள்.

 இதில் புகுந்து தங்கள் காழ்ப்புணர்வையும் பிரதேசவாத வெறித்தனத்தையும் வெளிக்காட்டுவோரின் கருத்துக்களை நிர்வாகம் கவனிக்குமாறு தாழ்மையுடன் வெண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

இதில எங்க பிரதேசவாதம். நீங்கள் ஏன் மட்டகளப்பில நிக்கிறியள் என்பதே கேள்வி.

Link to comment
Share on other sites

இதில எங்க பிரதேசவாதம். நீங்கள் ஏன் மட்டகளப்பில நிக்கிறியள் என்பதே கேள்வி.

 

 

இல்லை சகோதரா. கடந்த வருட இறுதியில் அப்பாவின் நினைவு தினத்துக்காக உதவ வேண்டும் என்று கேட்ட பொழுது அம்பாறையில் இரு குடும்பத்திற்கு உதவ விபரம் தந்தார். ஆகவே மட்டக்களப்பில் தான் நிற்கிறார் என்று சரியாக படவில்லை என்பதால் சொன்னேன். தவிர எங்கு உதவி தேவைப்படுவர்கள் இருந்தாலும் உதவலாம் தானே.

 
எங்கு நின்றால் உதவுவீர்கள்? எனக்கு நான் பிறந்த கிராமத்தில் ஒரு நூலகமும் சிறுவர் பூங்காவும் கட்டவேண்டும் என்பது கனவு. 
Link to comment
Share on other sites

எல்லோரும் நேசக்கரத்தினூடாக செய்ய வேண்டும் என்று இல்லையே.

மட்டகளப்பில் பிரச்சனை தூசணத்தில பேசினார்கள் என்று சாந்தி இங்கே எழுதினார். இப்போ அங்கேயே நிக்கிறா அதுதான்.

Link to comment
Share on other sites

எல்லோரும் நேசக்கரத்தினூடாக செய்ய வேண்டும் என்று இல்லையே.

மட்டகளப்பில் பிரச்சனை தூசணத்தில பேசினார்கள் என்று சாந்தி இங்கே எழுதினார். இப்போ அங்கேயே நிக்கிறா அதுதான்.

 

சகோதரா! எனது சிறு பிராய அனுபவத்தை சொல்கிறேன். எங்கள் கிராமத்துக்கு அடிகடி இடம் பெயர்ந்து வருவார்கள். எங்களில் சிலபேர் ஒன்றாக சேர்ந்து எங்கள் கிராமத்தவர்க ளிடம் உணவு , பொருட்கள் சேர்த்து அவர்களுக்கு உதவுவோம்.  ஒருவரால் அவர் தந்த கோழி  உணவுப்பொதியை நாங்கள்   சாப்பிட்டு விட்டோம் என்று குற்றம் சாட்டினார். சண்டை பிடித்தோம். அதனால் சிறைக்கு போனோம்.  உதவி செய்வதை நாங்கள் நிறுத்தினோம். அவரும் முன் நின்று செய்யவில்லை. பாதிக்கபட்டது இடம் பெயந்தவர்களும் எங்கள் மனங்களும் தான். அவர் நோக்கம் எங்களை அவமானபடுத்துவது.

 
மன்னிக்கவும் சகோதரா, நீங்கள் அப்படி இல்லை.
Link to comment
Share on other sites

Gari,  சுமேயக்கா,  இசைக்கலைஞன் , விவசாயி விக் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

 

இந்தக் கிராமத்தில் தற்போது முஸ்லீம்கள் தங்கள் உழைப்பை சுரண்டுவதை தெரிந்தும் அதற்கு மாற்றாக வேறு வழியைத் தேடக்கூடிய நிலமையில் அந்த மக்கள் இல்லை. காரணம் எப்படியாவது தங்களுக்கு வாழ 10ரூபா கிடைத்தாலும் போதுமென்ற நிலமையே காணப்படுகிறது. இங்கு கல்வியறிவால் உயர்ந்த அல்லது இந்தச் சுரண்டலைப் புரிந்து கொண்டு தங்கள் சமூகத்தை காக்கவும் யாருமில்லை.

 

தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் கிழக்கில் இன்னும் சில ஆண்டுகளில் மறைந்து போகக்கூடிய நிலமையே உருவாகிக்கொண்டு வருகிறது. ஆகவே இதுபோன்ற கிராமங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொறுப்பு எமக்கானது. இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே இத்தகைய கிராமங்களை நேசக்கரம் தேடிப்போகிறது. அகபுற சூழல்களை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வீர்கள்.

 

இந்த மக்கள் தங்கள் அடையாளம் தொலைவதையோ பிள்ளைகளின் கல்வி தொலைவதையோ கவனிக்காத நிலமையே காணப்படுகிறது. இந்த நிலமைகளைப் புரிந்து இந்த மக்களும் வெளியில் வரக்கூடிய விழிப்பும் அவர்களிடம் இல்லை.

 

இந்த மக்களை விழிப்படைய செய்ய நாங்கள் இவர்களுக்கான வெகுமதியொன்றைக் கொடுக்க வேண்டும். அந்த வெகுமதியானது மாற்று இனத்தாரிடம் நீண்டகால வாடிக்கையாளர்களாக இருக்கிற இவர்களை தற்போது கடனாகப் பெற்றுள்ள வலைகளுக்கான பணத்தை எப்படி செலுத்துகிறார்களோ அதேவழியில் நாங்களும் நாம் தமிழர்கள் எங்களிடம் தாருங்கள் மீன்களையென கேட்க முடியாது.

 

காரணம் இடையில் போகிற எங்களை அவர்கள் நம்புவது சற்று கடினமானது. ஏனெனில் நாம் இடையில் தங்களை கைவிட்டு விடுவோம் என்ற பயம் அவர்களுக்கு இருந்து கொண்டேயிருக்கும். இதன் காரணமாகவே நாங்கள் வலைகளை இலவசமாக கொடுத்து மீன்களை நாங்கள் நியாய விலையில் கொள்வனவு செய்ய முடிவு செய்தோம்.

ஓன்று எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும்.

 

அடுத்தது அவர்களது உழைப்பின் ஒரு பகுதியை அவர்களது குழந்தைகள் கல்வியில் முன்னேறவும் அவர்களது சுய வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் பயன்படுகிறதென்ற தன்னம்பிக்கையை வளர்க்க நாங்கள் வழங்கும் உதவியில் அரைவாசியை விட்டுக் கொடுத்து அரைவாசியை மாதாந்தம் அறவிடலாம் என எமது நிறைவேற்றுக்குழுவினர் பேசி முடிவெடுத்துள்ளோம். இதில் உறவுகள் உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்.

 

இந்த மக்கள் மீள்குடியேறிய பின்னர் பல தமிழ் இதர நிறுவனங்களும் இந்த ஊர்களுக்கு சென்று கொண்டும் சென்றும் இருக்கின்றன. ஆனால் பெரியளவில் அவர்களது வாழ்வாதார மாற்றத்தில் அக்கறையெடுக்கவில்லை. வெறும் தரவு சேமித்துவிட்டுப் போகிற கதைகளே நடக்கிறது. இதுவும் எம்மீது அவர்கள் உடனடியாக நம்பிக்கை வைக்கும் நிலமையில்லாத நிலமைக்கு காரணமாக உள்ளது. முதலில் நம்பிக்கை வர நாங்கள் அவர்களுக்கு சில விட்டுக் கொடுப்பை செய்தே அவர்களை மாற்ற முடியும்.

 

அடுத்து அவர்கள் பிடிக்கும் மீன்களை நாங்கள் கொள்வனவு செய்து விற்பதால் எம்மால் கட்டாயம் இலாபத்தை பெற முடியும். இந்த இலாபம் மூலம் அக்கிராமத்தின் வளர்ச்சியையும் அதோபோல முதலீட்டாளர்களின் முதலீட்டையும் மீளப்பெற முடியும். ஆனால் இது நீண்டகாலத் திட்டமாகையால் உடனடியான அதிக
இலாபத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒரு குறித்த கால இடைவெளியில் எம்மால் வெற்றியை அடைய முடியும்.

 

மீன்களை கொழும்பு சந்தைக்கும் மற்றைய பகுதிகளுக்கான சந்தைப்படுத்தலுக்கும் ஆட்களை தேடுகிறோம். இதர பகுதிகளுக்கு ஏற்றப்படும் மீன்கள் மேலும் அதிகமான இலாபத்தை தரும். இந்த சந்தை வாய்ப்பை யாராவது உங்கள் நகரங்களிற்கு கொண்டு செல்ல யாராவது உறவுகள் இருப்பின் எம்மோடு இணைத்துவிட்டால் கூட சந்தைப்படுத்தலை அதிகரிக்க முடியும்.

 

இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை தாருங்கள். எங்கள் முயற்சிக்கு பயனாகவும் அதேநேரம் கூட்டுச் செயற்பாட்டுக்கான வழியையும் தரும்.



 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்சார வசதி இல்லை என்றால் சோலார் உதவியுடன் குளிர் அறையை உருவாக்கலாம். குளிர் அறை இல்லாவிடில் மீன்கள் பழுதடைய வாய்ப்புண்டு.

Link to comment
Share on other sites

அக்கா,

இவர்களுக்கு நேரடி சந்தை படுத்தும் வசதியையும், விளம்பர யுக்திகளையும் போதிப்பது பயனளிக்கும். எப்போதும் நடுதரகர்களிடம் தங்கி இருக்க தேவையில்லை.

உள்ளூர் சந்தைகள், உணவகங்கள், நேரடி வாடிக்கையாளருக்கு விற்பது வியாபாரத்திற்கு உறுதியை கொடுக்கும்.

மற்றும் கூலர் அறை வசதியும், கூலர் வாகனமும் இருந்தால் வருங்கால வளர்ச்சிக்கு உதவும்.

இரண்டாம் கட்ட திட்டத்தில் இவற்றை உள்ளடக்கலாம். நாம் முன்னூறு டொலரில் கூலர் அறை அமைக்கும் தொழில் நுட்பத்தை கனடாவில் உருவாக்கி உள்ளோம்.

கிராமத்தில் மின்சார வசதி இருக்கிறதா?

இந்த மாற்றத்தை உருவாக்க கடுமையான உழைப்பும் அந்த மக்களோடான தொடர்போடும் தொடர்ந்து இருக்க வேண்டும். அதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளோம். இந்த மாற்றத்தை எமது உப அமைப்புக்களில் ஒன்றான அரவணைப்பு மேற்கொண்டுள்ளது.

 

மீன்களை பழுதடையாமல் பாதுகாக்க குளிரூட்டி வசதியை ஏற்படுத்தவும் உத்தேசித்து குளிரூட்டியை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஊரின் பிரதான பகுதியில் மின்சாரம் இருக்கிறது. நீங்கள் தயாரிக்கும் கூலர் அறையின் மாதிரி அல்லது அதுபற்றிய ஆலோசனைகளையும்  தந்துதவுங்கள். குறைந்த செலவில் தயாரிக்கக்கூடிய விவரங்கள் தாருங்கள்.

மின்சார வசதி இல்லை என்றால் சோலார் உதவியுடன் குளிர் அறையை உருவாக்கலாம். குளிர் அறை இல்லாவிடில் மீன்கள் பழுதடைய வாய்ப்புண்டு.

 

மின்சார வசதி பிரதான பகுதியில் இருக்கிறது. நாம் மீன்களை பழுதாகாமல் பாதுகாக்க குளிரூட்டி வசதியொன்றை நிச்சயம் செய்ய வேண்டும்.

நன்றிகள் அக்கா கருத்திற்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயக்கா,

சோலார் பாவிக்க போனால் $5000 டொலராவது தேவை படும். அது திட்டத்தின் செலவை அதிகரித்துவிடும்.

அதனால் தான் மின் தொடர்பை பற்றி வினவினேன்.

 

மின்சாரத்தை விட சோலார் மலிவு என்று நினைத்தேன். அதுகும் எமது சொந்த இடம் என்றால்தானே பொருத்தலாம் அதை நான் யோசிக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மீன்பிடித்திட்டத்திற்கு கள உறவு சுமேரியர் அக்காவின் மகள் சப்தா260000ரூபாவை முதலீடு செய்துள்ளார். புலத்தில் பிறந்து தாயகத்தோடான தொடர்பையும் அந்த மக்களுக்கான ஆதரவையும் நீண்டகாலமாக வழங்கிக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பத்தின் உதவிகளால் பலன் பெற்றவர்கள் நிறைய. ஆனால் தங்கள் கடமை தாயக்கத்துக்கானதென்றதை மட்டுமே சொல்லி தங்களை வெளிப்படுத்தாமல் நேசக்கரம் மூலமே செய்த உதவிகள் பல.

 

இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த முழுமையான ஆதரவு கிடைக்காமையால் சுமேரியர் அவர்களின் மகள் வழங்கிய உதவி அவருக்கு மீள வழங்கப்பட்டது.

Link to comment
Share on other sites

அக்கா உங்கள் சேவைகளுக்கு நன்றி அக்கா.வசதி வரும்போது 
கட்டாயம் உதவுவேன்.
Link to comment
Share on other sites

 

அக்கா உங்கள் சேவைகளுக்கு நன்றி அக்கா.வசதி வரும்போது 
கட்டாயம் உதவுவேன்.

 

 

உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். கருத்துக்கு நன்றிகள் கரன்.

Link to comment
Share on other sites

மீன்பிடித் தொழில் தொடர்பா 2கட்டமாக இக்கிராமத்து மீனவர்களையும் மீனவர் சங்கத்தையும் எமது குழுவினர் சந்தித்து பேசியுள்ளனர். எனினும் வழங்கப்படும் உதவியை கடன் அடிப்படையில் தம்மால் பெற முடியாதென்ற தமது நிலமையைத் தெரிவித்துள்ளனர்.

காரணம் ஏற்கனவே முஸ்லீம்களிடம் தமது வாழ்வுத் தேவைகளுக்காக பல குடும்பங்கள் 50ஆயிரம் ரூபா வரையில் கடன் பெற்றுள்ளார்கள். இக்கடனோடு எம்மிடம் கடன் அடிப்படையில் பெற்று தம்மால் மீளச் செலுத்துவது கடினம் என்பதனைத் தெரிவித்துள்ளார்கள்.

இலவசமாக வலையைப் பெற்றுத்தந்தால் மீன்களை எம்மிடம் விற்பனை செய்ய முடியுமென தெரிவித்துள்ளார்கள்.

 

எனினும் இலவசமாக வழங்குதல் எம்மால் முடியதென்ற விடயத்தையும் தெரிவித்துள்ள எமது குழுவிர் தங்களது கருத்தை தந்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள். இதுவொரு பெரியதும் நீண்டகாலத்திட்டமுமான வேலையாக இருப்பதால் அறுதலாகவே முடிவுகளையும் எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இத்திட்டத்திற்கான உதவியாக ஒன்றரை லட்ச ரூபாவினை கனடாவிலிருந்து றவி என்ற உறவும் அவரது  நண்பர்களும் இணைந்து உதவியுள்ளனர். உதவியவர்களுக்கு எமது நன்றிகள்.

 

10குடும்பங்களுக்கு முதல் கட்டம் வலைகளை வழங்கவுள்ளோம். இவ்வுதவி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.

Link to comment
Share on other sites

  • 7 months later...

இத்திட்டத்திற்கான உதவியாக ஒன்றரை லட்ச ரூபாவினை கனடாவிலிருந்து றவி என்ற உறவும் அவரது  நண்பர்களும் இணைந்து உதவியுள்ளனர். உதவியவர்களுக்கு எமது நன்றிகள்.

 

10குடும்பங்களுக்கு முதல் கட்டம் வலைகளை வழங்கவுள்ளோம். இவ்வுதவி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.

 

 

இத்திட்டத்திற்கு முதலீடு செய்ய முன்வந்தவர்கள் இலவசமாக வலைகளை வழங்க சம்மதிக்காமையால் பெறப்பட்ட பணம் கடந்த வருடம் உரியவர்களுக்கு மீளக் கொடுக்கப்பட்டது.

 

அத்தோடு கனடிய உறவகளான ரவி, சுரேஷ் இருவரும் தமது உதவியை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்த அனுமதித்திருந்தார்கள்.

 

இங்கு அது தொடர்பான அறிவித்தலை அறிவிக்க மறந்துவிட்டேன். இன்று எமது பணியாளர் ஒருவர் சுட்டிக்காட்டியமைக்கு அமைய இச்செய்தியை அறியத்தருகிறோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.