Jump to content

"பூபாளம்" இணையம் அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறவுகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இணையம் உங்கள் பார்வைக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றது. தற்சமயம் என்னால் அதை முழுமைப்படுத்தமுடியவில்லை பகுதி பகுதியாக நேரம் கிடைக்கின்றபோதெல்லாம் மெருகு படுத்தி கொள்ள முயல்கின்றேன். விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் எமது மக்களுக்கான ஒரு அணிலாக இந்த பூபாளம் அமையவேண்டும் என்பது எனதவா.

இந்த இணையம் உருவாக சுழிபோட்டுக்கொடுத்த யாழ் டண்ணை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவுகொள்கின்றேன். புலநாயே தூதுபோ என் நன்றிகளை டண்ணிடம் கூறிக்கொள்.

அடுத்ததாக எனக்கு இணையம் சம்மந்தமாக பல தரவுகள் இணைப்புக்கள் உருவாக்குதல் தரவேற்றம் செய்வதற்கு இன்னும் பல உதவிகள் செய்த யாழ் உறவு "இணையம்கொண்டான்" ஹரிகாலன் (மன்னர்) அவருக்கும் எனது நன்றிகள்.

எனக்கு யாழை அறிமுகம் செய்து இவ்வளவு உறவுகள் உருவாகுவதற்கு காரணமாக இருந்த அஜீவன் அவர்களையும் இந்தநேரத்தில் நன்றியுடன் நினைவுகொள்கின்றேன்.

இதை எமது அன்புக்குரிய மட்டுறுத்துனர் மாதவன் மூலம் அறிமுகம் செய்ய நினைத்திருந்தேன் அவருக்கு தனிமடலும் எழுதியிருந்தேன். அவர் தற்சமயம் மிகவும் அலுவலாக இருப்பதால் மடலை பார்த்திருக்கமுடியாது என நினைக்கின்றேன்.

உறவுகளே இது எப்படி அமைய என்பது சம்மந்தமாக உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன்.

http://www.boopallam.tk

Link to comment
Share on other sites

Flowers.jpg

வாழ்த்துகள் வியாசன்

விடியல்தானே?

காத்திருக்கிறோம்

ஆதவன் வருகைக்காக.................

முயன்றால்

முடியாதது ஒன்றுமில்லை..............

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்!

நானும் யாழ் வந்துதான்.. இளைஞனின் ஒத்துழைப்புடன் 'தமிழமுதம்' எனும் இணையத்தை உருவாக்க முடிந்தது. அந்த வகையில் தங்களது இணையத் தளமும் மேலும் விரிவடைய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் வியாசன்

Link to comment
Share on other sites

வியாசன் முதற்கண் எனது வாழ்த்துக்கள் உங்களின் இந்த பெருமுயற்சிக்கு. புூபாளம் இணையத்தளம் மேன் மேலும் வளர்ச்சி கண்டு தமிழினத்தின் எழுச்சிக்கு மேன்மேலும் வலுச்சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் .... நீங்கள் இசையாக கொடுத்திருக்கும் பாடலுக்கு பதிலாக...புபாளம் பாடும் நேரம் தமிழன் புலியாகிப்போரடும் ..... இந்தப் பாடல் உங்கள் இணையத்தொடக்கத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்தாக சொல்லிக்கொண்டு மீண்டும் வாழ்த்துக்கள் கூறி விடைபெறுகிறேன்.

னெ;புடன்

nஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி இணையம் கொண்டான் ஜெயா அனைவருக்கும் எனது நன்றிகள்

ஜெயா அருமையான ஒரு யோசனை சொன்னீர்கள் நன்றி நான் அதை தாயகப்பாடல் பகுதிக்கு இணைக்கலாம் என்று நினைக்கின்றேன். உங்களுடைய அபிப்பராயத்தை சொல்லுங்கள். நீங்கள் குறிப்பிட்டபாடல் இடம்பெற்ற இசைத்தட்டு எது என்பதை குறிப்பிடமுடியுமா?

மீண்டும் உங்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைக்கு நன்றிகள்.

அத்துடன் உங்கள் விருப்பமான பாடல்களையும் தெரிவியுங்கள் இணைக்கமுயல்கின்றேன்.

வசிட்டர்களின் வாயால் எல்லாம் பாராட்டுக்கள் கிடைக்கின்றது :lol::lol::lol:

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் வியாசன் அண்ணா

நீங்கள் பூபாளம் இசைக்கத் தொடங்கிய நேரம் தமிழீழம் விரைவில் உதயமாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வியாசன்,

பூபாளம் இணையம்

பூபாளமிசைத்திட வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் தாரணி தல இரசிகை நித்திலா நிதர்சன் ஆகியோருக்கு எனது நன்றிகள் எல்லாம் உங்கள் ஆதரவினால்தான். இனிமேல் உங்களுக்கு தேவையான பாடல்களை அங்கு இணைக்கின்றேன். விரைவில் தரவிறக்கம் செய்யலாம். விளம்பரத்தொல்லையுமில்லை. உங்கள் ஆக்கங்களையும் ஆலோசனைகளையும் கஞ்சத்தனமில்லாமல் அள்ளித்தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

அன்புடன் வியாசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஆதிவாசி ஒரு வைரஸ் மென்பொருள் இணைக்கப்பட்டுள்ளது தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்

Link to comment
Share on other sites

நன்றி வியாசன் அண்ணா,:lol: (48 மணித்தியாலம் தான் வைச்சிருப்பீங்களா?)

யாழ் களத்தில் ஒரு வைரஸ் உலாவுதாமே..

அதை தடுக்க ஏதாவது தாங்கோ.. :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் வசி இடப்பிரச்சனைகள்.

நீங்கள் குறிப்பிடுகின்ற வைரஸை அடிபோட்டுத்தான் திருத்தவேண்டும் :lol: :cry: :lol::lol:

Link to comment
Share on other sites

யார் அந்த வைரஸ்??? :evil: :evil: என்ட வாளுக்கு வேலை வந்துட்டுதா? :evil: :evil: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னா உங்கடை வாளைத்தான் கரடி......................

இப்போ நீங்கள் வாளுக்குவேலை வந்துவிட்டதாக கரடி ............. அப்பிடித்தானே வசி :lol:

Link to comment
Share on other sites

இது சரிவராது! ஒரு வைரஸ் இல்லை, பல வைரஸ் இருக்கு இங்க :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மன்னா வெய்யில் கூடி சூடாக இருக்கிறியள்போலை பேசாமல் அரண்மனை நீச்சல் தடாகத்திலை போய் படுத்திருங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிதாக CDR Win மென்பொருள் இணைக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.