Jump to content

அக்கா எனக்கொரு கலியாணம் பேசுங்கோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அருணாவுக்கு தம்பியாரை நினைக்கப் பாவமாக் கிடக்குதுதான். ஆனால் அவளும்தான் என்ன செய்யிறது. முப்பத்தஞ்சு வயதுதான் எண்டாலும் இப்பத்தே பெட்டையளுமெல்லே வடிவு, வயது எல்லாம் பாக்கிதுகள். என்ன தம்பிக்குக் கொஞ்சம் முன் மண்டை வழுக்கை. அதுக்காக எத்தின பெட்டையள் வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டாளவை. ஊரில அம்மாவைப் பாக்கச் சொன்னால் அவவும் என்ன காரணத்துக்கோ தெரியேல்ல இந்தா அந்தா எண்டு இழுத்தடிக்கிறா. கடைசீல என்ர  தலை தான் உருளுது என சலித்துக்கொண்டாள்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாகப் போகிறது சந்திரனுக்கு பெண் பார்க்கத் தொடக்கி. இன்னும் பலன் தான் வரவில்லை. உள்ள கோயில் குருக்கள், புரோக்கர்களிடம் எல்லாம் சாதகத்தைக் குடுத்துத்தான் அருணா வைத்திருக்கிறாள். அவர்களும் பெண்களை புதிதாக உற்பத்தியா செய்ய முடியும். யாராவது பெண்களின் சாதகத்தைக் கொண்டுவந்தால்த்தானே அவர்களும் பொருத்தம் பாக்கலாம். நல்ல படித்த மாப்பிள்ளை எண்டாலும் பரவாயில்லை.

பாவம் தம்பியும் வீட்டுக்கு உழைச்சு உழைச்சே அவன்ர வயதும் போட்டுது. எப்பிடியும் இந்த வருசத்துக்குள்ளையாவது கலியாணத்தைக் கட்டி வச்சிட வேணும். எங்கட சனங்களும் லேசுப்பட்டதுகள் இல்லை. எதோ நான் தம்பியைக் கலியாணம் செய்விக்காமல் வச்சு அவன்ர காசையெல்லாம் எடுக்கிறன் எண்டு அங்க இஞ்ச கதைக்குதுகள். ஆனாக் கடவுளுக்குத் தெரியும் தானே நான் அவன்ர காசுக்கு ஆசைப்பட மாட்டன் எண்டு. தனக்குத்தானே மனதில் எண்ணியபடி அருணா சமையலில் ஈடுபட்டாள். இன்னும் ஆறு மாதத்துக்குள்ள அவனுக்குக் கலியாணத்தை நடக்கப் பண்ணு அம்மா. உனக்கு அவனைக்கொண்டு அபிசேகம் செய்விக்கிறன் எண்டு மனதுள் வேண்டியும் கொண்டாள்.

அவளின் பிரார்த்தனை வீண்போகவில்லையோ அல்லது அம்மனுக்கு அபிசேகம் தேவைப்பட்டுதோ ஒரு சம்மந்தம் வந்தது. அந்தப் பெண் தாயுடன் இந்தியாவில் இருக்கிறாள். தமக்கை பாரிஸில் இருக்கிறார். தமக்கைதான் தங்கைக்கு மாப்பிளை பார்த்தது. கோயிலில் ஐயர் அந்தப் பெண்ணின் சாதகத்தைக் கொடுத்தபோது. கடவுளே இந்தச் சாதகம் நல்லாப் பொருந்தி தம்பிக்கு கலியாணம் நடக்கவேணும்  எண்டு வேண்டிக்கொண்டுதான் சாதகத்தை வாங்கினாள் அருணா.

சாதகம் நல்ல பொருத்தம். உடனேயே கோயில் ஐயருக்கு அடித்து விசயத்தைக் கூறினாள். ஐயரும் தனக்குக் கொமிசன் வருமென்ற சந்தோசத்தோடு பரிசிலிருக்கும் தமக்கையின் தொலைபேசி எண்ணைக் கொடுத்தார். அருணா தொலைபேசி எண்ணை வாங்கினாள்தான் ஆனாலும் அவர்களை முதலில் அடிக்கும்படி ஐயரிடம் கூறினாள். என்ன இருந்தாலும்  நாங்கள் மாப்பிளை வீட்டுக்காரர். அவையிட்ட வலியப் போகக் கூடாது என்பது அருணாவின் எண்ணம்.

பரிசிலிருந்து தமக்கை போன் செய்தபோது பெண்ணின் படத்தை அனுப்பிவிடும்படி கூறி ஒரு வாரத்துக்குள்ளேயே படமும் வந்துவிட்டது. பெண்ணைப் பார்க்க அழகாகத்தான் இருந்தது. தம்பிக்குக் காட்டியபோது தம்பிக்கு முகமெல்லாம் பல்லாகிவிட தம்பியாரின் படத்தை பெண் பார்க்கட்டும் எனத்  தமக்கைக்கு அனுப்பி வைத்தனர். தமக்கை இரு வாரங்களிலேயே பெண்ணுக்கும் சந்திரனைப் பிடித்துவிட்டது எனக் கூறிய போது அருணாவுக்கு உடனே அம்மனுக்கு அபிசேகம் செய்விக்க வேணும் என்ற ஆசை எழுந்தது. சந்திரன் தான் அக்கா கலியாணம் நடக்கட்டும். நானும் மனிசியும் சேர்ந்து அபிசேகம் செய்வம் அக்கா என கேட்டதை மறுக்க முடியவில்லை.

கலியாணத்தை இந்தியாவிலேயே இன்னும் ஒரு மாதத்தில் நடத்துவதென இருபக்கமும் தீர்மானம் செய்து தம்பியாரும் எல்லா அலுவலும் பாக்கவும் தொடங்கியாச்சு. அக்காவையும் அத்தானையும் கூட தன் திருமணத்துக்கு இந்தியாவுக்கு தானே டிக்கட் போட்டுக் கூட்டிக்கொண்டு போகப்போறான் சந்திரன். அருணாவுக்கு தம்பியாரின் திருமணத்துக்குப் போவதிலும் இந்தியா போற மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. இப்பவே என்ன சேலை வாங்குவது, திருமணத்துக்கு என்ன நகை அணிவது எனக் குழம்பிப் போனாள்.

பெண்ணின் தமக்கையும் எத்தினையோதரம் போன் எடுத்துக் கதைச்சுப்போட்டா. தம்பியாரை மட்டும் அருணா அவர்கள் ஒருவரிடமும் கதைக்க விடவில்லை. ஏற்கனவே தம்பியாரிடம் கூறிவிட்டாள். அங்க போன பிறகு கதைக்கலாம் சந்திரன். இப்ப கதைச்சியெண்டால் எங்களில ஒரு இளக்காரமாப் போவிடும் எண்டு. சந்திரன் தமக்கை சொன்ன எல்லாத்துக்கும் தலையை ஆட்டிக்கொண்டான். ஏனெனில் ஏதாவது தான் எதிர்த்துக் கதைச்சு கலியாணம் அதால குளம்பினால் என்ன செய்வது என்ற பயம்.

அருணா குடும்பமும்  சந்திரனும் இந்தியா வந்து சேர்ந்தாச்சு. பெண்ணின்  தமக்கையும்  குடும்பத்துடன் ஏற்கனவே வந்துவிட்டார். தங்களோடு வந்து நிற்கும்படி அவர்கள் கேட்டும் அருணா மறுத்துவிட்டாள். நாங்கள் தங்கு விடுதியிலேயே நிற்பதாகக் கூறிவிட்டாள். அன்று மாலையிலேயே தாங்கள் அவர்கள் வீட்டுக்கு வருவதாகக் கூறியதும் சந்திரன் ஒரு வெட்கத்தோடு சிரித்தான். எப்ப விஜியைப் பார்ப்போம் என்று இருந்தது சந்திரனுக்கு.

மாலையில் ஒரு வாடகைக் காரை ஒழுங்குபடுத்திக்கொண்டு அவர்களின் வீட்டுக்குச் சென்றனர். முதலில் வரவேற்றது பரிசிலிருந்து வந்த தமக்கைதான். தமக்கையும் சரியா விஜிபோலத்தான் என சந்திரன் மட்டுமல்ல அருணாவும் எண்ணினர். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளவில்லை.  பெண்ணின் தாயாரும் வந்து வாங்கோ எப்பிடி இருக்கிறியள் என்று விசாரிக்க எங்க பொம்பிளை. முதலில விஜியை கூப்பிடுங்கோ. அல்லது தம்பி என்னை கடிக்கத் தொடங்கிவிடுவான் என அருணா பகிடியாகக் கூற, விஜி வெக்கப்பட்டுக்கொண்டு உள்ளுக்கை நிக்குது என கூறியபடி தமக்கை விஜியின் கையைப் பிடித்து இழுத்தார். வெளியே வந்த விஜியைப் பார்த்து அருணா, கணவன், சந்திரன் உட்பட அனைவரும் அதிர்ந்து போயினர்.

படத்தில் பார்த்த பெண்ண இல்லை இது. இது வேறை என்று தம்பியின் காதில் குசுகுசுத்தாள் அருணா. அவளுக்கு வந்த கோபத்தில் என்ன அடுத்துச் செய்ய வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. கணவனைத் திரும்பிப் பார்க்க அவன் ஒரு சிரிப்புடன் அமர்ந்திருந்தான். என்ன நாம் படத்தில் பார்த்தது போல் இல்லையே விஜி என அருணா கேட்டேவிட்டாள். படம் ஆக முதல்ல எடுத்தது என தமக்கை கூற, நீங்கள் மாறி உங்கட படத்தை அனுப்பின்னியளோ  என்று வேண்டுமென்றே கேட்டுவிட்டு தமக்கையைப் பார்த்தாள் அருணா. தம்பி இப்ப போவம் பிறகு வருவம் என்று கூறிக்கொண்டிருக்கும்போதே சந்திரனும் எழுந்துவிட்டான். தான் சொன்னவுடனேயே தம்பியார் எழுந்ததில் அருணாவுக்குச் சந்தோசம். பெருமிதத்தோடு கணவனைத் திரும்பிப் பார்த்தாள். மீண்டும் சந்திரனின் பக்கம் திரும்ப அவன் விஜியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். அவளுக்கு அருகில் சென்றவன் ஏன் விஜி வெக்கப்படுறீர் வாரும் வெளியில என விஜியின் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தான். சப்த நாடிகளும் ஒடுங்க அருணா தம்பியின் செய்கையை செய்வதறியாது பாத்துக்கொண்டே நின்றாள்.

Link to comment
Share on other sites

இதெல்லாம் அரசியல்லை நோர்மல் :lol::D . கதையோடை கதையா எழுத்துப்பிழையளையும் கவனியுங்கோ . கதைக்கு எனது வாழ்த்துக்கள் :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 திருவிளையாடல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி கோமகன் ,ஜீவா, லியோ ஆகியோருக்கு. எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. சுட்டியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன தொடர்கதையோ :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை முழுவதும் எழுதாமல் இப்படியே விட்டுப் பாத்தனான் எல்லோருக்கும் விளங்குதோ என்று. வரவுக்கு நன்றி ரதி.

Link to comment
Share on other sites

சந்திரன் ஒரு practical man! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரன் ஒரு practical man! :icon_idea:

எனக்கெண்டால், நெத்துக்கு விட்ட 'காய்' போல கிடக்கு! :D

 

 

சுமே, கதை அருமை! ஆனால், கதாநாயகன் கொஞ்சம் 'முத்தல்' போல கிடக்கு! :o

 

தமிழில என்னோவோ ஒரு பழமொழி சொல்லுறவங்கள்! வடிவா, நினைவுக்கு வருகுதில்லை!

 

என்னவோ 'காய்ஞ்ச மாடு' எண்டு தொடங்கின மாதிரி, ஞாபகம்! :icon_idea:

தொடருங்கள்!

Link to comment
Share on other sites

இப்படி தெரிந்த சிலரிற்கு முன்பு நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். உரிய வயதில் மணம் முடிக்காமல் இருந்தால் இப்படியான பிரச்சனைகளில் கொண்டு விடும்.  

 

திருமணமே வேண்டாமென்று இருக்கும் சுபேஷ் போன்ற யாழ் கள சிங்கங்களுக்கு இந்தக் கதை படிப்பினையாக இருக்கட்டும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த இசை,சுபேஸ், புங்கை, தும்பளையான்,தமிழ்ச்சிறி, அலை, தப்பிலி ஆகிய உறவுகளே! நன்றி.


சந்திரன் ஒரு practical man! :icon_idea:

 

அதுக்காக சூடு சுரணை கொஞ்சம்கூட இல்லாமல்.
 


எனக்கெண்டால், நெத்துக்கு விட்ட 'காய்' போல கிடக்கு! :D

என்னவோ 'காய்ஞ்ச மாடு' எண்டு தொடங்கின மாதிரி, ஞாபகம்! :icon_idea:

தொடருங்கள்!

 

அறிவுகெட்ட காஞ்ச மாடு :lol:
 


ம்ம்.......... தொடருங்கோ சுமே!

 

இது தொடர் இல்லையப்பா அலை. :rolleyes:
 


இப்படி தெரிந்த சிலரிற்கு முன்பு நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். உரிய வயதில் மணம் முடிக்காமல் இருந்தால் இப்படியான பிரச்சனைகளில் கொண்டு விடும்.  

 

திருமணமே வேண்டாமென்று இருக்கும் சுபேஷ் போன்ற யாழ் கள சிங்கங்களுக்கு இந்தக் கதை படிப்பினையாக இருக்கட்டும். :D

 

சுபேசை நினைக்க எனக்கும் பாவமாத்தான் கிடக்கு.ம் ... தலை விதியை மாத்த எலுமே :D

 

Link to comment
Share on other sites

இது தொடர் இல்லையப்பா அலை. :rolleyes:

 

 

 

 

 

சுமே, இது தொடரில்லை என்று தெரியும். நான் சொன்னது கதைகளைத் தொடர்ந்து எழுதுங்கோ என்ற மீனிங்கிலப்பா

Link to comment
Share on other sites

எங்கை இதுவும் தொடராக இழுக்கப்போறியளோண்டு நினைச்சன். ஆனால் ஒரே கதையா முடிச்சிட்டீங்கள்.
கதைபற்றி :-
புலம்பெயர்ந்த ஒருதலைமுறை வயது முதிரும் வரை குடும்பம் உறவுகள் என தங்கள் வாழ்வை இழந்து தங்களுக்கான புதுவாழ்வை தேடப்போகிற போது இத்தகைய சிக்கல்களை பலர் அனுபவித்துள்ளதை அறிந்துள்ளோம். ஆனால் இந்த கதையின் நாயகன் யதார்த்தமாக யோசித்து முடிவெடுத்திருக்கிறார். தன்னைப் புறக்கணித்த பெண்கள் போல தான் புறக்கணிக்கும் பெண்ணும் வேதனைப்படுவாள் என்று நினைத்தார் போலுள்ளது.
எங்கள் புலம்பெயர்வின் ஒரு உண்மைக்கதைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி  சொல்வதுதான் யதார்த்தமானது !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சாந்தி, சுவி அண்ணா, கரன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.