Jump to content

நேசக்கரம் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம் உருவாக்கம்.


Recommended Posts

நேசக்கரம் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம் உருவாக்கம்.

 

தமிழ்மாணவர்களின் மருத்துவம், இயந்திரவியல் பீடங்களுக்கான பல்கலைக்கழக நுளைவை அதிகரிக்கும் நோக்கிலும் படித்த இளைஞர்களின் வழிகாட்டலில் சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பினால் ‘மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இவ் ஒன்றியத்தில் பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களே அங்கம் வகிப்பர். குறிப்பாக மருத்துவம் , எந்திரவியல் பீடங்களுக்கு அனுமதி பெற்றவர்களே இவ்வைமப்பின் உறுப்பினர்களாகும் தகுதியைப் பெறுவார்கள்.

 

நோக்கம் :-

 

பல மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று மருத்துவ எந்திரவியல் பீடத்திற்கு அனுமதி கிடைத்தும் பணவசதியின்மையாலும் குடும்ப வறுமையின் நிமித்தமும் குறைந்த (BSC) படிப்பினைத் தொடர்கின்றனர். சிறந்த விஞ்ஞாளனிகளாகவும் , மருத்துவர்களாகவும் வர வேண்டிய எத்தைனயோ இளைஞர்களின் கனவுகள் முடிந்துவிடுகிறது.

 

இத்தகைய நிலமையை இல்லாதொழிப்பதற்கும் மாவட்டங்களில் தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை அதிகரிப்பதற்கும் எதிர்காலத்தில் உயர்தரம் கற்கும் மாணவர்களை பல்கலைக்கழகம் செல்வதற்கான வழிகாட்டல்களையும் மேற்கொள்ளவும் இவ் ஒன்றியமானது பாடுபடும்.

 

இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் யுத்தத்தால் பாதிப்புற்ற கிராமங்களுக்கச் சென்று மாதாந்த நடமாடும் இலவச கல்விச் சேவையை நடத்துவNதூடு எமது உப அமைப்புக்களின் குறைநிறைகள் தேவைகளை ஆராய்ந்து அறிக்கைகள் சமர்ப்பிப்பார்கள். இவர்களுக்கான கொடுப்பனவு போக்குவரத்துச் செலவுகள் மட்டுமே வழங்கப்படும்.

 

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சனைகள் அவர்களது தேவைகளை மாணவர் ஊக்கவிப்பு ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கவனித்து ஆலோசனைகள் உதவிகள், இலவச கற்பித்தல் வகுப்புக்கள் யாவற்றையும் வழங்குவர்.

 

தான் சார்ந்த சமூகத்தின் தேவையையும் கல்வியின் அவசியத்தையும் புரிந்த மாணவர்களை உருவாக்குவதன் மூலம் இழந்து போன கல்வியையும் வாழ்வையும் தமிழ் மாணவர்களால் மீளப்புதுப்பிக்க முடியும்.

 

எமது அமைப்பின் இந்த முயற்சிக்கான ஆதரவினை புலம்பெயர்ந்தாலும் நிலத்தின் நினைவோடு வாழும் தமிழர்கள் அனைவரிடமும் வேண்டி நிற்கிறோம்.

 

தொடர்புகளுக்கு :-

 

Shanthy – Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

Email :- nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Vereinsregister:-

AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

உதவுவதற்கு

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

 

Other countrys:

 

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com

 

http://nesakkaram.org/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி ,வறுமையில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதன் முலம் ,அவர்களை ஐந்தாம்தர புலமைப் பரீட்சை மீட்டல் வகுப்புகளுக்கும் O /L ,A /L பரீட்சை மீட்டல் வகுப்புகளுக்கும் பயன்படுத்தமுடியும் .இவர்களையும் சமுக அக்கறையுள்ளவரர்களாக மாற்றமுடியும் .

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி ,வறுமையில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதன் முலம் ,அவர்களை ஐந்தாம்தர புலமைப் பரீட்சை மீட்டல் வகுப்புகளுக்கும் O /L ,A /L பரீட்சை மீட்டல் வகுப்புகளுக்கும் பயன்படுத்தமுடியும் .இவர்களையும் சமுக அக்கறையுள்ளவரர்களாக மாற்றமுடியும் .

 

கருத்திட்டு தொடர்ந்து ஆதரவு தருவதோடு மட்டுமன்றி சத்தமின்றி நீங்கள் தரும் எல்லா உதவிகளுக்கும் நன்றிகள்.

நீங்கள் குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்தவே இந்த மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.  உங்கள் பிரதேசத்து மாணவர்களுக்கான உதவிகளையும் இந்த அமைப்பு மூலம் செய்ய முடியும்.

பரீட்சைகளுக்கு முன்னரான தயார்படுத்தல் ஒன்லைன் கற்பித்தல் யாவும் செய்யவுள்ளோம்.

Link to comment
Share on other sites

திருமலையில் இருந்து உங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வார்கள் .அதற்குரிய ஒழுங்கு செய்துள்ளேன் .இதேபோல் வன்னிக்கும் ஒருவருடன் கதைத்துள்ளேன் இவர் இங்கிருந்து உதவிகள் செய்துகொண்டிருக்கின்றார் ,ஒருங்கிணைந்து செய்தால் இலகுவாக இருக்கும் என கருதுகின்றார் .முயற்சிப்போம்

Link to comment
Share on other sites

இதேபோல் வன்னிக்கும் ஒருவருடன் கதைத்துள்ளேன் இவர் இங்கிருந்து உதவிகள் செய்துகொண்டிருக்கின்றார் ,ஒருங்கிணைந்து செய்தால் இலகுவாக இருக்கும் என கருதுகின்றார் .முயற்சிப்போம்

 

வன்னிப்பகுதிக்குள் பலரை இணைத்து ஏற்கனவே வேலை செய்துள்ளோம். ஆனால் நாம் எதிர்பார்க்கும் வகையில் நம்பிக்கை அர்ப்பணிப்போடு இதுவரையில் யாரையும் தேடிப்பிடிக்க முடியவில்லை. உங்கள் நண்பர் மூலம் நம்பிக்கையான இணைப்பொன்று கிடைத்தால் சேவைகளை விரிவுபடுத்தலாம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.