Jump to content

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம் -25)


Recommended Posts

இதன் முன்னைய பகுதிகளை வாசிக்க:    விற்றுத் தீர்ந்த காதல் கதை (Part 01-02-03-04-05-06-07 )      விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 08-09-10-11-12 )      விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 13-14-15-16 )      விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 17-18-19-20 )        விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 21 )       விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part - 22 )      விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம்-23)       விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம்-24)

 

 

ஞ்சலி தன் சந்தோசம் என்றாலும் துக்கம் என்றாலும்.... முதலில் இவனோடுதான் பகிர்ந்துகொள்வாள்.

 

அன்றும் அப்படித்தான்.....

 

அவள் இந்தியாவிலிருந்து போன் பண்ணியிருந்தாள். வழமைக்கு மாறான அவளது கனமான குரல்...

அவள் நன்கு அழுதிருக்கிறாள் என்பதனை உணர்த்தியது.

"என்ன அஞ்சு... என்ன ஆச்சு? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?" என அவன் கனிவாக விசாரிக்க... 

மறுமுனையில், விம்மத் தொடங்கினாள் அஞ்சலி.

 

"என்ன நடந்தது அஞ்சு....? என்ன ஆச்செண்டு சொன்னாத்தானே தெரியும்.... " என மீண்டும் வினவ,

"நான் நாளைக்கே மலேசியா வாறன். எனக்கு இங்க இருக்க விருப்பமில்லை. நான் லண்டனுக்கு திருப்பிப் போகேலடா. உன்னோடயே வந்து இருக்கப்போறன்.... !" சொல்லிவிட்டு மீண்டும் விம்மியழத்தொடங்கினாள்.

L4n0O.pngmqdefault.jpg

 

"அஞ்சு.... என் செல்லமே... ! முதல்ல அழுகிறதை நிப்பாட்டிட்டு...! என்ன நடந்தது எண்டு விளக்கமாச் சொல்லுமா...!"  என அன்பாகக் கேட்டான். "இண்டைக்கு என்ர தம்பியோட  ஒரு சின்னச் சண்டை. அதுவும் விளையாட்டுக்கு. அதுக்கு அம்மா என்னைத் திட்டிறா. இவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்கிறன் எண்டுகூட யோசிக்காமல், பாசம் இல்லாமத் திட்டிறா. ஆசையா அம்மாவைப் பார்க்கவந்தால் இப்பிடித் திட்டுறா.... எவ்வளவு கஷ்டமா இருக்கு ......" சொல்லிமுடிக்குமுன்னே மீண்டும் விம்மல்.

 

அஞ்சலி மிகவும் மென்மையானவள். யாரும் லேசாகக் கோபித்தால்கூட தாங்கமாட்டாள். உடனே அழுதுவிடுவாள் என்று இவனுக்கு நன்கு தெரியும். இதுவும் அப்படித்தான் என்பதை விளங்கிக்கொண்டான்.

 

என்ன சொல்லி இவளைச் சமாதனப்படுத்துவது என சிந்தித்தவன்.....

 

"அஞ்சு... என்னம்மா? இந்தச் சின்ன விசயத்துக்குப்போய் அழுதுகொண்டு, முதல்ல கண்ணைத்துடை....!

அழுகிறத நிப்பாட்டு! அம்மாதானே திட்டினவ. அவ வேற ஏதாவது ரென்ஷனில இருந்திருப்பா.

அதுக்குப்போய்... இப்பிடிக் கோவிக்கிறதே...?" கொஞ்சம் கண்டிப்புடன் சொன்னவன்,

 

"நாளைக்கு நான் ஏதாவது சின்னதாத் திட்டினாலும் இப்பிடித்தான் கோவிப்பியா அஞ்சு?" என சிரித்துக்கொண்டே  கேட்டான்.

கொஞ்சம் சமாதானமான அஞ்சலியும்.... சின்னக் கோபத்துடன்,

"ஓமடா ஓம்... நீ என்னைத் திட்டினால் உடனேயே அம்மா வீட்டுக்கு கிளம்பிடுவன்... இப்பவே சொல்லிப்போட்டன்" என்றாள் செல்லமாக.

 

"ஓ... அம்மாவோட சண்டையெண்டால் என்னிட்ட வாறது. என்னோட கோபமெண்டால் அம்மாட்டப் போறதோ......? ம்ம்ம்ம்ம்.... நல்ல கதையாத்தான் இருக்குது..." என நக்கலாகச் சொல்லவும்,

 

மீண்டும் வழமையான மனநிலைக்கு வந்து கொஞ்சம் சிரிக்கத்தொடங்கினாள் அஞ்சலி.

 

521677_466996123350008_2091985706_n.jpg

 

அஞ்சலியின் இக்குழந்தைத்தனத்தையும் மென்மையான மனத்தினையும் ரொம்பவே இரசித்த அவனுக்கு, 

அதேவிடயங்கள்தான் பின்னொருநாளில் அவர்களின் நிரந்தரமான பிரிவுக்கே வழியமைக்கப்போகின்றது என்பது தெரிந்திருக்கவில்லை.

 

***********                   ***********                ***********                   *************                **************            

 

அவளுடைய விடுமுறை கழிந்து.... மீண்டும் லண்டனுக்கு வந்துவிட்டிருந்தாள் அஞ்சலி.

வழமையான வேலைகளில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், இருவரும் ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறையேனும் பேசிக்கொள்ளத் தவறுவதில்லை.

 

இப்படியே இவர்களின் காதல் இனிமையாக நகர்ந்துகொண்டிருந்த காலகட்டங்களில்,

லண்டனிலுள்ள அஞ்சலியின்  உறவினர்கள்....  அவளது தகப்பன் வழி மச்சாள் முறையிலான ஷோபாவும், அவளது தாய்வழி மாமா (ஜெய்) ஒருவரும் இவனுக்கு அறிமுகமாகின்றனர்.

 

அஞ்சலிக்கும் அவனுக்குமான  காதல் விடயத்துக்கு அவர்களின் ஆதரவு இருந்ததனால்...

அவர்களுடனான  உறவு சொந்தங்கள் என்ற அடிப்படையிலேயே தொடர்ந்தது.

 

ஆனாலும் அஞ்சலிக்கும் அவனுக்கும் பதிவுத்திருமணம் நடந்திருந்த விடயம் அஞ்சலியின் மச்சாள் ஷோபாவுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அவள் தரப்பில் வேறு எவரும் அதுபற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை.

 

அதேபோல.... அவனது தரப்பில், லண்டனில் வசிக்கும் அவனது பெரியம்மா குடும்பத்தினரையும் அஞ்சலிக்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்தான். அவனின் மொத்தக் குடும்பத்தினைப் பொறுத்தவரையில், அஞ்சலிதான்  அவர்களது  மூத்த மருமகள். அவனின் ஒன்றுவிட்ட தங்கைகள் இருவருக்கும் அண்ணி என்றால் கொள்ளைப் பிரியம். சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் அஞ்சலி அவர்களின் வீட்டுக்கு சென்றுவருவாள்.

 

அதுமட்டுமில்லாமல் டென்மார்க்கில் உள்ள அவனது சித்திகுடும்பமும் அவனது இன்னுமிரு  தங்கைமாரும் 

அஞ்சலியுடன் அடிக்கடி தொலைபேசியில் பாசத்துடன்  கதைத்துக்கொள்வார்கள். 

'அண்ணி அண்ணி' என்று அஞ்சலியின்மேல் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார்கள்.அவனது சொந்தங்கள் அனைவரும் அஞ்சலியுடன் மிகவும் பாசமாக இருந்ததுடன்  தங்களின் குடும்பத்தில் ஒருவராக அவளை மனதார ஏற்றுக்கொண்டிருந்தனர் .

 

குறிப்பாக லண்டனிலிருக்கும் அவனது தங்கை  சிவானி அஞ்சலியின் மேல் மிகவும் பாசமாக இருப்பாள். தனது அண்ணியுடன் உரிமையுடன் அவள் பழகும் விதம் அவர்கள்  மிக  நெருக்கமான சிநேகிதிகள் என்றுதான் சொல்லத் தோன்றும்.

 

அதோடு... சிவானிக்கு ஒரு தங்கை மட்டும்தான். கூடப்பிறந்த ஆண் சகோதரங்கள் இல்லாததினால் ஒன்றுவிட்ட அண்ணனான அவனின் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருந்தாள் சிவானி. எல்லாவற்றையும் பட்டென்று வெளிப்படையாகப் பேசும் சுபாவம் உள்ளவள். கொஞ்சம் குறும்புக்காரியும் கூட.  அஞ்சலியும் சிவானியும் ஒன்றுசேர்ந்தால் இவன் பாவம். இருவரும் சேர்ந்து இவனைக் கலாய்ப்பார்கள். ஆனாலும் மூன்று பேரும் போனில் அடிக்கும் அரட்டை ரொம்பவும் கலகலப்பாகத்தான் இருக்கும்.

 

2009 ஆரம்பம்....

 

இப்படிக் கலகலப்பாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான்....

 

அஞ்சலி லண்டனிலிருந்து மன்செஸ்ரர் பகுதிக்கு மாறிச்செல்லவேண்டிய தேவை வந்தது. அவள் தனது கல்வியைத் தொடரவேண்டிய   University of Bolton அங்குதான் இருந்தது. இன்னும் மூன்றாண்டுகள் அவள் அங்குதான் கற்கவேண்டும். அஞ்சலியின் பழைய சிநேகிதி  'தனா' வும் அதே பல்கலைக்கழகத்திலேயே படித்துக்கொண்டிருந்தது.... அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. அஞ்சலிக்கான சகல ஏற்பாடுகளையும் தனா முன்கூட்டியே செய்து வைத்திருந்தாள்.

 

Uni_Bolton_RAK.jpg

 

அழகான  அமைதியான மன்செஸ்ரர்  மாநிலத்தின்  Bolton நகரம் அழகான தேவதை அஞ்சலியையும் தன்னிடத்தில் வரவேற்றுக் கொண்டது.

 

ஐக்கிய இராச்சியத்தின் மன்செஸ்ரர் மாநிலத்தில் அஞ்சலியும் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் நகரில் இவனும் என இவர்களுக்கிடையிலிருந்த  பல்லாயிரக் கணக்கான மைல்களால், இவர்கள் இருவரை மட்டுமே பிரித்து வைக்க முடிந்ததே ஒழிய... இவர்களிருவரின் மனங்களும் மிக நெருக்கமாக காதலெனும் மெல்லுணர்வால் பிணைந்துபோயிருந்தன.

 

உண்மையான காதலர்களை....  பிரித்துவைக்கும் தூரங்களால் பிரித்துவிட இயலுவதில்லை என்பதனை அஞ்சலிக்கும் அவனுக்குமிடையிலான காதல் நிரூபித்துக்கொண்டிருந்தது.

 

ஆனால்  அது எவ்வளவு காலத்திற்கு....? என்ற எல்லையை தீர்மானிப்பது,  கடவுளா? அல்லது தலைவிதியா?? இல்லை.... சூழ்நிலையா??? என்ற கேள்வியை மூன்று வருடங்களின் பின் அவன் முன்னால் வைத்தது வாழ்க்கையின் யதார்த்தம்.   

 

தொடரும்...

 

இக்கதையின் தொடர்ச்சிக்கு....

விற்றுத்தீர்ந்த காதல் கதை (பாகம் -26)

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் என்றும் சொல்ல முடியவில்லை, விருப்பு வாக்கும் போட முடியவில்லை உங்களை அறிந்தவன் என்ற வகையில்.. :(

Link to comment
Share on other sites

கவிதை மீண்டும் கதையை தொடருங்கள். வாழ்வில் தொடர்ந்து முன்னேறுங்கள். தோல்விகளே வெற்றியின் படிகள்நினைவில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையை மட்டும் எழுதி முடியுங்கோ தம்பி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.