Jump to content

நினைவழியாத் தடங்கள்


Recommended Posts

அறிமுகம் 

 

ஓவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல்வேறு வகையான சம்பவங்களின் தொகுப்பு அழிக்க முடியாத பதிவுகளாக மனதில் பதிந்து இருக்கும். நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், கசப்பு, வியப்பு, கடினம், வலி எனப் பல சம்பவங்களும், அந்த சம்பங்களின் உணர்வோட்டங்களும் ஆள்மனப்பதிவில் இருந்து கொண்டேயிருக்கும்.

 

அப்படி, எனது நினைவுகளில் அழிக்க முடியாமல் பதியப்பட்டிருக்கும் சில விடயங்களை, சம்பவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். ஒரு பொது வாழ்க்கையின் சம்பவத் தொகுப்புக்களாக என்னுடைய பதிவுகள் இருக்கப்போவதில்லை. சாதாரண மனித வாழ்வில் இருந்து வேறுபட்ட தடத்தில் பயணித்த எனதும் என்னுடைய நண்பர்களினதும் பதிவுகள் சில சம்பவங்களுக்கு வாய்மொழிச்சான்றாக அமையலாம் என்ற ஒரு எடுகோளின் அடிப்படையில்தான் இந்தப் பதிவுகளை உங்களோடு பகிர ஆசைப்படுகின்றேன்.

 

தமிழீழம் நோக்கிய விடுதலைப்பயணம் பல்லாயிரக்கணக்கானோரின் நினைவுத்தடங்களையும் சம்பவங்களையும் தன்னுள் விதைத்து வைத்திருக்கின்றது. அதில் பயணித்தவர்களும், அந்த சூழலில் வாழ்ந்தவர்களும் ஒரு சாதாரண மனிதவாழ்விற்கு அப்பால், சவால்களுடன் பிறக்கும் ஒவ்வொரு நாளையும் கடந்து சென்ற அந்தப் பயணத்தின் தடங்களைப் பதிந்து வைத்திருப்பார்கள். நிச்சயம், அந்த வாழ்விலும் பசுமையான ஆயிரம் நினைவுகள் உண்டு. கடினமான அந்த விடுதலைப்பயணத்தின் பசுமைகளையும் கனத்த நினைவுகளையும்தான் இங்கு பதிய விளைகின்றேன்.

 

முடிவு ஏதுமின்றிப் போயிருக்கும் போராட்டம், நிரக்கதியாய் நிற்கும் தாயகம், வெறுமையாகத் தெரியும் எதிர்காலம், என்பதை நினைத்தால் மனது நிம்மதியாக உறங்க மறுக்கின்றது. தாயகத்து நினைவுகளையே அசைபோட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த நினைவுகளின் சுழற்சி கனவுகளாக வெளிப்பட்டு தூக்கம் தொலைகின்றது.

 

பாடசாலை நண்பர் வட்டத்தை இடப்பெயர்வு பிரித்துவிட்டது. எனக்கு அறிமுகமான, உருவாகிய நட்பு என்பது விடுதலைப்பயணத்தில் ஏற்பட்டது மட்டும்தான். அந்த நட்பின் ஆயுளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காரணம், பொய்யான நட்பு என்பதல்ல. நட்பு என்றைக்கும் சாகாமல் இருக்கும். ஆனால் நண்பன் இருக்க மாட்டான். சாவுக்கு அருகில்தான் எங்கள் நட்பு கட்டியெழுப்பப்டும். நண்பர்களாக நெருங்கி, ஒவ்வொருவருடன் பழகும் போதும் யுத்தத்திற்கு சென்று மீண்டும் சந்திப்போமா? என்ற விடைதெரியாக் கேள்வி மனதின் ஓரத்தில் பதிந்துதான் இருக்கும். ஆனால், பிரிந்து பின்னர் சந்திக்கும் போது இருக்கும் அந்த சந்தோசம்! அனுபவிக்கும் போதுதான் புரியும். ஒரு நாள், தீடீரென நிரந்தரமாகவே நண்பன் பிரிந்து போகும் போது ஏற்படும் மனநிலையைச் சொல்லில் அடக்க முடியாது.

 

ஒரு வீரச்சாவடைந்த நண்பனின் வீட்டுக்குப்போகும் போது அவனது தாய் கடைசியா இரண்டு பேரும் வரக்கில்ல கிண்டலடிச்சு கிண்டலடிச்சு புட்டும் இறைச்சியும் சாப்பிட்டீங்களேடா, போகேக்கில, எப்ப இனிவருவீங்கள் என்டு கேட்க, அடுத்தமாதம் நாங்கள் கட்டாயம் வருவம், அப்ப அந்தக் கோழியைச் சமைச்சுத் தாங்கோ என்டு சொல்லியிட்டுப் போனிங்களே. இப்ப எங்க அவனை விட்டிட்டு வந்தனீங்கள்என்று கதறும் தாயின் கண்ணீருக்கு விடைசொல்ல முடியாமற்போன தருணங்களும் உண்டு.

 

சில இடங்களில் திடீர் மோதல் காரணமாக வீரச்சாவுகள் ஏற்படும். அவர்களின் வித்துடல்களை கொண்டுவர முடியாமல் அந்த இடத்திலேயே விதைத்திருக்கின்றோம். அதுவரை ஒன்றாக உண்டு, உறங்கி, அருகிலேயே நின்று களமாடிய நண்பனின் உடலை புதைத்துவிட்டுத் திரும்பும்போது இருக்கும் வலியை விபரிக்கமுடியவில்லை. பயணவழியில் தவிர்க்கமுடியாத வீரமரணங்களுக்கான விதைகுழிகள் அவ்விடத்திலேயே உருவாகும். பெற்றோர்களிடம் செய்தியும் புகைப்படமும் மட்டுமே போய்ச்சேரும். அந்தப்பெற்றோர்கள் எல்லாவற்றையும் விடுதலையின் பெயரால் ஏற்றார்கள்.

 

தாயகத்தின் ஒவ்வொரு அடிப்பரப்பிலும் மரணித்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் இறுதி மூச்சைச் சுமந்த காற்றும், இரத்தம் சிந்திய மண்ணும் விதைக்கப்பட்ட அவர்களின் கனவு நிறைவேறும் நாளுக்காகக் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இத்தனை கடினங்களைச் சுமந்து, இத்தனை தியாகத்தை எதற்குச் செய்தார்கள்? ஈழ விடுதலைக்காகவும், அந்த இலட்சியத்திற்காகவும்தான்.

 

போரின் வெற்றிகளைக் கண்டு, அதைக்கேட்டு பெருமையும் பேருவகையும் அடைந்திருக்கின்றோம். வெற்றிகளைக் கொண்டாட ஆடிப்பாடி, இனிப்பு வகைகளை பரிமாறிக்கூட புளகாங்கிதம் அடைந்திருக்கின்றோம். ஆனால் அதற்காக எத்தனையோ ஆத்மாக்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கும். அந்த ஆத்மாவின் தாய் கண்ணீரோடு கதறிக்கொண்டிருப்பாள் என்ற யதார்த்தம் எத்தனை பேருக்கு அந்தநேரம் நினைவிற்கு வரும்.

 

போர் வெற்றியையோ அன்றி தோல்வியையோ தரலாம். ஆனால் அதற்காகப் பட்ட கடினமும் சிந்திய வியர்வையும், சந்தித்த ஆபத்துக்களும், தியாகங்களும் என்றைக்குமே மறக்க முடியாதவை. அவைதான் தொடரப்போகும் பயணத்தின் படிக்கற்கள்.

 

ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஒரு போராளி எத்தனை கடினங்களைச் சந்தித்திருப்பான்?, எவ்வளவு வியர்வையை, குருதியைச் சிந்தியிருப்பான்? எத்தனை சந்தோசங்களைத் துறந்திருப்பான்? என்பதெல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அதற்கு எந்த அளவுகோலும் இல்லை. அது ஒரு தியாகப்பயணம், அது ஒரு வேள்வி, அது ஒரு விடுதலைக்கான துறவறம். தனது வாழ்க்கையின் சந்தோசங்களைத் துறந்து, உயிரை அர்ப்பணித்து, உயிரை அர்ப்பணிப்பதற்காகவே கடினங்களைச் சந்தித்தவர்கள் மாவீரர்கள்.

 

வெற்று வீரப்பிரதாபங்கள், வீரமுழக்கங்கள், தமிழ்தேசியத்தை காக்க வந்த பிதாமகர்கள் நாங்கள் தான் என வீரவசனம் பேசி கதையளந்த, கதையளக்கும் ஆத்மாக்கள் அல்ல அவர்கள். விடுதலையைச் சுவாசமாகக் மட்டும் கொண்டு செயற்பட்ட செயல்வீரர்கள்.

 

இப்படிப்பட்ட புனிதப்பயணத்தில் எங்களுடன் பயணித்த, எங்களை விட்டு நிரந்தரமாக உறங்கிவிட்ட எமது நண்பர்களின் நினைவுகளையும், அவர்களுடன் நின்ற களத்தையும், எனது நண்பர்களிற்குத் தெரிந்த, நடந்த சம்பவங்களின் தகவல்களையும் உள்வாங்கி; ”நினைவழியாத் தடங்கள்என்ற தலைப்பில் பதிவாக்கவுள்ளேன்.

 

 

நினைவழியாத் தடங்கள் - 01

 

தேசியத்தலைவர் பற்றி.....!

Link to comment
Share on other sites

நல்ல காரியம் இது வாணன்.. படிக்க ஆவலாக உள்ளேன்.. ஒவ்வொரு வெற்றியும் இழப்புக்களின்மீதே பெறப்பட்டதால் அவற்றை இனிப்பு வழங்கி என்றுமே கொண்டாடியதில்லை.. இன்று உள்ளது நாளை போகலாம் என்கிற எண்ணம் எப்போதுமே இருக்கும்.. அதேபோல இன்று இல்லாதது நாளை கிடைக்கலாம் என்கிற நம்பிக்கையும் கூடவே இருக்கும்..

Link to comment
Share on other sites

போரின் வெற்றிகளைக் கண்டு, அதைக்கேட்டு பெருமையும் பேருவகையும் அடைந்திருக்கின்றோம். வெற்றிகளைக் கொண்டாட ஆடிப்பாடி, இனிப்பு வகைகளை பரிமாறிக்கூட புளகாங்கிதம் அடைந்திருக்கின்றோம். ஆனால் அதற்காக எத்தனையோ ஆத்மாக்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கும். அந்த ஆத்மாவின் தாய் கண்ணீரோடு கதறிக்கொண்டிருப்பாள் என்ற யதார்த்தம் எத்தனை பேருக்கு அந்தநேரம் நினைவிற்கு வரும்.

 

போர் வெற்றியையோ அன்றி தோல்வியையோ தரலாம். ஆனால் அதற்காகப் பட்ட கடினமும் சிந்திய வியர்வையும், சந்தித்த ஆபத்துக்களும், தியாகங்களும் என்றைக்குமே மறக்க முடியாதவை. அவைதான் தொடரப்போகும் பயணத்தின் படிக்கற்கள்.

 

ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஒரு போராளி எத்தனை கடினங்களைச் சந்தித்திருப்பான்?, எவ்வளவு வியர்வையை, குருதியைச் சிந்தியிருப்பான்? எத்தனை சந்தோசங்களைத் துறந்திருப்பான்? என்பதெல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அதற்கு எந்த அளவுகோலும் இல்லை. அது ஒரு தியாகப்பயணம், அது ஒரு வேள்வி, அது ஒரு விடுதலைக்கான துறவறம். தனது வாழ்க்கையின் சந்தோசங்களைத் துறந்து, உயிரை அர்ப்பணித்து, உயிரை அர்ப்பணிப்பதற்காகவே கடினங்களைச் சந்தித்தவர்கள் மாவீரர்கள்.

 

வெற்று வீரப்பிரதாபங்கள், வீரமுழக்கங்கள், தமிழ்தேசியத்தை காக்க வந்த பிதாமகர்கள் நாங்கள் தான் என வீரவசனம் பேசி கதையளந்த ஆத்மாக்கள் அல்ல அவர்கள். விடுதலையைச் சுவாசமாகக் மட்டும் கொண்டு செயற்பட்ட செயல்வீரர்கள்.

 

 

 

எழுதுங்கள் வாணன். எங்கள் வாழ்வின்  எல்லாமுமான உன்னதமானவர்கள் பற்றிய நினைவழியாத தடங்களை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல எழுதிவிடுங்கள். சரி தவறு என்பதையே தராசிட்டு எங்களுக்காக மடிந்தவர்கள் பற்றிய இக்கால மீளாய்வு அறிவுஜீவி எழுத்துக்களை விட இத்தகைய பதிவுகளே இப்போது தேவை.

வாழ்த்துச் சொல்ல முடியவில்லை. ஒரு வரலாற்றை பதிவு செய்யும் உங்கள் எழுத்துக்களை காலம் பத்திரப்படுத்த எழுதுங்கள் என்று மட்டுமே சொல்லுவேன். எழுதுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வாணன் வணக்கம்,
வீரவரலாற்றின் நினைவழியா தடங்களை இயன்றவரை பதியுங்கள்.
இரத்தமும் சதையுமான அந்த வரலாறு  எங்கள் வீரவரலாற்றின் 
ஒரு பகுதியை பூர்த்தி செய்யும் . வாழ்த்துக்கள் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

போர் வெற்றியையோ அன்றி தோல்வியையோ தரலாம். ஆனால் அதற்காகப் பட்ட கடினமும் சிந்திய வியர்வையும், சந்தித்த ஆபத்துக்களும், தியாகங்களும் என்றைக்குமே மறக்க முடியாதவை. அவைதான் தொடரப்போகும் பயணத்தின் படிக்கற்கள்.

 

ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஒரு போராளி எத்தனை கடினங்களைச் சந்தித்திருப்பான்?, எவ்வளவு வியர்வையை, குருதியைச் சிந்தியிருப்பான்? எத்தனை சந்தோசங்களைத் துறந்திருப்பான்? என்பதெல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அதற்கு எந்த அளவுகோலும் இல்லை. அது ஒரு தியாகப்பயணம், அது ஒரு வேள்வி, அது ஒரு விடுதலைக்கான துறவறம். தனது வாழ்க்கையின் சந்தோசங்களைத் துறந்து, உயிரை அர்ப்பணித்து, உயிரை அர்ப்பணிப்பதற்காகவே கடினங்களைச் சந்தித்தவர்கள் மாவீரர்கள்.

 

 

உண்மையான வசனங்கள் 

 

தொடர்ந்து எழுதுங்கள் வாணன்  

Link to comment
Share on other sites

 

 

 

வெற்று வீரப்பிரதாபங்கள், வீரமுழக்கங்கள், தமிழ்தேசியத்தை காக்க வந்த பிதாமகர்கள் நாங்கள் தான் என வீரவசனம் பேசி கதையளந்த ஆத்மாக்கள் அல்ல அவர்கள். விடுதலையைச் சுவாசமாகக் மட்டும் கொண்டு செயற்பட்ட செயல்வீரர்கள்.

 

இப்படிப்பட்ட புனிதப்பயணத்தில் எங்களுடன் பயணித்த, எங்களை விட்டு நிரந்தரமாக உறங்கிவிட்ட எமது நண்பர்களின் நினைவுகளையும், அவர்களுடன் நின்ற களத்தையும், எனது நண்பர்களிற்குத் தெரிந்த, நடந்த சம்பவங்களின் தகவல்களையும் உள்வாங்கி; ”நினைவழியாத் தடங்கள்என்ற தலைப்பில் பதிவாக்கவுள்ளேன்.

 

 

எழுதுங்கள் வாணன், வாசிக்க மிக ஆவல்!!

Link to comment
Share on other sites

வாசிக்க ஆவலாக உள்ளேன். இனி இழக்க எதுவுமில்லை எனுமளவுக்கு எமது மக்கள் அனைத்தையும் இழந்துள்ளார்கள். 
 
மாவீரர்கள் என்றுமே மறக்கப்பட மாட்டார்கள்.அவர்கள் சுயநலமற்றவர்கள். தமது மக்களின் சுதந்திரத்துக்காக தமது உயிரை தியாகம் செய்தவர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமது கனவுகள் தான் இதுவரை நிறைவேறவில்லை!

 

நினைவுகளிலாவது எமது சுதந்திர வாழ்வை வாழ்ந்திருப்போம்!

 

எனவே தொடர்ந்து எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாணன் 

 

மண்ணுக்கா மடிந்த இந்த தியாகிகளின் வரலாறுகள்  எப்போதும் உயிர்ப்புடனேயே  இருக்கவேண்டும் .

நாளை நாங்கள் இல்லாமல் போகும்போதும் இந்த உண்மை வரலாறுகளே எங்கள் பரம்பரை நெஞ்சை நிமிர்த்தி 

வாழ வழிசெய்யும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாணன்

 

தமிழரது விடுதலைப்போராட்ட  வரலாறு பல தியாகங்களையும் எண்ணிலடங்கா வலிகளையும் கொண்டது

அது பதியப்படணும்

ஆவணப்படுத்தப்படணும்  என்று அடிக்கடி எழுதி  வருகின்றேன்

அந்தவகையில் தங்களது முயற்சி  பெரும் நம்பிக்கையும் உற்சாகத்தையும் தருகிறது

எழுதுங்கள்

வரலாற்றை அப்படியே  பதிவு செய்யுங்கள்.

மக்களிடம்

உலகிடம் அவை போய்ச்சேரணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ

Link to comment
Share on other sites

வணக்கம் வாணன் ,எழுதுங்கள்
எங்களுக்காக களமாடிய உங்களை போன்றோரின் பதிவுகளை வாசித்தாவது சிலர் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருக்கட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் வாணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாணன்......

Link to comment
Share on other sites

வீரவரலாற்றின் நினைவழியா தடங்களை இயன்றவரை பதியுங்கள்

Link to comment
Share on other sites

என்னை அன்போடு வரவேற்று, தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமளித்து, கருத்துரைத்த இசைக்கலைஞன், சாந்தி, லியோ, வாத்தியார், அலைமகள், நுணாவிலான், புங்கையூரான், நந்தன்,விசுகு, புத்தன், குருவி, Gari, மொசப்பொத்தேமியா சுமேரியர்,அர்ஜீன், குமாரசாமி, சுண்டல் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நிச்சயம் உங்களின் ஆதரவுடன் தொடர்ந்து பயணிப்பேன். 

 

நீண்டகாலப் பயணத்தின் நினைவுகளில், அவ்வப்போது வந்து செல்லும் சம்பங்களை உங்களுடன் பகிர நினைப்பதால், அவை ஒரு தொடர் சம்பவமாகவோ, ஒழுங்கு முறையிலோ அமைந்திருக்காது.  நினைவுகளை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்..  

Link to comment
Share on other sites

உங்கள் வருகைக்கு நன்றி சகோதரி, 

 

நிச்சயம் பதிவேன், ஆனால் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய வேலைப்பளுக்களும் இருப்பதால் சிலசமயம் இடைவெளிகள் வரலாம். முடிந்தவரை, பதிவேற்றுகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--------

ஒரு வீரச்சாவடைந்த நண்பனின் வீட்டுக்குப்போகும் போது அவனது தாய் கடைசியா இரண்டு பேரும் வரக்கில்ல கிண்டலடிச்சு கிண்டலடிச்சு புட்டும் இறைச்சியும் சாப்பிட்டீங்களேடா, போகேக்கில, எப்ப இனிவருவீங்கள் என்டு கேட்க, அடுத்தமாதம் நாங்கள் கட்டாயம் வருவம், அப்ப அந்தக் கோழியைச் சமைச்சுத் தாங்கோ என்டு சொல்லியிட்டுப் போனிங்களே. இப்ப எங்க அவனை விட்டிட்டு வந்தனீங்கள்என்று கதறும் தாயின் கண்ணீருக்கு விடைசொல்ல முடியாமற்போன தருணங்களும் உண்டு.

----------

இப்படிப்பட்ட புனிதப்பயணத்தில் எங்களுடன் பயணித்த, எங்களை விட்டு நிரந்தரமாக உறங்கிவிட்ட எமது நண்பர்களின் நினைவுகளையும், அவர்களுடன் நின்ற களத்தையும், எனது நண்பர்களிற்குத் தெரிந்த, நடந்த சம்பவங்களின் தகவல்களையும் உள்வாங்கி; ”நினைவழியாத் தடங்கள்என்ற தலைப்பில் பதிவாக்கவுள்ளேன்.

 

எமது போராட்ட வரலாறுகள், அதற்குப் பின்னே மறைந்திருக்கும் தியாகங்கள், சோகங்கள்... போன்றவற்றை, உங்கள் எழுத்தில் கொண்டு வாருங்கள் வாணன். 

Link to comment
Share on other sites

நன்றி தமிழ் சிறி

 

தங்களின் கருத்துக்களுக்கு

 

 

நினைவழியாத் தடங்கள் - 02 (ஒருபோராளியின் இறுதிக்கணம்) 

 

வீரச்சாவு போராட்டப்பாதையில் தவிர்க்கமுடியாததொன்று. ஆனால், இந்தச் சாவின் கணங்கள் கடினமானவை. எனது நண்பன் சொன்னான் ‘மச்சான் இங்க காயப்படுகிறதை விட ஓரேயடியா வீரச்சாவடைந்திடனும்’ என்று.

Link to comment
Share on other sites

நெருடல்l இணையத்தளத்திலும் உங்கள் இந்த ஆக்கம் பிரசுரிக்கப்படுகின்றது .... வாழ்த்துக்கள்....

http://nerudal.com/nerudal.58228.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.