Jump to content

கைக்கு எட்டியது வாய்க்கு ?


Recommended Posts

தனிமையில் அதுவும் பாரில் இருந்து குடிப்பது என்பது மிகவும் அசவுக்கியமான ஒரு விடயம். கதைக்க ஆளில்லாமல் தண்ணியடிப்பது கண்ணை கட்டி கடலுக்க விட்டது போல, இன்று அந்த நிலை தான் நகுலனுக்கு, ஏனடா இதற்குள் தனியே வந்தம் என்றிருந்தது அவனுக்கு . நாலு பியரை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு போனால் தொலைக்காட்சியில் ஒரு நல்ல சினிமா படத்தையோ அல்லது பிரகாஷ்ராஜ் இன்  நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடியை பார்த்துக்கொண்டு தனது இந்திய சினிமா, பொது அறிவையும் செக் பண்ணிக்கொண்டு இருந்திருக்கலாம்.

 

ஒவ்வொரு வெள்ளி பின்னேரமும் வேலை முடிய வேலையிடத்து நண்பர்களுடன் டாப்ஸ் ரெஸ்டோரண்டில் இல் போய் இரண்டு பியர் அடித்துவிட்டுத்தான் வீட்டிற்கு போவது நகுலனின் வழக்கம். வேலை செய்யும் பல்லின நண்பர்களுடன் இந்த பழக்கம் பழகி நகுலனுக்கு பத்து வருடங்ககளுக்கு மேலாகின்றது .

வின்டரில் பாருக்கு உள்ளேயும் சம்மர் வர வீதியோரம் அவர்கள் விரிக்கும் குடைக்குள் இருந்து நாலு கதைகள் பேசியபடி பியரை அடிப்பதிலும் இருக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை மாதிரி அந்த  தருணங்களில் அவனுக்கு  இருக்கும். விளையாட்டு ,சினிமா ,அரசியல் என்று ஒரு சீரியசுமில்லாமல் கதைத்து, சிகரெட்டும் பத்தி விடைபெறும் போது ஆளுக்கு ஆள்  கட்டி பிடித்து  வாரவிடுமுறை நன்றாக இருக்கட்டும் என்று விட்டு போகும் அந்த வெள்ளைநிற, கயனிஸ் நண்பர்களை நகுலனுக்கு நன்கு பிடித்து போயிற்று . வெள்ளிகிழமை இந்த ஒன்றுகூடல் கட்டயாய விதியாகி இருந்தாலும் இடையில் கூட  சிலவேளை எட்டிப்பார்பார்கள். ரேஸ்ரோரண்டிற்கு குடிக்க போவது எத்தனை மணியாக இருந்தாலும் மாலை  ஏழு  மணிக்கு மேல் எவரும் அங்கு இருப்பதில்லை வீடுகளுக்கு ஓடிவிடுவார்கள்.

 

இன்று நீண்ட வார விடுமுறை என்பதால் வேலை இரண்டு மணிக்கே முடிந்துவிட்டது .நண்பர்கள் பலரும் காம்பிங் ,கொட்டேஜ் என்று போக திட்டம் போட்டதால் டாப்ஸ் ரெஸ்ட்டோரன்ட்  போகும் பிளான் கை விடப்பட்டு இருந்தது .நகுலனின்  மனைவி வேறு வெள்ளி என்றால் வேலையால் தனது தம்பியுடன் இருக்கும் தாயாரிடமும் போய்விட்டு இரவு பத்து பதினோரு மணிக்குத்தான் வீடு திரும்புவார்.

 

வேலை முடிய இன்று வீட்டிற்கு போய் வீட்டுதோட்டத்தில் வேலை செய்யவவேண்டும் என்று இருந்தவன் டாப்ஸ் பாரைஐ தாண்டும் போது ரீனா பாருக்குள் நடந்துபோவதை  கண்ணாடிக்குள்ளால் பார்த்துவிட்டான் .எதற்கும் ஒரு பியரை அடித்துவிட்டு ரீனாவிற்கும் கலோ சொல்லி விட்டு போவம் என்று காரை திருப்புகின்றான் .

ரீனா டாப்ஸ் பாரில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக வேலை செய்யும் வெயிடர்ஸ் .ரீனா வேலைக்கு வந்த முதல் வார வெள்ளியே மறக்கமுடியாத ஒரு நாள்தான் .வேலை முடிய நகுலனுடன் சேர்த்து  ஒரு பத்து பேர்கள் போய் வழக்கமாக இருக்கும் இடத்தில குந்தினால் நாலாம் நம்பர் மேசைக்கு உடன் ஓடிவரும் வெள்ளை நிற கண்ணாடி போட்ட எல்லாம் திறந்துவிட்ட நிகோல் இல்லாமல் ஒரு ஸ்பானிய முகத்துடன் ஒருத்தி வந்து தன்னை அறிமுகம் செய்கின்றார் .நான்தான் ரீனா இனிமேல் நாலாவது மேசைக்கு உபசரிக்கபோகின்றவள் .

 

ஸ்பானிஸ் பெண்கள் எல்லோருமே ஜெனிபர் லோபெஸ் மாதிரி இருப்பது ஏன் என்று இன்றுவரை நகுலனுக்கு  விளங்காமல் இருக்கு .உடற்கட்டும் சரி முகமும் சரி ஒரு இறுகிய தன்மை.கை கால் எல்லாம் சொல்லி செய்தது மாதிரி இருக்கும் .ரீனாவின்  முன்பக்கம் மட்டும் சொல்லாமலே  செய்தது போலிருக்கும்  .இந்த வேயிட்டேர்ச்கள் டிப்ஸ் இற்காகவோ என்னவோ மேற்சட்டை பட்டன்களை போடுவதேல்லை .இவர்கள் குனிய நிமிர குடித்தவன் வெறி முறிந்து இன்னமும் இரண்டு மேலதிகமாக குடிப்பார்கள் .முதலாளி இதற்கென்றே அவர்களை வேலைக்கேடுத்து உடுப்பும் கொடுக்கின்றான் போல கிடக்கு என்று நகுலன் நினைக்காத நாளில்லை.

 

ரீனா டாப்ஸ் இல் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து நகுலனது வேலையிடத்திலும் ரீனா ஒரு கதை பொருள் ஆகியிருந்தாள்.அவள் போடும் ஆடைகளில் இருந்து அவளின் அங்கங்களின் அளவை பற்றி ஒரு பட்டி மன்றமே நடக்கும். அவள் கண்ணுக்கு முன்னே மேசையில் இருக்கும் நாப்கினில் ரோசா படம் வரைந்து கொடுத்தவர்களும் கிறிஸ்மஸ் ,புது வருடங்கள் வரும் போது பரிசுகள் என்று கொடுத்தவர்களும் பலர். எல்லோருடனும் சிரித்து சிரித்து அவள் வளைய வருவதால் ஒரு நாளைக்கு எப்படியாவது கொத்திக்கொண்டு போக வேண்டும் என்ற நல்ல  எண்ணம் தான் எல்லோர் மனதிலும்  இருந்தது ஆனால் அந்த ஆசை  ஒருவருக்கும் இதுவரை ஈடேறவில்லை. ஆனால் அவனவன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதில்  மட்டும் விக்கிரமாதித்தன்கள் ஆக இருந்தார்கள் .

 

அவளுக்கு ஒரு காதலன் இருப்பதும் அவன் குடி ,கஞ்சா ,போலிஸ் கேஸ் என்று அலைவதுமாக இருப்பதாக அவளே சொல்லியிருக்கின்றாள் .தான் கொலம்பியாவில் இருந்து கனடாவிற்கு குடிபுகுந்த நேரம் அவன் தான் முழு உதவிகளும் செய்ததால் தன்னால் அவனை விட்டு பிரியமுடியவில்லை என்றும் அடிக்கடி சொல்லுவாள்.அவள் சொல்லுவது எவர் காதிலும் ஏறியதாக நகுலனுக்கு ஒரு போதும் பட்டதில்லை .அவர்களுக்கு அவளை எப்படியாவது மடக்குவது என்ற கருமமே தான் கண்ணே ஒழிய மற்றவைகள் எல்லாம் இரண்டாம் பட்சம் .

 

நகுலனுக்கும்  ரீனாவின் அழகில் ஒரு வித மயக்கம் இருந்தது உண்மை.ஆனால் தனது நிறத்தாலும் முற்றாக சிலருக்கு எடுத்தவுடன்  விளங்காத தனது ஆங்கிலத்தாலும் எப்போதும் சற்று தள்ளியே இந்தவிடயத்தில் இருப்பான். இருந்தாலும் குடித்து முடிய தாராளமாக டிப்சை வைத்து அவளின் கவனத்திற்கு தன்னையும்  கொண்டுவந்திருப்பதாக மனதிற்குள் நினைப்பான் .வெள்ளைகள் எல்லாம் மிக பகிரங்கமாக அவளை பற்றி பேசும்போது நான் மணமுடித்தவன் இதிலெல்லாம் ஆர்வம் இல்லை என்பதுபோல மிக அலட்சியமாக  காட்டிக்கொள்ளுவான். இருந்தாலும் ரீனா உடுக்கும் உடையில் இருந்து அவளின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு அத்துப்படி. ஒரு நாள் சற்று அதீதவெறி மயக்கத்தில் இவ்வளவு அழகான வாளிப்பான ஒரு பெண்களை எல்லாம் யார் தான் அனுபவிக்கின்றார்களோ தெரியாது, நான் என்றால் தொடக்கூட மாட்டன் பார்த்துக்கொண்டே இருப்பன் என்று வாய் தடுமாறி சொல்லிவிட்டான் .

 

அடுத்தநாள் வேலையில் நண்பர்கள் நகுலன் ரீனா உடுப்பை கழட்டினால்  அதை பார்த்து ஓவியம் மட்டும்தான் வரைவார்  என்று சொல்லி சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். தனக்கு அப்படி வரைய தெரியாது ஆனால்  ஒரு பிக்காசோவை பிடித்து  அவளை வரைய வேண்டும் என்று ஆசை இருக்கு என்று கதையை மெல்ல திசை திருப்பிவிட்டான் .அவன் மனதில் இருக்கும் ரீனாவின் மீதான அந்த ஈர்ப்புத்தான் இன்று அவனை தனியாக அந்த  ரேச்டோரண்டிற்கு இழுத்துக்கொண்டு போனது .

ரீனாவிடம் ஹாய் சொல்லி ஒரு ரெட்ரிகாட் லாகரை வெளிமேசைக்கு கொண்டுவர ஆர்டர் பண்ணிவிட்டு வெளியில் போய் ஒரு குடைக்குள் கீழருந்து  சிகரெட்டை எடுத்து பற்ற வைக்கின்றான்.  பியருடன் வந்த ரீனா,

 

“என்ன இன்று தனிமையில் “

 

“மற்றவர்கள் நீண்ட வாரவிடுமுறை என்று ஓடிவிட்டார்கள் ,எனக்கும் பல அலுவல்கள் இருக்கு இருந்தாலும்  ,அதற்கு முதல் ஒரு பியரையும் அடித்து அப்படியே உன்னையும் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் “

 

“பியர் அடிப்பது சரி பிறகென்ன என்னை பார்ப்பது என்று”

 

“ஏனோ அப்படி இன்று தோன்றியது அதுதான் வந்தேன் “

 

“நல்லது.என்னை பார்த்துவிட்டாய் ஒரு பியரை குடித்துவிட்டு போய்விடு “

 

“நீ சொன்னாலும் சொல்லாவிடாலும் இந்த பியருடன் நான் போகத்தான் போகின்றேன் “

 

நன்றி என்றபடி ரீனா ரேஸ்டோரண்டிற்குள் போய்விட்டாள். பியரை மெல்ல குடித்துமுடித்துவிட்டு ஒரு சிகரெட்டை பற்றிக்கொண்டு நகுலன் எழும்பும் போது

 

“எனக்கு ஒரு சிகரெட் தருவாயா “ என்றபடி ரீனா வருகின்றாள் .

 

“அப்ப எனக்கு இன்னமும் ஒரு பியர் கொண்டுவா ,நான் ஒரு சிகரெட் தருகின்றேன் “

 

சிரித்தபடி உள்ளே போய் பியரை கொண்டுவந்தவள் அவனருகில் இருந்து அவன் கொடுத்த சிகரெட்டை பற்றிகொண்டு

“இன்று எனக்கு நாலு  மணிக்கு வேலை முடிகின்றது .என்னை கென்னடி சப்வேயில் ஒருக்கா இறக்கிவிட முடியுமா “

 

மணிக்கூட்டில் நேரத்தை பார்த்த நகுலன்

“உனக்காக எனது அலுவல்களை பின் போட்டு இன்னமும் ஒரு மணித்தியாலம் இங்கு இருந்து விட்டு உன்னை கொண்டுபோய் இறக்கிவிடுகின்றேன் ,அதற்கு நீயாக விரும்பி ஏதாவது தரலாம் .அது டிப்ஸாக இருக்க கூடாது “

 

“ஏன் அதை இப்போதே தந்துவிடுகின்றேன் “ என்ற படி ஒரு சின்ன கட்டிப்பிடிப்புடன் உள்ளே போய்விட்டாள்.

 

நகுலனுக்கு பிசாசுபோல ஒன்று நரம்பெங்கும் புகுந்து  பேயாக ஊரத் தொடங்கியது. இனி குடிக்க கூடாது சிலவேளை அப்படி ஏதாவது  சந்தர்ப்பம் கிடைத்தாலும் சொதப்பிவிடுவம் என்று கள்ள உள்ளுணர்வு சொல்லுகின்றது .மனதிற்குள் ஒருமுறை  ரீனாவின் காதலன் கென்னடி சப்வேயில் கஞ்சா பற்றியபடி வந்து தனது முகத்தில் குத்துவதுபோலவும் ஏனோ வந்து போனது .

 

தனது வேலை உடுப்பை மாற்றி பலவர்ண நிறத்தில் ஒரு கைக்குட்டையளவு சட்டையுடன் ரீனா வருகின்றாள்.

 

“என்ன எக்ஸ்ட்ரா பெரிசா இருக்கே”

 

“எதை சொல்லுகின்றாய் “

 

“என்ன உடுப்பையா சொல்கின்றேன் “

 

“எடு காரை போவம் நகுல் “

 

காசியரில் போய் பில்லை கட்டிவிட்டு ரீனாவுடன் போய் காரில் ஏறுகின்றான் நகுல். காரை மார்க்கம் வீதியில் ஏற்றியபடியே,

 

.”நீ எங்கே இருக்கின்றாய் ரீனா “

 

“என்ன குரல் ஒரு மாதிரி மயங்குது .அது ஒரு மணித்தியால ஓட்டம் ,என்னை கென்னடி சப்வேயிலேயே இறக்கிவிட்டால் போதும்  “

 

“பரவாயில்லை. உன்னை நான் உனது வீட்டிலேயே பாதுகாப்பாக ? இறக்கி விடுகின்றேன். எங்கே என்று சொல்லு.”

 

“இப்ப பெருந்தெரு எடுத்து மேற்கிற்கு போ. வீடு பிராம்டனில் இருக்கு ”

 

“விலாசத்தை சொல்லு கதைத்துக்கொண்டே போகலாம் “

 

நகுலனின் கார் ரீனாவின் அப்பாட்மேன்ட்டின்  முன் நிற்கின்றது .

 

“நன்றி நகுல் .எனது காதலன் இங்கு போலிஸ் தேடுவதால் வன்கூவர்  போய்விட்டான். நான் தனியாத்தான் இருக்கின்றேன். அடுத்த வாரம் எனக்கு ஒரு சோதனை இருப்பதால் படிக்க வேண்டும். அதனால் தான் வேலையை முன்னதாகவே முடித்தேன் .இவ்வளவு தூரம் வந்து என்னை  இறக்கியதற்கு  நன்றி. நான் போய் வருகின்றேன்"

 

“இவ்வளவு தூரம் உன்னை கூட்டி கொண்டு வந்ததற்கு நன்றி மட்டும்தானா ரீனா  “

 

காரை விட்டு இறங்கிய ரீனா காரை சுற்றி வந்து திறந்திருக்கும் காரின் கண்ணாடி யன்னல் ஊடாக முகத்தை நீட்டி நகுலனுக்கு  ஏதோ சொல்கின்றாள்.

 

என்ன சொன்னாள் என்பது அடுத்த பதிவில் ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகுலன் நல்லாய் அவியப்போறார் போலை கிடக்கு.....

Link to comment
Share on other sites

முடிவை தலைப்பே சொல்லி விட்டது போலுள்ளது.என்றாலும் எதுவும் நடக்கலாம். ஸ்பானிய பெண்ணல்லவா!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாதாரண மனிதனின் மனதில் ஓடுகின்ற நினைவுகள் அவ்வளவையும் அழகாக வடித்திருக்கின்றீர்கள், அர்ஜுன்!

 

கதையை விட்டிட்டுப் போன இடம், நகுலனிலும் பார்க்க நமக்குத் தான், கடுப்பேத்திற மாதிரிக்கிடக்கு! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு நாளைக்கு எப்படியாவது கொத்திக்கொண்டு போக வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான் எல்லோர் மனதிலும் இருந்தது
நகுலன் கொத்திப்போட்டானோ???......எவன்டாப்பா தொடர் கதையை கண்டுபிடிச்சவன்?மனுசரை டென்சன் ஆக்கிறாங்கள்:D
Link to comment
Share on other sites

கதை சாதாரண கதையாக இருந்தாலும், எழுதிய விதம் அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆவலைத் தூண்டுகிறது.

 

வயிறு பத்துது.  ரீனா நகுலனுக்கு 'bye' சொல்லி அனுப்பியதாக கதையை முடிங்கோ. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையாக கதையை நகர்த்தியுள்ளீர்கள் அர்யுன். எங்களைக் காக்க வைக்காது மிகுதியையும் எழுதிவிடுங்கோ.

Link to comment
Share on other sites

பின்னோட்டம் இட்டவர்களுக்கு நன்றி .நாளை மிகுதி எழுதிவிடுகின்றேன் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ரீனா காரை சுற்றி வந்து கண்ணாடி யன்னலுக்குள்ளால் முகத்தை விட்டு நகுலை பார்த்து ,

 

“வேலையிடத்து உறவுகளை  நான் வேலையிடத்துடனேயே விட்டுவிடுவேன் ,நீ என்னில் தனி கவனம் எடுப்பது  கூட எனக்கு எப்பவோ தெரியும், உன்னில் எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கு, அதை கெடுக்கமாட்டாய் என்றால் காரை பார்க் பண்ணிவிட்டு மேலே வா ஒரு கொலம்பியன் கோப்பி குடித்துவிட்டுபோகலாம்.”

 

ரீனாவின் உறவை தொடர்ந்தும் தக்கவைக்க எதற்கும் நல்ல  பிள்ளையாக ரீனாவின் இருப்பிடத்திற்கு ஒருமுறை போய் வருவம்  என்ற எண்ணத்துடன் நகுலன் காரை பார்க் பண்ணிவிட்டு ரீனாவுடன் சேர்ந்து அவளின் நாலாம் மாடி குடியிருப்பிற்குள் நுழைகின்றான்.

 

“இதை உனது வீடுமாதிரி நினைத்து இரு ,நான் ஒரு சிறு குளியல் போட்டு விட்டுவருகின்றேன் .டி வி பார் அல்லது பாட்டு கேள். பிரிட்சில் பியர் இருக்கு அல்லது கொஞ்சம் பொறு வந்து ஒரு சுப்பர் கொலம்பியன் கோப்பி போட்டுத்தருகின்றேன்”

 

அடுத்த ரூமிற்குள் ரீனா போய்விட்டாள் . புத்தகங்கள் ,சீடி, டிவிடி, சுவர் எங்கும் சீலை சித்திரங்கள், கைவினை பொருட்கள்  என்று அறை முழுக்க பொருட்கள் நிரம்பியிருந்தாலும் ஒருவித ஒழுங்கும் கலைநயமும் அதில் இருந்தது.  டிமூலியன் ஜிமினேஸ் இன் புகைப்படம் ஒன்று கொரில்லா வீரர்  உடையுடன் கொழுவியிருக்கு, அதன் கீழ் VICTORY TO FARC  எழுதியிருந்தது .எல்லா நாட்டிலும் ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு மட்டும் குறைவில்லை போலிருக்கு அதானால் தான் உலகெங்கும் ஆயுத் போராட்டமும் தொடருது போல என நகுலன நினைக்க ,

 

“கோப்பி போடவா “ என்றபடி அறையால் ரீனா வருகின்றாள் .மிக சின்னதாக  ஒரு மிக குறுகிய காற்சட்டை இடுப்புடன் அப்பிக்கொண்டு நின்றது. பொன்னிற கால்களை முழுதாக காட்டியபடி மேலே ஒரு மெல்லிய டீ-சேட்டும் அணிந்திருந்தாள். இப்படி உடை அணிவது இவர்களுக்கு மிக சாதாரணம் என்று நகுலனுக்கு தெரியும். இருந்தும் ரீனாவை அந்த உடையில் பார்க்க அவனுக்குள் உண்டான கிறக்கத்தில்

 

“இந்த உடையில் நீ மிக அழகாக இருக்கின்றாய். மன்னிக்கவும் எந்த உடையிலும் நீ அழகுதான். இதில் நீ மேலும் அழகாக இருக்கின்றாய்”

 

“நன்றி நகுல் .” என்றபடி கேத்திலில் தண்ணீரை சூடாக்க வைத்துவிட்டு சில்வர் மூடி போட்ட ஒரு கண்ணாடி கிளாசுக்குள் கோப்பியை கொட்டுகின்றாள் .

 

“திங்ககட்கிழமை எனக்கு கடைசி பரீட்சை.  அவன் (போய் பிரெண்ட்) இங்கு இல்லாததும் எனக்கு வசதியாக போய்விட்டது.  இல்லாவிடில் வெள்ளி ,சனி இரவு என்றால் டொராண்டாவில் உள்ள பாரெல்லாம் போய் குடித்து பின்னர் பிரச்சனை பண்ணுவதுதான் அவன் வேலை, அவனை சமாளித்து வீடு திரும்ப எப்படியும் அதிகாலையாகிவிடும். ஆண்கள் எதிர்காலதைவிட நிகழ்காலத்தில் தான் வாழுபவர்கள் .அன்றாட சந்தோசமே அவர்களுக்கு முக்கியம் “

 

என்றபடி நகுலை பார்த்து கண்ணடிக்கின்றாள்.

 

ரீனா கொடுத்த கோப்பியை ருசித்தபடி நகுலன் சொன்னான் .

 

“நல்லாயிருக்கின்றது என்றால் ஏதோ தேவைக்கு சொல்லுகின்றான் என நினைப்பாய் ஆனால் உண்மையில் இந்த கோப்பியில் இருக்கும் ஒரு வகை உவர்ப்பு மிக நன்றாகத்தான் இருக்கு “

 

என்றபடி கோப்பிப் கப்பை மேசை மீது வைத்துவிட்டு

 

“அடுத்த வெள்ளி சந்திப்போம்”

 

என்றவன் வாசல் கதவை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றான் .

 

“ஹேய் நகுல், உன் முகமும் உடல்மொழியும்  விளையாட்டு போட்டியில் எதிர்பாராமல் தோற்று அனைத்தையும் இழந்தது போல வெறுமையாக போவார்களே அது போல இருக்கு, ஏன் எதையும் உண்மையில் எதிர்பார்த்து வந்தாயா சொல்லு? “

 

“அப்படி ஏதும் இல்லை,  இருந்தாலும் உனது உதட்டால் ஒரு முத்தம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்து இருந்தேன். அதுதான் சற்று ஏமாற்றமாகிவிட்டது. இன்று இல்லாவிட்டாலும் இன்னொரு நாளைக்கு நீ என்ன எனக்கு  தராமலா விடப்போகின்றாய் “

 

என்றபடி நகுல் போய் வாசல் கதவை திறக்க, சோபாவில் இருந்து எழும்பி அவனை நோக்கி வந்த ரீனா இரு கைகளாலும் அவன் கழுத்தை கட்டி இழுத்து அவன் உதட்டில் தனது உதட்டை பதிக்கின்றாள். தன்னிலை மறந்த நகுல் ஏது செய்வது என்று தடுமாற, ரீனா வெகு லாவகமாக அவனை அப்படியே சோபாவில் தள்ளி அவன் மீதேறி அவன் உடலெங்கும் முத்த மழை பொழிய தொடங்க,

 

அந்த நேரம் பார்த்து அப்பாட்மென்ட் பஸ்ஸர் ஒரு நராசுகமான ஒலியை எழுப்புகின்றது.  மெல்ல எட்டி பஸ்ஸரை ரீனா அமத்த,

 

“கதவை திற கதவை திற” 

 

என ஒரு ஆண் குரல் பெருங்குரலில் சத்தம் இடுகின்றது.  குரலை கேட்டதும் உடனே தன்னை சுதாகரித்து எழுந்த ரீனா நகுலை நோக்கி,

 

“எனது போய் பிரென்ட் வந்துவிட்டான், உடனே ஓடித்தொலை. உன்னை அவன் இங்கு பார்த்தான் என்றால் உன்னை கொன்றுவிடுவான் “

 

என்ன நடக்கின்றது என்றே புரியாமல் ஒரு கணம் திகைத்த  நகுல் “போய் பிரென்ட் ,கொலை” என்ற சொற்கள் மாத்திரம் காதில் பாய, சோபாவை விட்டு துள்ளி எழும்பியவன் தான்  உடையிலாமல் இருப்பது புரிகின்றது.

 

நகுலின் டெனிம் பான்ட்ஸ்சையும் சேட்டையும் அவன் அவன் மீது சுருட்டி எரிந்தபடி ரீனா,

 

“இப்படியே ஓடு ,ஓடு, மாடிப்படிகளால் ஓடு”  என்றபடி வாசல் கதவை திறக்கின்றாள் .

 

உயிர் தப்பினால் காணும் என்றநிலையில்  சுருட்டிய உடுப்புகளை தூக்கியபடி  அண்டர்வேயருடன் நகுலன் மாடி படிகளை நோக்கி ஓடியவன்  மாடிப்படிக்கதவை திறந்து ஒரு ஏக்க பெருமூச்சுடன் வேர்க்க விறுவிறுக்க மாடிபடிகளில் நின்றபடியே தனது பான்ட்ஸ்சை அணிகின்றான் .கடவுளே  நல்லவேளை ஒருவரும் கொரிடோரில் வரவில்லை .தலையோடு வந்தது தலைப்பாகையுடன் போய்விட்டது , விட்டால் காணும் வீடு போய் துலைவம் என்ற மன நிலையில் நகுலன் படிகளால் இறங்கி லோபிக்கு வருகின்றான் .

 

லோபியில் சிறு சனக்கூட்டம். நாலு ஐந்து போலீஸ்காரர்கள் வேறு நிற்கின்றார்கள் .என்னடா மதுரைக்கு வந்த சோதனை என்று நினைத்தபடி வாசல் கதவை திறக்க போனவன்  டாக்சிகாரன்  போலீசிடம்,

 

“விமானநிலையத்தில் ஏறியவன் இங்கு அப்பாட்மென்ட் வாசலில் இறக்கியதும் ஓட தொடங்கிவிட்டான். நான் அவன் பின்னே ஓடி வர  அவன் இரண்டாவது கதவில் யாரிடமோ கதவை திறக்க சொல்லி பஸ்சரில் குரல் கொடுக்க கதவு  திறக்கும் போது அவனை உள்ளே போகவிடாமல் நான் இழுத்து பிடித்துவிட்டேன் .என்னை  அவன் திரும்பி அடிக்க நீங்களும் வந்துவிட்டீர்கள்”

 

“அவன் ஏற்கனவே எம்மால் தேடப்பட்டுவருபவன் தான் ,அவனை சோதனை செய்ததில் அவனிடம் எதுவித பணமுமில்லை. நீ போகலாம் பின்னர் தொடர்பு கொள்கின்றோம்”.

 

நிலத்தில் வைத்து அமத்தி இரு பொலிஸ்காரர்களால் கைவிலங்கு இடப்பட்ட ஒருவனை போலிஸ் தனது காரின் பின் இருக்கையில் தள்ளுகின்றார்கள். இந்த வேடிக்கைகள் எல்லாவற்றையும் பார்த்தபடியே மெதுவாக முன் கதவை திறந்து காரை நோக்கி மிக விரைவாக நடையை கட்டுகின்றான் நகுல் .

 

“நீ ஒரு கள்ள அதிஸ்டக்காரனடா”  என்ற குரல்கேட்டு மேலே அப்பாட்மென்ட் மாடிகளை நிமிர்ந்துபார்க்கின்றான் .

 

“நன்றாக பயந்துவிட்டாய் போலிருக்கு .அவன் தான் எனது போய்-பிரென்ட் ,எனக்கு சொல்லாமல் வன்கூவரில் இருந்து பிளைட்டில் வந்ததவன் தேவையில்லாமல் டக்சிகாரனுடன் காசு கொடுக்காமல் தகராறு பண்ணி போலீசில் மாட்டுப்பட்டுவிட்டான். எனக்கு இப்படி நடப்பது எல்லாம்  மிக சாதாரணம். அடிக்கடி நடப்பதுதானே. அவன் அப்படித்தான் திருந்தவே மாட்டான் .”

 

ரீனாவை பார்த்து சிரித்தபடியே பதில் ஏதும் கூறாமல் போய் வருகின்றேன் என்று  கையை மட்டும் காட்டிய நகுல்

 

“நீ விரும்பினால் விட்டதில்  இருந்து தொடர மேலே வரலாம்,  நீ கட்டயாம் வருவாய் என்றும் எனக்கு தெரியும் “

 

என்றபடி ரீனா உள்ளே போகின்றாள் .

 

எனக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்கு என்று ஒருக்கா எண்ணத்தான் வேண்டும் என்று மனதிற்குள் சிரித்தபடி நகுலன் ரீனாவின் ஒட்டுமொத்ததிற்காக  திரும்ப போய் படியேறுகின்றான் .

Link to comment
Share on other sites

அர்ஜுன் இனிமேல் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லக்கூடாது சரியா?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான எழுத்து நடையுடன்  அளவாகவும் ரசனையாகவும் எழுதியுள்ளீர்கள் , வாழ்த்துகள்  அர்ஜுன் !! :D  :D

Link to comment
Share on other sites

பின்னூட்டங்களுக்கும் பச்சைகளுக்கும்  நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது 

ஆத்ம சாந்தியடையக்கடவது..................... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

கதை நன்றாக இருத்தது,  :) அர்யுனின் அம்பு ஒரு நாளும்  குறி தப்புவது இல்லை  :lol: அவன் தம்பி நகுலனின் அம்பும் குறி தப்பாது போலுள்ளது  :D 


இனியாவது 

ஆத்ம சாந்தியடையக்கடவது..................... :lol:  :D  :D

 

யாரது சாந்தி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கதை அந்தமாதிரி......படியாலை திரும்ப ஏறிப்போன நகுலின்ரை கதையின்ரை மிச்சம் வருமோ????
 
அதுசரி நகுலன்ரை சொந்தமனுசியும் ரீனா மாதிரி கேம் போடவெளிக்கிட்டால்??????.........நகுலன் என்ன செய்வார்? :lol:
 
எப்பவும் தனிய ஒருபக்கம் யோசிக்கக்கூடாது கண்டியளோ.......இரண்டுபக்கமும் யோசிக்கோணும். :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை அர்ஜுன்.

Link to comment
Share on other sites

பச்சைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி .

மீண்டும் அடுத்த கதையுடன் சந்திப்போம் .

Link to comment
Share on other sites

ஒரு மலையாள மசாலா படம் எடுத்த திருப்த்தி ஏற்ப்படுகின்றது....,,:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அந்தமாதிரி......படியாலை திரும்ப ஏறிப்போன நகுலின்ரை கதையின்ரை மிச்சம் வருமோ????
 
அதுசரி நகுலன்ரை சொந்தமனுசியும் ரீனா மாதிரி கேம் போடவெளிக்கிட்டால்??????.........நகுலன் என்ன செய்வார்? :lol:
 
எப்பவும் தனிய ஒருபக்கம் யோசிக்கக்கூடாது கண்டியளோ.......இரண்டுபக்கமும் யோசிக்கோணும். :icon_idea:

 

நடத்தை கெட்டவள் என்று சொல்லிப்போட்டு ஊருக்கு போய் இன்னொருத்தியை கூட்டிக்கொண்டுவர வேண்டியதுதான்... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.