Jump to content

பாலினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலினம்

கோபி சங்கர்

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%

“பாலினம்” (Gender) என்பது ஒருவரின் உடல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம். “ஆண், பெண்” என்ற இரண்டு எல்லைகளை வகுத்துக்கொண்டு, அதற்குள் ஒட்டுமொத்த பாலின அம்சங்களையும் இணைக்க முனைவது தவறான விஷயம். அந்த எல்லைகளை தாண்டி இருபதிற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருப்பதை நாம் இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். “பாலின ஈர்ப்பு” என்பது பற்றியும் இன்னும் முழுமையான அறிவை நாம் பெறவில்லை.

ஒரு ஆண், பெண் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும்/ ஒரு பெண், ஆண் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும் என்ற வரைமுறையை வகுத்துக்கொண்டும் அதை தாண்டிய பாலின ஈர்ப்பு வகைகளை பற்றியும் இதுவரை நாம் அறிந்ததில்லை. இங்கு நாம் ஒருபால் ஈர்ப்புக்கான உரிமை பற்றி பேசவில்லை.

இப்படி, ஒட்டுமொத்த “பால் புதுமையினர்” (Genderqueer) பற்றிய சமூக விழிப்புணர்வுக்கான களத்தை அமைத்து கொடுப்பதற்கான முயற்சியை நாம் செய்ய வேண்டும். “பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு” என்பது ஒருவரது தனிப்பட்ட உரிமை. அந்த உரிமையில் தலையிடுவது, ஒரு தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதை போன்றது. “தான் எப்படி வாழ வேண்டும்?, யாராக வாழ வேண்டும்?” என்பதை தீர்மானிக்க ஒரு தனி மனிதனுக்கு உரிமை உண்டு.

அத்தகைய உரிமைகளை பறிக்கும் நிலையை இந்தியாவில் நாம் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். மேற்குலக நாடுகளில் பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு தொடர்பாக ஆய்வுகளும், அறிவுகளும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது. ஆனால், நம் நாட்டில் இன்றும் தெளிவான இத்தகைய கருத்துகள் நம்மை அடையவில்லை.

உடலின் நோய்களை பற்றி படிக்க மருத்துவ துறை இருக்கிறது, கணினி முதல் சகல விஞ்ஞான அறிவியலை படிக்க பொறியியல் துறை இருக்கிறது, சட்டம் பற்றி படிக்க சட்டத்துறை, இலக்கியம் படிக்க இலக்கிய துறை என்று ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் வழிகள் அவற்றை அறிந்துகொள்ள நம் நாட்டில் இருக்கும்போது, ஒருவரது உணர்வு சம்மந்தப்பட்ட விஷயங்களான இத்தகைய “பாலினம் (Gender) மற்றும் பாலின ஈர்ப்பு (sexual attraction) தொடர்பான விஷயங்களை படிக்க, அவற்றை தெரிந்துகொள்ள ஒரு வழியும் இங்கில்லை.

நம் நாட்டில் மற்ற உலக நாடுகளுக்கு இணையாக தரமான பல பல்கலைகழகங்கள் இருக்கின்றன, அவற்றில் எந்த இடத்திலும் இதைப்பற்றிய ஒரு ஆய்வு கூட செய்யப்படவில்லை. மற்ற நாடுகளில் இருபத்தைந்து ஆண்டுகளாக ஆய்வு செய்தும், அங்கீகரித்தும் வரும் ஒரு விஷயத்தை பற்றிய அறிவு இன்னும்

நம் நாட்டில் “அரிச்சுவடி” அளவுக்கு கூட தெரியவில்லை. பாலினம் தொடர்பான பல சர்ச்சைகளும், குழப்பங்களும் நித்தமும் உருவாகும் நம் நாட்டில், ஒரு உளவியல் படித்த மருத்துவருக்கு கூட இத்தகைய “பால் புதுமையினர்” பற்றிய அறிவு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

பாலினத்தை எப்படி வரையறை செய்வது? எந்த வகையான பாலினத்திற்கு எவ்வகையான கோட்பாடுகள் உண்டு? என்ற எவ்வித தெளிவும் இன்னும் நம் நாட்டில் உருவாகவில்லை. “ஆண், பெண்” என்ற வகையோடு பல நாடுகளும் “மற்றவர்கள்” என்ற ஒரு பிரிவையும் தங்கள் நாடுகளின் அதிகாரப்பூர்வ விஷயமாக அங்கீகரித்து உள்ளார்கள்.

இதன்மூலம் “பால் புதுமையினர்” (Genderqueer)பற்றிய ஒரு விழிப்புணர்வை அவர்கள் பெற்றிருப்பது நமக்கு தெரிகிறது. நம்மை பொருத்தவரை “மற்றவர்கள்” என்று குறிப்பிடப்படுவது “திருநங்கை” மட்டும்தான் என்று நினைப்போம். ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை பற்றிய ஓரளவு தெளிவான அறிவை பெற்றிருக்கும் நாம், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய “திருநம்பி”களை பற்றி நாம் பெறவில்லை. பெண் உரிமைகள் பெரிதாக பேசப்படாத நம் நாட்டில், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய “திருநம்பி” பற்றிய விழிப்புணர்வு கிடைக்காததில் வியப்பொன்றும் இல்லை.

இதைதாண்டிய எண்ணற்ற பாலினம் மற்றும் பாலின ஈர்ப்புகளை இணைத்து “பால் புதுமையினர்” பற்றி நாம் அறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதைப்பற்றிய தெளிவான புரிதல்கள் அந்தந்த மனிதர்களுக்கே இல்லாததால் நித்தமும் சிலர் தற்கொலைகள் மூலம் இறக்கின்றனர், பலர் உயிர் வாழ்ந்தும் நடைபிணமாய் வாழ்கிறார்கள்.“சமூக நிர்பந்தம் ஒருபுறம் தன் பாலினத்தை வரையறுக்கிறது, மறுபக்கம் தன் உடலும் உணர்வும் வேறு ஒருவிதமாக காட்டுகிறது” என்கிற குழப்பமான மனநிலையில் வாழும் எண்ணற்ற இளைஞர்கள் மன ரீதியில் நிறைய பாதிக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய நபர்களுக்கு கலந்தாய்வு கொடுத்து தேற்றும் பொறுப்பில் இருக்கும் மருத்துவர்களுக்கே இதைப்பற்றிய தெளிவு இல்லாததால், ஒரு மன நோய் மிக்க இளைஞர் உலகத்தை நாம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை.நம் தெளிவான சிந்தனை இன்மையால் ஒரு மனதளவில் ஊனமுற்ற ஒரு இளைய சமுதாயம் உருவாக நாம் காரணமாக இருக்கிறோம் என்பதை நாம் ஏற்றே ஆகவேண்டும்.

“பாலியல் கல்வி வேண்டுமா?” என்கிற வாதம் பல நாட்களாக இருக்கும் ஒன்றுதான். வெறும் உடலுறவு சார்ந்த விஷயமாக இத்தகைய பாலியல் கல்விகளை சிலர் பார்ப்பதால் இப்படி கேட்கிறார்கள். நிச்சயமாக, ஆரோக்கியமான மனநலத்தை உருவாக்க பாலியல் கல்வி அவசியம். எந்த விஷயத்தை நாம் மூடி மறைக்க முயல்கிறோமோ, அது ஒருநாள் வெடித்து சிதறும்போது பல எதிர்விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடும். பாலியல் கல்வி கொடுக்காமல், தெளிவான பாலியல் அறிவை நம் பிள்ளைகளுக்கு கொடுக்காததன் விளைவுதான், இன்றைக்கு நாம் நித்தமும் பார்க்கும் பாலியல் வல்லுறவுகள், வன்புணர்வுகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்கிற வடிவத்தில் வெளிப்படுகிறது.

எதை நாம் மறைக்க முயன்றோமோ, அது தானாக வெளிப்பட்டதன் விளைவு இது. இன்னும் தாமதித்தால் மிகப்பெரிய விளைவை நோக்கி நம்மை செலுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. உலகுக்கே “காம சூத்திரம்” என்ற ஒரு அற்புதமான “பாலியல் கல்வி” நூலை கொடுத்த நம் நாட்டில் இன்று பாலியல் அறிவு இல்லாததால் நிகழும் குற்றங்கள் எண்ணற்றவை.

இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன? இதைப்பற்றிய சமூக விழிப்புணர்வுதான் ஒரே தீர்வு. ஆனால், சமூக விழிப்புணர்வுக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய மூன்று முக்கிய துறைகளில் இதைப்பற்றிய தெளிவு முதலில் உருவாக வேண்டும். கல்வித்துறை, மருத்துவத்துறை மற்றும் சட்டத்துறைகளில் இதை பற்றிய அறிவை நாம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த மூன்று துறைகளும் எப்போது “பால் புதுமையினர்” (Genderqueer) பற்றிய தெளிவான மனநிலைக்கு வருகிறார்களோ, அன்றுதான் சமூக விழிப்புணர்வுக்கு நாம் அடித்தளம் அமைத்ததாக அர்த்தம். அறிவியலும் மருத்துவமும் கண்டுபிடித்திருக்கும் இந்த உண்மைகளை நாமும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பழைய கருத்துகளை சொல்லி, உண்மைகளை மறைக்க கூடாது. “இளம்பிள்ளை வாதம்” என்கிற கொடிய நோய் நம் நாட்டில் நிறைய காணப்பட்ட நாட்களில், யாரோ வெளிநாட்டினர் கண்டுபிடித்துக்கொடுத்த “போலியோ சொட்டு மருந்து” என்கிற தடுப்பு மருந்தின் விளைவாக இன்று அந்த நோயின் சுவடே இல்லாமல் நம் மக்கள் இருக்கிறார்கள். வெளிப்படையாக தெரியும் நோய்க்கு அவர்கள் சொன்ன மருந்தை கொடுத்து நம் மக்களை காப்பாற்றினோம். மனதளவில் அதைவிட அதிக பாதிப்பை உண்டாக்கும் இத்தகைய “மனநோய்”களுக்கு அவர்கள் சொன்ன “பால் புதுமையினர்” (Genderqueer)கோட்பாட்டை அங்கீகரிப்பதில் தவறில்லை.

கிராமப்புறங்களில் இருக்கும் சொல்லாடல்களில், “மேல் வயிற்று பசி”, “கீழ் வயிற்று பசி” என்பது உண்டு. இரண்டு பசிகளுமே மனிதனுக்கு அத்தியாவசியமானது தான். ஏனோ, அதில் கீழ் வயிற்றுப்பசியை பற்றி பேசுவது மட்டும் தவறாக பார்க்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு எப்படி சாப்பிட வேண்டும்? எதை சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்ற பல விஷயங்களை சொல்லித்தரும் நம் கல்வி முறை, கீழ் வயிற்று பசிக்கான ஒரு தெளிவையும் கொடுக்கவில்லை. தாகம், பசி, உறக்கம் போன்று “காமமும்” ஒரு இயல்பான மனித உணர்வுதான். ஒருவனை “நீ இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்” என்று கட்டாயப்படுத்துவது எந்த அளவிற்கு தனி நபர் உரிமை மீறலோ, அதே அளவு தவறானது ஒருவனின் பாலின ஈர்ப்பு உணர்விலும் தலையிடுவது.

“ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி பாலினம் இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் விருப்பப்படி பாலின ஈர்ப்பு இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனும் தன் பாலினத்தையும், பாலின ஈர்ப்பையும் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும்” இத்தகைய உண்மைகளை நம் மக்கள் புரிந்துகொள்வதற்கான சரியான சமயம் இதுதான். ஒவ்வொரு விஷயத்திலும் நாட்டின் முன்னோடு மாநிலமாக இருக்கும் நம் “தமிழகம்” பால் புதுமையினர் விஷயத்திலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, இந்தியாவில் முதல் குரல் கொடுக்கும் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வளமான இளைய சமுதாயத்தை, தெளிவான மனநிலையோடு நாட்டில் உருவாக்க அரசு இதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொரு “மறைக்கப்பட்ட பாலின சிறுபான்மையினரின்” கோரிக்கை.

பாலினம் என்று சொன்னால் உடனடியாக ஆண், பெண் ஆகிய இரண்டும்தான் நம் நினைவுக்கு வரும். இன்னும் கொஞ்சம் யோசித்தால் திருநங்கைகள் நினைவுக்கு வரலாம். உண்மையில், ஆண், பெண், திருநர் தவிர்த்து இருபதுக்கும் மேற்பட்ட பாலினங்கள் உலகில் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. பாலினம் (Gender) என்பது வேறு,  பாலியல் -ஒருங்கினைவு (Sexual Orientation) என்பது வேறு. பொதுவாக, மக்களிடம் ஆண், பெண் பற்றிய விழிப்புணர்வே மேலோங்கி நிற்கிறது. சமீபகாலமாகத்தான் திருநங்கைகளமீது  வெளிச்சம் பரவத் தொடங்கியிருக்கிறது.

என்னென்ன பாலினங்கள் இருக்கின்றன என்று சுருக்கமாகப் பார்ப்போம்.

 

பொதுப் பாலினம்

ஆண்- Male

பெண்- Female

 

திருநர் – Transgender

திருநங்கை – Transwomen

திருநம்பி- Transmen

 

பால் புதுமையர்- Gender queer

பால் நடுநர் – Androgyny

முழுனர் – pangender

இருனர்- Bigender

திரினர்- Trigender

பாலிலி –  Agender

திருனடுனர் – Neutrois

மறுமாறிகள் – Retransitioners

தோற்ற பாலினத்தவர் – Appearance gendered

முரண் திருநர் – Transbinary

பிறர்பால் உடையணியும் திருநர் – Transcrossdressers

இருமை நகர்வு – Binary’s butch

எதிர் பாலிலி – Fancy

இருமைக்குரியோர் – Epicene

இடைபாலினம் –  Intergender

மாறுபக்க ஆணியல் – Transmasculine

மாறுபக்க பெண்ணியல் – Transfeminine

அரைபெண்டிர் – Demi girl

அரையாடவர் – Demi guy

நம்பி ஈர்ப்பனள் – Girl fags

நங்கை ஈர்பனன் – Guy dykes

பால் நகர்வோர் – Genderfluid

ஆணியல் பெண் – Tomboy

பெண்ணன் – Sissy

இருமையின்மை ஆணியல் – Non binary Butch

இருமையின்மை பெண்ணியல் – Non binary femme

பிறர்பால் உடை அணிபவர் – Cross Dresser

 

இந்தப் பட்டியல் இன்னும் நிறைவடையவில்லை.

எதற்காக இப்போது இவர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும்? ஏனென்றால் நாம் வாழும் சமூகத்தில்தான் இவர்களும் வாழ்கிறார்கள். இவர்களையும் ஒன்றிணைந்துதான் சமுதாயம் இயங்குகிறது. சமுதாய மாற்றங்களுக்கு இவர்களும் பங்களிக்கிறார்கள். இதற்குப் பல எடுத்துக்காட்டுகளை வரலாற்றில் இருந்து அளிக்கமுடியும்.

இதைப்பற்றிய தெளிவான புரிதல்கள் அந்தந்த மனிதர்களுக்கே இல்லாததால் நித்தமும் சிலர் தற்கொலைகள் மூலம் இறக்கின்றனர், பலர் உயிர் வாழ்ந்தும் நடைபிணமாய் வாழ்கிறார்கள். “சமூக நிர்பந்தம் ஒருபுறம் தன் பாலினத்தை வரையறுக்கிறது, மறுபக்கம் தன் உடலும் உணர்வும் வேறு ஒருவிதமாக காட்டுகிறது” என்கிற குழப்பமான மனநிலையில் வாழும் எண்ணற்ற இளைஞர்கள் மன ரீதியில் நிறைய பாதிக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய நபர்களுக்கு கலந்தாய்வு கொடுத்து தேற்றும் பொறுப்பில் இருக்கும் மருத்துவர்களுக்கே இதைப்பற்றிய தெளிவு இல்லாததால், ஒரு மன நோய் மிக்க இளைஞர் உலகத்தை நாம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை. நம் தெளிவான சிந்தனை இன்மையால் ஒரு மனதளவில் ஊனமுற்ற ஒரு இளைய சமுதாயம் உருவாக நாம் காரணமாக இருக்கிறோம் என்பதை நாம் ஏற்றே ஆகவேண்டும்.

“பாலியல் கல்வி வேண்டுமா?” என்கிற வாதம் பல நாட்களாக இருக்கும் ஒன்றுதான். வெறும் உடலுறவு சார்ந்த விஷயமாக இத்தகைய பாலியல் கல்விகளை சிலர் பார்ப்பதால் இப்படி கேட்கிறார்கள். நிச்சயமாக, ஆரோக்கியமான மனநலத்தை உருவாக்க பாலியல் கல்வி அவசியம். எந்த விஷயத்தை நாம் மூடி மறைக்க முயல்கிறோமோ, அது ஒருநாள் வெடித்து சிதறும்போது பல எதிர்விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடும். பாலியல் கல்வி கொடுக்காமல், தெளிவான பாலியல் அறிவை நம் பிள்ளைகளுக்கு கொடுக்காததன் விளைவுதான், இன்றைக்கு நாம் நித்தமும் பார்க்கும் பாலியல் வல்லுறவுகள், வன்புணர்வுகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்கிற வடிவத்தில் வெளிப்படுகிறது.

எதை நாம் மறைக்க முயன்றோமோ, அது தானாக வெளிப்பட்டதன் விளைவு இது. இன்னும் தாமதித்தால் மிகப்பெரிய விளைவை நோக்கி நம்மை செலுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. உலகுக்கே “காம சூத்திரம்” என்ற ஒரு அற்புதமான “பாலியல் கல்வி” நூலை கொடுத்த நம் நாட்டில் இன்று பாலியல் அறிவு இல்லாததால் நிகழும் குற்றங்கள் எண்ணற்றவை.

இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?. இதைப்பற்றிய சமூக விழிப்புணர்வுதான் ஒரே தீர்வு. ஆனால், சமூக விழிப்புணர்வுக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய மூன்று முக்கிய துறைகளில் இதைப்பற்றிய தெளிவு முதலில் உருவாக வேண்டும். கல்வித்துறை, மருத்துவத்துறை மற்றும் சட்டத்துறைகளில் இதை பற்றிய அறிவை நாம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த மூன்று துறைகளும் எப்போது “பால் புதுமையினர்” பற்றிய தெளிவான மனநிலைக்கு வருகிறார்களோ, அன்றுதான் சமூக விழிப்புணர்வுக்கு நாம் அடித்தளம் அமைத்ததாக அர்த்தம்.அறிவியலும் மருத்துவமும் கண்டுபிடித்திருக்கும் இந்த உண்மைகளை நாமும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பழைய கருத்துகளை சொல்லி, உண்மைகளை மறைக்க கூடாது. “இளம்பிள்ளை வாதம்” என்கிற கொடிய நோய் நம் நாட்டில் நிறைய காணப்பட்ட நாட்களில், யாரோ வெளிநாட்டினர் கண்டுபிடித்துக்கொடுத்த “போலியோ சொட்டு மருந்து” என்கிற தடுப்பு மருந்தின் விளைவாக இன்று அந்த நோயின் சுவடே இல்லாமல் நம் மக்கள் இருக்கிறார்கள். வெளிப்படையாக தெரியும் நோய்க்கு அவர்கள் சொன்ன மருந்தை கொடுத்து நம் மக்களை காப்பாற்றினோம். மனதளவில் அதைவிட அதிக பாதிப்பை உண்டாக்கும் இத்தகைய “மனநோய்”களுக்கு அவர்கள் சொன்ன “பால் புதுமையினர்” கோட்பாட்டை அங்கீகரிப்பதில் தவறில்லை.

கிராமப்புறங்களில் இருக்கும் சொல்லாடல்களில், “மேல் வயிற்று பசி”, “கீழ் வயிற்று பசி” என்பது உண்டு. இரண்டு பசிகளுமே மனிதனுக்கு அத்தியாவசியமானது தான். ஏனோ, அதில் கீழ் வயிற்றுப்பசியை பற்றி பேசுவது மட்டும் தவறாக பார்க்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு எப்படி சாப்பிட வேண்டும்? எதை சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்ற பல விஷயங்களை சொல்லித்தரும் நம் கல்வி முறை, கீழ் வயிற்று பசிக்கான ஒரு தெளிவையும் கொடுக்கவில்லை. தாகம், பசி, உறக்கம் போன்று “காமமும்” ஒரு இயல்பான மனித உணர்வுதான். ஒருவனை “நீ இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்” என்று கட்டாயப்படுத்துவது எந்த அளவிற்கு தனி நபர் உரிமை மீறலோ, அதே அளவு தவறானது ஒருவனின் பாலின ஈர்ப்பு உணர்விலும் தலையிடுவது.

“ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி பாலினம் இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் விருப்பப்படி பாலின ஈர்ப்பு இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனும் தன் பாலினத்தையும், பாலின ஈர்ப்பையும் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும்”இத்தகைய உண்மைகளை நம் மக்கள் புரிந்துகொள்வதற்கான சரியான சமயம் இதுதான். ஒவ்வொரு விஷயத்திலும் நாட்டின் முன்னோடு மாநிலமாக இருக்கும் நம் “தமிழகம்” பால் புதுமையினர் விஷயத்திலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, இந்தியாவில் முதல் குரல் கொடுக்கும் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வளமான இளைய சமுதாயத்தை, தெளிவான மனநிலையோடு நாட்டில் உருவாக்க அரசு இதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொரு “மறைக்கப்பட்ட பாலின சிறுபான்மையினரின்” கோரிக்கை.

 

http://vallinam.com.my/version2/blog/2013/07/10/பாலினம்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பால் புதுமையர்- Gender queer பால் நடுநர் – Androgyny முழுனர் – pangender இருனர்- Bigender திரினர்- Trigender பாலிலி – Agender திருனடுனர் – Neutrois மறுமாறிகள் – Retransitioners தோற்ற பாலினத்தவர் – Appearance gendered முரண் திருநர் – Transbinary பிறர்பால் உடையணியும் திருநர் – Transcrossdressers இருமை நகர்வு – Binary’s butch எதிர் பாலிலி – Fancy இருமைக்குரியோர் – Epicene இடைபாலினம் – Intergender மாறுபக்க ஆணியல் – Transmasculine மாறுபக்க பெண்ணியல் – Transfeminine அரைபெண்டிர் – Demi girl அரையாடவர் – Demi guy நம்பி ஈர்ப்பனள் – Girl fags நங்கை ஈர்பனன் – Guy dykes பால் நகர்வோர் – Genderfluid ஆணியல் பெண் – Tomboy பெண்ணன் – Sissy இருமையின்மை ஆணியல் – Non binary Butch இருமையின்மை பெண்ணியல் – Non binary femme பிறர்பால் உடை அணிபவர் – Cross Dresser
தலை சுற்றுகிறது
Link to comment
Share on other sites

பழைய நிறுவனத்தில் வேலை செய்த ஒருவர் வீட்டில் பெண்களின் ஆடைகளை அணிந்து மகிழ்பவராம்.. :D அலுவலகத்துக்கு வரும்போது ஒற்றைப்பின்னல் போட்டுக்கொண்டு வருவார்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

பழைய நிறுவனத்தில் வேலை செய்த ஒருவர் வீட்டில் பெண்களின் ஆடைகளை அணிந்து மகிழ்பவராம்.. :D அலுவலகத்துக்கு வரும்போது ஒற்றைப்பின்னல் போட்டுக்கொண்டு வருவார்.. :icon_idea:

என்னுடன் வேலை செய்யும் ஒருவர் யாராவது குனிந்து ஏதாவது எடுத்தால் ரொம்ப வெட்கப்பட்டு சிரிப்பார் ................ :D  :D 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.