-
Tell a friend
-
Topics
-
Posts
-
By nunavilan · பதியப்பட்டது
சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவாகிய கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் தொடர்பில் பாடசாலை சமூகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. 63வது சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு இலங்கை சார்பாக வடமாகாணத்தில் தெரிவாகிய ஒரே ஒரு தமிழ் மாணவனான கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தெய்வேந்திரம் .திருக்குமரன் சர்வதேச போட்டிக்கு தெரிவாகியுள்ளார். இது தொடர்பில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.ஜெயந்தி தனபாலசிங்கம் அவர்கள் குறிப்பிடுகையில், “இந்த மாணவன் சர்வதேச போட்டிக்காக செல்லும் குழுவில் இடம்பிடித்துள்ள தமிழ் மாணவன் என்பதில் பாடசாலை சமூகம் மகிழ்வடைகிறது. 2 தடவை சர்வதேச போட்டிக்கு சென்ற இவர், மூன்றாவது தடவையும் செல்கின்றார். இது இவரின் தனிப்பட்ட முயற்சியேயாகும்.இவரை பாடசாலை சமூகம் பாராட்டி வாழ்த்துகின்றது” என தெரிவித்த அவர் மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்தியிருந்தார். இது குறித்து அவ் மாணவன் கூறுகையில் தனது முயற்சியால் கடந்த முறை சர்வதேச போட்டிக்கு சென்று வெற்றி கிண்ணங்களை பெற்றேன். இம்முறையும் போட்டிக்கு செல்கிறேன். எனக்கு ஊக்கமளித்த அதிபர் ,பாடசாலை சமூகம், பெற்றோர், உதவிய கிளிநொச்சி மக்களிற்கும் நன்றி கூறுவதாக குறிப்பிட்டிருந்தார். எதிர்வரும் ஜூலை மாதம் நோர்வேயின் ஒஸ்லோ நகரத்தில் குறித்த போட்டி நடைபெற உள்ள நிலையில் இலங்கையிலிருந்து ஆறு மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். அந்தவகையில் 1. C. T. B. Wanasinghe, Bandarawela Central College 2. S. A. Kotuwewatta, Gateway College, Colombo 3. S. V. Mahabaduge, Ananda College, Colombo 4. S. T. Balahewa, Mahinda College, Galle 5. T. Thirukkumaran, Kilinochchi MV 6. H.M.M.A. Bandara, Kuliyapitiya central collage. ஆகிய மாணவர்களே இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர். 63வது சர்வதேச கணித ஒலிம்பியாட் 2022 இல் (IMO 2022) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான அணித் தெரிவுப் பரீட்சைகளில் தங்களது திறமையின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு இலங்கை ஒலிம்பியாட் கணித அறக்கட்டளையின் சார்பாக இலங்கை அணித்தலைவர் டாக்டர் தயாள் தர்மசேனா அவர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். https://www.facebook.com/myjaffna/posts/pfbid02ZT5NZSEkzG8vvBeFKwXoEJWLdKkd1i5a4e8FEB2xXrsnPw47s6LMsGezSVaBY3chl -
By nunavilan · பதியப்பட்டது
கட்சி தலைவர் சொல்லித்தான் நாம் செய்தோம் என்றனர்! -
By விளங்க நினைப்பவன் · Posted
முதலில் இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு மட்டுமே உதவி செய்யும் திட்டத்தில் தமிழக முதல்வர் இருந்தாராம். இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மட்டும் இல்லாமல் இலங்கையில் உள்ள எல்லா மக்களுக்கும் உதவிகளை கொடுக்க வேண்டும் என்று 👍 கூட்டமைப்பு தமிழக முதல்வரை கேட்டு கொண்டதாம். -
கடந்த 3 தவணைகள் liberal ஆட்சி கொண்டிருந்தது அடிமட்ட உழைப்பாளர்களின் ஊதிய உயர்வை கட்டுப்படுத்துவதனூடாக பொருளாதார அபிவிருத்தியினை அடையலாம் என்ற அடிப்படையில் வருமான கட்டுப்பாடுகளை பிரயோகித்து வந்திருந்தது. இதனால் வருமான பங்கீடு மக்களிடயே சரியான விகிதத்தில் பங்கீடு செய்யப்படாதநிலைல்யில் ஒரு சிறிய தொகுதி மக்கள் நாட்டின் 63% வளத்தினை கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது ( இது நீண்டகால நிகழ்வு). ஏற்கனவே ஊதிப்பெருத்த balance sheet ஐ வைத்திருக்கும் மத்திய வங்கி, 43 வருட குறைந்த வேலையின்மை வீதம் ,கொவிட் QE. வீட்டு விலை உள்ளடங்கலாக அனைத்து விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் பெரும்பான்மை சாதாரண மக்களால் அவர்களது வீடுகளைக்கூட காப்பாற்ற முடியாது. ஆனால் அதிகரிக்கும் பண்வீக்கத்தினை கட்டுப்ப்டுத்த வேண்டும் அத்துடன் பாட்டாளி மக்களின் வருமானத்தினையும் உயர்த்த வேண்டும் அவ்வாறு உயர்த்தினால் அது மேலும் பணவீக்கத்தினை தூண்டும். அவுஸ்ரேலியா மற்ற நாடுகளைப்போல பொருளாதார நெருக்கடிக்குள் உள்ள நிலையில் புதிய அரசு அமைந்துள்ளது.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.