Jump to content

நளனும் நளவெண்பாவும் படிச்சுக் கிழிச்ச வரலாறு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகன்: அம்மா.. இந்த நளவெண்பா படிச்சுத்தான் ஆகனுமா.. பாட்டு ஒன்னுமே மனசில நிற்குதில்லையேம்மா.

 

அம்மா: உந்த கேமில ரீவில குந்தி இருக்கிறா இல்ல... அதுபோல குந்தி இருந்து படிடா..!

 

மகன்: இந்த அம்மாக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறது... சிறிது நேரம் யோசிச்ச பின்..

 

அம்மா.. அன்னப் பறவை எப்படிம்மா இருக்கும்...

 

அம்மா: அதுதான் நளவெண்பாவில சொல்லி இருக்கல்ல..

 

மகன்: பாட்டுல சொன்னது விளங்கேல்லேன்னு தானேம்மா கேட்கிறன்.. அது எப்படி இருக்கும். zoo ஆச்சும் கூட்டிக் கொண்டு போய் காட்டுங்களன்.

 

அம்மா: zoo இல அன்னமெல்லாம் இல்ல. பாட்டில தான் இருக்கு படிடா.

 

மகன்: zoo இல கூட இல்லாததை ஏம்மா படிக்கனும்...

 

அம்மா: படிக்கனுன்னா படி. வாய்க்கு வாய் காட்டாமல் படிடா. இல்லைன்னா அப்பா வரவிட்டு சொல்லிக் கொடுத்து அடிதான் வாங்கித் தருவன்.

 

மகன்: அன்னம் எப்படி இருக்குமென்று கேட்டால் அடிவாங்கித் தாறன் என்றாங்களே. இதில பாட்டுக்கு வேற நயமும் படிக்கனுமாமில்ல... என்று நினைச்சுக் கொண்டு..

 

அம்மா.. நயம் என்றால் என்னம்மா...

 

அம்மா: அங்க பொழிப்புரையில போட்டிருக்கும் பார்த்துப் படி...

 

மகன்: நயம் என்றால்..பொழிப்புரையில் பார்த்துப் படி என்று அர்த்தமாம்மா...

 

அம்மா: உனக்கு கொழுப்புக் கூடிப் போச்சுது. கொப்பர் வரட்டும்.

 

மகன்: அன்னம் என்னென்று கேட்டால் அடிவாங்கித் தாறாவாம். நயம் என்னென்று கேட்டால் கொழுப்புக் கூடிப் போச்சாம்.. அப்படின்னா.. எதுக்கு இந்த நளவெண்பாவைப் படிக்கனும்...??! படிச்சா மட்டும் கொழுப்பு குறைஞ்சிடுமா என்ன... என்று யோசிச்சுக் கொண்டே.. இருக்க..

 

அம்மா: என்னடா.. பாட்டும் பொருளும் படிச்சிட்டியா..

 

மகன்: படிச்சிட்டேம்மா.

 

அம்மா: எங்க ஒரு பாட்டிற்கு..பொருள் சொல்லு பார்ப்பம்..

 

மகன்: அன்னம் வந்து நளனின் ரோமான்ஸ் செய்தியை தமயந்திக்குச் சொல்ல அதை கேட்டு.. தமயந்தி கட்டிலில் குப்புறப் படுத்துக் கிடந்து கொண்டு.. காதல் மயக்கதில் விண்ணைத் தாண்டி வருவாயா படப்பாடலை..முணுமுணுங்க.. அதைக் கண்ட அவங்க அப்பா.. பொம்பிளைப் பிள்ளைன்னும் பார்க்காம.. முதுகில ஒரு போடு போட.. சத்தம் கேட்டு..  ஓடி வந்த...அவங்க அம்மா..என்னடி உனக்கு கொழுப்புக் கூடிப்போச்சாடி.. காதலாம் காதல்.. படிக்கிற வயசில.. யுனிக்குப் போற வயசில மாப்பிள்ளை கேட்குதாடி.. என்று கத்த...

 

 

அம்மா: அட இடிவிழுந்தவனே.. இதையாடா இவ்வளவு நேரம் படிச்சா..

 

மகன்: இது வேற.. இடிவிழுந்தவனே... அதென்னம்மா இடிவிழுந்தவனேன்னா..

 

அம்மா: ஏண்டா சண்டாளா  என்ர உயிரை வாங்கிறாய்..

 

மகன்: அதென்னெம்மா சண்டாளா என்றா...

 

அம்மா: மூதேவி மூதேவி.. நீ திருந்த மாட்டா.. கொப்பர் வரட்டும். என்னால உன்னோட மல்லுக்கட்ட முடியாது.

 

மகன்: அட இதுவேறையா..... மூதேவின்னு இன்னொன்று..

 

அம்மா நீங்க நளவெண்பா படிச்சனீங்களா..

 

அம்மா: ஆமாடா முண்டம். அது சரி இதையெல்லாம் எங்க இருந்து பொறுக்கினனி..

 

மகன்: எல்லாம் நளனும் நந்தினியும் பட சீனில இருந்து தாம்மா. அது தான் இவ்வளவு நேரமும்.. ஐபாட்டில பார்த்துக்கிட்டு இருந்தன். அதிலையும்.. நளவெண்பாவைத்தான் உல்டா பண்ணி இருக்காங்க.. தமயந்திக்கு பதில நந்தினின்னு போட்டிருக்காங்கன்னு நினைச்சிட்டேம்மா.

 

அம்மா: எங்க.. எனக்கும் ஒருக்கா போட்டுக் காட்டேண்டா...!

 

மகன்: (மனசுக்குள்) அடப்பாவி அம்மாவே. நீயுமா..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வீடியோவில இருக்கிற பிகர பாத்தவுடன எனக்கும் நளன் ஆகவேண்டும் எண்டு ஆசையாக் கிடக்கு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வீடியோவில இருக்கிற பிகர பாத்தவுடன எனக்கும் நளன் ஆகவேண்டும் எண்டு ஆசையாக் கிடக்கு :D

 

இந்த வீடியோவை உங்கள் திருமதியிடம் காட்டி உதவி கேட்டால்.. பிகர்.. பூசை.. கிடைக்க வாய்ப்புள்ளது. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோவை உங்கள் திருமதியிடம் காட்டி உதவி கேட்டால்.. பிகர்.. பூசை.. கிடைக்க வாய்ப்புள்ளது. :D:lol:

 

நெடுக்கர், நான் என்ட ஆசையச் சொன்னா, நீங்கள் வீட்டுக்குள்ள விடிய விடியப் பூசைக்கு ஏற்பாடுபண்ணச் சொல்லுறீங்கள்! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், நான் என்ட ஆசையச் சொன்னா, நீங்கள் வீட்டுக்குள்ள விடிய விடியப் பூசைக்கு ஏற்பாடுபண்ணச் சொல்லுறீங்கள்! :D :D

 

உங்கட ஆசையை.. உங்கட திருமதியிடம் செப்பினால்.. என்ன பிகர்..பூசை என்றதை அவங்க தீர்மானிப்பாங்க. நீங்க இதுக்கெல்லாம்.. அவசரப்படக் கூடாது.. என்று தான் சொல்லி இருக்கம். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.